Wednesday, November 17, 2010

ஒரு ரூபாய் அரிசியும் 2Gயும் ஒன்று..



ஸ்பெக்ட்ரம் பற்றி விலாவரியாக அனைவரும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள், நாம எதற்கு பேசணும் என்று பேசாமல் இருந்தால். ஒரு பதிவர் 2Gனா என்ன 3Gனா என்று தொழிநுட்பம் கூட தெரியாதவர்கள் எல்லாம் இதை பற்றி பேசுகிறார்கள் என்கிறார். வேற வழியே இல்லை நாமும் பேசவேண்டியது தான்..

அய்யா இன்னைக்கு கிராமத்துப் பக்கம் போனீர்கள் என்றால் ஸ்மார்ட் போன் ஸ்மார்ட் போனுன்னு ஒன்னு சொல்லுகிறார்களே அதை வைத்துக்கொண்டு மக்கள் அலைகிறார்கள். ஏன் மீன்வர்கள் கூட GPSயுடன் கூடிய சேவைகளை உபயோகித்து கொண்டு இருக்கிறார்கள். அதனாலேயே அவர்கள் உயிர் காப்பாற்றப்படும் சம்பவங்கள் கூட நடந்து கொண்டிருக்கிறது. இந்த காலத்தில் வந்து பதிவுலகத்திலும் தமிழகத்திலும் இந்தியாவிலும் இருக்கும் அனைவருக்கும் 2Gனா 3Gனா தெரியாது என்று சொல்வதை கேட்டால் என்ன செய்வது என்று தெரியவில்லை.

அடுத்து ஒரு முத்தாய்ப்பான கருத்து, இது யூக அடிப்படையிலான கருத்து என்று சொல்லி இருக்கிறீர்கள். இன்று என்னவோ இந்தியாவை CAG & CWG தான் ஆட்டி படைக்கிறது. அதற்காக CAG என்பது என்ன என்று யாருக்கும் தெரியாது என்று நினைக்கவேண்டாம். அரசும் அரசு சார்பு நிறுவணங்களின் வருடகணக்கை கண்காணிக்கும் நிறுவனம். அதாவது நமது வருமானவரியை கட்டுவதற்கு முன் ஒரு ஆடிட்டரிடம் சென்று அவரின் உதவி பெற்று பதிவு செய்வோம் அப்பொழுது அவர் சொல்லும் அறிவுரைகளின் படி நாம் அனைத்தையும் செய்வோம். இதுவே ஒரு நிறுவணமாக இருந்தால் உள்ளே ஒரு கணக்காளர் Internal Audit, வெளிநிறுவணம் மூலமாக ஒரு கணக்காளர் (External Audit) என்று வைத்து கணக்குகளை தணிக்கை செய்வோம். அதாவது எங்காவது யாராவது தவறு செய்திருக்கிறார்களா என்று கண்டுபிடிக்க. உள்ளே இருக்கும் அடிட்டர் தவறு செய்தாலும் வெளி ஆடிட்டர் மூலமாக விசயம் வெளியில் வர வேண்டும் என்பதற்காக. அதே போல் CAG என்பது அரசையும் அரசின் மூலமாக நடத்தப்படும் நிறுவணங்களின் கணக்கை தணிக்கை செய்யும் நிறுவனம்.

அந்த நிறுவணம் அதற்கு முன்பிருந்த முறைகள் இப்பொழுது இருக்கும் முறைகள் அனைத்தையும் ஆராய்ந்து ஒரு அறிக்கையை கொடுத்து இருக்கிறது. மேலும் சந்தை நிலவரத்தையும் அந்த ஏலத்தில் ஏலம் எடுத்த நிறுவணங்கள் உரிமத்தை வைத்து செய்த வியபாரத்தால் அவர்களுக்கு கிடைத்த லாபத்தை வைத்து அறிக்கை சமர்ப்பித்து இருக்கிறது. இது எப்படி யூகம் ஆகும், வேண்டுமென்றால் இப்படி யூகமாக கணக்கு எழுதுபவர்களை வைத்து அடுத்தமுறை உங்கள் வருமாணவரி கணக்கை காட்டி வரி கட்டாமல் இருங்கள்.

என்னவொரு எடுத்துகாட்டு ஒரு ரூபாய் அரிசியும், பதினொரு ரூபாய் அரிசியும், இது தாங்க உங்களிடம் எனக்கு ரொம்ப பிடித்தது. 11 ரூபாய்க்கு அரிசி விற்பவன் 8 ரூபாய்க்கு ஏன் 5 ரூபாய்க்கு வாங்கி 11 ரூபாய்க்கு விற்கிறான். ஆனால் அரசு நட்டத்துக்கு விற்கிறது, இதில் வெளிமார்கெட் விலையை வைத்து மிச்சம் இருக்கும் 10 ரூபாய் மானியம் என்று எப்படி சொல்லுகிறீர்கள். அரசு என்ன வெளிமார்கெட்டில் இருந்த அரிசியை வாங்குகிறது இல்லையே விவசாயிடம் இருந்து தானே. அதற்கு கொள்முதல் விலையை நிர்ணயிப்பது கூட அரசு தானே. எப்படி அய்யா உங்களுக்கு மட்டும் இப்படி தோன்றுகிறது. ஜெயலலிதாவை பார்த்து யாரும் சிரிப்பார்களோ இல்லையோ இப்பொழுது அனைவரும் உங்களை பார்த்து சிரிக்கிறார்கள்.

