Thursday, December 30, 2010

ஐந்து தலை நாகம் அருமையான ஒரு விளையாட்டு

Posted Image

கடந்த மே மாதம் 11ம் தேதி கர்நாடகவில் குக்கே என்ற ஊரில் உள்ள சுப்புரமணிய சுவாமி கோயில் ஐந்து தலை நாகம் வந்ததாகவும் அதை பார்த்ததாகவும் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. பல பேர் அக்கம் பக்கம் ஊரில் இருந்தும் படை எடுத்தனர். எனக்கும் இதன் சம்பந்தமாக இமெயில் வந்தது நானும் பார்த்துவிட்டு இருக்கும் போலிருக்கு என்று நினைத்தேன். எனென்றால் அருகில் ஒருவர் நிற்பது போல் எல்லாம் படம் இருந்தது. சரி என்று வேலையை பார்க்க ஆரம்பித்தாகிவிட்டேன்.


ஆனால் நம்ம ஊரு மக்கள் எவ்வளவு பேர் படையெடுத்திருப்பார்கள் என்பது நன்றாகவே தெரியும் நமக்கு. நாம் யாரும் இது சாத்தியமா என்றெல்லாம் யோசிப்பதில்லை. சேசாங்க் எனும் பாம்பின் தலையில் தான் உலகமே இருக்கிறது என்று இந்த்துவ தத்துவத்தை நம்புபவர்கள் தானே நாம்..

Posted Image

Posted Image

Posted Image

இப்படி இருக்கும் பாம்பு எந்த தலையில் உள்ள மூளை செல்வதை கேட்டு நகரும். அதன் கண்களில் எந்த கண்ணில் தெரியும் காட்சியை வைத்து சுற்று உள்ளவற்றை உணரும் என்று கேள்விகள் எல்லாம் அப்புறம். ஆனால் இதை நம்பும் மக்களின் கண்மூடிதனமான மூளையை என்னவென்று சொல்வது அவர்களுக்கு மூளை இருக்கிறது என்றா இல்லை என்றா??

நேற்று ஒருவருடன் பேசிக்கொண்டிருந்த பொழுது அவர் இதை பற்றி என்னிடம் கேட்டார். தெரியவில்லை நானும் அந்த போட்டோக்களை பார்த்தேன் நேரில் பார்த்தால் தான் தெரியும் என்றேன். அவருடை லேப்டாப்பை எடுத்து அவர் பாங்காங்க் சென்று வந்த படங்களை எடுத்தார் அங்கு ஒரு பாம்பு பண்ணையில் எடுக்கப்பட்ட படத்தை காட்டிவிட்டு அதன் பிறகு இந்த ஐந்து தலை நாகம் படத்தையும் அருகே வைத்து பார்த்தால் அப்படியே தெரிந்தது போலி படங்கள் என்று..

Posted Image

மேலே உள்ள படத்தில் பொதுவான மூன்று விசயங்களை கவனிக்கலாம், முதலில் இரும்பு படிகள், இரண்டாவதாக சுவற்றில் இருக்கும் வேலைப்பாடுகள், மூன்றாவதாக முத்தான கீழே இருக்கும் தண்ணீர் தொட்டியை மூடும் இரும்பு மூடி. இவை மூன்றும் ஒரே இடம் தான் படம் எடுக்கப்பட்ட இடம் என்பதை தெளிவாக சொல்லுகிறது. நம்ம மக்கள் எவ்வளவு விவரமாக ஒரு பண்ணையில் இருக்கும் பாம்பை போட்டோசாப் மூலமாக திருத்தி அமைத்து ஐந்து தலைநாகம் இருப்பதாக கதை கட்டி இருக்கிறார்கள் என்பது தெளிவாக தெரியும். ஒன்று மட்டும் நிச்சயம் அந்த கோயிலுக்கு மக்கள் படையெடுத்து இருப்பார்கள், அந்த ஊரை நம்பி வாழ்ந்த மக்கள் பல வியாபரங்களை தொடங்கி நன்றாக காசு பார்த்து இருப்பார்கள்..

இந்த ஊரை பற்றி தெளிவாக விளக்கி ஒரு பதிவு, அதிலும் இந்த நாகத்தை பற்றி சொல்லி.. அட்ரா சக்கை

அசல் படங்கள் போலியாக உருவாக்கபட்ட படங்கள் வாழ்க கூகிள்..

Posted Image

Posted Image

Posted Image

Posted Image

இந்த படங்களில் இருந்து இன்னும் தெளிவாக தெரியும் என்ன விளையாட்டு என்று..

போட்டோசாப் மன்னர்களிடம் ஒரு வேண்டுகோள் இந்த மூளையை எதாவது ஆக்கபூர்வமான விசயத்துக்கு பயன்படுத்துங்கப்பா?? நாடாவது முன்னேறும்..

Wednesday, December 29, 2010

சாதி ஒழிப்பு கலப்பு திருமணம் அங்கீகாரம் தேவை

கலப்பு திருமணங்கள், சாதி மறுப்பு திருமணம், சுயமரியாதை திருமணம் என்று சமூக முன்னேற்றத்துக்கு ஆதரமான திருமணங்களுக்கு அடிப்படை சாதியை ஒதுக்கி வைத்துவிட்டு செய்யப்படும் திருமணங்கள் என்ற ஒரு மிகப்பெரிய மணிமகுடம் உண்டு இந்த வகை திருமணங்கள் அனைத்திலும். ஆனால் இப்படி நடத்தப்படும் திருமணங்கள் அதன் முதல் நோக்கமான சாதி ஒழிப்பை சரியாக செய்கின்றனவா இல்லையா என்று பார்த்தால் இல்லை என்றே சொல்ல வேண்டிய கதிக்கு தள்ளப்படுகிறோம்.

இப்படி பட்ட கலப்பு திருமணங்களை பற்றி பெரியாருக்கும் காந்திக்கும் இடையையே பற்பல சர்ச்சைகளை உருவாக காரணமாகவும் இருந்தது. காந்தியிடம் வருணாசிரமம் வேண்டுமா வேண்டாமா என்றால் வேண்டும் என்ற கருத்தை உடையவராகவே எடுத்து கொள்ள வேண்டியதாயிருக்கும். ஏற்ற தாழ்வு பார்க்ககூடாது என்று தான் வலியுறுத்தினார் ஆனால் அவரே மனித மலத்தை அள்ளுபவர்களை அந்த தொழிலை புனிதமாக கருதவேண்டும் என்று வலியுறுத்தினார், அந்த தொழிலை இல்லாதொழிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவராக இருந்ததாக தெரியவில்லை.

பெரியார் அவர்கள் இந்த விசயத்தில் என்றும் விட்டு கொடுத்ததில்லை, ஏன் காந்தி சிலையை அகற்றும் போராட்டங்கள் வரை செய்தார். ஏன் 1946ல் காந்தி மகாத்மாவாக பார்க்கப்பட்ட காலகட்டம் அவருக்கு எதிரான கருத்துகள் இருட்டடிப்பு செய்யப்பட்டன. அப்பொழுது விடுதலையில் எழுதினார்


கலப்பு மணத்தைப் பற்றி ´வழ வழா´ என்று எழுதுகிறாரே தவிர, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் இருந்துவரும் கொடுமையை ஒரே சட்டத்தினால் மண்டையிலடித்து ஒழிக்க வேண்டும் என்று ஏன் தைரியமாகக் கூறக்கூடாது? பல நாட்களாகவே வேருன்றி விட்ட கொடுமைகளைக் கண்டு சிரிக்கக் கூடாது என்றும், பொறுமையினால் தான் வெல்ல வேண்டும் என்றும் கூறுவது வைதீக ஹிந்துக்கள் முதுகில் தட்டிக் கொடுப்பதற்காகத் தானே? “எந்தச் சீர்திருத்தமும் நத்தையின் வேகத்தில் முன்னேற வேண்டும்? என்று கூறுவது எதற்காக? உடன் கட்டை ஏறுதல் என்ற தீயபழக்கமானது அறிவாளி ஒருவர் நினைத்த மாத்திரத்திலேயே ஒழிந்து போகவில்லையா?” 2,000-ஆண்டுகளாக உள்ள ஒரு அக்கிரமத்தை நத்தை வேகத்தில் தான் மாற்றவேண்டும் என்றால், 150-ஆண்டுகளுக்கு முன்பு வந்த ஆட்சி முறையை மட்டும் மான் வேகத்தில் மாற்ற வேண்டிய அவசியமென்ன? ´தீண்டாமை மெள்ளமெள்ளத் தான் ஒழியும்´ என்றால், வெள்ளைக்காரன் மட்டும் இந்த விநாடியிலேயே மூட்டையைக் கட்ட வேண்டிய அவசியமென்ன? – *[பெரியார் அவர்கள் எழுதிய தலையங்கம். ´விடுதலை´, 09.07.1946

இப்படி அனைவராலும் போற்றி வளர்க்கப்பட்ட இந்த கலப்பு திருமணம் இன்றைய நிலை என்ன. தமிழக அரசு கலப்பு திருமணம் செய்பவர்களை இருவகையாக பிரிக்கிறது. முதல் வகை மிகவும் தாழ்த்தப்பட்ட மக்கள் பிரிவில் இருந்து திருமணம் செய்து கொள்ளுபவர்கள். இரண்டாம் வகை பிற்படுத்தப்பட்டவர்கள், மிகவும் பிற்படுத்தபட்டவர்களை மணம் செய்து கொள்ளும் முற்பட்ட வகுப்பினர் என்று. இதில் முதலாவது பிரிவில் திருமணம் செய்து கொள்ளுபவர்களுக்கு 20000ரூபாய் நிதியுதவி. இரண்டாவது பிரிவினருக்கு 10000ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. இதை தவிர அரசு வேலையில் முன்னுரிமை வழங்கப்படும் என்று இப்பொழுது அறிவித்திருக்கிறார்கள்.

எல்லாம் சரி இப்படி திருமணம் செய்து கொண்டவர்கள் குழந்தை எந்த பிரிவு என்ன முன்னுரிமை என்று பார்த்தால் வேதனையே. திரும்பவும் பழைய குருடி கதவை திறடி என்ற கதையாக தாய் தந்தை இருவரில் ஒருவரின் சாதியை வைத்து அவர்களின் வாரிசுக்கு படிப்பிலிருந்து வேலைவாய்ப்பு வரை கருத்தில் கொண்டு சாதி சான்றிதழ் வாங்கப்படுகிறது. இப்பொழுது எங்கு சாதி ஒழிந்தது என்று தெரியவில்லை, திரும்பவும் அந்த குழந்தை வளர்க்கபடும் முறை போன்றவைகளில் சாதி இல்லாமல் இருந்தாலும் அரசின் கணக்கின்படி அதுவும் ஒரு சாதியை சார்ந்த உறுப்பினராகவே கணக்கில் வருகிறது.

எந்த திருமணங்கள் சாதியை ஒழித்துவிடும் என்று நம்பி வருகிறோமோ அவைகள் திரும்பவும் சாதியை நாட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார்கள் அவர்களை சொல்லி தப்பில்லை. தப்பாக இருப்பது நமது அரசின் சட்டம், பள்ளியில் சேர்க்கும் பொழுது முதலில் கேட்க்கப்படும் கேள்வியே எந்த சாதி என்பது தான். ஏன் 10ம் வகுப்பு பொது தேர்வு எழுதுவதற்கு தனியாக சாதி சான்றிதழை கொடுத்தே ஆகவேண்டும் என்ற நிலையில் இருக்கிறோம். இத்தனை வருடமாக போற்றி வரும் இந்த கலப்பு திருமணங்களுக்கு அங்கிகாரம் இருபதாயிரம் பத்தாயிரம் என்ற ஊக்க தொகையா இல்லை அவர்களும் அவர்கள் சந்ததியும் வாழ அமைத்து கொடுக்க வேண்டிய பாதையா.

ஏன் இன்றைய காலகட்டம் வரை எவ்வளவோ கலப்பு திருமணங்கள் நடந்திருக்கின்றன இன்னும் சொல்லப்போனால் 60 ஆண்டுகளில் பலாயிரக் கணக்கான திருமணங்கள் நடந்து இன்று அவர்கள் சந்ததியுடன் சேர்த்து லட்சம் பேருக்கு மேல் மக்கள் தொகை அடைந்திருக்க வேண்டும் ஆனால் எங்கிருக்கிறார்கள் அந்த மக்கள்?? இவர்களும் தனியாக அங்கிகரிக்க படவேண்டும். முக்கியமாக தமிழகஅரசாணையான கலப்பு திருமணம் செய்து கொண்டவர்களின் குழந்தைகள் தாய் அல்லது தகப்பன் இருவரின் ஒருவரின் சாதிப்பிரிவில் சேர்த்து கொள்ளலாம் என்பதை நீக்க வேண்டும். இது திரும்பவும் சாதியை தான் வளர்க்கும்..

கலப்பு திருமணம் செய்து கொண்டவர்களின் குழந்தைகளுக்கும் தனி இட ஒதுக்கீடு அளிக்கப்படவேண்டும். இத்தனை வருடமாக சாதி ஏற்றதாழ்வுகளை ஒழிக்க வேண்டும் என்று இடஒதுக்கீடு கொடுத்து அடித்தளத்துக்கு அடித்து தள்ளப்பட்ட மக்களை முன்னேற்ற பாடு படும் அரசு இப்படிபட்ட கலப்பு திருமணம் செய்து அரசின் தோளோடு தோள் கொடுத்த புரட்சியாளர்களையும் அவர்களின் பிள்ளைகளையும் போற்றி பாராட்டினால் போதும். இன்னும் சிறிது காலத்தில் சாதி என்பதிருக்காது.. இனிவரும் அரசுகளாவது இவர்களை அங்கிகரித்து தனி இட ஒதுக்கீடு கொடுக்குமா??

Tuesday, December 28, 2010

குழந்தை பிறந்தால் அதற்கு இன்ஷியல் என்ன

Posted Image

சில வருடங்களாக சென்னையில் சொகுசு பேருந்துகளும் குளிர்சாதன பேருந்துகளும் வலம் வந்து கொண்டிருக்கின்றன. மக்கள் பயணசீட்டின் விலை அதிகமாக இருப்பினும் கூட்டம் குறைவாக இருப்பதால் இந்த வகை பேருந்துகளை உபயோகிக்கிறார்கள். சென்னை கோவை என்று இன்று தமிழ்கத்தில் அனைத்து மக்களும் இப்படிபட்ட சொகுசு பேருந்துகளில் பயணம் செய்கிறார்கள்.

ஒவ்வொரு முறையும் இந்த பேருந்துகள் மக்களின் உபயோகத்திற்கு அறிமுகப்படுத்தும் பொழுது அமைச்சர் பெருமக்களில் இருந்து அனைவரும் வந்து கலந்து கொள்ளுகிறார்கள். பேருந்தின் முகப்பில் முதல்வரின் படத்தை வைப்பதற்கும் மறப்பதில்லை..

