tag:blogger.com,1999:blog-81417778936413716492024-03-05T04:58:37.634-08:00குமரிக்கண்டம்Unknownnoreply@blogger.comBlogger122125tag:blogger.com,1999:blog-8141777893641371649.post-70269494291171044872018-09-24T07:20:00.000-07:002018-09-24T08:00:22.094-07:00முன்னால் நீதிபதிகளை எங்கே தேடப் போகிறோம்?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-IN" style="font-family: "nirmala ui" , "sans-serif"; mso-ansi-language: EN-IN;">மானுவேல் வேல்ஸ்
9வருட சிறைவாசத்திற்கு பிறகு 2014இல் விடுதலை செய்யப்பட்டார். 2009இல் மரணதண்டனை விதிக்கப்பட்டு
சிறைக்கு அனுப்பப்பட்ட பொழுது, பிராயன் ஸ்டெல் எனும் மனித உரிமைகள் போராளி <span style="mso-spacerun: yes;"> </span>சொன்னது தான். <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-IN" style="font-family: "nirmala ui" , "sans-serif"; mso-ansi-language: EN-IN;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<b style="mso-bidi-font-weight: normal;"><span lang="EN-IN" style="font-family: "nirmala ui" , "sans-serif"; mso-ansi-language: EN-IN;">“ஒரு நிரபராதி தூக்குதண்டனையின் முன் நிறுத்தப்படுகிறான்
என்றால், அந்த நாட்டின் மொத்த சட்டதிட்டமும் செத்துவிட்டது என்று அர்த்தம். மேலும்
குற்றம் சுமற்றப்பட்டவரைக் காப்பாற்ற வேண்டிய வழக்குரைஞர் தோற்றுவிட்டார் என்றும்,
சட்டத்தை காப்பாற்ற வேண்டிய அரசு தரப்பு வழக்குரைஞரும் தனது வேலையில் இருந்து தவறிவிட்டார்
என்றும். ஏன் நீதிபதி கூட தவறிவிட்டார் தவறான ஒரு வழக்கில் தவறாக தீர்ப்பளித்து” </span></b><span lang="EN-IN" style="font-family: "nirmala ui" , "sans-serif"; mso-ansi-language: EN-IN;">என்றார்<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-IN" style="font-family: "nirmala ui" , "sans-serif"; mso-ansi-language: EN-IN;"><br /></span></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg3vvNFs22T1XJE7Y0mLDV1do_PZc1ofbAUuKG9U3iMPPfiYYuLE2WaSJRvkDxapnnnlA35reAoNO_D-6xCk3s2EaITyCWSdmkDJ1capeYrKYdP55vlj2111j78ynMsttAh8phDx0EvYdg/s1600/141008171110-manuel-velez-horizontal-large-gallery.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="552" data-original-width="980" height="180" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg3vvNFs22T1XJE7Y0mLDV1do_PZc1ofbAUuKG9U3iMPPfiYYuLE2WaSJRvkDxapnnnlA35reAoNO_D-6xCk3s2EaITyCWSdmkDJ1capeYrKYdP55vlj2111j78ynMsttAh8phDx0EvYdg/s320/141008171110-manuel-velez-horizontal-large-gallery.jpg" width="320" /></a></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-IN" style="font-family: "nirmala ui" , "sans-serif"; mso-ansi-language: EN-IN;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-IN" style="font-family: "nirmala ui" , "sans-serif"; mso-ansi-language: EN-IN;">மானுவேல் வேல்ஸ்
ஒரு கட்டிடத் தொழிலாளி ஸ்பானிஷை தாய்மொழியாக கொண்டவர், அவருக்கு இரண்டு மகன்கள் மனைவியை
பிரிந்து வாழ்ந்துவந்தார், அப்பொழுது அசீலா மாரீனோ எனும் மெக்சிகன் பெண் நண்பருடன்
இணைந்து வாழ முடிவெடுத்து அசீலாவின் வீட்டில் சென்று தங்குகிறார். அவர் சென்று தங்க
ஆரம்பித்த 2 வாரங்களில் அசீலாவின் 11மாதம் கைக்குழந்தை மகன் ஏஞ்சல் மாரீனோ உடல் நலம்
சரியில்லாமல் மருத்துவமனையின் அனுமதிக்கப்படுகிறார். ஏஞ்சல் 4 நாட்கள் கழித்து மருத்துவ
சிகிச்சை பயனில்லாமல் இறந்துவிடுகிறார். மரணத்திற்கு காரணம் குழந்தை ஏஞ்சலின் தலையை
பலமாக சுவற்றிலோ தரையிலோ மோதியதால் தான் ஏற்பட்டது என்று பிரதேப்பரிசோதனை அறிக்கையில்
கூற்ப்பட்டு, ஏஞ்சல் மரணம் கொலைவழக்காக மாற்றப்பட்டு மானுவேல் மற்றும் அவரது பெண் நண்பர்
அசீலாவும் கொலைக் குற்றவாளிகளாக கைது செய்யப்பட்டனர். <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-IN" style="font-family: "nirmala ui" , "sans-serif"; mso-ansi-language: EN-IN;">இந்த வழக்கில்
மானுவேலிடம் பெறப்பட்ட இரண்டு வாக்குமூலங்களின் கீழாக அசீலா மற்றும் மானுவேலுக்கு மரணதண்டனை
விதிக்கப்படுகிறது. வழக்கில் ஏகப்பட்ட ஓட்டைகள் மானுவேல் ஸ்பானிஷை தாய்மொழியாக கொண்டவர்,
மேலும் 7வது கிரேடில் தோல்வியுற்றவர். அவருக்கு ஸ்பானிஷும் முழுமையாக தெரியாது ஆங்கிலமும்
பேச்சு வழக்கு மட்டுமே இந்த நிலையில் அவரிடம் இரண்டு ஆங்கிலத்தில் எழுதப்பட்ட வாக்குமூலங்களை
கொடுத்து கையெழுத்து வாங்கி அவரை குற்றவாளி ஆக்கியிருந்தனர். மேல் முறையீட்டிற்கு இந்த
வழக்கு போன பொழுது அசீலாவை அப்ரூவராக மாற்றி அவரது வாக்குமூலத்தின் கீழாக மானுவேலை
குற்றவாளியாக்கினர். அசீலாவின் வாக்குமூலத்தில் மானுவேல் தனது வீட்டிற்கு வந்த பிறகு
தான் ஏஞ்சலின் உடல் நலக்குறைவு ஏற்பட்டது என்ற வாக்குமூலத்தின் கீழாக மானுவேலுவின்
தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது. அசீலாவிற்கு 10 வருட தண்டனை அளிக்கப்பட்டது
2010இல் அவர் 5 வருட தண்டனைக்கு பிறகு விடுதலை செய்யப்பட்டு அவரின் தாய்நாடான மெக்சிக்கோவிற்கு
அனுப்பி வைக்கப்பட்டார்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-IN" style="font-family: "nirmala ui" , "sans-serif"; mso-ansi-language: EN-IN;">இந்த வழக்கில்
அனைத்து வகையிலும் வஞ்சிக்கப்பட்டவராக ஒரு நிரபராதியான மனுவேல் நிராதரவாக நின்றார்.
ஆனால் தனது சட்டப் போராட்டத்தை தொடர்ந்தார். அதன் பிறகான போராட்டத்தில் அரசு தரப்பின்
வாதங்களை உடைக்கும் வகையில் வாதங்கள் எடுத்துவைக்கப்பட்டன, ஏஞ்சலின் தலையில் காயம்
பட்ட பொழுது அவர் டெக்சாஸ் மாகணத்திலிருந்து 1500 கிலோமீட்டர் தொலைவில் இருந்த டென்னஸில்
கட்டிடவேலை பார்த்துக் கொண்டிருந்தார் என்ற வாதங்கள் எடுத்துவைக்கப்பட்டது. அதன் பிறகு
குற்றவாளியாக்கப்பட்ட மானுவேலுக்கு தனது தரப்பு நியாயத்தை எடுத்துக் கூற முதலில் இருந்து
விசாரணைக்கு உத்திரவிடப்பட்டது. அதன் கீழாக விசாரணை திரும்பவும் நடத்தப்பட்டு மானுவேல்
குற்றவாளியில்லை என்று நிருபிக்கப்பட்டு 2014ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நிரபராதி என்று
விடுதலை செய்யப்பட்டார். ஆனால் இடையில் 9 வருடங்கள் தூக்குகயிற்றின் கீழும் சிறையிலும்
அவர் அடைந்த மன உலைச்சலுக்கான பதில்கள் இன்னும் சட்டத்தையும் அதன் நேர்மையும் மதிக்கும்
யாராலும் விடை கூறவியலாது.<span style="mso-spacerun: yes;"> </span><o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-IN" style="font-family: "nirmala ui" , "sans-serif"; mso-ansi-language: EN-IN;"><span style="mso-spacerun: yes;"><br /></span></span></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div style="text-align: left;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgM07Mq5CTsu5BSD1IT07iWxkyh1DHOZPLaVIUSPJOFTGkteaM3wA4lmP3Q9TbP_5Ad5of1sG4zbDGe-eFKCx6WWvuOj0ZPjbKW7DtlNLZEpXITfXHs8pSeVDyUIOfjRhCOENwA3kJ3t_Q/s1600/james-bain.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em; text-align: center;"><img border="0" data-original-height="900" data-original-width="1200" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgM07Mq5CTsu5BSD1IT07iWxkyh1DHOZPLaVIUSPJOFTGkteaM3wA4lmP3Q9TbP_5Ad5of1sG4zbDGe-eFKCx6WWvuOj0ZPjbKW7DtlNLZEpXITfXHs8pSeVDyUIOfjRhCOENwA3kJ3t_Q/s320/james-bain.jpg" width="320" /></a> </div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-IN" style="font-family: "nirmala ui" , "sans-serif"; mso-ansi-language: EN-IN;">இது அமெரிக்காவில்
நடந்தது மிகவும் கடுமையாக காவல்துறையினர் தங்கள் மீதான விதிமுறைகளை பின்பற்றும் இடத்தில்
நடந்தது. அமெரிக்காவில் தவறாக தீர்ப்பளிக்கப்பட்ட ஒரு வழக்கு அல்ல இது, 35 வருடங்களுக்கு
பிறகு ஒருவர் நிரபராதி என்று 2009 ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டுள்ளார். 1974இல் அன்று
18 வயதான ஜேம்ஸ் பெய்ன் ஒரு வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து 9வயது சிறுவன் ஒருவனை
பாலியல் பலாத்காரம் செய்ததாக சிறையில் ஆயுள் தண்டனை கொடுத்து அடைக்கப்பட்டார். அவர்
தான் நிரபராதி என்பதை போராடி நிருபிக்க 35 ஆண்டுகள் எடுத்துக் கொண்டது. 2009ஆம் ஆண்டு
டி.என்.ஏ டெஸ்ட் மூலமாக நிருபித்து விடுதலை ஆனார். அவருக்கு ஃப்ளோரிடா மாகணத்தின் தவறாக
குற்றம் சாட்டப்பட்டவருக்காக நஷ்ட ஈட்டுத் தொகையாக 10 கோடியே 20 லட்ச ரூபாய் <span style="mso-spacerun: yes;"> </span>வழங்கப்பட்டது. இது ஃப்ளோரிடா மாகாணத்தில் நடந்ததால்
ஜேம்ஸ் பெய்னுக்கு இழப்பீடு வழங்கப்பட்டது. ஈழப்பீடு இல்லாத மாகணங்கள் அமெரிக்காவில்
பல உள்ளது. இழப்பீடு கிடைத்ததால் ஜேம்ஸுக்கு நியாயம் கிடைத்துவிட்டது என்று சொல்லிவிட
முடியாது 18 வயதில் சிறைக்கு சென்று 53 வயதில் விடுதலை செய்யப்பட்டுள்ளார், அவரின்
ஒட்டுமொத்த இளமைக் காலத்தையும் சிறையில் கழித்துவிட்டார். இதை எதைக் கொடுத்து சரி செய்ய
முடியும். <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-IN" style="font-family: "nirmala ui" , "sans-serif"; mso-ansi-language: EN-IN;">இதைப் போன்று
ஏகப்பட்ட வழக்குகள் உள்ளன 40 வருடங்கள் செய்யாத குற்றத்திற்கு உள்ளே இருந்த ரிக்கி
ஜாக்சன், வில்லி பிரிட்ஜ்மேன் உட்பட பலர் அமெரிக்காவில் உள்ளனர். இது அமெரிக்கா மட்டுமல்ல
அனைத்து நாடுகளிலும் நடக்கும் தவறு தான், ஏன் ஜுரிகள் என்று சிலர் நியமிக்கப்பட்டு
நீதிபதிக்கு உதவ நியமிக்கப்படும் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளிலேயே நீதி சிலருக்கு
அநீதியாகியுள்ளது. நீதிபதிகளோ அல்லது சட்டமோ தவறே இழைக்காதவர்கள் அல்ல. இந்தியாவிலும்
இத்தகைய நீதித் தவறுகள் நடந்து கொண்டே வருகின்றன. ஆறுமுகம் என்பவர் ஒரு சிறு பெண்ணை
பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தி கொலை செய்தார் என்று ஆயுள் தண்டனை அனுபவித்து வந்தார்
மும்பையில் அவரின் மீது குற்றம் சாட்டிய ஆய்வாளர், பல வருடங்கள் கழித்து தான் செய்த
தவறை நினைத்து வருந்தி தற்கொலை செய்து கொண்ட பொழுது தான் ஆறுமுகம் நிரபராதி என்று உலகிற்கு
தெரியவந்தது. <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-IN" style="font-family: "nirmala ui" , "sans-serif"; mso-ansi-language: EN-IN;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-IN" style="font-family: "nirmala ui" , "sans-serif"; mso-ansi-language: EN-IN;">2012ஆம் ஆண்டு
14 முன்னாள் நீதிபதிகள் ஜனாதிபதிக்கு தனித்தனியாக கடிதம் எழுதினார்கள், அதில் 9 பேருக்கு
தாங்கள் கொடுத்த தூக்குதண்டனையானது தவறானது என்று எழுதினார்கள். அதில் ஏற்கெனவே இருவர்
சிறைச்சாலையில் இயற்கை மரணம் அடைந்திருந்தனர். அமெரிக்கா போன்ற நாடுகளில் ஒரு குற்றவாளி
என்று தீர்ப்பளிக்கப்பட்டவர் அதாவது தனது முழுமையான மேல் முறையீடுகள் எல்லாம் முடிந்து
உச்ச நீதிமன்றத்தாலும் குற்றவாளி என்று கடைசி வாய்ப்பிலும் தீர்ப்பளிக்கப்பட்டவர்,
சட்டத்தின் கீழாக தன்னை நிரபராதி என்று நிருபித்துக் கொள்ள சட்டம் வழிவகை செய்கிறது.
ஆனால் இந்தியாவில் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம், உயர்நீதிமன்றம் கடைசியாக உச்சநீதிமன்றம்
என்ற மூன்றே வாய்ப்புகள் தான். அது முடிந்தால் அதன் பிறகு எந்த வாய்ப்புமே ஒரு நாட்டின்
குடிமகனாக இருக்கும் இந்தியனுக்கு எந்த வாய்ப்பும் இல்லை. <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-IN" style="font-family: "nirmala ui" , "sans-serif"; mso-ansi-language: EN-IN;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-IN" style="font-family: "nirmala ui" , "sans-serif"; mso-ansi-language: EN-IN;">இதில் ராஜிவ்
கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு முதலில் இருந்தே அநீதி இழைக்கப்பட்டு
வருகிறது. தடா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டதால் பூந்தமல்லியில் அமைக்கப்பட்ட
சிறப்பு நீதிமன்றம், அதன் பிறகு சென்னை உயர்நீதிமன்றத்தில் எந்த முறையீடும் செய்ய இயலாது,
நேரடியாக உச்சநீதிமன்றம் தான் விசாரித்தது. இதில் கீழமை நீதிமன்றத்தில் தான் சாட்சியங்கள்
நேரடியாக விசாரிக்கப்படும் மற்றவைகளில் ஆவணங்கள் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
ராஜிவ் மரண வழக்கில் கீழமை நீதிமன்றம் அதற்கடுத்து உச்சநீதிமன்றம் என்பது மட்டுமே,
அனைவருக்கும் வழங்கப்பட வேண்டியும் மூன்று படிகளில் இருந்து இரண்டு படிகள் மட்டுமே
கொடுக்கப்பட்டது. இதில் மொத்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் 41 பேர் இதில்
12 பேர் தற்கொலை செய்துகொண்டனர் சிவராசன் உட்பட, 3 பேர் தலைமறைவானவர்கள் என்று அறிவிக்கப்பட்டு
26பேர் மீது தான் வழக்கு தொடரப்பட்டு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதில்
19 பேரை உச்ச நீதிமன்றம் விடிவித்தது, இதில் இவர்களுக்கு தடை செய்யப்பட்ட உயர்நீதிமன்ற
விசாரணையும் நடந்திருந்தால் இன்று அனைவரும் வெளியில் விடுதலை ஆகி இருந்து இருப்பார்கள்.
<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-IN" style="font-family: "nirmala ui" , "sans-serif"; mso-ansi-language: EN-IN;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-IN" style="font-family: "nirmala ui" , "sans-serif"; mso-ansi-language: EN-IN;">இவற்றை எல்லாம்
மறைத்து இந்தியா ஒரு ஜனநாயக நாடு, சட்டத்தின் கீழ் செயல்படுகிறது என்று நமக்கு சொல்லிக்
கொண்டுள்ளனர். இங்கு பார்த்த மிக முக்கியமான மானுவேல் வழக்கில் ஏற்பட்ட நீதிப்பிழைகளே
இங்கேயும் ஏற்பட்டுள்ளது, இதில் உச்சநீதிமன்றம் தனது கடைசித் தீர்ப்பில் தடாசட்டத்தின்
கீழ் இந்த வழக்கை விசாரித்தது தவறு என்று சொல்லிவிட்டு, தடாவின் கீழாக வாங்கப்பட்ட
வாக்குமூலங்களையே சாட்சியமாக எடுத்துக் கொண்டு தீர்ப்பு வழங்கியது. இதே நிலை தான் மானுவேலுக்கும்
தெரியாத மொழியில் எழுதப்பட்ட வாக்குமூலங்களில் கையெழுத்திட்டதாலேயே தூக்குகயிற்றை முத்தமிட்டு
திரும்பி வந்திருக்கிறார். சட்டம் என்பது தன்னை குற்றமற்றவராக ஆக்கிக் கொள்ள மிகக்
கடுமையான விதிமுறைகளை தனக்கு தானே விதித்துக் கொள்ள வேண்டும் அதை விடுத்து நீதித் துறை
சுத்தமானது என்று மனப்பால் குடித்துக் கொண்டிருப்பதால் ஏற்படும் தவறுகளுக்கு உயிரிழப்புகளுக்கு
நீதிபதிகள் தான் பொறுப்பாளிகள் ஆவார்கள். <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-IN" style="font-family: "nirmala ui" , "sans-serif"; mso-ansi-language: EN-IN;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="EN-IN" style="font-family: "nirmala ui" , "sans-serif"; mso-ansi-language: EN-IN;">இங்கே ஆறுமுகத்திற்கு
தண்டனை வாங்கி கொடுத்தமைக்காக தற்கொலை செய்து கொண்ட காவல்துறை ஆய்வாளர் போல் மனம் திருந்தி
தற்கொலை செய்து கொள்வது என்றால் இந்தியாவில் முன்னாள் நீதிபதிகளை கல்லறைகளிலேயே தேட
வேண்டிய நிலை ஏற்படும். <o:p></o:p></span></div>
<br /></div>
Unknownnoreply@blogger.com1tag:blogger.com,1999:blog-8141777893641371649.post-10140111080002210072015-10-09T00:58:00.002-07:002015-10-09T00:58:53.832-07:00மெளனிக்கப்பட்ட ஆயுதங்களும் வாயடைக்கப்பட்ட தமிழர்களும். <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="margin-bottom: .0001pt; margin: 0in; text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha;"><span style="font-size: 14.6667px;">ஐ.நாவின் அநீதி - 1</span><br /></span></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhWxn56Lcz1I7IEv16jF4tXFxAWvOgUX3cbOzWalswZ7Q831qxmJ9KcOxjm1EcdweDbVaosx9ZAumOJuRBl3sF9cnK4xIQE4bXbE5jDl35l-VZifBAl-YG3LNy-VYlv6h5eqeEsytN-mMc/s1600/un1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="213" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhWxn56Lcz1I7IEv16jF4tXFxAWvOgUX3cbOzWalswZ7Q831qxmJ9KcOxjm1EcdweDbVaosx9ZAumOJuRBl3sF9cnK4xIQE4bXbE5jDl35l-VZifBAl-YG3LNy-VYlv6h5eqeEsytN-mMc/s320/un1.jpg" width="320" /></a></div>
<div style="margin-bottom: .0001pt; margin: 0in; text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha;"><br /></span></div>
<div style="margin-bottom: .0001pt; margin: 0in; text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; font-size: 11pt;">2009 மே மாதம் தமிழீழ சுதந்திரப் போராட்டத்தினை முடிவுக்கு கொண்டு
வந்துவிட்டோம்</span><span lang="TA" style="font-size: 11pt;"> </span><span lang="TA" style="font-family: Latha; font-size: 11pt;">என்று அடுத்த நகர்வுகளாக பாதிக்கப்பட்ட மக்களின் குரல் சர்வதேச
மக்களுக்கும் கேட்டுவிடக் கூடாது என்பதிலும் மிகக்கவனமாக செயல்பட ஆரம்பித்துவிட்ட
வல்லாதிக்க அரசுகளும், உலக அமைதிக்கான அமைப்புகளாக தங்களைப் பறைசாற்றிக் கொள்ளும்
வல்லாதிக்க அரசுகளின் அடிமை அமைப்புகளும் தொடர்ந்து தங்களின் நகர்வுகளை செய்து
வருகின்றன. அதில் ஒன்று தான் சமீபத்தில் ஐ.நா மனித உரிமைகள் ஆணயத்தின் 30வது
அமர்வில் வெளியிடப்பட்ட விசாரணை அறிக்கையும் (</span><span style="font-size: 11pt;">OISL)</span><span lang="TA" style="font-family: Latha; font-size: 11pt;"> அதன் பின்னால் நிறைவேற்றப் பட்ட தீர்மானமும். 2009ஆம் ஆண்டு மே மாதத்திற்கு
பிறகு இவர்களின் சதி திட்டத்திற்கு எதிராக ஒழிக்க ஆரம்பித்த தமிழர்களின் குரல்
அதன் பிறகும் தொடர்ந்து இன்று வரை தமிழீழ மக்கள் சுதந்திர வேட்கையை
குறைந்துவிடாமல் கட்டிக் காத்து வருகின்றனர். மெளனிக்கப்பட்ட ஆயுதங்களுக்கு பதிலாக
தங்களின் அறவழி மற்றும் சட்டப் போராட்டங்களின் மூலமாக தொடர்ந்து வருகின்றனர். இந்த
போராட்டங்களையும் நமக்கு எதிரான சர்வதேச நகர்வுகளையும் நாம் உற்று நோக்க வேண்டிய
தேவை உள்ளது,</span></div>
<div style="margin-bottom: .0001pt; margin: 0in; text-align: justify;">
<br /></div>
<div style="margin-bottom: .0001pt; margin: 0in; text-align: justify;">
<span style="font-size: 11pt;">2009</span><span lang="TA" style="font-family: Latha; font-size: 11pt;">ம் வருடம் மே </span><span style="font-size: 11pt;">17</span><span lang="TA" style="font-family: Latha; font-size: 11pt;">ம் தேதி தமிழீழ சுதந்திரப் போராட்டத்தின்
ஆயுதங்கள் மெளனிக்கப்பட்டது. ஆனால் அப்பொழுதிலிருந்து இன்று வரை கடந்த ஆறு
ஆண்டுகளாக தமிழர்களின் வாயை அடைக்கும் முயற்சியும் தொடர்ந்து கொண்டே வருகிறது. ஆம்
மே </span><span style="font-size: 11pt;">19</span><span lang="TA" style="font-family: Latha; font-size: 11pt;">ம் தேதி சிங்கள பேரினவாத இலங்கை
அரசு தமிழர்களின் சுதந்திர போராட்டத்திற்கு எதிரான தனது வெற்றியை உலகிற்கு
பறைசாற்றி அறிவித்தது. </span><span lang="TA" style="font-size: 11pt;"> </span><span lang="TA" style="font-family: Latha; font-size: 11pt;">அன்றிலிருந்து</span><span lang="TA" style="font-family: Latha; font-size: 11pt;"> 7ம் நாள் மனித உரிமைகளை
உலகில் இருக்கும் அனைத்து நாடுகளில் நிலை நாட்டுவதற்காக அமைக்கப்பட்ட உலக மனித
நேயர்களால் நம்பப்படும் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் </span><span style="font-size: 11pt;">2009</span><span lang="TA" style="font-family: Latha; font-size: 11pt;">ம் வருடம் மே மாதம் இலங்கை குறித்த ஒரு
சிறப்பு கூட்டம் கூட்டப்பட்டது, மே 26, 27ம் தேதிகள் ஐ.நா மனித உரிமை ஆணையத்தின்
11வது சிறப்பு அமர்வு இலங்கை குறித்து விவாதித்தது, </span><span style="font-size: 11pt;">27</span><span lang="TA" style="font-family: Latha; font-size: 11pt;">ம் தேதி ஒரு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
இந்த தீர்மானம் ஓர் அவசரகதியில் என்ன நடந்தது என்ன நடக்கிறது என்ற எந்தவிதமான
ஆய்வையும் மேற்கொள்ளாமல் போகிற போக்கில் இலங்கையை பாராட்டிவிட்டும் சென்றது. அந்த
தீர்மானம் தான் 2009க்கு பிறகான தமிழர்களின் சுதந்திர தமிழீழ போராட்டத்திற்கு
எதிரான முதல் படியாக வல்லாதிக்க அரசுகளுக்கு அமைந்தது.</span><span style="font-size: 11pt;"> <o:p></o:p></span></div>
<div style="margin-bottom: .0001pt; margin: 0in; text-align: justify;">
<br /></div>
<div style="margin-bottom: .0001pt; margin: 0in; text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; font-size: 11pt;">உலகில் எந்த மூலையிலும்
இப்படி ஒரு போர் நிகழ்விற்கு பிறகு மனித அவலங்களை கணக்கில் எடுக்க வேண்டிய உலக
மனித உரிமைகளை கட்டிக் காக்கும் ஓர் அவை இத்தகைய தீர்மானத்தை இயற்றியதா என்பது
தெரியவில்லை. ஆனால் தமிழர்களின் வாயை அடைக்கும் முதல் கையாக ஐ.நாவின் மனித உரிமை
ஆணையம். இலங்கையை பாராட்டி சீராட்டி தட்டிக் கொடுக்கும் வேலையை தொடங்கியது.</span><span style="font-size: 11pt;"><o:p></o:p></span></div>
<div style="margin-bottom: .0001pt; margin: 0in; text-align: justify;">
<span style="font-size: 11pt;"><br />
“</span><span lang="TA" style="font-family: Latha; font-size: 11pt;">மனித
உரிமைகளை கட்டிக்காக்கவும் மற்றும் வளர்த்தெடுக்கவும் இலங்கைக்கு உதவுவோம்</span><span style="font-size: 11pt;">”</span><span lang="TA" style="font-family: Latha; font-size: 11pt;"> என்பது தான்
தீர்மானத்தின் தலைப்பு. இந்த தலைப்பே சொல்லி விடும் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட
எந்தவிதமான அநீதியையும் கணக்கில் கொள்ளாமல் கொண்டு வரப்பட்ட ஓர் தீர்மானம் என்பதை.
எந்த ஒரு போரையும் இப்படி ஒருதலைப் பட்சமாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் கணக்கில்
எடுத்துச் செயல் பட்டதாக தெரியவில்லை. ஆனால் </span><span style="font-size: 11pt;">2009</span><span lang="TA" style="font-family: Latha; font-size: 11pt;">ல் ஈழத்தின் சுதந்திரப் போராட்ட ஆயுதங்கள் மெளனிக்கப்பட்ட ஒரு
வாரத்திலேயே இப்படி ஒரு தீர்மானத்தை இயற்றி உலக நாடுகள் அனைத்தும்</span><span style="font-size: 11pt;"> </span><span lang="TA" style="font-family: Latha; font-size: 11pt;">இலங்கைக்கு ஆதரவாக ஓரணியில் நிற்க ஐ.நாவின் மனித உரிமை ஆணையமே முதல் அடித்தளத்தை
அமைத்துக் கொடுத்தது.</span><span style="font-size: 11pt;"><o:p></o:p></span></div>
<div style="margin-bottom: .0001pt; margin: 0in; text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; font-size: 11pt;"><br />
ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் கூட்டப்பட்ட 11வது சிறப்பு அமர்வில் தான் இலங்கையில்
நடந்த போர் குறித்த முதல் தீர்மானம் இயற்றப்பட்டது. இதற்கு பிறகு பல தீர்மானங்கள்
கொண்டு வரப்பட்டுள்ளன அவைகள் அனைத்தும் ஒன்றுக்கு ஒன்று தொடர்பு கொண்டவை. ஒன்றை
ஒட்டி ஒன்றாகவே அனைத்து தீர்மானங்களும் வந்தன. இந்த தொடர்புகள் என்பது சர்வதேச
வல்லாதிக்க நாடுகளின் வர்த்தகம், அரசியல் மற்றும் இராணுவத் தேவைகளை நிறைவேற்றுவதாக
இருந்து வருகிறது. அவைகளைப் பார்க்கும் முன்பாக போர் முடிந்த ஒரே வாரத்தில் கொண்டு
வரப்பட்ட இந்த தீர்மானம் மிக முக்கியமான ஓர் இடத்தைப் பெறுகிறது. ஆம் சர்வதேச
மக்களின் மனித உரிமைகளை கட்டிக் காக்கும் ஓர் அமைப்பு போர் முடிந்த பிறகு
அங்கிருக்கும் மக்களின் உரிமைகளைப் பற்றி பேசும் ஓர் தீர்மானம் என்று எடுத்துக்
கொண்டால், இத் தீர்மானம் போருக்குப் பிறகு மக்களின் மீள் கட்டமைப்பிற்கு உதவும்
ஒரே நோக்கத்துடன் கொண்டுவரப்பட்டதாக எடுத்துக் கொள்ளலாம். <br />
<br />
ஆனால் இத் தீர்மானம் சர்வதேச அளவில் 2002ஆம் ஆண்டு அமைதிப் பேச்சுவார்த்தை
தொடங்கப்பட்டப் பட்டு, </span><span style="font-size: 11pt;">CFA (</span><span style="font-size: 11pt;">Cease Fire
Agreement) </span><span lang="TA" style="font-family: Latha; font-size: 11pt;">மூலமாகவும், தமிழீழப் பகுதியினை தன்னாட்சி (</span><span style="font-size: 11pt;">De-Facto</span><span lang="TA" style="font-family: Latha; font-size: 11pt;">) அதிகாரம்
கொடுக்கப்பட்டு இருந்த்து என்பதை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், விடுதலைப் புலிகள்
அமைப்பை தீவிரவாதிகள் என்ற கண்ணோட்டத்துடனே அணுகுகிறது. </span><span lang="TA" style="font-size: 11pt;"> </span><span lang="TA" style="font-family: Latha; font-size: 11pt;">தன்னாட்சி அதிகாரத்தின் கீழ் ஓர் தனி இறையாண்மை
கொண்ட ஆட்சி பிரதேசமாக அதன் நிர்வாகத்தினை கவனித்து வந்த ஒரு அமைப்பை அரசு
நிறுவனமாக கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தி,
சர்வதேச அரசியல் நகர்வுகளில் விடுதலைப் புலிகள் அமைப்பை ஒதுக்கிவிட்டு தமிழர்கள்
சார்பாக யாரும் பங்கு பெற இயலாத ஓர் நிலையை உருவாக்கியுள்ளனர். இதன் பிறகான
நகர்வுகளைப் பார்க்கும் முன்பு இந்த இலஙகை குறித்தான சிறப்புக் கூட்டம் நடைபெற்ற
விவரங்களைப் பார்ப்போம். </span><span style="font-size: 11pt;"><o:p></o:p></span></div>
<div style="margin-bottom: .0001pt; margin: 0in; text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; font-size: 11pt;"><br />
ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் மே 26,27 இலங்கை குறித்தான் சிறப்பு அமர்வு
அறிவிக்கப்பட்டவுடன் இலங்கையிலிருந்து 19 பேர் கொண்ட ஒரு குழு தயான் ஜெயதிலகேவுடன்
இந்த அமர்வில் கலந்து கொள்ள சென்றது. ஜெர்மனி சார்பில் தீர்மானம் கொண்டு
வரப்படுகிறது, கியூபா அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது, ஐ.நா மனித உரிமைகள் அவையில்
தயான் ஜெயதிலகே பொதுமக்கள் ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை இந்த சிறப்பு கூட்டம்
தேவையே இல்லாதது என்று பேசுகிறார். தீர்மான வரைவு முதலில் வைக்கப்பட்ட பொழுது
மொத்தம் 22 நாடுகள் ஆதரவு தெரிவித்தன பிறகு சுவிட்சர்லாந்து மற்றும் சில நாடுகள்
கொண்டுவந்த திருத்தங்களுக்கு பிறகு ஒட்டெடுப்பில் 29 ஓட்டுகளுடன் தீர்மானம்
நிறைவேற்றப்படுகிறது. இந்த தீர்மானத்தில் சொல்லப்பட்டது மொத்தம் 12 பத்திகள்.
இதில் பத்து பத்திகளில் இலங்கையை ஓக்குவிப்பதிலும் பாராட்டுவதிலும்
செலவழிக்கிறார்கள். மிச்சம் இருக்கும் இரண்டு பத்தியும் இலங்கை அரசுக்கு எதிரானதா
என்று பார்த்தால் அதுவும் இல்லை, ஒரு பத்தியில் ஒரே வாக்கியத்தில் இலங்கை அரசை
சிறுபான்மையினர் அனைத்து உரிமைகளுடன் வாழும் வகையை மிகவிரவில் ஏற்படுத்துமாறு
கூறுகிறது. மிச்சம் இருக்கும் இன்னொரு பத்தி இலங்கை அரசுக்கு மிகவிரைவில்
பொருளாதாரரீதியாக உதவுமாறு சர்வதேச நாடுகளை கோருகிறது. <br />
<br />
இப்படித்தான் 2009 மே மாத்த்தில் இருந்து ஐ.நா மன்றம் கொண்டுவரும் தீர்மானங்களில்
இலங்கைக்கு எதிரானது என்று கட்டமைத்து, இலங்கைக்கு நிதி உதவிகளையும்
இனப்படுகொலையையும் மறைக்கும் அனைத்து உதவிகளையும் செய்து வருகின்றன சர்வதேச உலக
அமைதிக்கான அமைப்புகள். இவர்களைப் பொருத்தவரை செத்தவர்களுக்கு நீதியை பெற்றுத்
தருவதைவிட சாகடித்தவர்களுக்கு நிதியைப் பெற்றுதருவதே முதன்மையான நோக்கமாக
இருக்கிறது. </span><span style="font-size: 11pt;"><o:p></o:p></span></div>
<div style="margin-bottom: .0001pt; margin: 0in; text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; font-size: 11pt;"><br />
குறிப்பு - மே 26 மற்றும் 27ஆம் தேதி 2009ஆம் ஆண்டு ஐ.நா மனித உரிமைகள் அவையில்
கொண்டுவரப்பட்ட தீர்மானம் கீழ்கண்ட முகவரியில், மாற்றம் இல்லாமல் முதலில்
வைக்கப்பட்ட தீர்மானம் அடுத்து மாற்றங்களுடன் கொண்டு வரப்பட்ட்ட தீர்மானம்
இரண்டும் உள்ளது. </span><span style="font-size: 11pt;"><o:p></o:p></span></div>
<div style="margin-bottom: .0001pt; margin: 0in; text-align: justify;">
<span style="font-size: 11pt;">http://www.tchr.net/PR_First_anniversary_HRC_ressolution.pdf</span><span lang="TA" style="font-family: Latha; font-size: 11pt;"><br />
</span><span style="font-size: 11pt;"><o:p></o:p></span></div>
<div style="margin-bottom: .0001pt; margin: 0in; text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; font-size: 11pt;"><br />
(மேலும் 2009லிருந்து நம் கண்களை கட்டிவிட்டு வாயை பொத்தும் தீர்மானங்களும்,
சர்வதேச சபைகள் நிர்பந்ததிற்கு உள்ளாகப்பட்டு அமைக்கப்பட்ட மனித உரிமை அமர்வுகளின்
நடவடிக்கைகளையும் அடுத்த பகுதிகளில் தொடர்ந்து பார்ப்போம்</span><span style="font-size: 11pt;">.</span><span lang="TA" style="font-family: Latha; font-size: 11pt;">)</span><span style="font-size: 11pt;"><o:p></o:p></span></div>
<div style="margin-bottom: .0001pt; margin: 0in; text-align: justify;">
<br /></div>
<div style="margin-bottom: .0001pt; margin: 0in; text-align: justify;">
<br /></div>
<div style="margin-bottom: .0001pt; margin: 0in; text-align: justify;">
<br /></div>
<div style="margin-bottom: .0001pt; margin: 0in; text-align: justify;">
<br /></div>
<div style="margin-bottom: .0001pt; margin: 0in; text-align: justify;">
<br /></div>
<div style="margin-bottom: .0001pt; margin: 0in; text-align: justify;">
<br /></div>
<div style="margin-bottom: .0001pt; margin: 0in; text-align: justify;">
<br /></div>
<div style="margin-bottom: .0001pt; margin: 0in; text-align: justify;">
<br /></div>
<div style="margin-bottom: .0001pt; margin: 0in; text-align: justify;">
<br /></div>
<div style="margin-bottom: .0001pt; margin: 0in; text-align: justify;">
<br /></div>
<div style="margin-bottom: .0001pt; margin: 0in; text-align: justify;">
<br /></div>
<div style="margin-bottom: .0001pt; margin: 0in; text-align: justify;">
<br /></div>
<br />
<div style="margin-bottom: .0001pt; margin: 0in; text-align: justify;">
<br /></div>
</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8141777893641371649.post-18653603216686203612015-10-01T02:20:00.000-07:002015-10-01T02:20:01.771-07:00பிரபாகரன் மதிவதனி - போராட்டமே வாழ்க்கையாக<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiQx1pzjhmHCtS-WUV1V3XU4Rol5Tv8ghDeKmT0kOjIPqGeNt_9CbnMDld0KC-mEkfRMp9y9xdfbjbv10QEqnmCU-0TQdZmAb9rwPHMJZajIricOVO5Nk_5APaTCN7EvFgfkS9qxbW4AbI/s1600/bbb.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="125" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiQx1pzjhmHCtS-WUV1V3XU4Rol5Tv8ghDeKmT0kOjIPqGeNt_9CbnMDld0KC-mEkfRMp9y9xdfbjbv10QEqnmCU-0TQdZmAb9rwPHMJZajIricOVO5Nk_5APaTCN7EvFgfkS9qxbW4AbI/s320/bbb.jpg" width="320" /></a></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: Latha, sans-serif;">காவியங்களிலும்
வரலாற்றிலும் காதலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டே வருகிறது. நிகழ்கால
வரலாற்றில் காதலுக்கு அடையாளம் என்றால் பிரபாகரன் மதிவதனியின் காதலைச் சொல்லலாம்.