நாங்க வாங்கவில்லை மானியவிலையில் பெட்ரோல், அரிசி எதுவும் வேண்டாம், வருமான வரி கட்டுகிறோம், அந்த வருமானத்தை சம்பாதிக்க வண்டியில் போகிறோம் அப்பவும் வரி வாங்குகிறீர்கள்(Road Tax), அப்படி வண்டியில் போகனும் என்றால் உடம்பில் தெம்பு வேண்டும் அதற்கு சாப்பிடனும் அப்படி சாப்பிட அரிசி பருப்பு என்று எது வாங்கினாலும் விற்பனை வரி கட்டுறோம். இப்படியே அதுக்கு வரி இதுக்கு வரி என்று கட்டி சம்பாதிக்கிறோம். எல்லாம் முடிந்து சம்பாதித்து திரும்பவும் சம்பாதித்த பணத்துக்கு வருமானவரியை கட்டுகிறோம். இதில் எதாவது ஒரு வரியை மட்டும் வைத்துவிட்டு மற்றவைகளை நீக்கலாமே. நாங்களும் மானியத்தில் எதையும் கேட்க மாட்டோம். என்ன ஒரு வாதம் ஒரு ரூபாய் அரிசியும் கோடி கோடியா ஊழலும் ஒன்றாம், இதை பற்றி பேசுபவர்கள் மானியத்தை வேண்டாம் என்று சொல்லனுமாம். இப்படி பேசுகிறவர்களுக்கு இப்படி தான் பதில் கொடுக்க வேண்டும்.

இதற்கு உங்கள் தலைவரும் ராசாவும் சொன்னதையே நீங்களும் சொல்லி இருக்கலாம், இதற்கு முன்னால் இருந்த அருண்சோரி, பிரோமோத் மகாஜன் கடைபிடித்த முறைகளையே கடைபிடித்தார்கள் என்று. மக்களும் ஆட்டோசங்கர் சம்பாதித்தது போல் இவர்களும் சம்பாதித்தார்கள் என்று பேசாமல் இருப்பது போல் இருப்பார்கள். (இங்கு கூட்டிகொடுத்து என்ற வார்த்தையை யாராவது சேர்த்து கொண்டு படித்தால் நான் பொறுப்பு அல்ல)

ஆனால் தெளிவாகவே இருக்கிறீர்கள் உங்கள் தலைவரைப் போலவே, இப்படி இந்த விசயத்துக்கு எல்லாம் சப்பைகட்டு கட்டி பேசினால் அடி பிரித்து எடுப்பார்கள் என்று ஒரு நண்பரின் மடல் என்று விவரமாக அவர் பெயரில் போட்டு தப்பித்து கொண்டு.

லக்கி நீங்கள் வேண்டுமானால் வாழ்க ஒரு ரூபாய் அரிசி.. வாழ்க 2G... வாழ்க கருணாநிதி... என்று நீங்கள் வாழலாம் அதற்காக நாங்களும் வாழமுடியாது வாழ்த்தவும் முடியாது...

Tuesday, November 9, 2010

மிககுறைந்த வயது தீவிரவாதி

இந்தியாவின் சாதனைகள் என்று எத்தனையோ பட்டியல் போடலாம், அத்தனையும் மிஞ்சிய சாதனை என்றால் மிக இளம் வயதில் தீவிரவாதியானவர் இதே இந்தியாவில் தான் உள்ளார். அவர் வயது அதிகம் இல்லை மக்களே, வெறும் இரண்டு வயது தீவிரவாதி அவர்... Posted Image
பெயர் : மாத்வி முகேஷ்
வயது : 2 வருடம் (தீவிரவாதி என்று சொல்லப்பட்ட 2009ம் ஆண்டு அக்டோபர் மாதம்)
இனம் : மலைவாழ் மக்கள்
வசிப்பிடம் : கோம்போடு கிராமம், கோண்டா காவல்துறை எல்லை, தாண்டேவாடா மாவட்டம் (சட்டீஸ்கர் மாநிலம் ஆந்திர எல்லை)
குடும்பம் : தாத்தா - மாத்வி பர்ஜார் (50 வயது) பாட்டி மாத்வி சுபி (45 வயது) தாய் - கார்டம் குன்னி (20வயது) அத்தை - மடி மூட்டி (8) (இவர்கள் அனைவரும் உயிருடன் ஒரே குடும்பமாக இருந்தார்கள் 2009 அக்டோபர் மாதம் 1ம் தேதி வரை இப்ப இல்லை)
தொழில் : தாத்தா பாட்டி அம்மாவுக்கு விறகு பொறுக்கி விற்பது, மூகேஷூக்கு விரல் சூப்புவது (இன்று அதற்கு விரல்கள் இல்லை)

மாத்வி முகேஷின் தந்தை மாவோயிஸ்ட் அவர் ஒருவர்தான் தப்பினார், வீட்டில் அன்று இல்லாததால்.

2009ம் அக்டோபர் மாதம் 1ம் தேதி, கோம்போடு கிராமத்திற்குள் சிறப்பு காவல் படை உள்ளே புகுந்தது. முகேஷின் பக்கத்து வீட்டிலிருந்தவர்கள் முதற்க்கொண்டு 10 பேர் உயிரிழந்தனர். முகேஷைமட்டும் கண்டுபிடித்தார்கள் அவரின் வெட்டி கொல்லப்பட்ட 8வயது அத்தை மடிமூட்டியின் இரத்தகுளத்தின் அருகே அழுது கொண்டிருந்த பொழுது கை விரல்கள் மூன்று வெட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். இந்த தாக்குதலைப் பற்றி காவல்துறை சொல்வது கிராமத்துக்குள் தீவிரவாதிகளை தேடிப் போனபொழுது தீவிரவாதிகள் சுட்டார்கள், அதனால் திரும்பி நாங்களும் சுட்டோம் இதில் யாரும் மரணமடையவில்லை, காயம் கூட படவில்லை. கிராமத்தில் இருந்து சில வெடிகுண்டுகளை மட்டும் கைப்பற்றினோம் என்பது தான்.