சிறந்த முறையில் இந்த பேருந்துகள் சேவை செய்து கொண்டிருக்கின்றன. வேலூரில் இருந்து ஒரு முறை சென்னைக்கு இத்தகைய பேருந்து ஒன்றில் வந்தேன். மிகவும் அருமையான பயண் அனுபவம். கருணாநிதியின் தமிழக அரசின் சாதனைகளில் ஒன்றாக இதுவும் இருக்கும் என்றென்றும்..

Posted Image

சில நாட்கள் முன்பு தான் ஒரு வித்தியாசத்தை இத்தகைய பேருந்துகளில் பார்த்தேன் இதில் JN nuram என்று எழுதப்பட்டிருந்தன அனைத்து பேருந்துகளிலும். சரி இது டாடா போன்ற நிறுவனங்களின் மாடலாக இருக்கும் என்று நினைத்தேன். இன்று தீடிரென்று தோன்றி இத்தகைய பேருந்துகளின் விலை என்ன வரும் என்று பார்க்க JN nuram என்று தேடினால் தெரிய வந்தது ஒரு விசயம்..

Posted Image

இது வேறு ஒன்றுமில்லை Jawaharlal Nehru National Urban Renewal Mission. எனும் மத்திய அரசு நிறுவனம் பற்றி தெரிந்தது. நகரங்கள் மற்றும் கிராமங்களை முன்னேற்ற மத்திய அரசால் ஏற்படுத்தப்பட்ட நிறுவனம்.

Posted Image
(இந்த இரண்டுபடங்களிலும், படி ஏறும் இடத்திலும், பின் சக்கரத்தின் அருகிலும் JN nuram என்று எழுதப்பட்டிருப்பதை இனிமேலாவது பாருங்கள்)
Posted Image

JN nuram என்ற மத்திய அரசு நிறுவனத்தின் நிதிகளை கொண்டே இந்த பேருந்துகள் வாங்கப்பட்டு மக்களுக்காக வழங்கப்பட்டுள்ளது.

இந்த பேருந்துகள் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் வழங்கப்பட்டுள்ளது. ஆந்திராவிலும் கர்நாடகாவிலும் கேராளவிலும் கூட வழங்கப்பட்டுள்ளது அங்கு எங்கும் முதல்வரின் படத்தை பேருந்தின் முன்னால் வைத்து பயன்பாட்டை தொடங்கி வைக்கவில்லை.. கீழே படங்களை பாருங்கள்..

ஆந்திரா
Posted Image

கேரளா
Posted Image

அடுத்தவன் பெற்ற குழந்தைக்கு தன் பெயரை இன்ஷியலாக போடுவது என்பார்களே அது இது தானோ.....

Posted Image

Posted Image

Thursday, December 23, 2010

நாதியற்று போன ஒரு ஊர்...


Posted Image

இன்றிலிருந்து 44 நான்கு வருடங்களுக்கு முன் 1964 வரை ஒரு ரயில் நிலையம், வெளிநாடு செல்ல ஒரு கப்பல் துறைமுகம் என்று மிகவும் சுறுசுறுப்பாக இயங்கி கொண்டிருந்த ஒரு நகரம் இன்று நம்முடன் இல்லை. இங்கு வாழ்ந்த மக்கள் எல்லாம் இன்று பிறந்த ஊர் என்று சொல்லிக்கொள்ள கூட முடியாமல் வெவ்வேறு ஊர்களில் வாழ்ந்து கொண்டுள்ளனர். இத்தனை வருடமும் எந்த அரசும் இந்த ஊரை ஒரு புராதன் அடையளமாககூட மாற்றி பாதுகாக்க முன்வரவில்லை. இன்று அங்கு சென்றால் நமக்கு காணகிடைப்பதெல்லாம், 44 வருடங்களுக்கு முன் நடந்த ஒரு கொடூரத்தினால் அடிபட்ட மிச்சங்களையும் எச்சங்களையும் தான்..

Posted Image

தனுஷ்கோடி தலைமன்னார் என்றால் அனைவருக்குமே தெரியும் 15கீமீட்டரில் ஒரு வெளிநாட்டுக்கு சென்று அங்கும் நம் மொழி பேசும் மக்களுடன் வியாபாரம் செய்து திரும்பிவந்த காலம் அது. ஏன் இந்தியன் இரயில்வே தலைமன்னார் வரைக்குமே பயணச்சீட்டு விற்றது, தனுஷ்கோடியில் இரயிலைவிட்டு இறங்கி தலைமன்னாருக்கு கப்பலில் சென்று வந்திருக்கிறார்கள். அதே பயணச்சீட்டை வைத்து. ஒரு நாளைக்கு இரண்டு கப்பல்கள் தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னாருக்கு சென்று வந்து கொண்டிருந்தன. ஆனால் இன்று தனுஷ்கோடி வெறும் எலும்புக்கூடாக காட்சியளிக்கிறது.

Posted Image

தனுஷ்கோடி அப்பொழுது இராமேஸ்வரத்தை விட மிகவும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்த நகரம். இரயிலில் வருபவர்கள் வியாபாரம் செய்பவர்கள் என்று மட்டும் இல்லாமல் மீனவர்கள் பலர் வாழ்ந்த இடம். ஒரே நாளில் மண்மேடாக மாறியது, ஒரே நாளில் அங்கு வாழ்ந்தவர்கள் எத்தனை பேர் இறந்தவர்கள் எத்தனைபேர் என்று கணக்கு கூட தெரியாமல் அழிந்துபட்ட ஓர் நகரம். இந்த 44 வருடத்தில் இப்படி வாழ்ந்த மக்களின் வாழ்க்கையை மீள் கட்டமைப்பு செய்து கொடுக்க யாராவது முயற்சித்தார்களா என்றால் இல்லை.

Posted Image

அழிந்துபட்டது திரைகடல் ஓடியும் திரவியம் தேடும் நாடோடி தமிழன் கூட்டமல்லவா அவன் வாழ்ந்த நகரம் இருந்தால் என்ன அழிந்தால் என்ன இந்த மத்திய மாநில அரசுகளுக்கு.....

Wednesday, November 17, 2010

ஒரு ரூபாய் அரிசியும் 2Gயும் ஒன்று..



ஸ்பெக்ட்ரம் பற்றி விலாவரியாக அனைவரும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள், நாம எதற்கு பேசணும் என்று பேசாமல் இருந்தால். ஒரு பதிவர் 2Gனா என்ன 3Gனா என்று தொழிநுட்பம் கூட தெரியாதவர்கள் எல்லாம் இதை பற்றி பேசுகிறார்கள் என்கிறார். வேற வழியே இல்லை நாமும் பேசவேண்டியது தான்..

அய்யா இன்னைக்கு கிராமத்துப் பக்கம் போனீர்கள் என்றால் ஸ்மார்ட் போன் ஸ்மார்ட் போனுன்னு ஒன்னு சொல்லுகிறார்களே அதை வைத்துக்கொண்டு மக்கள் அலைகிறார்கள். ஏன் மீன்வர்கள் கூட GPSயுடன் கூடிய சேவைகளை உபயோகித்து கொண்டு இருக்கிறார்கள். அதனாலேயே அவர்கள் உயிர் காப்பாற்றப்படும் சம்பவங்கள் கூட நடந்து கொண்டிருக்கிறது. இந்த காலத்தில் வந்து பதிவுலகத்திலும் தமிழகத்திலும் இந்தியாவிலும் இருக்கும் அனைவருக்கும் 2Gனா 3Gனா தெரியாது என்று சொல்வதை கேட்டால் என்ன செய்வது என்று தெரியவில்லை.

அடுத்து ஒரு முத்தாய்ப்பான கருத்து, இது யூக அடிப்படையிலான கருத்து என்று சொல்லி இருக்கிறீர்கள். இன்று என்னவோ இந்தியாவை CAG & CWG தான் ஆட்டி படைக்கிறது. அதற்காக CAG என்பது என்ன என்று யாருக்கும் தெரியாது என்று நினைக்கவேண்டாம். அரசும் அரசு சார்பு நிறுவணங்களின் வருடகணக்கை கண்காணிக்கும் நிறுவனம். அதாவது நமது வருமானவரியை கட்டுவதற்கு முன் ஒரு ஆடிட்டரிடம் சென்று அவரின் உதவி பெற்று பதிவு செய்வோம் அப்பொழுது அவர் சொல்லும் அறிவுரைகளின் படி நாம் அனைத்தையும் செய்வோம். இதுவே ஒரு நிறுவணமாக இருந்தால் உள்ளே ஒரு கணக்காளர் Internal Audit, வெளிநிறுவணம் மூலமாக ஒரு கணக்காளர் (External Audit) என்று வைத்து கணக்குகளை தணிக்கை செய்வோம். அதாவது எங்காவது யாராவது தவறு செய்திருக்கிறார்களா என்று கண்டுபிடிக்க. உள்ளே இருக்கும் அடிட்டர் தவறு செய்தாலும் வெளி ஆடிட்டர் மூலமாக விசயம் வெளியில் வர வேண்டும் என்பதற்காக. அதே போல் CAG என்பது அரசையும் அரசின் மூலமாக நடத்தப்படும் நிறுவணங்களின் கணக்கை தணிக்கை செய்யும் நிறுவனம்.

அந்த நிறுவணம் அதற்கு முன்பிருந்த முறைகள் இப்பொழுது இருக்கும் முறைகள் அனைத்தையும் ஆராய்ந்து ஒரு அறிக்கையை கொடுத்து இருக்கிறது. மேலும் சந்தை நிலவரத்தையும் அந்த ஏலத்தில் ஏலம் எடுத்த நிறுவணங்கள் உரிமத்தை வைத்து செய்த வியபாரத்தால் அவர்களுக்கு கிடைத்த லாபத்தை வைத்து அறிக்கை சமர்ப்பித்து இருக்கிறது. இது எப்படி யூகம் ஆகும், வேண்டுமென்றால் இப்படி யூகமாக கணக்கு எழுதுபவர்களை வைத்து அடுத்தமுறை உங்கள் வருமாணவரி கணக்கை காட்டி வரி கட்டாமல் இருங்கள்.

என்னவொரு எடுத்துகாட்டு ஒரு ரூபாய் அரிசியும், பதினொரு ரூபாய் அரிசியும், இது தாங்க உங்களிடம் எனக்கு ரொம்ப பிடித்தது. 11 ரூபாய்க்கு அரிசி விற்பவன் 8 ரூபாய்க்கு ஏன் 5 ரூபாய்க்கு வாங்கி 11 ரூபாய்க்கு விற்கிறான். ஆனால் அரசு நட்டத்துக்கு விற்கிறது, இதில் வெளிமார்கெட் விலையை வைத்து மிச்சம் இருக்கும் 10 ரூபாய் மானியம் என்று எப்படி சொல்லுகிறீர்கள். அரசு என்ன வெளிமார்கெட்டில் இருந்த அரிசியை வாங்குகிறது இல்லையே விவசாயிடம் இருந்து தானே. அதற்கு கொள்முதல் விலையை நிர்ணயிப்பது கூட அரசு தானே. எப்படி அய்யா உங்களுக்கு மட்டும் இப்படி தோன்றுகிறது. ஜெயலலிதாவை பார்த்து யாரும் சிரிப்பார்களோ இல்லையோ இப்பொழுது அனைவரும் உங்களை பார்த்து சிரிக்கிறார்கள்.

நாங்க வாங்கவில்லை மானியவிலையில் பெட்ரோல், அரிசி எதுவும் வேண்டாம், வருமான வரி கட்டுகிறோம், அந்த வருமானத்தை சம்பாதிக்க வண்டியில் போகிறோம் அப்பவும் வரி வாங்குகிறீர்கள்(Road Tax), அப்படி வண்டியில் போகனும் என்றால் உடம்பில் தெம்பு வேண்டும் அதற்கு சாப்பிடனும் அப்படி சாப்பிட அரிசி பருப்பு என்று எது வாங்கினாலும் விற்பனை வரி கட்டுறோம். இப்படியே அதுக்கு வரி இதுக்கு வரி என்று கட்டி சம்பாதிக்கிறோம். எல்லாம் முடிந்து சம்பாதித்து திரும்பவும் சம்பாதித்த பணத்துக்கு வருமானவரியை கட்டுகிறோம். இதில் எதாவது ஒரு வரியை மட்டும் வைத்துவிட்டு மற்றவைகளை நீக்கலாமே. நாங்களும் மானியத்தில் எதையும் கேட்க மாட்டோம். என்ன ஒரு வாதம் ஒரு ரூபாய் அரிசியும் கோடி கோடியா ஊழலும் ஒன்றாம், இதை பற்றி பேசுபவர்கள் மானியத்தை வேண்டாம் என்று சொல்லனுமாம். இப்படி பேசுகிறவர்களுக்கு இப்படி தான் பதில் கொடுக்க வேண்டும்.

இதற்கு உங்கள் தலைவரும் ராசாவும் சொன்னதையே நீங்களும் சொல்லி இருக்கலாம், இதற்கு முன்னால் இருந்த அருண்சோரி, பிரோமோத் மகாஜன் கடைபிடித்த முறைகளையே கடைபிடித்தார்கள் என்று. மக்களும் ஆட்டோசங்கர் சம்பாதித்தது போல் இவர்களும் சம்பாதித்தார்கள் என்று பேசாமல் இருப்பது போல் இருப்பார்கள். (இங்கு கூட்டிகொடுத்து என்ற வார்த்தையை யாராவது சேர்த்து கொண்டு படித்தால் நான் பொறுப்பு அல்ல)

ஆனால் தெளிவாகவே இருக்கிறீர்கள் உங்கள் தலைவரைப் போலவே, இப்படி இந்த விசயத்துக்கு எல்லாம் சப்பைகட்டு கட்டி பேசினால் அடி பிரித்து எடுப்பார்கள் என்று ஒரு நண்பரின் மடல் என்று விவரமாக அவர் பெயரில் போட்டு தப்பித்து கொண்டு.

லக்கி நீங்கள் வேண்டுமானால் வாழ்க ஒரு ரூபாய் அரிசி.. வாழ்க 2G... வாழ்க கருணாநிதி... என்று நீங்கள் வாழலாம் அதற்காக நாங்களும் வாழமுடியாது வாழ்த்தவும் முடியாது...

Tuesday, November 9, 2010

மிககுறைந்த வயது தீவிரவாதி

இந்தியாவின் சாதனைகள் என்று எத்தனையோ பட்டியல் போடலாம், அத்தனையும் மிஞ்சிய சாதனை என்றால் மிக இளம் வயதில் தீவிரவாதியானவர் இதே இந்தியாவில் தான் உள்ளார். அவர் வயது அதிகம் இல்லை மக்களே, வெறும் இரண்டு வயது தீவிரவாதி அவர்... Posted Image
பெயர் : மாத்வி முகேஷ்
வயது : 2 வருடம் (தீவிரவாதி என்று சொல்லப்பட்ட 2009ம் ஆண்டு அக்டோபர் மாதம்)
இனம் : மலைவாழ் மக்கள்
வசிப்பிடம் : கோம்போடு கிராமம், கோண்டா காவல்துறை எல்லை, தாண்டேவாடா மாவட்டம் (சட்டீஸ்கர் மாநிலம் ஆந்திர எல்லை)
குடும்பம் : தாத்தா - மாத்வி பர்ஜார் (50 வயது) பாட்டி மாத்வி சுபி (45 வயது) தாய் - கார்டம் குன்னி (20வயது) அத்தை - மடி மூட்டி (8) (இவர்கள் அனைவரும் உயிருடன் ஒரே குடும்பமாக இருந்தார்கள் 2009 அக்டோபர் மாதம் 1ம் தேதி வரை இப்ப இல்லை)
தொழில் : தாத்தா பாட்டி அம்மாவுக்கு விறகு பொறுக்கி விற்பது, மூகேஷூக்கு விரல் சூப்புவது (இன்று அதற்கு விரல்கள் இல்லை)

மாத்வி முகேஷின் தந்தை மாவோயிஸ்ட் அவர் ஒருவர்தான் தப்பினார், வீட்டில் அன்று இல்லாததால்.