அரைகுறையாக வரலாற்றை தெரிந்து வைத்துக் கொண்டு எதுவும் புரியாமல் திரியும்
சிலருக்காக வரலாற்றை தெரிந்து கொள்ள வைக்கவே இந்த பதிவு.</span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<o:p></o:p></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">பிரபாகரன்
வீட்டைவிட்டு வெளியில் வந்து தமிழீழ சுதந்திரத்திற்கான போராட்டத்தை தொடங்கிய
பிறகு, 1983ஆம் ஆண்டு கருப்பு ஜூலை இனப்படுகொலை சிங்கள அரசினால் திட்டமிட்டு
நிறைவேற்றப்பட்டது. தென் இலங்கையில் இருந்து பெரும்பாலான மக்கள் வடக்கில்
குடியேறினர், தென் இலங்கையில் படித்த மாணவர்கள் யாழ் பல்கலையில் படிக்க முயன்ற
பொழுது சிங்கள பேரினவாத அரசு அதற்கு மறுத்தது, அவர்கள் படித்துக் கொண்டிருந்த பழைய
பல்கலைக்கே செல்ல காலக்கெடு வைத்தது. மேலும்
யாழ்ப்பாண பல்கலையில் படித்த தமிழ் மாணவர்களையும் வெளியேற்றும் முயற்சிகளில்
இறங்கியது. அந்த நிலையில் 9/1/1984 அன்று 5 மாணவர்கள் மற்றும் 4 மாணவிகள்
காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கினர். மக்கள் ஆதரவு மாணவர்களின் உண்ணாவிரதத்திற்கு
பெருகியது. யாழ் நகரம் முழுவதும் கருப்புக் கொடி ஏற்றப்பட்டது. </span><o:p></o:p></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;"><br />
ஜெயவர்தனா இந்த உண்ணாவிரதத்தை கண்டு கொள்ளவில்லை லலித் அதுலத் முதலி அந்த
மாணவர்கள் சாவதைப் பற்றி எந்த கவலையும் இல்லை என்றார். 15ம் தேதி உண்ணாவிரதம்
ஆரம்பித்த ஆறாம் நாள் மாலை மாணவர்களை பரிசோதித்த மருத்துவர் ஒரு மாணவி உயிருக்கு
ஆபத்தான நிலையில் இருக்கிறார் என்று அறிவித்தார். அன்று இரவு விடுதலைப் புலிகள்
இயக்கத்தை சேர்ந்தவர்கள் மாணவர்களை உண்ணாவிரதப் பந்தலில் இருந்து அழைத்துச்
சென்றனர். ப்ளாட் மாணவர்களை விடுதலைப் புலிகள் கடத்தியதாக குறை கூறியது, புலிகள்
அமைப்பினர் இந்த மாணவர்கள் சாவதை நாங்கள் அனுமதிக்க இயலாது என்று மக்களிடம்
துண்டறிக்கை மூலம் தகவல் தெரிவித்தனர். </span><o:p></o:p></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;"><br />
உண்ணாவிரதப் பந்தலில் இருந்து அழைத்து வரப்பட்ட மாணவர்கள் விடுதலைப்புலிகள்
பாசறையில் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டு தமிழகத்திற்கு சென்றனர். மாணவிகள் ஜெயா,
லலிதா, வினோஜா மற்றும் மதிவதனி உட்பட நான்கு பேரும் ஆண்டன் பாலசிங்கமும், அடேலும்
தங்கியிருந்த சென்னை திருவான்மியூர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு
தான் ஒரு ஹோலிப் பண்டிகையின் பொழுது பிரபாகரன் மீது கலர் நீரை ஊற்றி விளையாடினார்
மதிவதனி, அதற்கு கடிந்து கொண்டார் பிரபாகரன். வருத்தம் அடைந்த மதிவதனி அழுது
கொண்டிருந்தார், ஆண்டன் அண்ணையிடம் பேசிவிட்டு திரும்பி வந்த பிரபாகரன் அழுது
கொண்டிருந்த மதிவதனியை சமாதானம் செய்துவிட்டு சென்றார். இதன் பிறகே இருவருக்கும்
இடையிலான காதல் மலர்ந்தது, அன்றைய காலகட்டத்தில் புலிகள் இயக்கத்தினர் திருமணம்
செய்ய தடை இருந்தது, அதை அனைத்து உறுப்பினர்களிடமும் பேசி அந்த தடையை நீக்கி
திருமணத்திற்கு அனைவரின் சம்மதத்தையும் ஆண்டன் பாலசிங்கம் வாங்கினார். பிரபாகரன்
மதிவதனியின் பெற்றோரின் சம்மதத்தையும் பெற்றபிறகு தான் திருமணம் என்று கூறியதால்,
யாழ்ப்பாணத்தில் இருந்து பெற்றோர்கள் வரவழைக்கப்பட்டு அவர்களின் சம்மதமும்
பெறப்பட்டது. <br />
<br />
மாப்பிள்ளை வீட்டில் இருந்து தான் தாலி செய்ய வேண்டும் என்பது முறை, எனவே
பிரபாகரன் தனது மாமாவிற்கு தகவல் அனுப்பினார் அவரும் மிகவும் மகிழ்ந்து தாலி
செய்து அனுப்பி வைத்தார். தாலிக்கு கூட தன் இயக்கத்தில் இருந்து பணம் பெறாமல் தன்
மாமாவிடம் இருந்தே பணம் பெற்றார். இதே சமயத்தில் டெலோ பெண்களை தங்கள் இயக்கத்தில்
இணைத்துக் கொள்கிறேன் என்று சொல்லி பலரை தமிழகத்திற்கு கூட்டி வந்தது, அவர்களுக்கு
தங்கும் வசதியோ எதுவும் செய்யாமல் நிராதரவாக தமிழகத்தில் விட்டிருந்தது. அவர்களும்
ஆண்டன் பாலசிங்கம் வீட்டிலேயே மதிவதனியுடன் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இவர்களுள்
ஒருவர் தான் சோத்தியா என்று அழைக்கப்பட்ட மாவீர்ர் சோத்தியா. இதன் பிறகே இவர்களுக்கான
பயிற்சி பாசறை அமைக்கப்பட்டு பெண் விடுதலைப் புலிகள் அணி உருவாக்கப்பட்டது.</span><o:p></o:p></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">இதன் பிறகு தனது
கணவரின் ஒவ்வொரு போராட்டத்திலும் தான் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த காலத்திலும்
தொடர்ந்து பிரபாகரனுக்கு தோள் கொடுத்து நின்றவர் மதிவதனி. மதிவதனியும் பிரபாகரனும்
வேறு வேறு உருவங்களாக இருக்கலாம் ஆனால் உயிர் என்பது இருவருக்கும் ஒன்றே ஈழத்
தமிழர்களுக்காக தங்களின் காதலையும் வாழ்க்கையையும் ஒன்றாக இணைத்துக் கொண்டவர்கள்,
போராட்டமே வாழ்க்கையாக வாழ்ந்தவர்கள். இவர்களின் குழந்தைகளுக்கு இறந்த மாவீரர்களின்
பெயரையே வைத்துள்ளனர். சார்லஸ் ஆண்டனி, துர்கா போன்ற மாவீரர்களை நமக்குத் தெரியும்,
ஆனால் பாலச்சந்திரன் யார் என்ற தகவல் பலருக்கு தெரியாது, இவர் வேறு யாரும் அல்ல
மதிவதனியின் தம்பி இந்திய அமைதிப்படை காலத்தில் களத்தில் நின்று போராடிய வீரர்களில்
ஒருவர். பல்லாண்டுகளுக்கு முன்பாகவே தன் தம்பியை சுதந்திர தமிழீழத்திற்காக கொடுத்த
தமக்கையான மதிவதனி தன் பிள்ளைகளையும் தமிழீழத்திற்காக கொடுத்துவிட்டார். </span><o:p></o:p></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">தம் மக்களின்
சுதந்திரத்தையே தம் காதலாகவும் வாழ்க்கையாகவும் அமைத்துக் கொண்டவர்களே பிரபாகரனும்
மதிவதனியும். </span><o:p></o:p></div>
<br />
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;"><br />
<!--[if !supportLineBreakNewLine]--><br />
<!--[endif]--><o:p></o:p></span></div>
</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8141777893641371649.post-57802672579046008362015-08-05T06:19:00.001-07:002015-08-05T06:19:57.966-07:00சமணர் கழுவேற்றம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjVVbs5adE3sMTH1MtJnatD8PqaxhyzJyFCZLkbGKigoy05Pjik2zrNMrPcLoMoGXNx_j6sMcDzyn8bkXPsgIwox5Q_7DKzCGrYtPEwFa0kHsom4AE-ohzdIEGpNWRkafNDWbcRjQ-BE9Y/s1600/1111.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="236" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjVVbs5adE3sMTH1MtJnatD8PqaxhyzJyFCZLkbGKigoy05Pjik2zrNMrPcLoMoGXNx_j6sMcDzyn8bkXPsgIwox5Q_7DKzCGrYtPEwFa0kHsom4AE-ohzdIEGpNWRkafNDWbcRjQ-BE9Y/s320/1111.jpg" width="320" /></a></div>
<br />
சமணர் கழுவேற்றம் குறித்தான விவாதம் என்பது பல வருடங்களாக நடந்து கொண்டிருப்பது. இத்தகைய விவாதங்கள் நம்மை நமது வரலாற்றுடன் பொருத்தி பார்ப்பதற்கானது அல்ல, நாம் அந்த வரலாற்றில் இருந்து பாடம் படித்துக் கொள்ளவே.</div>
<div style="text-align: justify;">
<br />
சமணர் படுகொலை என்பதற்கான சான்றுகள் எதுவுமில்லை என்று கூறி பலர் மறுத்து வருகின்றனர். இவர்களுக்கு எத்தனை சான்றுகள் கொடுத்தாலும் இல்லை என்று தான் திரும்ப திரும்ப கூறுவார்கள். அதற்கு காரணம் தங்களை மேல்நிலையில் வைத்துக் கொண்டு நாங்கள் சமணர்களை கழுவிலேற்றும் அளவிற்கு கொடுமையானவர்கள் இல்லை என்று தங்களின் இந்து பரம்பரையை தூக்கிப்பிடிப்பது இல்லாமல் வேறு எதுவும் இல்லை. எந்த ஒரு சமூகம் தான் செய்த தவறுகளை உணர்ந்து அதிலிருந்து திருத்திக் கொள்ளமல் தன்னை போலி அடையாளங்களுக்கு உட்படுத்திக் கொள்கிறதோ அந்த சமூகம் என்றும் பண்பட்டதாக மாறும் வாய்ப்பு இல்லை. வேண்டுமென்றால் ஹிடலர் ஆரிய இனத்தை வலுவுள்ளதாக ஆக்குகிறேன் என்று சொல்லி, அவர் காலத்தில் தன் இனத்தில் இருந்த ஊனமுற்றவர்கள், வலிமையில்லாதவர்கள் அனைவரையும் கொன்று குவித்த பாசிச மனப்பான்மையை தங்களுடையதாக மாற்றிக் கொள்ள மட்டுமே இவர்களால் முடியும். </div>
<div style="text-align: justify;">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhBZvf8Zl9neH3kycB3K9rUN5HpLl3mc5mGNNxGku7hhi4EQ1wbRrsvcmp4eV-aLSFCiuGUOWQ5R3K4zYP52CWRUEoIWlL6CorofybDVHoQ8x-Lg0S5a9sAlihRLJlXRXAoDxBluYMx0I4/s1600/2222.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="235" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhBZvf8Zl9neH3kycB3K9rUN5HpLl3mc5mGNNxGku7hhi4EQ1wbRrsvcmp4eV-aLSFCiuGUOWQ5R3K4zYP52CWRUEoIWlL6CorofybDVHoQ8x-Lg0S5a9sAlihRLJlXRXAoDxBluYMx0I4/s320/2222.jpg" width="320" /></a></div>
<br />
ஐரோப்பிய அறிஞர்கள் தமிழர்கள் வரலாறு இல்லாதவர்கள் என்று ஓரு காலத்தில் குறிப்பிட்டதை உடைத்து உலகில் பழமையான வரலாறு தமிழர் வரலாறு எனபதை நமது இலக்கிய, மற்றும் கல்வெட்டு சான்றுகளின் மூலமாகவும் நிருபித்துள்ளோம். இதில் எந்த மன்னனும் தான் தோல்வியடைந்த போர்களைப் பற்றி கல்வெட்டில் குறிப்பிடவில்லை, தான் வெற்றி பெற்றவைகளையே பறைசாற்றும் வகையில் கல்வெட்டுகளில் குறிப்பிட்டுள்ளனர். ஒரு மன்னன் தோல்வியுற்றதை மற்றொரு மன்னனின் வெற்றி குறித்தான கல்வெட்டுகள் மூலமாகவே அறிந்து வருகிறோம். பாரி வள்ளலை மூவேந்தர்கள் இணைந்து முறியடித்ததையும் அவர் மரணத்தையும் இவ்வாறாகவே நம்மால் இலக்கிய ஆதாரங்களின் கீழ் அறிந்து கொள்ள முடிகிறது. அதே போல் தான் சமண கழுவேற்றம் என்பதை சைவ சமய ஸ்தாபித வரலாறாக நமக்கு கிடைக்கிறது.<br />
<br />
ஒரு பகுதி மக்களின் பண்பாடு என்பது அவர்களின் வாழ்க்கை முறையில் இருந்து தெரியும், சைவ சமய கோட்பாடுகளின் சைவ சமய மக்கள் தங்களின் வெற்றியாக சைவ சமய ஸ்தாவித வரலாற்றை கொண்டாடுகிறார்கள். இதை கழுவேற்றம் என்ற பெயரிலேயே இது வரை கொண்டாடி வருகின்றனர்.<br />
<br />
மதுரையின் பெரும் திருவிழாக்களில் ஒன்று சித்திரைத் திருவிழா இதன் தோற்ற காலத்தை நம்மால் அறிய இயலாவில்லை ஆனால் இந்த திருவிழாவில், அதாவது மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சார்ந்து நடக்கும் சித்திரை திருவிழாவில் ஆறாம் நாள் விழாவாக சிவனும் மீனாட்சியும் கோயிலுக்குள்ளேயே இருக்கும் சிவகங்கை ஜமீன் மண்டகப்படிக்கு எழுந்தருளுவார்கள். அப்பொழுது அங்கே சைவ சமய ஸ்தாபித வரலாறு பாடலாக ஓதப்படும். இந்த நிகழ்விற்கு பெயர் “கழுவேற்றம்”<br />
<br />
இது மட்டுமல்ல திருப்பரங்குன்றத்தில் தெப்ப திருவிழாவின் போது இதே போல் ஆறாம் நாள் சுப்பிரமணிய சுவாமியும், தெய்வானையும் 16 கால் மண்டபத்தில் எழுந்தருள்வார்கள், இவர்களுடன் திருஞான சம்பந்தரும் எழுந்தருளுவார். அப்பொழுதும் சைவ சமய ஸ்தாபித வரலாற்று பாடல்கள் ஓதுவார்களால் ஓதப்படும்.<br />
<br />
இந்து மதத்தின் உள்ளடக்கிய சிவன், மீனாட்சி, முருகன், தெய்வானை சம்பந்தப்பட்ட திருவிழாவில் இத்தகைய நிகழ்வுகள் நடத்தப்படுவது சாதரணமாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால் சிறு தெய்வ வழிபாடு முறை என்பது இந்து மத சம்பிராதயங்களுக்குள் அடங்காது ஆனால் திருமங்கலம் பத்திரகாளியம்மன் திருக்கோயிலிலும் வைகாசி மாத திருவிழாவில் ஆறாம் நாள் திருவிழாவாக கழுவேற்றம் இன்று வரை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த கோயில் 18ம் நூற்றாண்டில் எளிய தமிழர்களால் உருவாக்கப்பட்ட ஒரு கோயில் இதையும் பார்ப்பனியத்தின் பிடியில் இன்று விட்டுவிட்டோம். காளியம்மன் ஸ்ரீ பத்திரகாளியம்மனாக உருவெடுத்துவிட்டார்.<br />
<br />
சரி சமணர் கழுவேற்ற வரலாறுக்கும் இந்த கோயில் திருவிழாக்களுக்கும் என்ன சம்பந்தம் என்றால் நின்றசீர் நெடும் பாண்டியன் சமணத்தை போற்றி வளர்த்து வருகிறார், அவருடைய மனைவி மங்கையற்கரசி சைவத்தை போற்றுகிறார். ராணி மங்கையற்கரசி வேண்டுகோளின் கீழ் சம்பந்தர் மதுரை வருகிறார். அப்படி மதுரைக்கு வந்த சம்பந்தரை மதுரையில் கொலை செய்ய சமணர்கள் முயல்கிறார்கள். அதில் இருந்து தப்பிய சம்பந்தர் மன்னனுக்கு ஏற்பட்டிருந்த வெக்கை நோயை சமணர்களால் தீர்த்து வைக்க முடியவில்லை எனும் பொழுது திருநீற்றுப் பதிகம் பாடி மன்னனை நோயிலிருந்து விடுவிக்கிறார் இது தான் கதை. <br />
<br />
<i><b>“மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு</b></i><br />
<i><b>சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு</b></i><br />
<i><b>தந்திர மாவது நீறு சமயத்தில் உள்ளது நீறு</b></i><br />
<i><b>செந்துவர் வாயுமை பங்கன் திருவால வாயாந் திருநீறே</b></i><br />
<i><b>வேதத்தில் உள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு</b></i><br />
<i><b>போதந் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு</b></i><br />
<i><b>ஓதத் தகுவது நீறு உண்மையில் உள்ளது நீறு</b></i><br />
<i><b>சீதப் புனல்வயல்சூழ்ந்த திரு ஆலவாயான் திருநீறே”</b></i><br />
<br />
இந்த கதை பெரியபுராணத்தில் இருக்கிறது, திருநீற்றுப் பதிகமும் நம் கையில் இருக்கிறது. இதைப் போன்று மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வரைந்த ஒவியமும் இருக்கிறது பல கோயில்களில் சிற்பங்களாகவும் இந்த கழுவேற்றம் நமக்கு ஆதாரங்களாக இருக்கிறது. சமணத்தை வென்று சைவம் தலைத் தோங்கியதை குறிக்கவே இன்று வரை பல கோயில்களில் திருவிழாக்களில் இந்த நிகழ்வை சைவ சமய தோற்ற நிகழ்வாக கழுவேற்றம் என்ற பெயரில் இன்று வரை கொண்டாடியும் வருகிறோம். ஒரு சமூகத்தின் வரலாறு என்பது அவர்களின் பண்பாட்டில் அன்றாட நடவடிக்கையிலும் இருந்தும் நாம் தெரிந்து கொள்ளலாம். ஒரு சமூகத்தின் நாகரீகம் என்பது அவர்களின் பல நூற்றாண்டு காலமாக கடைபிடித்து வரும் பழக்கவழக்கங்கள் தான். <br />
<br />
இத்தகைய ஒன்று தான் சமணர் கழுவேற்றத்திற்கான ஆதாரங்களாக மதுரை மீனாட்சி அம்மன் கோயில், திருப்பரங்குன்றம் கோயில், திருமங்கலம் பத்திரகாளியம்மன் கோயில் போன்றவற்றில் மட்டுமில்லாமல் மதுரை சுற்றுவட்டாரத்தில் உள்ள அனைத்து சிவன் கோயில்களிலும் சமணர் கழுவேற்றம் அந்த அந்த கோயில் திருவிழாக்களின் ஒரு பகுதியாக நடந்து வருகிறது. இதையெல்லாம் மறுப்பது என்றால் இந்த சமணர் கழுவேற்றம் நடக்கவில்லை என்றோ கூறுபவர்கள். மொட்டையாக இதற்கான ஆதாரம் இல்லை ஆனால் இன்று வரை சமணக் குன்றுகள் இருக்கின்றன என்ற ஆதாரத்தை மட்டும் கொடுக்கிறார்கள் ஆனால் இவ்வாறு மக்களின் வாழ்க்கையோடு ஒன்றிப் போய்விட்ட திருவிழாக்களில் கண்ணுக்கு முன்பாக சமணர் கழுவேற்றத்திற்கு ஆதாரமாக ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படும் நிகழ்வை மறந்துவிடுகிறார்கள்.<br />
<br />
இப்படி மறுப்பவர்கள் சைவத்தையும் இந்துத்துவா தத்துவத்தை குற்றமற்றவர்களாக சித்தரிக்கும் மதவாதிகளாகவே இருக்கின்றனர். இந்து மதத்தின் குற்றங்களை மறைத்து அதனை தன் மதமாக தூக்கிப் பிடிப்பதே இவர்களின் நோக்கம். எவ்வாறு இன்று இந்து மத கூறான ஆர்.எஸ்.எஸ் இப்பொழுது அம்பேத்காரை தூக்கி வைத்துக் கொண்டு நால் வர்ண பேதத்தை பாதுகாக்க முயல்கின்றனரோ அவ்வாறே தான் இவர்களும். அம்பேத்காரும் ஒடுக்கப்பட்ட மக்களும் இந்து மதத்தை தூக்கி எறிய காரணமே நால் வர்ணத்தில் ஓரு இடம் கூட கொடுக்காமல் பஞ்சமர்களாக ஒதுக்கியதுடன் இல்லாமல், ஒட்டுமொத்தமாக ஒரு மனித இனத்தின் கூறுகளாக கூட அவர்களை பார்க்கவில்லை என்பது தான் ஆனால் இன்று அம்பேத்கர் படத்தை தாங்கி பிடித்துக் கொண்டு வரும் ஆர்.எஸ்.எஸ் காரர்களுக்கும் தமிழ் மன்னர்கள் செய்த தவறுகளை மறைத்து வெறும் பழம்பெருமை பேசும் இந்த கூட்டமும் ஒன்றே.<br />
<br />
எந்த ஒரு கருத்தியலும் தன் தவறுகளை உணர்ந்து அதைத் திருத்திக் கொள்ளவில்லை என்றால் அந்த கருத்தியல் மட்டுமில்லை அதைச் சார்ந்த சமூகமும் விழ்ந்துவிடும் </div>
</div>
Unknownnoreply@blogger.com1tag:blogger.com,1999:blog-8141777893641371649.post-1274192751105666462015-04-20T04:31:00.002-07:002015-04-20T04:32:13.281-07:00எது திராவிடம் - கருப்புச் சட்டை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhoJYI8JKdvaQbjgFqWemzFz5qpUY5mczbWUaX1RMv7gSkl3-zy4Y9wwgk2SlFi2fU7LbUE9Ov1SaERcLAgX9Xxqz0htlrV5LBX2plfYiigf-LiUCEkklDRl1yeL2xS3vF665-vKiKPFOk/s1600/blackshirt.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhoJYI8JKdvaQbjgFqWemzFz5qpUY5mczbWUaX1RMv7gSkl3-zy4Y9wwgk2SlFi2fU7LbUE9Ov1SaERcLAgX9Xxqz0htlrV5LBX2plfYiigf-LiUCEkklDRl1yeL2xS3vF665-vKiKPFOk/s1600/blackshirt.jpg" height="125" width="320" /></a></div>
<br />
<br />
சத்தியமூர்த்தி அய்யர் சென்னை கடற்கரையில் சர். முகமது உஸ்மான் அவர்களைப் பற்றி பேசிய அதே இடத்தில் மேடை போட்டு எரிமலை எம்.கே. குப்தா “சர். முகம்மது உஸ்மானைப் பற்றி சத்தியமூர்த்தி பேசிய வர்த்தைகளை இன்னும் ஒரு வாரத்திற்குள் சத்தியமூர்த்தி வாபஸ் வாங்க வேண்டும் இல்லையென்றால் சத்தியமூர்த்தியின் காலிலே போட்டிருக்கின்ற பூட்சை அல்ல என்னுடைய காலிலே போட்டிருக்கின்ற பூட்சை கழற்றி அடித்து சத்தியமூர்த்தியை வாபஸ் வாங்க வைப்பேன்” என்று எம்.கே.குப்தாவும், அஞ்சா நெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரியும் முழங்கினார்கள். இதன் பின்னர் சத்தியமூர்த்தி மன்னிப்பு கேட்டுக் கொண்டார். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தமிழக காங்கிரஸின் மிகப்பெரும் தலைவர்களுள் ஒருவராக இருந்தவர் சத்தியமூர்த்தி அவர்களின் தொண்டர் படைபலமும் கணக்கிலடங்காதது, அதுவும் இந்த நிகழ்வு நடந்த காலம் சுதந்திரப் போராட்டம் நடந்து கொண்டிருந்த காலம் அப்பொழுது காங்கிரஸின் ஒரு தலைவரை நோக்கி சவால் விட்டு அவர் பேசியதற்கு மன்னிப்பு கோர வைத்தார்கள் என்றால் எத்தகைய நெஞ்சுரம் இருந்து இருக்க வேண்டும் இந்த பெரியார் தொண்டர்களுக்கு. கருப்புச் சட்டைக்காரன் என்றாலே ஒர் மக்களிடையே ஓர் மரியாதையும், எதிரிகளின் மனதில் ஒரு பயமும் என்றும் குடிகொண்டிருக்கும். அப்படியான கருப்புச் சட்டை அணிந்து கொள்ளும் பழக்கம் ஆரம்பிக்கப்பட்டது எப்பொழுது என்பதை தெரிந்து கொள்ள வேண்டியதும் மிகவும் அவசியம்.<br />
<br />
1930 களில் தீபாவளி நமது மன்னன் நரகாசுரனின் மரணமடைந்த தினம் இதை நாம் கொண்டாடக் கூடாது, அது நமக்கு துக்க தினம் என்று அறிவித்து கருப்புச் சட்டை அணிந்தார்கள் முதலில். அது தான் 1945ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29, 30ம் நாட்களில் திருச்சியில் நடந்த மாநாட்டில் திராவிடர் கழகத் தொண்டர்கள் நிரந்தரமாக கருப்புச் சட்டை அணிய வேண்டும் என்றும் அதற்கான காரணத்தை வலியுறுத்தியும் பெரியார் பேசினார். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“நமது இழிநிலையை விளக்கிட எப்போதுமே கருப்புச் சட்டை அணியலாம், பெண்டிரும் கருப்புத் துணியில் புடவை ரவிக்கை அணியலாம். கூட்டங்களில் இனி மாலைக்கு பதில் கருப்புத் துணிகளே போடலாம். இந்தியாவில் பிற இடங்களில் ராமதண்டு, அனுமான் சைன்யம், செஞ்சட்டை, நீலச்சட்டை இந்துஸ்தான் சேவதள் இருப்பது போல் இங்கும் கருப்புச் சட்டைப்படை தமிழ்நாடு முழுவதும் இருக்கும்.”<br />
<br />
இதன் பிறகே கருப்புச் சட்டைப்படை உருவாக்கப்பட்டது, 1946ம் ஆண்டு மே மாதம் 10 மற்றும் 11ம் தேதிகளில் மதுரையில் முதல் கருப்புச்சட்டை மாநாடு அறிவிக்கப்பட்டு நடத்தப்பட்டது. மாநாட்டின் முதல் நாள் மிகவும் அமைதியாக நடந்தது ஆனால் மே 11ம் தேதி மாநாட்டு பந்தலுக்கு தீ வைக்கபப்ட்டது, பெரியாரின் தொண்டர்கள் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். மாநாட்டு பந்தலை தாக்க முயன்ற இந்துமத காங்கிரஸ் வெறியர்களுக்கு “கொடியே தடியாகவும் தடியே கொடியாகவும்*” பதிலடி கொடுக்கப்பட்டது. இப்படித் தான் கருப்புச்சட்டையும் அதன் கீழாக ஒரு படையாகவும் பெரியாரின் தொண்டர்கள் கருப்புச் சட்டை அணிந்து கொள்ள ஆரம்பித்தனர். இந்து மத வெறி பிடித்த காங்கிரஸ் காரர்களுக்கு எதிராக கொடியை தடியாக மாற்றிய பிறகே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த காவல்த் துறை காங்கிரஸ் அடியாட்களை கைது செய்தது.<br />
<br />
மதுரையில் இப்படி கருப்புச் சட்டைப் படைக்கு எதிர்ப்பு தெரிவித்தது யார் என்று பார்த்தோம் என்றால், இன்றைய தமிழ்நாட்டு ஆலய நுழைவுப் போராட்ட வரலாற்றில் கதாநாயகனாக சித்தரிக்கப்படும் ‘வைத்தியநாத அய்யர்’ தான் கருப்புச் சட்டைக்கு எதிர்ப்பு தெரிவித்த முற்போக்கு பிராமணன். ஆம் கக்கனை தன் மகன் போல் வளர்த்தவர், ஆலய நுழைவு போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தியவர் என்று எல்லாம் வரலாற்றில் எழுதி வைக்கப்பட்டுள்ள இவர் இராஜகோபாலச்சாரியாரின் ஒரு கைப்பொம்மை. இராஜகோபாலச்சாரியின் விரலசைவுக்கு ஆடும் ஒரு பொம்மையாகவே ஆலாய நுழைவுப் போராட்டம் என்ற கண் துடைப்பு நாடகத்தை நடத்தினார், அரசாங்க அதிர்காரிகள் வருகிறார்கள் என்று சொல்லி கக்கன் உட்பட மீனாட்சி அம்மன் ஆலயத்திற்குள் அழைத்துச் சென்றார், அங்கிருந்த அய்யர்களும் விமர்சையாக வரவேற்பு அளித்தனர்.<br />
<br />
ஆலய நுழைவுப் போராட்டம் முடிந்த பிறகே அய்யர்களுக்கு விசயம் தெரிந்தது, வந்தவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்று அதன் பிறகு கிட்டத்தட்ட 10 நாட்கள் கோயிலை இழுத்து மூடினர். கோயில் தீட்டு பட்டுவிட்டது என்று பரிகார பூஜைகள் எல்லாம் நடத்தப்பட்டு அதன் பிறகே கோயில் திறக்கபப்ட்டது. இவ்வாறான ஒரு நுழைவுப் போராட்டம் எதற்கு என்று தெரியவில்லை, ஆனால் இதே முற்போக்குவாதியாகவும் புரட்சியின் அடையாளமாகவும் வரலாற்றில் சித்தரிக்கப்பட்ட வைத்தியநாத அய்யர் தான் மதுரையில் கருப்புச் சட்டை மாநாடு கூடாது என்று தன்னால் ஆன அத்தனை முயற்சிகளையும் செய்தார். மதுரை கீழ்பாலத்தின் அருகில் கருப்புச் சேலை கட்டி வந்த பெண்களை அடித்து உதைத்தார்கள் இந்த வைத்தியநாத அய்யர் கூட்டம். இப்படி 10ம் தேதி மற்றும் 11ம் தேதி என்று மாநாடு நடந்த இரண்டு நாளும் மிகப்பெரும் கலவரங்களை நடத்திவிட வேண்டும் என்று முயன்றனர்.<br />
<br />
ஆனால் பெரியார் தன் தொண்டர்களை கட்டுக்குள் வைத்து எந்தவிதமான அசம்பாவிதங்களும் நடந்து விடாமல் பார்த்துக் கொண்டார். இப்படியான கருப்பு சட்டைப் படை ஆரம்பித்த இரண்டாவது வருடத்தில் 1948ம் ஆண்டு அன்றைய உள்துறை அமைச்சராக இருந்த சுப்புராயன் காலத்தில் தடை விதிக்கப்பட்டது. கருப்புச் சட்டைப் படை என்பது தமிழகத்தை ஆண்டவர்களைவிடவும், காவல்துறையை விடவும் பெயர் பெற்றிருந்த காலம் அது. மக்களுக்கு எந்த பிரச்சனை என்றாலும் இல்லை காவல் துறையினரால் பிரச்சனை என்றாலும் அவர்கள் அணுகியது கருப்புச் சட்டைகளையே. இந்த நிலை 1990கள் வரை நீடித்தது.<br />
<br />
பேரறிவாளன் 1991ம் ஆண்டு ஜுன் மாதம் 11ம் தேதி சிபிஐயிடம் தந்தை ஞானச்சேகரன் என்ற குயில் தாசனாலும், அவரது அம்மா அற்புதம் இருவரும் சேர்ந்தே ஒப்படைத்தனர். மறுநாள் காலையில் திருப்பி அனுப்பிவிடுகிறோம் என்று சொன்ன சிபிஐ அதிகாரிகள் 15நாள் பெற்ற தாய் தந்தைக்கும் பிள்ளையை கண்ணில் காட்டவில்லை, ஏன் சட்டப்பூர்வமாக 24 மணி நேரத்தில் நீதிமன்றத்தில் நிறுத்தி விசாரிக்க அனுமதிக்க கோர வேண்டும் என்ற சட்ட விதிமுறையையும் பின்பற்றாமல் 15 நாட்கள் சட்டவிரோதமாக கடத்தி வைத்து இருந்தனர். அந்த சமயத்தில் செங்கல்பட்டு நீதிமன்றத்திற்கு பேரறிவாளனை அழைத்து வருகிறார்கள் என்ற தகவல் கிடைத்தது, அதற்கு முன்பே பேரறிவாளன் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தான் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்பது உலகிற்கே தெரியும். பேரறிவாளனை நீதி மன்றத்திற்கு அழைத்து வரும்பொழுதாவது பார்க்கலாம் என்று பேரறிவாளன் குடும்பத்தினர் செங்கல்பட்டு நீதிமன்றம் செல்ல முடிவெடுத்தனர்.<br />
<br />
ஆனால் அவர்களுடன் ஜோலார்பேட்டை மற்றும் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த 200 பேருக்கும் அதிகமானவர்கள் ஒன்றிணைந்தனர் நாங்களும் வருகிறோம் என்று சொல்லி. பேரறிவாளன் சம்பந்தப்பட்ட வழக்கு ராஜிவ் கொலை வழக்கு என்ற பொழுதிலும் 200 ஊர்க்காரர்கள் பேரறிவாளன் குடும்பத்துடன் இணைந்து நீதிமன்றம் வந்தனர் என்றால் பேரறிவாளன் தந்தை குயில்தாசனின் கருப்புச்சட்டையும் அந்த சட்டையுடன் அவரும் அவர் குடும்பமும் ஆற்றிய தொண்டே. 1990கள் வரை ஒருவரை காவல்துறை கைது செய்துச் சென்றால் என்ன ஏது என்று விசாரிக்க ஒரு கருப்புச் சட்டைகாரரை கூப்பிட்டுக் கொண்டு ஒட்டுமொத்த தெருவே காவல் நிலையம் செல்லும். ஆனால் 1991க்கு பிறகு இந்த நிலையை தலைகீழாக மாற்றியது திராவிடர் கழகத்தின் நிலைப்பாடு, பேரறிவாளனையும் அவர் குடும்பத்தையும் திராவிடர் கழகத்தையும் பிரித்து நிறுத்தியது. ஒட்டுமொத்தமாக தன் இயக்கத் தோழர் ஒருவரை கைகழுவினர் திராவிடர் கழகத்தில் பெயருக்கு கருப்புச் சட்டை போட்டு உலாவருபவர்கள்.<br />
<br />
உண்மையான கருப்புச் சட்டைக் காரர்கள் பலர் பெரியார் காலத்திலேயே வெளியேறிவர்களும், பேரறிவாளன் கைதுக்கு பிறகு வெளியேறியவர்களும் தொடர்ந்து கருப்புச் சட்டையுடன் களத்தில் நின்றனர், 26 பேருக்கு தூக்கு கொடுக்கப்பட்டபொழுதும் அதில் 26 பேரின் தூக்கு கயிறை அறுத்து எறியும் வரையில் தொடர்ந்து நின்றனர். ஆனால் திராவிடர் கழகம் கருப்புச் சட்டையை ஒரு சீருடையாக மாற்றிவிட்டது.<br />
<br />
அது இன்று கருப்புச் சட்டை என்பது ஓர் அடையாளம் அல்ல என் மீது சுமத்தப்பட்டிருக்கும் இழிவிற்கான எதிர்ப்பு என்பதை மிகத் தெளிவாகவும் ஆணித் தரமாகவும் சொல்லும் விதத்தில் ஏற்படுத்தப்பட்ட ஒரு அணுகு முறையே. ஆனால் இதை அறியாத சிலர் இன்று பச்சைத்துண்டையும் கருப்புச் சட்டையையும் ஒருங்கே அணிந்து கொண்டு பண்பாட்டுப்புரட்சி கலாச்சார புரட்சி என்று கிளம்பிவிட்டனர். பெரியார் காலத்தில் இருந்து இன்று வரை கருப்புச் சட்டை என்பது எதிர்ப்பின் அடையாளமாக பின்பற்றபப்டுவது. சமூகத்தின் இழிவை துடைக்கும் வரை உண்மையான கருப்புச் சட்டைகள் ஏ.ஜி.கே, சுவரெழுத்து சுப்பையா போன்றவர்களாய் பயணிக்க இன்னும் பல கருப்புச் சட்டைகள் இருந்து கொண்டு தான் இருக்கின்றனர், மேலும் புதிதாய் பல கருப்புச் சட்டைகள் வந்து கொண்டு தான் இருக்கின்றனர்.<br />
<br />
<br /></div>
<div style="text-align: justify;">
முதல் பகுதி<br />
http://kumarikantam.blogspot.in/2015/04/blog-post_16.html</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8141777893641371649.post-7087085878891757842015-04-16T11:45:00.002-07:002015-04-18T01:11:15.358-07:00எது திராவிடம் - எம்.கே.குப்தா<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh8-jua0-v-RiudrD5IVFu6TCsz02ojU0iVYXh1A2G1KclvKBbCjDJNbNUibaj0R6y57q-CayvALkmjaxYWuEetMwp4n_vAgdL0o8fvsPac3YOFGXIjgH0_a800ngeDn_6kgPm4Bpg1sCA/s1600/2periyar.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh8-jua0-v-RiudrD5IVFu6TCsz02ojU0iVYXh1A2G1KclvKBbCjDJNbNUibaj0R6y57q-CayvALkmjaxYWuEetMwp4n_vAgdL0o8fvsPac3YOFGXIjgH0_a800ngeDn_6kgPm4Bpg1sCA/s1600/2periyar.jpg" height="270" width="320" /></a></div>
<br />
<br />
திராவிடம் என்றால் என்ன? என்பதை அறியாத சிலர் வீரமணியும், கருணாநிதியும் தான் திராவிடத்தின் அடையளமாக நினைத்துக் கொண்டு, அவர்களை அளவுகோளாக எடுத்துக் கொண்டு திராவிடம் தான் எங்களை அழித்தது என்ரு பிதற்றித் திரிகிறார்கள். ஆனால் 1973 பெரியார் இறந்தபின் பெரியாரின் சொத்தை தமிழனுக்காக இல்லாமல் தனக்காக என்று ஒரு வியபார நிறுவனமாக மாற்றிக் கொண்டவர் வீரமணி. பெரியார் இருக்கும் பொழுதே திமுக மேடைகளில் பெரியாரையும், மணியம்மையையும் “மைனர்” மற்றும் “கிளியோபட்ரா” என்று அசிங்கமாக திமுக மேடையில் விபூதி வீரமுத்து, தீப்பொறி ஆறுமுகம் போன்று பேசினவர் தான் கருணாநிதி. இவர்கள் தான் திராவிடத்தின் அடையாளம் என்று நினைத்தால் நினைப்பவர்களின் தவறு.<br />
<br />
சரி எது திராவிடம்? சென்னை தி.நகர் வந்தவர்கள் அனைவரும் அறிந்தது இரண்டு ஒன்று ரங்கநாதன் தெரு அடுத்து உஸ்மான் ரோடு. இதில் உஸ்மான் ரோடு யார் பெர்யரால் அழைக்கப்படுகிறது என்பது இங்கு பலருக்கு தெரியாது. ஒரு காலத்தில் சென்னை மாகணத்தின் கவர்னராக இருந்த சர். முகமது உஸ்மான் அவர்களின் நினைவாகவே தி.நகர் உஸ்மான் ரோட்டிற்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. தமிழகத்தின் பார்ப்பனியம் கோலோட்சி தமிழனை ஆட்டிப்படைத்தப் பொழுது நீதிக்கட்சி “பார்ப்பனியத்துக்குப் பலியாகாதே, மதத்திலே அவன் தரகு வேண்டாம்,. கல்வியிலே அவன் போதனை வேண்டாம், சமுதாயத்திலே அவன் உயர்வுக்கு உழைக்காதே, அரசியலிலே அவன் சூழ்ச்சிக்கு இரையாகாதே, திராவிட வீரனே, விழி, எழு, நட, உன் நாட்டை உனதாக்கு” என்ற முழக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட பொழுது ஆரம்பித்தவர்களுள் ஒருவராக நின்றவர் தான் சர். முகமது உஸ்மான்.<br />
<br />
அவரது சமகாலத்தில் தமிழக அரசியலில் காங்கிரஸ் கட்சியில் கோலோட்சியவர் தீரர் சத்தியமூர்த்தி என்று அழைக்கப்பட்ட சத்தியமூர்த்தி அய்யர். இவர் ஒரு தீவிர இந்திய தேசியவாதி என்பதைவிட தீவிர இந்துத்துவவாதி என்பதே சரியாக இருக்கும். ஆம் தேவதாசி முறை இருக்க வேண்டும் ஆண்களுக்கு பொழுது போக்க ஒரு இடம் வேண்டும் அதற்கு தேவதாசி முறையை நீக்க கூடாது என்று வாதிட்டவர். டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்கள் தேவதாசி முறையை ஒழிக்க வேண்டும் என்று சென்னை மாகாண சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்தபொழுதே சத்தியமூர்த்தி இவ்வாறு கூறினார். மேலும் “பெண்கள் சொர்கத்திற்கு செல்ல இது ஒன்று தான் வழி” என்றார். அதற்கு டாக்டர். முத்துலட்சுமி ரெட்டியார் எங்கள் சமூகப் பெண்கள் நிறையபேர் சொர்க்கம் சென்றுவிட்டனர் இனிமேல் உங்கள் சமூகப் பெண்களை சொர்க்கத்துக்கு அனுப்புங்கள் என்று சொன்னபிறகே வாயை மூடினார்.<br />
<br />
இது மட்டுமல்ல இன்று பார்ப்பனியம் இந்திய தேசியத்தை மறைமுகமாக இந்து தேசியமாக அறிவித்து செயல்படுத்தி வருகிறது என்றால் இவர் சென்னை மைலாப்பூர் கோயிலில் இந்திய தேசிய கொடியை ஏற்ற முயன்று, இந்தியா இந்துக்களுக்கானது என்பதை சொல்லாமல் சொன்ன மாகனுபாவர். சென்னை மாகணத்தின் ஆளுகைக்குள் இல்லாமல் புதுக்கோட்டை சமஸ்தானம் ஆங்கிலேயே ஆட்சியில் தனித்தே செயல்பட்டு வந்தது அப்பொழுது புதுக்கோட்டை சமஸ்தான மன்னராக இருந்த மார்த்தாண்ட பைரவத் தொண்டைமானுக்கு ஆஸ்திரேலிய மனைவி வழிப் பிறந்த இளவரசுக்கு வாரிசு உரிமை தரக்கூடாது எனவும் போராட்டம் செய்தார். சுத்தரத்தம் பார்த்து வாரிசுரிமை அரசியல் பேசினார், அதாவது இந்து ரத்தத்துடன் அந்நியரத்தம் கலந்தவர் புதுக்கோட்டையின் மன்னராக வரக்கூடாது என்று பேசினார்.<br />
<br />
தமிழக காங்கிரஸில் மட்டுமல்ல தேசிய அளவிலும் காங்கிரஸில் மிகச் செல்வாக்கு படைத்தவர் சத்தியமூர்த்தி. அதாவது இந்தியாமுழுவதும் காங்கிரஸின் அடையாளம் காந்தி என்றால் தமிழ் நாட்டின் அடையாளம் சத்தியமூர்த்தியும், ராஜகோபாலச்சாரியும்.. அதில் ராஜகோபலச்சாரியை வெற்றிகொண்டவர் சத்தியமூர்த்தி. சென்னை மாகாண காங்கிரஸ் தலைவராக காமராஜ்ரை தேர்ந்துடுக்க வைத்து அவருக்கு கீழாக செயலாளர் பதவியை ஏற்றுக் கொண்டவர். இவர் முகமது உஸ்மான் தமிழகத்தின் கவர்னராக நியமிக்கப்பட்டவுடன் சொன்னார் “எனது சூ கயிறை கட்டக்கூட தகுதியற்றவன் உஸ்மான்” என்று.<br />
<br />
ஆனால் அந்த சூ கயிறைகட்டக்கூட தகுதியில்லாதவன் என்று சொன்ன வார்த்தைகளுக்காக ஒரே ஒரு கூட்டம் தான் போடப்பட்டது, அதில் எம்.கே.குப்தா என்ற பெரியார் தொண்டர் பேசினார். அவர் சொன்னது இது தான் உஸ்மான் சூவை கழட்டி அல்ல என் சூவை கழட்டி உன்னை அடிப்பேன் என்று பகிரங்கமாக பொது மேடையில் அறிவித்தார்.. வாலைச் சுருட்டிக் கொண்டு சத்தியமூர்த்தி மன்னிப்பு கேட்டார். இது நடந்தது எல்லாம் திராவிடர் கழக மேடையில். நடந்த கால கட்டம் 1930களில் ஆனால் இன்று திராவிடர் கழகத்தில் இபப்டி யாராவது இருக்கிறார்களா.. எம்.கே குப்தா போல் காந்திக்கும் இந்தியத்திற்கும் சவால் விடக்கூடியவர் எங்கே என்று தேடுவோமா...<br />
<br />
இன்னும் வரும் எம்.கே.குப்தாவைப் பற்றியும் திராவிடர் கழகம் வீரமணி என்ற வியபாரியின் கீழ் சோரம் போனதைப் பற்றியும்..<br />
<br /></div>
</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8141777893641371649.post-52856690636137184432015-03-30T12:14:00.000-07:002015-03-30T12:16:51.830-07:00தமிழ்த் திரையுலகமும் தமிழினமும்..<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjIu3zesaepqVbssVaRNHCNv6h-BbdXmCHOmHoTVxW_WqcVAd5SSU6NhjZe23w3rPZvpPA4u8MObBah28-H_WkB8j4XFcG-VCweN5xxp8eKHL9i3rR8AmpbGsZypyHBOm57_eHxcSJ5cb0/s1600/1tamil.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjIu3zesaepqVbssVaRNHCNv6h-BbdXmCHOmHoTVxW_WqcVAd5SSU6NhjZe23w3rPZvpPA4u8MObBah28-H_WkB8j4XFcG-VCweN5xxp8eKHL9i3rR8AmpbGsZypyHBOm57_eHxcSJ5cb0/s1600/1tamil.jpg" /></a></div>
<br />
<br />
தமிழ்த் திரையுலகம் இன்றைய தமிழ்ச் சமூகத்திற்கு என்னற்ற பங்காற்றியிருக்கிறது இதை தோழர் எம்.எஸ்.எஸ். பாண்டியன் ஒரு புத்தகத்தில் விரிவாக எழுதியிருப்பார். திரையுலகின் மூலமாகத் திராவிடக் கருத்தியலை பரப்பி பெண்ணுரிமை, மூடநம்பிக்கை ஒழிப்பு என்று தமிழ்த் திரையுலகம் தமிழர்களுக்கு ஆற்றிய தொண்டு அளப்பரியது. ஆனால் இதே திரையுலகம் தமிழர்களுக்கு எதிராகவும் தொடர்ந்து வேலை செய்து கொண்டு வருகிறது.<br />
<br />
1968ம் ஆண்டு ஜனவரி மாதம் 5ம் நாள் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில் முதலமைச்சராக இருந்த அண்ணா மாணவர்களை சந்தித்தார். இதன் காரணம் இந்தி எதிர்ப்பு போராட்டத்தினால் அன்று சென்னையில் இந்தி படங்களை திரையிட்டு வந்த பல திரையரங்குகள் மூடப்பட்டிருந்தன. சிவாஜி கணேசன் நடித்த ஆலயமணி திரைப்படம் இந்தியில் தயாரித்து வெளிவர வேண்டிய சூழ்நிலையில் வெளியிட முடியாத சூழ்நிலை தமிழகத்தில் ஏற்பட்டது. அப்பொழுது இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மாணவர்கள் மத்திய மாநில அரசுகளின் உறுதிமொழிகளின் கீழாக போராட்டத்தை விலக்கிக் கொண்டதாக அறிவித்திருந்த நேரம். எனவே தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் முதல்வரான அண்ணாவை சந்தித்து தங்கள் படங்கள் வெளியிட இருக்கும் தடையை உடைத்து திரையிட அனுமதி கேட்டனர்.<br />
<br />
அண்ணா அப்பொழுது சொன்னது “மாணவர்கள் போராட்டத்தை நிறுத்திவிட ஒப்புக் கொண்டதால் தான் தமிழகத்தில் நிலவிய கொந்தளிப்பு அடங்கி அமைதி ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் மிகவும் உணர்ச்சிகரமான விசயத்தால் மீண்டும் பிரச்சனை கிளம்பிவிடக் கூடாது. எனவே, நீங்கள் மாணவர்களை முதலில் சந்தித்து அமைதிப்படுத்துங்கள். பிறகு படங்களை வெளியிடுவது பற்றி யோசிக்கலாம்” என்று சொல்லியிருக்கிறார். அதாவது போராடும் மாணவர்களை நீங்கள் சந்தியுங்கள் அவர்கள் தான் சொல்ல வேண்டும் என்று திரையுலகத்தினருக்கு சொல்லியிருக்கிறார் அண்ணா.<br />
<br />
பிரச்சனையின் தீவிரத்தை உணர்ந்த தமிழ்த் திரையுலகத் தரப்பினரும் ஏ.வி.எம் வளாகத்தில் அன்றைய மாணவத் தலைவர்களை சந்தித்தனர். சென்னை மாணவத் தலைவர்களில் துரைமுருகன், நாவளவன், ஜனார்த்தனம், ஜீவா கலைமணி, செஞ்சி ராமச்சந்திரன், இராமநாதன், உடையப்பன், முகில், பச்சையப்பா, நடராசன், துரைசாமி, வீராச்சாமி, மாநிலக் கல்லூரி நட்ராசன், செல்வராசு எனப் பல மாணவர்கள் அந்த கூட்டத்திற்கு வந்திருந்தனர்.<br />
