Sunday, December 22, 2013

சூனா பானா வீணா போனவரின் மடலுக்கு பதில்...



சூனா பானா வீணா போனவர் அப்பா மணியரசனுக்கு மடல் எழுதியுள்ளார் பொதுவெளியில், அதற்கான பதிலை கொடுக்க தகுதியானவர் அப்பா மணியரசன் தான் ஆனால் எனக்கும் பதில் அளிக்க வேண்டும் என்று தோன்றுகிறது காரணம்.. நான் கேட்கும் சுதந்திர போராட்டத்தை பேசும் அதாவது தமிழ் நாட்டின் சுதந்திர போராட்டத்தை பற்றி மட்டும் பேசுபவர் அதற்காக உழைப்பவர் எத்தனை பேர் தன் பின்னால் இருக்கிறார்கள் என்று பார்க்காமல் எத்தனை பேரை தன் பின்னால் கொண்டு வந்து தமிழ்நாட்டின் சுதந்திரபோராட்டத்தை முன்னெடுக்க முடியும் என்று போராடி வருபவர் என்பதால்...

சூனா பானா வீணாவின் கட்டுரையை படியுங்கள் முதலில்...
http://subavee.com

சூனா பானா வீணா போனவர் எழுப்பிய ஏழு கேள்விகளுள் ஏழாவது கேள்விக்கு நான் பதில் அளித்துவிட்டேன்.. எனது முதல் பத்தியிலேயே அதாவது என்னால் சுதந்திர போராட்டத்தை பற்றி பேச முடியாது என்னுடன் இருப்பவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு என்று தனது ஆற்றாமையை ஒத்துக் கொண்டதாக தோணலாம் சூனா பானாவின் பதில் ஆனால் அது அல்ல பதில் இந்திய சுதந்திரப் போராட்டம் என்று தொடங்கியது என்ற வரலாறு தெரியாமல் அது மிகப்பெரும் கூட்டமாக மாறிய பிறகு நடந்த போராட்டங்களை வைத்தே இந்திய சுதந்திர போராட்டத்தை படித்து வந்த சூனா பானா வீணா போனவர் சுதந்திர போராட்டத்தின் விதை ஒட்டுமொத்த மக்களின் கூடலில் நிறைவடைகிறது ஆனால் தொடக்கம் கருத்தியல் என்பதை உணராதவராகவே தெரிகிறது..

சரி ஏழு கேள்வியில் கடைசிக் கேள்விக்கு பதில் அளித்தாகிவிட்டது மற்ற கேள்விகள் என்ன செய்வது. ஆமாம் அதுவும் முக்கியம் தான் அந்த கேள்விகளின் அடிப்படை முள்ளிவாய்க்கால் முற்றத்தை சுற்றியே இருக்கிறது. முதலில் இவர் புரிந்து கொள்ள வேண்டியது முள்ளிவாய்க்கால் முற்றத்தை மக்களின் பார்வைக்காக திறந்தது ஒரு விழா அல்ல என் வீட்டில் ஈழவு விழுந்திருக்கிறது வாருங்கள் என்று சொன்ன கருமாதி பத்திரிக்கை. அதாவது சூனா பானா எதிர்பார்ப்பது என்னவென்றால் ஈழவு வீட்டிற்கு கருமாதி பத்திரிக்கை வைத்து அழைக்க வேண்டும் என்பது.. அப்படி அழைக்காவிடில் அதில் அது குற்றம் இது குற்றம் என்று சொல்வது..