2009ம் அக்டோபர் மாதம் 1ம் தேதி, கோம்போடு கிராமத்திற்குள் சிறப்பு காவல் படை உள்ளே புகுந்தது. முகேஷின் பக்கத்து வீட்டிலிருந்தவர்கள் முதற்க்கொண்டு 10 பேர் உயிரிழந்தனர். முகேஷைமட்டும் கண்டுபிடித்தார்கள் அவரின் வெட்டி கொல்லப்பட்ட 8வயது அத்தை மடிமூட்டியின் இரத்தகுளத்தின் அருகே அழுது கொண்டிருந்த பொழுது கை விரல்கள் மூன்று வெட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். இந்த தாக்குதலைப் பற்றி காவல்துறை சொல்வது கிராமத்துக்குள் தீவிரவாதிகளை தேடிப் போனபொழுது தீவிரவாதிகள் சுட்டார்கள், அதனால் திரும்பி நாங்களும் சுட்டோம் இதில் யாரும் மரணமடையவில்லை, காயம் கூட படவில்லை. கிராமத்தில் இருந்து சில வெடிகுண்டுகளை மட்டும் கைப்பற்றினோம் என்பது தான்.

அதன் பிறகு முகேஷின் தந்தை வந்து இவரை தூக்கிக் கொண்டு காட்டிற்குள் சென்று விட்டார். இந்த வருடம் ஜனவரி 7ம் தேதி, மத்திய உள் துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின்  உத்தரவாதம் கொடுத்ததால் ஹிமான்ஸூ குமார் என்பவர் தனது வன்வாசி சேத்ரா ஆஸ்ரமம் மூலமாக மக்கள் குறை கேட்பு நாளை ஏற்பாடு செய்கிறார். பொது குற்றவியல் மூலமாக மாவோயிஸ்டுகளை அழைத்து அவர்களின் மேல் இருக்கும் குற்றங்களில் இருந்து விடுவிக்கவும், அவர்கள் திருந்தி வாழ வழிவகை செய்யவும் முயற்சித்தார்.

அப்பொழுது முகேஷின் தந்தை தன் மகனை தூக்கிகொண்டு வந்தார், அவர் மட்டும் இல்லை அவரை போல் 25 பேர் ஜனவரி 7ம் தேதி வன்வாசி சேத்னாஸ்ரமம் வந்தார்கள். அவர்கள் வந்தவுடன் சிறப்பு காவல் படையினரை அவர்களை சுற்றி வழைத்து 3 எண் பலகையில்லாத போலேரோ கார்களில் கூட்டி சென்றனர் இன்று வரை அவர்களைப்பற்றிய விவரம் தெரியவில்லை...

காலம் காலமாக காடு தான் தங்களின் வாழ்வாதரமாகவும், காட்டை அழிக்காமல் சுள்ளி பொருக்கி விற்று வந்த கிராமமக்களும் 8 வயது முகேஸின் அத்தை மடிமுட்டியும்  2வயது முகேஷூம் தீவிரவாதிகள் இந்திய அரசைப் பொறுத்தவரைக்கும்.. வாழ்க ஜனநாயகம்..பெயர் : மாத்வி முகேஷ்
வயது : 2 வருடம் (தீவிரவாதி என்று சொல்லப்பட்ட 2009ம் ஆண்டு அக்டோபர் மாதம்)
இனம் : மலைவாழ் மக்கள்
வசிப்பிடம் : கோம்போடு கிராமம், கோண்டா காவல்துறை எல்லை, தாண்டேவாடா மாவட்டம் (சட்டீஸ்கர் மாநிலம் ஆந்திர எல்லை)
குடும்பம் : தாத்தா - மாத்வி பர்ஜார் (50 வயது) பாட்டி மாத்வி சுபி (45 வயது) தாய் - கார்டம் குன்னி (20வயது) அத்தை - மடி மூட்டி (8) (இவர்கள் அனைவரும் உயிருடன் ஒரே குடும்பமாக இருந்தார்கள் 2009 அக்டோபர் மாதம் 1ம் தேதி வரை இப்ப இல்லை)
தொழில் : தாத்தா பாட்டி அம்மாவுக்கு விறகு பொறுக்கி விற்பது, மூகேஷூக்கு விரல் சூப்புவது (இன்று அதற்கு விரல்கள் இல்லை)

மாத்வி முகேஷின் தந்தை மாவோயிஸ்ட் அவர் ஒருவர்தான் தப்பினார், வீட்டில் அன்று இல்லாததால்.

2009ம் அக்டோபர் மாதம் 1ம் தேதி, கோம்போடு கிராமத்திற்குள் சிறப்பு காவல் படை உள்ளே புகுந்தது. முகேஷின் பக்கத்துவீட்டிலிருந்தவர்கள் முதற்க்கொண்டு 10 பேர் உயிரிழந்தனர். முகேஷைமட்டும் கண்டுபிடித்தார்கள் அவரின் வெட்டி கொல்லப்பட்ட அத்தை மூட்டியின் இரத்தகுளத்தின் அருகே அழுது கொண்டிருந்த பொழுது கை விரல்கள் மூன்று வெட்டப்பட்டு கண்டுபிடிக்கப்பட்டார்.

அதன் பிறகு முகேஷின் தந்தை வந்து இவரை தூக்கிக் கொண்டு காட்டிற்குள் சென்று விட்டார். இந்த வருடம் ஜனவரி 7ம் தேதி, மத்திய உள் துறை அமைச்சரின் உத்தரவாதம் கொடுத்ததால் ஹிமான்ஸூ குமார் அவர்கள் அவரின் அமைப்பான வன்வாசி சேத்னாஸ்ரமம் மூலமாக ஜன் சுவி என்ற பொது குற்றவியல் மூலமாக மாவோயிஸ்டுகளை அழைத்து. அவர்களின் மேல் இருக்கும் குற்றங்களில் இருந்து விடுவிக்கவும், அவர்கள் திருந்தி வாழ வழிவகை செய்யவும் முயற்சித்தார்.

அப்பொழுது முகேஷின் தந்தை தன் மகனை தூக்கிகொண்டு வந்தார், அவர் மட்டும் இல்லை அவரை போல் 25 பேர் ஜனவரி 5ம் தேதி வன்வாசி சேத்னாஸ்ரமம் வந்தார்கள். அவர்கள் வந்தவுடன் சிறப்பு காவல் படையினரை அவர்களை சுற்றி வழைத்து 3 எண் பலகையில்லாத கார்களில் கூட்டி சென்றனர் இன்று வரை அவர்களைப்பற்றிய விவரம் தெரியவில்லை...
Posted Image
காலம் காலமாக காடு தான் தங்களின் வாழ்வாதரமாகவும், காட்டை அழிக்காமல் சுள்ளி பொருக்கி விற்று வந்த கிராமமக்களும் 8 வயது முகேஸின் அத்தை மடிமுட்டியும்  2வயது முகேஷூம் தீவிரவாதிகள் இந்திய அரசைப் பொறுத்தவரைக்கும்.. வாழ்க ஜனநாயகம்..

Wednesday, November 3, 2010

நோக்கியாவும் எந்திரனும்(ரோபோ)



நோக்கியா நோக்கு நோக்குனு நொக்குயா ஊழியர்களை...

ஆம் இது தான் இன்று நோக்கியா என்ற நிறுவனம் செய்து கொண்டிருப்பது, 2006ம் வருடம் நோக்கியாவின் உற்பத்தி பிரிவு சென்னையில் ஆரம்பிக்கப்பட்டது. அப்பொழுது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது அனைவருக்கும். நமது பிள்ளைகள் பலருக்கு வேழைவாய்ப்பு கிடைக்கும் என்று.

இன்று ஆரம்பிக்கப்பட்டு 4 வருடங்களே கடந்த நிலையில் எத்தனை வேதனைகள் அதுவும் குறிப்பாக கடந்த 6 மாதங்களுக்குள். நோக்கியா நிறுவனம் என்றால் ஸ்ரீபெரும்பூதூரை அடுத்து ஆரம்பிக்கப்பட்டுள்ள ஒரு நிறுவணம் அல்ல. ஒரே இடத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள பல நிறுவனங்கள். நோக்கியா நிறுவனத்தின் கைபேசிகளில் உள்ள அனைத்து பாகங்களும் நோக்கியாவே தயாரிப்பது இல்லை. ஆமாக் ஸ்க்ரூ முதற்கொண்டு அவர்கள் தயாரித்தால் தேவையில்லாத வீண்செலவு ஆகும். அதனால் அவர்களுக்கு தேவையான கீபேட், அவுட்டர் கவர் போன்றவைகளை வெளி நிறுவனங்களுக்கு தேவையான மாதிரிகளை கொடுத்து தயார் செய்து தரச் சொல்லுவார்கள். அதே போல் தான் ஸ்ரீபெரும்பூதுருக்கு அடுத்துள்ள நோக்கியாவின் சிறப்பு பொருளாதர மண்டலத்திற்குள் இருக்கும் நிறுவனங்களூம். பாக்ஸ்கானில் இருந்து அனைத்து நிறுவனங்களூம் நோக்கியாவிற்கு உதிரிபாகங்கள் தயாரித்து கொடுக்கும் நிறுவனங்கள். மொத்தமாக அந்த சிறப்பு பொருளாதர மண்டலம் நோக்கியாவும் அதன் துணை நிறுவனங்களுக்குமானது.

கடந்த சில மாதங்களாக இந்த சிறப்பு பொருளாதமண்டலத்திலிருந்து ஏகப்பட்ட பிரச்சனைகள் வந்து கொண்டிருக்கின்றன. அவற்றை பார்க்கும் முன் சிறப்பு பொருளாதர மண்டலம் என்றால் என்னவென்று பார்க்க வேண்டும். SEZ Special Economic Zone என்று அழைக்கப்படும் சிறப்பு பொருளாதர மண்டலத்தில் 100% தயாரித்த பொருட்களை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் மட்டுமே ஆரம்பிக்கலாம். தயாரித்த பொருளை உள்நாட்டில் விற்பனை செய்ய வேண்டும் என்றால் அதற்கான சுங்கதீர்வையை கட்டிவிட்டு விற்பனை செய்யலாம். ஆனால் இத்தகைய மண்டலங்களின் முக்கிய நோக்கம் ஏற்றுமதியை ஊக்குவிப்பதே. இதற்காக இந்த மண்டலங்களில் இருக்கும் நிறுவனங்கள் கொள்முதல் செய்யும் பொருள்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது. அதாவது தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கான கச்சாப்பொருட்களில் இருந்து அவர்கள் வாங்கி உபயோகிக்கும் கணிணி பொருட்கள் வரை எந்தவிதமான வரிகளும் கிடையாது.

இப்படி எந்தவிதமான வரியும் கட்டாமல் அவர்கள் தங்கள் உற்பத்தியை பல்மடங்காக பெருக்கிக்கொண்டு, அவர்களின் ஏற்றுமதியை அதிகரிக்க இந்திய அரசு செய்து கொடுத்த ஒரு வசதியாகும். ஆனால் இவர்கள் அத்தனை வரிவிலக்குகளையும் பயன் படுத்திக் கொண்டு அவர்களின் நிகர இலாபத்தை தான் அதிகப்படுத்திக் கொள்கிறார்களே ஒழிய மக்களுக்கு எந்தவிதமான நன்மையையும் செய்வதில்லை.

இவர்கள் வேலைவாய்ப்பு கொடுத்து இளைஞர்கள் அங்கு வேலைக்கு சென்றால், உயிருடன் திரும்பிவருவது கேள்விகுறியாகியுள்ளது. அதுவும் அதிக சம்பளம் எல்லாம் கொடுப்பதில்லை 3500 ரூபாயிலிருந்து 10,000ரூபாய் வரை தான் சம்பளமாக கொடுக்கிறார்கள். அந்த கிராமத்து இளைஞர்களுக்கு இது அதிகமான சம்பளமாக இருக்கலாம், மேலும் நோக்கியாவில் வேலைபார்க்கிறேன் என்று பெருமைக்கு எருமையை மேய்ப்பதாக சொல்லிக்கொள்ளலாம். ஆனால் உண்மையில் இந்த ஊதியம் எந்த விதத்திலும் சரிவிகிதம் கிடையாது, அந்த நிறுவனங்களின் நிகர லாபத்தை கணக்கில் எடுத்துக் கொண்டால். பூசணிக்காயை அவர்கள் எடுத்துக் கொண்டு அறுத்து சமைத்தபிறகு மிஞ்சும் புசணிவிதைகளையே இவர்களுக்கு சம்பளமாக கொடுக்கின்றனர். இவர்கள் ஊதிய உயர்வு போன்றவைகளுக்கு வேலைநிறுத்தம் செய்து இப்பொழுது தான் ஒய்ந்தனர். இவர்கள் தொழிலாற் சங்கம் அமைக்கவும் இன்னும் அனுமதி கிடைக்கவில்லை. அனைவரும் மிஞ்சிப்போனால் 19லிருந்து 23வயதுக்குள் இருக்கும் இளைஞர்கள்.

பள்ளி படிப்பு, பட்டய படிப்பு என்று முடித்த 19வயது இளைஞர்கள் தான் இவர்களின் குறிக்கோள். அவர்களை எடுத்து அடிமாட்டு சம்பளத்தில் வேலைக்கு வைத்து தின்று கொழுக்கின்றனர். அரசும் இவர்களுக்கு எந்த உதவியும் செய்வதில்லை, ஒவ்வொரு பிரச்சனையின் போதும் காவல்துறையின் அடக்குமுறையில் அடிபட்டு ஒடுங்கி போய்விடுகிறார்கள் இங்கு வேலைபார்ப்பவர்கள். செய்தி நிறுவனங்களும் எந்த நடிகை யாருடன் இரவை கழித்தார் என வெளியுலகத்துக்கு வெளிச்சம் போட்டு காட்டுவதில் தான் குறியாக இருக்கின்றன. அப்படி இப்படி பட்ட நிறுவனங்களை பற்றி செய்திகளை வெளியிட்டால் விளம்பரம் கிடைக்காது. ஏன் அரசுக்கு எதிராகவே இதே விளம்பரங்களுக்காக தான் மண்டியிட்டு கிடக்கின்றன ஊடகங்கள். இப்படி பட்ட சமூக நோக்குள்ள மனிதாபிமான மற்ற முறையில் நடக்கும் கொள்ளைகளை எப்படி வெளிகொணரும்.