<br />
திரையுலகில் இருந்து ஏ.வி.மெய்யப்பச் செட்டியார், அவரது மகன் சரவணன், பஞ்சு அருணாச்சலம், ஸ்ரீதர், கவிதாலயா பாலச்சந்தர், தேவர் பிலிம்சார், நாகிரெட்டி, பி.எஸ்.வீரப்பா முதலானோர் கலந்து கொண்டனர். அங்கு இந்தி எதிர்ப்பால் எங்களது படங்கள் வெளியிடப் படவில்லை எங்களுக்கு பெருத்த நட்டம். இந்தி நடிகர்கள் எங்கள் படங்களில் நடிக்க மறுக்கிறார்கள் என்று சொல்லி ஒப்பாரி வைத்துள்ளனர் தமிழ் திரையுலகத்தினர். இதனால் தமிழகத்தில் இருந்து பணி புரியும் “டெக்னிசியன்கள்” பலர் துன்புறுகிறார்கள் அவர்களுக்கு சரியான வேலை கிடைப்பதில்லை அதனால் ஊதியம் கிடைக்காமல் வருந்துகின்றனர் என்று செக்மேட் வைத்துள்ளனர்.<br />
<br />
அப்பொழுது அங்கிருந்த் சசிகலாவின் கணவர் ம.நடராசன் 1967ல் எங்கே போனீர்கள் மாணவர்கள் நூற்றுக்கணக்காக கொல்லப்பட்டனர் அப்பொழுது எல்லாம் நீங்கள் வாய் திறக்க வில்லை அமைதியாக இருந்தீர்கள். இந்த தமிழ்ச் சமூகத்தின் அங்கத்தினராக அன்று நீங்கள் உணரவில்லையா என்று கேட்டிருக்கிறார். அங்கு ஏகப்பட்ட த்ள்ளுமுள்ளுகள், ஏ.வி.எம் இராஜேந்திரனை நாங்கள் வளர்த்து எடுத்துள்ளோம் என்று கூற நீங்கள் கூறுவது எஸ்.எஸ். ஆரைப் பற்றி ஆனால் நாங்கள் கேட்பது அண்ணாமலை பல்க்லை மாணவன் காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் இறந்த மாணவனைப் பற்றி என்று சென்று, கடைசியாக மாணவர்களில் ஒருவர் எங்களிடம் பணம் வாங்கினார் என்று மாணவர் ஜனார்த்தனம் என்பவரின் மீது குற்றச்சாட்டு வைக்கு அளவிற்கு போனது.<br />
<br />
அப்பொழுது பி.எஸ்.வீரப்பா எழுந்து ”நான் கட்டிய வேட்டி துண்டோடு சிறு வயதில் பிழைக்க சென்னைக்கு வந்தவன், தமிழ் ரசிகர்களாகிய உங்களின் நல்லாதரவால் நான் தயாரித்த ஆலயமணி 100 நாள்களுக்கு மேல் நன்றாக ஓடியதால் இந்தியில் எடுத்தேன். இந்திப் போராட்டத்தால் அதில் நடித்த இந்தி நடிகர் காஷீட் கொடுக்காமல் இழுத்தடித்தார். எப்படியோ வட்டிக்கு கடன் வாங்கி கஷ்டப்பட்டு ஒருவாறு படத்தை முடித்தேன். இந்திப் படங்கள் வெளிவராமல் தடுக்கப்படுவதால் நான் வாங்கிய கடன் வட்டிக்கு மேல் வட்டி ஏறி வாட்டுகிறது” என்று ஒப்பாரி வைத்தார். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்தப்படம் வெளியிட நீங்கள் அனுமதிக்காவிட்டால் என் குடி கோவிந்தா குடிதான், அப்படி அழிந்துவிடும் என்று குய்யோ முறையோ என்று அவலக்குரல் எழுப்பினார். அந்த நேரத்தில் கலைஞரின் பட நிறுவனத்தை சேர்ந்த ஒருவர், இந்தித் திரைப்படம் காட்டுவதை நாங்கள் தடுக்க மாட்டோம், மாணவர் விட்டுக் கொடுக்க வேண்டும் என்று அமைச்சர் கருணாநிதி சொன்னதாக சொன்னார். பி.எஸ்.வீரப்பாவின் ஓப்பாரியை பார்த்து இலகியிருந்த மாணவர்கள், கருணாநிதியின் வேண்டுகோளையும் ஒரு சேர ஏற்று இந்திப் படத்தை திரையிடலாம் என்று அனுமதித்தனர். இனிமேல் தமிழ்நாட்டில் இருந்து எவரும் இந்திப்படம் தயாரிக்க கூடாது என்று நிபந்தனை விதித்து, தமிழ்த் திரையுலகினர் தயாரித்த இந்தி திரைப்படங்களை திரையிட அனுமதித்தனர்.<br />
<br />
ஆம் இது 1968ம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் பொழுது நடந்தது இதற்கு முன்பு நடந்த போராட்டத்தின் கீழாகத் தான் திமுக ஆட்சியை பிடித்து இருந்தது, அவர்கள் திருடர்கள் ஆனாதை அறிந்து கொள்ள 2009 வரை நாம் காத்திருக்க வேண்டியதிருந்தது. ஆனால் அன்றும் சரி இன்றும் சரி தமிழ்த் திரையுலகினர் தங்களின் காசுக்கு மட்டும் வேலை பார்க்கும் புத்தியை மாற்றிக் கொள்ளவில்லை. இவர்களுக்காக தமிழர்களான நாம் போராட வேண்டும் என்று கூக்குரல் இடுவார்கள், சொத்தை விற்றுவிட்டு அந்நிய நாடு போகிறேன் என்று போக்கு காட்டுவார்கள். உண்மையான தமிழர் பிரச்சனைக்கு இவர்கள் என்றும் ஒன்று கூட மாட்டார்கள், அவர்களின் தொழில் தான் அவர்களுக்கு முக்கியம்.<br />
<br />
இந்த உண்மையான நிகழ்வுகள் நடந்தது 1968ம் ஆண்டு அன்றும் சரி இன்றும் சரி தமிழ்த் திரையுலகத்தினர் தமிழர்களுக்கு ஆதரவாக நின்று போராட்டங்கள் செய்வது என்பது அரிதினும் அரிதாகிவிட்டது. ஆம் இதை கடந்த ஒரு வருடமாக ஈழத்தில் நம் இனம் படுகொலையான அவலத்தை சொல்லி தனக்கான கட்சியையும் சுற்றுவட்டாரத்தையும் வளர்த்துக் கொண்ட சீமான் இன்று புலிப்பார்வை, கத்தி போன்ற படங்கள் மட்டுமல்ல இனம் படத்தை எதிர்ப்பதாக காட்சி தந்தாலும் அதிலும் லிங்கு சாமி அப்படிப்பட்டவர் இல்லை என்று நற்சான்றிதழ் வாசித்தவர். இப்பொழுது கொம்பன் படத்திற்கும் மகுடி வாசிக்க ஆரம்பித்துள்ளார். ஆம் இவருக்கு தேவையானது இன நலமா இல்லை தன் நலமா என்ற கேள்வி எழுப்ப வேண்டிய தேவை நமக்கு உள்ளது. எனென்றால் இன நலம் என்றால் கொம்பன் படத்தை பார்த்துவிட்டு அதைக் குறித்து கருத்து தெரிவித்து இருக்க வேண்டும், ஆனால் அதை பார்க்கமலேயே தோழர். கிருஷ்ணசாமியுடன் விவாதங்களை கிளப்பியுள்ளார், அதுவும் தோழர் கிருஷ்ணசாமியுடன் தானும் படம் பார்க்க விரும்புகிறேன் என்று சொல்லி, இதில் இவரின் தொழில் பற்று தான் தெரிகிறது.<br />
<br />
ஒரு தவறான தொழிலுக்கு புரோக்கராக நின்று நுகர்வோரை அழைத்துவருபவருக்கும் இவருக்கும் எந்த வேறுபாடும் தெரியவில்லை. இவரின் திரைத் துறை செழித்தோங்க வேண்டும் என்றால் அதற்குள் நின்று போராடட்டும் தமிழினத்தின் பெயரைச் சொல்லி, தமிழினத்த பகடைக் காயாக மாற்றி தனது தொழில் துறையினருக்காக அவலக் குரல் எழுப்பவது தான் இவரின் வாடிக்கை என்றால், தமிழ் கூறும் நல்லுலகம் இவரையும் புறம் தள்ளும்... </div>
</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8141777893641371649.post-561264902132426392015-03-20T03:00:00.002-07:002015-03-20T03:00:49.552-07:00தோழர் மணியரசனின் அவதூறுகளுக்கான பதில்கள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: left;">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgYDskf7Eskr_i0xqufqeUnSpxHDHvkl6sRnOKpJZ-_4t00FJCuh9DgFgqSfQsMmJxGLwvM0Pidodd0qEpga1e6PoAlfQRrn_o0VnLEzH_Xf90aRD06rGWEVu2XoKl9ziNx_swxjKksis0/s1600/tamil.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgYDskf7Eskr_i0xqufqeUnSpxHDHvkl6sRnOKpJZ-_4t00FJCuh9DgFgqSfQsMmJxGLwvM0Pidodd0qEpga1e6PoAlfQRrn_o0VnLEzH_Xf90aRD06rGWEVu2XoKl9ziNx_swxjKksis0/s1600/tamil.jpg" height="240" width="320" /></a></div>
<span style="text-align: justify;"><br /><br />16-02-2015ம் ஆண்டு திராவிடமா? தமிழ்தேசியமா? விவாதத்தில் தோழர் மணியரசன் அவர்கள் தான் ஏற்றுக்கொண்ட தமிழ் தேசியத்திற்கு ஆதரவாக திராவிடத்தின் மீது பல அவதூறுகளை விட்டெறிந்தார். ஆனால் ஒன்றை மறந்து விட்டார் வரலாறுகள் முன்பு போல் இல்லாமல் பலரால் பலவிதமாக பதிவு செய்யப்பட்டே வந்திருக்கிறது என்பதை மறந்துவிட்டார். இப்படிப் பட்ட அவதூறுகள் அவரைப்பற்றிய மதிப்பீட்டை இங்கு பல தோழர்களிடம் இழக்க நேரும் என்பதை மறந்துவிட்டார். முதலில் தலைப்பின் கீழாக தமிழ்த்தேசியத்தின் தேவையையும் அதை முன்னெடுக்க வேண்டிய முறையையும் பேசியிருந்தார் என்றால் நன்றாக இருந்திருக்க வேண்டும் அதை விடுத்து திராவிடத்தின் மீதும் பெரியாரின் மீது அவதூறுகளை அள்ளி வீசும் களமாக பயன்படுத்திக் கொண்டார். முதல் அவதூறாக ஆதிதிராவிடர் என்ற பதத்தை அயோத்தி தாசர் கைவிட்டார்.</span></div>
<div style="text-align: justify;">
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
<b></b><br />
<div style="text-align: justify;">
<b><b>அயோத்திதாச பண்டிதரும் ஆதி திரவிடர் பதமும்</b></b></div>
<b>
</b>
<br />
<div style="text-align: justify;">
<b><b><br /></b></b></div>
<b>
</b>
<div style="text-align: justify;">
முதன் முதலாக மக்கள்தொகை கணக்கெடுப்பு என்பது 1861லிருந்து 1881 வரையும் எடுக்கப்பட்டது, அதன் பிறகு சாதிவாரியாக மிகவும் குறிப்பாக ஒடுக்கபப்ட்ட மக்களின் கணக்கெடுப்பை துல்லியமாக கணக்கெடுக்கும் வகையில் 1910ம் ஆண்டும் முன்னெடுக்கப்பட்டது. பிரிட்டிஷ் இந்தியாவில் அதுவும் குறிப்பாக அன்றைய சென்னை மாகாணத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பை தனது அரசியல் போராட்டமாக பயன் படுத்திக்கொண்டவர் என்றால் அது அயோத்தி தாசராக தான் இருக்க முடியும். ஆம் 1861ல் இருந்து 1881 வரை ஒரு கணக்கெடுப்பில் கிருத்துவர்களும், இஸ்லாமியர் அல்லாதவர்கள் இந்துக்கள் என்று வலிந்து திணித்து ஒரு கணெக்கெடுப்பு எடுக்கபப்ட்ட பொழுது தாங்கள் இந்துக்கள் இல்லை என்று சொல்லும் விதமாக 1881ம் ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் பொழுது “சாதியற்ற தமிழர்கள்” என்று பதிவிடச் சொல்லி அரசாங்கத்திடம் மனு கொடுத்தார், ஆனால் 1910ம் ஆண்டு “சாதிபேதமற்ற திராவிடர்களென்று” பதிவிடக் கோரினார். </div>
<div style="text-align: justify;">
<br />
“இந்துக்களுக்கு மத்தியில் இந்துவல்லாமல் வாழ்பவர்கள் இத்தேசப் பூர்வக்குடிகளேயாகும். இக்கூட்டத்தோருக்கு இந்துக்கள் சத்துருக்களேயன்றி மித்துருக்கள் ஆகமாட்டார்கள். பெரும்பாலும் இவர்கள் சாதிபேதமற்ற திராவிடர்களும், மதத்தில் பௌத்தாகளுமேயாகும். . . சென்ற குடிமதிப்பெடுத்த காலத்தில் பறையனென்னும் பெயர் ஆயிரத்து ஐநூறு வருடங்களுக்குப் பின்னரே தோன்றிய சாதிப் பெயரென்று சென்ற சென்சஸ் கமிஷனர் தன்னுடைய குடிமதிப்பு ரிப்போர்ட்டு புத்தகத்திலும் வெளியிட்டுருக்கின்றார்கள். இவைகள் யாவையும் தற்கால சென்சஸ் கமிஷனர் கனந்தங்கிய மிஸ்டர் கேய்ட் அவர்கள் கண்ணுற்று குடிமதிப்பு எடுக்குங்கால் தங்கள் அறியாமையாலும், பயத்தினாலும் இந்துக்களுக்குப் புறம்பான பூர்வ குடிகளில் சிலர் பறையர்களென்றும் கூறுவார்கள். அவர்கள் யாவரையும் அப்பெயரால் குறிக்காது ‘சாதிப்பேதமற்ற திராவிடர்களென’ ஒரே பெயரால் -குறிப்பது உத்தமமும், பிரிட்டிஷ் ஆட்சியில் இந்துக்கள் அடையும் சுதந்திரங்களைச் சாதிபேதமற்ற திராவிடர்டகள் அடையவும் ஏதுவுண்டாகும்,” என அயோத்திதாசர் எழுதியுள்ளார் (17.12.1910) <br />
<br />
சரி தோழர் மணியரசன் 1881ல் “சாதியற்ற தமிழர்கள்” என்று அயோத்தி தாசர் மனு அளித்ததை வைத்து, அயோத்தி தாசர் தன் கொள்கையை மாற்றிக் கொண்டார் என்று கூறுகிறார். ஆனால் வரலாறு என்ன கூறுகிறது என்றால் 1881க்கு பிறகு தான் திராவிட என்ற அடையாளத்தை ஏற்றுக் கொள்கிறார். 1881க்கு பிறகு பாதிரியார் ஜான் பாண்டியன் அவர்களின் தொடர்பு கிடைக்கிறது, ஜான் பாண்டியன் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் தலித்துகள் மட்டும் படிக்க கூடிய பள்ளியை நடத்தி வந்தார் அவருடன் இணைந்து 1886 ல் திராவிட பாண்டியன் என்ற இதழை பாதிரியார் ஜான் பாண்டியனுடன் இணைந்து ஆரம்பிக்கிறார். அதில் உதவி ஆசிரியராகவும் பணி புரிகிறார். 1907ம் ஆண்டு தனியாக “ஒரு பைசாத் தமிழன்” “தமிழன்” போன்ற பத்திரிக்கைகளை ஆரம்பிக்கிறார் ஆனால் 17-12-1910ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு முன்பாக “சாதி பேதமற்ற திராவிடர்கள்” என்று பதிவிட கோருகிறார்.<br />
<br />
1881ல் சொன்னதை 1910ல் மாற்றிக் கொண்டார் என்றால் “சாதியற்ற தமிழர்கள்” என்பதில் இருந்து 1910ல் “சாதியற்ற திராவிடர்கள்” என்று தங்களை திராவிடர்களாகவே அடையாளப்படுத்திக் கொண்டார் இதை தலைகீழாக மாற்றியே தோழர் மணியரசன் வருட வித்தியாசங்களை மறைத்து அயோத்தி தாசர் தூக்கி எறிந்த திராவிடர் அடையாளத்தை பெரியார் வலுவில் திணித்தார் என்று குறிப்பிடுகிறார்.<br />
<br />
தோழர் மணியரசனின் இந்த அவதூறுக்கான மறுப்பை இத்துடன் நாம் கடந்து சென்றுவிடலாம் ஆனால் அவ்வாறு கடந்து செல்வது சரியான வரலாற்று பார்வையாக இருக்க முடியாது. இந்த பிரச்சனை குறித்து மட்டும் பேசுவதாக முடிந்துவிடும், இன்று ஆதி திராவிடர்கள் என்று தமிழகத்தில் சட்டப்பூர்வமாக இருக்கிறது இது எப்பொழுது ஏற்படுத்தப்பட்டது என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் ஆகிறது. 1914ல் அயோத்திதாச பண்டிதர் அய்யா இறந்துவிடுகிறார், 1912ம் ஆண்டு திரு நடேசன் அவர்களால் திராவிடர் சங்கம் தொடங்கப்படுகிறது இந்த சங்கமானது பார்ப்பனரல்லதோர் சங்கம் என்ற நிலையிலேயே ஆரம்பிக்கிறது. இதன் பிறகே நீதிகட்சியும் ஆரம்பிக்கிறது. நீதி கட்சியினர் திராவிட மகாஜனசபையினருடன் இணைந்து பார்ப்பனரல்லாதவர்கள் அரசியலை முன்னெடுக்கிறார்கள். இந்த சமயத்தில் தான் தோழர் எம்.சி.ராஜா அவர்கள் 1918ம் ஆண்டு ஆங்கில அராசங்காத்திடம் ஆதி திராவிடர் என்று அங்கீகரிக்க கோரிக்கை வைக்கிறார். 1920ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் தேர்தலை புறக்கணித்த காரணத்தால் நீதிக்கட்சி ஆட்சிக்கு வருகிறது. 1922ம் ஆம் ஆண்டு ஆதி திராவிடர் என்ற பெயர் அதிகார்ப் பூர்வமாக சாதியப் பட்டியலில் இடம் பெருகிறது. <br />
<br />
இவ்வளவு பிரச்சனை செய்து பெயரை மாற்றி முன்னிறுத்த வேண்டிய தேவை ஏன் வந்தது என்று பார்ப்பதும் முக்கியம் “சாதியற்ற தமிழர்” என்று சொன்னவர் “சாதியற்ற திராவிடர்” என்று மாற்றிக்கொள்ள காரணம் என்ன என்று ஆராய்ந்தோம் என்றால். இன்றைய காலகட்டம் போல் ஒடுக்கப்பட்ட மக்களை அன்று தமிழர்களாக பார்த்தது இல்லை சாதி இந்துக்கள், பார்ப்பனரல்லோதோர் என்று ஒன்றிணைந்தாலும் சரி, பொதுவுடமைக் கொள்கையை ஏற்றுக் கொண்டவர்களாக இருந்தாலும் சரி, ஒடுக்கபப்ட்ட மக்களை தமிழர்களாக ஏற்றுக் கொள்ளவில்லை ஏன் மனிதர்களாகக் கூட மதித்ததில்லை என்பதை சமீபத்திய பரமக்குடி படுகொலைகள் வரையிலான வரலாறுகளை படித்தோம் என்றால் நாம் அறிந்து கொள்ளலாம்.<br />
<br />
இந்திய தொழிற்சங்க வரலாற்றில் மிகப்பெரும் முன்னோடியாக திகழ்பவர் தோழர் திரு.வி.க அவர்கள் 1921ம் ஆண்டு பின்னி ஆலையில் கூலி உயர்வு உட்பட பல நிபந்தனைகளின் கீழ் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறுகிறது. அதில் ஒடுக்கப்பட்ட மக்கள் இணைந்து கொள்ளவில்லை. அப்பொழுது ஒடுக்கப்பட்ட மக்கள் வேலைக்கு செல்வதை தடுக்க முயன்ற தொழிற்சங்கத்தினரை அடக்க நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் சிலர் மரணமடைகின்றனர். இதனால் ஏற்பட்ட துவேசம் சாதியக் கலவரமாக மாறி ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்ந்த புளியந்தோப்பு பகுதியில் 100 குடிசைகளை எரித்தனர் தொழிற்சங்கத்தை சேர்ந்த சாதிய இந்துக்கள். இதில் ஒடுக்கப்பட்ட மக்களில் சிலரும் மரணமடைந்தனர். இதற்கு எதிர்வினையாக புளியந்தோப்பில் இருந்து மக்கள் கிளம்பி பார்ப்பனரல்லாதார் வாழ்ந்த பெரம்பூர் பகுதியில் தாக்குதல் நடத்தினர். பின்னர் புளியந்தோப்பு மக்கள் கலவரத்தை அடக்கும் நோக்குடன் அங்கிருந்து அகற்றபப்ட்ட முகாம்களில் தங்க வைக்கபப்ட்டனர். இந்த கலவரத்தை தொழிற்சங்கவாதியும் நவசக்தி இதழின் ஆசிரியருமான திரு.வி.க எழுதும் பொழுது “ஹரிஜனங்கள் தமிழர்களை சாரி சாரியாக வந்து தாக்கினர்” என்று குறிப்பிடுகிறார். <br />
<br />
இதன் பொருள் ஹரிஜனங்கள் எனப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களை ஒரு மாபெரும் தொழிற்சங்கவாதியே தமிழ்ர்களாக பார்க்காமல் ஒதுக்கி வைத்தனர். இந்து தர்மம் இவர்களை பஞ்சமர்கள் என்று கூறி ஒதுக்கியது என்றால் சக தமிழினத்தை சேர்ந்தவர்கள் இவர்களை தமிழர்களாக பார்க்காமல் ஒதுக்கி வைத்தனர். இந்த நிலையே சாதியற்றவர்கள் என்றும் தாங்கள் இந்துக்கள் இல்லை என்றும் மேலும் சாதியற்ற திராவிடர்கள் என்றும் ஆதி திராவிடர்கள் என்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள காரணமாக அமைந்தது. <br />
<br />
இன்று தோழ்ர் மணியரசன் போர்ன்றவர்கள் தமிழ்தேசியம் என்ற பெயரில் தமிழர் பெருமை என்று கூறி திராவிடத்தில் ஒரு சிலர் செய்த பிரச்சனையை பெரிது படுத்தி ஒட்டுமொத்தமாக திராவிடம் என்ற வார்த்தையையும் வடுகர்கள் என்ற இனத்தையும் தமிழர்களுக்கு எதிராக சித்தரிப்பது தான் நடந்து கொண்டுள்ளது. தமிழ் தேசியம் தமிழின விடுதலை என்று பேசும் பொழுது அந்த விடுதலை எவ்வாறு அமையவேண்டும் என்று பார்த்தோம் என்றால் நம் வரலாற்றினை நன்றாக புரிந்துகொண்டு யாருக்கும் கெடுதி நினைக்காத அனைவரையும் அரவணைத்துச் செல்லும் அரசியலே சரியான பாதையாக இருக்கும். முன்னெப்பொழுதும் இல்லாத நிலையில் இன்று திராவிடத்தின் தேவை அதிகமாகவே இருக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களின் அடையாளமாக் அயோத்திதாச பண்டிதர் அவர்களால் முன்னெடுக்கபப்ட்டு, நடேசன் அவர்களால் பார்ப்பனரல்லோதருக்காக என்று அடுத்த அடிக்கு நகர்த்தப்பட்டு, பெரியாரால் அனைவருக்கும் பொதுவான சொல்லாக எந்த கீழ்மையும் மேன்மையும் இல்லாத ஒடுக்கப்பட்ட மக்களின் போர்க் குரலாக ஒலித்துக் கொண்டிருக்கும் திராவிடம் இல்லாத பெருமை பேசும் தமிழ் தேசியம் தமிழக்த்தில் தமிழரல்லாதோரின் மீதான இனப்படுகொலைக்கே வழிவகுக்கும். தமிழ் தேசியம் என்பது திராவிடத்தை ஒதுக்கிவிட்டு முன்செல்வது என்பது பாசிசமே.<br />
<br />
தோழர் மணியரசன் அயோத்தி தாசர் குறித்த வாதத்தில் வரலாற்றை திரித்து பகிர்ந்த அவதூற்றை இங்கே வரலாற்றுடன் இணைந்து பார்த்தோம். இதன் பிறகு தோழர் மணியரசன் திராவிடம் என்ற வார்த்தை ஆரியன் மட்டுமே பயன்படுத்தியது அதனால் அதை மறுக்கிறோம் என்று கூறினார், மேலும் திராவிடம் என்பது தமிழனை ஊனமாக்கியது என்றார். இது கடைந்தெத்த பொய் வரலாற்றை மறைக்கும் செயல். திராவிடம் என்ற வார்த்தை தமிழ்ச் சமூகத்தில் பன்னெடுங்காலமாக உபயோகத்தில் இருக்கும் வார்த்தையே. கிபி 7ம் நூற்றாண்டிற்கு பிறகு தமிழில் பக்தி இலக்கியங்கள் கோலோச்சிய காலம் இந்த காலகட்டங்களின் தான் சைவ, வைணவத் திருமுறைகள் தமிழ்ச் சமூகத்தில் பெரும் அளவில் இயற்றப்பட்டது. இதே காலகட்டம் தான் தோழர் மணியரசன் குறிப்பிட்ட ஆதிசங்கரர் இயற்றிய செளந்தர்யலஹரியின் காலகட்டமும், இதை திரித்து 2000 ஆண்டுகளுக்கு முன்பாகவே ஆதிசங்கரர் வாழ்ந்தார் என்பது ஆரியத்தின் புரட்டு. ஆதிசங்கரர் திராவிட சிசு என்று திருஞானசம்பந்தரை குறிப்பிட்டார் என்றால் திருஞானசம்பந்தர் வாழ்ந்த காலம் என்பது கிபி ஏழாம் நூற்றாண்டே. திருஞான சம்பந்தரால் குணமாக்கப்பட்ட கூன் பாண்டியன் என்ற அரிகேசரி பாண்டியன் ஆண்ட காலம் கிபி 640 முதல் கிபி 670 வரை. இந்த காலத்தில் வாழ்ந்த திருஞான்சம்பந்தரைப் பற்றி ஆதிசங்கரர் செளந்தர்ய லஹரியில் குறிப்பிடுகிறார் என்றால் ஆதிசங்கரர் வாழ்ந்த காலமும் 7ம் நூற்றாண்டே, ஆதிசங்கரர் 2000 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்தவர் என்பது ஆரியப் புரட்டு இந்த ஆரியப்புரட்டைப் போலவே அய்யா மணியரசன் அவர்கள் திராவிடம் என்ற வார்த்தை ஆரியர்கள் மட்டும் பயன்படுத்தியது என்கிறார்.<br />
<br />
அதற்கு ஆதாரமாக ராகுல் திராவிட், மணி திராவிட் என்று இருவரின் பெயரை காட்டுகிறார், மேலும் பார்ப்பனர்களில் இருக்கும் சாதிய வேறுபாடான வட இந்திய பார்ப்பனரையும் தென்னிந்திய பார்ப்பனரை பிரிக்கும் சொல்லான பஞ்ச திராவிட என்பதையும் சுட்டிக் காட்டுகிறார். எல்லம சரி ஆனால் ராகுல் திராவிட் என்று இல்லை வெறும் திராவிட் என்று கூட பெயர் வைத்திருக்கலாம் ஒரு பார்ப்பனன். ஆனால் அவன் என்ன இனத்தவனாக தன்னை உணருகிறான் என்பது தான் பிரச்சனை. ராகுல் திராவிட்டிடமும் மணி திராவிட்டிடமும் ஏன் இந்த் பஞ்ச திராவிட இனத்தில் பிறந்த ஒவ்வொரு பார்ப்பனரிடமும் அவர்கள் என்ன இனம் என்று கேட்டால் தன்னை ஆரியன் என்றே விளித்துக் கொள்வான். இதன் கீழாகவே திராவிடன் என்று கூறும் பொழுது தமிழனுடன் இணைய மாட்டான் என்பதை கொண்டே திராவிடம் என்ற வார்த்தை தமிழின மீட்சியின் அரசியலுக்காக பயன்படுத்தப்படுகிறது.<br />
<br />
இதை அறியாமல் இல்லை தோழர் மணியரசன் அவருக்கு நன்றாகவே தெரியும் தமிழ் என்பது மொழியையும் தமிழர் என்பது அவர்களின் மொழி, வாழும் இடம் மற்றும் பண்பாட்டை சார்ந்து குறிக்கப்படும் பெயர் என்பது. அதாவது தமிழர் என்பது பண்பாட்டு சொல், திராவிடம் என்பது அரசியல் சொல். இதை நன்றாக அறிந்து இருந்தாலும் தோழர் மணியரசன் இதை மறைத்துவிட்டு திராவிடம் என்பது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் நான்கையும் உள்ளடக்குவதே என்ற நோக்குடன் பேசி வருகிறார். ஆனால் பெரியார் தான் வாழ்ந்த காலத்திலேயே இதை உள்ளடக்கி பேசியது இல்லை. ஏன் தேவநேயப்பாவணர் தமிழ் என்பதை வடமொழியினர் தங்களின் மொழியில் திரமிளம் என்றும் திராவிடம் என்று குறித்துள்ளனர் என்பதை விளக்கியுள்ளார்.<br />
<br />
“வடநாட்டு ஆரிய நூல்களில் திராவிடம் என்னும் சொல் முதலாவது திரமிளம் என்றே வழங்கி வந்தது. ழகரம் வடமொழியில் இல்லை. சில உயிர்மெய் முதல்களை ரகரஞ் சேர்த்து த்ர, ப்ர எனப் புணர் எழுத்துக்களாகத் திரிப்பது வடநூலார் வழக்கம் எ.டு : படி - ப்ரதி, பவளம் - ப்ரவளம், இதனால் தமிழம் என்னுஞ் சொல் த்ரமிளம் எனத் திரிந்தது இயல்பே. பின்பு அது நாளடைவில் த்ரமிடம், த்ரவிடம் எனத்திரிந்தது. ள-ட, ம, வ போலி, திரவிடம் என்பது மெய்ம் முதலாதலின் தமிழில் திராவிடம் என்றாகிப் பின்பு திராவிடம் என நீண்டு வழங்குகின்றது. எனத் தமிழம் என்பதே த்ரமிளம் - திராவிடம் எனத் திரிந்ததாக” குறிப்பார். {திராவிடத் தாய், தேவநேயப் பாவாணர், பக். - 8}<br />
<br />
இதில் தமிழைக் குறிக்க தான் திராவிடம் என்ற வார்த்தை உபயோகிக்கப்பட்டது என்பதை தெள்ளத் தெளிவாக தெரிகிறது. இதை விடுத்து திராவிடத்தில் நான்கு மொழி அடக்கம் அஞ்சு மொழி அடக்கும் என்பதோடு பெரியார் தமிழுக்காக போராடவில்லை என்று புருடாவிடுகின்றனர். சரி 1705ம் ஆண்டு பிறந்து 1742ல் மறைந்த தாயுமானவர் சாமிகள் திராவிடம் என்ற வார்த்தையை தனது பாடல்களில் உபயோகிக்கிறார். இவருக்கும் கால்டுவெல்லுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை கால்டுவெல் 1850களில் தான் வருகிறார், அதாவது ஒரு நூற்றாண்டு கழித்தே கால்டுவெல் வருகிறார். தாயுமானவர் தனது பாடலில் திராவிடம் என்ற சொல்லை தமிழுக்கு நிகராகவே பயன்படுத்துகிறார்.<br />
<br />
கல்லாத பேர்களே நல்லவர்க ணல்லவர்கள் ;<br />
கற்றுமறி வில்லாதவென்<br />
கர்மத்தை என்சொல்கேன் ? மதியையென் சொல்லுகேன் ?<br />
கைவல்ய ஞான நீதி<br />
நல்லோ ருரைக்கிலோ கர்மமுக் கியமென்று<br />
நாட்டுவேன் ; கர்மமொருவன்<br />
நாட்டினா லோபழைய ஞானமுக் கியமென்று<br />
நவிலுவேன் ; வடமொழியிலே<br />
வல்லா னொருத்தன்வர வுந்த்ரா விடத்திலே<br />
வந்ததா விவகரிப்பேன் ;<br />
வல்லதமி ழறிஞர்வரி னங்ஙனே வடமொழியின்<br />
வசனங்கள் சிறிதுபுகல்வேன் ;<br />
வெல்லாம லெவரையு மருட்டிவிட வகைவந்த<br />
வித்தையென் முத்திதருமோ ?<br />
வேதாந்த சித்தாந்த சமரசநன் னிலைபெற்ற<br />
வித்தக சித்தர்கணமே!<br />
- சித்தர்கணம்<br />
<br />
இதில் தெளிவாகவே குறிப்பிட்டுள்ளார், “வடமொழியிலே வல்லா னொருத்தன்வர வுந்த்ரா விடத்திலே வந்ததா விவகரிப்பேன்” என்று வடமொழியில் வல்லவன் ஒருவன் வருவான் என்றால், தமிழிலே சிறப்பு அதற்கு முன்பே வந்துவிட்டது என்பேன் என்கிறார். இதிலிருந்து நமக்கு தெளிவாகத் தெரிவது திராவிடம் என்ற வார்த்தை கால்டுவெல்லோ, இல்லை அயோத்திதாச பண்டிதரோ, இல்லை பெரியாரோ கண்டுபிடித்தது இல்லை. திராவிடம் என்பது பரவலாக தமிழைக் குறிக்க அனைவராலும் பயன்படுத்தப் பட்ட வார்த்தையே, இந்த வார்த்தையை தெலுங்கிற்கும், கன்னடத்திற்கும் ஏன் மலையாளத்திற்கும் தாரை வார்க்கும் முயற்சியையே இன்றை தமிழ்தேசியர்கள் செய்து வருகின்றனர். பெரியாரும் திராவிடம் என்ற வார்த்தையை தமிழுக்கு நிகராகவே உபயோகித்தார் என்றும் ஆந்திரர்கள், கர்நாடகத்தவர்கள், மலையாளிகள் மீது நன் மதிப்பையோ கொண்டிருந்தவர் இல்லை.<br />
<br />
மேலும் இங்கு பொத்தம் பொதுவான சென்னை மாகாணம் என்பது ஆந்திரா, கேரளம், கர்நாடகம் என்று அனைத்தும் இணைந்து இருந்ததாக ஒரு கருத்தாக்கத்தை உருவாக்குகிறார்கள், இது முற்றிலும் பொய். ஆந்திரத்தின் ஒரு பகுதியும் கர்நாடகத்தின் ஒரு சில பகுதிகளும், கேரளத்தின் ஒரு சில பகுதிகளுமே சென்னை மாகாணத்தில் இருந்தது. ஆனால் அதே சமயத்தில் பங்கனப்பள்ளி சமஸ்தானம், கொச்சி சமஸ்தானம், திருவிதாங்கூர் சமஸ்தானம், மைசூர் சமஸ்தான் தனித்தே இயங்கி வந்தன. இவர்களுக்கு என்று தனி காவல் மற்றும் நீதித் துறை இருந்தது என்பதை வரலாற்றை படித்தவர்கள் நன்கு உணர்வார்கள். ஆங்கிலேயர் தங்கள் நிர்வாக வசதிக்காக பிரிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றாகவே சென்னை மாகாணம் இருந்தது இதில் ஒரு கணக்கெடுப்பில் சென்னை மாகாணத்தில் வாழந்த மக்கள் தொகை 4,93,410 பேர் இது 1941ம் ஆண்டு கணகெடுப்பு. 17.9.1954ல் பெரியார் தனது பிறந்த நாள் அறிக்கையில் சென்னை மாகாணத்தில் வாழும் பிறமொழியினர் என்ற தகவலில் குறிப்பிடுகிறார் மலையாளிகள் 8 சதவீதம், கர்நாடகர்கள் 5ம் சதவீதமும் இதைத் தவிர கிருத்துவர்கள் 4 சதவீதமும், முஸ்லீம்கள் 5 சதவீதமும் என்கிறார். இதில் கிருத்துவர்களில் எத்தனை பேர் தமிழர்கள் எத்தனை பேர் மலையாளிகள் என்ற தெளிவான கணக்கு இல்லாமல் இருந்து இருக்கலாம். சென்னை மாகணத்தில் அதுவும் ஆந்திரா பிரிந்து சென்ற பிறகு சொல்லப்படும் கணக்கு இது ஆந்திரர்கள் இருந்திருந்தாலும் அவர்கள் ஒரு 10 சதவீதம் என்று எடுத்துக் கொண்டாலும் மலையாளி, கர்நாடகர், மற்றும் ஆந்திரர் சேர்த்து 23சதவீதமே. பெரியாரின் கருத்தியல் என்பது தனிமனிதனின் சுயமரியாதையும் அவர்களின் முன்னேற்றமே இதை 1925ல் குடியரசு இதழ் ஆரம்பித்து முதல் பத்திரிக்கையின் தலையங்கத்தில் தெளிவாகவே குறிப்பிட்டு இருக்கிறார். <br />
<br />
“எமது பத்திரிக்கையின் நோக்கத்தையறிய விரும்புவார்க்கு நமது தாய்நாடு அரசியல், பொருளியல், சமூகவியல், ஒழுக்கவியல் முதலிய எல்லாத் துறைகளிலும் மேன்மையுற்று விளங்கச் செய்வதேயாகும் எனக் கூறுவோம். நமது நாட்டு மக்களின் உடல் வளர்ச்சிக்காகவும் அறிவு வளர்ச்சிக்காகவும், மொழி வளர்ச்சிக்காகவும், கலை வளர்ச்சிக்காகவும், சமய வளர்ச்சிக்காகவும் இதன் வாயிலாக இடையறாது உழைத்து வருவோம்.<br />
<br />
ஆயிரக்கணக்காக பொருள் செலவிட்டு கட்டிய......... அஸ்திவாரம் பலமில்லாவிடில் இடிந்து விழுந்து அழிந்து போவதேபோல், ஒரு தேசத்தின் அடிப்படைகளாகிய தனி மனிதன், குடும்பம், பல குடும்பங்கள் சேர்ந்த ஒரு வகுப்பு, பல வகுப்புக்களாலாகிய கிராமம் ஆகிய இவைகள் எல்லாத் துறைகளிலும் மேன்மையுறாவிடின் அத்தேசம் ஒருநாளும் முன்னேற்றமடையாது. ஆகையினால், நமது தேசம் சுதந்திரம் பெற்று எல்லாத் துறைகளிலும் மேன்மையுற்று விளங்கவேண்டுமாயின் நமது நாட்டிலுள்ள ஒவ்வொரு தனிமனிதனும் தனது அறிவையும், ஆற்றலையும் பெருக்கிக் கொள்ளுதல் வேண்டும்; ஒவ்வொரு தனிக் குடும்பமும் நன்நிலையடைய வேண்டும்; ஒவ்வொரு வகுப்பினரும் முன்னேற்றமடைதல் வேண்டும்; ஒவ்வொரு கிராமமும் பிற கிராமங்களினுடையவோ, நகரங்களினுடையவோ, நாடுகளினுடையவோ உதவியை எந்நாளும் எதிர்பார்த்து நிற்காத வண்ணம் ஒவ்வொரு துறையிலும் முன்னேற்றமெய்தி தனித்தியங்கும் பெருமையை அடைதல் வேண்டும். அடிப்படைகளான இவைகளை அறவேவிடுத்து வெறும் தேசம், தேசம் என்று கூக்குரல் இடுவது எமது பத்திரிக்கையின் நோக்கமன்று. ஆகவே, இவ்வடிப்படைகளின் வளர்ச்சிக்கான முறைகளில் இடையறாது உழைத்து வருவதே எமது கொள்கையாகும்.” - குடியரசு - தலையங்கம் - 02/05/1925<br />
<br />
மேலே இருக்கும் பதிவே பெரியாரின் நோக்கம் என்ன என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் தேசம், தேசியம் என்பவைகள் கற்பிதமே என்பதை மிகச் சரியாக உணர்ந்தவர் பெரியார். தன் சமூக மக்களின் முன்னேற்றத்தை விரும்பியவர் என்பதும் தெளிவாக தெரிகிறது. இதே தலையங்கத்தில் இன்னொரு பத்தியில் <br />
<br />
“ஒரு சிறு பத்திரிகையையேனும் செவ்வனே நடாத்தும் ஆற்றல் ஒரு சிறிதும் எமக்கில்லை என்பதை நன்குணர்வோம். பேரறிவும், பேராற்றலும், விரிந்த கல்வியும், பரந்த அனுபவமும் உடையவர்களே இத்தொண்டினை நடத்தற்குறியார். இவ்வருங்குணங்கள் எம்பால் இல்லாமல் இருந்தும் ‘என்கடன் பதிசெய்து கிடப்பதே’ என்ற பெரியார் வாக்கை கடை பிடித்தே ......................... வலிமையால் இப்பத்திரிக்கை நீண்டகாலம் இத்தமிழுலகில் நிலவித் தேசத்தொண்டு ஆற்றி வரும் என்னும் நம்பிக்கையும், உறுதியும் பெரிதுமுடையோம்.” - குடியரசு - தலையங்கம் - 02/05/1925<br />
<br />
என்று குறிப்பிடுகிறார் அதாவது 23 சதவீத வேற்று மொழிக்காரர்களை விட 77 சதவீதம் வாழ்ந்த சென்னை மாகணத்தில் இருந்த தமிழர்களை குறிப்பிட்டு இது தமிழுழகம் என்றே குறிப்பிடுகிறார். இதையெல்லாம் மறைத்துவிட்டு பெரியார் திராவிடம் என்ற பெயரை தெலுங்கர், கன்னடர், மலையாளிகளை இணைத்தே குறிப்பிட்டார் என்று இங்கே கட்டுக் கதைகள் பரப்புகின்றனர் சிலர். பெரியாரின் ஆந்திரர் குறித்த பார்வை. <br />
<br />
“இது அரசியல் போராட்டமல்ல, இனப்போராட்டம், மனிதத் தன்மைப் பாதுகாப்புப் போராட்டம், தென்னாட்டவரின் மனிதத் தன்மையை அழித்து ஆரியவர்க்கத்தோடு சேர்த்துக் கொள்ளச் செய்யப்படும் சூழ்ச்சியின் முதல்படி தான் கட்டாய இந்தி நுழைப்பு. ஆகவே நாம் இதை எதிர்த்துத்தான் ஆகவேண்டும். ஒரு வேளை ஆந்திரர்கள் ஆரியவர்க்கத்தில் சேர்ந்துவிடுவார்களோ என்று கூட நினைக்க வேண்டியிருக்கிறது. எவ்வகையானும் இதை எதிர்த்து போராடியே தீருவோம். இப்போராட்டம் தென்னாட்டுச் சரித்திரத்தில் திராவிட நாட்டுச் சரித்திரத்தில் பொன்னெழுத்துகளில்ல் பொறிக்கப்பட வேண்டிய மகோன்னதப் போராட்டம். இப்போராட்டத்தில் வெற்றியின்றேல் தமிழ்நாடு போம். தமிழ்க்கொடி போம், தமிழன் சிறப்பெல்லாம் தகர்ந்துபோம். நியாயம் நமது பக்கத்தில் தான் இருக்கிறது. தமிழ்காக்க வாரீர்! எங்களுக்கு வயதாகிவிட்டது! நாங்களும் வெற்றிகாண ஆசைப்படுகிறோம். ஆகவே தன்மானத் திராவிடர்களா! தமிழர்காள்! வெற்றிக்காணப் போராட்டத்தில் ஈடுபட வாருங்கள். சாவேன் அல்லது வெற்றியோடு மீள்வேன் என்ற உறுதியோடு முன்வாருங்கள்.” <br />
<br />
என்று குறிப்பிடுகிறார் இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் பொழுது அடுத்து மலையாளிகளை பற்றி நிறையவே எழுதியும் பேசியும் இருக்கிறார் அதில் 1954ம் ஆண்டு தனது பிறந்த நாள் அறிக்கையில் “மலையாளிகளின் தொல்லையே பெருந்தொல்லையாகும்” என்று கூறுகிறார்<br />
<br />
“குறிப்பாகக் கூறவேண்டுமேயானால் மலையாளிகளின் தொல்லையே மாபெரும் தொல்லையாகும். அவர்கள் பெரும்பாலும் ஆரியக்கலாச்சாரத்தையும், ஆரிய மொழியையும்;, ஆரிய வர்ணச்சிரம தர்மத்தையும் ஆதரிக்கிறவர்கள், ஆனதனால் வகுப்புவாரி உரிமையில் மலையாளிகளை பார்ப்பனரல்லாத இந்துக்கள் என்கின்ற பிரிவில் பார்ப்பனர்கள் சேர்த்துக்கொண்டு, பார்ப்பனரல்லாதார் என்கிற கணக்கில் ஏராளமான மலையாளுக்கு கொடுப்பதையே - அவர்கள் தாராளமாக வந்து புவதையே பார்ப்பனர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். அனுமதிக்கிறார்கள். அதன் காரணத்தால் ஏறக்குறைய பார்ப்பனரில்லாத பெரும் பதவிகளிலும் மாலையாளிகளே அமர்த்தப்பட்டிருக்கிறார்கள்.”<br />
<br />
இதில் தெளிவாகவே மலையாளிகளை பற்றிய தன் நிலைப்பாட்டை பெரியார் கூறியுள்ளார் அவர்களை எங்கும் திராவிடர்கள் என்று குறிப்பிடவில்லை. இதைத் தவிர தட்சிணப்பிரதேசம் அமைக்கும் திட்டத்திற்கு எதிராக வேலூரில் 29.1.1956ம் தேதி பொதுக் கூட்டத்தில் பேசிய பொழுது மலையாளிகளின் சூழ்ச்சி தான் தட்சிணப்பிரதேச திட்டம் என்பதையும் விளக்கி மலையாளிகளை சுயமரியாதையோ, சுதந்திர புத்தியோ இல்லாதவர்கள் என்றும் அவர்கள் உத்யோகத்தில் அடிக்கும் கொள்ளை, பார்ப்பான் - மலையாளி உறவின் கீழாக தமிழர்களுக்கு இழைத்தத் துரோகத்தனைத்தையும் விளக்கி இருப்பார். ஆனால் திராவிடம் என்றால் தெலுங்கர், கன்னடர், மலையாளி உட்பட என்று தொடர்ந்து கட்டுக்கதைகள் அமைத்து வருகிறார்கள் அந்த வேலையை பெரியாரை படித்த தோழர் மணியரசனும் செய்கிறார், பாவம் அவர் சார்ந்து நிற்கும் பார்ப்பனிய தமிழ்தேசியம் இவ்வாறு அவரை செய்ய வைக்கிறது போலும்.<br />
<br />
இப்படி ஆரியச் சார்புடைய தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்றவர்களை அவர் என்றும் கண்டுகொண்டதில்லை தமிழை ஆரியத்திடம் இருந்து மீட்டெடுக்க வேண்டும் என்ற உறுதியுடனே செயல்பட்டார். 1900 ஆரம்பங்களில் தமிழ் மொழி என்பது மணிபிரளாவ நடைமொழியில் முழுவதுமாக கலப்புற்று வடமொழி வார்த்தைகளுடனே பயின்று வந்தது அதை மாற்றவே தனி தமிழ் இயக்கம் காணப்பட்டது, மறைமலை அடிகள் மிகப்பெரும் வேலைகள் செய்தார், அவருடன் இணைந்து பெரியாரும் நின்றார். விடுதலை, குடியரசு போன்ற இதழ்களே மறைமலையடிகளின் மாற்றங்களை முன்னின்று செயல்படுத்தியவை. இப்படி தமிழுக்கும் தமிழருக்கும் என்றே இருந்த பெரியாரின் திராவிட இயக்கத்தை போகிற போக்கில் தமிழை ஊணமாக்கியது என்கிறார் தோழர் மணியரசன். பார்ப்பனரல்லாதவர்கள் கட்சி என்ற சொல்லி நீதிகட்சி போராடிய பொழுது அவர்களையும் விட்டுவைக்கவில்லை பெரியார். திராவிடம் என்று தன் இயக்கத்திற்கு பெயர் சூட்டியதற்கான காரணத்தை விளக்கும் இடத்தில் அதைத் தெளிவாக குறிப்பிடுகிறார்.<br />
<br />
“நாம் இந்தியர் என்பதை மறுக்கிற படியாலும், இன உணர்ச்சியும், எழுச்சியும் பெற வேண்டுவதாலும் ‘திராவிடர்’ எனும் பெயரைக் கொண்டோம். இது புதிதாக உண்டாக்கியதல்ல மறந்ததை நினைத்துக் கொண்டதேயாகும். நம்மை குறிக்க பார்ப்பனரல்லாதார் என்கிறோம். அல்லாதார் என்பதைச் சேர்த்துக்கொள்ள நாம் என்ன நாடோடிகளா? நான் ஏன் அல்லாதார் ஆக வேண்டும்...<br />
<br />
...மேலும் நமக்குத் ‘திராவிடர்’ என்பது பெயரல்லவானால் வேறு எதுதான் பெர்யராகும்? பார்ப்பனர் அல்லாதார் என்பதா? பார்ப்பனர் அல்லாதார் எனக் கூறிக்கொள்ளும் ஜஸ்டிஸ்கட்சிக் காரர்கள் எந்த வகையில் பார்ப்பனர்களிடமிருந்து வேறுபடுகின்றனர்? நடை, உடை, பாவனைகளில், மதத்துறையில், வேஷத்தில், பார்ப்பனரைவிட இரண்டுமடங்காகவல்லவா இருக்கின்றார்கள்!...<br />
<br />
திராவிடர் என்ற பெயருக்கு ஆதாரம் தேட வேண்டிய அவசியம் இல்லை. முதல் வகுப்புச் சரித்திரப் பாடம் முதல், பெரிய வரலாறுகள் வரையில் எல்லா நூல்களிலும் இதற்கு ஆதாரம் இருக்கிறது. கலாச்சாரங்களிலும் பல ஆதாரங்கள் இருக்கின்றன” கோ-வேள்நம்பி, தமிழனை உயர்த்திய தலைமகன், பக்கம் - 21<br />
<br />
இதில் மிகவும் தெளிவாகவே குறிப்பிடுகிறார் திராவிடம் என்பது பலராலும் அன்றை காலகட்டத்தில் உபயோகிக்கப்பட்டு வரலாற்று சான்றுகளுடன் இருப்பதாலேயே அந்த வார்த்தையை உபயோகிக்கிறார், மேலும் பார்ப்பனரல்லாதார் பெரும்பான்மை மக்களுக்கு சேவை செய்ய வந்தவர்கள் என்று சொல்லிக் கொண்ட நீதி கட்சியினரின் நடை, உடை பாவனைகளை போட்டு கிழித்தெறிகிறார். பார்ப்பனர்களின் பழக்கவழக்கத்தை முழுமையாக ஏற்றுக் கொண்ட சமூகமாகவே அன்றை தமிழ்ச் சமூகம் இருந்து இருக்கிறது இதை உடைத்து தமிழ் பண்பாட்டையும் தமிழரையும் மீட்டு எடுத்தது பெரியாரின் திராவிடக் கொள்கையே அன்றி வேறெதுவும் இல்லை. ஆனால் ஆரியக் கொள்கையை ஏற்றுக் கொண்ட தெலுங்கும், கன்னடமும், மலையாளமும் மொத்தமாக வடமொழி தாக்கத்திற்குள் உள்ளாகி நிற்கிறது. தமிழ் தனித்து இயங்கிக் கொண்டு இருக்கிறது, இதில் மணிப்பிரளாவ மொழியின் தாக்கத்தை தோழர் மணியரசன் மறுக்கவும் முடியாது. இப்படி அத்தனை வகையிலும் தமிழுக்கு உதவிய திராவிடத்தை யாரோ இருவர் திராவிட் என்று பெயர் வைத்ததனால் நொள்ளை நொட்டை என்கிறார்.<br />
<br />