குற்றம் கண்டுபிடித்தே வாழும் இனத்திற்கு மாறாக இவர் செயல் பட முடியுமா என்ன அதை தொடரத்தானே வேண்டும்.. நான் இனம் என்று சொன்னது திருவிளையாடல் என்ற கட்டுக்கதையில் வந்த நக்கீரன் இனத்தைப் பற்றி. கட்டுகதைகளை நம்பி ஏமாந்து இன்று பகுத்தறிவாளனாக இருந்தாலும் மற்றொரு பகுத்தறிவாளருக்கு கட்டுகதையை தான் உதாரணமாக கொடுக்க வேண்டியதுள்ளது எனென்றால் சூனா பானா வீணாப்போனவர் அதற்கு தான் தகுதியாக இருக்கிறார். அதாவது ஈழவு வீட்டுக்கு அழைப்பு வேண்டும் போராட்டம் நடந்தால் அதற்கு வர அழைப்பு வேண்டும் என்ற நினைப்பின் கீழ். இப்படி அழைப்பு விட்டுத் தான் நீங்கள் தமிழின மீட்சிக்காக பாடுபடுவீர்கள் என்றால் போராளியாக அறிமுகப்படுத்திக் கொள்ளாதீர்கள், மிஞ்சிப்போன சொந்தமாக விலகி நில்லுங்கள்..

இழவு வீடு இழவு வீடு தான் அதற்கு அழைப்பு வைப்பது அனைவருக்கும் முடியாது, அழைக்காமல் வந்த ஆயிரக்கணக்கான சொந்தங்களுடன் கலந்து கொண்ட எம்மை போன்ற பொதுமக்களுக்கு அது போதுமானது..         

Thursday, December 12, 2013

சீக்கிய சகோதரர்களின் தளராத பதிலடி


உலகில் சிலர் மட்டும் தங்கள் தனி தன்மையை விட்டுக் கொடுத்தது இல்லை, தமிழ் மொழி பேசும் நாம் எங்கிருந்தாலும் நம் மொழியை நமது பண்பாட்டை விட்டுக்கொடுத்தது இல்லை. அதன் தனித் தன்மையுடனேயே இயங்கி வருகிறோம் அதே போல் தான் சீக்கிய சகோதரர்களும் அவர்களும் தங்கள் தனிதன்மையுடன் தொடர்ந்து வருபவர்கள் உலகின் எந்த மூளையில் இருந்தாலும். அவர்களின் மிகமுக்கியமான ஒரு இடம் அமிர்தசரஸில் உள்ள பொற்கோயில் என்று நம்மால் பொதுவில் கூறப்படும் குருதுவாரா ஸ்ரீ ஹரிமிந்தர் சாகிப், எத்தனையோ மன்னர்கால படையெடுப்புகளையும், ஜனநாயகம் என்ற பெயரில் சர்வாதிகார தாக்குதலையும் தாண்டி இன்றும் உயர்ந்து நிற்கும் ஒரு கோயில் தான் பொற்கோயில்.


தங்களின் குருத்வாராவிற்கு எந்த ஆபத்து வந்தாலும் அதை சகித்துக் கொள்வதில்லை இவர்கள் இதை மதவெறியாக நமக்கு தெரிந்தாலும். சீக்கியர் எனும் இனமே ஒரு மதத்தின் அடிப்படையிலேயே கட்டமைக்கப்பட்டுள்ளது. இவர்களையும் இந்துக்களாக மாற்றுவதற்கு பல்லாண்டு காலமாக முயற்சிகள் நடந்து கொண்டுள்ளது. ஆனால் இவர்களின் தனித்தன்மை என்றும் அந்த முயற்சிகளுக்கு பணிந்து போய்விடவில்லை.

1700களில் முகலாயர்களின் படையெடுப்புகளின் போது குருத்துவரா பெரிதும் தாக்குதலுக்கு உள்ளானது அப்படி ஒவ்வொரு முறை தாக்குதலுக்கு உள்ளன பொழுதெல்லாம் யார் தாக்குதல் நடத்தினார்களோ அவர்களை திரும்பவும் தாக்கி அழித்திருக்கின்றனர். 

தமிழர்களான நமக்கு எதிரான எத்தனை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் அதற்கான ஜனநாயக எதிர்நிலையைக் கூட நாம் உடனடியாக காட்டுவதில்லை.. 

Wednesday, December 11, 2013

எது தமிழ்த் தேசியம்..



வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மூன்றாவது நான்காவது சரத்துகள் சிலருக்காக.. 

(இ) தமிழ் ஈழம் அவ்வரசிலுள்ள மக்கள் சார்ந்திருக்கக்கூடிய எல்லாச்சமயங்களுக்கும் சமமான பாதுகாப்பும் உதவியும் வழங்குகின்ற சமயச்சார்பற்ற ஓர் அரசாக இருக்க வேண்டும்.

(ஈ) தமிழ் அரச மொழியாக இருக்க வேண்டும் எனினும் தமிழ் ஈழத்தில் சிங்களம் பேசுகின்ற சிறுபான்மைகள் அவர்களின் மொழியில் கல்வியையும் அலுவல்களையும் தொடர்வதற்கான உரிமைகள் சிங்கள அரசிலுள்ள தமிழ் பேசும் சிறுபான்மைகள் பாதுகாக்கப்படும் சரி எதிரிடையான அடிப்படையில் பாதுகாக்கப்பட வேண்டும்.

இதில் சொல்வது ஒன்று தான் தமிழீழத்தில் வாழும் மக்கள் சிங்கள அரசின் கீழ் வாழும் தமிழ் மக்களைப் போன்று இல்லாமல் எதிரிடையான அடிப்படையில் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது. அதாவது தமிழீழத்தில் காலம் காலமாக வாழும் சிங்களவர்கள் அவர்களின் முழு மொழி மற்றும் மத உரிமையுடன் வாழ வழி வகை செய்ய வேண்டும் என்பது. அதாவது தமிழீழத்தில் இருக்கும் தமிழர்களுக்கு என்ன உரிமை உண்டோ அத்தனையுடனும் சிங்களர்களுக்கும் வாழும் வகையை ஏற்படுத்திக் கொடுப்பது. 

இந்த வட்டுக்கோட்டை தீர்மானத்தின் அடிப்படையிலேயே தமிழீழ சுதந்திரப் போராட்டம் தொடங்கியது. ஆனால் அந்த தமிழீழ சுதந்திரப் போராட்டம் நசுக்கப்பட்ட பொழுது அரசியலுக்கு வந்தவர்கள் எல்லாம் இப்பொழுது பேசுவது இனவாதமாக மாறிக் கொண்டுள்ளது. எப்படி சிங்கள பெளத்த பேரின வாதம் தமிழர்களை ஒடுக்கியதோ அதே போன்ற கருத்தியலாக்க்கங்கள் உருவாக்கப்பட்ட வருகிறது.  தமிழன் தான் தமிழனை ஆள வேண்டும் என்பது அல்ல தமிழ் தேசியம் தமிழ் தேசிய இனம் எப்படி ஒடுக்குமுறைக்கு உள்ளானதோ அந்த ஒடுக்குமுறைகளை உடைத்து எரிந்து மேல் வருவதும். ஒடுக்குமுறைக்கு உள்ளான மக்கள் அந்த ஒடுக்கு முறையை உணர்ந்து மற்றவர்களையும் ஒடுக்கு முறைக்கு உள்ளாக்காமல் அமையும் இறையாண்மையே தமிழ்த் தேசியம். 

தமிழ்த் தேசியம் என்பதன் வரையறை திராவிடத்தை எதிர்ப்பதிலோ இந்தியத்தை எதிர்ப்பதிலோ இல்லை. தமிழ்த் தேசியத்தை அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் கட்டமைகக்பட வேண்டும். அப்படி ஒரு அடிப்படை கட்டமைப்பு அதன் அடிப்படை கருத்தியலாக்கம் அனைவருக்குமான உரிமைகளையும் பாதுகாக்கும் நோக்கத்துடன் அமையவேண்டும். அதைவிடுத்து ஆழ்ந்த கருத்தாலமில்லாத தமிழனை தமிழன் ஆண்டால் போதும் அனைத்தும் கிடைத்துவிடும் என்ற மேம்போக்கான கருத்தியலாக்கம், நம்மையும் ஒரு பேரினவாதியாக கொண்டு நிறுத்தும். 