அனைத்துக்கும் அதிகமாக அம்பிகா அவர்களின் மரணம் இப்பொழுது நடந்தேறியுள்ளது. இதை அனைத்து ஊடகங்களும் எப்படி சொல்லுகிறது என்றால் "ரோபோ தாக்கி இளம் பெண் மரணம்", இந்த பொறுக்கிகளுக்கு மனசாட்சி என்பதே இல்லையா? எந்திரன் என்று ஒரு படம் வந்தது என்பதற்காக அதே போலா சொல்லுவது, ஒருவரின் மரணத்தைப்பற்றியும். இயந்திரத்தில் நிர்வாகத்தின் கவனக்குறைவால் அடிபட்டு இறந்தவரை இதைவிட கேவலமாக யாரும் சித்தரிக்க முடியாது.

பாக்ஸ்கானில் ஊழியர்கள் மயக்கமடைந்து விழுந்தனர் என்று செய்தி வந்தது அதற்கான காரணத்தை இன்று வரை யாரும் வெளியிடவில்லை. ஏற்றுமதியை அதிகரிக்கிறேன் இந்தியாவின் நிகர உற்பத்தி திறனை அதிகரிக்கிறேன் என்று சொல்லி இங்கு பல இளைஞர்களின் வாழ்வு புதைகுழியில் தள்ளப்பட்டுள்ளது. இதை யாரும் கண்டுகொள்வதாக தெரியவில்லை, இதே பிரச்சனை நோக்கியாவின் சீன உற்பத்தி பிரிவில் நட்ந்து இருந்தால் இந்நேரம் தொழிற்சாலை மூடப்பட்டிருக்கும். இங்கு அனைவரும் சேர்ந்து இந்த பிரச்சனையை மூடிமறைக்க பார்க்கின்றார்களே தவிர. தரகட்டுப்பாடுகளை முழுமையாக கடைபிடிப்பதற்கு யாரும் வழியுறுத்துவதாக தெரியவில்லை அதை செய்தாலாவது இன்னுமொரு அப்பாவி ஊழியரின் உயிர் போவதை தடுத்து நிறுத்தலாம். அப்படி தரகட்டுபாடுகளை கடைபிடிக்கபடவில்லை என்றால் அந்த தொழிற்சாலையை மூட நடவடிக்கையாவது எடுக்கவேண்டும்.

ஆனால் யாரும் இதை செய்யமாட்டார்கள் வேண்டுமென்றால் இன்னும் பிரச்சனை பெரிதாகி பல உயிர்கள் போனபின் ஸ்டிபன் எலோப்புக்கு இரத்தினகம்பளவ்ம் விரித்து வரவேற்று செத்து போனவர்களின் பிணத்தை காட்டி பேரம் பேசி விரித்த இரத்தினக்கம்பளத்திலேயே திரும்பவும் நடக்க வைத்து விமானம் ஏற்றி அனுப்பி வைப்பார்கள்.

பேரறிவாளன்


19 வயது தனது பதின்ம வயதின் இறுதி கால கட்டத்தை அனுபவித்துக் கொண்டிருந்த இளம் வாலிபன். இன்று 20 வருடங்களாக தனிமைச் சிறையில். இவர் செய்த குற்றம் என்ன?? கொலை செய்ய உதவியாக இருந்தார், என்று அரசு தரப்பு வாதிட்டு இவருக்கு தூக்கு தண்டனை வாங்கி கொடுத்துள்ளது. அப்படி என்ன உதவி செய்தார் என்றால் பேட்டரி செல் வாங்கி கொடுத்தாராம், குற்றம் செய்தவரை விட குற்றம் செய்ய தூண்டியவருக்குத் தான் தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என்ற நாட்டில் குற்றம் செய்வதற்கு உடந்தையாக பேட்டரி வாங்கி கொடுத்தார் என்பதற்காக மரண தண்டனை. பேட்டரி வாங்கி கொடுத்தவருக்கு அதை எதற்கு பயன் படுத்தப் போகிறார்கள் என்பது தெரியுமா என்ற விசாரணை நடந்ததா எனபது தெரியவில்லை. ஒரு நண்பர் வீட்டுக்கு போகும் பொழுது அவர் வரும் பொழுது இதை வாங்கி வா அதை வாங்கி வா என்று சொன்னால் வாங்கி கொண்டு செல்வோம் அதைப் போல் பேரறிவாளன் ஒரு பேட்டரி வாங்கிக் கொண்டு சென்றிருக்கலாம், ஆனால் அது அவருக்கு பரிசாக மரணத்தை தண்டனையாக கொடுக்கும் என்பது இந்த இந்தியாவில் மட்டுமே சாத்தியம். 

படிப்பை முடித்து திராவிடர் கழகத்தின் பெரியார் திடலில் விடுதலை இதழில் வேலைபார்த்துக் கொண்டு இருந்தவர் தான் இந்த பேரறிவாளன். இவர் ஒரு பகுத்தறிவு பாசறை குடும்பத்தில் இருந்து வந்தவர், ஆனால் இவருக்காக குரல் கொடுக்க சாதரண அறிவு படைத்தவர்கள் கூட யாரும் தயாரில்லை. இவரை பெரியார் திடலில் வைத்து இவரது பெற்றோர்கள் சிபிஐ வசம் ஜூன் மாதம் 11 தேதி இரவு 10.30 மணிக்கு ஒப்படைத்தனர். பெரியார் திடலில் அப்பொழுது கூடவே சிலரும் இருந்தனர். அதன் பிறகு இவரை விசாரணைக்கு என்று அழைத்து சென்றனர், மறுநாளே விசாரித்து விட்டு அனுப்பிவிடுவதாக கூறி. இவரை விசாரிக்க வேண்டிய அவசியம் என்னவென்றால், இவரின் சொந்த ஊர் ஜோலார்பேட்டை வேலூருக்கு அருகில், குற்றம் நடந்த ஊருக்கு அருகில் என்பதால் இங்கு இருக்கும் விடுதலைப்புலி ஆதரவாளர்களை விசாரித்துள்ளனர். முக்கியமாக திரவிட கழகத் தொண்டர்களை, அப்பொழுது இவரின் வீட்டிற்கும் சென்றுள்ளனர். இவரின் தாய் தந்தை பேரறிவாளன் சென்னையில் பெரியார் திடலில் தங்கி விடுதலை பத்திரிக்கையில் வேலைபார்ப்பதை கூறி இருக்கின்றனர், அதன் பின்னரே ஒப்படைப்பு படலம் நடந்தேறியுள்ளது.

அப்படி பேரறிவாளனின் தாயும் தந்தையும் புலனாய்வுத் துறையிடம் தாங்களே ஒப்படைத்த பிறகு மல்லிகை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்ட பேரறிவாளன் வெளியுலகை இன்று வரை பார்க்க முடியவில்லை. இடையில் அவர் இந்த உலகை பார்த்த நேரங்கள் என்றால் ஜூன் 11ம் தேதி கைது செய்யப்பட்ட வர், திரும்பவும் வெளியுலகைப் பார்த்தது 19ம் தேதி ஜூன் மாதம், அதுவும் நீதிமன்றத்தில் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கேட்டு.  அன்று இவரை கைது செய்ததாக புலனாய்வுத்துறை குறிப்பிட்ட தேதி 18ம் தேதி ஜூன் மாதம் என்று சொல்லி ஒருமாதம் காவலில் வைத்திருக்க உத்தரவு பெற்றனர். ஆனால் பேரறிவாளனை அவரது தாய் தந்தை இருவரும் ஜூன் 11ம் தேதியே சிபிஐயிடம் ஒப்படைத்துள்ளனர், நடுவில் இருந்த 8 நாட்கள் இவர் எங்கு வாழ்ந்தார் என்பது வெளியுலகிற்கு மறைக்கப்பட்டது. ஒரு குற்றவாளியை கைது செய்து 24மணி நேரத்திற்குள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவேண்டும் என்பது சட்டவிதி. அதையெல்லாம் மீறி 8 நாட்கள் சட்டவிதிமுறைகளை மீறி முறையற்ற காவலில் வைத்துள்ளனர். ஆனால் நீதிமன்றம் காவலில் வைத்து விசாரிக்க கொடுத்த அனுமதியின் கீழாக ஜூலைமாதம் 18ம் தேதிவரை திரும்பவும் மல்லிகை கட்டிடமே இவருக்கு விதியாகிப்போனது.

சட்டவிரோத காவல் என்பது மனித உரிமையின் கீழ் மட்டுமல்ல எந்த உரிமையின் கீழாகவும் அனுமதிக்கப் படக்கூடாத ஒன்று. இந்த வழக்கை விசாரித்த சிபிஐ அதிகாரி இராகோத்மன் வாக்குமூலத்தின் படி இவர் கைது செய்யப்பட்டது 19-6-1991 அன்று காலை பெரியார் திடல் அருகில் என்று சொல்லி இருக்கிறார். அவருடைய வாக்குமூலத்திலேயே இன்னொரு இடத்தில் 11.6.1991 அன்று ஜோலார்பேட்டையில் பேரறிவாளன் வீட்டில் எட்டுபொருட்களை கைபற்றியதாக குறிப்பிடுகிறார். மேலும் பேரறிவாளன் கொடுத்ததாக சொல்லப்படும் வாக்குமூலத்தில் 18ம் தேதி கைது செய்த்தாக கூறப்பட்டுள்ளது. ஆனால் காவலறிக்கையில் 19.6.1991 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆக மொத்தம் கைது செய்யப்பட்ட தேதி யாருக்கு சரியாக தெரியும் என்பதே தெரியவில்லை.

இந்த கேள்விக்கு விடையை சட்டத்தின் கீழாக யார் தருவார்கள்..
பேரறிவாளன் கைது செய்யப்பட்டது
11ம் தேதியா??
18ம் தேதியா???
இல்லை 19ம் தேதியா????
ஆனால் 13.6.1991 அன்று மாற்றுடையுடன் வந்த பேரறிவாளன் தாயாரை அவரின் மகனை சந்திக்க மறுப்பு தெரிவித்து ஆடைகளை மற்றும் பெற்றுக்கொண்டதையும் யாரும் மறுக்கவில்லை. (மல்லிகை பதிவேட்டை தேடித் தான் பார்க்கவேண்டும், இந்நேரம் அதையும் தொலைத்து இருப்பார்கள், மக்களை பாதுகாக்கும் பணியில் அல்லும் பகலும் ஒழைப்பதால், ஆவணங்களை பாதுகாக்கும் பணியை பார்ப்பது இல்லை நமது அரசாங்கமும் காவல் துறையும்)

சரி நமக்கு எழும் இயல்பான கேள்வி, 18ம் தேதி காலையில் கைது செய்யப்பட போகிறவருக்கு 13ம் தேதி மாற்றுடை எதற்கு பெற்றுக் கொண்டனர் என்பது தான்? ஆனால் இதற்கு விளக்கம் கொடுக்க யாரும் இருக்க மாட்டார்கள். 11ம் தேதியில் இருந்து 19ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தும் வரை 8 நாட்கள் என்ன நடந்தது பேரறிவாளன் தலைமறைவாக இருந்தாரா இல்லை செத்து அதற்கு பிறகு மறுபிறப்பு எடுத்து வந்தாரா என்று கேட்பதற்கு இங்கு யாருமே இல்லை.

நீதிபதிகள் விசாரணை அறிக்கையை முழுமையாக படித்து தான் எந்த தீர்ப்பும் வழங்குகிறார்கள், இது தான் நமது எண்ணம். இந்த வழக்கின் தீர்ப்பில் தண்டனை கொடுக்கப்பட்ட யாரும் தடா சட்டத்தின் கீழ் குற்றவாளிகள் இல்லை என்று அனைத்து நீதிபதிகளும் ஏகமனதாக தீர்ப்பு வழங்கியுள்ளனர். ஆனால் இவர்களை கைது செய்தது தடாசட்டத்தின் கீழ், வாக்குமூலம் பெறப்பட்ட பொழுது இவர்கள் தடா சட்டத்தின் கீழ் சிறையில் இருந்தனர். தடாசட்டத்தின் கீழ் இவர்கள் குற்றவாளிகள் இல்லை என்ற பொழுது அந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களிடம் வாங்கிய வாக்குமூலம் எப்படி செல்லுபடியாகுமா? இதை தீர்ப்பு வழங்கிய நீதிபதியும் கவனித்ததாக தெரியவில்லை வேறு யாரும் கேள்வி எழுப்பியதாக தெரியவில்லை, எனென்றால் தடா சட்டத்தின் கீழாக ஒரு எஸ்.பி அந்தஸ்தில் உள்ள அதிகாரி முன்னால் வாக்குமூலம் கொடுத்தாலே அதை ஒப்புதல் வாக்குமூலமாக ஏற்றுக் கொள்ளலாம் என்கிறார்கள், ஆனால் குற்றவியல் சட்டத்தின் கீழ் காவல் துறையினர் முன்பு கொடுக்கப்படும் எந்த வாக்குமூலமும் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. ஆனால் இங்கே தடாசட்டத்தின் கீழ் காவல் துறையினர் முன்பு வாங்கிய வாக்குமூலங்களை வைத்தே தீர்ப்பு வழங்கபப்ட்டுள்ளது.

சரி திரும்பவும் விசாரணை கால கட்டத்துக்கே வருவோம். இந்த நீதிமன்றம் அனுமதித்த ஒருமாத விசாரணை காலம் என்பது, எப்பொழுது என்பது எல்லாம் நேரம் காலம் பார்ப்பது இல்லை நடு இரவில் கூட எழுப்பி விசாரணை நடக்கும். நமது லோக்கல் காவல் நிலையத்தில் கூட எந்தவிதமான குற்றத்துக்காகவும் போய் பழக்கம் இல்லாத ஒரு இளைஞன் ஒரு மாதம் சிபிஐயின் பிடியில் அடி உதை கொடுக்கப்பட்டது என்று சொன்னாலும் வெளியில் இல்லை என்று மருத்துவ சான்றிதழை கொடுப்பார்கள் நம்ம ஊர் உள்ளூர் காவல்துறையே, இவர் அடைபட்டிருப்பதோ தேசத்தின் மிகப்பெரிய ஒரு புலனாய்வு நிறுவனத்தின் பிடியில். இவர் சித்திரவதை செய்யப்பட்டதை வெளியில் சொன்னாலும் நம்ப மாட்டார்கள். ஒருமாதம் மல்லிகை மனத்தை சுவாசித்து மல்லிகைபூ என்றாலே வெறுப்போடு பார்க்கும் அளவுக்கு சென்று விட்டிருப்பார் பேரறிவாளன், திரும்பவும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அதன் பிறகு குற்றப்பத்திரிக்கை நகல் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது, அதன் படி இவர் திரும்பவும் ஒரு மனுவை தாக்கல் செய்கிறார், வாக்குமூலங்கள் துன்புறுத்தி கையெழுத்து பெறப்பட்டன அவற்றை ஏற்க கூடாது என்று. அந்த மனுவும் கு.ப. மனு எண். 582/92 என்று தடா நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டுள்ளது. இதற்கு எல்லாம் மகுடம் சூடியது போல் நீதிபதி வாத்வா அவர்களின் தீர்ப்பில் பக்கம் 87ல் குறிப்பிட்டுள்ளார்.