கடைசியாக பெரியார் ஆங்கிலத்தையே தூக்கி பிடித்தார் என்கின்றார், பெரியார் மொழி குறித்தும் அதன் பயன்பாடு குறித்தும் பேசியதையும் மறந்துவிட்டார். 1965க்கு முன்பாக இந்தி திணிப்பிற்கு எதிராக போராட்டங்கள் நடந்தது அப்பொழுது பெரியார் சொன்னதையும் மறந்துவிட்டார்.<br />
<br />
‘வட நாட்டு ஆதிக்கமும் வடமொழி மோகமும் குறையக் குறைய ஆந்திரர்களும், மலையாளிகளும், கன்னடியர்களும் தம் தாய்மொழி தமிழ்தான் என்பதைக் கொஞ்சம் கொஞ்சமாக உணர்ந்து கொள்வார்கள் என்பதில் எனக்குத் திடமான நம்பிக்கையுண்டு. அந்தந்த மொழி வல்லுனர்கள், பண்டிதர்கள் சிலர் இன்று ஓரளவு இந்த உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார்கள் என்பது நமக்கு மேலும் நம் கருத்துக்கு வலிமை ஊட்டுகிறது. இத் தமிழ் மொழியின் வளர்ச்சிக்குப் புத்துயிர் அளித்த ஒரு பெரிய இயக்கத்தை நான் நடத்தினேன். அதாவது தமிழ் மொழி தாய் மொழியாக உள்ள இந்நாட்டில், இந்தியைப் புகுத்தக் கூடாது என்ற கிளர்ச்சி செய்தேன்’.<br />
<br />
தெளிவாக கூறுகிறார் சென்னை மாகாணம் என்பது தமிழைத் தாய்மொழியாக கொண்டவர்கள் வாழும் இடம் என்று. மேலும் தமிழை மீட்டெடுக்கவே போராடினேன் என்பதை தெளிவாக கூறுகிறார். மேலும் ஆங்கிலத்தை படிக்க வேண்டிய தேவையை<br />
<br />
1. ஒருவன் ஆங்கில மொழியை சுலபமாகக் கற்றுக்கொள்ள முடியும்.<br />
2. ஆங்கில மொழியை அறிந்தவன் உலகத்தின் எந்தக் கோடிக்கும் சென்று அறிவைப் பெற்றுத் திரும்ப இயலும்.<br />
3. ஆங்கில மொழியானது அறிவைத் தூண்டும் உணர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறதே தவிர, அது சுதந்தரமாகச் சிந்திக்கின்ற தன்மைக்கு விலங்கிட்டதாக ஒருபோதும் கிடையாது.<br />
<br />
(பெரியார் ஈவெரா சிந்தனைகள், வே.ஆனைமுத்து, தொகுதி 3, அரசியல் 2, பக். 1762)<br />
<br />
ஆங்கிலத்தை அவர் ஏற்றுக் கொண்டது என்பது தமிழ் மொழியை அழிக்க என்பது போல் கதைகட்டுவது தான் இங்கு நடக்கிறது. அவரின் தமிழ், தமிழர் மீதான கவலை மேலே இருக்கும் பதிவுகளில் நன்றாக தெரியும், தன் பொது வாழ்வில் அவர் என்று தமிழ் மக்களுடனின் மேன்மையை குறித்தே சிந்தித்து வந்துள்ளார் என்பதும் புரியும். அவர் வீட்டு வேலைக்காரியுடன் தமிழில் பேசச் சொன்னார் என்பதால் அவர் தமிழை அழிக்க நினைத்தார் என்று கூறுகிறார்கள். பெரியார் காலத்தில் ஊடகங்கள் என்பது இன்று இருபப்து போல் இருந்தது கிடையாது, அதனாலே தனது கருத்துகளை நகைச்சுவையாகவும் கிண்டலாகவும் பேசுவதை வழக்கமாக கொண்டிருந்தார். அதை கேட்டுவிட்டு செல்லும் ஒருவன் அடுத்தவனுக்கு எடுத்துக் கூறும் பொழுது அந்த நகைச்சுவையில் மேலும் மெருகேற்றி சொல்வார், இதனால் வெகு வேகமாக கருத்துக்கள் பரவும் என்ற நோக்கிலேயே அவர் செய்து வந்திருக்கலாம். இதே போன்று தான் வேலைக்காரியுடனும் தமிழில் பேசுங்கள் என்று சொன்னது அன்றைய காலகட்டத்தில் மட்டும் அல்ல இன்று வரை தனது வீட்டில் எத்தனை தமிழன் வேலைக்காரி வைக்கும் நிலையில் இருக்கிறார் என்பதை ஆராய்நதாலே புரியும். ஆங்கிலத்தை படிக்க வேண்டிய தேவையை உணர்த்துவதற்கு கூறினாரே ஒழிய தமிழை அழிக்கும் நோக்கத்துடன் கூறினார் என்பது எல்லாம் மொள்ளமாறித்தனம். <br />
<br />
அப்படி தமிழை அழிப்பது தான் அவருடைய நோக்கமாக இருந்தால் 11/9/1938ம் ஆண்டு திருவல்லிக் கேணி கடற்கரையில் நாவலர் சோசுந்தர பாரதி, மறைமலை அடிகள் போன்றோரை அழைத்து நடத்திய கூட்டத்திலேயே தமிழ்நாடு தமிழருக்கே என்ற முழக்கம் வைக்கப்பட்டது. அதற்கு முன்பாக அஞ்சா நெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி பெரியாரின் பெருந்தொண்டர் திருச்சி உறையூரிலில் இருந்து கால்நடையாக இந்தி திணிப்பை எதிர்த்து அமைதியாக சென்னை வரை ஊர்வலமாக நடந்து வந்து இராஜியின் வீட்டை முற்றுகை இட்டனர். இந்த முற்றுகைகாக சென்னை வரை நடந்து வந்த தோழர்களை வரவேற்கவே திருவல்லிக் கேணி கடற்கரையில் கூட்டம் கூட்டினார். அதிலே தான் “தமிழ்நாடு தமிழருக்கு” என்று முழக்கம் வைக்கப்பட்டது. அந்த கூட்டத்தில் கிட்டத்தட்ட் 1,50,000 மக்கள் கலந்து கொண்டனர். இப்படி 1938லும் 1952லும் மிகவும் அமைதியான கிளர்ச்சிகள் மூலம் இந்தி திணிப்பை தடுத்தவர் தான் பெரியார், 1965ல் பெரும் உயிரிழப்புகளுடன் நடைபெற்ற கிளர்ச்சியை பார்த்து கண்டிப்பாக மணம் நொந்து தான் திமுகவை மிகவும் காட்டமாக சாடினார். தமிழை பிழைக்க உபயோகிக்கிறார்கள் என்றார் அதை விடுத்து தமிழை அழிக்க நினைக்கவில்லை அப்படி அழிக்க நினைத்திருந்தால் 1938லேயே இந்தி திணிப்பை அங்கீகரித்து அமைதியாய் இருந்து இருக்கலாம். ஏன் 7/03/1926லேயே இந்தி திணிப்பற்றிய கட்டுரையை சித்திர குப்தன் என்ற பெயரில் “தமிழுக்கு துரோகமும், இந்தி பாஷையின் இராகசியமும்” என்ற தலைப்பில் எழுதியுள்ளார். <br />
<br />
11-09-1938அன்றே தமிழ்நாடு தமிழருக்கு என்பதை எப்படி முன்னெடுக்க வேண்டும் தனது தோழர்கள் என்ன செய்ய வேண்டும் என்றும் வழியுறுத்தினார் இதை இது வரை பெரியாரின் திராவிட இயக்கத்தை சரியாக பின்பற்றும் இயக்கங்களும் அதன் தோழர்களும் செய்து வருகின்றனர். தமிழ் தேசியம் என்று சொல்லிக் கொண்டு பெரியாரின் மீது அவதூறு பரப்புபவர்கள் செய்வதில்லை..<br />
<br />
“இனியாவது தமிழ்நாடு தமிழருக்கே என்று ஆரவாரம் செய்யுங்கள். உங்கள் கைகளில் தமிழ்நாடு தமிழனுக்கே என்று பச்சை குத்திக் கொள்ளுங்கள். உங்கள் வீடுகள் தோறும் தமிழ்நாடு தமிழனுக்கே என்ற வாசகத்தை எழுதிப் பதியுங்கள். நம் வீட்டுக்குள் அன்னியன் புகுந்து கொண்டதோடல்லாது அவன் நம் எஜமானன் என்றால் நமக்கு இதைவிட மானமற்ற தன்மை - இழிதன்மை - வேறு என்ன என சிந்தியுங்கள்.<br />
<br />
புறப்படுங்கள்! தமிழ்நாட்டுக்கு பூட்டப்பட்ட விலங்கை உடைத்து சின்னாபின்னமாக்குங்கள்!!<br />
<br />
தமிழ்நாடு தமிழருக்கே!<br />
தமிழ்நாடு தமிழருக்கே!!<br />
தமிழ்நாடு தமிழருக்கே!!!”<br />
<br />
குடி அரசு - தலையங்கம் - 23.10.1938<br />
<br />
இங்கே தமிழ் தேசியம் என்று பேசுபவர்கள் இது வரை 1000 பேரை கூட்டி ஒரு கூட்டத்தை போட்டதில்லை ஆனால் 1938ம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் சிறை சென்றவர்களே 1000க்கும் மேலானவர்கள். அதுவும் பெண்கள் உட்பட குழந்தைகளுடன் சிறை சென்றவர்களும் 100க்கும் மேற்பட்டவர்கள். பெரியார் தமிழ் சமூகத்திற்காக தன் வாழ் நாள் முழுவதும் வேலை செய்தார் மக்களுடன் மக்களாக வாழ்ந்தார் அதனாலேயே அவர் பின்னால் இத்தனை ஆயிரம் மக்கள் திரண்டனர், ஏன் அவர் இறந்த பிறகும் கூட இன்னும் பெரியாரின் வழியில் சென்று கொண்டு இருக்கின்றனர். ஏன் பெரியார் வழியை ஏற்காத ஆத்திகர்கள் கூட பெரியாருக்கு முன்பு தாங்கள் கடைபிடித்த பழ மூடப்பழக்கவழக்கங்களை விட்டொழித்து கொஞ்சம் நாகரீகத் தன்மையையுடன் நடந்து வருகிறார்கள். இதில் ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடாதவர்களே இன்று பெரியாரை தூற்றுவதே தமிழ்த்தேசியம் என்று பேசி வருகின்றனர்.<br />
<br />
பெரியார் ஒரு சிந்தனைவாதி இல்லை அதனால் தான் தமிழ்நாட்டை விட்டு வெளியில் போகவில்லை என்ற அரும்பெரும் கருத்தை உதிர்த்து இருக்கிறார் தோழர் மணியரசன் பாவம் என்ன செய்வது தனது கருத்தான் பெரியார் தமிழருக்கு துரோகம் இழைத்தார் என்பதற்கு நேர் எதிரிடையான சாட்சியை அவரே கொடுத்துள்ளார். ஆம் பெரியார் தமிழ்நாட்டை விட்டு வெளியில் போகவில்லை தான் காரணம் அவர் தான் வாழ்ந்த தமிழ்ச்சமூகத்தின் இழிநிலையை போக்குவதற்காக சிந்தித்தார் செயல்பட்டார் அதனாலே தமிழ் நாட்டை விட்டு வெளியே போகவில்லை.</div>
</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8141777893641371649.post-49203210716175523342015-02-08T05:15:00.001-08:002015-02-08T05:16:46.215-08:00சில்லுவண்டுகளுக்கு பதில் - தமிழக எல்லைப் போராட்டமும் பெரியாரும் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi2TaGlTSVwdra5uLtvrjIlFPXjUXx66c2-zMPnq5Lg_dkxWUB818ZNuyR6yf-4Or51ne-cPEDojmasxs0lTB9XYutofynhudKHZ8I3pEf_XSs6jdO6c5Xi1g-IQ_SQbAXqOLuUcQhDFhE/s1600/periyar1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi2TaGlTSVwdra5uLtvrjIlFPXjUXx66c2-zMPnq5Lg_dkxWUB818ZNuyR6yf-4Or51ne-cPEDojmasxs0lTB9XYutofynhudKHZ8I3pEf_XSs6jdO6c5Xi1g-IQ_SQbAXqOLuUcQhDFhE/s1600/periyar1.jpg" height="400" width="384" /></a></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: Latha, sans-serif;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: Latha, sans-serif;">எல்லைப் போராட்டத்தில் திராவிடம் துரோகம் இழைத்துவிட்டது என்று குதியோ குதி என்று குதிக்கிறார்கள் இங்கே சிலர். திராவிட இயக்கத்தைப்பற்றிய எந்தவிதமான அடிப்படை அறிவும் இவர்களிடம் இல்லை என்பதை நன்றாக எடுத்துக் காட்டுகிறது இவர்களின் இந்த குதியாட்டம். முதலில் பெரியார் ஏற்படுத்தியது நீதிகட்சியோ திராவிடர் கழகமோ அல்ல, சுயமரியாதைக் கழகமே. அதன் பின்னர் நீதி கட்சியினர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அதன் தலைமையை ஏற்றுக் கொண்டார். பின்னால் தேர்தல் அரசியலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நீதிகட்சியை தேர்தல் அரசியலில் இருந்து விலக்கி திராவிடர் கழகம் என்ற அமைப்பாக மாற்றினார். 1938ல் சென்னை மாகாணமாக இருந்த பொழுதே தமிழ்நாடு தமிழர் என்ற முழக்கத்தை மறைமலை அடிகள், சோமசுந்தர பாரதி என்று அனைவருடன் இணைந்து முன்னெடுத்தார்.</span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: Latha, sans-serif;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: Latha, sans-serif;">இந்திய சுதந்திரத்தினை குறித்த காலகட்டங்களில் இந்தியாவிற்குள் இல்லாத சுதந்திர திராவிடஸ்தான் என்று தனி நாட்டையே வலியுறுத்தி வந்தார், இதற்காக சர். ஏ.டி.பன்னீர்செல்வம் லண்டன் வட்டமேஜை மாநாட்டில் கலந்து கொள்ள செல்கிற வழியில் விமானவிபத்தில் இறந்தார். சென்னை மாகணத்தை ஆங்கிலேயனிடம் இருந்து சுதந்திர நாடாக தனி நாடாக பெற வேண்டும் என்றே விரும்பினார், இந்தியத்தின் அடிமைநாடாக இருக்க விரும்பவில்லை. அதன்பிறகு இந்திய சுதந்திரத்தின் ஊடாக சென்னை மாகாணம் இந்தியத்தின் அடிமையான பிறகு தொடர்ந்து சுதந்திரத்திற்காக குரல் கொடுத்துக் கொண்டு இருந்தவர் தான் பெரியார்.</span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: Latha, sans-serif;">இந்த காலகட்டங்களில் தான் மொழிவழி மாநிலக் கோரிக்கையும் முன்வைக்கப்படுகிறது காங்கிரஸ் மாநாட்டில் அங்கீகரிக்கப்பட்ட மொழிவழி மாநிலக் கோரிக்கை நேரு பதவிக்கு வந்த பிறகு தள்ளி வைக்கப்படுகிறது. மொழிவழியாக இப்பொழுது மாநிலங்களை பிரித்தால் பிற்காலத்தில் நாட்டின் பிரிவினைக் கோரிக்கையாக வலுப்பெறக் கூடும் என்ற அச்சத்தின் காரணமாக சர்தார் வல்லபாய் பட்டேல் போன்றவர்களும் இதை விரும்பாமல் இருந்துள்ளனர். ஆனால் ஆந்திராவில் எழுந்த வீரமிகு போராட்டத்தின் விளைவாக ஆந்திர மாநிலம் அமைக்கப்பட்டது அதன் பிறகு மற்ற பகுதிகளை குறித்த மாநிலப் பிரிவினையையும் மத்தியில் ஆண்ட நேரு அரசாங்கம் தவிர்க்க தன்னாலன அனைத்து முயற்சிகளையும் செய்த்து. அப்பொழுது தட்ஷிணப் பிரதேசம் என்ற ஒரு திட்டமும் முன்னெடுக்கப்பட்டது. அதாவது திருவனந்தபுரம், கொச்சி சமஸ்தான்ங்கள், சென்னை மாகனம், மங்களூர் பகுதிகள் என்று அனைத்தையும் இணைத்து தட்சிணப் பிரதேசம் என்று அறிவிப்பதற்கு முயற்சி நடந்தது. இதை பெரியார் முற்றிலுமாக மறுத்தார் தமிழ்நாடு என்று மாநிலம் அமைக்கப்பட வேண்டும் என்று கோரிகையையும் வைத்தார். இதை காமராஜரிடம் தெரிவித்து காமராஜரும் பெரியார் தட்சிணப்பிரதேசத்தை எதிர்க்கிறார் என்ற செய்தியை நேருவிடம் கொண்டு சேர்த்தார். ஆனால் தமிழக எல்லைப் போராட்ட வரலாறு என்று சொல்லப்படும் மா.பொ.சி புத்தகத்தில் இருந்து மற்ற அனைத்து புத்தகங்களிலும். தமிழக எல்லைப் போராட்ட வரலாற்றினுடாக இந்த தட்சிணப் பிரதேச வரலாறு மறைக்கப்பட்டே வருகிறது. </span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: Latha, sans-serif;">இதே சமயத்தில் தான் காங்கிரஸில் உறுப்பினராக இருந்து கொண்டே ராஜாஜியின் வழிகாட்டுதலின் கீழ் 1948ல் ஆரம்பிக்கப்பட்ட “தமிழரசு கழகம்” தமிழர் நலன் சார்ந்த போராட்டங்களை முன்னெடுப்போம். தமிழ்நாடு சுதந்திர நாடாக்கியே தீர்வோம் என்று குரல் எழுப்புகிறது. இப்படியான ஒரு அமைப்பை துவங்க வேண்டிய தேவை அவர்களுக்கு வந்த காரணம், பெரியார் எனும் ஆளுமையால் காங்கிரஸ் மற்றும் ராஜாஜியின் தமிழர் விரோதப் போக்கு மக்களிடையே தோலுரிக்கப்பட்டிருந்தது. தமிழர் உணர்வு சென்னை மாகாணம் முழுவதும் வளர்த்தெடுக்கப்பட்டு இருந்தது. இந்த தமிழர் உணர்வை காங்கிரஸுக்கு சாதகமாக அறுவடை செய்யும் நோக்கத்துடனேயே “தமிழரசு கழகம்” தொடங்கப்பட்டது. தமிழரசு கழகம் எல்லைப் போராட்டங்களை முன்னெடுத்தது போல் வரலாறு கட்டமைக்கப் பட்டுள்ளது. தமிழக எல்லை போராட்டத்தை இரண்டு பிரிவாக பிரிக்கலாம். தெற்கெல்லைப் போராட்டம், வடக்கெல்லை போராட்டம் என்று இதில் இரண்டு போராட்டங்களையும் முன்னெடுத்தவர்கள், அந்த பகுதியை சேர்ந்தவர்களே.</span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: Latha, sans-serif;">தெற்கெல்லைப் போராட்ட்த்தில் நதானியல், நேசமணி போன்றோர்களாலும், வடக்கெல்லைப் போராட்டம் மங்களக் கிழார் போன்றோராலும் முன்னெடுக்கப்பட்டது. இவர்களுக்கு வலு சேர்க்கும் வகையில் தமிழகத்தில் மற்ற பகுதிகளில் போராட்டங்களை முன்னெடுக்கும் வகையில் மா.பொ.சி போன்றவர்கள் ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்துவது என்று பெரியாரிடம் பேச ஆரம்பிக்கிறார்கள். பெரியார் சுதந்திரத் தமிழ்நாட்டைப் பற்றி பேசிக் கொண்டிருந்தவர், ஒரு இந்திய தேசியத்திற்குள் ஒரு அடிமை மாநிலமாக இருப்பதற்கான எல்லைப் போராட்டத்தை குறித்து மறுத்திருக்க வேண்டும் ஆனால் எல்லைப் போராட்ட கோரிகையையும் ஏற்றுக் கொண்டார் ஆனால் தனது கோரிக்கைகளையும் கூறி அதையும் சேர்த்துக் கொண்டு போராட்ட்த்தை முன்னெடுக்கலாம் என்று 19/01/1956ம் ஆண்டு பெரியாரும் மபொசியும் சந்தித்த பொழுது முடிவெடுக்கின்றனர். அப்பொழுது ஐந்து கோரிக்கைகளின் கீழ போராடலாம் என்று முடிவெடுக்கப்படுகிறது அந்த 5 கோரிக்கைகள்...</span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: Latha, sans-serif;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
</div>
<ol>
<li><span style="font-family: Latha, sans-serif;">எல்லைக்கமிஷன் என்பது எல்லையை வரையறுப்பதில் தமிழ் மக்களுக்கு செய்துள்ள ஓர வஞ்சனையான காரியங்களைத் திருத்துதல்.</span></li>
<li><span style="font-family: Latha, sans-serif;">இந்தி மொழியை யூனியனுக்கு ஆட்சி மொழியாகவும் இந்திய தேசிய மொழியாகவும் ஆக்கப்படுவதற்கு பலவழிகளிலும் அரசாங்கம் முயற்சிப்பதை தடுப்பது</span></li>
<li><span style="font-family: Latha, sans-serif;">யூனியன் ஆட்சி என்பதில் படை போக்குவரத்து, வெளிநாடு உறவு இவை தவிர்த்த மற்ற ஆட்சியின் உரிமைகள் அனைத்தும் தமிழ்நாட்டுக்குக் கிடைக்கும்படி செய்ய வேண்டும். {மாநில சுயாட்சி}</span></li>
<li><span style="font-family: Latha, sans-serif;">தமிழ்நாட்டுக்கு தமிழில் சென்னை என்றும், ஆங்கிலத்தில் மெட்ராஸ் என்று பெயரிட்டிருப்பதை மாற்றி தமிழ்நாடு என்ற பெயரையே இருக்கும்படி செய்ய வேண்டும்.</span></li>
<li><span style="font-family: Latha, sans-serif;">தமிழ்நாட்டை தென்மண்டலம் {தட்சிணப் பிரதேசம்} என்ற அமைப்பு முறையின்படி மற்ற நாடுகளுடன் இணைக்க திட்டமிட்டிருப்பதை எதிர்ப்பது. </span></li>
</ol>
<br />
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: Latha, sans-serif;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: Latha, sans-serif;">இந்த ஐந்து கோரிக்கைகளில் மாநில சுயாட்சியை தந்தை பெரியார் வலியுறுத்தியிருப்பதே அவரின் அதுவரையிலான கொள்கைக்கு முரணானது ஆனால் அனைவருடன் இணைந்து செல்ல வேண்டும் என்ற வகையில் தனது கொள்கையில் ஒன்றைமட்டும் விட்டுக் கொடுத்து மாநில சுயாட்சிக்கு இணங்கியிருப்பதை அறிந்து கொள்ளலாம். இந்த ஐந்து கோரிக்கைகளையும் பெரியார் மற்றும் மபொசியும் ஒத்துக் கொண்டு போராடுவது என்று முடிவெடுத்தனர். இந்த போராட்ட்த்தில் மேலும் திராவிட பார்லிமெண்டரிக் கட்சித் தலைவர் சுயம்பிரகாசம், ஜஸ்டிஸ் கட்சி சர்.பி.டி. ராஜன், கம்யூனிஸ்ட் மற்றும் சோசலிஸ்ட் கட்சித் தோழர்களையும் இணைத்துக் கொள்வது என்றும் முடிவு செய்கிறார்கள். அப்பொழுது மபொசி கண்ணீர் துளிகளை {திமுக} இணைக்கலாமா என்ற பொழுது தேவையில்லை அவர்களால் ஆகக் கூடியது ஒன்றுமில்லை, கூட்டத்தை கூட்ட வேண்டும் என்பதற்காக அவர்களை இணைத்துக் கொள்வதில் பயனில்லை, வேலை செய்யக் கூடிய திறமையுள்ளவர்களை மட்டும் இணைத்துக் கொள்ளலாம் என்று பெரியாரும் சொல்லியிருக்கிறார். இப்படி மொழிப் போராட்டம் அனைவரையும் இணைத்து நடைபெற வேண்டிய அடித்தளம் போடப்பட்டது.</span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: Latha, sans-serif;">ஆனால் இத்தனையும் பேசிவிட்டு சென்ற மபொசி அதன்பிறகு போராட்ட முன்னெடுப்பு குறித்தும் கோரிக்கைகளை வரையறுப்பது குறித்தும் முடிவெடுப்பதற்கு அனைவரும் இணைந்து பேசுவதற்கான ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யவேண்டும் என்றும் ஒரு கடிதம் 20-1-1956 அன்று மபொசி அனுப்புகிறார், அப்படி கடிதம் அனுப்பியிருப்பது குறித்த ஒரு தந்தியும் அனுப்புகிறார் மபொசி. ஆனால் 20ம் தேதி தந்தி வந்து சேர்கிறது ஆனால் 21ம் தேதி கடிதம் வந்து சேரவில்லை. எனவே 21ம் தேதி அந்த கடிதம் வந்து சேரவில்லை என்பதை மபொசிக்கு பெரியார் தந்தியின் மூலம் தெரிவிக்கிறார். ஆனால் 22ம் தேதி மறுநாள் கடிதம் பெரியாரை வந்தடைகிறது. அந்த கடிதத்தில் 5 கோரிக்கைகள் மூன்றாக மாறியிருந்தது அதிலும் திருத்தங்களுடன் இருந்தது. கடித்த்தில் வரையறுக்கப்பட்ட மூன்று கோரிக்கைகள் பின்வருமாறு.</span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: Latha, sans-serif;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
</div>
<ol>
<li><span style="font-family: Latha, sans-serif;">தமிழக எல்லை பகுதி வரையறுத்தல்</span></li>
<li><span style="font-family: Latha, sans-serif;">தமிழகம் என்று பெயரிடுவது</span></li>
<li><span style="font-family: Latha, sans-serif;">இந்தி திணிப்பை எதிர்ப்பது</span></li>
</ol>
<br />
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: Latha, sans-serif;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: Latha, sans-serif;">இந்த கடிதம் மபொசியும் பெரியாரும் சந்தித்த 19-01-1956ம் தேதியிலிருந்து மூன்று நாட்கள் கழித்து 22-01-1956 அன்று பெரியாரின் கைக்கு கிடைக்கிறது. மேலும் அதில் கையெழுத்து இடும் பகுதியில் ஐந்து பேருக்கு இடம் ஒதுக்கப்பட்டு இரண்டாவது இடத்தில் ம.பொ.சி கையெழுத்து போட்டிருந்தார். முதல் இடத்தில் பெரியாருக்கு ஒதுக்கியிருந்தார். மேலும் ‘கண்ணீர் துளி’ அமைப்பின் சார்பில் கையெழுத்து போட தங்களின் விருப்பத்தையும் கூறுமாறு மபொசி கேட்டிருந்தார். கூட்டம் நடக்கும் இடம் தேதியை பெரியார் முடிவு செய்து அறிவிக்க சொல்லி அந்த பகுதியை காலியாகவிட்டிருந்தார்.</span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: Latha, sans-serif;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: Latha, sans-serif;">இதற்கு நடுவில் சென்னையில் இருந்த குத்தூசி குருசாமி அவர்களை ஒரு நாள் தொலைபேசியில் அழைத்து இன்று மாலை ஒரு ஆலோசனைக் கூட்டம் தாங்கள் வர இயலுமா என்று கேட்டிருக்கிறார். அந்த சமயத்தில் பெரியார் திருச்சியில் இருந்தே அனைத்து ஊர்களுக்கும் சென்று வந்து கொண்டிருந்தார், சென்னையில் நிரந்தரமாக தங்கியது இல்லை. குத்தூசி குருசாமி பெரியார் அவர்கள் சொன்ன அனைத்து கோரிக்கைகளையும் இணைத்தால் தான் பெரியார் ஏற்றுக் கொள்வார் என்று சொல்லியிருக்கிறார். 26-01-2015 அன்று மா.பொ.சியிடமிருந்து திருச்சிக்கு பெரியாருக்கு அடுத்து ஒரு அச்சிட்ட அழைப்பிதழ் வருகிறது அதில் 27-01-1956 அன்று மாலை 4 மணிக்கு மபொசியின் நண்பரின் உமா பத்திரிக்கை அலுவலகம், சென்னையில் சர்வகட்சிக் கூட்டம் என்று மா.பொ.சி மட்டும் கையெழுத்திட்ட அழைப்பிதழ் வந்து சேர்ந்தது.</span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: Latha, sans-serif;">முதலில் பெரியாரிடம் ஒத்துக் கொண்ட 5 கோரிக்கைகள் அடுத்து 3 கோரிக்கை ஆனது, கடைசியில் கழுதை தேய்ந்து கட்டெரும்பு ஆன கதையாக சர்வ கட்சிக் கூட்டம் “எல்லைப் பிரச்சனை” என்ற ஒரு கோரிக்கையின் கீழாக வந்து நின்றது. பெரியார் சுதந்திரம் தனிநாடு என்பதை விடுத்து மாநில சுயாட்சி என்பதை ஏற்றுக் கொண்டதே பெரிய விசயம் அதில் மாநில சுயாட்சியையும் தூக்கிவிட்டார்கள் அடுத்து தமிழ்நாடு என்பதை சுருக்கி தமிழகம் என்று மட்டுமே குறித்து அழைப்பிதழ் இருந்தது. பெரியாரின் கட்டுரைகள் படித்த அனைவருக்குமே தெரியும் தமிழர்கள் தமிழ்நாடு என்று குறிப்பிட்டே எப்பொழுதும் எழுதுவார்கள் ஆனால் இதெல்லாம் இல்லாத போராட்டத்தை முன்னெடுக்க பெரியார் மபொசியுடன் இணைந்து முன்வருவாரா என்ன. சரி தனியாக போராட்டத்தை முன்னெடுத்து இருக்கலாமே என்று சிலர் கேட்ப்பார்கள் அவர் எடுக்கவில்லை என்று நினைத்துக் கொண்டிருக்கும் தமிழகத்தில் நடந்த அரசியல் வரலாற்றை தெரியாதவர்கள் இன்று வந்து சில்லுவண்டுகள் போல் குதிக்கின்றனர் என்று நாம் எடுத்துக் கொள்ளலாம் இவர்களை.</span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: Latha, sans-serif;">முதலில் திருவிதாங்கூர் சமஸ்தானத்திலும், கர்நாடகம், ஆந்திரம் போன்றவற்றுடன் இன்று வரை இணைந்திருக்கும் தமிழர்கள் பகுதிகளை குறித்த பெரியார் என்ன பார்வை கொண்டிருந்தார் என்பதை அவரின் வழியாக தெரிந்து கொள்வது தான் சரியான பார்வை.</span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: Latha, sans-serif;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: Latha, sans-serif;">7-01-1953 மற்றும் 8-01-1953 அன்று விடுதலையில் பெரியார் ஆற்றிய உரையாக வெளியிடப்பட்டதில் இருந்து</span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: Latha, sans-serif;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: Latha, sans-serif;"><b>”ஆந்திரமொழியைப் பேசுகின்ற மக்களை மெஜாரிட்டியாகக் கொண்ட பகுதிகளை ஆந்திர நாட்டோடு சேர்த்துக் கொள்வதில் நமக்கு ஆட்சேபமில்லை, தமிழ்மொழி பேசும் மக்களை பெருவாரியாகக் கொண்ட நாட்டை ஆந்திராவோடு சேர்க்கவேண்டும் என்பது எப்படி, மொழிவாரி மாகாணப் பிரிவினை என்று சொல்ல முடியும்?</b></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: Latha, sans-serif;"><b>அடுத்தாற்போல், அதுபோலவே இன்றைய அனுபவத்தில் தமிழ் மொழி அதிகமாகப் பேசும் மக்களின் பிரதேசம் ஆந்திர நாட்டிலே சேர்ந்தாலுங்கூட, அவர்களுக்கு மொழிவாரிப் பிரேதச உரிமையை உத்தேசித்து எந்த நிமிசத்திலும் விலகிக் கொள்ள கிளர்ச்சி செய்ய உரிமை உண்டு. அதை நாம் மறுக்கவில்லை; நம்மாலான உதவிகளைச் செய்யவும் தயாராக இருக்கிறோம். ஆனால் நம்முடைய சொந்த பிழைப்பையோ, சுயநலத்தையோ, விளம்பரத்தையோ உத்தேசித்து இன்றைக்குத் தான் இந்த சங்கதி தெரிந்தது போல் பாவனை காட்டிக்கொண்டு கூத்தாட நமக்கு இஷ்டமில்லை.”</b></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: Latha, sans-serif;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: Latha, sans-serif;">1956ல் மபொசி அனைத்துக் கட்சி கூட்டத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார், அதற்கு மூன்று வருடம் முன்பாகவே மற்ற மாநிலங்களுடன் இருக்கும் தமிழ் அதிகம் பேசும் மக்கள் தமிழ்நாட்டுடன் இணைய கிளர்ச்சி செய்ய உரிமை பெற்றவர்கள் அவர்களுக்கு நாம் உதவ வேண்டும் என்று 1953ம் ஆண்டே சொன்னவர். இப்படி தமிழ்நாட்டினைப் பற்றியும் தமிழரைப்பற்றியும் யோசித்துக் கொண்டிருந்தவர் தான் பெரியார், மேலும் இதன் கீழாக விளம்பரம் செய்து கொள்வது தவறானது என்பதையும் சுட்டிக் காட்டியவர் பெரியார். இங்கே மபொசியை தூக்கி பிடித்துக் கொண்டு அவர் தான் ”முதலமைச்சு தமிழ்தேசியத்தின்” மண்ணுரிமைப் போராளி என்கிறார்கள். 1945ம் ஆண்டு ஜூன் மாதம் திருச்சி மலைக்கோட்டையில் இலக்கியக் கூட்டத்தில் “புதிய தமிழகம்” என்ற சொற்பழிவை நிகழ்த்துகிறார். அன்றிலிருந்து 1956 வரை அவர் தமிழகம் என்ற சொல்லாடலையே உபயோகிக்கிறார். பெரியார் 1930களில் இருந்தே தமிழ்நாடு என்ற சொல்லாடலை உபயோகிக்கிறார். தமிழர் பகுதி என்பதில் நாடு என்ற வார்த்தையை தவிர்க்கவே மத்திய அரசும் மொழிவாரி பிரிவினையின் போது முயன்றது அதன் கீழாக சென்னை மாகாணம் என்று தமிழிலும் மெட்ராஸ் ஸ்டேட் என்று ஆங்கிலத்திலும் குறிக்கப்பட்டு வந்தது. தமிழ் நாடு என்று பெயர் வைக்க சங்கரலிங்கம் உயிர்விட வேண்டியது ஆனது.</span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: Latha, sans-serif;">இதைப் பற்றிய எந்த அடிப்படை அறிவும் இல்லாமல் இங்கே தாந்தோன்றித் தனமாக சிலர் குதித்துக் கொண்டுள்ளனர், என்ன செய்வது அவர்களுக்கு நம்மால் முடிந்த உதவியை செய்து அவர்களின் அறியாமை இருளில் இருந்து வெளிக்கொணர முயல்வோம். எல்லைப் போராட்டத்தில் மிகவும் முக்கியமானவராக மபொசியை காட்டினாலும் தெற்கெல்லை போராட்டத்தினை முன்னெடுத்து இன்று வரை குமரியின் தந்தையாக மதிக்கப்படும் மார்சல் நேசமணி அவர்களின் வரலாற்றை குறித்த “நேசமணி ஒரு சரித்திரத் திருப்பம்” என்ற புத்தகத்தின் முன்னுரையில் தெற்கெல்லை போராட்டத்தில் பங்கு கொண்ட அப்துல் ரசாக் M.A, LLB, இவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கூட. </span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: Latha, sans-serif;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: Latha, sans-serif;">கன்னியாகுமரியை தமிழ்நாட்டுடன் இணைக்கும் போராட்டம் உக்கிரமாக நடந்து கொண்டிருந்த சமயத்தில், திருவிதாங்கூர் காவல்துறை அடக்குமுறையின் கீழாக </span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: Latha, sans-serif;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: Latha, sans-serif;"><b>““கண்ணில் கண்டவர்களை, “கண்டால் அறியும் பள்ளி” என்று கூறிக் கைது செய்தனர். நான் போலிசுக்கு பிடி கொடுக்காமல் வாழ்ந்தேன். திருவிதாங்கூரில் நடந்த தமிழகப் போராட்டத்தில் போலீஸ் அத்துமீறிச் செயல்பட்டது. பலரைத் துப்பாக்கிக்கு இரையாக்கியும் பலரை சித்திரவதை செய்தும் பலரை துன்புறுத்தியும் கைது செய்தனர். தமிழக் கூட்டங்களில் சொற்பொழிவு ஆற்ற வந்த ம.பொ.சி சொற்பொழிவு ஆற்றாமலேயே திரும்பிச் சென்றார்.</b></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: Latha, sans-serif;"><b>ஆனால் பெரியார் ஈ.வே.ரா மட்டும் திருவிதாங்கூர் தமிழ் மக்கள் நிலைமையை மார்ஷல் நேசமணியிடம் கேட்டுத் தெரிந்து கொண்டார். இதன் பின்னணியாகச் சென்னை மெரினா கடற்கரையில் ஒரு கூட்டத்தைப் போட்டு, “திருவிதாங்கூரில் போலீஸ் அடுக்குமுறையை உடனடியாக நிறுத்தாவிட்டால், தமிழகத்தில் வாழும் மலையாளிகளை நாங்கள் இங்கிருந்து அடித்து துரத்துவோம்” என்று பொதுக்கூட்டத்தில் அறிக்கை விட்டார். மலையாள அரசு தமிழனைத் துன்புறுத்தியதை நிறுத்தியது.</b></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: Latha, sans-serif;"><b><br /></b></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: Latha, sans-serif;"><b>மார்ஷல் நேசமணி தன் கையால் மாலை அணிவித்த ஒரே தலைவர் பெரியார் தான். பெரியாரும் மார்ஷல் நேசமணி மீது மிக்க மதிப்பு வைத்திருந்தார்””</b></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: Latha, sans-serif;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: Latha, sans-serif;">இதையெல்லாம் மறைத்துவிட்டு பெரியார் தான் தமிழகத்தின் எல்லைகளை விட்டுக் கொடுக்க காரணம் என்று குதித்துக் கொண்டிருக்கிறார்கள். பெரியார் தனித் சுதந்திர தமிழ்நாட்டை கேட்டவர் அது ஒரு சிறுபகுதியாக இருந்தாலும் போதும் அந்த சுதந்திரத் தமிழ்நாட்டின் மானமுடன், சுயமரியாதையுடனும் வாழவேண்டும் என்று நினைத்தவர். இவர்களுக்காக காவடி எடுத்து ஆட வேண்டிய வேலையை அவர் செய்ய இயலாது. </span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: Latha, sans-serif;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: Latha, sans-serif;">ஒரு நாட்டின் வரலாறு என்பது ஒரு பக்கமான பார்வையும் ஒரு பக்கமான படிப்பும் கிடையாது அனைத்து பக்கங்களிலும் இருந்து கிடைக்கும் தகவல்களை தொகுத்து படிப்பதே. எனென்றால் இங்கிருக்கும் வரலாற்றாசிரியர்கள் பலர் தாங்கள் சார்ந்த கருத்தியலின் கீழாகவே வரலாற்றை எழுதி வருகிறார்கள். ஆரியர் வருகை, மொகலாயர் படையெடுப்பு என்றே வரலாற்றில் உள்ளது மொகலாயர் படையெடுத்து வந்தால் படையெடுப்பாம், இந்த மண்ணுக்கு சொந்தமில்லாத ஆரியர் இந்த மண்ணுக்குள் படையெடுத்து வராமல் வெத்தலை பாக்குவைத்து அழைத்தது போல் ஆரியர் வருகை என்றே குறிப்பிடுகின்றனர். இனிமேலாவது அனைத்து பக்க தகவல்களையும் படித்து நமது வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டும் வருங்கால உண்மையாக தமிழ்த் தேசியம் பேச விரும்புபவர்கள். </span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: Latha, sans-serif;">குறிப்பு – எல்லைப் போராட்டம் மட்டும் இல்லை தனி நாடு, அப்புறம் மாநில சுயாட்சி என்று ஏகப்பட்ட அந்தர்பல்டிகள் அடித்து கடைசியில் திமுகவினரின் காலில் விழுந்து மேலவை உறுப்பினர், மேலவை தலைவர் என்று பதவி பின்னால் அழைந்தது என்று இன்னும் விரிவாக பார்க்கலாம், இன்னொரு சமயம். </span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: Latha, sans-serif;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: Latha, sans-serif;">குறிப்புக்கு உதவிய நூல்கள் -</span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: Latha, sans-serif;">1. திருவிதாங்கூர் தமிழர் போராட்ட வரலாறு – பி. யோகிஸ்வரன்</span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: Latha, sans-serif;">2. தமிழ்நாட்டு எல்லைப் போராட்டம் – பெரியாரும் ம.பொ.சியும்</span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: Latha, sans-serif;">3. நேசமணி ஒரு சரித்திரத் திருப்பம் – ஏ.ஏ. ரசாக்</span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: Latha, sans-serif;">4. திருத் தமிழர் இயக்கம் – பி.எஸ். மணி</span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: Latha, sans-serif;">5. எனது போராட்டம் – மபொசி</span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: Latha, sans-serif;"> </span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: Latha, sans-serif;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: Latha, sans-serif;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span style="font-family: "Latha","sans-serif";">
<!--[endif]--><o:p></o:p></span></div>
</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8141777893641371649.post-69086285647963073222014-12-30T07:45:00.001-08:002014-12-30T07:45:37.180-08:00தந்தி டிவியில் ராஜபக்சேவின் பேட்டி அரசியல்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjEbbSYa22eZVhNUGSJptRo3i8lPHKI8N1C5fr9a_JEEOVi-pDL43PIeHSvkIYdf-BtRsvSkOSoBU-wivsgO1GhGLnliu4cMqv6Qr3k3xKAy0v5KYz_Q7umuGsDWgrWH8Hh-mbzjNaj8f8/s1600/interview.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjEbbSYa22eZVhNUGSJptRo3i8lPHKI8N1C5fr9a_JEEOVi-pDL43PIeHSvkIYdf-BtRsvSkOSoBU-wivsgO1GhGLnliu4cMqv6Qr3k3xKAy0v5KYz_Q7umuGsDWgrWH8Hh-mbzjNaj8f8/s1600/interview.jpg" height="320" width="280" /></a></div>
<br />
ராஜபக்சேவின் தனிப்பட்ட பேட்டி தந்தி டிவிக்கு என்பது இந்திய மத்திய அரசு நலன், மற்றும் சிங்கள பேரினவாதத்தின் பிரித்தாளும் சூழ்ச்சியின் கீழாக பார்க்க வேண்டும். இந்த பேட்டிக்கு தந்தி டிவி அணுகியதைவிட இந்திய வெளியுறவுத் துறையே அனுமதி வாங்கி கொடுத்து இருக்க வேண்டும். பேட்டி எப்படி எடுக்கப்பட்டால் என்ன அவர்கள் செய்ய நினைத்ததை சாதித்துவிட்டார்கள். ஆம் இங்கு தமிழர் நலனுக்காக தொடர்ந்து போராடி வருபவர்களுக்கு இடையே இருக்கும் முரண்களை மேலும் வளர்த்து எடுத்து இருக்கிறார்கள். ராஜபக்சேவின் பேட்டியை ஒரு இந்திய மாநிலத்தின் தொலைகாட்சியில் ஒளிபரப்ப வேண்டிய அவசியம் என்ன என்று பார்க்காமல். அந்த பேட்டியின் கீழான விவாதத்தில் தமிழர் நலனை பற்றி பேசும் ஒரு கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் கலந்து கொள்கிறார், அதே சமயத்தில் மற்ற கட்சிகள் இயக்கங்கள் என்று அனைவரும் ஒரணியில் ராஜபக்சேவின் பேட்டியை ஒளிபரப்பாதே என்ற கோரிக்கை வைக்கும் பொழுது இவர் சென்று அந்த பேட்டியின் கிழான விவாதத்தில் கலந்து கொள்கிறார், இது என்ன மாதிரி டிசைன் என்று தெரியவில்லை.<br />
<br />
முதலில் இராஜபக்சேவின் பேட்டியின் கீழான வாதமாக ராஜபக்சே கூறியவைகளின் அடிப்படையில் அவர் தமிழர்களுக்கு எதிரானவர் இல்லை என்பதை நம்ப முடியுமா என்பது தான் அதற்கான நேரிடையான பதில் இராஜபக்சேவோ அல்லது வேறு யாராக இருந்தாலும் இலங்கையின் எத்தேச்சதிகார இனவெறி கொண்ட அரசியல்சாசனச் சட்டம் இருக்கும் வரை எந்த சிங்கள பேரினவாதத்தின் தலைமையையும் நம்ப இயலாது. இது தந்தை செல்வா பண்டாரநாயக ஒப்பந்தத்தில் இருந்து ஜெயவர்த்தனா ராஜிவ் ஒப்பந்தம் மட்டும் அல்ல, நார்வேயின் தலையீட்டின் கீழ் கொண்டு வரப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் வரை எல்லா இடத்திலும் அனைத்து காலத்திலும் சிங்கள பேரினவாத அரசியல் சாசனச் சட்டம் தமிழர்களுக்கான அடிப்படை உரிமைகளை பறிப்பதில் தான் இருந்திருக்கிறதே ஒழிய என்றும் ஒரு மனிதாபிமான அடிப்படையிலான அரசியலமைப்பாக தன்னை கட்டமைத்துக் கொள்ளவில்லை. இத்தகைய நிலையில் இலங்கையின் அதிபராக நெல்சன் மண்டேலாவை அமர வைத்தால் கூட தமிழர்களுக்கான தீர்வாக அவர் ஒரு சிறு துறும்பைக் கூட கிள்ளி போட முடியாது, எனவே இலங்கையின் இனவெறி அரசியல் சாசனத்தை திருத்தாமல் வெறும் வாய்வார்த்தைகள் யார் சொன்னாலும் நம்ப இயலாது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அடுத்து ராஜபக்சேவின் பேட்டி எதற்காக எடுக்கப்பட்டது அது ஏன் இப்பொழுது என்று ஆராய்ந்தால் அனைத்தும் விளங்கும். இலங்கை தேர்தல் பிரசார நோக்கமா இது இல்லை... இலங்கை தேர்தல் பிரசாரத்திற்கு இலங்கையில் தான் ராஜபக்சே பேட்டி கொடுக்க வேண்டும் ஏன் தமிழகத்தில் இருக்கும் ஒரு தொலைகாட்சிக்கு பேட்டி, இலங்கையில் தொலைகாட்சி நிலையங்களே இல்லையா என்ன? மிக நேர்த்தியாக இந்திய வெளியுறவு துறையும் சிங்கள பேரினவாதமும் தன் காயை நகர்ந்தியுள்ளது. சரி ராஜபக்சேவின் பேட்டியின் கீழான விவாதம் எனும் பொழுது, ராஜபக்சே என்ன சொன்னாரோ அதன் கீழான விவாதமாக இருந்து இருக்க வேண்டும். ராஜ பக்சே போருக்கு பின்னான அபிவிருத்தி திட்டங்களை பற்றி பேசினார், மேலும் சில இடங்களில் திட்டங்களை செயல்படுத்த முடியாமல் இருப்பதாகவும் கூறினார். ஆனால் இதை குறித்த விவாதமாக இல்லாமல் இங்கே வேறு கருத்தாக்கங்கள் வைக்கப்பட்டது. அதில் முக்கியமானவை..<br />