அதன் பிறகு முகேஷின் தந்தை வந்து இவரை தூக்கிக் கொண்டு காட்டிற்குள் சென்று விட்டார். இந்த வருடம் ஜனவரி 7ம் தேதி, மத்திய உள் துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின்  உத்தரவாதம் கொடுத்ததால் ஹிமான்ஸூ குமார் என்பவர் தனது வன்வாசி சேத்ரா ஆஸ்ரமம் மூலமாக மக்கள் குறை கேட்பு நாளை ஏற்பாடு செய்கிறார். பொது குற்றவியல் மூலமாக மாவோயிஸ்டுகளை அழைத்து அவர்களின் மேல் இருக்கும் குற்றங்களில் இருந்து விடுவிக்கவும், அவர்கள் திருந்தி வாழ வழிவகை செய்யவும் முயற்சித்தார்.

அப்பொழுது முகேஷின் தந்தை தன் மகனை தூக்கிகொண்டு வந்தார், அவர் மட்டும் இல்லை அவரை போல் 25 பேர் ஜனவரி 7ம் தேதி வன்வாசி சேத்னாஸ்ரமம் வந்தார்கள். அவர்கள் வந்தவுடன் சிறப்பு காவல் படையினரை அவர்களை சுற்றி வழைத்து 3 எண் பலகையில்லாத போலேரோ கார்களில் கூட்டி சென்றனர் இன்று வரை அவர்களைப்பற்றிய விவரம் தெரியவில்லை...

காலம் காலமாக காடு தான் தங்களின் வாழ்வாதரமாகவும், காட்டை அழிக்காமல் சுள்ளி பொருக்கி விற்று வந்த கிராமமக்களும் 8 வயது முகேஸின் அத்தை மடிமுட்டியும்  2வயது முகேஷூம் தீவிரவாதிகள் இந்திய அரசைப் பொறுத்தவரைக்கும்.. வாழ்க ஜனநாயகம்..பெயர் : மாத்வி முகேஷ்
வயது : 2 வருடம் (தீவிரவாதி என்று சொல்லப்பட்ட 2009ம் ஆண்டு அக்டோபர் மாதம்)
இனம் : மலைவாழ் மக்கள்
வசிப்பிடம் : கோம்போடு கிராமம், கோண்டா காவல்துறை எல்லை, தாண்டேவாடா மாவட்டம் (சட்டீஸ்கர் மாநிலம் ஆந்திர எல்லை)
குடும்பம் : தாத்தா - மாத்வி பர்ஜார் (50 வயது) பாட்டி மாத்வி சுபி (45 வயது) தாய் - கார்டம் குன்னி (20வயது) அத்தை - மடி மூட்டி (8) (இவர்கள் அனைவரும் உயிருடன் ஒரே குடும்பமாக இருந்தார்கள் 2009 அக்டோபர் மாதம் 1ம் தேதி வரை இப்ப இல்லை)
தொழில் : தாத்தா பாட்டி அம்மாவுக்கு விறகு பொறுக்கி விற்பது, மூகேஷூக்கு விரல் சூப்புவது (இன்று அதற்கு விரல்கள் இல்லை)

மாத்வி முகேஷின் தந்தை மாவோயிஸ்ட் அவர் ஒருவர்தான் தப்பினார், வீட்டில் அன்று இல்லாததால்.

2009ம் அக்டோபர் மாதம் 1ம் தேதி, கோம்போடு கிராமத்திற்குள் சிறப்பு காவல் படை உள்ளே புகுந்தது. முகேஷின் பக்கத்துவீட்டிலிருந்தவர்கள் முதற்க்கொண்டு 10 பேர் உயிரிழந்தனர். முகேஷைமட்டும் கண்டுபிடித்தார்கள் அவரின் வெட்டி கொல்லப்பட்ட அத்தை மூட்டியின் இரத்தகுளத்தின் அருகே அழுது கொண்டிருந்த பொழுது கை விரல்கள் மூன்று வெட்டப்பட்டு கண்டுபிடிக்கப்பட்டார்.

அதன் பிறகு முகேஷின் தந்தை வந்து இவரை தூக்கிக் கொண்டு காட்டிற்குள் சென்று விட்டார். இந்த வருடம் ஜனவரி 7ம் தேதி, மத்திய உள் துறை அமைச்சரின் உத்தரவாதம் கொடுத்ததால் ஹிமான்ஸூ குமார் அவர்கள் அவரின் அமைப்பான வன்வாசி சேத்னாஸ்ரமம் மூலமாக ஜன் சுவி என்ற பொது குற்றவியல் மூலமாக மாவோயிஸ்டுகளை அழைத்து. அவர்களின் மேல் இருக்கும் குற்றங்களில் இருந்து விடுவிக்கவும், அவர்கள் திருந்தி வாழ வழிவகை செய்யவும் முயற்சித்தார்.

அப்பொழுது முகேஷின் தந்தை தன் மகனை தூக்கிகொண்டு வந்தார், அவர் மட்டும் இல்லை அவரை போல் 25 பேர் ஜனவரி 5ம் தேதி வன்வாசி சேத்னாஸ்ரமம் வந்தார்கள். அவர்கள் வந்தவுடன் சிறப்பு காவல் படையினரை அவர்களை சுற்றி வழைத்து 3 எண் பலகையில்லாத கார்களில் கூட்டி சென்றனர் இன்று வரை அவர்களைப்பற்றிய விவரம் தெரியவில்லை...
Posted Image
காலம் காலமாக காடு தான் தங்களின் வாழ்வாதரமாகவும், காட்டை அழிக்காமல் சுள்ளி பொருக்கி விற்று வந்த கிராமமக்களும் 8 வயது முகேஸின் அத்தை மடிமுட்டியும்  2வயது முகேஷூம் தீவிரவாதிகள் இந்திய அரசைப் பொறுத்தவரைக்கும்.. வாழ்க ஜனநாயகம்..