“ஏதேனும் வலுவந்தம், அச்சுறுத்தல் அல்லது எவ்வகையிலும் மூன்றாம் தரமுறையை பயன்படுத்தியதால்தான் அல்லது எதிரியின் உளவியலை பாதிக்கச் செய்ததால்தான் ஒப்புதல் வாக்குமூலம் தரப்பட்டது என்று வழக்கை விசாரித்த நீதிமன்றத்தின் முன் முறையீடு ஏதும் செய்யப்படவில்லை.”

இரண்டு முறை மனு அளிக்கப்பட்டு விசாரணையும் மேற்கொண்ட பிறகும் குற்றவாளிகள் என்று குற்றம் சுமத்தப்பட்டவர்கள் யாரும் தாங்கள் கொடுத்த வாக்குமூலத்தை மறுக்கவில்லை அதை எதிர்த்து எந்த விதமான முறையீடும் செய்யவில்லை என்று கூறியுள்ளார் ஒரு உச்சநீதிமன்ற நீதியரசர். வாழ்க நீதி.

வாக்குமூலத்தில் உள்ள குற்றங்கள் ஒன்றா இரண்டா அடுக்கி கொண்டே போகலாம். குற்றம் சாட்டப்பட்ட 17 பேரும் இரண்டுமாதங்கள் மூன்று மாதங்கள் என்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு அவர்கள் அனைவரின் வாக்குமூலமும் ஒரே நாளில் 15.8.1991 அன்று பெறப்பட்டுள்ளது. அதாவது போலீஸ் காவல் முடியப்போகும் ஒரு நாள் முன்பு, இது எப்படி சாத்தியமாகும், அனைத்து குற்றவாளிகளுக்கும் அன்று தீடிரென்று ஞானம் பிறந்துவிட்டதா, அப்படி பிறந்த ஞானத்தின் கீழாக அனைவரும் ஒரே நாளில் ஒப்புக் கொண்டார்களா? அப்படி ஞானம் பிறக்க காவலின் கீழ் வைத்து விசாரணையில் தியான வகுப்பு எதுவும் நடத்தினார்களா என்ன காவல் துறையினர்.

ஏன் இன்றுவரை இடுப்பு பெல்ட் வெடிகுண்டை தாயாரித்து கொடுத்தவர் யார் என்பதை இந்த வழக்கில் கண்டுபிடிக்க முடியவில்லை என்று சொல்கிறது சிபிஐ தரப்பு, ஆனால் அதை வெடிக்க செய்வதற்கான பேட்டரியை பேரறிவாளன் வாங்கி கொடுத்தாராம். பேரறிவாளன் வாக்குமூலத்தின் படி இரண்டு பேட்டரிகளையும் சிவராஜன் வெடிகுண்டை வெடிக்க பயன்படுத்தியதாக உள்ளது.

இதிலும் மாறு படுகிறது அரசு சாட்சிகள் வெடிகுண்டு நிபுணர்கள் வெடிகுண்டில் ஒரு பேட்டரி பொருத்தியிருக்கவேண்டும் என்கிறார்கள். ஆனால் சிபிஐ தரப்போ இரண்டு பேட்டரி பொறுத்தப்பட்டது என்கிறார்கள், அதை பேரறிவாளன் வாங்கி கொடுத்தார் என்கிறார்கள். பேரறிவாளன் வாக்குமூலத்தின் படி மே மாதம் முதல்வாரம் பேட்டரி வாங்கியதாக சொல்லி இருக்கிறார். பேட்டரி கடைக்காரர் மொய்தீன்(சாட்சி 91) மே இரண்டாம் வாரம் வாங்கியதாக கூறுகிறார்.

ஹரிபாபு என்ற புகைப்படக்காரர் எடுத்த புகைப்படமே முக்கிய சாட்சி அவருக்கு அந்த பிலிம் சுருள் வாங்கி கொடுத்ததாகவும் பேரறிவாளன் மீது குற்றசாட்டு, ஆனால் பாக்கியநாதன் என்பவரும் வாங்கி கொடுத்ததாக வாக்குமூலம் கொடுத்து இருக்கிறார். இராமமூர்த்தி (சாட்சி எண் 72) என்பவரின் சாட்சி படி சுபா சுந்தரம் வாங்கி கொடுத்ததாக இருக்கிறது, ஆனால் பிலிம் வாங்கி கொடுத்த குற்றம் பேரறிவாளன் மேல் கடைசியாக சொல்லப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது.

இவருக்கு இரண்டு சகோதரிகள் மூத்த சகோதரிக்கு 1.9.1991 திருமணம் நடைபெற்றது வீட்டிற்கு ஒரே பையனான இவர் அந்த திருமணத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை நீதிமன்றத்தில் எவ்வளவோ போராடிய பின்னரும். இவரின் மற்றொருமொரு சகோதரி இவருக்கு இளையவர், அந்த இளைய சகோதரி இவரின் விடுதலைக்காக திருமணம் செய்துகொள்ளாமல் காத்துக் கொண்டிருந்திருக்கிறார், அதன் பிறகு சகோதரனின் வற்புறுத்தலுக்கு இணங்க திருமணம் செய்து கொண்டாராம். எப்பொழுது விடியும் இவர்கள் சுதந்திரதாகம், 10ம் தேதி ஜூன்மாதம் வீட்டில் வந்து காவல்துறை விசாரித்ததால் 11ம் தேதி இவர்கள் பெற்றோர்களே முன் வந்து காவல் துறையினரிடம் ஒப்படைத்துவிட்டு நியாம் கிடைக்கும் என்று ஏங்கி கிடக்கும் இந்த பெற்றோரின் நிலமை இனி யாருக்கும் வரவேண்டாம்...

தகவல்கள் சேகரிக்கப்பட்டது இரு கடிதங்கள்,
2007ல் எழுதப்பட்ட கடிதம்
2008ல் எழுதப்பட்ட கடிதம் 
மற்றும் கொலைவழக்கினைப் பற்றிய செய்திகள்,
உச்சநீதிமன்ற தீர்ப்பு.


Saturday, October 30, 2010

10 வருட போராட்டம் ஒரே ஒரு சட்டததை எதிர்த்து..

 
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூர் பெயரை போன்றே மணியான ஒரு மாநிலம், இயற்கை அழகு கொஞ்சி விளையாடும் ஒரு நந்தவன உலகம். ஒடுக்கப்பட்ட மக்களின் ஓலக்குரல் ஓங்கி ஒழித்தால் அதை தீவிரவாதம் என்று வர்ணித்து அதன் குரல்வலையை கடித்து உலகத்திற்கு அவர்களின் குரல் கேட்காமல் செய்வது உலக அதிகார வர்க்க அரசுகளின் மரபு. அதற்கு மணிப்பூரும் விலக்கு அல்ல, அங்கும் தீவிரவாதத்தத ஒடுக்குகிறேன் என்ற பெயரில் 1958ம் வருட அவசரகாலசட்டம(Armed Forces Special Powers Act (AFSPA)). முதன் முதலாக 1990 அமுலுக்கு கொண்டுவரப்பட்டது. இந்த சட்டம் கொண்டு வரக்காரணமாக உல்பா தீவிரவாதிகள் மணிப்பூரை இந்தியாவிலிருந்து பிரிக்க விரும்புகிறார்கள் என்று சொல்லி சட்டத்தை அமுலுக்கு கொண்டு வந்தனர். இந்த சட்டம் மக்களுக்கு அமைதியாக வாழ உதவியதோ இல்லையோ, இராணுவபடையினருக்கும் துணை இராணுவப்படையினருக்கும், மாநிலகாவல் துறைக்கும் மிகவும் உதவியது. யாரை வேண்டுமானாலும் எந்த காரணமும் இன்றி கைது செய்யலாம். வாரண்ட் தேவை இல்லை எந்தவிதமான சட்ட நடைமுறைகளையும் பின் பற்ற வேண்டியதில்லை, சந்தேகப்படும் நபர்களை சுட்டுக் கொள்ளலாம். இத்தனைக்கும் மேலாக எந்த நேரத்திலும் யாரு வீட்டுக்குள்ளும் நுழையலாம் தங்கள் உடல் திணவிற்கு அந்த வீட்டு பெண்களை உபயோகித்துக் கொள்ளலாம், இது சட்டத்தின் வரையறையில் எழுதப்படவில்லை ஆனால் தங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் அதிகாரத்தின் கீழ் தன் உடல் திணவை தீர்த்து வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தாலோ இல்லை, பாலியல் வன்முறை என்று புகார் கொடுக்க பாதிக்கப்பட்டவர் வந்தால் AFSPA பாயும்.

ஆம் ஒரு சிரூடைப் பணியாளன் கையில் ஒரு குண்டூசியை கொடுத்தால் அதை அவன் மக்களுக்கு பயனுள்ள வகையில் பயன்படுத்துகிறானோ இல்லையோ, அதை வைத்து தான் எந்த மக்களை பாதுகாக்க வேலையில் அமர்த்தப்பட்டிருக்கிறோமோ அந்த மக்களை மிரட்டுவதற்கு பயன் படுத்துவான். அப்படித் தான் AFSPAவும் இந்திய இராணுவப் படைகளுக்கும், துணை இராணுவப்படைகளுக்கும் தாங்களே இங்கே அனைத்துக்கும் உரிமை படைத்தவர்கள் என்று மணிப்பூரின் அனைத்தையும் ஆண், பெண் என்ற எந்த வித்தியாசமும் இல்லாமல் அஃறிணை பொருள் வரை தங்களுடையதாக பாவிக்க ஆரம்பித்து தங்களின் கொலைவெறி ஆட்டத்தை 1990ம் ஆண்டு தொடங்கி நடத்தி வருகின்றனர். நாம் எல்லாம் அஸ்ஸாமை முதன் முதலாக திரும்பி பார்க்க காரணமாக இருந்தவர்கள் அஸ்ஸாமிய பெண்களே இந்திய இராணுவமே வா வந்து என்னை பாலியல் வன்முறை செய்து கொள் என்று ஓங்கி கூவிய குரல், இந்த குரல் AFSPA அமுல் படுத்தி 14 ஆண்டுகள் கழித்து 2004ம் ஆண்டு ஒலித்தது.

ஆனால் அதற்கு முன்பாகவே தன்னை உலகத்திற்கு அஹிம்சையையும் சத்யாகிரகத்தையும் கண்டுபிடித்த காந்தியின் தேசமாக காட்டிக் கொள்ளும் இந்தியாவிற்கு அதன் வழியிலேயே 2000ம் ஆண்டு முதல் பத்து வருடமாக தொடர்ந்து நடந்து வரும் ஒரு உண்ணாவிரதப் போராட்டம் நமது கண்ணுக்கு முன்னால் முழு பூசணியை சோற்றில் மறைப்பது போல், ஒரு மிகப்பெரிய அஹிம்சாவழி போராட்டம் மறைக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தை நடத்துபவர் ஐரோம் சர்மிளா என்ற ஒரு பெண், இவர் பள்ளி படிப்பிற்கு மேல் படிக்க முடியாமல் குடும்ப வறுமையால் படிப்பை கைவிட்டவர். நவம்பர் 2ம் தேதி  2000 ஆண்டு மல்லோம் என்ற இடத்தில் துப்பாக்கி சூட்டில் ஒரு நடுத்தரவயது பெண்மணி உட்பட 10 அப்பாவி மக்கள் இறந்தனர். இதை கண்டித்து முதன் முதலாக இல்லை இல்லை அன்று உண்ணாவிரதததை ஆரம்பித்தார் சர்மிளா அன்றிலிருந்து இன்றுவரை தொடர்ந்து கொண்டுள்ளது இவரின் உண்ணாவிரதப் போராட்டம். 2000ம் ஆண்டு ஆரம்பித்தவுடன் இரண்டு நாள் கழித்து தற்கொலை முயற்சி என்று கைது செய்தனர். சிறையிலும் இவர் உண்ணாவிரத போராட்டம் தொடர்ந்தது, 21ம் தேதி நவம்பர் அன்று மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு மூக்குவழியாக உணவு கொடுக்கப்பட்டது, வலுகட்டாயமாக. அதன் பிறகு ஒருவருடம் மருத்துவமனை அறையே சிறையானது அதிலும் தொடர்ந்தது இவரது போராட்டம்.

சிறைத் தண்டனை காலம் முடிவடைந்து வெளியே வருவார், வந்ததும் திரும்பவும் உண்ணாவிரத்தை தொடர்வார். இப்படி சென்று கொண்டிருந்தது இவரது உண்ணாவிரதப் போராட்டம். ஒரு சமயத்தில் சிறையிலும் உண்ணாவிரத்ததை தொடர்ந்தார், உடல் நிலை மோசமாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு திரவ உணவு மருத்துவ முறையில் ஊட்டப்பட்டது வலு கட்டயமாக. இவரின் நிர்பந்தத்தாலும், மணிப்பூரை நாம் அனைவரும் திரும்பி பார்க்க வைத்த பெண்களின் நிர்வாண போராட்டத்தாலும், 2004ம் ஆண்டு 7 மாவட்டங்களில் மட்டும் அவசரகால சட்டம் திரும்ப பெறப்பட்டது. அதிலும் இரோம் சர்மிளா சமதானம் அடையவில்லை மொத்தமாக திரும்பபெற வேண்டும் என்று தொடர்ந்து போராடிக் கொண்டுள்ளார்இவரின் உண்ணாவிரத ஆயுதத்துடன். இவருக்காக மருத்துவமனையில் ஒரு அறையை சிறைக்கூடமாக மாற்றி வைத்துள்ளனர்.

தென்கொரிய அரசு மனித நேயத்திற்கான விருது வழங்கி இவரை கவுரவித்துள்ளது, ஏன் இரவீந்தர்நாத் தாகூர் விருதும் வழங்கப்பட்டுள்ளது. இவர் பிரிவினை கேட்க்கவில்லை அடக்கு முறை சட்டத்தை திரும்ப பெற கோருகிறார். இவருக்கு ஆதரவாக டிசம்பர் 10, 2008ல் இருந்து மணிப்பூர் பெண்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இந்த வருடம் மார்ச் மாதம் விடுதலை ஆன பொழுது சிறையில் இருந்து நேரடியாக தொடர் உண்ணாவிரதம் நடக்கும் இடத்திற்கு சென்று அந்த பெண்களுடன் உண்ணாவிரத்தை தொடர்ந்தார்.

ஏன் இவர் போராட்டத்திற்கு பாசம் இடையூறாக அமைந்துவிடக்கூடாது என்ற காரணத்தால் இவரின் 70 வயது தாயார் இது வரை போராட்டம் ஆரம்பித்ததில் இருந்து இவரை சென்று பார்க்கவில்லை.

http://manipurfreedom.org/call4action2009 எனும் இணையதளத்தில் இருந்து.