தமிழனை தமிழன் பல்லாண்டுகாலமாக ஆண்டு வந்துள்ளான், கிமு கிபி என்று ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்டு வந்திருக்கிறார்கள். இவர்களின் ஆட்சியில் தான் ஆரிய கட்டமைப்பு நமக்குள் செலுத்தப்பட்டு சாதியமாகவும் பிரிந்து நிற்கிறோம். வலங்கை இடங்கை சாதி சண்டைகளே கிமுவில் தொடங்கி கிபி வரை நீண்டு இருந்திருக்கிறது. இது வரி வசூழிக்கும் வேலை செய்தவர்களுக்கும் வரி கொடுப்போருக்கும் இடையிலான சண்டை, பின்னர் ஆண்டான் அடிமை சண்டையாக பிற்காலத்தில் வடிவமெடுத்தது அதில் அடிமையாக இருந்த சாதிகள் எல்லாம் மேலே வந்தும் இருக்கின்றன ஆண்ட சாதிகள் எல்லாம் கீழேயும் தள்ளப்பட்டு இருக்கின்றன. இப்படி நம்மை ஒடுக்க நமக்குள் பிரிவினைகள் தோற்றுவித்து அதை வளர்த்தெடுத்த பொழுது ஆண்ட மன்னர்களும் தமிழர்களே. 

கருத்தியலாக்கம் என்பது காலத்திற்கும் நிற்கும் கருத்துகளின் அடிப்படையில் அமைய வேண்டியதுள்ளது அதைவிடுத்து முதலில் தமிழனை தமிழன் ஆள வேண்டும் அடுத்து அடுத்த படி என்று செல்வது அல்ல. முதலில் முடிவெடுக்க வேண்டியது தமிழ்த் தேசியத்தின் அடிப்படை வரையறைகள். இவைகள் இல்லாமல் அடுத்தப்படியை பற்றி நாம் யோசித்தாலும் அதை நம்பி நம்மோடு இருப்பவரே வரத் தயங்குவர். தமிழ் தேசியம் என்பது தமிழர்களுக்கான தேசியம் அதை ஆள்பவர்கள் தமிழர்களாக இருக்க வேண்டும் தமிழனாக இருப்பது மட்டுமே முக்கியம் இல்லை. ஒரு தமிழன் ஆள வேண்டும் என்பதற்கு தமிழர்கள் ஆளவேண்டும் என்பதற்கு பல்வகை வேறுபாடுகள் உண்டு,

ஹிட்லரைப் மனப்பாங்கை கொண்ட ஒரு தமிழனும் ஆள வரலாம் என்பது அல்ல தமிழ்த் தேசியம், தமிழர்களுக்கானது தமிழ்த் தேசியம். அதில் ஒடுக்கப்பட்ட தமிழன் மற்றவர்களை ஒடுக்குவது அல்ல தமிழ் தேசியம் அனைவருக்குமான தமிழகத்தை கட்டி அமைப்பதே தமிழ்த் தேசியம்.. இதற்கான வரையறையை ஈழத்தமிழர்கள் 1976ம் ஆண்டே நமக்கான வழி காட்டியாக அளித்து இருக்கின்றனர். இதை விடுத்து யார் தமிழன் யார் திராவிடன் என்று தேடி ஒதுக்குவது அல்ல தமிழ் தேசியம். இன்று திராவிட இயக்கம் தன்னுடைய மேலான பணியை செய்திருக்கிறது மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கும் முன்பாகவே, இன்றைய திராவிட இயக்கத்தின் கட்சிகளாக அடையாளம் காணப்படுபவை சந்தர்ப்பவாத கட்சிகள் திராவிடத்தை தன் பெயரில் மட்டும் தாங்கி நிற்பவை.