Wednesday, November 3, 2010

நோக்கியாவும் எந்திரனும்(ரோபோ)



நோக்கியா நோக்கு நோக்குனு நொக்குயா ஊழியர்களை...

ஆம் இது தான் இன்று நோக்கியா என்ற நிறுவனம் செய்து கொண்டிருப்பது, 2006ம் வருடம் நோக்கியாவின் உற்பத்தி பிரிவு சென்னையில் ஆரம்பிக்கப்பட்டது. அப்பொழுது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது அனைவருக்கும். நமது பிள்ளைகள் பலருக்கு வேழைவாய்ப்பு கிடைக்கும் என்று.

இன்று ஆரம்பிக்கப்பட்டு 4 வருடங்களே கடந்த நிலையில் எத்தனை வேதனைகள் அதுவும் குறிப்பாக கடந்த 6 மாதங்களுக்குள். நோக்கியா நிறுவனம் என்றால் ஸ்ரீபெரும்பூதூரை அடுத்து ஆரம்பிக்கப்பட்டுள்ள ஒரு நிறுவணம் அல்ல. ஒரே இடத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள பல நிறுவனங்கள். நோக்கியா நிறுவனத்தின் கைபேசிகளில் உள்ள அனைத்து பாகங்களும் நோக்கியாவே தயாரிப்பது இல்லை. ஆமாக் ஸ்க்ரூ முதற்கொண்டு அவர்கள் தயாரித்தால் தேவையில்லாத வீண்செலவு ஆகும். அதனால் அவர்களுக்கு தேவையான கீபேட், அவுட்டர் கவர் போன்றவைகளை வெளி நிறுவனங்களுக்கு தேவையான மாதிரிகளை கொடுத்து தயார் செய்து தரச் சொல்லுவார்கள். அதே போல் தான் ஸ்ரீபெரும்பூதுருக்கு அடுத்துள்ள நோக்கியாவின் சிறப்பு பொருளாதர மண்டலத்திற்குள் இருக்கும் நிறுவனங்களூம். பாக்ஸ்கானில் இருந்து அனைத்து நிறுவனங்களூம் நோக்கியாவிற்கு உதிரிபாகங்கள் தயாரித்து கொடுக்கும் நிறுவனங்கள். மொத்தமாக அந்த சிறப்பு பொருளாதர மண்டலம் நோக்கியாவும் அதன் துணை நிறுவனங்களுக்குமானது.

கடந்த சில மாதங்களாக இந்த சிறப்பு பொருளாதமண்டலத்திலிருந்து ஏகப்பட்ட பிரச்சனைகள் வந்து கொண்டிருக்கின்றன. அவற்றை பார்க்கும் முன் சிறப்பு பொருளாதர மண்டலம் என்றால் என்னவென்று பார்க்க வேண்டும். SEZ Special Economic Zone என்று அழைக்கப்படும் சிறப்பு பொருளாதர மண்டலத்தில் 100% தயாரித்த பொருட்களை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் மட்டுமே ஆரம்பிக்கலாம். தயாரித்த பொருளை உள்நாட்டில் விற்பனை செய்ய வேண்டும் என்றால் அதற்கான சுங்கதீர்வையை கட்டிவிட்டு விற்பனை செய்யலாம். ஆனால் இத்தகைய மண்டலங்களின் முக்கிய நோக்கம் ஏற்றுமதியை ஊக்குவிப்பதே. இதற்காக இந்த மண்டலங்களில் இருக்கும் நிறுவனங்கள் கொள்முதல் செய்யும் பொருள்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது. அதாவது தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கான கச்சாப்பொருட்களில் இருந்து அவர்கள் வாங்கி உபயோகிக்கும் கணிணி பொருட்கள் வரை எந்தவிதமான வரிகளும் கிடையாது.

இப்படி எந்தவிதமான வரியும் கட்டாமல் அவர்கள் தங்கள் உற்பத்தியை பல்மடங்காக பெருக்கிக்கொண்டு, அவர்களின் ஏற்றுமதியை அதிகரிக்க இந்திய அரசு செய்து கொடுத்த ஒரு வசதியாகும். ஆனால் இவர்கள் அத்தனை வரிவிலக்குகளையும் பயன் படுத்திக் கொண்டு அவர்களின் நிகர இலாபத்தை தான் அதிகப்படுத்திக் கொள்கிறார்களே ஒழிய மக்களுக்கு எந்தவிதமான நன்மையையும் செய்வதில்லை.

இவர்கள் வேலைவாய்ப்பு கொடுத்து இளைஞர்கள் அங்கு வேலைக்கு சென்றால், உயிருடன் திரும்பிவருவது கேள்விகுறியாகியுள்ளது. அதுவும் அதிக சம்பளம் எல்லாம் கொடுப்பதில்லை 3500 ரூபாயிலிருந்து 10,000ரூபாய் வரை தான் சம்பளமாக கொடுக்கிறார்கள். அந்த கிராமத்து இளைஞர்களுக்கு இது அதிகமான சம்பளமாக இருக்கலாம், மேலும் நோக்கியாவில் வேலைபார்க்கிறேன் என்று பெருமைக்கு எருமையை மேய்ப்பதாக சொல்லிக்கொள்ளலாம். ஆனால் உண்மையில் இந்த ஊதியம் எந்த விதத்திலும் சரிவிகிதம் கிடையாது, அந்த நிறுவனங்களின் நிகர லாபத்தை கணக்கில் எடுத்துக் கொண்டால். பூசணிக்காயை அவர்கள் எடுத்துக் கொண்டு அறுத்து சமைத்தபிறகு மிஞ்சும் புசணிவிதைகளையே இவர்களுக்கு சம்பளமாக கொடுக்கின்றனர். இவர்கள் ஊதிய உயர்வு போன்றவைகளுக்கு வேலைநிறுத்தம் செய்து இப்பொழுது தான் ஒய்ந்தனர். இவர்கள் தொழிலாற் சங்கம் அமைக்கவும் இன்னும் அனுமதி கிடைக்கவில்லை. அனைவரும் மிஞ்சிப்போனால் 19லிருந்து 23வயதுக்குள் இருக்கும் இளைஞர்கள்.