Tuesday, October 19, 2010

ஏன் தனி தமிழ்நாடு தேவை?? பகுதி 2

தற்கொலைபடை தாக்குதல், என் உயிரே போனாலும் பரவாயில்லை எதிரியின் இராணுவகூடாரம் அழியவேண்டும் என்பதே விடுதலைகாக போராடும் வேங்கைகளின் முதற் குறிக்கோள். இப்படி பட்ட தாக்குதல்களை உலகிற்கு முதலில் அறிமுக படுத்தியது யார்?

1799ம் ஆண்டு அக்டோபர் திங்கள் 16ம் நாள் வீரபாண்டியகட்ட பொம்மன் தூக்கிலடப்பட்ட நாள் அதற்கு முன்பே கட்டபொம்மன் கோட்டையை விட்டு வெளியேறிவிட்டார். போரில் படுகாயமுற்ற ஊமைத்துரை ஒரு அம்மையாரால் காப்பாற்றப்பட்டு சிவகங்கைச் சீமைக்கு கொண்டு செல்லப்பட்டுவிட்டார். பாஞ்சால குறிச்சியில் ஆரம்பித்த போர் முடிந்துவிட்டதா அன்றோடு இல்லை தொடர்ந்தது. சுற்று வட்டாரங்களில் வீரபாண்டிய கட்டபொம்மனையும் படைவீரர்களையும் தேடிக் கொண்டிருந்தது கும்பினிபடை.

வீரபாண்டிய கட்டபொம்மனின் தளபதிகளில் முக்கியமானவர்களில் ஒருவர் கட்ட கருப்பணன் என்று அழைக்கப்பட்ட சுந்தரலிங்கம். தூத்துகுடியை அடுத்த கவர்னகிரியை பிறப்பிடமாக கொண்ட ஒரு மாவீரன். ஊர் காக்கும் காவலானக வாழ்ந்து கொண்டிருந்த சுந்தரலிங்கத்தின் வீரத்தை கேள்விபட்ட கட்டபொம்மனும், ஊமைத்துரையும் கவர்னகிரி வந்தனர், நாங்கள் கள்வர்கள் என்று சொல்லி உங்கள் ஊரில் ஒரு வீட்டை கொள்ளையடிக்க வேண்டும் என்று கேட்டனர். அடிக்கும் கொள்ளையில் உனக்கும் பங்கு தருகிறோம் என்று வெகுண்டெழுந்தான் சுந்தரலிங்கம் வீட்டுக்குள் சென்று கத்தியை எடுத்துவந்து சண்டையிட தொடங்கினான் சுந்தரலிங்கம். சிறிது நேரத்திற்கு பின் சண்டையை நிறுத்திய கட்டபொம்மன் தாங்கள் யார் என்பதை சொன்னார் மேலும் தனது படையில் வந்து இணைந்து கொள்ள சுந்தரலிங்கத்தத அழைத்தார். சுந்தரலிங்கமும் சம்மதித்து அவர்களின் படையில் இணைந்தார், இணணந்த சிறிது காலத்திலேயே துணை தளபதி பதவியை அடைந்தார், ஊமைத்துரைக்கு இவர் தான் வலது கை இடது கை என்று எல்லாமே ஆனார்.

ஆங்கிலேயேனுக்கு எதிரான போர் தொடங்கியது, வீரபாண்டியகட்டபொம்மன் பிடிபட்டார், ஊமைதுரை சிவகங்கை சீமையை சென்றடைந்தார். ஆனால் வீரன் சுந்தரலிங்கம் கலங்கவில்லை தொடர்ந்து ஒரு சிறுபடையுடன் போராடினார். ஆங்கிலப்படை இவர்களுக்கு இடுகொடுக்க முடியாமல், இவர்களை பிடிக்கமுடியாமல் திணறியது. திருச்சியில் இருந்து புதிய படையணி வந்தது ஆயுதங்கள் பிரங்கிகளுடன், சுந்தரலிங்கம் இதை அறிந்திருந்தார். அவர்கள் பிரங்கியையும் வெடிகுண்டுகளை உபயோகித்தால் தாக்கு பிடிப்பது கடினம் என்பதையும் அறிந்து இருந்தார். அவரது முறைப்பெண் வடிவைக் கூப்பிட்டுக் கொண்டு ஆடு மேய்ப்பது போல் ஆங்கிலேயனின் ஆயுதகிடங்கை அடைந்தார். வடிவை வெளியில் இருக்க சொல்லிவிட்டு யாருக்கும் தெரியாமல் உள்ளே நுழைந்தார் ஆனால் அவர் உள்ளே போவதை ஆங்கிலேயே சிப்பாய்கள் பார்த்துவிட்டு சுற்றி வளைக்க ஆரம்பித்தனர். வடிவும் செய்வதறியாது ஆயுதகிடங்கிற்குள் சென்றார்.

அங்கு உள்ளே என்ன நடந்தது என்பது ஆண்டவனுக்கே தெரியும். ஆனால் சில நொடிகளில் ஆயுதக்கிடங்கு வெடித்து சிதறியது அந்த மாவீரனின் உயிர் அவரது முறைப்பெண்ணுடன் சென்றது. 1799ம் வருடம் செம்ப்டம்பர் மாதம் இவர் உயிர் இப்பூவுலகை விட்டு பிரிந்தது, வீரபாண்டிய கட்டபொம்மன் ஒரு மாதத்தில் அக்டோபர் மாதம் 16ம் நாள் உயிரிழந்தார்.

ஆம் முதலாம் சுதந்திர போராட்ட வீரர் வீராங்கனை என்று இந்தியவரலாற்றில் சென்னம்மா, ஆயிரம் பெயர்கள் இடம்பெற்றிருக்கிறது. ஆனால் வேலுநாச்சியாரோ, சுந்தரலிங்கமோ, பீரங்கியின் வாயில் கட்டி வைத்து வெடித்து சிதறடிக்கப்பட்ட வீரன் அழகு முத்துவோ யாருக்கும் தெரியாது. கேட்டால் இந்தியா என்ற ஒரு நாட்டிற்காக அவர்கள் போராடவில்லை அவர்கள் வாழ்ந்த ஆண்ட பகுதிகாகவே போராடினார்கள் என்று. ஜான்சி ராணிக்கு ஏன் மரியாதை என்று கேட்டால், பன்றிகரியும், பசுவின் கொழுப்பையும் தடவியதால் கொதித்து எழுந்த பார்பனர் பாண்டே போன்றவர்கள் நடத்திய சிப்பாய்கலகத்தை (ஆங்கிலேயேன் அப்படிதான் வர்ணிக்கிறான்) முதல் இந்திய சுதந்திர போர் என்றும். அதே சமயத்தில் வாரிசு இல்லாததால் பறிக்கப்பட்ட தன் சொத்தை காப்பாற்ற போராடிய ஜான்சி ராணி முதலாம் சுதந்திர போராட்ட வீரங்கனன என்று வர்ணிக்கிறார்கள். அப்படி பார்த்தால் வேலுநாச்சியாரை காட்டி கொடுக்க மாட்டேன் என்று சொல்லி இரண்டு துண்டுகளாக வெட்டுபட்டு கொல்லப்பட்ட மாடு மேய்க்கும் பெண்ணே முதல் சுதந்திர போராட்ட வீராங்கனை என்று சொல்லலாம். வேலு நாச்சியார் அவருக்கு நடுக்கல் நட்டார் அது இன்று சிவகங்கை அடுத்த கொல்லங்குடியில் வெட்டுடைய காளியாகிவிட்டார்.

நெற்கட்டான் சேவலை ஆண்ட புலிதேவன், இவரின் வீரத்திற்கு முன் ஈடுஇணை என்பது யாருக்கு இருக்கிறது. பீரங்கியின் முன் வாயில் கட்டிவைத்து மன்னிப்பு கேட்டால் இழந்த நாடு திரும்ப கிடைக்கும் என்று சொன்ன பொழுதும். மாட்டேன் என்று சொல்லி பிரங்கியை தழுவிக்கொண்டு தன் உடலை சுக்கு நூறாக சிதைத்துக் கொண்ட இந்த மாவீரனை என்னவெண்று சொல்லுவது. இவரும் வேலு நாச்சியாரின் ஆட்சிகாலத்திலேயே நெற்கட்டான் சேவலில் ஆங்கிலேயேனை எதிர்த்து போராடியவர். கிட்டத்தட்ட 15 வருடங்கள் ஆங்கிலேயனின் கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டியவர்.

இப்படி வரலாற்றை மறைத்து உலக மக்களுக்கு முன்னால் இவர் தான் முதல் வீரர் அவர் தான் முதல் வீராங்கனை என்று. இவர்கள் மூலம் தான் இந்தியா என்ற நாடு உருவானது என்று சொல்லிக்கொள்ளும் இந்த இந்தியம் தேவையா. ஆங்கிலேயேனை எதிர்த்து முதன் முதலில் போராட தொடங்கியவர்கள் தமிழன் என்பது மட்டும் இல்லை கடைசி வரை போராடியம்வனும் தமிழர்களே.

தன் மண் தன் சொந்தம் என்று வாழ்ந்த தமிழன் இன்று இந்தியம் என்னும் கூட்டுக்குள் சருகாய் இருக்கின்றான்.

Sunday, October 17, 2010

அரசு மருத்துவமனைகள் தரமானவை அல்ல... சாட்சியம் - கலைஞர் காப்பீட்டு திட்டம்

கலைஞர் காப்பீட்டு திட்டம் சென்ற ஜூலை மாதம் ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடம் முழுவதுமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பயனடைந்தவர்கள் ஓரு லட்சத்து ஐம்பத்தும் மூவாயிரத்து இறநூற்று ஐம்பத்து ஏழு நோயாளிகள் இந்த காப்பீட்டு திட்டத்தினால் பயன் படும் குடும்பங்கள் ஒரு கோடியே நாப்பத்து நாலு லட்சத்து நாப்பத்து ஐயாயிரத்து நூற்றிபதினெழு குடும்பங்கள். இவர்களின் காப்பீட்டு தொகையாக தமிழக அரசு வருடத்திற்கு 517 கோடி ரூபாய் காப்பீட்டு நிறுவனத்திற்கு கட்டுகிறது.

மிகவும் சிறந்த திட்டம் மிகவும் பயனளிப்பதாக காட்டப்பட்டு வருகிறது. ஆனால் இதற்கு பின்னால் இருக்கும் ஊரை அடித்து உலையில் போடும் கலைஞரின் களவாணி தனம் இங்கு யாருக்குமே தெரியவில்லை. நமக்கு தான் நூறு ரூபாய் நாகர்கோயிலில் இலவசமாக கொடுக்கிறான் என்றால் சென்னையில் இருந்து செலவழித்து ஓடி போய் வாங்க தயாராய் இருக்கோமே.

இதில் என்ன கிடைக்கிறது என்று மட்டும் தான் யாருக்கும் தெரியவில்லை, இத்தனை பேர் பயனடைந்தது என்று கணக்கு கொடுத்தவர்கள் தெரியாத்தனமாக அந்த நிறுவணம் எவ்வளவு கொடுத்தது என்பதையும் சொல்லிவிட்டார்கள் 415 கோடி ரூபாய் இந்த திட்டத்திற்காக கொடுக்கப்பட்ட நிதியாக சொல்லியுள்ளார்கள். அதாவது 517 கோடி ரூபாய் பெற்று கொண்டு 415 கோடிரூபாய் செலவு செய்துள்ளது. மிச்சம் 102 கோடி ரூபாய் அந்த நிறுவணத்தின் மொத்த லாபம், அதாவது அவர்கள் நிறுவணத்திற்கான வேலையாட்களின் ஊதியம், மற்ற இதர செலவுகளுக்கு முன். அவைகளை நீக்கினால் கூட குறைந்த பட்சம் 80 கோடி ரூபாய் ஒரு வருடத்திற்கு அந்த நிறுவணத்திற்கு லாபம். லஞ்சமாக எவ்வளவு கொடுத்தார்கள் என்பது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம். இதுவும் எப்படி அரசு 517 கோடி ரூபாய் பணத்தை சென்ற வருடமே கொடுத்துவிட்டது பணம் கூட அந்த நிறுவணம் இந்த திட்டத்திற்காக செலவு செய்ய வேண்டியதில்லை.

முழுதாக 517 கோடி ரூபாய் கையில் ஒரு வருடம் முன்பாகவே வாங்கிக் கொண்டு அதிலிருந்து செலவு செய்கிறது அந்த நிறுவணம். அந்த பணத்திற்க்கு வங்கி வட்டி 1.5 சதவீதம் போட்டல் கூட 517 கோடிக்கு 7கோடியே 75 லட்சத்து 50 ஆயிரம். இத்தனை கணக்கையும் போட நம்ம ஊரு பாமரமக்களுக்கு எப்படி தெரியும். பத்திரிக்கையில் வெளிவறுவதையும் கூட்டம் போட்டு பிரியாணி கொடுத்து கூட்டம் சேர்ப்பதை பார்த்தும், ஒரு ஓட்டுக்கு ஏவ்வளவு கொடுப்பார்கள் என்று கணக்கு பார்க்கும் நம் ஊர் மக்களுக்கு எப்படி தெரியும் இந்த கணக்கை பார்க்க.

சரி அதெல்லாம் பரவாயில்லை சேலத்தில் ஒரு பெரிய பிரச்சனை நடந்தது, மல்டிஸ்பெஸாலிட்டி மருத்துவமனை திறந்தது சம்பந்தமாக யாரு கொண்டு வந்தாங்க என்பது குறித்து. அதாவது திமுக அமைச்சரும் முன்னாள் மத்திய அமைச்சரும் அடித்துக் கொள்ளாத குறையாக சண்டை போட்டுக் கொண்டார்கள். சேலத்தில் மல்டிஸ்பெசாலிட்டி மருத்துவமனை வர காரணம் யார் என்று.

அந்த மருத்துவமனை கொண்டு வர செலவு மொத்தம் 139.3 கோடி ரூபாய் நிலத்தை கணக்கில் கொள்ளாமல் அரசாங்க புறம்போக்கு நிலத்தில் கொண்டு வரலாம் இப்படி பட்ட மருத்துவமனைகளை. சேலத்தில் நிலத்துக்கு ஆன செலவு 200 கோடி ரூபாய். இதையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் வருடத்திற்கு 350 கோடி என்றால் கூட, வருடத்திற்கு 517 கோடி என்பதை கொடுத்து இருக்கும் பொழுது, அரசு மருத்துவமனைகளை மேம்படுத்துவது புதிதாக மருத்துவமனைகள் கட்டினால் இன்னும் 10 இல் இருந்து 50 வருடங்களுக்குள், சேலத்தில் ஆரம்பித்தது போல் ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு மருத்துவமனை என்று 234 தொகுதிக்கும் ஒரு மல்டிஸ்பெஸாலிட்டி மருத்துவமனை இருக்கும். அப்புறம் எதற்கு இந்த இடை தரகர்கள் திமுக அரசு இதை நினைத்துப் பார்க்குமா இல்லை சட்டபேரவை, நூலகம் என்று திறந்து விட்டு கட்டிக் கொண்டிருக்கும் இடைக்கால லாபம் மட்டும் போதும் என்று இருக்குமா..