<br />
இந்திய தமிழ் மீனவர்கள் மீதான தாக்குதல், இலங்கை தமிழ் மீனவர்களே செய்கிறார்கள். காரணம் மன்னர் வளைகுடா வரை சென்று தமிழ் மீனவர்கள் மீன் பிடிக்கிறார்கள். இலங்கை இராணுவம் தாக்குவது இல்லை என்ற அடுத்த கட்டுக் கதையை அவிழ்த்துவிட ஆரம்பித்துள்ளார்கள். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அடுத்து மலையகத் தமிழர்கள் இலங்கை அரசின் கீழ் தான் இருக்க விரும்புகிறார்கள், அவர்கள் என்றும் வடகிழக்கு தமிழர்களால் பாதுக்காக்கப் படவில்லை என்பது போன்ற வாதமாக இலங்கையின் மத்திய மாகணத்தின் முதலமைச்சராக இருக்கும் ராமசாமி அவர்களின் வாதம்.<br />
<br />
கடைசியாக இலங்கை வாழ் தமிழர் ஒருவர் விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு தீவிரவாத இயக்கம் என்று தமிழக ஊடகத்தின் மூலமாக சொல்லி சென்று இருக்கிறார். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
முதலில் பகவான் சிங் சொன்ன இந்திய தமிழ் மீனவர்களை தற்பொழுது தாக்குவது இலங்கை தமிழ் மீனவர்களே, காரணம் இந்திய தமிழ் மீனவர்கள் எல்லை தாண்டி இலங்கை தமிழ் மீனவர்கள் பகுதியான மன்னார் வளைகுடா வரை சென்று மீன் பிடிக்கின்றனர் அதனாலேயே அந்த மீனவர்கள் தாக்குகிறார்கள் என்ற கண்டுபிடிப்பை சொல்லியுள்ளார். இவரிடம் அடிப்படையாக கேட்கப்பட வேண்டிய கேள்வி எத்தனை தாக்குதல்களை பற்றிய தகவல் இருக்கிறது அதில் எத்தனை இலங்கை தமிழ் மீனவர்கள் தாக்கினார்கள், எத்தனை தாக்குதலில் இலங்கை இராணுவம் ஈடுபட்டது என்பதற்கான தெளிவான விவரங்கள் இருக்கா என்பது. மேலும் ஒரு ஊடகவியலாளராக ஏற்கெனவே கொலை செய்யப்பட்ட 543 மீனவர்களுக்கான நீதியை மறந்துவிட்டு அடுத்து என்ன நடக்க வேண்டும் என்பதை மட்டும் எப்படி பேசுகிறீர்கள். செத்து போன 543 மீனவர்களுக்கான நீதியைப் பெற்று தரவேண்டியது ஊடகவியலாளரான உங்கள் கடமை இல்லையா. வருங்காலத்தை பற்றி மட்டும் பேசிவிட்டு கடந்தகால கொடூரங்களை எந்த சட்ட நியாயத்தின் அடிப்படையில் மறைக்கிறீர்கள். <br />
<br />
மேலும் இரண்டு நாட்டு மீனவர்களின் பேச்சுவார்த்தை கடைசியாக எப்பொழுது நடந்தது அதில் காலையில் இரு நிபந்தனை மதியம் ஒரு நிபந்தனை என்று மாற்றி மாற்றி பேசி, இலங்கை அரசு அந்த பேச்சுவார்த்தையை சீர்குலைத்தது ஒரு ஊடகவியலாளராக உங்களுக்கு தெரியுமா தெரியாதா. இதையெல்லாம் மறைத்துவிட்டு ஒட்டுமொத்தமாக தங்கள் உயிரை பணயம் வைத்து மீன் பிடித்து வந்து இங்கு பலரின் வயிற்றுக்கு சோறு போடுபவர்கள் மீது எந்த அடிப்படையின் கீழ் எல்லை தாண்டுகிறார்கள் என்று குற்றச்சாட்டை வைக்கிறீர்கள். உங்கள் இந்திய பாசத்தின் கீழாக இங்கு இருக்கும் தமிழ் மீனவர்களை சண்டையிடுவது போல் பிம்பந்தத்தை உருவாக்க முயல்கிறீர்கள், 1983 வரை பெண் கொடுத்து பெண் எடுத்தவர்கள் இலங்கை வாழ் ஈழ மீனவர்களும் தமிழக மீனவர்களும், கணவனும் மனைவியும் 1983க்கு பிறகு கச்சத்தீவு திருவிழாவில் சந்தித்து கர்ப்பம் ஆன கதைகள் எல்லாம் உண்டு, இதைப் பற்றி உங்கள் செய்தியாளர்களை வைத்து ஒரு முழுமையான செய்திக் கட்டுரையை எழுத முடியுமா தங்களால். 1968ல் அண்ணா இறந்த செய்தியை ஈழத் தமிழ் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டு இருந்த தமிழக மீனவர்களுக்கு சொல்லித் தான் தெரியும். இப்படி அமைதியாக தங்கள் இருவருக்கும் சொந்தமான கடலை அவர்களுக்கு உபயோகித்துக் கொள்ளத் தெரியும் நீங்களும் உங்கள் அரைவேக்காட்டு அரசியல் பார்வைகளும் விலகி நின்றால் அவர்களின் சொத்தை அவர்கள் பாதுகாத்துக் கொள்வார்கள். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ராமசாமி அவர்கள் போகிற போக்கில் மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிக்கப்பட்ட பொழுது திரு. தொண்டைமான் அவர்கள் மட்டும் தான் எதிர்த்தார் அப்பொழுது இருந்து வடகிழக்கு தமிழர் தலைவர்கள் யாரும் மலையகத் தமிழர்களுக்கு உதவவில்லை என்று கூறினார். 1952ம் ஆண்டு பாராளுமன்றத்தில் மலையகத் தமிழர்களின் வாக்களிக்கும் உரிமை பறிக்கப்பட்ட பொழுது அப்பொழுது தமிழ் காங்கிரஸ் தலைவராக இருந்த பொன்னம்பலத்தின் கட்சியில் இருந்த தந்தை செல்வநாயகம் பாராளுமன்றத்திலேயே தனது எதிர்ப்பை பதிவு செய்தார். மேலும் அந்த சட்டத்தை ஆதரித்த பொன்னம்பலம் கட்சியைவிட்டு விலகி தமிழரசு கட்சியை ஆரம்பித்து இலங்கை வாழ் தமிழர் நலன் காக்க அறவழிப் போராட்டங்களை முன்னெடுத்தார், இதை எல்லாம் மறந்துவிட்டு வடகிழக்கு மாகாணத் தமிழர்கள் மீது எப்படிக் குற்றச்சாட்டை வைக்கிறீர்கள்.<br />
<br />
மேலும் 1950களில் இடம்பெயர்ந்த மலையகத் தமிழர்களுக்கு வடக்கு கிழக்கில் இடம் கொடுத்து அவர்களை தங்களில் ஒருவராக மதித்த வடக்கு கிழக்கு மக்கள் மீது எப்படி உங்களால் அபாண்டமான குற்றச்சாட்டை வைக்க முடிகிறது. மத்திய மாகணத்தில் இருந்து புலம்பெயர்ந்து வந்த மலையக மக்களும் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து தங்களின் சுதந்திரத்திற்காக போராடியது தங்களுக்கு தெரியாதா என்ன.<br />
<br />
இதைவிட அதி முக்கியமானது வடக்கு கிழக்கு தலைவர்கள் இலங்கையின் மத்திய மாகணத்தில் வாழும் சிறுபான்மை தமிழர்களான உங்களின் நலனின் அக்கறை கொள்ளவில்லை என்று கூறுவது, உங்களை ராஜபக்சேவின் ஆகச் சிறந்த ஜால்ரா விற்பன்னராகவே காட்டுகிறது. தமிழீழ சுதந்திர போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திய ”வட்டுக்கோடைத் தீர்மானம் - 1976” இல் நாலாவது சரத்தாக கீழ் வரும் தீர்மானம் இருக்கிறது </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“(ஈ). தமிழ் அரச மொழியாக இருக்க வேண்டும். எனினும் தமிழ் ஈழத்தில் சிங்களம் பேசுகின்ற சிறுபான்மைகள் அவர்களின் மொழியில் கல்வியையும் அலுவல்களையும் தொடர்வதற்கான உரிமைகள் சிங்கள அரசிலுள்ள தமிழ்பேசும் சிறுபான்மைகள் பாதுக்காக்கப்படும் சரி எதிரீடான அடிப்படையில் பாதுகாப்படவேண்டும். ”<br />
<br /></div>
<div style="text-align: justify;">
ஆதாவது சுதந்திர தமிழீழத்தில் வாழப்போகும் சிங்களவர்களின் உரிமைகள் சிங்கள தேசத்தில் வாழும் தமிழ் சிறுபான்மையினரை எவ்வாறு சிங்கள அரசு நடத்துகிறதோ அதற்கு நேர் எதிரீடான அடிப்படையில் பாதுக்காக்கப்பட வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். வடக்கு கிழக்கு மக்கள் உங்களின் உரிமைகளை நலன்களை பேணுவதிலும் அக்கறை கொண்டிருந்தே வருகின்றனர். ஆனால் அதையெல்லாம் உங்களின் அரசியல் அபிலாசைகளுக்காக மறந்துவிட்டு வயிற்றுப் பிழைப்பிற்காக ராஜபக்சேவிற்கு பக்கவாத்தியமாக இருக்கிறீர்கள், தமிழர்களுக்கு ஜால்ரா சத்தங்களை சுரம் பிரித்து அறிந்து கொள்ளும் சங்கீத ஞானம் உண்டு..<br />
<br />
ஒட்டுமொத்தத்தில் இந்த பேட்டி என்பது இந்திய மத்திய அரசாலும் இலங்கை இனவெறி அரசாலும் தமிழர்களை கூறு போடும் திட்டமே, தமிழக மீனவர்கள், ஈழத்து மீனவர்கள் என்று பிரித்து அவர்களுக்கிடையேயான சிறு முரண்களை பெரும் பிரச்சனைகளாக உருவகப்படுத்துவதும், மலையகத் தமிழர்கள் ஈழத் தமிழர்கள் முரண்களை பெரிது படுத்தி காட்டி தமிழகத்தில் எழுந்திருக்கும் ஈழத்தமிழர்கள் மீதான அனுதாபத்தை குழப்பி அந்த குழம்பிய குட்டையில் தங்களின் அரசியல் லாபக் கணக்கை எழுதும் முயற்சியே.. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8141777893641371649.post-69389196603024458272014-07-28T01:37:00.004-07:002014-07-28T01:37:42.547-07:00ப்ரோ கபடி லீக்கும் தமிழ் நாட்டின் மானமும்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br style="text-align: justify;" /></div>
<div style="text-align: left;">
<span style="text-align: justify;">தமிழ்ஸ் நவ் இணையத்தில் வெளியான கட்டுரை </span></div>
<span style="text-align: justify;"><div style="text-align: left;">
http://tamilsnow.com/?p=19259</div>
</span><br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjeEOixssnQx5q5nfoA_TnrcqB4AuaitkeWRSc4eIJA9anbBHvcfJ2SofCPVu8ZEZdXHax23XSDFOFA4qORfsUUlCSf94ax9LziISDBo9IJ2_40PaHQHfHP0pveNaQ-EmOqTjgjld6w_-g/s1600/prokabaddi.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjeEOixssnQx5q5nfoA_TnrcqB4AuaitkeWRSc4eIJA9anbBHvcfJ2SofCPVu8ZEZdXHax23XSDFOFA4qORfsUUlCSf94ax9LziISDBo9IJ2_40PaHQHfHP0pveNaQ-EmOqTjgjld6w_-g/s1600/prokabaddi.png" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்தியன் பீரிமியர் லீக் என்று கிரிக்கெட் விளையாட ஆரம்பித்த பிறகு ஹாக்கியிலும் அதே போன்று ஒரு வர்த்தகப்பூர்வமான ஒரு போட்டி ஆரம்பிக்கப்பட்டது. விளையாட்டில் வர்த்தகங்களை நுழைப்பது என்பது சரியா தவறா என்பதை விட இந்தியா போன்ற நாடுகளில், இப்படி வர்த்தக நிறுவனங்கள் நுழைவதால் விளையாட்டு வீரர்கள் மூன்று வேளை கஞ்சியாவது நிம்மதியாக குடிக்க வழிவகை ஏற்படும் வாய்ப்பை வழங்குகிறது. தேசிய அளவில் சாதனை புரிந்த விளையாட்டு வீரராக இருந்தாலும் சரி, சர்வதேச அரங்கில் பதக்கங்கள் வாங்கிய வீரர்களாக இருந்தாலும் சரி, அவர்களின் வாழ்வாதரம் என்பது விளையாட்டு வீரனாக இருந்தாலே போதும் என்ற நிலை கிரிக்கெட்டை தவிர இந்தியாவில் வேறு எந்த விளையாட்டிலும் கிடையாது. அத்தகைய நிலையில் விளையாட்டு போட்டிகளிலும் வர்த்தக நிறுவனங்கள் நுழைவது வரவேற்கத் தக்கதே. கிரிக்கெட், ஹாக்கி பீரிமியர் லீக் வரிசையில் கபடியும் நுழைந்துள்ளது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கபடிக்கு புரோ கபடி லீக் ஆரம்பிக்கப்பட்டு ஜூலை 26ம் தேதி முதல் ஆக்ஸ்ட் 31ம் தேதி வரை ஒரு பெரும் திருவிழாவாக நடத்தப்பட்டு வருகிறது. கபடி என்பது உலக அளவில் சில நாடுகளே விளையாண்டாலும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இடம் பெற்ற விளையாட்டு, மேலும் கபடிக் கென்று தனியாக உலக கோப்பையும் இருக்கிறது, இந்த உலக கோப்பையை 2004லிருந்து 2013 வரை நடந்த ஆறு உலக கோப்பையையும் இந்தியாவே கைப்பற்றியுள்ளது. இவைகளில் தமிழக வீரர்களின் பங்களிப்பும் ஒரளவாது இருந்தே வருகிறது, 39 வயது சேரலாதன் மிகச்சிறந்த தற்காப்பு கள ஆட்டக்காரராக இந்திய அணியில் பல்லாண்டுகளாக ஆடிவருகிறார். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கபடி என்பது தமிழர்கள் விளையாட்டு என்பதை உலகமே ஒத்துக் கொண்ட ஒரு விளையாட்டு, கை பிடி என்பதே கபடியாக மாறியது என்பதாக வரலாறு சொல்கிறது, இதை நாம் சடுகுடு என்ற பெயரிலும் நாட்டுப்புற பாடல் வரிகளுடன் விளையாடி வந்த விளையாட்டு. ஏன் இன்று வரை தமிழக அரசின் அங்கீகரிப்பட்ட தமிழகத்தின் விளையாட்டாக இருப்பது கபடி தான். (நம்மை தவிர பங்களாதேஷ் தனது தேசிய விளையாட்டாக அங்கீகரித்துள்ளது) இப்படி தமிழக அரசின் விளையாட்டாக இருக்கும் கபடி இந்த புரோ கபடி லீக்கில் தமிழகத்தில் இருந்து குறைந்த பட்சம் 4 அணிகளாவது பங்கேற்று இருக்க வேண்டும் ஆம், ஊர்களுக்கு இடையிலான போட்டியிலிருந்து அனைத்து மட்டங்களிலும் கபடிப் போட்டிகள் கோயில் திருவிழா, பொங்கல் விழா என்று எங்கும் நிறைந்தே இருக்கும் கபடிப் போட்டிகள். இபப்டி அனைத்து பகுதியிலும் விளையாண்டு வரும் நமது தமிழகத்தில் இருந்து ஒரு அணி கூட இந்த ப்ரோ கபடி லீக்கில் இல்லை. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div style="text-align: justify;">
காரணம் அணியை வாங்குவதற்கோ இல்லை அணி ஒன்றை நிறுவுவவோ எந்த நிறுவனமும் தயார் இல்லை என்று சொல்லலாம் ஆனால் நாமே இப்படி ஒரு போட்டி நடப்பதை அறியாதவர்களாகத் தான் இருக்கிறோம், இந்திய கபடி கழகத்தில் அனைத்து மாநிலங்களும் பங்கு பெற்றுள்ளன. இதில் இந்தியன் ப்ரீமியர் லீக் போன்று அணிகள் ஏலம் விடப்பட்டிருக்கின்றன. எட்டு அணிகள் ஏலம் எடுக்கப்பட்டுள்ளது, பெங்கால் வாரியர்ஸ், பூனேரி பல்தான், யு மும்பா, தபங்க் டில்லி, பெங்களூர் புள்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரைட்ஸ், தெலுங்கு டைட்டான்ஸ் இதில் பூனே அணியை அபிசேக் பச்சன் வாங்கியிருக்கிறார். அதிக பட்ச ஏலத்தொகையாக 12,80,000 ரூபாய்க்கும் குறைந்த பட்ச ஏலத்தொகையாக 9,10,000 ரூபாய்க்கும் அணிகள் ஏலம் விடப்பட்டுள்ளன, தமிழ்நாட்டில் இருந்து ஒருவரு கூட இந்த தொகையை முதலீடு செய்யும் அளவிற்கு இல்லையா என்ன.<br /><br />நடிகர்களுக்கு இடையே நடக்கும் ட்வெண்டி ட்வெண்டி கிரிக்கெட் போட்டி எந்த விதமான விளையட்டு மேம்பாட்டையும் கொடுக்காத வெறும் விளம்பரமாகவும், பொழுது போக்கிற்காகவும் நடக்கும் இந்த போட்டியின் சென்னை அணியை வாங்கிய ராதிகா சரத் குமார் போன்றவர்களுக்கு இந்த 12 லட்சம் பெரிய தொகையா என்ன. தமிழ் நாட்டி மானத்தை கட்டி காப்போம் அதைச் செய்வோம் இதைச் செய்வோம் என்று பேசுபவர்கள் இங்கு பலர் உண்டு ஆனால் இப்படி ஒரு போட்டி அதை முதலில் முன்னெடுத்து இருக்க வேண்டியவர்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர் அதுவும் ஒரு முக்கியமான விளையாட்டு தொலைக்காட்சியான ஸ்டார் ஸ்போர்ட்ஸ் இதற்கு விளம்பரதாராகவும் நேரடி ஒளிபரப்பும் செய்கிறது இத்தகைய ஒரு போட்டி அதுவும் தமிழர்களின் விளையாட்டை நடத்த தமிழ்நாட்டில் இருந்து ஒருவரும் தயார் இல்லை. அதாவது பரவாயில்லை தமிழ் நாட்டில் இருந்து ஒரு அணி கூட கிடையாது.<br /><div style="text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjbGW0kI6Ve9hpao8ldDHYzAgzcAnq9MECgNUfa9UuftzpTLcID56ObvbZzeJAo1owABvZniiQPUkXD_DhzidOlrNJJDgzK0imLTnLbX3oX4c4dO2r1dBfEEOyDOGxY_PgyNGVlbCBuR-s/s1600/kabadihistory.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjbGW0kI6Ve9hpao8ldDHYzAgzcAnq9MECgNUfa9UuftzpTLcID56ObvbZzeJAo1owABvZniiQPUkXD_DhzidOlrNJJDgzK0imLTnLbX3oX4c4dO2r1dBfEEOyDOGxY_PgyNGVlbCBuR-s/s1600/kabadihistory.JPG" height="240" width="320" /></a></div>
தமிழ் நாடு கபடி கழகத்திற்கு தொடர்பு கொண்டு கேட்கலாம் என்றால் இரண்டு நபர்களின் பெயரும் எண்ணும் இணையத்தில் இருக்கிறது ப்ரெசிடெண்டாக திரு. சோலை எம். ராஜா மதுரையை சேர்ந்தவரும், செகரட்டரியாக திரு, சைபுல்லா, திருப்பூரை சேர்ந்தவரையும் குறிப்பிட்டுள்ளார்கள் அவர்கள் எண்களை தொடர்பு கொண்டால் ஒரு நம்பரில் அப்படிப்பட்ட பெயரில் இங்கு யாருமே இல்லை என்கிறார். அடுத்த எண் உபயோகத்தில் இல்லை என்று வருகிறது. இதில் பிரசிடண்டாக இருக்கும் சோலை எம் ராஜா அனைவரும் அறிந்தவரே ஒரு காலத்தில் மதுரை மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற தலைவராக இருந்தவர், இவரது தந்தை மதுரை காவல் துறையில் துணை ஆணையளாராக ப்ணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர்கள் குடும்பத்தின் அடிதடி கட்டப்பஞ்சாயத்து சாம்ராஜ்யம் மதுரை மாவட்டம் அறிந்ததே ராஜா அவர்களின் தம்பி ரவியும் தந்தை சோலை முத்தையாவும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டவர்கள், ரவியின் மீது பல நூற்றுக் கணக்கான கொலை மற்றும் அடிதடி வழக்குகள் உள்ளது. ராஜாவின் மீதும் பல வழக்குகள் உண்டு. இவர் தான் தமிழ் நாடு கபடி கழகத்தின் தலைவராக இருக்கிறார்.<br /><br /><br />இங்கு கபடி கழகம் மட்டும் தவறு செய்யவில்லை நாம் அனைவருமே தவறு செய்துள்ளோம், தமிழ்நாட்டின் விளையாட்டை அடுத்தவருக்கு விட்டுக் கொடுத்துக் கொண்டு இருக்கிறோம், இன்னும் பத்து வருடத்தில் இல்லை இந்திய கபடி கழகத்தில் கபடி வரலாறு என்று பழங்காலத்தில் இருந்து இந்தியா முழுவதும் அனைவரும் விளையாடிய விளையாட்டாக சித்தரித்துள்ளனர். இந்தியா என்ற நாடே 1800களில் தான் உருவானது என்ற வரலாற்றையே மறைத்துவிட்டு. தமிழர் விளையாட்டாக இது எங்கும் அகில இந்திய கபடி கழகத்தின் இணையத்தில் எங்குமே குறிப்பிட படவில்லை. நமது அடுத்த தலைமுறை கபடி என்ற விளையாட்டை எதோ வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட விளையாட்டாக பார்க்க போகிறது என்பது என்னவோ நிதர்சனமாகத் தெரிகிறது.<br /></div>
</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8141777893641371649.post-2435254161768654762014-07-24T12:52:00.002-07:002014-07-24T12:52:51.943-07:00பச்சைமுத்துவின் துரோகம்.. புலிப்பார்வையில்.. <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://www.blogger.com/blogger.g?blogID=8141777893641371649" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhfkd7mcupFOwiQYQ4p82J6yeqzt5lnitxPxCyomntCXOJVCX-vMx1BiWFFQAT06xqkNO9IH2QzrmaCRkuIDx1ePkVImtyXvRDwQQ_Qs1YD3bWxB6WbyGQzIyGzHwKZ0hC-jRP5sD0n5MA/s1600/PULIPARVAI.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhfkd7mcupFOwiQYQ4p82J6yeqzt5lnitxPxCyomntCXOJVCX-vMx1BiWFFQAT06xqkNO9IH2QzrmaCRkuIDx1ePkVImtyXvRDwQQ_Qs1YD3bWxB6WbyGQzIyGzHwKZ0hC-jRP5sD0n5MA/s1600/PULIPARVAI.jpg" height="274" width="320" /></a></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; mso-bidi-language: TA;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; mso-bidi-language: TA;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; mso-bidi-language: TA;">திருவாளர் பிரவீன் காந்தி என்ன நினைத்து இப்படிப் பட்ட காட்சிகளை வைத்தார்
என்பது தெரியவில்லை. இதில் தோழர் சீமானிடம் கதையை சொல்லி அனுமதி வாங்கினேன்
என்றும் ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார்</span>, <span lang="TA" style="font-family: Latha; mso-bidi-language: TA;">அப்படி வாங்கியிருக்கலாம் ஆனால்
அவருக்கு இத்தகைய காட்சிகள் இருப்பது தெரியுமா என்று தெரியவில்லை. இன்னொரு
பேட்டியில் இலங்கை தூதரகத்திடம் அனுமதி வாங்கினேன் என்கிறார் அதை தொடர்பு கொண்டு
கேட்டால் கண் துடைப்புக்காக என்கிறார்.. இந்த அரசியல் பெரும் அரசியல் இதை
கடைசியில் பார்க்கலாம்...</span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; mso-bidi-language: TA;"><br /></span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; mso-bidi-language: TA;">முதலில் பாலச்சந்திரனை கைது செய்யும் பொழுது ஈழ இராணுவ உடையில் இருப்பது போல்
சித்தரித்துள்ளனர். ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச
அரங்கில் தமிழ் சமூகம் வைத்துக் கொண்டிருக்கும் பொழுது. சிங்கள இனவாத அரசு
பாலச்சந்திரன் </span>Cross Fire<span lang="TA" style="font-family: Latha; mso-bidi-language: TA;">ல் அதாவது சண்டை நடக்கும் பகுதியில் குறுக்கே வந்ததால்
இறந்திருக்கலாம் என்று சொல்லி வருகிறது. அதையும் தாண்டி இங்கு சிங்கள இனவாத
அரசுக்கு உதவும் வகையில் பாலச்சந்திரனை ஒரு புலிகள் இராணுவத்தின் போராளியாகவும்
சித்தரித்து உள்ளார். இதைத் தான் சுப்பிரமணியன் சுவாமி பாலச்சந்திரன் புகைப்படம்
வெளிவந்து மாணவர் போராட்டம் நடந்த பொழுது சொன்னான் “பாலச்சந்திரனும் புலிகள்
இயக்கத்தின் ஒரு போராளி</span><span lang="TA" style="font-family: "Times New Roman","serif"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">” </span><span lang="TA" style="font-family: Latha; mso-bidi-language: TA;">அவன் ஒன்றும் சாதரண
பாலகன் இல்லை புலிகள் இயக்க உறுப்பினர் என்று. இனி இனவாத சிங்கள அரசு சொல்லும் கைது செய்து
வைத்திருந்த ஒரு புலிகள் இராணுவ உறுப்பினரான பாலச்சந்திரன் தப்பிச் செல்ல
முயன்றதால் சுட்டுக் கொன்றோம் என்று அடுத்தக்கட்ட புளுகுமூட்டையை அவிழ்த்துவிட
வழிவகை செய்கிறீரார் போல் தெரிகிறது. இல்லை சிங்கள தூதரகத்தில் இவர் சென்று கதை
சொன்ன பொழுது இப்படி காட்சி அமையுங்கள் எங்களுக்கும் வசதியாக இருக்கும் என்று
சொல்லி அதன் படி செய்திருக்கிறாரோ என்று எண்ண தோன்றுகிறது. </span></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha; mso-bidi-language: TA;">இது வரை பாலச்சந்திரன் படங்கள் பல இணையத்தில் இருக்கின்றன ஆனால் அதில் எதாவது ஒரு
பட்த்திலாவது அவன் தமிழீழ தேசிய இராணுவத்தின் உடையுடன் இருப்பதை ஆதாரமாக காட்ட
முடியுமா. ஒரு இராணுவத்திலோ அல்லது காவல்துறையிலோ ஏன் எந்த ஒரு சீருடை பணியில்
இருக்கும் ஒருவரின் குழந்தை தனது தந்தை தாய் போல் ஆடை அணிந்துகொள்ள விரும்புவது
இயற்கை அதைப் போன்று நீங்கள் காட்சியை வ்டிவமைத்தது போல் தெரியவில்லை, சிங்கள
பேரினவாத அரசுக்கு மிகவும் உதவிகரமாக கை கொடுப்பது போல் சிறுவர் போராளிகள் என்ற
குற்றச்சாட்டை மறுபடியும் நிறுவ உதவுவது போலவே உங்கள் காட்சி அமைப்புகள் உள்ளன,
அதுவும் பல சிறுவர்களின் நடுவே அனைவரும் ஆயுதங்களுடன் இருப்பதைப் போன்ற உங்களது
காட்சி அமைப்பு. </span><o:p></o:p></div>
<br />
<div class="MsoNormal">
</div>
<div style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha;"><br /></span></div>
<div style="text-align: justify;">
<span lang="TA" style="font-family: Latha;">மேலும் 2009ம் ஆண்டு கடைசியாக தமிழீழ தேசிய இராணுவத்தின் பாதுகாப்பின் கீழ்
இருந்த ஈழ தேசியத்தில் இருந்து வெளியேறிய அமைப்பு ஐ.நாவின் குழந்தைகள் நல அமைப்பு </span>UNICEF<span lang="TA" style="font-family: Latha;">. இந்த அமைப்புடன்
இணைந்து புலிகள் பல உடன்பாடுகளை செய்து கொண்டு சிறுவர்களின் மறுவாழ்வுக்காகவும்,
மற்றும் அவர்களின் படிப்பு முதற்கொண்டு வாழ்க்கை முன்னேற்றத்திற்காக செய்த பல
காரியங்கள் இருக்கின்றன, ஏன் செஞ்சோலை, காந்தரூபன் போன்ற சிறு குழந்தைகளுக்கான
இல்லங்களைப் பற்றி எங்குமே பேசப்படுவதில்லை. ஏன் செஞ்சோலை படுகொலைகளும் தமிழ்
சமூகத்தின் நினைவில் இருந்து அகற்ற விரும்புகிற நோக்கத்தில்இங்கு திருவாளர்.
ப்ரவீன் காந்தி திரும்பவும் சிங்கள பேரினவாத இராணுவத்திற்கு உதவ தனது காட்சி
அமைப்புகளில் மிகவும் மெனக்கெட்டு நாம் எல்லாம் பெருமை கொள்வது போல் இருக்க செய்து,
அதாவது வீர வசனங்களையும் வீரதீர செயல்கள் கயிறு ஏறுவது, மேலிருந்து குதிப்பது
என்று பல செயல்களை நம் முன் நிறுத்திவிட்டு, அதில் இருக்கும் வீரத்தை ரசிக்கும்
நேரத்தில் சிறுவர் போராளிகள் என்ற இல்லாத கட்டமைப்பை நம் கண்ணுக்கு முன் கொண்டு
வந்து நிறுத்த முயல்வது போலவே தெரிகிறது. </span></div>
<span lang="TA"><div style="text-align: justify;">
<span style="font-family: Latha;"><br /></span></div>
<span style="font-family: Latha;"><div style="text-align: justify;">
மேலும் தமிழீழ அரசங்காத்தின் காலகட்டத்தில் அன்பு பிள்ளை பாலச்சந்திரன் தனது
பள்ளிப்படிப்பை தொடர்ந்து கொண்டிருந்தான் அவன் தனது பள்ளிக்கூட சீரூடையுடன்
இருப்பது போன்ற காட்சிகள் இருப்பதாக தெரியவில்லை. இவரது விளம்பரப்படத்தில், ஒரு
வேளை முழு படத்தில் எங்காவது வரலாம் ஆனால் அதை ஒரு சிறு துளியை இவரது ட்ரைலரிலும்
காட்டியிருக்கலாம் ட்ரைலர் முழுவதுமே ஒன்று சீருடையில் இருப்பது போலவும்
இல்லாவிடில் கடைசியில் பாலச்சந்திரன் இறந்த உடலில் இருக்கும் உடையுடன் பாலச்சந்திரனாக நடித்த சிறுவன் இந்த இரண்டு
உடைகளை மட்டுமே அணிந்திருந்தாக மட்டுமே காட்டி இருக்கிறார். </div>
</span>
<div style="text-align: justify;">
<br /></div>
</span><span lang="TA"><div style="font-family: Latha; text-align: justify;">
ஒரு படம் அதுவும் நடந்த
சம்பவத்தை ஒட்டி சித்தரிக்கப்படும் பொழுது அதன் கூறுகள் சிறிதாவது நடந்த சம்பவத்தை
மக்களுக்கு எடுத்துச் சொல்வதாக அமையவேண்டும். அதைவிடுத்து சித்தரிப்பு என்ற
பெயரில் அதுவும் நமக்கு ஆதரவாக என்ற நிலையில் இருந்தால் கூட அது தவறானதாகவே முடியும்.
மேலும் இன்றைய காலகட்டத்தில் அதுவும் சர்வதேச நாடுகளின் முன்பு நாம் நமக்கு
இழைக்கப்பட்ட அநீதிக்கான நியாயத்தை கேட்டுக்கொண்டிருக்கும் நிலையில் பொதுமக்களின்
மனநிலையில் தாக்கத்தை ஏற்படுத்திய ஏற்படுத்திக் கொண்டிருக்கும் ஓர் நிகழ்வு
பாலச்சந்திரனின் மரணம் இதை ஒட்டிய கதையை பின்ணனியாக வைத்து ஒருபடம் எடுக்கப்படும்
பொழுது பாலச்சந்திரனின் மரணத்திற்கு முழுப் பொறுப்பு ஏற்கவேண்டிய இந்தியாவை, நாம்
விரும்புகிறோம் என்று தனது படத்தின் இடைச்சொறுகலாக வைத்துவிட்டு பிராபகரன்
ஈழத்திற்காக இந்தியா பேச வேண்டும் என்று என்றோ விரும்பியதை இன்று கோடிட்டு
காட்டுகிறார். அதே போல் இந்தியாவில் ஈழ விடுதலை போராட்ட இயக்கங்களுக்கு பயிற்சி
கொடுத்த பொழுது சென்னை பெசண்ட் நகரில் அனிதா பிரதாப் அவர்கள் எடுத்த பேட்டியில்
இன்று பயிற்சி கொடுக்கும் இந்தியாவிற்கு எதிராக ஆயுதம் ஏந்த வேண்டிய நிலை
எங்களுக்கு ஏற்படும் என்று சொன்னதையோ அதன்பிறகு இந்திய அமைதிப் படையுடன்
சண்டையிட்டதையோ அவருடன் பேசிய தோழர்களிடம் எடுத்துக்காட்டி பேசியதாக தெரியவில்லை.. </div>
<div style="text-align: justify;">
<span style="font-family: Latha;"><br /></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-family: Latha;">இதையெல்லாம் தாண்டி இந்த படத்தின் ஒரு படலை எழுதியவர், இந்த படத்தை வேந்தர் மூவிஸ்
என்ற பெயரில் தயாரித்த பச்சை முத்து ஈழ விடுதலையை ஒரே ஒருவர் தான் கேட்டார்
அவருக்காக 1,50,000 லடசம் பேர் செத்தார்கள் என்று 2014 தேர்தல் நேரத்தில்
பத்திரிக்கை பேட்டியில் சொன்னார். இதே பாரி வேந்தரிடம் நாம் கேட்க வேண்டிய
கேள்விகள் பல உள்ளன தமிழர் மீட்சிக்காக கட்சி நட்த்துகிறேன் என்று சொல்கிறார்
தமிழ் நாட்டில் இருக்கும் அத்தனை தமிழனும் வந்து இவர் கட்சி ஆரம்பிக்க தவம் இருந்தானா
என்ன என்று.. இவர் தூக்கி பிடிக்கும் இந்திய தேசிய விடுதலைக்காக இந்தியாவில்
இருக்கும் அனைவரும் போராடி சிறை சென்றானா என்ன என்று எல்லாம்.. ஆனால் ஈழ விடுதலைப்
போராட்ட்த்தை கொச்சைப் படுத்தி பேசிய அதுவும் தேசியத்தலைவரை சர்வதேச நாடுகள்
மக்களை கேடயமாக பயன்படுத்தினார்கள் என்று வைத்த குற்றச்சாட்டை வழிமொழியும் இந்த
பச்சைமுத்து தயாரிக்கும் படம் நமக்கு ஆதரவாக இருக்கும் என்று நம்ப நாம் என்ன
முட்டாளா... </span><br /><br /><span style="font-family: Latha;">பச்சைமுத்துவின் ஊடக பேட்டி... ஈழத்தைப் பற்றி...</span><br /><br /><span style="font-family: Latha;">https://www.youtube.com/watch?v=-lC4FvzpFDk</span><br /></div>
</span><o:p></o:p></div>
Unknownnoreply@blogger.com1tag:blogger.com,1999:blog-8141777893641371649.post-58827649414419258802014-07-10T01:23:00.000-07:002014-07-10T01:28:51.367-07:00மா.பொ.சியும் ஈழத் தமிழர்களும்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjJZml85cV4mSwdvWSnt_GaGG66r3UvE-kgetXMhkubV62UwwC1F-Z0pfH1zyNKlDNAzdcw1tvFidg-n_27n9pTkl_R65mTtxkc8vw-H0WmYY8po-M_4U-jnnyV3Vvxe5mIq5UJGxBAurc/s1600/maposi.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjJZml85cV4mSwdvWSnt_GaGG66r3UvE-kgetXMhkubV62UwwC1F-Z0pfH1zyNKlDNAzdcw1tvFidg-n_27n9pTkl_R65mTtxkc8vw-H0WmYY8po-M_4U-jnnyV3Vvxe5mIq5UJGxBAurc/s1600/maposi.jpg" height="240" width="320" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தமிழ் தமிழர் தமிழ்நாடு என்றாலே பல பிரச்சனைகள் முன்வைக்கப்படுகிறது, அதுவும் திராவிட எதையும் தமிழருக்காக சாதிக்கவில்லை என்று இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் பொழுது தார் கொண்டு இந்தி எழுத்துகளை அழித்தால் பின்னாலேயே மண்ணெண்ணெய்யுடன் சென்று தாரை சுத்தம் செய்து இந்தியை வெளிக்கொணர்ந்த மா.பொ.சியை தமிழ் தேசிய அடையாளமாக முன்னிருத்துகிறார்கள் நவீன தமிழ்தேசியவாதிகள். தனது கொள்கையாக மா.பொ.சி சொன்னது.. </div>
<br />
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
உரிமைக்கு எல்லை வேங்கடம்</div>
<span style="text-align: justify;">உறவுக்கு எல்லை இமயம்</span><br />
<div style="text-align: justify;">
நட்புக்கு எல்லை உலகம்</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
என்று முழங்கினார். இப்படி இந்திய தேசியத்தின் கீழ் தான் தமிழ்நாட்டின் விடிவைத் தேடினார் இப்படி இந்திய தேசியத்தின் கீழ் விடிவு தேடியவர்களே இங்கு தமிழ் தேசியத்தின் மண்ணுரிமை போராளியாகவும், தமிழ்தேசியத்தின் வழிகாட்டியாகவும் முன்னிறுத்தப்படுகிறார்கள்.</div>
<div style="text-align: justify;">
மா.பொ.சி ஒரு விடுதலை போராட்ட காலத் தலைவர் அவரின் இந்தியப் பாசம் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் கீழாக ஒருங்கிணைக்கப்பட்டது என்பது நாம் அறிந்ததே. அதனால் எந்த பிரச்சனையும் இல்லை நமக்கு, ஆனால் தமிழர்களுக்கான தீர்வுகளாக அவரின் போராட்டங்கள் என்பது இந்திய தேசியத்தின் கீழாகவே இருந்தது. இன்னும் சொல்லப் போனால் ஈழப் பிரச்சனைகளில் பல வேலைகளை செய்துள்ளார் என்று மார்தட்டுவார்கள். அவரின் ஈழப்பிரச்சனையின் பார்வை எனபது தனி ஈழத்தை ஆதரிக்கிறீர்களா என்று கேட்டால் ”அது சிங்களவர்களின் செயல்பாட்டை பொறுத்து இருக்கிறது ஈழத் தமிழ்மக்களின் விருப்பம் நான் அன்னியன் என்னால் எதுவும் சொல்ல இயலாது” என்றே கூறுவார். அதாவது இன்றைய காங்கிரஸும் பிஜேபியும் மத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும் ஈழம் என்பது அந்நிய நாட்டு பிரச்சனை அதில் நாங்கள் எப்படி தலையிடுவது என்று கைகழுவும் பழக்கத்தை முன்மாதிரியாக நின்று சொல்லிக் கொடுத்தவர் மா.பொ.சி தான். </div>
<div style="text-align: justify;">
<br />
இது மட்டுமல்ல ஈழ போராட்ட இயக்கங்கள் அனைவரும் இந்தியா சொன்னதைச் செய்ய வேண்டும் என்ற ஊதுகுழலாக செயல்பட்டவர் தான் மா.பொ.சி. ராஜிவ் ஜெயவர்தனே ஒப்பந்தம் ஏற்பட்டபொழுது இந்திய அரசும் அமைச்சர்களுக்கு கேட்டு கொண்டதற்கிணங்க ஈழப் போராட்ட தலைவர்களுடன் பேசி ஒப்பந்தத்தை ஒத்துக் கொள்ள வேலை பார்த்தவர்களில் மிகவும் முக்கியமானவர் மா.பொ.சி அவர்கள் தான். ஈழத்தைச் சார்ந்த யாருமே இல்லாத ஒப்பந்தத்தை இந்தியாவின் நலனுக்காகவும் சிங்களவரின் நலனுக்காகவும் போடப்பட்டபொழுது அதற்கு பிரசார பிரங்கியாக செயலாற்றியவர் மா.பொ.சி. இந்த ஒப்பந்தத்தை இந்தியாவின் கைப்பாவைகளாக இருந்த பல ஈழ போராட்ட இயக்கங்கள் ஏற்றுக் கொண்டன இந்தியாவின் மீறி எதுவும் செய்ய முடியாது என்ற தங்களின் இயலாமையின் கீழாக. ஈழத் தமிழர் நலனை பிரதிபலிக்காத ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ளாமல் இது எங்களுக்கு தேவை இல்லை என்று சொன்னவர்களே கடைசி வரை போராட்டத்தை காப்பாற்றினர், அன்று இந்தியாவிற்காக வளைந்து கொடுத்து இருந்தால் இன்று ஈழத் தமிழினத்தை நாம் தேட வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கும்.<br />
<br />
இப்படி வருங்கால நோக்கம் எதுவும் இல்லாமல் இந்திய அரசின் பிராசார பிரங்கியாக செயல்பட்டவர் மா.பொ.சி அதே காலகட்டத்தில் யாழ்ப்பாண பல்கலையில் இருந்த பேராசிரியர்கள் அனைவரையும் இவருக்கு தெரியும் அவர்கள் அனைவருமே இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ளவியலாது என்றார்கள். ராஜிவ் ஜெயவர்தனா ஒப்பந்தம் ஜூலை 29, 1987 அன்று கை சாத்திடப்பட்டது. ஆனால் ஜுலை 19ம் தேதி யாழ்ப்பாணப் பல்கலையில் நடத்தபப்ட்ட கருத்தரங்கில் <br />
<br />
<b>திரு க.சிற்றம்பலம்</b> அவர்கள் பேசியது “திம்பு பேச்சுவார்த்தையின் போது முன்வைக்கப்பட்ட தமிழர் தாயகம், தமிழர் தேசிய இனம், சுயநிர்ணய உரிமை என்பனவும் அங்கீகரிக்கபப்ட வேண்டும், மலையகத் தமிழர்களுக்கு வாக்குரிமை வழங்க வேண்டும் இதனடிப்படையில் தான் பேச்சுவார்த்தைக்கு போகலாம். இதற்கும் குறைந்த தீர்வுக்கு நாம் பேச்சு வார்த்தைக்கு போகக் கூடாது என்று கூறினார். </div>
<div style="text-align: justify;">
<br />
<b>மு. திருநாவுக்கரசு </b>அவர்கள் பேசியது<b> </b>“சில நியாயங்களை சுட்டி காட்டி போராட்டத்தை அழித்துவிடுவது சரியல்ல, எமக்குள்ளே சில முரண்பாடுகளுக்காக சரணாகதி அடையக் கூடாது. எமது தேசிய இனத்தின் சுயாதீனதிற்கான வாய்ப்புகளை செயலுருப்படுத்த வேண்டும். அதற்காக ஒர் அரசியல் தளம் வளர வேண்டும். அந்த அடித்தளத்தில் சரணாகதியற்ற தீர்வுக்கே நாம் போக வேண்டும்” என்று கூறினார். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<iframe allowfullscreen='allowfullscreen' webkitallowfullscreen='webkitallowfullscreen' mozallowfullscreen='mozallowfullscreen' width='320' height='266' src='https://www.youtube.com/embed/KmXtkIz3nC0?feature=player_embedded' frameborder='0'></iframe></div>
<div style="text-align: justify;">
<b><br /></b></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b>பேராசிரியர் கா.சிவத் தம்பி </b>அவர்கள் பேசியது ”எமது போராட்டத்தின் தன்மை சர்வதேசரீதியில் நியாய முக்கியத்துவம் பெற்றுவரும், முகிழ்விடும் இக்காலகட்டத்தில் இப்படிப்பட்ட இடைக்கால தீர்வுகள் ஆபாத்தானவை, மேலும் இவ்வளவு அழிவுகள், உயிர்சேதங்கள், உடமை இழப்புகள் பின்னரும் நிச்சயமற்ற தீர்வினை விட நாம் தொடர்ந்து அல்லல் படுவதே மேல், எமது துன்பத்தின் மூலமாகவேனும் எதிர்காலச் சந்ததியின் இன்பத்துக்கும் வழி கோலலாம்” முரசொலி (26-7-1987)<br />
<br />
இந்த கருத்தரங்கத்தில் மேலும் கலைபீடாதிபதி பேராசிரியர் என். பாலகிருஷ்ணன், கலாநிதி எஸ். கிருஷ்ண ராஜா, கலாநிதி. வ. நித்தியானந்தன், திரு. எஸ். சத்தியசீலன் போன்றவர்களும் கலந்து கொண்டு ஒப்பந்தத்தின் கூறுகள் எந்த தீர்வையும் தரவில்லை என்பதை வலியுறுத்தினர். <br />
<br />
இப்படி ஒரு பல்கலை பேராசிரியர்கள் மற்றும் அங்கிருந்த அறிவியலாளர்கள் என்று அனைவரும் மறுதளித்த ஒப்பந்தத்தினைத் தான் ஈழத் தமிழர்கள் மீது திணிக்க விரும்பினர். இவரைப் போன்றவர்களால் கட்டமைக்கப்பட்ட மாபெரும் ராஜிவ் ஜெயவர்தனே ஒப்பந்தம் ஈழத்தமிழர்கள் மீது திணிக்கப்பட்டது அதற்கு அங்கு போராடிய சில இயக்கங்களும் துணை போனது. புலிகள் இயக்கம் முதலிருந்தே தனது எதிர்ப்பை தெரிவித்தது, இருந்த போதும் ஒப்பந்தம் திணிக்கபப்ட்ட பிறகு நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஒத்துழைப்பு கொடுக்கவும் ஒப்புக்கொண்டது புலிகள் இயக்கம். ஆனால் நிபந்தனைகள் மீறப்பட்டு சிங்கள இராணுவம் செய்த அனைத்து விசயங்களையும் இந்திய இராணுவமும் செய்த பொழுது இந்தியா எனும் பெரிய நாடு என்பதைவிட எம்மக்களின் வலிக்கான தீர்வே முக்கியம் என்று எதிர்த்து நின்று போராடினர் புலிகள் இயக்கம். ஆனால் அன்று இந்த ஒப்பந்தத்தை திணித்த மா.பொ.சியோ கடைசிவரை ஒபந்த்திற்கு வக்காலத்து வாங்கவே செய்தார். 1990ல் பத்மநாபாவிற்காக இரங்கல் கூட்டம் நடந்தபொழுது அதிலும் திரும்பவும் ஒப்பந்தத்தை வலியுறுத்தியே பேசினார் (விடீயோ இணைக்கபப்ட்டுள்ளது)</div>
<div style="text-align: left;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiPykSd7uLQ2R8UF2YJFpLwdEry3wxzMzNu5NUpYtmRx7p68MxjmD1dQW_8GdcExPRxYxhXKsMuc2VTXBo-Dl3Pk5EUtbIHrrzQoqbYcuBHCzeEcXvKX1h8xCuk3f2mQJGxCv2-iE0EChw/s1600/rajiv+jr.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em; text-align: center;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiPykSd7uLQ2R8UF2YJFpLwdEry3wxzMzNu5NUpYtmRx7p68MxjmD1dQW_8GdcExPRxYxhXKsMuc2VTXBo-Dl3Pk5EUtbIHrrzQoqbYcuBHCzeEcXvKX1h8xCuk3f2mQJGxCv2-iE0EChw/s1600/rajiv+jr.jpg" height="200" width="320" /></a></div>