பள்ளி படிப்பு, பட்டய படிப்பு என்று முடித்த 19வயது இளைஞர்கள் தான் இவர்களின் குறிக்கோள். அவர்களை எடுத்து அடிமாட்டு சம்பளத்தில் வேலைக்கு வைத்து தின்று கொழுக்கின்றனர். அரசும் இவர்களுக்கு எந்த உதவியும் செய்வதில்லை, ஒவ்வொரு பிரச்சனையின் போதும் காவல்துறையின் அடக்குமுறையில் அடிபட்டு ஒடுங்கி போய்விடுகிறார்கள் இங்கு வேலைபார்ப்பவர்கள். செய்தி நிறுவனங்களும் எந்த நடிகை யாருடன் இரவை கழித்தார் என வெளியுலகத்துக்கு வெளிச்சம் போட்டு காட்டுவதில் தான் குறியாக இருக்கின்றன. அப்படி இப்படி பட்ட நிறுவனங்களை பற்றி செய்திகளை வெளியிட்டால் விளம்பரம் கிடைக்காது. ஏன் அரசுக்கு எதிராகவே இதே விளம்பரங்களுக்காக தான் மண்டியிட்டு கிடக்கின்றன ஊடகங்கள். இப்படி பட்ட சமூக நோக்குள்ள மனிதாபிமான மற்ற முறையில் நடக்கும் கொள்ளைகளை எப்படி வெளிகொணரும்.

அனைத்துக்கும் அதிகமாக அம்பிகா அவர்களின் மரணம் இப்பொழுது நடந்தேறியுள்ளது. இதை அனைத்து ஊடகங்களும் எப்படி சொல்லுகிறது என்றால் "ரோபோ தாக்கி இளம் பெண் மரணம்", இந்த பொறுக்கிகளுக்கு மனசாட்சி என்பதே இல்லையா? எந்திரன் என்று ஒரு படம் வந்தது என்பதற்காக அதே போலா சொல்லுவது, ஒருவரின் மரணத்தைப்பற்றியும். இயந்திரத்தில் நிர்வாகத்தின் கவனக்குறைவால் அடிபட்டு இறந்தவரை இதைவிட கேவலமாக யாரும் சித்தரிக்க முடியாது.

பாக்ஸ்கானில் ஊழியர்கள் மயக்கமடைந்து விழுந்தனர் என்று செய்தி வந்தது அதற்கான காரணத்தை இன்று வரை யாரும் வெளியிடவில்லை. ஏற்றுமதியை அதிகரிக்கிறேன் இந்தியாவின் நிகர உற்பத்தி திறனை அதிகரிக்கிறேன் என்று சொல்லி இங்கு பல இளைஞர்களின் வாழ்வு புதைகுழியில் தள்ளப்பட்டுள்ளது. இதை யாரும் கண்டுகொள்வதாக தெரியவில்லை, இதே பிரச்சனை நோக்கியாவின் சீன உற்பத்தி பிரிவில் நட்ந்து இருந்தால் இந்நேரம் தொழிற்சாலை மூடப்பட்டிருக்கும். இங்கு அனைவரும் சேர்ந்து இந்த பிரச்சனையை மூடிமறைக்க பார்க்கின்றார்களே தவிர. தரகட்டுப்பாடுகளை முழுமையாக கடைபிடிப்பதற்கு யாரும் வழியுறுத்துவதாக தெரியவில்லை அதை செய்தாலாவது இன்னுமொரு அப்பாவி ஊழியரின் உயிர் போவதை தடுத்து நிறுத்தலாம். அப்படி தரகட்டுபாடுகளை கடைபிடிக்கபடவில்லை என்றால் அந்த தொழிற்சாலையை மூட நடவடிக்கையாவது எடுக்கவேண்டும்.

ஆனால் யாரும் இதை செய்யமாட்டார்கள் வேண்டுமென்றால் இன்னும் பிரச்சனை பெரிதாகி பல உயிர்கள் போனபின் ஸ்டிபன் எலோப்புக்கு இரத்தினகம்பளவ்ம் விரித்து வரவேற்று செத்து போனவர்களின் பிணத்தை காட்டி பேரம் பேசி விரித்த இரத்தினக்கம்பளத்திலேயே திரும்பவும் நடக்க வைத்து விமானம் ஏற்றி அனுப்பி வைப்பார்கள்.

பேரறிவாளன்


19 வயது தனது பதின்ம வயதின் இறுதி கால கட்டத்தை அனுபவித்துக் கொண்டிருந்த இளம் வாலிபன். இன்று 20 வருடங்களாக தனிமைச் சிறையில். இவர் செய்த குற்றம் என்ன?? கொலை செய்ய உதவியாக இருந்தார், என்று அரசு தரப்பு வாதிட்டு இவருக்கு தூக்கு தண்டனை வாங்கி கொடுத்துள்ளது. அப்படி என்ன உதவி செய்தார் என்றால் பேட்டரி செல் வாங்கி கொடுத்தாராம், குற்றம் செய்தவரை விட குற்றம் செய்ய தூண்டியவருக்குத் தான் தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என்ற நாட்டில் குற்றம் செய்வதற்கு உடந்தையாக பேட்டரி வாங்கி கொடுத்தார் என்பதற்காக மரண தண்டனை. பேட்டரி வாங்கி கொடுத்தவருக்கு அதை எதற்கு பயன் படுத்தப் போகிறார்கள் என்பது தெரியுமா என்ற விசாரணை நடந்ததா எனபது தெரியவில்லை. ஒரு நண்பர் வீட்டுக்கு போகும் பொழுது அவர் வரும் பொழுது இதை வாங்கி வா அதை வாங்கி வா என்று சொன்னால் வாங்கி கொண்டு செல்வோம் அதைப் போல் பேரறிவாளன் ஒரு பேட்டரி வாங்கிக் கொண்டு சென்றிருக்கலாம், ஆனால் அது அவருக்கு பரிசாக மரணத்தை தண்டனையாக கொடுக்கும் என்பது இந்த இந்தியாவில் மட்டுமே சாத்தியம். 