ஆனால் இந்த திட்டத்தின் மூலம் இத்தனை வருட ஆட்சியில் நாங்கள் ஒன்றும் சாதித்துவிடவில்லை என்று தெளிவாக சொல்லி இருக்கிறார் கலைஞர். என்ன பார்கிறீர்கள் இந்த கலைஞர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளில் தரமான சிகிச்சையை ஏழை எளிய மக்கள் பெற்றுக் கொள்ளலாம், அரசாங்க மருந்தகத்தில் இப்படி திறமையான மருத்துவ சேவை கிடைக்காது என்பதை தெள்ள தெளிவாக சொல்லி இருக்கிறார். அதனால் நாளை உங்கள் வீட்டில் பேறு காலைத்தில் இருக்கும் பெண்ணை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று விடாதீர்கள் தரமான சிகிச்சை கிடைக்காது.

Monday, July 26, 2010

தறுதலையின் புலம்பல்

அன்பார்ந்த திரையுலக நண்பர்களே.....

உங்களை நான் என்றும் மறக்கமாட்டேன், என்றும் எங்களுக்கு தோளோடு தோள் நின்ற தோழர்கள் தாங்கள். ஒவ்வொரு முறையும் நமது அரசியல் கட்சிகள் வந்து எங்களின் கைகளை பலப்படுத்தியதோ இல்லையோ தாங்கள் வந்து நின்றீர்கள். இன்று நமக்கிடையே கருத்துகள் மாறிகொண்டு வருகின்றன, நான் அதை தவறாக நினைக்கவில்லை.

நீங்கள் தொழில் நிமித்தமாகவோ இல்லை சொந்தவிசயமாகவோ இலங்கை செல்வதை வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் அசின் போல் பலிகடாவாகி விடுவீர்களோ என்பதுதான் எங்கள் வருத்தம்.

நீங்கள் அங்கு செல்வதால் நம் சொந்தங்கள் மகிழ்ச்சி அடைவார்கள், இத்தனை அடி வாங்கியவர்களுக்கு நீங்கள் அவர்களை சென்று சந்திப்பதால் கிடைக்கும் சந்தோசத்தை வேண்டாம் என்று நாங்கள் தடுக்கவில்லை. ஆனால் அசின் போன்று நம் இனத்தை கொன்று குவித்த ஒருவரின் மனைவியுடன் சென்று அவர்களின் உலக அரசியலின் சதுரங்கத்தில் நீங்களும் பலிகடாவாகி விடாதீர்கள்.

என்று ஈழத்திற்கு(இலங்கை என்று சொல்லவில்லை) தங்கு தடையின்றி யாருடைய தலையீடும் இல்லாமல் நாம் சுதந்திரமாக செல்லமுடியுமோ அன்று நாம் போவது தான் சரி. நமது மக்களுக்கு இந்த சந்தோசத்தை கொடுக்கமுடியவில்லை என்ற வருத்தம் இருந்தாலும். வேறுவழியில்லை இன்றைய உலக சதுரங்கத்தில் நாம் ஒரு பகடைகாயாக மாற்றப்பட்டு பகடியாக எள்ளி நகையாடப்படாமல் இருக்க வேண்டும் என்றால் இது தான் சரியான முடிவாக இருக்கும்.

ஒன்று மட்டும் நிச்சயம், ஒரு விசயத்தை தடை செய்வதால் எந்தவிதமான உபயோகமும் இல்லை ஒரு நாட்டை ஆள்பவன் எப்படி வேண்டுமானாலும் அதை எதிர்கொண்டு சாமர்த்தியமாக சாமாளித்து தனது தேவையை நிவர்த்தி செய்து கொள்வான். ஆனால் நாம் செய்யவேண்டியதை அதே சாமர்த்தியத்துடன் அவர்களின் கையை கட்டிபோட்டுவிட்டு செய்வதே சாலசிறந்தது. இன்று நம் மக்களுக்கு அங்கு தேவை மருத்துவ பணியாளர்கள் இது இன்று மட்டும் அல்ல நாளைய தேவையும் கூட நீங்கள் அதற்கு உதவி செய்யவேண்டும்.

முதல்வர் அவர்களால் தொழிநுட்ப கல்வி கற்க, நம் அகதி மாணவர்களுக்கு அனுமதி கிடைத்துள்ளது. அதே போல் மருத்துவ படிப்புக்கும் அனுமதி வாங்க வேண்டும். மேலும் செவிலியர் படிப்பு படிக்கவும் மருத்துவம் சார்ந்த படிப்பிற்கு துணைபுரியவேண்டும். அவர்களை இங்கேயே கட்டிவைப்பது என்பது சரியல்ல, என்ன இருந்தாலும் தாய்மண் என்பது என்றுமே ஒரு வலி தான், அதைவிட்டு வெளியே வாழ்பவர்களுக்கு எனவே அவர்கள் திரும்பும் பொழுது அவர்களுக்கு சுயமாக வாழ தேவைகளை நாம் செய்து கொடுக்க வேண்டும். இங்கு அகதிகளாக வாழும் மக்களுக்கு முதலில் உதவுவோம் பின்னர் ஈழத்தில் இருக்கும் நம் ரத்தசொந்தங்களுக்கு தேவையானதை செய்வோம்.
கருணாஸ் அவர்களே உங்களுக்கு உங்கள் தாய்மண்ணை பார்க்கும் ஆசை இருப்பது நியாயம் ஆனதே. ஆனால் ஒன்றை மட்டும் நியாபகம் வைத்துக் கொள்ளுங்கள் நீங்கள் உங்கள் தாய் மண்ணை பார்க்க செல்வதை யாரும் தடுக்க முடியாது அனால் இலங்கை அரசாங்கம் அதை விளம்பரம் செய்யவிடாமல் தடுக்க முடியுமா என்று பாருங்கள். தாங்கள் சுதந்திரமாக அங்கு சென்று வரமுடியும் என்றால் சந்தோசம் சென்று வாருங்கள். வாழ்த்துக்கள்!!!

இப்படிக்கு
எந்த அரசியல் அமைப்பையும் சேராத தறுதலை தமிழன்.

Thursday, July 22, 2010

ஏன் தனி தமிழ்நாடு தேவை?? பகுதி 1

இந்திய துணை கண்டம் அங்கிலேயேன் ஆதிக்கத்தில் இருந்து பிரிந்தது. அன்றிலிருந்து இன்று வரை தமிழகம் எப்படியெல்லாம் புறக்கணிக்கப்பட்டு இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரிய வேண்டும். என்பதற்காகவே இந்த் பதிவு.

இந்திய துணைகண்டம் அடிமைசிறையிலிருந்து விடுபட்டது 1947ல். அன்று இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்டவர்கள் தமிழர்களும் தான் வட இந்தியர்களும் தான். ஆனால் இங்கு நினைவில் கொள்ளப்படுபவர்கள் யார்? யார்? இந்தியாவின் முதல் சுதந்திர போராக ஜான்சி ராணி கலந்து கொண்ட 1857 வருடம் நடந்த போரே நினைவு கொள்ளப்படுகிறது. இதை சிப்பாய் கலகம் என்று வர்ணித்தார்கள் ஆங்கிலேயேர்கள்.

ஜான்சி ராணியின் குழந்தை இறந்து விட்டது, இவர் மற்றொரு குழந்தையை தத்து எடுத்து வளர்த்தார். அன்று தத்து எடுப்பது என்பது இந்திய துணைகண்டத்தில் காலகாலமாக இருந்து வந்த நடைமுறை ஆனால் ஆங்கிலேயனிடம் அப்படி ஒரு நடைமுறை இருந்ததா இல்லை வேண்டும் என்றே வாரிசு இல்லாத அரசு என்று அறிவித்து ஜான்சியில் ஆங்கிலேயேன் உரிமை கொண்டாடினானா என்பது தேவை இல்லை. அதுவரை ஆங்கிலேயேனுக்கு கப்பம் கட்டிதான் வந்தது ஜான்சி அரசு.

ஜான்சி ராணி லக்ஷ்மி பாய் தனது சொத்தை காப்பாற்ற வாள் ஏந்தினார். சொத்தை காப்பாற்றா களம் கண்டவர் முதல் சுத்ந்திர போராட்ட வீராங்கனை. சொத்தை காப்பாற்ற இன்று இந்தியா என்று என்ன என்பதை பற்றி சுத்தமாக ஒன்று தெரியாதவர் எல்லாம் கட்சி தலைவியாக இருந்து கைப்பொம்மையை வைத்து ஆட்சி செய்யும் போது இதெல்லாம் சகஜமப்பா.. என்று தான் சொல்லுவீர்கள். ஆனால் இன்று இந்த லக்ஷ்மி பாய் குமரியில் இருந்து காஷ்மீரம் வரை அனைவரும் பாடத்தில் படித்து வருகிறோம். இதுவே உண்மையான ஒன்றாக நிலைநாட்டப் பட்டுவிட்டது.

ஆங்கிலேயேனை எதிர்த்து பிரஞ்சு படை உதவியுடன் போராடினார் மைசூர் புலி திப்பு சுல்தான். இவரின் ஆதரவைப் பெற்று தென்கோடியில் இராமநாத புரத்தில் பிறந்த வீரமங்கை வேலுநாச்சியார், சொத்தை காப்பாற்றவா களம் கண்டார். இவரின் கணவன் ஆங்கிலேயேனை எதிர்த்தார் கப்பம் கட்ட மறுத்தார், நாங்கள் அடிமை இல்லை என்பதை கூறி ஆங்கிலேயேனிடம் சண்டையிட்டார். போரில் இவர் கணவன் இறந்தவுடன். தனது ஒரே மகளை விட்டுவிட்டு வாள் ஏந்தி போராடினார் தன் கணவன் இடத்தில் இருந்து. இவர் போராடியது தனது சிவகங்கை சீமையை காப்பற்றதான் ஆனால் ஆங்கிலேயேன் வாரிசு இல்லாத சொத்து என்று அபகரிக்க நினைத்த பொழுது இல்லை.

நாங்கள் உங்களுக்கு அடிமை இல்லை என்று ஆங்கிலேயேனுக்கு உணர்த்த. இவர் இந்தியாவின் விடுதலை போராட்டத்தில் முதல் வீராங்கனையா ஜான்சி ராணியா. வேலு நாச்சியார் போராடியது 1780 ம் வருடம் அதாவது 77 வருடங்களுக்கு முன். ஜான்சி சொத்துகாக போராடினால் அது சுதந்திர போர், ஆங்கிலேயேனுக்கு அடி பணிய மாட்டேன் என்று போராடியவருக்கு ஒன்றும் இல்லை. ஒரு வீராங்கனை. ஒருவர் பெயர் இந்தியா முழுமைக்கும் தெரியும். மற்றவர் பெயர் சொந்த இனத்துக்கே தெரியாது.

இப்படி சுதந்திரத்திற்காக தமிழகத்தில் இருந்து போராடிய என்னற்ற வீரர் வீராங்கனைகளின் பெயரை மறைத்து. ஏன் நமது பக்கத்து மாநிலம் சென்று கேட்டு் பாருங்கள் வீரபாண்டிய கட்டபொம்மனை தெரியுமா என்று. உதட்டை பிதுக்குவார்கள்.

சேர்ந்தே போராடினோம் சேர்ந்தே சுதந்திரம் பெற்றோம். ஆனால் சுதந்திர போராட்ட வீரர்கள் என்று கேட்டால் திலகரும், காந்தியும், நேருவும் என்று சொல்லுகிறார்கள் இங்கு செக்கிழுத்தவன் மாடாகி போனான் வருபவனுக்கெல்லாம் தலையாட்டும் பொம்மையாய்.

தொடரும்...

Thursday, July 15, 2010

இந்தி வெறியர்களின் மற்றுமொரு ஆட்டம்



வட இந்திய இந்தி ஆதிக்க வெறியின் அடுத்த கட்டம். அமெரிக்கா, பிரிட்டன், யூரோவுக்கு உள்ளது போல் இந்திய ரூபாயுக்கு குறியீடு என்பது இதுவரை இருந்தது இல்லை. அதை போன்று ஒரு குறியீடு தேவை என்று சென்ற வருடம் முடிவு செய்யப்பட்டு, வடிவமைக்க போட்டியும் நடத்தப்ப்ட்டது. இதில் இந்திய மூழுவதும் பலர் கலந்து கொண்டனர். அதில் தமிழகத்தை சேர்ந்த் உதயகுமார் வடிவமைத்த மேலே உள்ள குறியீடு தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

இது பார்க்க R என்பதின் பாதிவடிவமும் = என்ற குறியீடும் இருப்பதாக நினைக்கலாம். ஆனால் இது "र"இந்தி எழுத்து.




உதயகுமார் தனது பேட்டியிலேயே இதை தெரிவித்துள்ளார். இவர் முன்னாள் தி.மு.க சட்டமன்ற உறுப்பினரின் மகன் ஆவார்.

ஆங்கில நாடுகள் அவர்களின் பொது மொழியில் அவர்களின் பணத்திற்கான குறியீட்டை வைத்துள்ளார்கள். ஆனால் இந்தியாவில் இந்தி இன்னும் பல மாநிலங்களில் பொது மொழியாக ஆங்கிகரிக்கப்படவில்லை. அப்படி ஒரு சூழ்நிலையில் இந்தி எழுத்தை அனைவரும் பயன்படுத்தும் பணத்திற்கு குறியீடாக வைக்கிறார்கள் இந்தி ஆதிக்க வெறியினர்.

இந்தியா என்ற நாடு பல இன மொழி மக்கள் இணைந்து வாழும் நாடு என்று வாய்கிழிய கத்தும் இவர்கள். (Unity in Diversity)இப்படி சொல்பவர்கள் இந்தியாவின் அத்தனை கலாசாரம் மற்றும் பண்பாட்டை வெளிபடுத்தும் ஒரு குறியீட்டை தான் தேர்வு செய்து இருக்க வேண்டும். ஆனால் இங்கு அவர்கள் கடைசிகட்டமாக 5 வரைபடங்களை தேர்வு செய்துள்ளனர் அந்த ஐந்துமே இந்த இந்தி எழுத்தை அடிப்படையாக கொண்டே வடிவமைக்கப்பட்டுள்ளது.



இந்த குறியீட்டை இனி அனைவரும் பயன் படுத்த வேண்டும். புறக்கடை வழியாக அனைவரையும் இந்தியை பயன் படுத்தவைக்கும் முயற்சி. இந்த இந்தி ஆதிக்க வெறியர்களின் இந்த முயற்சிக்கு நமது தமிழ் மகனும் துணை போய் உள்ளது தான் மிகவும் கொடுமை. இதற்காக இவருக்கு கிடைத்த பரிசுபணம் இரண்டரை லட்ச ரூபாய்.

Saturday, July 10, 2010

பழையபேப்பர்... பழையபேப்பர்...