<br />
சிறு குழந்தைகள் கூட படித்தால் ராஜிவ் ஜெயவர்தனே ஒப்பந்தத்தில் இந்திய நலனும் சிங்களர் நலனும் பேனப்படுவது மட்டுமே இருப்பது தெரியும் ஆனால் அதை தூக்கி பிடித்துக்கொண்டு நின்றவர் தான் மா.பொ.சி, அதுமட்டுமல்லாமல் இந்த ஒப்பந்தத்திற்காக் ஒரு மூவர் அணியாக செயல்பட்டிருக்கிறார் அதில் இருந்த மற்ற இருவர் எழுத்தாளர் ஜெயகாந்தனும் இன்று வரை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாதா இரட்டை நாக்கு சோமாறி “சோ”. இப்படி சோவுடன் கூட்டணி அமைத்து ஈழத்தமிழர்கள் நலனைப் பற்றி பேசாத ஒரு ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ளாதது புலிகள் இயக்கம் செய்த தவறு என்று பிதற்றி திரிந்தார்.<br />
<br />
இத்துடன் நின்றிருந்தால் பரவாயில்லை இன்று வரை முரண்பட்ட இயக்கங்களாக இருந்தாலும் அனைத்து இயக்கங்களும் போராளிகளாகவே ஈழப்போராட்டத்தில் நின்றனர் அதில் புலிகள் இயக்கத்தை புலிப்படை என்று கூறி வேறு முத்திரை வருமாறு பேசியதை இந்த காணொளியில் நன்றாக பார்க்கலாம், இவர்கள் ஒரு 50 பேர் கூட்டத்தில் இப்படி பேசுவதால் நமக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் இன்று இவர் தான் தமிழ்தேசியத்தின் வழிகாட்டி என்பது தான் நகைப்புக்கு இடமளிக்கிறது. <br />
<br />
முதலில் தமிழ் தேசியம் என்பதில் சரியான வரையறையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் இவர்கள் அனைவரும், ஒரு பக்கம் விடுதலைப் போராட்ட மாவீரர்களான புலிகள் இயக்கத்தை ஆதரித்துக் கொண்டே மா.பொ.சி போன்றவர்களை மண்ணுரிமை, தமிழ் தேசிய வழிகாட்டி என்று கூறுவது சரியான அரசியலா என்பதை சிந்திக்க வேண்டும் இல்லையென்றால் நாளை சமூகம் இவர்களைப் பார்த்து சிரிப்பா சிரிக்கும். </div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8141777893641371649.post-71878608031098468672014-06-30T04:11:00.001-07:002014-06-30T04:11:11.963-07:00With you With out You திரையிடல் நிகழ்வில் நடந்த உண்மைகள். <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjoUKaxCs4x-tcKehzZBLFYYh-_XTjM0F09TLVpmju3A__N4TQ6uDiH12vEJ_88yziZNGIEcZp56m0_YZzafddEaODWIEE65N90OvzbvbRZpC4-O0hm6muathCRlNiHP0ZwXPzVKxOsURg/s1600/Oba-Nathuwa-Oba-Ekka-Tamil-Movie.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjoUKaxCs4x-tcKehzZBLFYYh-_XTjM0F09TLVpmju3A__N4TQ6uDiH12vEJ_88yziZNGIEcZp56m0_YZzafddEaODWIEE65N90OvzbvbRZpC4-O0hm6muathCRlNiHP0ZwXPzVKxOsURg/s1600/Oba-Nathuwa-Oba-Ekka-Tamil-Movie.jpg" height="118" width="320" /></a></div>
<br />
<div style="text-align: justify;">
நம் தமிழக கிராமங்களில் வீடுகளின் திண்ணையில் ஒரு மண்பானையில் தண்ணீரும் எடுத்து பருக ஒரு டம்ளரும் இருக்கும். யார் வீட்டு கதவை தட்டி தண்ணீர் கேட்டாலும் கொடுப்பார்களே ஏன் இப்படி வெளியில் வைத்திருக்கிறார்கள், இது எதற்காக என்ற கேள்வி சிறு பிள்ளையில் வந்த பொழுது எனது அய்யாவிடம்(தாத்தா) கேட்டேன், அதற்கு அவர் சொன்னார் நம்மை பிடிக்காதவர் நம் வீட்டை கடந்து செல்லும் பொழுது அவருக்கு தாகம் ஏற்பட்டால் வீட்டின் கதவை தட்டிக் கேட்க கூச்சப்படுவார், ஆனால் இப்படி வெளியில் வைத்துவிட்டோம் என்றால் அவரே எடுத்து குடித்துவிட்டு போகலாம், நம் வீட்டை கடக்கும் பொழுது அவர் தாகத்துடனே கடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்படாது என்றார். இப்படி உலகிற்கே விருந்தோம்பலை கற்று கொடுத்த நமக்கு இன்று விருந்தோம்பல் கற்று கொடுக்கப்படுகிறது. ஆம் பிரசன்ன விதகனேவின் திரைப்படம் அதன் பின்னாலான சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது, இன்றைய இந்துவில் விருந்தோம்பலைப் பற்றி நமக்கு வகுப்பு வேறு எடுத்திருக்கிறார்கள். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பிரசன்ன விதகனேவின் With You With out you பற்றிய மதிப்பீடுகளை விட அந்த படத்தை வைத்து நடத்தப்பட அரசியலே மிகப் பெரும் அளவில் இருக்கிறது. இந்தபிரச்சனையின் ஆரம்பத்தில் இருந்தே இதை பார்த்துக் கொண்டிருந்தவன் என்பதால் இதை பற்றிய தகவல்களை அனைவருக்கும் தெரிய வைக்க வேண்டியதுள்ளது. இந்த படம் PVR திரையரங்குகளில் 17 ஊர்களில் இந்தியா முழுவதும் ஜூன் 20ம் தேதி வெள்ளிக் கிழமை திரையிடப்பட்டது. சென்னையிலும் திரையிடப்பட்டது ஞாயிற்றுக் கிழமை வரை யாரும் இதைப் பற்றி அறிந்திருக்கவில்லை, </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆனால் திடீரென்று தமிழ்தேசிய பாசிசவாதிகள் என்று ஒர் அவலக்குரல் பெருங்குரல் எடுத்துக் கூவியது என்ன படம்? ஏது படம்? யார் படம்? என்று யோசித்துக் கொண்டிருக்கும் பொழுதே உடனே வளைத்து வளைத்து பாசிச முத்திரையை குத்தியது அந்த குரல். சரி இயக்குனரை அனுகுவோம் என்ன பிரச்சனை என்று பார்ப்போம் என்ற நிலையில் தான் சரவணன் குமரேசன் இயக்குனரை தொடர்பு கொண்டார் அப்பொழுது தான் திரப்படத்தை திரையிட அருண் என்பவர் முயல்வதாக அறிகிறார். அருணை நான் தொடர்பு கொண்டேன் அப்பொழுது இவர்கள் தனி சென்சார் நடத்துகிறார்கள் என்று அந்த அவலக்குரல் திரும்பவும் கூவியது. இது இவர்கள் நடத்தும் நாடகமாக தெரியக்கூடாது என்று இந்த கூக்குரல் அவ்வளவே இது. சரி திரைப்படத்தை பார்க்க போகலாம் என்று சென்றோம் படம் பார்த்தோம் அங்கு யாரும் யாரையும் அடிக்கவில்லை ஒரு சிறு விவாதம் தான் நடந்தது அதுவும் ஒரு தாந்தோன்றித் தனமாக தான் சொன்னால் அதை வேதவாக்கு என்பது போல் அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று, ஒருவர் தராதரம் இல்லாமல் குதித்ததாலேயே நடந்தது. அதில் முழுமையாக சம்பந்தப்பட்டவன் என்பதால் அதை முழுமையாகவே எழுதுகிறேன், படத்தை குறித்த அனைத்து சர்ச்சைகளிலில் இதுவும் ஒன்று என்பதால் நான் நேரிடையாகவே திரு. ஜெயபாலனை எதிர்த்து திட்டினேன் என்பதால்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
படம் ஆரம்பித்து விளக்குகள் எல்லாம் அனைத்த பிறகு தான் இவர் திரையரங்கிற்குள் வந்தார் அப்பொழுது நானும் சரவணனும் அருகிலேயே அமர்ந்திருந்தோம். அதன் பிறகு படம் முடிந்தது, திரையரங்கில் சிலர் கை தட்டினார்கள் மற்றவர்கள் எல்லாம் அமைதியாக இருந்தனர் அப்பொழுது ஒரு அவலக்குரலுடன் கூக்குரலிட்டு இயக்குனரை பெயர் சொல்லி அழைத்து படம் சூப்பர் சூப்பர் என்று கூவினார் ஜெயபாலன். இதன் அரசியல் காரணம் உணர்ந்தவனாக அதை விமர்சிக்க கடமைப்பட்டுள்ளேன், அதாவது இவர் படம் நன்றாக இருக்கிறது என்று அங்கு வந்திருந்த அனைவரும் முன்னாலும் அங்கீகரிக்கிறாராம் அதன் பிறகு யாரும் பேசத் தேவையில்லை என்பது போல் ஒரே குரலாக கத்தினார். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அதன் பிறகு இயக்குனருடன் கலந்துரையாடல் தொடங்கியது, அப்பொழுது இயக்குனரிடம் முதலில் ஒருவர் பாராட்டை தெரிவித்தார், அடுத்து ஒருவர் படத்தின் பின்னனி இசையில் தமிழ் பாடல்களே ஒலிப்பதுபோல் பதிவு செய்யப்பட்டுள்ளது ஏன் என்ற கேள்வியை எழுப்பினார். அதற்கு இது மலையகத்தில் தமிழர்கள் வாழும் பகுதியில் எடுக்கப்பட்டது என்று ஜெயபாலன் பதில் கொடுத்தார். யார் இந்த உரிமையை கொடுத்தது இயக்குனரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு இயக்குனர் பதில் அளிக்க வேண்டும் அதைவிடுத்து இவர் யார், இந்த படத்தில் லைட் பாய் வேலை பார்த்தாரா இல்லை உதவி இயக்குனராக பணிபுரிந்தாரா. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இயக்குனருடன் கலந்துரையாடல் எனும் பொழுது இயக்குனர் பேசட்டுமே என்று இல்லாமல் இவர் உள்ளே புகுந்து பதில் அளித்தார். அடுத்த கேள்வியை இன்னொரு தோழர் கேட்ட பொழுது மீண்டும் தனது அவலக்குரலை உயர்த்திக் கொண்டு பதில் அளிக்க முற்பட்ட பொழுது தோழர் சரவணன் குமரேசன் இது இயக்குனருடனான கலந்துரையாடல் அவர் பதிலளிக்கட்டும் நீங்கள் அமைதியாக இருங்கள் என்றார். அதற்கு நீ யார் வாயை மூடிக்கொண்டு உட்கார் என்றார் இந்த பிதாமகர். இவர் தான் அது ஜனநாயகம் இல்லை இது ஜனநாயகம் இல்லை என்று புலிகள் இயக்கத்தை நோக்கி விமர்சனங்களை வைத்தவர். இவரின் ஜனநாயகம் என்ன என்ற கேள்வி இங்கு பல்லிளித்தது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஒரு திரையிடல் நிகழ்வில் இவரும் படத்தை பார்க்க ஒரு பார்வையாளராக வந்துள்ளார், நாங்களும் சென்று இருக்கிறோம் ஜனநாயகப்பூர்வமாக இயக்குனர் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார், பார்வையாளர்கள் கேள்விகள் கேட்கின்றனர் இத்தகைய ஒரு இடத்தில் தான் தோன்றித் தனமாக நான் சொல்வேன் நீங்கள் எல்லாம் கேட்டே ஆகவேண்டும் விட்டேத்தியாக குதித்த ஜெயபாலனை மிகவும் காட்டமாக திட்டினேன். உடனே என்னை ரவுடி மாதிரி பேசுகிறாய் என்றார், கவனிக்கவும் அனைத்து வாதங்களும் பிரதி வாதங்களும் ஆங்கிலத்திலேயே நடந்தது நான் எந்த நாகரீகமற்ற வார்த்தைகளையும் உபயோகிக்கவில்லை. இந்த சமயத்தில் அதுவரை ஜெயபாலனுடன் நின்ற லீனா காணாமல் போனார் சிறிது நிமிடங்கள், அப்புறம் நிகழ்ச்சி ஏற்ப்பாட்டாளர் அருண் ஜெயபாலனை உட்காரச் சொன்னார் அப்பொழுது பின்னால் திரும்பி இவரின் சொந்த கதை சோகக் கதை எதையோ குறிப்பிட்டு அதையெல்லாம் நீங்கள் தட்டிக் கேட்டீர்களா என்றார். அதை இங்கு விவாதிப்பது என்றால் விவாதிக்கலாம், உங்கள் சொந்த பிரச்சனையை பேசவா நாங்கள் வந்திருக்கிறோம் என்று சரவணன் பதில் சொன்னவுடன் பல்லைக் கடித்துக் கொண்டு அமர்ந்து இருந்தார். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஒரு புறம் இந்த பேச்சுகள் நடக்கும் பொழுதே இயக்குனருடனான கலந்துரையாடல் தொடர்ந்து கொண்டு தான் இருந்தது யாரும் அவரை அடிக்கவோ இல்லை அவரை திட்டவோ செய்யவில்லை தங்களிடம் தோன்றிய ஐய்யப்பாடுகளையே கேள்வியாக கேட்டுக் கொண்டு இருந்தன்ர். இயக்குனர் கெளதமன் சக இயக்குனராக ஒரு கேள்வி இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்பதை ஒத்துக் கொள்கிறீர்களா என்ற கேள்வியை கேட்டார், அதற்கு நான் சிங்களவனாக எனது பார்வையை சொல்லியுள்ளேன், ஆனால் அரசு தமிழ் மக்களின் பார்வையில் நின்று அவர்களுக்காக யோசித்தால் தான் மீள் கட்டமைப்பு என்பது சாத்தியமாகும் என்றார். கேட்கப்பட்ட கேள்விக்கு இயக்குனர் பிரசன்ன அளித்த பதில் இரண்டுக்கும் சம்பந்தம் இல்லை. அவர் சொன்ன பதிலில் இனப்படுகொலை என்ற வார்த்தையைக் கூட உபயோகிக்காமல் இனி மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்பதே. இதன் அரசியல் சர்வதேச அரங்கில் Genocide எனும் வார்த்தையை G Word என்றே உபயோகிப்பார்கள், அதைப் போன்றே இயக்குனர் பிரசன்னாவின் பதிலும் அமைந்தது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதன் பிறகு மேலும் சில தோழர்கள் கேள்விகள் கேட்க முயன்ற பொழுது நேரம் இல்லை என்று விலகிச் சென்றார்கள். அப்பொழுது பின்னால் இருந்து பெண்ணின் கூக்குரல் என்னவென்று பார்த்தால் இரண்டு பெண்கள் பேசிக் கொண்டிருந்தனர் ஒரு சிலரிடம் என்ன என்று பார்க்கலாம் என்று சென்ற பொழுது அதில் ஒரு பெண் நான் ஜெயபாலனின் மனைவி என்று கூறினார். சரி இதற்கு மேல் அங்கு செல்வது தேவையில்லாதது என்று நானும் சரவணனும் வெளியேறிவிட்டோம். இந்த சமயத்தில் இயக்குனர், லீனா மணிமேகலை, ஜெயபாலனும் வெளியில் வந்தார்கள் சில தோழர்கள் கேள்விகள் எழுப்பினர் அதற்கு பதில் சொன்னாரா இல்லையா என்பது தெரியவில்லை. அனைவரும் கிளம்பிச் செல்வதில் ஈடுபட்டார்கள். வைக்கப்பட்ட கோரிக்கை என்பது புலிகளை தீவிரவாதிகள் என்று சொல்லும் சப்டைட்டிலை மட்டும் நீக்க முடியுமா என்பது தான் இது படத்தில் இரண்டு இடங்களில் வருகிறது என்பது மட்டும் தான் இது கோரிக்கையாக தான் வைக்கப்பட்டது. அப்படி நீக்காவிட்டால் நாங்கள் அதைச் செய்வோம் இதைச் செய்வோம் என்ற வசனங்கள் எல்லாம் வரவும் இல்லை. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மேலும் கேள்வி பதில்கள் நடக்கும் பொழுதே காவல்துறை உள்ளே வந்தது, ஒரு தனியார் இடத்தில் தனியாரின் அனுமதியில்லாமல் காவல்துறை நுழைய முடியாது அப்படியிருந்த பொழுதும் காவல் துறை உள்ளே வந்தது நிகழ்ச்சியை நடத்தியவர்கள் யாரும் கேள்வி எழுப்பவில்லை. இது நிகழ்வை நடத்தியவர்கள் அசம்பாவிதம் ஏற்படும் என்று நினைத்து காவல்துறையை அணுகி இருக்க வேண்டும், அல்லது வேண்டும் என்றே வந்திருந்தவர்களை மிரட்டும் நோக்கத்துடன் காவல்துறையை உள்ளே அனுமதித்து இருக்க வேண்டும். அவர்கள் எந்த நோக்கத்துடன் செய்திருந்தாலும் சரி இது வரை தமிழ் தேசியக் கூட்டங்களில் எங்கும் எந்த அடிதடியும் ஏற்பட்டதில்லை என்பது நம் அனைவருக்கும் தெரியும். அதிலும் பல இடங்களில் பல இயக்கங்கள் ஒருவரின் கருத்துக்கு நேர் எதிராக நிற்கும் இயக்கங்கள் அனைவரும் ஓரிடத்தில் இணைந்து நின்று போராடி இருக்கிறார்கள் எங்கும் எந்தவிதமான அசம்பாவிதமும் நடந்தது இல்லை ஆனால் இந்த கலை, இலக்கியம், இலக்கணம் என்று வியாக்கியானம் பேசுபவர்கள் நடத்தும் கூட்டங்களில் மட்டும் தான் இத்தகைய கூத்துகள் நடைபெறும், ஏன் பொது மக்களுக்காக நடத்தப்படும் புத்தக கண்காட்சிகளில் கூட கட்டி பிடித்து உருண்டு சண்டை போட்ட நிகழ்வுகள் எல்லாம் உண்டு. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆனால் இங்கிருக்கும் பலர் இதை உணராமல் எதோ தமிழ் தேசியர்கள் தான் குற்றமிழைத்தவர்கள் போல் பிதற்றுகிறார்கள், இதை பார்த்து கலையை ஒரு போராட்ட வடிவமாக செய்து வரும் நமது தோழர்களும் இவர்களை நோக்கி எந்த கேள்வியையும் எழுப்பாமல் நம்மை நோக்கியே விமர்சனங்களை வைக்கிறார்கள். இந்த நிகழ்வில் யாரும் யாரையும் அவமானப்படுத்த வில்லை, வேண்டுமென்றால் நான் ஒருவன் மிகவும் கோபமாக ஜெயபாலனை நோக்கி Who the hell are you to tell us to shut up, You are also guest, I am also a guest என்று கோபமாக கேட்டேன், இதற்கு தான் நான் ரவுடி மாதிரி பேசுகிறேன் என்றார். ஜனநாயகப் பூர்வமாக யாரிடம் கேள்வி கேட்கப்படுகிறதோ அவர் பதில் சொல்லட்டும் நீங்கள் அமைதியாக இருங்கள் என்று தான் சொல்லப்பட்டது. ஒரு பைத்தியம் போல் அன்றிலிருந்து இன்று வரை அவர் பிதற்றி திரிகிறார் கலை இலக்கிய நண்பர்கள் அவரின் பைத்தியத்திற்கு எதை தின்றால் தெளியும் என்று சொல்லிக் கொடுங்கள். தமிழ் தேசியம் பேசுபவர்கள் நாகரீகத்தையும் விருந்தோம்பலையும் தாங்கள் பேசும் தமிழுடனே வாழ்ந்து உணர்ந்து கொண்டவர்கள். </div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<iframe allowfullscreen='allowfullscreen' webkitallowfullscreen='webkitallowfullscreen' mozallowfullscreen='mozallowfullscreen' width='320' height='266' src='https://www.youtube.com/embed/kNy2HUq8nk0?feature=player_embedded' frameborder='0'></iframe></div>
(ஜெயபாலனுடன் நடந்த விவாதத்தின் போது எடுக்கப்பட்ட கானொளி, அவர் பக்கத்தில் அடிக்க யாரும் செல்ல வில்லை என்பது தெளிவாக தெரியும்)<br /><br />
<br />
<div style="text-align: justify;">
கடைசியாக சொல்ல விரும்புவது அடாவடி சென்சார் என்று இவர்கள் கூறுவதற்கான பதில் “தேன்கூடு, எல்லாளன்” போன்ற படங்கள் இவர்களுக்கு கலைவடிவமாக தெரியவில்லையா இந்த படங்களை மக்களுக்கு திரையிடக் கூடாது என்று சென்சார் போர்டு சொல்கிறது அதற்கு எதிர்வினையாற்றுவதில்லை இவர்கள். ஆனால் இந்த அரசு எம் மக்கள் சார்பான தகவல்களை கலை வடிவில் சொன்னால் அனுமதி மறுக்கிறது ஆனால் அரசாங்கத்துக்கு ஆதரவான படங்களை எந்த வடிவில் சொன்னாலும் அனுமதிக்கிறது இந்த நிலை இருப்பதனாலே இங்கே சிலபடங்களை நோக்கியும் அதன் இயக்குனர்களை நோக்கியும் ஏன் எப்படி என்று கேள்வி எழுப்ப வேண்டிய தேவை எங்களுக்கு ஏற்பட்டு உள்ளது. உண்மையான கலையை நேசிப்பவர்கள் இதைப் போன்ற எத்தகைய படங்களும் வெளிவர எந்த சென்சாரும் அனுமதிக்க தேவையில்லை என்று போராடட்டும். </div>
<div style="text-align: justify;">
</div>
<br />
<div style="text-align: justify;">
குறிப்பு : ஊடகங்கள் கூறுவது போல் யாரும் யாரையும் அடிக்கவில்லை. </div>
</div>
Unknownnoreply@blogger.com1tag:blogger.com,1999:blog-8141777893641371649.post-21082282581251452122014-06-08T11:51:00.004-07:002014-06-08T11:54:00.017-07:00வீரமணி எனும் எஜமானன்...<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
தோழர் அதி அசூரனுக்கு ஒரு திறந்த மடல்...</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgNSvoBYk8LfJBLAUu_U4RHCsK38VpW2gAJBmPUsF6CrgTy4ZlZQykt0YLE-h6AloP1QZcG9Pa8QXLO1G5SakyETKogmAp2Cjc6HFQwQJiT_Krx6PbO_iAju4zbtlN1jMhfQzW1tUqNAco/s1600/1veeramani.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgNSvoBYk8LfJBLAUu_U4RHCsK38VpW2gAJBmPUsF6CrgTy4ZlZQykt0YLE-h6AloP1QZcG9Pa8QXLO1G5SakyETKogmAp2Cjc6HFQwQJiT_Krx6PbO_iAju4zbtlN1jMhfQzW1tUqNAco/s1600/1veeramani.png" height="221" width="320" /></a></div>
தோழா..<br />
<br />
வீரமணி ஓர் வாக்கியம் சொன்னவுடன் அனைத்தையும் உடைத்து எறிந்துவிட்டு பொங்குகிறீர்கள். நல்லாத் தான் இருக்கு ஆனால் இந்த பொங்கல் இத்தனை ஆண்டுகாலம் தமிழரின் மீட்சி தான் முக்கியம் அதைத் தவிர வேறு எதையும் பற்றி யோசிக்க வேண்டிய தேவை இல்லை என்று பெரியாரை இகழ்ந்தவர்களுடன் கூட நின்ற பெரியாரியவாதிகளை போற்றும் வகையில் இல்லாமல் மற்றவர்களை இகழும் முறையில் இருக்கிறது உங்கள் பதிவு. இப்படி எனக்கு தோன்ற காரணம் ஏன் என்றால் பெரியார் தமிழின மீட்சிக்காக போராடியவர் என்பதை நீங்களும் அறிவீர்கள் நானும் அறிவேன். ஆனால் அவர் வேற்றுமையில் ஒற்றுமை பாராட்டியவர் என்பதை நீங்கள் மறந்து விட்டீர்கள் இந்தியம் பிடித்துக் கொண்டது போல் தெரிகிறது.</div>
<div style="text-align: justify;">
<br />
தன் கடவுள் மறுப்பு கொள்கையோ இல்லை பகுத்தறிவு கொள்கையோ சுயமரியாதை கொள்கையோ அதற்கு எதிரானவர்களுக்கு நமது பொது எதிரியினால் ஒருவருக்கு பிரச்சனை என்றால் யாரும் கூப்பிடாமல் அவர்களுக்காக ஓடோடிச் செல்வார் பெரியார் அதன் கீழாகவே குன்றக்குடி அடிகளாருக்காக ஓடியதும், அதைப் போலவே சென்னை சர்வகலா சாலையில் தீவிர ஆத்திகரான மறைமலை அடிகளின் புத்தகம் “அறிவுக் கொத்து” எனும் நூலுக்கு எதிராக செயல்கள் நடந்த பொழுதும் யாரும் கூப்பிடமாலேயே ஓடியதும்..<br />
<br />
ஆனால் நீங்கள் இன்று பெரியாரை ஒரு ரசிக மன்ப்பான்மையுடன் நெருங்குகிறீர்கள் என்று நினைக்கிறேன். பெரியாரிய கொள்கை தான் முக்கியம் அதைத் தவிர வேறு எதுவும் இல்லை என்று பேசியது போல் இருக்கிறது தங்களின் திராவிட மூலசூத்திர கட்டுரை.. உங்களைப் போன்ற சமயத்திற்கு ஏற்றார்போல் கொள்கையை மாற்றிக் கொள்ளும் நிலைப்பாடினால் தான் இன்று திராவிடம் கேள்விக்குள்ளாகி உள்ளது.<br />
<br />
பெரியார் தனது கருத்திற்கு எதிரானவர் என்றால் கூட அவருக்கு தனது பொது எதிரியால் பிரச்சனை என்றால் ஓடோடிச் செல்வார் அவர்களுக்காக போராடுவார். ஆனால் அந்த பழக்கத்தில் ஒரு சதவீதம் கூட ஒப்புமை செய்ய இயலாத இந்த வீரமணி அதுவும் பேரறிவாளன் திராவிடர் கழக உறுப்பினர் இல்லை என்று அறிவித்தார் மிகப்பெரிய பிரச்சனைக்குள்ளான காலகட்டத்தில்.. அதுவும் வக்கீல் வீரசேகரன் அதே வழக்கில் கைது செய்யப்பட்ட பொழுது 1000 வழக்கறிங்கர்களை ஒன்றிணைத்து போராட்டம் நடத்தியவர் இவர், ஆனால் பேரறிவாளன் எங்கள் இயக்கத்தினர் இல்லை என்று மட்டும் தான் சொல்ல முடிந்தது இவரால்.. பேரறிவாளனின் ஒட்டுமொத்த குடும்பமும் இன்றுவரை பெரியரை விடாமல் தொடர்ந்து கொண்டுள்ளது... பரவாயில்லை இது நடந்து பலகாலம் ஆகிவிட்டது.. <br />
<br />
ஆனால் தற்சமயம் தோழர் கொளத்தூர் மணி தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப் பட்டபொழுது ஓடோடி வந்தாரா இந்த வீரமணி. நீங்கள் ஒத்த கருத்துள்ளவர்கள் என்று கூறுகிறீர்கள் இவர்களை ஆனால் பெரியாரின் பொது எதிரிக்கான போராட்டத்தில் நமது எதிரிக்கு துன்பம் என்றால் கூட ஓடோடிப் போகும் பெரியாரின் குணம் எங்கு போனது கொளத்தூர் மணி தோழர் கைது செய்யப்பட்ட பொழுது வீரமணிக்கு, நீங்கள் கூறும் ஒற்றுமையான கருத்தின் கீழ் கூட வரவில்லையே. ஜெயலலிதாவின் ஆட்சியில் கொளத்தூர் மணி தோழர் கைது மட்டுமில்லை, கருணாநிதியின் ஆட்சியில் சீமான், வைகோ போன்றவர்கள் 2009ம் ஆண்டும் அதற்கு பிறகும் கைது செய்யப் பட்ட நமது தோழர்கள் முதற்கொண்டு யாருக்காகவும் வரவில்லையே.. நமது தமிழருக்காக ஒடுக்கப்படுவர்களுக்காக ஓடோடி செல்லும் பெரியாரின் குணம் இந்த வீரமணியிடம் வெளிப்பட்டதா எங்காவது.. இல்லையே???<br />
<br />
அப்படியிருக்கும் பொழுது எப்படி இவரை ஒத்த கருத்துள்ளவர் என்று சொல்கிறீர்கள். இத்தனை வருடமும் தமிழ்தேசியம் என்று சொல்லி பெரியாரை தூற்றுபவர்களுடனும் சேர்ந்து நாம் நின்றது பெரியாரை விட தமிழினம் முக்கியம் என்பதால் ”<b>தமிழ்நாடு தமிழருக்கே</b>” என்பதால். ஆனால் அதை எல்லாம் நகைப்புள்ளாக்கி இன்று பெரியார் திடலின் எஜமான் தன் எஜமான புத்தியை விடாமல். அதாவது பிரச்சனையின் போது ஓடோடி வந்து ஒன்றிணைந்து தமிழினத்திற்காக நிற்காமல் ஓடி ஒளிந்த ஒருவரை ஒத்த கருத்துள்ளுவர் என்று சொலவது நகைப்பிற்கு இடமளிக்கிறது..<br />
<br />
கொஞ்சம் வரலாற்றை பெரியாரின் ரசிகராக இல்லாமல் தமிழர்களின் மீட்சியின் கீழாக பாருங்கள். அப்பொழுது தெரியும் உங்களின் போராட்டத்தில் நானும் கலந்து கொள்ள விரும்புகிறேன் என்று சொல்லாமல் இதோ என் இடம் பெரியார் திடல் இருக்கிறது வாருங்கள் என்று விடும் எஜமான அரசியலின் அரைகூவல் கண்ணுக்கு தெரியும் அவரின் எஜமானிய புத்தியும் புலப்படும். அதுவும் ஈழவிடுதலையில் இருந்து தமிழ்நாட்டு தமிழர்களின் போராட்டம் அனைத்திலும் கள்ள மெளனம் சாதித்த ஒருவர் இன்று அடுத்த கட்டத்திற்கு காலை எடுத்து வைக்க ஒரு அங்குல இடம் கூட இல்லாமல் வெற்றிகரமான ஒரு போராட்டத்தை நாம் அனைவரும் இணைந்து நடத்தி சென்று கொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்து அது இவரின் இருப்பை கேள்விக்கு உள்ளாக்கி இருக்கிறது என்பதை புரிந்து இவர் விடுத்த அரைகூவலை படிக்கும் பொழுதே புரியும்.. நாம் இதுவரை இணைந்து நின்று நடத்திய போராட்டங்கள் இனி நடை பெறக்கூடாது நம்மை பிரிக்கவேண்டும் என்ற எண்ண ஓட்டத்தின் கீழாகவே இந்த அரைகூவல்..<br />
<br />
நம்மை பிறித்தாளும் சூழ்ச்சியே இவர் விடுத்திருக்கும் அரை கூவல் என்னை பொறுத்தவரை ஒரு பகுத்தறிவு வாதியாக, பெரியாரின் கருத்துகளை புரிந்து கொண்டவனாக இவரின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு நான் உட்பட மாட்டேன்.. பெரியாரை தூற்றுகிறவர்களுடன் இணைந்து நிற்கலாம் எனென்றால் அவர்கள் நாம் அமைக்கும் களத்தில் வந்து நின்று போராடுகிறார்கள், அவர்கள் அமைக்கும் களத்திலும் நமக்கான இடத்தை ஒதுக்குகிறார்கள்.. என்றாவது ஒரு நாள் அவர்கள் பெரியாரை புரிந்து கொள்வார்கள், ஆனால் வீரமணி நமக்கு பல துன்பங்கள் வந்த பொழுதும் வேடிக்கை பார்த்தவர் எனபதை மறந்துவிடாதீர்கள். பெரியாரிய கொள்கை என்பது அய்யகோ நம்மவர் பெரியாரை ஏற்றுக் கொண்டவர் அதனால் அவர் உணர்ந்துவிட்டார் என்று கழிவிரக்கம் கொளவது அல்ல... இன்று அரைகூவலிட்டவர் நம் தோழர்கள் உமாபதி உட்பட இன்னும் பலர் சிறையில் இருக்கிறார்கள் அதற்காக ஏன் வந்து போராடவில்லை என்ற கேள்வியை எழுப்புங்கள், அது தான் பகுத்தறிவு. <br />
<br />
தமிழினத்தின் மீட்சி என்பது வீரமணியை வெளியேற்றி பெரியார் திடலை தமிழர்களுக்கு சொந்தமாக்குவதே.. வீழ்ந்துவிடாதீர்கள் கொஞ்சம் பெரியாரின் ரசிகராக இல்லாமல் பெரியாராக சிந்தியுங்கள் Feel your self in Periyar's shoes... <br />
<br />
ஒரு போராளி களத்துக்கு வருவான் ஆனால் என்றும் இதோ எனக்கு சொந்தமான இடம் இருக்கிறது அதை களமாக மாற்று என்று சொல்ல மாட்டான்.. அப்படி ஒருவர் சொன்னான் என்றால் அவன் எஜமானன்...</div>
</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8141777893641371649.post-57341612700196177252014-06-04T04:05:00.003-07:002014-06-04T04:05:41.587-07:00கம்பெனியாம் கம்பெனி மும்மூர்த்திகள் கம்பெனி<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg0fpWbpIpIl98hjZlggnfWrAgNV3vDOMWuL04-wEKkkFOGsaKiRt2rr78Wi89_4BtMBTw0z06FxXb3dBBovRdK5kzzljKQM5UEoSuTMnZ7FZSn39ErrokA6ihxEWEHAFuQhh4PnX6W8ro/s1600/23MP-_ROBINSON_PAR_1152041g.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg0fpWbpIpIl98hjZlggnfWrAgNV3vDOMWuL04-wEKkkFOGsaKiRt2rr78Wi89_4BtMBTw0z06FxXb3dBBovRdK5kzzljKQM5UEoSuTMnZ7FZSn39ErrokA6ihxEWEHAFuQhh4PnX6W8ro/s1600/23MP-_ROBINSON_PAR_1152041g.jpg" height="212" width="320" /></a></div>
<br />
1948ம் வருடம் ஒரு கம்பெனி ஆரம்பித்தார்கள், ஆரம்பிக்கும் பொழுது பங்கு தாரர்கள் எல்லாம் ஒரே முடிவுடன் இருந்தார்கள் அது தான் தேர்தல் கலாட்டாவில் குத்தாட்டம் போட்டு அதன் மூலமாக பேட்டை ரவுடி ஆகி தான் மக்களுக்கு நல்லது பண்ண முடியும் என்று கம்பெனியின் லாபமாக சொன்னார்கள். கொசுறாக தேசிய அளவில் கல்லா கட்டும் தேசிய தாதாவை தமிழ்நாட்டுக்குள் அழித்துவிடப் போகிறோம் என்று உதார் விட்டார்கள். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதில் இவர்கள் வேறு இந்த தேர்தல் கலாட்டாவில் அடித்த கூத்து இருக்கே அது தான் இந்த கம்பெனியின் நகைச்சுவையை நமக்கு உணர்த்தும். 1952ம் வருட தேர்தலில் எங்கள் ஆதரவு வேண்டும் என்றால் தனித் தமிழ்நாடுக்கு ஆதரவு கொடுப்பவருக்குத் தான் எங்க ஆதரவு என்றார்கள். தேர்தல் கலாட்டாவில் கலந்துக்க போறோம் அப்படி கலாட்டா பண்ணி பேட்டை ரவுடியா வந்தால் தான் மக்களுக்கு நல்லது பண்ண முடியும் என்று சொன்னவர்கள் மத்தவங்க எல்லாம் கலாட்ட பண்ணுங்க நாங்க வெளியில் இருந்து வேடிக்கை பார்க்கிறோம் என்று தங்கள் வீரதீர சொரூபத்தை வெளிக் காட்டினார்கள். தேர்தலில் பங்கு கொள்ளும் தைரியமும் இல்லை அதே வேளையில் கலாட்ட பண்ண கட்டை கடப்பாரை மட்டும் கொடுப்போம் என்றார்கள். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்த தனித் தமிழ்நாடு நிபந்தனைக்கு சில கம்பெனிகள் ஒத்து கொண்டு இவர்களிடம் தனி தமிழ்நாட்டை ஆதரிக்கிறோம் என்று ஒப்பந்தம் போட்டுக் கொண்டார்கள். ஆனால் அவர்கள் வெற்றி பெற்றவுடன் இவர்கள் எந்த தேசிய தாதாவை அழிக்க கிளம்பினார்களோ அந்த தேசிய தாதாவிடம் சரணடைந்து அமைச்சர் பதவி எல்லாம் வாங்கினார்கள் அந்த சில்லு வண்டுகள். அந்த சில்லு வண்டுகளை கண்டிக்க கூட வக்கில்லாமல் கலாட்டா பண்ன வீர பராக்கிரமர்கள், அதற்கு அடுத்தும் பெரிய கலாட்டக்கல் எல்லாம் செய்யவில்லை 1967 வரை அதாவது கம்பெனி ஆரம்பித்து 1948ல் இருந்து 67 வரை 19 ஆண்டு காலம் உள்ளே இவர்களுக்கிடையே கச்சை கட்டி சண்டை போட்டு பங்கு தாரர்கள் பலர் தனியாக கம்பெனி ஆரம்பித்தது தான் மாபெரும் சாதனையாக இருந்தது.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgOiYehroF-LXl-GPjA2kO2GaIq2xMJtBS35eTOl3D9MIz4JvDd3IPasgZRuwizzsFTeJKO8Opy6gan72m9IGYYqnV0g9NU-f_-6Jd8DqrYyv8KFDcZbKu-J6x2abrvwG-LkAvzn8Oikr0/s1600/anna+2.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgOiYehroF-LXl-GPjA2kO2GaIq2xMJtBS35eTOl3D9MIz4JvDd3IPasgZRuwizzsFTeJKO8Opy6gan72m9IGYYqnV0g9NU-f_-6Jd8DqrYyv8KFDcZbKu-J6x2abrvwG-LkAvzn8Oikr0/s1600/anna+2.jpg" height="228" width="320" /></a></div>
<br />
1967ல் தேசிய தாதா தமிழ்நாட்டு மக்களை நீ என் மொழியை கத்துக்கணும் இல்லாவிடில் உன்னை உதைப்பேன் என்ற பொழுது தன்னெழுச்சியாக எழுந்த போராட்டத்தையும் போராட்ட மாணவர் தலைவர்களையும் வளைத்துப் போட்டு கண்ணீர் விட்டு அழுத்தது இந்த கம்பெனி உரிமையாளர்கள். நம்ம மக்களும் இவர்களின் கண்ணீரையும் கம்பலையையும் பார்த்து தேர்தல் கலாட்டாவில் இவர்களோடு சேர்ந்து நின்று தொலைத்தார்கள். அன்று பிடித்தது தமிழ் நாட்டுக்கு சளி.. அன்னைக்கு பிடிச்ச சளிதான் இன்னைக்கு வரைக்கும் எத்தனை கசாயம் குடிச்சாலும் விடமாட்டேன் என்கிறது.<br />
<br />
நாம சளியோட அலைவது முடியாது என்று தான் இந்த டூபாக்கூர் கம்பெனியில் கணக்கு கேட்டு கொடுக்கலை என்று மூக்கை சிந்திட்டு வெளியில் ஓடி வந்தவங்களை எல்லாம் ரொம்ப நல்லவர்கள் என்று ஆதரித்து தேர்தல் கலாட்டா செய்து பேட்டை ரவுடி ஆக்கினோம். இதையெல்லாம் மறந்து தன்னால மக்களுக்கு ஏற்பட்ட சளியினால் தான் நம்மை மூக்கை சிந்தி தூக்கி போடுவது போல் தூக்கிப் போடுகிறார்கள் என்பதை உணராமல் இன்னைக்கு வரைக்கும் மக்களைப் பார்த்து நீ சளி வேண்டாம் என்று மஞ்சள் காமலையிடம் மாட்டிக்கிட்டாய், வாந்தி பேதி உனக்கு வரப்போகுது என்று சாபம் விடுகிறார்களே தவிர இது வரை எதாவது நல்லது பண்னுவார்கள் என்று பார்த்தால், 2009ல் பேட்டை ரவுடியாகவும் தேசிய தாதாவிற்கு அல்லக்கையாகவும் இருந்து 1,50,000 மக்களை தங்களின் குடும்பத்தினர் குத்தாட்டம் போட்டு காவு கொடுத்தனர்.<br />
<br />
இதனை எல்லாம் உணர்ந்த மக்கள் மஞ்சள் காமலையோ இல்ல வாந்தி பேதியோ இருந்து தொலையட்டும் உன்னை பேட்டை ரவுடியாக மாற்றி மூக்கை சிந்திக்கிட்டே திரியமுடியாது என்று சொன்னால் இந்த வெங்காய வெண்ணை வெட்டி திருட்டு மும்மூர்த்தி கம்பெனிக்கு புரியவே மாட்டேன் என்கிறது. அது எப்படியா எந்த இடத்திலும் சொல்லாமல் கொள்ளாமல் கம்பெனி பெயரை மாற்றிவிட்டீர்கள். </div>
<div style="text-align: justify;">
திருட்டு </div>
<div style="text-align: justify;">
மும்மூர்த்தி(ஸ்டாலின்,அழகிரி, கனிமொழி) </div>
<div style="text-align: justify;">
கம்பெனி என்று...<br />
<br />
இனியும் மக்கள் உங்களை சகித்துக் கொள்ள மாட்டார்கள், எனென்றால் சளி தானே என்று அசிங்கமாக பொதுவில் மூக்கை சிந்திக்கிட்டே அலைய விரும்பவில்லையாம். </div>
</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8141777893641371649.post-70387359434142692982014-05-17T07:23:00.000-07:002014-05-17T07:23:29.642-07:002014 தேர்தல் ஓர் பார்வை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
2014 தேர்தலுக்கு முன்பாகவும் சரி அதன் பின்னும் சரி யாரும் இப்படி ஒரு முடிவு வரும் என்பதை எதிர்பார்க்கவில்லை. அனைத்து கருத்துக் கணிப்புகள் எல்லாம் ஆதிமுகவிற்கு 20, 25, 27 தொகுதிகள் என்று தான் கூறிவந்தன. ஆனால் அனைத்தையும் தலைகீழாக மாற்றி ஒட்டுமொத்தமாக 37 தொகுதிகளில் ஆதிமுக வெற்றிப் பெற்றுள்ளது என்றால் அதன் பின்னான கரணங்கள் ஆராயப்பட வேண்டும். முதலில் அனைத்து கட்சிகளும் வாங்கிய வாக்கு சதவீதம் </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆதிமுகவின் ஓட்டு சதவீதம் 44%</div>
<div style="text-align: justify;">
திமுக கூட்டணியின் வாக்கு சதவீதம் 26.3%</div>
<div style="text-align: justify;">
பாஜக கூட்டணி 20.6%.</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgsXhEXSU74rbSeKXWu_NkvQHPaCd90O5YlLzzui-ovgXoaawD4Eq3iy2d2WGXzUMZh4cWLbtDnkaOwfj0yM3ycnUSOd1l-ijG7q0-AOAh7RwjZWos1vG5n_s9frgPPYaOEYSqCKdd953Y/s1600/votepresentage.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgsXhEXSU74rbSeKXWu_NkvQHPaCd90O5YlLzzui-ovgXoaawD4Eq3iy2d2WGXzUMZh4cWLbtDnkaOwfj0yM3ycnUSOd1l-ijG7q0-AOAh7RwjZWos1vG5n_s9frgPPYaOEYSqCKdd953Y/s1600/votepresentage.JPG" height="320" width="295" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மேலே குறிப்பிட்டு இருப்பது 2014ன் வாக்கு விகிதம். ஆனால் எப்பொழுதுமே திமுகவின் வாக்கு வங்கி 26% ஆதிமுகவின் வாக்கு வங்கி 29% இப்படித்தான் ஆண்டாண்டு காலமாக தமிழக தேர்தலில் வெற்றிக்கும் தோல்விக்கும் இடையிலான வாக்கு சதவீதம். இதில் இந்த வாக்கு வங்கியை சேராத மக்கள் ஒவ்வொரு முறையும் தங்களது வாக்குகளை அடுத்து நமக்கு யார் நல்லது செய்வார் என்று முடிவெடுத்து வோட்டுபோடுவார்கள் அதனடிப்படையில் வெற்றி பெறுபவர் மாறி மாறி வந்தனர். ஆனால் இந்த முறை ஆதிமுக எந்த கூட்டணியும் இல்லாமல் தேர்தலை சந்தித்து மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. திமுகவும் மிகப்பெரிய கூட்டணி என்ற ஒன்றில்லாமல் போட்டியிட்டது.</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதில் ஆதிமுகவின் வாக்கு வங்கி என்பது 29% தான் ஆனால் அதை தாண்டி 44% வாக்கு வாங்கி வெற்றி பெற்றுள்ளார். இது வாக்கு வங்கி சேராத மக்களின் வாக்குகள். மேலும் சட்டசபை தேர்தலும் பாராளுமன்ற தேர்தலும் பெரும்பாலும் ஆட்சிகலைப்பு போன்றவைகள் நடைபெற்றால் ஒழிய 1996வரை ஒரே சமயத்தில் தான் வரும். ஆனால் அது உடைந்து இரண்டும் வெவ்வேறு காலங்களில் நடக்க ஆரம்பித்த பிறகு ஆளும் மாநில அரசின் செயல்பாட்டை வைத்து தேர்தலில் வாக்குகள் மாறி வந்தது. இதற்கு மிகச்சிறந்த உதாரணமாக 1991-96ல் ஜெயலலிதாவின் ஆட்சியின் ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக கருணாநிதி 96ல் பெரும்பான்மை பெற்று மாநிலத்தில் ஆட்சியை பிடித்தார். அதே சமயத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலிலும் United Front எனும் கூட்டணியாக திமுக, தமிழ் மாநில காங்கிரஸ் (மூப்பனார்), மற்றும் சிபிஐ ஆகியோர் அடங்கிய கூட்டணியில் தமிழக பாரளுமன்ற தொகுதிகள் 39 இடங்களையும் கைப்பற்றினர். ஆனால் 1996 இவர்கள் ஆதரவுடன் அமைக்கப்பட்ட தேவகவுடா தலைமையிலான அரசு ஒரு வருடம் அதன் பிறகு ஐ.கே குஜ்ரால் தலைமையில் ஒருவருடமும் ஆட்சியில் இருந்து, அதன் பிறகு ஆட்சி கலைக்கப்பட்டது. 1998ல் பாராளுமன்ற தேர்தல் மறுபடியும் நடந்தது. 1996க்கு பிறகு சட்டமன்றம் பாராளுமன்ற தேர்தல்கள் இருவருட இடைவெளியில் தான் நடக்கிறது. </div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjugvC9ntHkWBv2dV_eeEyApiFWHg9_clOJRPKXKFvAh5Zi0I8tGDrC53KKFMsVFigvgPg_cHDRja3ju6B1XDFoVe5f4vdGchd_mXKJZFvKABUxsZ2XrTj1U9S8xqOyc61LE4nYlGT2QQE/s1600/1996.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em; text-align: center;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjugvC9ntHkWBv2dV_eeEyApiFWHg9_clOJRPKXKFvAh5Zi0I8tGDrC53KKFMsVFigvgPg_cHDRja3ju6B1XDFoVe5f4vdGchd_mXKJZFvKABUxsZ2XrTj1U9S8xqOyc61LE4nYlGT2QQE/s1600/1996.JPG" height="320" width="178" /></a></div>
<div style="text-align: justify;">