படிப்பை முடித்து திராவிடர் கழகத்தின் பெரியார் திடலில் விடுதலை இதழில் வேலைபார்த்துக் கொண்டு இருந்தவர் தான் இந்த பேரறிவாளன். இவர் ஒரு பகுத்தறிவு பாசறை குடும்பத்தில் இருந்து வந்தவர், ஆனால் இவருக்காக குரல் கொடுக்க சாதரண அறிவு படைத்தவர்கள் கூட யாரும் தயாரில்லை. இவரை பெரியார் திடலில் வைத்து இவரது பெற்றோர்கள் சிபிஐ வசம் ஜூன் மாதம் 11 தேதி இரவு 10.30 மணிக்கு ஒப்படைத்தனர். பெரியார் திடலில் அப்பொழுது கூடவே சிலரும் இருந்தனர். அதன் பிறகு இவரை விசாரணைக்கு என்று அழைத்து சென்றனர், மறுநாளே விசாரித்து விட்டு அனுப்பிவிடுவதாக கூறி. இவரை விசாரிக்க வேண்டிய அவசியம் என்னவென்றால், இவரின் சொந்த ஊர் ஜோலார்பேட்டை வேலூருக்கு அருகில், குற்றம் நடந்த ஊருக்கு அருகில் என்பதால் இங்கு இருக்கும் விடுதலைப்புலி ஆதரவாளர்களை விசாரித்துள்ளனர். முக்கியமாக திரவிட கழகத் தொண்டர்களை, அப்பொழுது இவரின் வீட்டிற்கும் சென்றுள்ளனர். இவரின் தாய் தந்தை பேரறிவாளன் சென்னையில் பெரியார் திடலில் தங்கி விடுதலை பத்திரிக்கையில் வேலைபார்ப்பதை கூறி இருக்கின்றனர், அதன் பின்னரே ஒப்படைப்பு படலம் நடந்தேறியுள்ளது.

அப்படி பேரறிவாளனின் தாயும் தந்தையும் புலனாய்வுத் துறையிடம் தாங்களே ஒப்படைத்த பிறகு மல்லிகை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்ட பேரறிவாளன் வெளியுலகை இன்று வரை பார்க்க முடியவில்லை. இடையில் அவர் இந்த உலகை பார்த்த நேரங்கள் என்றால் ஜூன் 11ம் தேதி கைது செய்யப்பட்ட வர், திரும்பவும் வெளியுலகைப் பார்த்தது 19ம் தேதி ஜூன் மாதம், அதுவும் நீதிமன்றத்தில் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கேட்டு.  அன்று இவரை கைது செய்ததாக புலனாய்வுத்துறை குறிப்பிட்ட தேதி 18ம் தேதி ஜூன் மாதம் என்று சொல்லி ஒருமாதம் காவலில் வைத்திருக்க உத்தரவு பெற்றனர். ஆனால் பேரறிவாளனை அவரது தாய் தந்தை இருவரும் ஜூன் 11ம் தேதியே சிபிஐயிடம் ஒப்படைத்துள்ளனர், நடுவில் இருந்த 8 நாட்கள் இவர் எங்கு வாழ்ந்தார் என்பது வெளியுலகிற்கு மறைக்கப்பட்டது. ஒரு குற்றவாளியை கைது செய்து 24மணி நேரத்திற்குள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவேண்டும் என்பது சட்டவிதி. அதையெல்லாம் மீறி 8 நாட்கள் சட்டவிதிமுறைகளை மீறி முறையற்ற காவலில் வைத்துள்ளனர். ஆனால் நீதிமன்றம் காவலில் வைத்து விசாரிக்க கொடுத்த அனுமதியின் கீழாக ஜூலைமாதம் 18ம் தேதிவரை திரும்பவும் மல்லிகை கட்டிடமே இவருக்கு விதியாகிப்போனது.

சட்டவிரோத காவல் என்பது மனித உரிமையின் கீழ் மட்டுமல்ல எந்த உரிமையின் கீழாகவும் அனுமதிக்கப் படக்கூடாத ஒன்று. இந்த வழக்கை விசாரித்த சிபிஐ அதிகாரி இராகோத்மன் வாக்குமூலத்தின் படி இவர் கைது செய்யப்பட்டது 19-6-1991 அன்று காலை பெரியார் திடல் அருகில் என்று சொல்லி இருக்கிறார். அவருடைய வாக்குமூலத்திலேயே இன்னொரு இடத்தில் 11.6.1991 அன்று ஜோலார்பேட்டையில் பேரறிவாளன் வீட்டில் எட்டுபொருட்களை கைபற்றியதாக குறிப்பிடுகிறார். மேலும் பேரறிவாளன் கொடுத்ததாக சொல்லப்படும் வாக்குமூலத்தில் 18ம் தேதி கைது செய்த்தாக கூறப்பட்டுள்ளது. ஆனால் காவலறிக்கையில் 19.6.1991 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆக மொத்தம் கைது செய்யப்பட்ட தேதி யாருக்கு சரியாக தெரியும் என்பதே தெரியவில்லை.