பழைய பேப்பர் போடுங்க என்று டில்லியில் மன்மோகன் சிங் வீட்டு வாசலில் தவமாய் தவம் இருக்கிறாராம் ஒரு ஏமாந்த சோனகிரி. அவரிடம் விசாரித்தபொழுது தமிழக முதல்வர் கடிதம் மேல் கடிதம் போடுகிறார். அதை எல்லாம் பிரதமர் என்றாவது ஒரு நாள் எடைக்கு போடுவார் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறேன் என்றார். சரி இதற்காக மற்ற வீடுகளுக்கு போவதில்லையா என்று கேட்டதற்கு சொன்னார் நாலு தெரு சுத்தினால் தான் 100 கிலோ பேப்பர் கிடைக்கும். ஆனால் இந்த கடிதங்கள் எப்படியும் பத்து டன் எடையாவது இருக்கும். நாலு தெரு சைக்கிளை தள்ளிக்கிட்டு சுத்துவதை விட இங்க நாலு நாள் உட்கார்ந்து தேத்திடலாமே என்று சொன்னார். பாருங்கப்ப வடநாட்டுகாரனின் விவரமான புத்தியை.

இது தெரியாம இங்க ஒருத்தர் பேனாவை கையில் வைத்துக்கொண்டு ஆட்டு ஆட்டுனு ஆட்றார்பா. எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே. இதுவரை செத்து போனவர்கள் 400க்கும் மேல் இன்று வேகமாக கடிதம் எழுதுகிறார், அவரின் மீனவர் அணி போராட்டம் நடத்துகிறது(சனிக்கிழமை இலங்கை தூதரகத்துக்கு விடுமுறை நாளாமே), 3லட்சம் ரூபாய் நிதியுதவி. அப்ப மிச்சம் இருக்கும் 400 சொச்சம் பேருக்கு சொம்புதானா.

400க்கும் மேல FIR இருக்காம் தமிழக காவல் துறையிடம், அனைத்திலும் முதல் குற்றவாளி இலங்கை இராணுவம் என்று போட்டு இருக்கிறார்களாம். 7 கேஸுக்கு மேலே போனாலே குண்டர் தடுப்பு சட்டம், 10 கேஸ் இருந்தாலே என்கவுண்டர் நடத்தும் தமிழக காவல் துறை 400க்கும் மேல் கேஸ் இருக்கும், இலங்கை இராணுவத்தின் மேல் என்கவுண்டர் நடத்துமா. அட்லீஸ்ட் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யுமா??

Tuesday, July 6, 2010

பாவமும் நாம் பலியும் நாம்

பெட்ரோல் விலை ஏன் ஏறியிருக்கிறது என்பதற்கு தெளிவான காரணம் சொல்லுகிறார்களா இந்த மத்திய மாநில அரசுகள். நம்மைவிட ஏழ்மை நாடுகளில் பெட்ரோல் விலை மிக குறைவாக உள்ளது.

பாகிஸ்தான் - 26
பங்களாதேஷ் - 22
கூயுபா - 19
நேபாள் - 34
பர்மா - 30
ஆப்கானிஸ்தான் - 36
கத்தார் - 30

பெட்ரோலுக்கு வரி மட்டுமே நாம் முப்பத்து மூன்று ரூபாய் கொடுக்கிறோம்.

மத்திய அரசு வரி - 11.80
சுங்க வரி - 9.75
மாநில வரி - 8.00
விற்பனை வரி - 4.00

மேலே இருப்பவற்றில் முதல் இரண்டும் மத்தியரசுக்கும் மற்ற இரண்டும் மாநில அரசுக்கும் செல்கிறது. இவ்வளவு வரிகட்டி நாம் எல்லாம் பெட்ரோல் போட்டு வேலைபார்த்து சம்பாதிப்போம், இவர்கள் வருட கடைசியில் திரும்பவும் வந்து வருமான வரி என்று மேலும் நம்மை சுரண்டிவிடுகிறார்கள். சம்பாதிக்க வேலைபார்க்க செல்ல வாகனத்துக்கு பெட்ரோல் போடவும் வரி கட்டுகிறோம், சம்பாதித்தபின்னும் வரி கட்டுகிறோம். இது இரட்டை வரி முறை அல்லவா??? இதை கேட்க யாருமே இல்லையா???

ஒரு நாட்டை நிர்வகிக்க வரி வருமானம் மிகவும் முக்கியமானதே, ஆனால் நம்மை விட பின் தங்கிய நாடுகள் வரிவிலக்கு அளித்து பெட்ரோல் கொடுக்கும் பொழுது, இந்தியாவில் ஏன் இந்த நிலை. சரி விட்டு தொலைவோம் என்றால் இந்த வரியை பற்றி விசாரிக்கும் பொழுது தான் இன்னும் ஒன்று தெரிந்தது. பெட்ரோல் சில்லரை விற்பனை நிலையம் முகவர்களாக இருக்கும் ஒரு பாவப்பட்ட ஜீவன்களைப் பற்றி. அவர்களுக்கு இதில் என்ன கிடைக்கிறது லாபம் என்ற பெயரில் பார்த்தால் ஒரு லிட்டருக்கு 25 பைசாவில் இருந்து 35 பைசாவரை அனைத்து எரிபொருள் வகையிலும். ஒரு பெட்ரோல் நிலையம் வைத்து யாரும் குடும்பம் நடத்த முடியாது என்ற நிலைமை.

தமிழக மக்கள் மங்குனிகள் என்பதற்கு முழு அடைப்பு போராட்டமே ஒரு சிறந்த உதாரணம்.

ஜூலை 7ம் தேதி அறிவிக்கப்பட்ட நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் என்பது, ஒரு அறவழி போராட்டம். இந்த அறவழி போராட்டம் தமிழகத்தில் கழுத்து நெறிக்கப்பட்டது ஆளும் திமுக அரசால் அல்ல, திருட்டு முண்டங்கள் கலகத்தால். இவர்கள் யார் ஒரு கட்சி மக்களிடம் பெட்ரோல் விலையேற்றத்திற்காக கடைகளை அடையுங்கள், பேருந்துகளை நிறுத்துங்கள் என்று கேட்டால். இந்த திமுக கட்சியினர் அறவழியில் போராடுபவர்களை அடித்து நொறுக்க.

காவல் துறை என்ன செய்து கொண்டு இருக்கிறது, கருணாநிதியின் வீட்டு கழிவறையை சுத்தம் செய்து கொண்டு இருந்ததா??? மதுரை திருமங்கலத்தில் கடை அடைக்க சொன்ன கம்யூனிஸ்ட் தோழர்களை காவல் துறை தடுத்து நிறுத்தி இருக்க வேண்டும். அது தான் சட்டம் ஆனால் நடந்தது என்ன திருட்டு முண்டங்கள் கலகம் செய்கின்றன, காவல் துறை கைகட்டி வாய் போத்தி வேடிக்கை பார்க்கிறது. திண்டுக்கல்லில் சகோதரி பாலபாரதி ஆர்ப்பாட்டம் செய்தார், கத்தி கபடாவை எடுத்து கொண்டா சென்றார் இல்லையே கொடியையும், பேனர்களையும் கொண்டு தானே சென்றார். இவரை தடுத்து நிறுத்த வேண்டியது யார், ஆனால் அங்கு வந்து கலாட்டா செய்கிறது சொம்பு தூக்கும் கூட்டம்.

தஞ்சாவூரில் ஆர்ப்பாட்டம் கலவரமானதுக்கு காரணம் யார்?? முதலிலேயே காவல் துறை வந்து இருந்தால் கலவரம் ஏற்பட்டிருக்காது. ஆனால் திருட்டு முண்டங்கள் வந்து குதிக்கிறது அவர்கள் முழு அடைப்பு நடத்தும் போது இவர்களுக்கு யார் தடுத்து நிறுத்தும் உரிமையை கொடுத்தார்கள். தடி எடுத்தவன் எல்லாம் தண்டல் காரர்கள் என்றால் காவல் துறையை காதல் துறை என்று பெயர் மாற்றி அவர் வீட்டு வாசலிலேயே வைத்துக் கொள்ள வேண்டியது தானே.

இவ்வளவு நடக்கிறது நாம் என்ன செய்கிறோம் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மறு ஒளிபரப்பை பார்த்து ரசித்துக் கொண்டு இருக்கிறோம்.

Saturday, June 26, 2010

பெட்ரோல் பூனைக்கு மணிகட்டுவது யார்??

மகாபாரதக் கதை அனைவரும் அறிந்ததே, நான் அதை நம்புவன் இல்லை, மகாபாரதம் என்பது கதைக்குள் கதையாக இருக்கும் ஒரு கதை அவ்வளவே. ஆனாலும் மகாபரத போருடன் இக்கதைகள் முடிவடியவில்லை அதன் பின்னும் தொடருகிறது. அப்படி ஒரு கதை தான ;இப்பொழுது நான் சொல்லுவது.

போர் முடிந்தது தருமன் அரசனாக பதவி ஏற்றான், காலம் சென்றது அதன் வழியே. ஒரு நாள் கிருஷ்ணன் தருமனைப் பார்க்க தருமனின் அரண்மணை வந்தான். தருமன் வரவேற்று உணவளித்தான், தன் ஆட்சியின் பெருமையை கண்ணனுக்கு காட்ட ஊர்வலம் போக அழைத்தான். கண்ணனும் தருமனும் ஊர் வலம் சென்றனார், ஊர் முழுவதும் ஆங்காங்கே தர்ம சத்திரங்கள், 24 மணி நேரமும் உலை கொதிக்கும் அடுப்புகள். மக்கள் அங்காங்கே தருமசத்திரத்தில் அமர்ந்து அனைவரும் உணவு அருந்திக் கொண்டு இருந்தனர். ஆடை அணிகலன்கள் அனைத்தும் இலவசமாக கொடுக்கப்பட்டு கொண்டு இருந்தது.

அரண்மனை திரும்பியவுடன் தருமன் சொன்னான் பார்த்தீர்களா ஏன் நாட்டில் பசி பட்டினி என்பதில்லை, ஆடை அணிகலன்களிலில் இருந்து அனைத்தும் இலவசமாக கொடுத்து கொண்டிருக்கிறேன் என்று சொன்னான். கண்ணன் ஒன்றும் சொல்லாமல் தன் அரண்மனைக்கு தருமனை வரும்படி அழைப்பை வைத்துவிட்டு சென்றான்.

அடுத்த சில நாட்களிலேயே கண்ணன் கூப்பிட்டாரே போகாமல் இருந்தால் நல்ல இருக்காது என்று தருமன் கண்ணனின் நாட்டிற்குப் புறப்பட்டான். கண்ணன் தருமனை வரவேற்று உணவருந்த செய்து, நகர்வலத்திற்கு அழைத்து சென்றான் மக்கள் சந்தோசமாக வாழ்ந்து கொண்டு இருந்தனர். அனைவரும் கடினமாக உழைத்து கொண்டு இருந்தனர். ஆனால் அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சி என்பது தாண்டவமாடியது.

அரண்மனை வந்ததும் கண்ணன் சொன்னான் தருமா, இலவசங்கள் மக்களை மகிழ்சியாக வாழ வைக்காது. அப்படி இலவசங்களால் கிடைக்கும் மகிழ்ச்சி தற்கால மகிழ்ச்சி தான். உழைப்பு என்பது தான் மக்களுக்கு நிரந்தர மகிழ்ச்சி தரும். அவர்கள் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைத்தாலே போதும் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்வார்கள் என்றான்.

யோசித்து பாருங்கள் இன்று கிடைக்கும் இலவசங்கள் எல்லாம் நிரந்தரமானவையா. சிலர் சொல்லுவார்கள் ஏழை குழந்தைகள் பார்க்க தொலைக்காட்சி கிடைக்கிறது, இதுவே அவர்கள் உழைப்பால் வாங்குவது என்றால் 20வயதுக்கு மேல் தான் வாங்கமுடியும். சிறு குழந்தைகள் பொழுது போக்கே இல்லாமல் வாழ்கிறார்கள் என்று. ஆனால் தேவை இது இல்லை ஏழைமக்களும் வாங்கும் திறனை அதிகரிக்க வேண்டும். விலைவாசி என்னும் பூதம் கட்டுபாட்டுக்குள் இருந்தால் தான் மக்களின் வாங்கும் திறன் அதிகரிக்கும். இதற்கு முதல் தேவை என்ன விலைவாசி கட்டுகடங்காமல் அனைத்து இடங்களிலும் அதிகரிக்க காரணம் என்ன?

பெட்ரோல், டீசல் ஒரு நாட்டின் இரத்த ஓட்டம் இதன் விலை அதிகரிக்க அதிகரிக்க அனைத்து பொருள்களின் விலையும் அதிகரிக்கும். இந்தியா என்னும் திருநாட்டில் பெட்ரோல் விலை மாநிலத்திற்கு ஒரு விலை ஆனால் வரி விதிக்கும் முறை மட்டும் இந்தியா முழுவதும் ஒரே முறை (VAT). டெல்லியில் பெட்ரோல் 40 ரூபாய்க்கும் கீழே, எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் வைத்துள்ள இடமான சென்னையில் விலை 56ரூபாய். இதை இந்தியா முழுவதற்கும் ஒரே விலை என்று கொண்டு வந்தால் அனைவருக்கும் 50 ரூபாய்க்கு கொடுக்கலாமே. ஏன் இந்த விலை வித்தியாசம் மாநிலத்திற்கு மாநிலம். ஏன் பாண்டியில் சுத்திகரிப்பு நிலையம் இல்லை ஆனால் அங்கு தமிழகத்தை விட 2ரூபாய் விலை குறைவு. எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ள மாநிலங்களிலிருந்து இல்லாத மாநிலங்களுக்கு கொண்டு போகும் செலவு அதிகமாகும், அந்த செலவையும் கணக்கிட்டால் டில்லி, புதுவை போன்ற இடங்களில் விலை அதிகமாக இருக்க வேண்டும், ஆனால் டில்லியிலும் புதுவையிலும் விலை குறைவாக உள்ளது.

சமீபத்திய விலையேற்றத்திற்கு பிறகு பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயுவின் விலைகள், டெல்லி, மும்பாய், கொல்கத்தா மற்றும் சென்னை.

பெட்ரோல்
டெல்லி  - 47.93
மும்பாய்  - 52.50
கொல்கத்தா - 51.65
சென்னை  - 55.92

டீசல்
டெல்லி  - 38.10
மும்பாய்  - 39.88
கொல்கத்தா - 31.99
சென்னை  - 43

சமையல் எரிவாயு
டெல்லி  - 319.20
மும்பாய்  - 348.45
கொல்கத்தா - 363.70
சென்னை  - 350.95

ஏன் இந்த விலை வித்தியாசம் என்று கேட்டால் மாநில அரசுகள் கொடுக்கும் மானியம். இந்த மான்யங்களை நிறுத்திவிட்டு அனைத்து ஊர்களுக்கும் ஒரேவிலை என்று கொண்டு வந்தால் மான்யமாக அதாவது இலவசமாக கொடுக்கப்படும் பணவிரயத்தை தடுத்து சரிசமமான நிலை என்று வரும்.

இந்த பூனைக்கு யார் மணிகட்ட போகிறார்கள். கட்டயமாக காங்கிரஸ் அரசு இதை செய்யாது செய்தால் அவர்களின் வடமாநில ஓட்டு வங்கிகள் சரிந்து விடும். அனைத்து எதிர்கட்சிகளும் யார் ஆட்சிக்கு வந்தாலும் இது தான் நிலைமை. இலவசமாக கொடுத்தால் தான் நாம் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்று.