<br />1996 தேர்தலில் ஜெயலலிதா மீதான ஊழல் குற்றச்சாட்டுகளின் கீழாக தேர்தலில் படுதோல்வி அடைந்திருந்தார், அதாவது போட்டியிட்ட 160 தொகுதிகளில் 4 தொகுதிகள் மட்டுமே வெற்றியடைந்தார். இப்படி மக்களின் ஒட்டுமொத்த வெறுப்பையும் சம்பாதித்து நின்ற ஜெயலலிதா இரண்டே ஆண்டுகளில் 1998 பாராளுமன்றத் தேர்தலில் 30 தொகுதிகளில் வெற்றிபெற்றார், இதன் காரணம் அன்று ஆண்டு கொண்டிருந்த திமுக அரசின் மீதான வெறுப்பு. 1998 தேர்தலில் ஜெயலலிதா இருந்த பிஜேபி கூட்டணி ஆட்சி அமைத்து ஜெயலலிதாவாலேயே கவிழ்க்கப்பட்டது, மறுமுறை 1999ல் தேர்தல் நடந்தது இதில் திமுக, பாஜக ஒரே கூட்டணியில் நின்றன இதில் 26 இடங்கள் பிஜேபி, திமுக கூட்டணியும் 13 இடங்கள் அதிமுக, காங்கிரஸ் கூட்டணிக்கும் கிடைத்தது. இதன் பிறகு தேர்தல் என்பது மாநிலத்தில் சட்டசபை தேர்தல் அது 2001ம் ஆண்டு நடைபெற்றது இதில் ஜெயலலிதாவின் ஆதிமுக கட்சி ஆட்சியை கைப்பற்றியது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgq-Za65MYI2Cvg9X-XONl-aSxPx8ZAx9jIdLIE9e2ksZxr6-D0OH2CqS6y-lBYHV9MLfCMZ4xOdLaKJcUctw7yKq6el14sqU1esURItM35b_WgTvZaQ29e5g979whyJX5-tALhb9vWTRw/s1600/2004elec.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em; text-align: center;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgq-Za65MYI2Cvg9X-XONl-aSxPx8ZAx9jIdLIE9e2ksZxr6-D0OH2CqS6y-lBYHV9MLfCMZ4xOdLaKJcUctw7yKq6el14sqU1esURItM35b_WgTvZaQ29e5g979whyJX5-tALhb9vWTRw/s1600/2004elec.JPG" height="320" width="175" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div style="text-align: justify;">
2004ல் பாராளுமன்ற தேர்தல் இதில் கருணாநிதி 40ம் நமக்கே என்று பாண்டிச்சேரிஉட்பட அனைத்து எம்பி தொகுதிகளையும் அறிவித்து. 40 இடங்களில் வெற்றி பெற்றார். தமிழகத்தில் இருக்கும் ஒட்டுமொத்தமாஅன் 39 தொகுதிகளை வெற்றி பெற்றார். இதற்கு அன்றைய ஆளும் அதிமுகவின் மீதான வெறுப்பே காரணம். அதாவது 2001 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுகவின் ஆட்சியின் மீதான வெறுப்பாக 2004 தேர்தலில் அதற்கு முந்தைய பாராளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணியில் இருந்து அமைச்சர் பதவியெல்லாம் வகித்த திமுக அந்தர் பல்டி அடித்து காங்கிரஸுடன் கூட்டணி வைத்து 2004 தேர்தலில் 39 தொகுதியையும் கைப்பற்றியது. இப்படி தொடர்ந்து ஆளும் மாநிலக் கட்சியின் வெற்றியாக இல்லாமல் எதிர்கட்சியாக இருப்பவர்களே 1998லிருந்து பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் வெற்றி பெற்றிருக்கின்றனர். மேலும் மத்தியில் யார் ஆட்சி என்பதை தமிழக மக்கள் கவலைப்படுவதில்லை தமிழகம் சார்பாக யார் பாராளுமன்றம் போவது என்பதையே பார்த்து வருகின்றனர்.<br /><br />2009 தேர்தலிலும் இதே தான் நடந்தது அதற்கு முதல் தேர்தலில் 40ம் நமக்கே என்று வெற்றி பெற்றவர்கள் இப்பொழுது 2006 சட்ட மன்ற தேர்தலில் வெற்றி பெற்று திமுக மாநிலத்தில் ஆட்சியில் இருந்தது, அதற்கு முதல் தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று தக்கவைத்திருந்த கட்சி மிக எளிதாக 2009 தேர்தலில் அதே நிலையில் வெற்றிபெற்று இருக்கலாம் ஆனால் இந்த தேர்தலில் 27 இடங்கள் திமுகவிற்கும் 12 இடங்கள் அதிமுகவிற்கும் என்று மாறியது. இப்படி ஒவ்வொரு முறையும் தமிழகத்தில் ஆளும் கட்சிக்கு எதிரான மனப்பான்மை ஏற்படுவதும் அதன் கீழாக பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் தமிழகத்தை பொறுத்து அமையும் ஆனால் அதை ஒட்டுமொத்தமாக உடைத்து கூட்டணிகள் என்பது கூட முக்கியம் இல்லை என்பதை அனைவருக்கும் உணர்த்தும் விதமாக இந்த தேர்தலில் 37 தொகுதிகளில் ஒரே கட்சி தமிழக வரலாற்றில் இது வரை யாருமே பெறாத வெற்றியை தமிழக மக்கள் கொடுக்க என்ன காரணம் என்பது கவனிக்க பட வேண்டிய ஒன்று.<br /><br /> <a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhSZUVECzUkBffZ0k42W-GOIM799eOQGpF1l6-a3KFbfD_Pg-DRz3qHVTv1hl0KCnHpB4CpgGYDUgmLT1krkVpa1E7y8pSt6O06FBDwLEh_wMCofuRPZpX8lhtnE2lAV3BNzcuM8ii8XnA/s1600/1980mgr.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em; text-align: center;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhSZUVECzUkBffZ0k42W-GOIM799eOQGpF1l6-a3KFbfD_Pg-DRz3qHVTv1hl0KCnHpB4CpgGYDUgmLT1krkVpa1E7y8pSt6O06FBDwLEh_wMCofuRPZpX8lhtnE2lAV3BNzcuM8ii8XnA/s1600/1980mgr.JPG" height="320" width="116" /></a><br />எம்.ஜி.ஆர் என்ற பிம்பம் மக்களின் மனதில் நிறைந்து இருந்த காலத்தில் கூட இவ்வாறான ஒரு முடிவு எப்பொழுதும் மக்கள் கொடுத்தது இல்லை, 1980ம் ஆண்டு சரண் சிங்கின் அரசு கவிழ்ந்து நடந்த தேர்தலின் போது தமிழகத்தில் எம்.ஜி.ஆர் ஆட்சியில் இருந்தார் ஆனால் அப்பொழுது நடந்த தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணி 37 இடங்களில் வெற்றி பெற்றது. எம்.ஜி.ஆரின் கூட்டணி 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இதன் பிறகு ஆட்சி அமைத்த காங்கிரஸை வைத்து மக்களின் நம்பிக்கையை எம்.ஜி.ஆர் இழந்துவிட்டார் என்று 1980ல் தமிழக எம்.ஜிஆரின் ஆட்சியை கருணாநிதியும் இந்திரா காந்தியும் கலைத்தனர். ஆனால் காமராஜருக்கு பின்னர் மறுபடியும் தேர்தலில் பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி இரண்டாவது முறையாக வெற்றி பெற்றார் எம்.ஜி.ஆர் ஆனால் அவர்கூட இப்படி தனியாக நின்று பாராளுமன்ற தேர்தலில் 37 இடங்களை கைப்பற்றியதாக எந்த சரித்திரமும் இல்லை.<br /><br />2014 தேர்தல் என்று இல்லை எந்த தேர்தலிலும் தமிழக மக்களைப் பொறுத்த வரையில் மத்தியில் யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்று நினைத்து வாக்களித்தது இல்லை. தமிழ்நாட்டில் இருந்து யார் போகவேண்டும் யார் பேசினால் போதும் என்று நினைக்கிறார்களோ அவர்களையே தேர்ந்து எடுக்கிறார்கள் அதுவும் தங்களின் மாநிலத்தில் நலனை சார்ந்து மட்டுமே. இங்கு ஆட்சியில் இருக்கிறவர் அங்கு போய் பேச வேண்டும் என்பதைப் பற்றி கவலைப்படுவதில்லை எதிர்கட்சியாக நின்றவர்களை வெற்றி பெறச்செய்து அனுப்பியுள்ளனர். <br /><br />இந்த தேர்தல் ஆளும் கட்சிக்கு மேலும் ஒரு வேலையைக் கொடுத்துள்ளது, இது தமிழர் நலன் சார்ந்து தமிழக சட்டசபையில் தமிழக மக்களின் தீர்மானமாக இயற்றப் பட்ட தீர்மானங்களை மத்திய அரசு கண்டு கொள்ளாமல் இருந்தது இது வரை மத்திய அரசில் பங்கு பெற்ற தமிழகத்தை சேர்ந்தவர்களும் அதை மத்திய அரசுக்கு எடுத்து சொல்லவில்லை இனி தமிழகத்தில் தமிழ் மக்களின் தீர்மானங்களை பேசும் பெரும் பொறுப்பையும் கொடுத்து அனுப்பியதாகவே தோன்றுகிறது. </div>
</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8141777893641371649.post-43473018376274147532014-05-14T02:01:00.000-07:002014-05-14T02:01:28.006-07:00ஒண்டிவீரன் எனும் அருந்ததியர் மாவீரன்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh6Aq_dPCwQ2RBxpfGlpon6BV_gljk4H3DsRz_bIS-7BBpGzAfZ0SHr51a0ITzA4vKiKVFg9P19o-2G30ql2NBuVSp2CXYeaFTWXOzbV2kzTiMAx75eKO9X1g6iKO0oMB772TWDwjd4iuo/s1600/Maveerar_Ondiveeran.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh6Aq_dPCwQ2RBxpfGlpon6BV_gljk4H3DsRz_bIS-7BBpGzAfZ0SHr51a0ITzA4vKiKVFg9P19o-2G30ql2NBuVSp2CXYeaFTWXOzbV2kzTiMAx75eKO9X1g6iKO0oMB772TWDwjd4iuo/s1600/Maveerar_Ondiveeran.jpg" height="320" width="275" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஒண்டிவீரன் அருந்ததியர் சமூகத்தில் பிறந்தவர் ஆனால் ஒரு தேவரின் படையில் முக்கிய தளபதியாக செயல்பட்டவர். கட்டபொம்மனின் படையில் எப்படி சாதிப் பாகுபாடுகள் இல்லாமல் இருந்ததோ அப்படியே பூலித்தேவரின்படையும் செயல்பட்டுள்ளதை அறியலாம். பூலித்தேவரையும் ஒண்டிவீரனையும் தனித்தனியாக பார்க்கமுடியாது ஒருவர் இல்லாமல் மற்றவரின் வரலாறு என்பது இங்கில்லை. முதலில் பூலித்தேவர் யார் என்பதை அறிந்து கொள்வது முக்கியம். இராமநாதபுரத்தை சேர்ந்தவர்கள் பூலித்தேவர் முன்னோர்கள் அவர்கள் திசைக் காவலுக்காக திருநெல்வேலி பகுதிக்கு வருகிறார்கள் அங்கு நெற்கட்டான் செவ்வல் அருகே கோட்டை அமைத்து ஆட்சி செய்கிறார்கள். அவர்களின் வாரிசாக வந்தவர் தான் பூலித்தேவர்.<br />
<br />
அந்த பகுதியில் அருந்ததிய மக்களின் நிலங்களை இருளப்ப பிள்ளை என்பவர் தனது பலத்தால் பிடிங்கிக் கொள்கிறார், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க இயலாமல் பூலித்தேவரிடம் முறையிடுகின்றனர் அருந்ததிய மக்கள். பூலித்தேவ இருளப்ப பிள்ளையிடம் இருந்து நிலங்களை மீட்டு அருந்ததிய மக்களிடம் திரும்ப கொடுக்கிறார். அன்றிலிருந்து அருந்ததிய மக்கள் பூலித்தேவரையே தங்களின் தலைவராக ஏற்றுக் கொள்கின்றனர். இப்படி மீட்டுத் தரப்பட்ட நிலங்களுள் ஒன்று தான் ஒண்டிவீரனின் தாத்தாவுடையது. ஒண்டி வீரனின் தாத்தாவிற்கு எட்டு பிள்ளைகள் அவர்களில் முத்தவரின் மகன் தான் ஒண்டிவீரன். ஒண்டிவீரனின் இயற்பெயர் வீரன்.<br />
<br />
பூலியின் தலைமை தளபதி ஒண்டிவீரன், பூலியின் போர் வாளாகவே கருதப்பட்டார். நிலைமைக்கு தகுந்தாற்போல் போர்திட்டங்கள் வகுப்பதிலும் மறைந்திருந்து தாக்கி எதிரியை நிலைகுலையச் செயவதிலும் மிகவும் கைதேர்ந்தவர் ஒண்டிவீரன். நெற்கட்டான் செவ்வல், திருநெல்வேலி, வாசுதேவநல்லூர், களக்காடு, கங்கைகொண்டான், திருவில்லிப்பூத்தூர் ஆகிய இடங்களில் ஆங்கிலேயருக்கு எதிராக சண்டையிட்டு வெற்றிகளை குவித்தவர் ஒண்டிவீரன். அந்த காலகட்டத்தில் தான் ஆற்காடு நாவப்பிடம் இருந்து வரிவசூலிக்கும் உரிமையை பெற்ற ஆங்கிலேயர்கள் வரிகேட்டு ஆள் அனுப்புகிறார்கள். பூலி ஆங்கிலேயருக்கு வரிகட்ட முடியாது என்று மறுப்பு தெரிவிக்கிறார், அதுவரை நெற்கட்டும் செவ்வல் என்று இருந்த பெயர் அதாவது செம்மண் நிலத்தில் மிகவும் அதிகமான நெல்லை விளைவித்ததால் நெற்கட்டும் செவ்வல் என்று இருந்த பெயர் நெற்கட்டான் செவ்வலாக மாறியதாகவும் சொல்கிறார்கள்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhEmco7Bfu-1SXRNPk8LELmv-qEtPGWHzfgFPUqgrPIvRJ_sxbMFr_-nzdCTu3KD5Ae_aMtLbhv1XlhZBIKFj4R5LCn2IRBc3toGHAF3F9bN-KgS92hhAo0GAhdwrUqZ4LfevmI1wme6T4/s1600/nagara.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhEmco7Bfu-1SXRNPk8LELmv-qEtPGWHzfgFPUqgrPIvRJ_sxbMFr_-nzdCTu3KD5Ae_aMtLbhv1XlhZBIKFj4R5LCn2IRBc3toGHAF3F9bN-KgS92hhAo0GAhdwrUqZ4LfevmI1wme6T4/s1600/nagara.jpg" height="240" width="320" /></a></div>
<br />
வரி கொடுக்க மறுத்ததையொட்டி ஆங்கிலேயர்கள் தென்மலைக்கு வந்து முகாமிட்டு பூலித்தேவரிடம் தங்கள் தூதுவர் ஒருவரை அனுப்புகிறார்கள். தூதுவர் ஆங்கிலேயரின் படை பலம் மிகவும் அதிகம் அவர்களுடன் சமாதானமாக போகும் படி கூறுகிறார். அவ்வாறு சமாதானம் வேண்டாம் என்றால் போர் என்பதை முடிவெடுப்பதாக இருந்தால் ஆற்காடு நவாப்பிடம் இருந்து வரி வசூலிக்கும் உரிமையின் அடையாளமாக ஆங்கிலேயரிடம் இருக்கும் பட்டத்து வாளையும் குதிரையையும் கடத்திக் கொண்டு வரவேண்டும் அதே சமயத்தில் போர் தொடங்கும் அடையாளமாக அங்கிருக்கும் நகராவையும் முழங்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கிறார். பூலித்தேவர் இந்த நிபந்தனைக்கு ஒத்து கொண்டு தனது தளபதிகளை கூப்பிட்டு ஆலோசனையில் இறங்குகிறார்.<br />
<br />
பூலித்தேவனின் தளபதிகளை குறிக்கும் நாட்டுப்புறப்பாடல்</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
”சின்னான் பகடை பெரியான் பகடை</div>
<div style="text-align: justify;">
சிவத்தசொக்கன் கருத்தச் சொக்கன்</div>
<div style="text-align: justify;">
அண்ணன் தம்பிமார் அழகிரியுடன் </div>
<div style="text-align: justify;">
அஞ்சாறு பகடையுடன் ஒண்டியாம்...</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இத்தானதி பேர்களுமே பூலி சேனாபதிகளாம்</div>
<div style="text-align: justify;">
அத்தானதி பேர்களுக்கும் கம்புக் காரர்கள்</div>
<div style="text-align: justify;">
வலையக்காரர்கள் வாள் வீச்சுக் காரர்கள்</div>
<div style="text-align: justify;">
வேல் வீச்சுக்காரர்களுடன் முன்னூறு பேருக்கதிபதியாம்”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பூலியின் படையில் ஒண்டிவீரன் பகடை, சின்னான் பகடை, பெரியான் பகடை, சிவத்தசொக்கன், கருத்தசொக்கன், ஓடிக் குத்துவான் பகடை என்று பல அருந்ததியர்கள் இருந்தனர். ஆங்கிலேயரின் நிபந்தனையை தனது தளபதிகளுக்கு விளக்குகிறார் பூலித்தேவர். அப்பொழுது ஒண்டிவீரன் பட்டத்து வாளையும் குதிரையையும் கவர்ந்து வரும் வேலையை தான் ஏற்றுக் கொள்வதாக கூறுகிறார். ஒண்டிவீரனின் திறமையை அறிந்த பூலித் தேவரும் அதற்கு ஒத்துக் கொள்கிறார். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஒண்டிவீரன் மாறுவேடம் இட்டு செறுப்பு தைப்பவர் போல் ஆங்கிலேயர் தங்கியிருந்த தென்மலை சென்று தனக்கு சூ, செறுப்பு, குதிரை சேனம் போன்றவைகள் தைக்க தெரியும் என்று வேலை கேட்கிறார். ஆங்கிலேயருக்கும் தேவை இருந்ததால் வேலைக்கு அமர்த்திக் கொள்கின்றனர். தனது நேரத்திற்காக காத்திருந்து பட்டத்துவாளை வைத்திருந்த இடத்தில் இருந்து திருடிக்கொண்டு பட்டத்து குதிரை கட்டியிருந்த இடத்தை நோக்கி செல்கிறார். கட்டப்பட்டிருந்த கயிற்றை அவிழ்க்கும் பொழுது குதிரை பலமாக கனைத்து ஆங்கில சிப்பாய்கள் முழித்துக் கொள்கின்றனர். உடனடியாக அருகில் குதிரைக்காக போடப்பட்டிருந்த புல் குவியலுக்குள் படுத்துக் கொண்டு தன்னை மறைத்துக் கொள்கிறார் ஒண்டிவீரன்.<br />
<br />
குதிரையை வந்து பார்த்த வீரர்கள் கயிறு அவிழ்ந்திருப்பதை பார்த்து கட்ட முயலும் பொழுது முளைகாம்பு ஆடியதை கவனித்து அதை தரையில் இருந்து பிடிங்கு மற்றொரு இடத்தில் அடிக்கின்றனர். அங்கு ஒண்டிவீரனின் கை புல்லுக்குள் மறைந்து இருக்கிறது அதன் மீதே அடித்துவிடுகின்றனர், ஒண்டிவீரன் அத்தனை வலியையையும் தாங்கி கொண்டு தனது நோக்கத்தை நிறைவேற்றும் வெறியுடன் அமைதியாக இருக்கிறார். புதிதாக அடித்த முளைகாம்பில் குதிரையை கட்டிவிட்டு சென்று விடுகின்றனர் வீரர்கள். அவர்கள் சென்ற பிறகு ஆராவரம் அடங்குவரை காத்திருந்து வலியையும் பொறுத்துக் கொண்டு இருந்துவிட்டு எழுந்தார் ஒண்டிவீரர். முளைக்காம்பை உறுவி கையை விடுவிக்க மற்றொரு கையால் முயல்கிறார் ஆனால் முடியவில்லை, தான் ஏற்கெனவே எடுத்து வைத்திருந்த பட்டாக்கத்தியால் முளைக்காம்பில் மாட்டியிருந்த கையை வெட்டிவிட்டு, இரத்தம் சொட்ட சொட்ட குதிரையை அவிழ்த்துக்கொண்டு அமைதியாக அங்கிருந்து வெளியேறுகிறார்.<br />
<br />
வெளியேறும் பொழுது நெற்கட்டான் செவ்வலை நோக்கி நிறுத்தப்பட்டிருந்த பீரங்கிகளை ஆங்கில சிப்பாய்களின் கூடாரத்தை நோக்கி திருப்பி வைத்துவிட்டு அங்கிருந்த நகராவை அடித்து போர்முழக்கம் இட்டு குதிரையை விரட்டிக் கொண்டு நெற்கட்டான் செவ்வலை நோக்கி பறந்தோடுகிறார். நகராவின் ஒலி கேட்டு எழுந்த ஆங்கிலப்படை அவசர அவசரமாக அந்த் இரவின் இருட்டில் பீரங்கிகளை உபயோகிக்க அது அவர்களின் கூடாரத்தையே தாக்கி பலத்த சேதத்தை உருவாக்குகிறது. குதிரையில் சென்ற ஒண்டிவீரன் பத்திரமாக பூலித்தேவரை சென்றடைகிறார். ஒண்டிவீரனின் வீரத்தை மெச்சியவர் ஒரு கையை ஒண்டிவீரன் இழந்திருப்பதை பார்த்து கவலைப்படுகிறார். அப்பொழுது ஒண்டிவீரன் ஒரு கை போனால் என்ன அதற்கு பதிலாக எனக்கு நீங்கள் தங்கத்தில் ஒரு கை செய்து கொடுப்பீர்களே நாம் ஆங்கிலேயர்களுக்கு எதிரான போரில் கவனம் செலுத்துவோம் என்று கூறுகிறார்.<br />
<br />
இந்த படையெடுப்பின் ஆதாரங்கள் ஆங்கிலேயர் ஆவணங்கள் வழியாக உறுதி செய்ய முடிகிறது. 1755ல் படையெடுப்பு நடந்ததும் ஆங்கிலேயப் படைக்கு அலெக்ஸாண்டர் ஹெரான் தலைமை தாங்கியிருக்கிறார். இந்த படையில் ஆற்காடு நவாப் முகமது அலியின் படையும் அதன் தளபதியாக ஆற்காடு நவாப்பின் அண்ணன் மகபூஸ்கானும், ஆங்கிலேயரின் சுதேசிப் படையும் அதன் தளபதியாக கான் சாகிப்பும் இருந்திருக்கின்றனர் என்பது தெளிவாகிறது. பூலித் தேவனின் கோட்டையை தகர்க்க 18 பவுண்ட் பீரங்கிக் குண்டுகள் தேவை ஆனால் ஆங்கிலப் படையிடம் 12 பவுண்ட், 14 பவுண்ட் குண்டுகளே இருந்திருக்கின்றன. இதனால் ஹெரான் பூலித்தேவரை பயமுறுத்தி கப்பத்தை வசூலிக்கும் எண்ணத்துடன் தான் முதலியார் துபாஷை அனுப்புகிறார். அந்த பயமுறுத்தலுக்கு பயப்படாமல் விதித்த நிபந்தனையை நிறைவேற்றி போரிடுகிறார் பூலித்தேவரும் அவரது தளபதி ஒண்டிவீரனும்.<br />
<br />
அதன் பிறகு கோட்டையை தகர்க்க ஹெரான் எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிகிறது 1755ம் ஆண்டு மே மாதம் 22ம் தேதி கோட்டையை தகர்க்க முடியாமல் முற்றுகையை முடித்துக் கொண்டு மதுரையை நோக்கி திரும்புகிறது ஆங்கிலப்படை. இதன் பிறகு ஒண்டிவீரனின் மரணத்தைப் பற்றிய தகவல் எதுவும் இல்லை ஆனால் பூலித்தேவரின் மறைவிற்குப் பின்னும் அவரின் மகன்களின் படையில் இருந்து சண்டையிட்டதும் தெரிய வருகிறது. ஆனால் ஒண்டிவீரனின் மரணம் பற்றிய தகவல் இல்லை ஆனால் மக்கள் ஒண்டிவீரனை தங்களது தெய்வமாக வழிபடுகின்றனர்.<br />
<br />
இந்த தகவல்களை அந்த பகுதியில் வசிக்கும் பிற சமூகமக்களும் உறுதி செய்கின்றனர். இன்று அருந்ததிய மக்கள் அந்த பகுதியில் எந்த நிலத்திற்கும் சொந்தகாரர்களாக இல்லை ஆனால் பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக நிலம் வைத்திருந்து விவசாயமும் செய்திருக்கின்றனர் என்பதை ஒண்டிவீரனின் வரலாறு நமக்கு தெளிவாக எடுத்துச் சொல்கிறது. </div>
</div>
Unknownnoreply@blogger.com2tag:blogger.com,1999:blog-8141777893641371649.post-37658853642554488742014-05-11T06:19:00.000-07:002014-05-11T06:19:21.146-07:00மதுரை வீரன் வரலாறும் திரிபுகளும் ஏன்??<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg3vVaLBwINVu76AZtseo5H0LcgL8Dxml_OoXrVBWNgrO9e47DY5NlUVSxGAZL8wu0A3VMpw9gh6sQJ6y94yIsdvErS4JIOLmfRAWFoQqEIRJ24SEQYlKS7EAEscBDli8pmqP-_JDYvbnk/s1600/veeran.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg3vVaLBwINVu76AZtseo5H0LcgL8Dxml_OoXrVBWNgrO9e47DY5NlUVSxGAZL8wu0A3VMpw9gh6sQJ6y94yIsdvErS4JIOLmfRAWFoQqEIRJ24SEQYlKS7EAEscBDli8pmqP-_JDYvbnk/s1600/veeran.JPG" height="240" width="320" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div style="text-align: justify;">
மதுரைவீரன் குறித்த வரலாறுகள் பல அவரின் பிறப்பினைப் பற்றி பேசுவதில்லை ஆனால் எம்.ஜி.ஆர் நடித்த படத்தில் அவரை ஒரு அரசிளங்குமரனாக தான் சித்தரித்தார்கள். தமிழ் திரைப்படத்தை ஆதாரமாக சொல்கிறானே என்று யோசிக்க வேண்டாம் பதில் என்ன என்று அருந்ததிய மக்களே சொல்லியதை பின்னால் சொல்கிறேன்.<br /><br />திருச்சி மாவட்டத்தின் ஒரு பாளையத்தை பொம்மண்ணன் என்பவர் ஆட்சி செய்து வருகிறார் அந்த மாவட்டத்தில் சின்னான் மற்றும் செல்லி என்ற அருந்ததிய தம்பதியினர் வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு பிறந்த மகன் தான் வீரன் ஆம் தாய் தந்தையர் வைத்த பெயர் வெறும் வீரன் என்பது மட்டும் தான். வீரன் பெயருக்கு ஏற்றார் போல் வீரத்திலும் தீரத்திலும் சிறந்து விளங்குகிறான். அப்பொழுது பொம்மண்ணன் மகள் பொம்மி பூப்பெய்துகிறாள், கம்பளத்தார் வழக்கப்படி வீட்டை விட்டு வெளியே மந்தையில் குடிசையிட்டு அங்கு தங்க செய்கின்றனர். இப்படி வைக்கப்படும் பெண்களை இரவில் காவல் காப்பது அருந்ததியர்களே, அவ்வழக்கத்தின் படி சின்னான் வயதான காரணத்தால் உடல்நிலை ஒத்துழைக்காததாலும் வீரனை காவலுக்கு அனுப்புகிறார். அங்கு வீரனை கண்ட பொம்மியும், பொம்மியை கண்ட வீரனும் ஒருவர் மேல் ஒருவர் காதல் கொள்கின்றனர்.<br /><br />இந்த விசயம் பொம்மண்ணனுக்கு தெரிய வரும்பொழுது வீரனும் பொம்மியும் பாளையத்தை விட்டு வெளியேறுகின்றனர். பொம்மண்ணன் தனது படை வீரர்களுடன் இருவரையும் துரத்துகிறார் அப்பொழுது நடந்த சண்டையில் பொம்மண்ணன் கொல்லப்படுகிறார். அதன் பிறகு பொம்மியை அழைத்துக் கொண்டு திருச்சி செல்கிறார் திருச்சியில் அப்பொழுது விஜய ரங்க நாயக்கர் என்பவர் ஆட்சி செய்து வருகிறார். அவரது படையில் வீரனாக இணைந்து தனது திறமையினால் பல பதவிகளை பிடித்து வருகிறார். இதே காலத்தில் தான் திருமலை நாயக்கர் (1623- 1659) மதுரையில் ஆட்சி செய்து வருகிறார். அங்கு நடக்கும் திருட்டு வழிப்பறி போன்றவைகளை அடக்க ஒரு நல்ல தளபதி வேண்டும் என்று விஜய ரங்க நாயக்கரிடம் கோரிக்கை வைக்கிறார். அந்த கோரிக்கையை ஏற்று விஜய ரங்கரும் வீரனை மதுரைக்கு அனுப்பி வைக்கிறார்.<br /><br />பொம்மியுடன் மதுரைக்கு வந்த வீரன் தனக்கு ஒதுக்கப்பட்ட வீரர்களுடன் இணைந்து மதுரையை சுற்றி நடந்த திருட்டு வழிப்பறி கும்பல்களை அடக்குகிறார். இதைக் கண்டு மகிழ்ந்த திருமலை நாயக்கர் மதுரைவீரன் என்று பட்டம் அளித்ததாக சொல்கின்றனர். இந்த வேளையில் தான் திருமலை நாயக்கரின் 200 காமகிளத்திகளில் ஒருவரான வெள்ளையம்மாவை சந்திக்கிறார். இது அரசனின் காதுகளை சென்றடைகிறது அவர் மதுரை வீரனை மாறு கால் மாறு கை வாங்க உத்தரவிடுகிறார். கை கால் வெட்டப்பட்ட மதுரைவீரன் உயிரும் பிரிகிறது இதைக் கேளிவிப்பட்டு வந்த பொம்மியும் வெள்ளையம்மாளும் உடன்கட்டை ஏறுகின்றனர். இது தான் மதுரை வீரன் வரலாறு. இது மதுரை வீரன் குறித்த நாட்டுப்புற பாடல்களில் மட்டும் தொகுக்கப்பட்ட வரலாறு.<br /><br /><br />ஆனால் இந்த வரலாறு திரிக்கப்பட்டது வீரன் காசிராஜனுக்கு பிறந்ததாகவும் அவன் இருந்தால் நாட்டுக்கு ஆகாது அதாவது கொடி சுற்றி பிறந்த குழந்தை என்று ஆற்றில் விட்டதாகவும் அந்த குழந்தையை எடுத்து சின்னானும் செல்லியும் வளர்த்ததாகவும் சொல்கிறார்கள். இதில் பொம்மண்ணனின் பெண் வீரனுடன் வாழ்ந்தாள் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாத சனாதன தர்மத்தினர் அதை உடைக்கும் விதமாக பொம்மியை விட உயர்ந்த சாதியை சேர்ந்தவர் வீரன் என்ற கட்டமைப்பை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இதில் ஒரு விசயம் என்னவென்றால் காசி ராஜன் காசி ஆற்றில் விட்ட குழந்தை திருச்சி மாவட்ட ஆற்றுக்கு எப்படி வந்தது என்று கேட்க கூடாது, அன்றே இன்று நாம் பேசும் நதி இணைப்புக்கான அஸ்திவாரம் போடப்பட்டிருந்தது என்று நாமாகவே கற்பனை செய்து கொள்ள வேண்டும்.<br /><br />மேலும் மதுரவீரனுக்கு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கூட இடம் இருக்கிறது என்ன இடம் மட்டும் கோயில் சுற்று சுவருக்கு வெளியே. இதே போல் அருந்ததிய மக்களின் பல தெய்வங்கள் பல பிற்படுத்தப் பட்ட மக்களின் கோயிலிலும் இடம் உண்டு ஆனால் கோயிலுக்குள்ளே கிடையாது கோயிலுக்கு வெளியே சுற்றுச்சுவரை ஒட்டி தான் சுற்று சுவரே இல்லாவிடினும் கோயில் எனும் பகுதியை தாண்டியாவது தான் வைப்பார்களே தவிர கோயிலுக்குள் இந்த அரச மகன் மதுரை வீரனுக்கு அனுமதி பல இடங்களில் மறுக்கப்பட்டே உள்ளது ஒன்றிரண்டு இடங்களைத் தவிர ஆனால் அது மதுரைவீரன் வாழ்ந்த பகுதியாக இல்லாமல் மிகவும் தள்ளி இருக்கும் பகுதியாக இருக்கும்.<br /></div>
<div style="text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg0_k2ZSTLvpv8iGkMQIF0SC7Tnh0iZ3NgnlPGEWVC-uI2g3PUNPfkmWqaqj1zdrWHO3wTRrlIKqFS2poFpIv6D2JsfCQBgInE8VSTGHl3c1fym38d9LJSo58fgVas33TKxD3VGCFt9MGA/s1600/mv.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg0_k2ZSTLvpv8iGkMQIF0SC7Tnh0iZ3NgnlPGEWVC-uI2g3PUNPfkmWqaqj1zdrWHO3wTRrlIKqFS2poFpIv6D2JsfCQBgInE8VSTGHl3c1fym38d9LJSo58fgVas33TKxD3VGCFt9MGA/s1600/mv.jpg" height="315" width="320" /></a></div>
சாதியம் என்பது தனக்கு கீழான சாதியை மட்டும் தான் ஏற்றுக் கொள்ளாது ஆனால் தனக்கு மேற்பட்ட சாதியுடன் உறவு கொள்ள என்றுமே தயராக இருக்கும், அது தான் மதுரைவீரன் கதையில் ஏற்பட்ட திரிபுகள் ஊடாக நமக்கு தெரிவது, அதாவது பொம்மியின் கணவன் தங்கள் சாதியைவிட உயர்ந்த சாதியை சேர்ந்தவன் என்று சொல்வது. ஆனால் இதைப் பற்றி அருந்ததிய மக்களின் நிலை என்ன என்று கேட்டால் அவர்கள் சொல்வது "எம்.ஜி.ஆர் பொய் சொல்வாரா, அவர் சொன்னால் உண்மையாகத் தான் இருக்கும்” என்கின்றனர். அருந்ததிய மக்கள் என்றுமே இப்படித்தான் யாரோ என்றோ கொடுத்த வாக்கிற்காக இன்று வரை மற்றொரு சாதியினர் தங்கள் கிராமத்திற்கு வந்தால் அவர்கள் ஊரில் தங்கும் அத்தனை நாளும் அவர்களுக்கு உணவளித்து, அவர்கள் ஊரை விட்டு செல்லும் பொழுது வீட்டுக்கு வரி போட்டு அவர்கள் செலவுக்கு பணமும் கொடுத்து அனுப்புவார்கள்.<br /></div>
Unknownnoreply@blogger.com1tag:blogger.com,1999:blog-8141777893641371649.post-26745634500615883992014-05-09T11:11:00.000-07:002014-05-09T11:11:24.974-07:00அருந்ததியினரும் மபொசியுடன் தமிழ் தேசியமும் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjiwmcKO-WB8oDceCxvQuYi_v3xh_UNZ6BF9xkEeaI-AcVXRH9HdsAxgLSxC4FEinjKE4pOwIcua_LOI6FWwiyZYrdDzs1ikS7SMkmL7RN-U8ZbyqcJBqGj7bnWEWZL5gkhbP4OC23wYtY/s1600/maposi.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjiwmcKO-WB8oDceCxvQuYi_v3xh_UNZ6BF9xkEeaI-AcVXRH9HdsAxgLSxC4FEinjKE4pOwIcua_LOI6FWwiyZYrdDzs1ikS7SMkmL7RN-U8ZbyqcJBqGj7bnWEWZL5gkhbP4OC23wYtY/s1600/maposi.jpg" height="191" width="320" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மா.பொ.சிவஞானம் தாம் முதன் முதலில் பாளையக்காரர் கட்டபொம்மன் வரலாற்றை தமிழ்நாட்டுக்கு எடுத்துரைக்கிறார். கட்டபொம்மனின் தாய்மொழி தெலுங்கு என்றபொழுதும் ஒரு தமிழ்தேசியக்காரர் அவரை வெளிக்கொணருகிறார் போற்றுவோம். மா.பொ. சிவஞானம் சொல்லும் கதையில் கட்டபொம்மு ஒரு மிகப்பெரிய அரசன், ஆனால் கட்டபொம்முவைப் பற்றி வேறு கதைகளும் உண்டு அது அவன் ஒரு கொள்ளைக்காரன் என்றும். இங்கு கருப்பொருள் கட்டபொம்மன் யார் என்பது இல்லை, ஆனால் இந்த கட்டபொம்முவின் படையில் இருந்தவர்கள் யார் என்பது தான், அவர்கள் எப்படி மறைக்கபப்ட்டார்கள் என்பது தான். இதற்கான ஆதாரங்கள் அனைத்தும் இருக்கிறது. மா.பொ.சிவஞானம் எங்கிருந்து கட்டபொம்முவை கண்டுபிடித்தாரோ அதே நாட்டுப்புற பாடல்கள் மற்றும் ஆங்கிலேயே ஆவணங்களில் அனைத்து ஆதாரங்களும் இருக்கிறது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கட்டபொம்முவின் படை மிகப்பெரும் விசயங்களை கொண்டது கட்டபொம்முவின் தானதிகாரி சுப்பிரமணியம் ஒரு பிள்ளை, தளபதி வெள்ளையத் தேவன் ஒரு தேவர், மற்றொரு தளபதி சுந்தரலிங்கம் ஒரு பள்ளர்(தேவேந்திரகுல வெள்ளாளர்) மற்றும் இவர்களைத் தவிர மேலும் நான்கு தளபதிகள் பொட்டி பகடை, முத்தன் பகடை, கந்தன் பகடை, தாமன் பகடை இவர்கள் நால்வரும் அருந்ததியர் வகுப்பை சேர்ந்தவர்கள். ஒரு நாயக்க மன்னனின் படையில் எந்த சாதிய வேறு பாடும் இன்றி பிள்ளை, தேவர், பள்ளர் மற்றும் அருந்ததியர் என்று அனைத்து சமூகத்தினரும் இருந்திருக்கின்றனர். வீரபாண்டியன் ஒருங்கிணைத்தாரா இல்லை இவர்களே ஒன்றிணைந்தார்களா என்பது அல்ல. ஆனால் அனைவரும் ஒன்றிணைந்து இருந்தனர் என்பது உண்மை. ஆனால் மா.பொ.சி தான் கட்டபொம்மனை பற்றிய முதல் நூலை கொண்டு வருகிறர் இதில் சுந்தரலிங்கம் கூட சிறு இடம் பிடித்துவிடுகிறார் ஆனால் ஒரு தளபதியாக இல்லாமல், அதாவது அரண்மனை வேலையாளாக மேலும் மன்னருடன் அனைத்து இடங்களுக்கும் செல்பவராக. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEieeJ5VHCd8t0y9vnwez-Nh4ELlyGfGrDsG0zpvft_hmpx6cWNnYABcSbeFMShxM2Ng30eATXOty7AkEzfOBRer1GyxwqPvYSKiZrZk3OrJxPSe3-8EcVltZ-or6HmN85O2Y2u4ktG1FcA/s1600/kottai.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEieeJ5VHCd8t0y9vnwez-Nh4ELlyGfGrDsG0zpvft_hmpx6cWNnYABcSbeFMShxM2Ng30eATXOty7AkEzfOBRer1GyxwqPvYSKiZrZk3OrJxPSe3-8EcVltZ-or6HmN85O2Y2u4ktG1FcA/s1600/kottai.jpg" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அருந்ததியர்களான பொட்டி, முத்தன், கந்தன் மற்றும் தாமன் எங்குமே கண்ணிற்கு படமாட்டார்கள், இன்னுமொறு விந்தை என்னவென்றால் கட்டபொம்மனின் கீழாக இருந்த 72 பாளையங்களுள் அவைகள் கவணி என்றும் அழைக்கப்பட்டுள்ளது, இதில் நான்கு பாளையங்களுக்கு தலைவர்கள் தான் பொட்டி பகடை, முத்தன் பகடை, கந்தன் பகடை மற்றும் தாமன் பகடை ஆனால் இவர்களை மறைத்துவிட்டு ஒரு வரலாற்றை எழுதியிருக்கிறார். இவர்களை மறைத்தது மட்டும் எழுதினால் பத்தாது இவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்ற வரலாறும் முக்கியமானது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
முத்தன் பகடை பொட்டி பகடை இருவரும் மச்சான் உறவுமுறை கொண்டவர்கள், மதுரையில் கோயில் கட்டும் பணி நடந்து கொண்டிருந்தது ஒரு கோபுரம் மட்டும் கட்டும்பொழுதே இடிந்து கொண்டிருந்தது ஒரு ஜோசியர் நரபலி கொடுத்தால் தான் கோபுரத்தை முடிக்க முடியும் என்று சொல்ல சில அருந்ததியர்களை பிடித்து பலிகொடுப்பதற்காக அடைத்துவிட்டு நல்ல நாள் குறித்து காத்திருந்தனர். இதை கேள்விப்பட்ட முத்தனும் பொட்டியும் கோபமடைந்தனர், கட்டபொம்முவும் எதுவும் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கோபத்தில் இருந்தார்கள். அரசவை நடந்து கொண்டிருந்தபொழுது உள்ளே சென்று பாடியாட ஆரம்பித்தார்கல். கட்டபொம்மு அவர்களை நிறுத்தி என்ன என்று கேட்டபொழுது மதுரையில் நடக்கும் அநியாயத்தை சொல்லிய பொழுது சரி என்று கட்டபொம்மு நரபலி கொடுப்பதை நிறுத்தச் சொல்லி கடிதம் அனுப்புகிறார் அதுவும் நிறுத்தாவிடில் படையெடுப்பு நடக்கும் என்று. நரபலி நிறுத்தப்பட்டு அறுந்ததியர்கள் விடுவிக்கப்பட்டனர். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
முத்தன் பகடையும் பொட்டி பகடையும் இப்படி தங்களது புத்திசாலித் தனத்தை உபயோகித்து உயிர்களை காப்பாற்றியது மட்டுமில்லை. தங்களின் பராக்கிரமத்தால் பல எதிரிகளை அழித்தவர்கள். ஜாக்சன் துறையை சந்திக்க சென்றபொழுது தானாதி சுப்பிரமணியப்பிள்ளையும் வெள்ளையத் தேவனின் குதிரையும் ஆங்கிலேயரிடம் பிடிபட்டது. இருவரையும் மீட்டு வர சென்றார்கள் மச்சான்கள் இருவரும் ஆனால் இவர்கள் செல்லும் முன்பாக தானாதிப்பிள்ளையை சென்னை சிறைக்கு மாற்றிவிட்டனர், ஆனால் அங்கிருந்த வெள்ளையத் தேவனின் வெள்ளை குதிரையை கைப்பற்ற முடிவெடுத்தனர். தங்களுக்கு குதிரை பாசை தெரியும் என்றும் குதிரைப் பராமறிப்பவர்கள் என்று கூறி வெள்ளையத்தேவன் குதிரையிடம் சென்றனர். இவர்களை அடையாளம் தெரிந்து கொண்டு குதிரையும் இவர்களை பார்த்து துள்ளியது, இதை பார்த்த ஆங்கிலேயே வீரர்களிடம் நாங்கள் குதிரையின் மொழி தெரியும் என்று சொல்லி சமாளித்துவிட்டு. வேலைக்கு சேர்ந்து குதிரை பராமரிப்பவர்களா வேலை பார்த்தனர், நேரம் பார்த்து காத்திருந்த இருவரும் ஒரு நாள் வீரர்கள் அசந்திருந்த சமயமாக குதிரையை ஓட்டிக் கொண்டு பாஞ்சாலம் குறிச்சி வந்து சேர்ந்தனர்.<br /><br />இதைப் போன்று தங்களது வேலைகளை மிகவும் சாமர்த்தியமாகவும் நேர்த்தியாகவும் செய்யக் கூடியவர்கள் தான் மச்சான்கள் இருவரும். ஆங்கிலேயர் படையெடுப்பும் ஆரம்பமாகிறது முதலில் மக்காளித் துரையின் தலைமையில் பாஞ்சாலகுறிச்சியின் மீது படையெடுப்பு ஆரம்பமாகிறது. முதல் நாள் சண்டையில் வெள்ளையத் தேவர் மரணம் ஏய்துகிறார். எதிரி எதிர்பார்க்காத நேரத்தில் ஒரு தாக்குதலை நடத்துவது என்று முடிவாகிறது, அதற்கு சுந்தரலிங்கம் தேவேந்திரனார், அதிவீர மல்லு சேர்வை மற்றும் கந்தன் பகடை மூவரும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மூவரும் இரவில் ஆங்கிலேயே படை மூகாமை நோக்கி செல்கிறார்கள். அங்கு காவல்காரர்கள் இருக்க ஆங்கிலேயே படை வீரர்கள் மது அருந்திக் கொண்டும் ஆடிப் பாடிக் கொண்டும் இருக்கின்றனர், இது தாக்குதவதற்கு சரியான சமயம் இல்லை என்று மூவரும் முடிவு செய்து அருகில் இருக்கும் புதர்க்குள் பதுங்கிக் கொள்கின்றனர். விடியகாலை வரை ஆங்கிலேயேர்களின் விருந்து கொண்டாட்டம் தொடர்கிறது, கோழி கூவியபிறகு படுக்க செல்கின்றனர். பாரா இருந்த காவல்காரர்களும் தூங்க செல்கின்றனர்.<br /><br />இது தான் சரியான சமயம் என்று விழித்திருந்த ஒரு பாராக்காரனை சுந்தரலிங்கம் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் கொலை செய்துவிடுகிறார். பின்னர் வீரர்கள் தங்கியிருந்த கூடாரத்துக்குள் நுழைந்து அங்கு எரிந்து கொண்டிருந்த விளக்குகளை அனைத்துவிட்டு வீரர்களை தாக்க ஆரம்பிக்கின்றனர். தாக்கபப்ட்ட வீரர்களின் கூக்குரலை கேட்டு மற்ற வீரர்கள் எந்திரித்து தாங்கள் தாக்கப்படுகிறோம் என்பதை மட்டும் உணர்ந்து கொண்டு அவர்களும் தாக்க ஆரம்பிக்கிறார்கள், ஆனால் அவர்களுக்குள்ளாகவே தாக்கிக் கொண்டு பலர் உயிரிழக்கின்றனர். அடுத்த கூடாரத்தில் இருந்த மாக்காளித் துரை சத்தம் கேட்டு வருகிறார் அப்பொழுது அவர் கந்தன் பகடையை பார்த்து சுட்டுக் கொள்கிறார். சுந்தரலிங்கமும் அதிவீர மல்லு சேர்வையும் தங்களால் இயன்ற அளவு சேதத்தை ஏற்படுத்திவிட்டு. இறந்தவர்கள் போல் நடித்து, இறந்துகிடந்த வெள்ளை வீரர்களின் உடையை அணிந்து கொண்டு வெள்ளை வீரர்கள் போல் அங்கிருந்து தப்பித்து கோட்டைக்கு திரும்பிவிடுகின்றனர். இந்த தாக்குதலில் 100 வீரர்களும், 50 பாராக் காரர்களும் மற்றும் 7 வெள்ளையர்களும் இறந்தனர். பாஞ்சாலகுறிச்சி தரப்பில் ஒரே ஒரு உயிரை கொடுத்து 157 பேரை கொன்று குவித்தனர்.<br /><br />கோட்டை திரும்பியவர்கள் கட்டபொம்மனிடம் கந்தன் பகடையின் மரணத்தை தெரியப்படுத்துகின்றனர். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கந்தன் பகடை மடிந்த சமாச்சாரங்</div>
<div style="text-align: justify;">
கட்டபொம்மு துரை தான் கேட்டுச்</div>
<div style="text-align: justify;">
சிந்தை கலங்கி மனது நொந்தான் அய்யோ!</div>
<div style="text-align: justify;">
சொந்தம் பாராட்டி வளர்த்தே னென்றான்</div>
<div style="text-align: justify;">
தன்னிமை யாகவே வளர்த்தேனே வெகு</div>
<div style="text-align: justify;">
சமத்துக் காரப் பகடை யென்றான்<br />அநியாய மாகவே முடிந்தானே அவன் </div>
<div style="text-align: justify;">
அவன் சொன்ன சபதம் முடிப்பானே</div>
<div style="text-align: justify;">
எதிரிகள் வந்து யெதிர்த்து விட்டால் அதற்</div>
<div style="text-align: justify;">
கேத்தக் கத்திகள் சுத்திவிட்டால்</div>
<div style="text-align: justify;">
எதிரிச் சவாலுஞ் சாய்ந்திடுமே நான்</div>
<div style="text-align: justify;">
எடுத்த சவால் கெலித்திடுமே</div>
<div style="text-align: justify;">
கந்தன் பகடையைத் தோற்றோமென்றான் இனிக்</div>
<div style="text-align: justify;">
கண்ணாலே யென்றைக்கு காண்போமென்றான்..</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இத்தகைய பாடல்கள் வழியாகவே கட்டபொம்முவின் சரித்திரம் எழுதப்பட்டது ஆனால் அவைகளில் கூறப்பட்ட பகடைகள் மற்றும் சுந்தரலிங்கம் போன்றவர்களை மறைத்து வரலாறு எழுதப்பட்டது.<br /><br />இதன் பின்னர் பொட்டிப் பகடையும், முத்தன் பகடையும் மாறுவேடம் பூண்டனர் தார்ப்பாய்ச்சி வேட்டியை கட்டிக் கொண்டு உடலெல்லாம் திருநீறு இட்டுக் கொண்டு கையில் கைப்பந்தங்கள் ஏந்திக்கொண்டு, அதனுள் வாளை மறைத்துவைத்துக் கொண்டு ஆங்கிலேயரின் கூடாரம் நோக்கி சென்றனர். அப்பொழுது ஆங்கிலேயே வீரர்கள் இவர்களை பிடித்து தளபதியிடம் கொண்டு சென்றனர். அவர் இவர்களிடம் பாஞ்சாலகுறிச்சி கோட்டைக்குள் செல்லும் ரகசிய வழி இருக்கிறதா என்று கேட்டனர், இல்லை என்று சொன்னவர்கள் ஆனால் கட்டபொம்மன் முருக பக்தன் எங்களைப் போல் வேடம் அணிந்து கொண்டு சென்றால் கோட்டைக்குள் நுழையலாம் என்று கூறினர். அந்த திட்டம் பிடித்திருந்ததால் வீரர்களை இவர்களைப் போல வேடம் அணிந்து கொண்டு இருவருடன் செல்ல கூறினார் தளபதி. வந்த வீரர்களை கூப்பிட்டுக் கொண்டு கோட்டை நோக்கி சென்றவர்கள் சிறிது தூரம் தாண்டிய பிறகு தங்களது வாட்களை வெளியில் எடுத்து வீரர்கள் சிலரை கொலை செய்தனர், இவர்களின் தீப்பந்தமும் கிழே விழுந்து அணைந்துவிட்டதால் இருட்டில் இவர்கள் என்று நினைத்து வீரர்கள் ஒருவருக்கு ஒருவர் வெட்டிக் கொண்டனர். தங்களை முழுவதும் உணர்ந்து சண்டையை நிறுத்தும் முன் மச்சான்கள் இருவரும் தப்பி வெளியேறி கோட்டைக்கு திரும்பிவிட்டனர். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இப்படி தொடர்ந்து பல வழிகளில் ஆங்கிலேயேர்களை தாக்கினர் மச்சான்கள் இருவரும். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