மேலும் மிகவும் முக்கியமானது வர்ணபேதங்களினால் பிரிக்கப்பட்டு ஆயிரம் வருடங்களுக்கு மேலாக ஒடுக்கப்பட்ட மக்களை சரிநிகரில் வைத்திருக்கும் தமிழ்த் தேசிய வரையறையும் இதில் வேண்டும். இவைகள் இல்லாமல் வெறும் தமிழன் தமிழனை ஆள வேண்டுமென்பதல்ல தமிழ்த் தேசியம் தமிழருக்காக அமைவதே தமிழ்த் தேசியம். இதைத் தான் சிங்களர்களுக்கும் முழு உரிமை கொடுத்து அமைந்தது வட்டுக்கோட்டை தீர்மானத்தில்... சிங்களவன் தமிழீழத்தை ஆளக்கூடாது என்று எங்குமே வரையறைக்கவில்லை வட்டுக்கோட்டை தீர்மானம். இதனடிப்படையிலேயே ஆயுதப் போராட்டம் தொடங்கியது தமிழனை உலகிற்கு அடையாளம் காட்டியது. சிங்களர்கள் பலரும் தமிழீழ சுதந்திரப் போராட்டத்திற்கு ஆதரவும் அளித்துள்ளனர் போராடவும் செய்துள்ளனர். இன்று இலங்கை நடத்தியது இனப்படுகொலை என்பதை வெளியுலகிற்கு தெரியவைத்துக் கொண்டிருப்பதும் சில சிங்களவர்களே..

தமிழ்த் தேசியத்தின் சண்டை நாம் போட வேண்டியது இந்திய தேசியம் என்ற இல்லாத ஒன்றை கட்டமைத்து அனைவரின் மனதிலும் வேருண்றி இருக்கும் கருத்தியலுடன் தானே ஒழிய, ஒன்றாக இருக்கும் சகோதர்களுடனானது இல்லை. இங்கு திராவிடத்தை பெயரில் மட்டும் தாங்கி நிற்கும் கட்சிகளில் சக தமிழனும் இருக்கிறான் என்பதை நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். அதே போல் பலநூற்றாண்டுகளாக நம்முடன் வாழ்ந்து தன் தாய்மொழியை எழுதப்படிக்க கூட தெரியாமல் இருப்பவர்களை நாம் வந்தேறிகள் என்று ஒதுக்கினால் உலகில் அனைத்து மூலைகளிலும் ஏன் தென்னிலங்கையில் தமிழகத்தில் இருந்து குடியமர்த்தப்பட்டு அந்த நாட்டின் வளத்திற்கு நூற்றாண்டுகளாக உழைத்த மலையகத் தமிழர்களையும் சேர்த்து அனைவரையும் அவர்கள் வந்தேறிகள் என்று சொல்வதை ஒத்துக் கொண்டு திரும்ப அழைத்து வரவேண்டும். இதற்கு நாம் தயராக இருக்கலாம் ஆனால் ஆண்டாண்டுகளாக தன்னுடைய இடம், மண் என்று பிறந்து வளர்ந்த அவர்கள் ஒத்துக் கொள்ள மாட்டார்கள்.

தமிழினம் என்பது மானுடத்தை மதிக்கும் இனமாக இருப்பது தான் தமிழுக்கான பெருமை... உலகிற்கு வாழக் கற்றுக் கொடுத்தவர்கள் இன்று தமிழர்கள் அவர்கள் வாழும் இடத்தில் உரிமைகள் பறிக்கப்படும் பொழுது அதை எதிர்த்து குரல் கொடுக்கும் ஒரு தேசமாக உருவெடுப்பது தான் தமிழ்த் தேசியம் அதை செய்ய முன்னுதரணமாக தமிழகத்தில் தமிழ்த் தேசியம் பேசுபவர்கள் சக மொழிபேசும் தமிழகத்தில் வாழ்பவர்களை தூற்றுவதல்ல தமிழ்த் தேசியம்.

முழுமையா வட்டுக்கோட்டை தீர்மனத்தை படிக்க கீழே இருக்கும் இணைப்பை உபயோகிக்கவும்...
http://www.tamilvalg.dk/tamil/?page_id=15