இந்த கேள்விக்கு விடையை சட்டத்தின் கீழாக யார் தருவார்கள்..
பேரறிவாளன் கைது செய்யப்பட்டது
11ம் தேதியா??
18ம் தேதியா???
இல்லை 19ம் தேதியா????
ஆனால் 13.6.1991 அன்று மாற்றுடையுடன் வந்த பேரறிவாளன் தாயாரை அவரின் மகனை சந்திக்க மறுப்பு தெரிவித்து ஆடைகளை மற்றும் பெற்றுக்கொண்டதையும் யாரும் மறுக்கவில்லை. (மல்லிகை பதிவேட்டை தேடித் தான் பார்க்கவேண்டும், இந்நேரம் அதையும் தொலைத்து இருப்பார்கள், மக்களை பாதுகாக்கும் பணியில் அல்லும் பகலும் ஒழைப்பதால், ஆவணங்களை பாதுகாக்கும் பணியை பார்ப்பது இல்லை நமது அரசாங்கமும் காவல் துறையும்)

சரி நமக்கு எழும் இயல்பான கேள்வி, 18ம் தேதி காலையில் கைது செய்யப்பட போகிறவருக்கு 13ம் தேதி மாற்றுடை எதற்கு பெற்றுக் கொண்டனர் என்பது தான்? ஆனால் இதற்கு விளக்கம் கொடுக்க யாரும் இருக்க மாட்டார்கள். 11ம் தேதியில் இருந்து 19ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தும் வரை 8 நாட்கள் என்ன நடந்தது பேரறிவாளன் தலைமறைவாக இருந்தாரா இல்லை செத்து அதற்கு பிறகு மறுபிறப்பு எடுத்து வந்தாரா என்று கேட்பதற்கு இங்கு யாருமே இல்லை.

நீதிபதிகள் விசாரணை அறிக்கையை முழுமையாக படித்து தான் எந்த தீர்ப்பும் வழங்குகிறார்கள், இது தான் நமது எண்ணம். இந்த வழக்கின் தீர்ப்பில் தண்டனை கொடுக்கப்பட்ட யாரும் தடா சட்டத்தின் கீழ் குற்றவாளிகள் இல்லை என்று அனைத்து நீதிபதிகளும் ஏகமனதாக தீர்ப்பு வழங்கியுள்ளனர். ஆனால் இவர்களை கைது செய்தது தடாசட்டத்தின் கீழ், வாக்குமூலம் பெறப்பட்ட பொழுது இவர்கள் தடா சட்டத்தின் கீழ் சிறையில் இருந்தனர். தடாசட்டத்தின் கீழ் இவர்கள் குற்றவாளிகள் இல்லை என்ற பொழுது அந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களிடம் வாங்கிய வாக்குமூலம் எப்படி செல்லுபடியாகுமா? இதை தீர்ப்பு வழங்கிய நீதிபதியும் கவனித்ததாக தெரியவில்லை வேறு யாரும் கேள்வி எழுப்பியதாக தெரியவில்லை, எனென்றால் தடா சட்டத்தின் கீழாக ஒரு எஸ்.பி அந்தஸ்தில் உள்ள அதிகாரி முன்னால் வாக்குமூலம் கொடுத்தாலே அதை ஒப்புதல் வாக்குமூலமாக ஏற்றுக் கொள்ளலாம் என்கிறார்கள், ஆனால் குற்றவியல் சட்டத்தின் கீழ் காவல் துறையினர் முன்பு கொடுக்கப்படும் எந்த வாக்குமூலமும் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. ஆனால் இங்கே தடாசட்டத்தின் கீழ் காவல் துறையினர் முன்பு வாங்கிய வாக்குமூலங்களை வைத்தே தீர்ப்பு வழங்கபப்ட்டுள்ளது.

சரி திரும்பவும் விசாரணை கால கட்டத்துக்கே வருவோம். இந்த நீதிமன்றம் அனுமதித்த ஒருமாத விசாரணை காலம் என்பது, எப்பொழுது என்பது எல்லாம் நேரம் காலம் பார்ப்பது இல்லை நடு இரவில் கூட எழுப்பி விசாரணை நடக்கும். நமது லோக்கல் காவல் நிலையத்தில் கூட எந்தவிதமான குற்றத்துக்காகவும் போய் பழக்கம் இல்லாத ஒரு இளைஞன் ஒரு மாதம் சிபிஐயின் பிடியில் அடி உதை கொடுக்கப்பட்டது என்று சொன்னாலும் வெளியில் இல்லை என்று மருத்துவ சான்றிதழை கொடுப்பார்கள் நம்ம ஊர் உள்ளூர் காவல்துறையே, இவர் அடைபட்டிருப்பதோ தேசத்தின் மிகப்பெரிய ஒரு புலனாய்வு நிறுவனத்தின் பிடியில். இவர் சித்திரவதை செய்யப்பட்டதை வெளியில் சொன்னாலும் நம்ப மாட்டார்கள். ஒருமாதம் மல்லிகை மனத்தை சுவாசித்து மல்லிகைபூ என்றாலே வெறுப்போடு பார்க்கும் அளவுக்கு சென்று விட்டிருப்பார் பேரறிவாளன், திரும்பவும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அதன் பிறகு குற்றப்பத்திரிக்கை நகல் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது, அதன் படி இவர் திரும்பவும் ஒரு மனுவை தாக்கல் செய்கிறார், வாக்குமூலங்கள் துன்புறுத்தி கையெழுத்து பெறப்பட்டன அவற்றை ஏற்க கூடாது என்று. அந்த மனுவும் கு.ப. மனு எண். 582/92 என்று தடா நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டுள்ளது. இதற்கு எல்லாம் மகுடம் சூடியது போல் நீதிபதி வாத்வா அவர்களின் தீர்ப்பில் பக்கம் 87ல் குறிப்பிட்டுள்ளார்.

“ஏதேனும் வலுவந்தம், அச்சுறுத்தல் அல்லது எவ்வகையிலும் மூன்றாம் தரமுறையை பயன்படுத்தியதால்தான் அல்லது எதிரியின் உளவியலை பாதிக்கச் செய்ததால்தான் ஒப்புதல் வாக்குமூலம் தரப்பட்டது என்று வழக்கை விசாரித்த நீதிமன்றத்தின் முன் முறையீடு ஏதும் செய்யப்படவில்லை.”

இரண்டு முறை மனு அளிக்கப்பட்டு விசாரணையும் மேற்கொண்ட பிறகும் குற்றவாளிகள் என்று குற்றம் சுமத்தப்பட்டவர்கள் யாரும் தாங்கள் கொடுத்த வாக்குமூலத்தை மறுக்கவில்லை அதை எதிர்த்து எந்த விதமான முறையீடும் செய்யவில்லை என்று கூறியுள்ளார் ஒரு உச்சநீதிமன்ற நீதியரசர். வாழ்க நீதி.

வாக்குமூலத்தில் உள்ள குற்றங்கள் ஒன்றா இரண்டா அடுக்கி கொண்டே போகலாம். குற்றம் சாட்டப்பட்ட 17 பேரும் இரண்டுமாதங்கள் மூன்று மாதங்கள் என்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு அவர்கள் அனைவரின் வாக்குமூலமும் ஒரே நாளில் 15.8.1991 அன்று பெறப்பட்டுள்ளது. அதாவது போலீஸ் காவல் முடியப்போகும் ஒரு நாள் முன்பு, இது எப்படி சாத்தியமாகும், அனைத்து குற்றவாளிகளுக்கும் அன்று தீடிரென்று ஞானம் பிறந்துவிட்டதா, அப்படி பிறந்த ஞானத்தின் கீழாக அனைவரும் ஒரே நாளில் ஒப்புக் கொண்டார்களா? அப்படி ஞானம் பிறக்க காவலின் கீழ் வைத்து விசாரணையில் தியான வகுப்பு எதுவும் நடத்தினார்களா என்ன காவல் துறையினர்.

ஏன் இன்றுவரை இடுப்பு பெல்ட் வெடிகுண்டை தாயாரித்து கொடுத்தவர் யார் என்பதை இந்த வழக்கில் கண்டுபிடிக்க முடியவில்லை என்று சொல்கிறது சிபிஐ தரப்பு, ஆனால் அதை வெடிக்க செய்வதற்கான பேட்டரியை பேரறிவாளன் வாங்கி கொடுத்தாராம். பேரறிவாளன் வாக்குமூலத்தின் படி இரண்டு பேட்டரிகளையும் சிவராஜன் வெடிகுண்டை வெடிக்க பயன்படுத்தியதாக உள்ளது.

இதிலும் மாறு படுகிறது அரசு சாட்சிகள் வெடிகுண்டு நிபுணர்கள் வெடிகுண்டில் ஒரு பேட்டரி பொருத்தியிருக்கவேண்டும் என்கிறார்கள். ஆனால் சிபிஐ தரப்போ இரண்டு பேட்டரி பொறுத்தப்பட்டது என்கிறார்கள், அதை பேரறிவாளன் வாங்கி கொடுத்தார் என்கிறார்கள். பேரறிவாளன் வாக்குமூலத்தின் படி மே மாதம் முதல்வாரம் பேட்டரி வாங்கியதாக சொல்லி இருக்கிறார். பேட்டரி கடைக்காரர் மொய்தீன்(சாட்சி 91) மே இரண்டாம் வாரம் வாங்கியதாக கூறுகிறார்.

ஹரிபாபு என்ற புகைப்படக்காரர் எடுத்த புகைப்படமே முக்கிய சாட்சி அவருக்கு அந்த பிலிம் சுருள் வாங்கி கொடுத்ததாகவும் பேரறிவாளன் மீது குற்றசாட்டு, ஆனால் பாக்கியநாதன் என்பவரும் வாங்கி கொடுத்ததாக வாக்குமூலம் கொடுத்து இருக்கிறார். இராமமூர்த்தி (சாட்சி எண் 72) என்பவரின் சாட்சி படி சுபா சுந்தரம் வாங்கி கொடுத்ததாக இருக்கிறது, ஆனால் பிலிம் வாங்கி கொடுத்த குற்றம் பேரறிவாளன் மேல் கடைசியாக சொல்லப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது.

இவருக்கு இரண்டு சகோதரிகள் மூத்த சகோதரிக்கு 1.9.1991 திருமணம் நடைபெற்றது வீட்டிற்கு ஒரே பையனான இவர் அந்த திருமணத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை நீதிமன்றத்தில் எவ்வளவோ போராடிய பின்னரும். இவரின் மற்றொருமொரு சகோதரி இவருக்கு இளையவர், அந்த இளைய சகோதரி இவரின் விடுதலைக்காக திருமணம் செய்துகொள்ளாமல் காத்துக் கொண்டிருந்திருக்கிறார், அதன் பிறகு சகோதரனின் வற்புறுத்தலுக்கு இணங்க திருமணம் செய்து கொண்டாராம். எப்பொழுது விடியும் இவர்கள் சுதந்திரதாகம், 10ம் தேதி ஜூன்மாதம் வீட்டில் வந்து காவல்துறை விசாரித்ததால் 11ம் தேதி இவர்கள் பெற்றோர்களே முன் வந்து காவல் துறையினரிடம் ஒப்படைத்துவிட்டு நியாம் கிடைக்கும் என்று ஏங்கி கிடக்கும் இந்த பெற்றோரின் நிலமை இனி யாருக்கும் வரவேண்டாம்...

தகவல்கள் சேகரிக்கப்பட்டது இரு கடிதங்கள்,
2007ல் எழுதப்பட்ட கடிதம்
2008ல் எழுதப்பட்ட கடிதம் 
மற்றும் கொலைவழக்கினைப் பற்றிய செய்திகள்,
உச்சநீதிமன்ற தீர்ப்பு.