முத்தன் பகடையும் பெட்டிப் பகடையும்</div>
<div style="text-align: justify;">
மைத்துன மார்களிருபேரும்</div>
<div style="text-align: justify;">
கத்தி வீசிக்கொண்டு எமன் காலன் போலே</div>
<div style="text-align: justify;">
காங்கு கூடாரத்தில் நுழைந்திட்டான்</div>
<div style="text-align: justify;">
கத்தி யடித்தல்லோ பார்க்கிறான் துரை</div>
<div style="text-align: justify;">
கத்தியைப் பார்த்தல்லோ வெட்டுகிறான்</div>
<div style="text-align: justify;">
எத்தனை சீமைச் சாராயக் குப்பிகள் </div>
<div style="text-align: justify;">
அத்தனையும் பூசையும் உடைத்திட்டான்</div>
<div style="text-align: justify;">
தேசுகி வாசுகி படுத்திட்டான் முன்னே </div>
<div style="text-align: justify;">
சீமைத் துரைகளும் முடித்திட்டான்</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div style="text-align: justify;">
இப்படி தீவிரமாக போரிட்டாலும் போரில் வெற்றி கிடைக்காது என்பதை உணர்ந்த கட்ட பொம்மன் கோட்டையிலிருந்து வெளியேறுவது என்று முடிவெடுத்தார். கோட்டையை விட்டு வெளியில் வந்த கட்டபொம்மன், ஊமைத் துரையும் வேறு வேறு பக்கம் சென்றனர். கட்ட பொம்மன் புதுக்கோட்டை மன்னர் விஜயரகுநாத தொண்டரிடம் அடைக்கலம் புகுந்தார். அங்கு தொண்டைமானால் கைது செய்யப்பட்டு ஆங்கிலேயரிடம் ஒப்படைக்கப்பட்டார். அதே சமயத்தில் ஊமைத்துரையும் பொட்டி பகடையும் முத்தான் பகடையும் கன்னிவாடி காட்டுக்குள் மறைந்திருந்தனர். அக்னீசு துரை காட்டை முற்றுகையிட்டான் ஆனால் பொட்டி பகடையும் முத்தான் பகடையும் ஆங்கிலப் படையை பச்சைமலை கோட்டை வரை எதிரிகளை துரத்தி அடித்தனர். இதே சமயத்தில் கோட்டையில் இருந்த சுந்தரலிங்கம் தேவேந்திரனார் தனது முறைப்பெண் வள்ளியுடன் சென்று தங்களது உயிரைக் கொடுத்து ஆங்கிலேயர்களின் ஆயுதக் கிடங்கை அழிக்கின்றனர்.<br /><br />கட்டபொம்மன் சிறைபட்டிருந்த நேரத்தில் ஊமைத் துரையை பார்கக் விரும்புவதாக கட்டபொம்மனின் கடிதம் வருகிறது, ஊமைத்துரையும் தன் மறைவிடத்தை விட்டு அண்ணனை பார்க்க கிளம்பி ஆங்கிலேயரால் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் வைக்கப்படுகிறார். அங்கு அவருடன் சேர்த்து பொட்டி பகடையும் இருக்கிறார். ஊமைத்துரைக்கு உதவுவதற்காக பொட்டி பகடை நியமிக்கப்படுகிறார். ஊமைத் துரைக்கு தேவையானவைகளை வெளியில் சென்று வாங்கி வரும் பொறுப்பு பொட்டி பகடைக்கு அளிக்கப்படுகிறது. ஊமைத்துரை கடிதம் கொடுக்க அதை தன் செறுப்புக்குள் வைத்து தைத்து எடுத்துக் கொண்டு புலிக்குத்தி நாயக்கரிடம் கடித்தத்தை சேர்க்கிறார் அதே போல் புலிக்குத்தி நாயக்கர் கொடுத்த கடிதத்தையும் ஊமைத் துரையிடம் கொண்டு வந்து சேர்க்கிறார். ஊமைத் துரையின் திட்டத்தின் படி விறகு சுமப்பவர்களாக கோட்டைக்குள் நுழைந்த வீரர்கள் உதவியுடன் ஊமைத் துரை பாளையங்கோட்டையில் இருந்து தப்பித்து வெளியில் வந்து பாஞ்சாலக் குறிச்சி கோட்டையில் தனது அரசை நிறுவுகிறார்.<br /><br />அக்னீசு துரை பாஞ்சால குறிச்சி மீது படையெடுக்கிறார், மக்காளித் துரையும் படைகளுடன் வந்து அக்னீசு துரையுடன் இணைந்து கொள்கிறார். கோட்டைக்கு வெளியே முற்றுகையிடுகின்றனர் ஆங்கிலேயர்கள் பொட்டிப் பகடையும் கிடுகிட்டி நாயக்கரும் மாறுவேடம் அணிந்து ஆங்கிலேயர் முகாம் சென்று ஆடல் பாடல்களை நடத்தி ஆங்கிலேயரை மகிழ்விக்கின்றனர். அப்பொழுது 50 படைவீரர்களுடன் வந்த ஊமைத் துரை வெள்ளையர்களை தாக்கி நிலைகுலையச் செய்து அங்கிருந்த பட்டத்து குதிரை, பட்டாக் கத்தி, பீரங்கி, உணவுப் பொருட்கள் சாராயம் போன்றவற்றை கொள்ளையடித்து கோட்டைக்கு திரும்புகின்றனர். இதில் பெரும் பங்கு வகிக்கிறார் பொட்டி பகடை. ஊமைத் துரை பொட்டிப் பகடையையும் முத்தான் பகடையையும் கோட்டை காவலுக்கு தளபதிகளாக நியமிக்கிறார். ஏட்டையபுரக் காரர்களின் யோசனையின் படி கோட்டையைச் சுற்றி பஞ்சு மற்றும் மிளகாய் மூட்டைகளை அடுக்கி தீ வைத்துவிட்டு தொடர்ந்து ஆங்கிலேயர்கள் தாக்குதலை செய்கின்றனர். இதில் மிளகாய் நெடியின் காரம் தாங்க முடியாமல் வீரர்கள் கலைகின்றனர். இந்த சண்டையில் பொட்டி பகடையும் முத்தன் பகடையும் வீரமரணம் அடைகின்றனர். கோட்டையிலிருந்து வெளியேறிய ஊமைத்துரை மருதுபாண்டியர்களிடம் அடைக்கலமடைந்தார். </div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இப்படி வீரஞ்சொறிந்த படைத் தளபதிகளை அருந்ததியினர் என்பதற்காகவும் தேவேந்திரர்கள் என்பதற்காகவும் மறைத்தும் இழிவுபடுத்தியும் ஒரு வரலாற்றை எழுதி அதை மக்களையும் நம்பவைத்த மா.பொ.சிவஞானம் தான். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: center;">
<b>சாதி ஒழிப்பே தமிழ் தேசியம் - தோழர் பொன்பரப்பி தமிழரசன்</b></div>
<div style="text-align: center;">
<b><br /></b></div>
<br />
<div style="text-align: center;">
<b>வழி நிற்போம், களைகளை களைந்திடுவோம்.. </b></div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
Unknownnoreply@blogger.com3tag:blogger.com,1999:blog-8141777893641371649.post-31569686275913116262014-05-08T09:24:00.000-07:002016-01-12T05:38:34.191-08:00மாட்டுப் பொங்கல் எனும் திட்டி சுத்துதல் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiSRDzXx__TIaz54K-kMMdaWVb51Jnfawd1kLXsgI78_M2OuP2nHRmJexEuDjW3YB0our8j5735drIytb2LBCz9l02-B6tql_yjRMXehNHZ1mXqfEChgP_fODIZXfI841vfUBE5QcxdzbE/s1600/images+%25282%2529.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiSRDzXx__TIaz54K-kMMdaWVb51Jnfawd1kLXsgI78_M2OuP2nHRmJexEuDjW3YB0our8j5735drIytb2LBCz9l02-B6tql_yjRMXehNHZ1mXqfEChgP_fODIZXfI841vfUBE5QcxdzbE/s1600/images+%25282%2529.jpg" /></a></div>
<br />
காரைக்குடி பக்கத்தில் கண்டனூர் கிரமம் என்று சொல்ல முடியாத நகரம் என்றும் சொல்ல முடியாத ஒரு ஊர். எனென்றால் கிராமம் என்பதற்கு அடையாளமாக நமக்கு மனதில் பதிந்து இருப்பது எல்லாம் ஓட்டுவீடுகளும் குடிசைவீடுகளும் நிறைந்த சாலைகள் தான் ஆனால் இந்த காரைக்குடியில் கிராமங்கள் என்று அழைக்கப்படும் அத்தனை ஊரிலும் மச்சுவிட்டில் இருந்து குச்சுவீடு வரை அனைத்தும் இருக்கும், அதிலும் ஒவ்வொன்றும் அரண்மனை போன்ற தோற்றத்தடுன் மூன்று கட்டு வீடுகள் என்பது குறைந்த பட்ச அளவீடாக இருக்கும் இதை கிராமம் என்ற சொல்ல முடியும் இருந்தாலும் கிராமமே இவைகள். முதன் முறையாக நான் ஒன்பதாவது படிக்கும் பொழுது தான் ஊருக்கு கூட்டிச் சென்றார்கள், தரையோடு இருக்கும் கிணறுகளின் தயவால், அது வரை ஊருக்கு கூட்டிச் சென்றது இல்லை. ஒரு பொங்கல் அன்று மதுரையில் வீட்டில் பொங்கல் வைத்து மதியம் சாப்பிட்டுவிட்டு கிளம்பினோம். மாலைக்குள் ஊர் போய் சேர்ந்தோம் சின்ன ஆயாவின் வீட்டில் தான் இரவு தங்கல் அது ஒரு குடிசை வீடு, சாணி மொழுகுவது என்றால் என்ன என்று அந்த வீட்டில் தான் பார்த்து தெரிந்து கொண்டேன்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhu8-Gnk69zYRavhJTKKAdjq8bI5oxuvSwwyC5uqPwWGcz70kdBarxNCPQ4E5eTaPHwIh97PToZ_cO-wfEDuQOw3GrtYRSCEvAcMg08vjfhw_BWd6nXaO2THtU4_mEuwdl8eZXnRp6JjtU/s1600/HOUSE.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhu8-Gnk69zYRavhJTKKAdjq8bI5oxuvSwwyC5uqPwWGcz70kdBarxNCPQ4E5eTaPHwIh97PToZ_cO-wfEDuQOw3GrtYRSCEvAcMg08vjfhw_BWd6nXaO2THtU4_mEuwdl8eZXnRp6JjtU/s1600/HOUSE.jpg" /></a></div>
<br />
இரவு வீட்டின் வாசலிலேயே பாய் போட்டு படுத்து உறங்கினார்கள் என்னை மட்டும் வீட்டுக்குள் படு, காலை பனி உனக்கு ஆகாது என்று வீட்டுக்குள் தள்ளிவிட்டனர், வீட்டுக்கு கடைகுட்டியா பிறந்தால் இது ஒரு தொல்லை. மின்விசிறியோ மின் விளக்கோ எதுவும் இல்லாத ஒரு வீடு, ஆனால் காற்றோட்டத்திற்கு எந்த குறையும் இல்லை. காலையில் 5 மணிக்கு எல்லாம் உருட்டும் சத்தங்கள் எழுந்து உட்கார்ந்தேன், பல்லு விளக்கும் முன்பே காப்பிதண்ணி குடி என்று கையில் டம்ளரை திணித்தார் அழகு சித்தி. குடித்துக் கொண்டிருக்கும் பொழுது சீக்கிரம் கிளம்பு கம்மாயில் குளிக்க போகலாம் என்றார் அம்மா. முதல் முறை கம்மாய் குளியல் நீச்சல் தெரியாது அம்மா நீச்சல் அடிப்பதை வேடிக்கை பார்த்தேன். அம்மாவே நீச்சலும் கத்து கொடுத்தார் கைகளில் படுக்கப் போட்டு, கற்றுக் கொண்டேனோ இல்லையா என்று எனக்கு தெரியாது ஆனால் நல்லா தண்ணி குடிச்சேன். அதன் பிறகு வீட்டிற்கு வந்தோம் அதற்கு முன்பாக அங்கு எல்லாம் தயராக இருந்தது. வெத்தெலை பாக்கு தட்டு தாம்பாளம், தேங்காய் என்று, ஆயா ஒரு பசு மாடு வளர்க்கிறார் மேலும் அது ஈன்ற காளை கன்னுகுட்டி வேறு இருந்தது. அவைகளை சித்தியும் ஆயாவும் குளிப்பாட்டிக் கொண்டு இருந்தனர் கிணற்றில் நீரிறைத்து. சரி கிணத்தில் நீர் இறைக்கலாம் என்று போனால் அந்த பசு மாடு முட்ட வந்தது தான் மிச்சம், நானும் ஓடி தள்ளி வந்து நின்று கொண்டேன்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgFNMWVgGOsZrHPszLssEsqT8GPPrO05qj-3y_P-WMPyQ29EPuw1DtIPGG1VCxgMjUM7Yq8hUknE9KUBFIfrjGoaEoy7eUfNK4S8cNtuEyz1s2xNfASOeS5KPM3jcCTM4nfZOFJ7T8WM_8/s1600/images.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgFNMWVgGOsZrHPszLssEsqT8GPPrO05qj-3y_P-WMPyQ29EPuw1DtIPGG1VCxgMjUM7Yq8hUknE9KUBFIfrjGoaEoy7eUfNK4S8cNtuEyz1s2xNfASOeS5KPM3jcCTM4nfZOFJ7T8WM_8/s1600/images.jpg" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
அப்புறம் தெருவில் மூன்று வீட்டிலோ நான்கு வீட்டிலோ தான் மாடு வளர்த்தார்கள் ஒவ்வொரு வீடாக திட்டி சுத்த போகிறோம் என்று சிறுவர்கள் இளைஞர்கள் என்று ஒரு கூட்டமாக கிளம்பினார், என்னை அவர்களுடன் போகச் சொன்னார்கள் முதல் நாள் மாலையே எதிர்த்த வீட்டில் இருந்த செல்லப்பன் நட்பாகிவிட்டான், சரியென்று அவனுடன் ஒட்டிக் கொண்டேன் முதலில் ஒரு விட்டுக்கு சென்றோம் அவர்கள் சூடம் கொளுத்தி மாட்டிற்கு காட்டினார்கள் அப்புறம் அங்கு வைத்திருந்த பொங்கப்பானையில் இருந்து கூட்டாஞ்சோறை மாட்டிற்கு கொடுத்தார்கள் அதன் பிறகு அனைவரும் கையில் வைத்திருந்த தப்படித்துக் கொண்டு, சங்கு ஒன்றை ஊதிக்கொண்டு மாடுகளை சுற்றி வந்தோம் அப்பொழுது மாடுகள் மிரண்டு கொழுவில் இருந்து அறுத்துக் கொள்ள முயன்றன் வீட்டினர் மூன்று சுற்றுகள் முடிந்ததும் மாட்டை அவிழ்த்துவிட்டனர். மாட்டின் கழுத்தில் கரும்புத் துண்டுகள், பனங்கிழங்கு துண்டுகள் போன்றவை கட்டி விடப் பட்டிருக்கும் வாசல் வழியை மட்டும் விட்டுவிட்டு அனைவரும் சுற்றி நின்ற பொழுது வாசலை நோக்கிய மாட்டின் கழுத்தில் இருந்த இந்த பனங்கிழங்கு மாலையை பறித்தெடுத்தனர் அத்தனை பேரும் நானும் எங்கிட்டு ஓடுவது என்று தெரியாமல் ஓடி வந்த கன்னுகுட்டி கழுத்தில் இருந்து உருவினேன். அடுத்து சின்ன ஆயா வீட்டில் அங்கு திட்டி சுத்தி முடிச்சு மாட்டை அவிழ்த்து விடும் பொழுது பலர் விலகினர், ஒருத்தர் வேறு டே அதுகிட்ட போகாதீங்கடா முட்டி தூக்கிப்புடும் மூணு நாளைக்கு எந்திரிக்க முடியாது என்று வேறு குரல் கொடுத்தார். அப்படியும் ஒரு பையன் வாசலில் நின்று கழுத்தில் இருந்த பனங்கிழங்கு மாலையை உருவிட்டான். <br />
<br />
<div style="text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjeXdW0Q0DxySI1Y02SZpAULjapyIs-Dt3Wb2pxkjESBvdlF0F0aHarvLS643aYgH4xUrq_mhxNQk_sglVfT78BIjl41Z83TnL9IV4lzUJoL7jOU6NAxM0aWtKK6VaRO88bbqg72nwD5qc/s1600/images+(1).jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjeXdW0Q0DxySI1Y02SZpAULjapyIs-Dt3Wb2pxkjESBvdlF0F0aHarvLS643aYgH4xUrq_mhxNQk_sglVfT78BIjl41Z83TnL9IV4lzUJoL7jOU6NAxM0aWtKK6VaRO88bbqg72nwD5qc/s1600/images+(1).jpg" /></a></div>
பிறகு கடைசியாக செல்லப்பன் வீட்டில் திட்டி சுற்றினோம், ஆரம்பிக்கும் முன்பே செல்லப்பன் காதை கடித்தான் ஏய் ஹரி ஜாக்கிரதை திட்டி சுத்தி முடிச்சவுடனே சிட்டாக் கிளம்பிடும் மஞ்சள் தண்ணி ஊத்த ஆரம்பிச்சுடுவாளுகடா ஜாக்கிரதை என்றான். அன்று நான் வேற அழகா வெள்ளை டீசர்ட் வேறு போட்டிருந்தேன் என் வீட்டுக்கு ஓடிறலாம் என்று பார்த்தால் அங்க என் சித்திகள் அண்டவை தூக்கிட்டு வந்து வாசலில் வைத்தார்கள், பார்த்தவுடன் புரிந்தது முடிந்தது நம்ம கதை போய் சட்டையை மாத்த கூட நேரம் இல்லையே என்று யோசிக்கும் பொழுது நண்பனின் தங்கை அண்ணே இன்னைக்கு என்னிடம் மாட்டினீங்க என்று நின்று கொண்டிருந்தவள் கிழே குணிந்து ஒரு சிறிய பானையை எடுத்து காண்பித்தாள் முடிஞ்சது நம்ம டீசர்ட் கதி அதோ கதி தான் என்று நினைத்தேன். மூன்றாவது சுத்து சுத்தும் பொழுதே செல்லம்மா பானையை எடுப்பதை பார்த்தவன் விவரமாக மெதுவாக பசங்க பின்னாடி தங்கி மாட்டை அவிழ்த்து விட்டவுடன் மாடு ஓடியாதா இல்லையா என்று எனக்குத் தெரியாது வயக்காட்டில் இருக்கும் பிள்ளையார் வடத்தை நோக்கி ஓடினேன் அப்படியும் யார் மீதோ ஊற்றிய தண்ணீர் என்னை குளிப்பாட்டியது சரிடா ஹரி விடு என்று மனசை தேத்திக் கொண்டாகிவிட்டது. <br />
<br />
இது தான் நான் பார்த்த முதல் மஞ்சுவிரட்டு, அன்று மதிய உணவின் போது பெரியய்யாவிடம் கேட்டு தெரிந்து கொண்டது. அவருக்கு ஊருக்குள் பெயர் சுள்ளான் அய்யா, சுள்ளான் என்றால் எறும்பு அவரை யாரும் எதுவும் சொல்ல முடியாது. சொல்வதற்குள் வேலையை முடித்துக் கொண்டு வந்து நிற்பார், ஆயா ஹரி வந்திருக்கான் நண்டு என்று பேச ஆரம்பிப்பார் அதற்குள் சைக்கிளை எடுத்திருப்பார் 3கி.மீ தள்ளியிருக்கும் சாலையை நோக்கிச் சென்றிருப்பார் அதனாலேயே அவருக்கு சுள்ளான் அய்யா என்று பெயர் வந்தது என்று செல்லப்பன் சொன்னான். மதியம் சாப்பிடும் பொழுது அய்யாவிடம் என்னய்யா இது தான் ஜல்லிக்கட்டா சினிமாவில் எல்லாம் என்னவோ ஹிரோவும் மாடும் மட்டும் நேருக்கு நேர் நின்று சண்டை போடுவதாக காட்டுவார்களே அந்த மாதிரி எல்லாம் கிடையாதா என்று கேட்ட பொழுது தான் சொன்னார். மாடு பிடிப்பதில் இருக்கும் வித்தியாசங்களை.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh6ZDDcMHz6BiZ4DLov6dzHZXAw5ukq_N3q5Us5RLpBsSH5cFB8ybMQUDB7RAooyQzZubL8fNm7TOHvBpyOa6UjYAFlrCA03EFLV9MSOE6TFzWfYyVuDkJxmov8CfD8fYf4cgWfYm9QJMc/s1600/Tamil-Daily-News-Paper_13426935673.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="160" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh6ZDDcMHz6BiZ4DLov6dzHZXAw5ukq_N3q5Us5RLpBsSH5cFB8ybMQUDB7RAooyQzZubL8fNm7TOHvBpyOa6UjYAFlrCA03EFLV9MSOE6TFzWfYyVuDkJxmov8CfD8fYf4cgWfYm9QJMc/s1600/Tamil-Daily-News-Paper_13426935673.jpg" width="320" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
மஞ்சுவிரட்டு என்பது வீடுகளில் நம் உபயோகத்திற்காகவும் விவசாயத்திற்காகவும் பயன்படுத்தும் மாடுகளை அன்று அவை நமக்கு செய்த உதவியை நினைவு கூர்ந்து அவைகளை அலங்கரித்து வணங்கி, அவை சுதந்திரமாக திரிய விரட்டி விடுவது. இது பெரும்பாலும் மந்தைகளில் நடந்தது பிறகு ஒவ்வொரு வீட்டின் தொழுவத்தில் நடைபெற ஆரம்பித்தது. மாடுகளின் எண்ணிக்கை குறைந்து விட்ட பிறகு மாட்டுத் தொழுவத்திற்கு மாற்றிக் கொண்டனர். விவசாய உபகரணங்கள் அதிகரித்து மாடுகளின் தேவை குறைந்த பிறகு இத்தகைய நிலைக்கு சென்றது.<br />
<br />
ஏறு தழுவுதல் இதற்கான மாடுகள் தனியாக வளர்க்கப்படுபவை இவைகள் பெரும்பாலும் பெண்களே வளர்ப்பார்கள், ஆண்களை அருகில் விடாமல் வளர்ப்பார்கள். இவை ஏறுதழுவுதல் என்ற விளையாட்டின் நோக்கிற்காக மட்டுமே வளர்க்கப்படுபவை இதை விவசாயத்திற்கோ அல்லது போக்குவரத்திற்கோ பயன்படுத்துவதில்லை. இவைகளை கோயிலுக்கு அருகே வாடிவாசல் என்ற பகுதி இருக்கு இலை அல்லது அமைப்பார்கள் அந்த வாடிவாசலை விட்டு வெளியில் வந்தால் ஒரு பெரிய தெரு ஊருக்கு வெளியே செல்லுமாறு அமைக்கப்பட்டிருக்கும். இந்த வாடிவாசலை விட்டு வெளியில் வரும் காளைகளை இளைஞர்கள் அதன் திமிலை தழுவிக் கொண்டு குறிப்பிட்ட தூரம் வரை செல்ல வேண்டும் அப்படி சென்றார்கள் என்றால் வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவார்கள். இதையே ஏறு தழுவுதல் என்பார்கள்.<br />
<br />
<div style="text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiEEWX7xSb5tF5iUE2PZ2X_W-nqdt3AWYn5CHesFfDn3FbJqb_JEX70VoL54pxWDZHI7CUB4tBD00jSgkEDg1YclbGZrpzMp0NejASR9awnAYvkrGzMEMDzOgArumyyUywnsCX0dep3jeg/s1600/images+(3).jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiEEWX7xSb5tF5iUE2PZ2X_W-nqdt3AWYn5CHesFfDn3FbJqb_JEX70VoL54pxWDZHI7CUB4tBD00jSgkEDg1YclbGZrpzMp0NejASR9awnAYvkrGzMEMDzOgArumyyUywnsCX0dep3jeg/s1600/images+(3).jpg" /></a></div>
ஜல்லிகட்டு என்பது ஊர் மைதானத்தில் சுற்றிவர தடுப்புகள் அமைத்து அதில் காளையை அவிழ்த்து விடுவார்கள் அப்படி வரும் காளையை இளைஞர்கள் அடக்க வேண்டும் ஆனால் இந்த முறை இப்பொழுது பெரும்பாலும் குறைந்துவிட்டது பிள்ளையார்பட்டி அருகில் இருக்கும் சிராவயலில் மட்டும் நடக்கிறது, மேலும் வேறு எந்த ஊரிலாவது யாராவது முன்வந்து இத்தகைய போட்டிகளை நடத்தினால் தான் உண்டு அது எப்பொழுதாவது நடைபெறும் என்றார். அது தான் உங்க சினிமாவில் வருவது ஆனால் அது ஒத்தைக்கு ஒத்தை எல்லாம் கிடையாது 10 பேருக்கு மேல் கூட களத்தில் சுற்றி நின்று காளையை விரட்டி அதன் திமிலை பிடிக்க முயற்சிப்பார்கள் திமிலை பிடித்து அது அந்த சுற்று அரணை தாண்ட வலியில்லாமல் பிடித்தவரை உதறித் தள்ள முயற்சிக்கும் அந்த முயற்சியை முறியடித்து காளை களைத்துப் போகும் வரை பிடித்து நிற்பவரே வெற்றிபெற்றவர் என்று அறிவிக்கப்படுவார் என்றார்.<br />
<br />
இந்த விளையாட்டுகள் அனைத்தும் விவசாயத்தை முடித்துவிட்டு அறுவடையை வீட்டுக்கு கொண்டு வந்த மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வது மட்டுமில்லை தனக்கு இந்த விளைச்சலில் உதவிய அனைவருக்கும் நன்றி சொல்லும் விதமாகவும். உழைத்து உரமேறிய தனது தினவெடுத்த தோள்களை போருக்கு தயார் செய்யும் நோக்கிலுமே நடந்து வந்துள்ளது, அதாவது உழைப்பின் வேகத்தில் எதிரியுடன் மல்லுக்கட்டும் தைரியத்தை இழந்துவிட்டோமா இல்லை இன்னும் தைரியம் இருக்கிறதா என்பதை பரிசோதனையாக தெரிந்துகொள்வது, தன்னை விட பல மடங்கு ஆற்றல் வாய்ந்த காளையை தழுவிக்கொண்டு பயணிப்பது என்பது இதன் அடிப்படையிலேயே. அதன் ஆற்றலுக்கு ஈடுகொடுத்து விடாப்பிடியாக நிற்கும் தன் மனதைரியத்தை வளர்த்துக் கொள்ளும் ஒரு போருக்கான தயாரிப்பு முறையே ஜல்லிக்கட்டு என்று சொன்னார்.<br />
<br />
ஆனால் இன்று நாம் ஜல்லி கட்டு என்று ஏறுதழுவுதலையே அழைத்துக் கொண்டிருக்கிறோம், அலங்காநல்லூர், பாலமேடு என்று அனைத்துமே ஏறு தழுவுதல் என்ற அடிப்படையிலேயே நடைபெறுகிறது. சிராவயலில் ஜல்லிகட்டு நடப்பதாக கூறுகிறார்கள் ஆனால் அரண் அமைத்து நடக்கிறதா இல்லை ஏறுதழுவுதல் முறையில் நடக்கிறதா என்பது தெரியவில்லை. </div>
</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8141777893641371649.post-74561012124581651292014-05-05T22:00:00.004-07:002019-04-30T04:11:02.288-07:00திமுக டூபாக்கூர்களும் சபாரத்தினமும்.. <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi6XOF2eTE2AetqGzsTiMrgo-i5KFY6Cg2IYvwGHaH4WL3vJMwHrln7lVla66ocpx5u1cDUKRP3DeoiSIySXXUrGkN_gxxc18qc8l9QJVpymKR43V4MVeU2_EQDQD1HwoOvMx52Gcz8-18/s1600/Muka-eelam-298x300.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi6XOF2eTE2AetqGzsTiMrgo-i5KFY6Cg2IYvwGHaH4WL3vJMwHrln7lVla66ocpx5u1cDUKRP3DeoiSIySXXUrGkN_gxxc18qc8l9QJVpymKR43V4MVeU2_EQDQD1HwoOvMx52Gcz8-18/s1600/Muka-eelam-298x300.jpg" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மதுரையில் டெசோ மாநாடு நடந்தது அதில் விடுதலைப் புலிகள் இயக்கத்தினரும் கலந்து கொண்டனர். அந்த மாநாட்டில் ஒற்றுமை வலியுறுத்தப்பட்டது அதற்கு அனைவரும் ஒப்புக்கொண்டனர் என்று சொல்பவர்கள் மே 4ம் தேதி 1986ம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் டெலோ இயக்கத்திற்கு இடையில் எதனால் பிரச்சனை என்பதை சொல்வதில்லை. </div>
<div style="text-align: justify;">
<div>
<br /></div>
<div>
1986ம் ஆண்டு ஏப்ரல் 27ம் தேதி விடுதலை புலிகளுக்கும் இலங்கை கடற்படையினருக்கும் இடையில் நடந்த ஒரு சண்டையில் புலிகள் இயக்கத் தளபதி அருணன் மரணம் அடைந்துவிட்டார். இதற்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக் ஏப்ரல் 28ம் தேதி யாழ்குடாவில் கடையடைப்பு நடைபெற்றது. அதாவது மதுரையில் டெசோ மாநாடு கூடுவதற்கு சரியாக 7 நாட்கள் முன்பு நடந்தது அருணன் மரணம் அதை ஒட்டி 28ம் தேதி கடையடைப்பு நடந்தது. ஆனால் ஏப்ரல் 23ம் தேதி டெலோ அமைப்பை சேர்ந்த 11பேர் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டிருந்தனர். விடுதலை புலிகள் அமைப்பை சேர்ந்தவர் இறந்தமைக்காக கடையடைப்பு நடத்துகிறீர்கள் எங்கள் இயக்கத் தோழர்கள் மதிப்பு இல்லையா என்று சொல்லி, டெலோ அமைப்பினர் 29ம் தேதியும் கடையடைப்பு நடத்த சொல்கிறார்கள். அதில் பங்கு கொள்ளாத கல்வியங்காட்டு பகுதி மக்கள் மீது, அதாவது எந்த மக்களுக்காக போராட வந்தார்களோ அவர்களின் மீது தாக்குதல் நடத்துகின்றனர். அப்பொழுது அங்கு இருந்த விடுதலை புலிகள் இயக்கத்தை சார்ந்த மேஜர் பஷிர் காக்கா மற்றும் லெப்டினண்ட் முரளி டெலோ இயக்கத்தினரை தடுக்கின்றனர். அவர்களை கைது செய்து டெலோ முகாமிற்கு அழைத்துச் செல்கின்றனர். </div>
<div>
<br /></div>
<div>
இதுவே டெலோ அமைப்பிற்கும் புலிகள் இயக்கத்தினருக்கும் டெசோ மாநாடு மதுரையில் நடந்த பொழுது நடந்த பிரச்சனை. இந்த பிரச்சனையை முழுவதுமாக சொல்லாமல் மூடி மறைக்கின்றனர். இங்கு அனைவரும் ஒன்றிணைந்து போராடுவதாக சொன்னவர்கள், ஈழத்தில் அதை கடைபிடிக்கவில்லை. சபாரத்தினத்தின் பழைய நண்பரான தளபதி லிங்கம் டெலோ இயக்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்த சென்றார். ஆனால் அவரை கொலை செய்தது மட்டுமில்லாமல் அவரின் கண்களையும் தோண்டி எடுத்துவிட்டனர். ஒரு சிங்கள இராணுவத் தளபதியை பிடித்து அவரின் கண்ணை நோண்டியிருந்தால் கூட குட்டிமணி, ஜெகன் படுகொலைக்கு பழிவாங்குவதாக எடுத்துக் கொள்ளலாம் ஆனால் சகபோராளி இயக்கத்தின் தோழரை அதுவும் தங்கள் தலைவரின் நண்பரின் கண்களை இறந்த உடம்பிலிருந்து பிடுங்கும் சிங்கள இனவெறியர்கள் போன்று நடந்து கொண்டனர். இதன் பிறகே புலிகள் இயக்கமும் டெலோவுக்கும் இடையிலான மோதல் பெருமளவில் நடக்கிறது இதில் தான் சபாரத்தினம் கொல்லப்படுகிறார். </div>
<div>
<br /></div>
<div>
இது ஒரு நடவடிக்கை புலிகள் இயக்கத்திற்கு எதிரானது, ஆனால் மக்களுக்கு எதிராக ஆயுதத்தை உபயோகித்ததை மறந்துவிடுகிறார்கள், மறைத்தும் விடுகிறார்கள். அதுவும் சக போராளி இயக்கத்தில் மரணம் அடைந்த ஒரு தோழருக்காக கடையடைப்பு நடத்தும் மகக்ளை, தங்கள் இயக்கத் தோழர்களுக்காக கடையடைப்பு நடத்தவில்லை என்ற பொறாமையின் கீழ் கோரிக்கை விடுத்து அதை செயல் படுத்தாத ஒரு பகுதி மக்களின் மீது தாக்குதலை நடத்தியதை வசதியாக மறந்துவிடுகிறார்கள். மேலும் டெலோ அமைப்பினர் சொந்த மக்கள் மீது ஆயுத பிரயோகம் செய்தது இது முதல் முறை அல்ல. </div>
<div>
<br /></div>
<div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjMc1PB3VkywOzGjP80lwB_OU7uK0n2F4WS0fp6h9FeVodg3CIoX8X6tVw54Jq8vwAaURxonthLTiNtWHB5Au5_p2JY_bT3yZTLtXVHeWbz9e54gAzKK74FsdxkvhnA2YrRlfKV9XIcBkE/s1600/enlf.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjMc1PB3VkywOzGjP80lwB_OU7uK0n2F4WS0fp6h9FeVodg3CIoX8X6tVw54Jq8vwAaURxonthLTiNtWHB5Au5_p2JY_bT3yZTLtXVHeWbz9e54gAzKK74FsdxkvhnA2YrRlfKV9XIcBkE/s1600/enlf.jpg" /></a></div>
<br /></div>
<div>
டெலோ அமைப்பில் சபாரத்தினத்திற்கு அடுத்த கட்டத்தில் தாஸ் மற்றும் பாபி இருந்தனர், இவர்களுக்கு இடையிலான முரண்பாடுகளினால் பிரிந்து சண்டையிட்டுக் கொண்டனர். இவர்களை சமதானப் படுத்தி ஒன்றிணைத்து போராட வைக்க வேண்டிய சபா ரத்தினம் பாபியுடன் இணைந்து தாஸை கொலை செய்தார். ஆம் ஏப்ரல் மற்றும் மேயில் நடந்த பிரச்சனைகளை பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் 1986ம் ஆண்டு மார்ச் மாதம் 11ம் தேதி பேச்சுவார்த்தை என்று யாழ்ப்பாணம் மருத்துவமனைக்கு வரச் செய்து, அங்கு பாபியுடன் சேர்ந்து சபா ரத்தினம் தாஸ், மோகன் (முல்லை தீவு), காளி (பருத்தி துறை), கிசான்(திரிகோணமலை) பீட்டர் (வதிரி) சுட்டு கொன்றார். மருத்துவமனை மக்கள் இருக்கும் இடம் என்ற நினைப்பு கூட இல்லாமல் இந்திய அமைதிப்படை 1987ல் செய்த அதே அக்கிரமத்தை மருத்துவமனையில் துப்பாக்கிகளை முழங்கசெய்து தங்கள் பகையை தீர்த்துக் கொண்டனர், அதுவும் உள் இயக்கப் பிரச்சனைக்காக. இந்த துப்பாக்கி சூட்டில் முன்னால் நீதிபதி கிருபாகரனும் ஒரு பதின்ம வயது சிறுமியும் மரணம் அடைந்தனர். இதை கண்டித்து மறுநாள் மார்ச் 12ம் தேதி பொதுமக்களும் மாணவர்களும் இணைந்து ஒரு அமைதி ஊர்வலம் நடத்தினர் அங்கு சென்று ஊர்வலம் நடத்தக் கூடாது என்று டெலோ இயக்கத்தினர் மிரட்டினர். தொடர்ந்து செல்ல முயன்ற மக்கள் மீது துப்பாக்கி சூடும் நடத்தினர், மக்கள் காயங்களுடன் தப்பினர். இப்படி எந்த மக்களின் விடுதலைக்காக போராட வந்தார்களோ அவர்களின் மீதே போர் தொடுத்த இயக்கம் தான் டெலோ அமைப்பு. </div>
<div>
<br /></div>
<div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhWrsQ18sl5yY4zujfkIVD_lo5FXpJuocIX3JE6GmoGFiQiWOCNFAhehH67P7p_W1JO5IpQjk-2S9NWYnsgsSnvJuqCfi84KGu2dkyRwxCG2VjnGZ_rQ-AuM91lwwXbDwNTMpFKkdzm-xc/s1600/sabakaruna.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="147" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhWrsQ18sl5yY4zujfkIVD_lo5FXpJuocIX3JE6GmoGFiQiWOCNFAhehH67P7p_W1JO5IpQjk-2S9NWYnsgsSnvJuqCfi84KGu2dkyRwxCG2VjnGZ_rQ-AuM91lwwXbDwNTMpFKkdzm-xc/s1600/sabakaruna.jpg" width="320" /></a></div>
<br />
என்ன செய்வது சகவாச தோசம் கருணாநிதியுடன் இணைந்த பிறகு மக்களைப் பற்றி நினைக்க தோன்றுமா என்ன????</div>
<div>
<br /></div>
<div>
இதுமட்டுமல்ல 1985ம் ஆண்டு செப்டம்பர் 2ம் தேதி ஆலாலசுந்தரம், தர்மலிங்கம் என்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களையும் கொலை செய்தது டெலோ அமைப்பு தான். இதை அவர்களின் உறுப்பினரான பழனிவேல் தங்கராசா என்பவர் டெலோ புலிகள் மோதல் நடந்த 1986 மே மாதம் கைது செய்யப்படுகிறார். பாபி உத்தரவிட்டார், ஏன் என்று கேட்டபொழுது அரசியல் நகர்வு தலைமையின் உத்தரவு என்று மட்டும் சொல்லியிருக்கிறார். கொலை செய்ய செல்ல ஒரு பழுப்பு நிற மோரிஸ் கார் கொடுக்கப்பட்டுள்ளது சிட்டி பாபு, வாலண்டைன் மற்றும் ரஞ்சித் ஆகியோருடன் நானும் முதலில் ஆலாலசுந்தரம் வீட்டுக் சென்று அவரை பலவந்தமாக காரில் ஏற்றிக் கொண்டு அடுத்து தர்மலிங்கம் வீட்டிற்கு சென்று ஆலாலசுந்தரம் பேச விரும்புகிறார் என்று சொல்லி அவரையும் காரில் ஏற்றி சென்று முதலில் ஆலாலசுந்தரத்தை பின்னர் தர்மலிங்கத்தையும் சுட்டு கொலை செய்தோம் என்பதை ஒத்துக் கொண்டுள்ளார். இந்த இரண்டு கொலைகள் நடந்த பொழுது புலிகள் இயக்கத்தின் மீது பலி சொல்லப்பட்டது. ஆனால் பின்னாளில் ஈ.பி.ஆர்.எல்.எஃப் புஸ்பராஜாவும் டெலோ இயக்கம் தான் இவர்களை கொலை செய்தது என்பதை தன் புத்தக வாயிலாக உறுதி செய்தார். </div>
<div>
<br /></div>
<div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
புலிகள் இயக்கம் தாங்கள் செய்த அரசியல் கொலைக்களுக்கு உரிய நியாயத்தை சிறு புத்தகங்கள் இல்லை துணுடுபிரசுர அறிக்கைவடிவிலோ வெளியிடுவார்கள், அதில் அதற்கான காரணங்கள் அச்சிடப்பட்டிருக்கும், இது எந்த மக்களுக்காக போராடுகிறோமோ அவர்களுக்கு தங்களுடைய தரப்பு நியாயத்தை சொல்வதற்காக கடைபிடிக்கும் முறை. இதேபோல் டெலோ இயக்கத்தை அளித்தது ஏன் என்ற விளக்கம் ஈழமக்களுக்கு புத்தகமாக கொடுக்கப்பட்டது. அதன் பின்னரும் போராட்டம் தொடர்ந்தது, மக்களுடைய ஆதரவும் தொடர்ந்தது. ஆனால் இன்று கிளம்பியிருக்கும் சொம்புகள் சபாரத்தினத்தின் தாயர் அன்றுதொட்டு சாகும் வரை சென்னையில் தான் இருந்தார் என்பது கூட தெரியாது. அவரின் சவ ஊர்வலம் மிகவும் சொற்பான ஆட்களுடன் தான் நடந்தது தங்கள் தலைவர் ஏன் சபாவின் தாயார் ஊர்வலத்துக்கு கூட செல்லவில்லை என்று இது வரை கேள்வி எழுப்பியதாக தெரியவில்லை... போஸ்டர் மட்டும் ஒட்டுவார்கள் பிராபகரனின் அன்னைக்கு மருத்துவம் செய்துகொள்ள அனுமதித்த கருணாநிதிக்கு நன்றி நன்றி என்று.<br />
<br />
<br />
இந்தியாவின் “ரா” அமைப்பு தான் போராளி இயக்கங்களுக்கு பயிற்சி அளித்தது, இந்திராவின் நேரடி காரியதரிசியாக இருந்த ஜி. பார்த்தசாரதி இருந்தவரை இந்திய அமைப்பின் நிலைப்பாடுகள் சரியாகவே இருந்தது. இந்திரா இறந்து அடுத்த மாற்றங்கள் வந்த பொழுது இந்திய அரசின் ஈழம் குறித்த நிலைப்பாடுகள் மாறுகிறது. இதில் போராளி இயக்கங்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் வேலையை தொடர்ந்து “ரா” செய்துவந்தது, அதற்கு பழிகடாவானவர் பலர், ஈ.பி.ஆர்.எல்.எஃப் தான் கொஞ்சம் பலியாகமல் இருந்தது ஆனால் அதுவும் ராஜிவ் ஜெயவர்த்தனே ஒப்பந்தத்திற்கு பிறகு இந்தியாவின் கைப்பாவையாகவே மாறியது, இவையெல்லாம் வரலாறு யாராலும் மறைக்க முடியாது. ஆனால் மேலே குறிப்பிட்ட எந்த மக்களுக்காக போராட வந்தார்களோ அந்த மக்களின் மீது ஆயுதங்களை பயன்படுத்திய அனைத்து சம்பவங்களின் போதும் சபாரத்தினம் ஈழத்தில் களத்தில் தான் இருந்தார் அனால் இந்த சம்பவங்களின் போது பிராபகரன் சென்னையில் தான் தங்கியிருந்தார். களத்தில் நடந்த அனைத்து கொலைகளின் போதும் களத்திலேயே நின்றவர் தான் சபாரத்தினம். இப்ப யார் இந்த சபாரத்தினம் என்பது அனைவருக்கும் புரிந்திருக்கும்.. </div>
</div>
</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8141777893641371649.post-5971334839748121432014-04-25T10:15:00.003-07:002014-04-25T10:15:43.442-07:00ராஜிவ் மரணமும் அரசியலும் - காங்கிரஸ்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg7tb9-WOGjY8KMgAYLTEZJVz921yInhysXjOFVVVbZgCuFgwjLVvSKWG5TmvuJvFLSI0St53xj_pk3w3v40a0MD85r6ugEXqRioSwxqqwlRk4glcQ_-ijiewrbAm1B9GP81LbcK69hfus/s1600/Srilanka+(3).jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg7tb9-WOGjY8KMgAYLTEZJVz921yInhysXjOFVVVbZgCuFgwjLVvSKWG5TmvuJvFLSI0St53xj_pk3w3v40a0MD85r6ugEXqRioSwxqqwlRk4glcQ_-ijiewrbAm1B9GP81LbcK69hfus/s1600/Srilanka+(3).jpg" height="155" width="320" /></a></div>
<br />
ராஜிவ் காந்தியின் மரணம் 1991ம் ஆண்டு நடந்தது ஆனால் அன்றிலிருந்து அதன் பின்னான அரசியல் இன்று வரை நடந்து கொண்டு தான் இருக்கிறது. இந்த அரசியலில் ஒவ்வொரு முறையும் ஒருவர் தனது அரசியல் பிழைப்பிற்காக பயன்படுத்தியே வருகின்றனர். சிலப்பதிகார வரி ஒன்று</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
“அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்”</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அதாவது அரசியலை மக்கள் நலனுக்காக இல்லாமல் அதை தன் சொந்த நலனுக்காக பயன்படுத்துபவர்களுக்கு அறமே எமனாக மாறும் என்று சொல்கிறது. ஆனால் நாம் வாழ்வது சிலப்பதிகார காலமில்லை. சிலப்பதிகாரத்தை தனக்காக வளைத்துக் கொள்ளும் வஞ்சகர்கள் வாழும் காலம். இதில் செங்கோல் வளைந்தால் மன்னன் உயிர்வாழ்தல் நன்று அன்று என்று சொல்லும் காலமா இது. இவர்களுக்கு அறம் கூற்றானால் என்ன ஆகவிட்டால் நமக்கென்ன ராஜிவ் மரணத்தில் யாருக்கு அரசியல் என்பதை பார்ப்போம் முதலில் காங்கிரஸ். காங்கிரஸ் இந்த மரணத்தை வைத்து அன்றிலிருந்து இன்று வரை செய்து கொண்டிருக்கும் அரசியல் என்ன என்பதை முழுவதுமாக தெரிந்து கொள்வோம்.<br />
<br />
<b>காங்கிரஸ்</b><br />
<br />
ராஜிவின் மரணத்திற்கு பிறகு அவரின் மரணம் யாருக்கு பயன்பட்டதோ இல்லையோ அரசியல் வாதிகளுக்கு பயன் பட்டது. 1991ல் தேர்தல் காலத்தில் தான் ராஜிவ் மரணம் நிகழ்கிறது, அதற்கு முன்பாக 211 தொகுதிகளில் தேர்தல் முடிந்திருந்தது. மிச்சம் இருக்கும் 334 தொகுதிக்களுக்கான தேர்தல் ஒரு மாதம் தள்ளிப்போடப்பட்டது இதில் பஞ்சாப்பும், ஜம்மு காஷ்மீரும் அடங்காது, அந்த மாநில தேர்தல்கள் 1992ல் தான் நடைபெற்றது. அதாவது இந்தியா முழுமைக்குமான ஒரு தேர்தலில் இரண்டு மாநிலங்களில் தேர்தல் நடக்காமல் மற்ற மாநிலங்களில் தேர்தல் நடந்தி இந்தியாவின் பிரதமரை தேர்ந்தெடுத்த அவலம் 1991ல் தான் நடந்தது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br />இரண்டு மாநிலங்களில் தேர்தல் நடக்கவில்லை ராஜிவின் மரணத்திற்கு முன்பாகவே 211 தொகுதிகளில் தேர்தல் நடந்துவிட்டது. சரி மிச்சம் இருக்கும் தொகுதிகளில் தேர்தல் குறிப்பிட்ட தேதியில் நடக்காமல் ஒரு மாதம் தள்ளிவைக்கப்பட்டது. ஒரு தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் இறந்துவிட்டால் அவரின் தொகுதியில் மட்டும் தான் தேர்தல் தள்ளிவைக்கப்படும் ஆனால் மீதம் தேர்தல் நடக்க வேண்டிய இடங்களில் தேர்தல் நடக்கும் ஆனால் இங்கு ஒட்டுமொத்தமாக தேர்தல் தள்ளிவைக்கப் பட்டது அடுத்து நடக்க வேண்டிய தேர்தல்கள் ஜூன் 12 மட்டும் 13ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதாவது அன்று அமைச்சராகவோ இல்லை எதிர் கட்சியின் கொரடாவாகவோ இல்லாத ஒருவர் இறந்தார் என்பதற்காக ஒட்டுமொத்த இந்தியாவின் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது இதற்கு காரணம் அவர் மிகப்பெரிய ஆள் என்பது அல்ல, இந்திராகாந்தி இறந்த பிறகு ஆட்சிக்கு வந்த ராஜிவின் முட்டாள் தனமான செயல்பாடுகளால் தனது மக்கள் செல்வாக்கை இழந்திருந்தார், போபர்ஸ், பஞ்சாப் சீக்கிய படுகொலை, போபால் என்று எங்கு அவர் கைவைத்தாலும் வினையாக முடிந்தது. அப்படி அவர் கை வைத்த இடம் தான் ஈழப்பிரச்சனையும் அதிலும் பன்னாட்டு அரங்கில் தானும் ஒரு ரவுடி என்று காட்டிக் கொள்ள முயன்று ஒரு நாட்டின் இராணுவத்தை அதுவும் இவர்கள் அவர்கள் முன்னால் பீலாவெல்லாம் விட்டார்கள். ஜே.என்.திக்சித் சொன்னான் ஒரு விடுதலைப் போராட்ட குழுவின் தலைவரான பிராபாகரனிடம் உங்கள் குழுவை இந்த சிகெரெட் குடிக்கும் நேரத்தில் அழித்துவிடுவேன் அத்தகையது எனது இராணுவத்தின் பலம் என்று ஆனால் ஈழத்திற்கு அவர்கள் அனுப்பிய இராணுவத்தில் அரசாங்கப் பூர்வ தகவலாக தரும் 1155 பேருக்கு அவர்கள் சண்டையில் ஈடுபட்ட இடத்தில் நினைவிடம் எழுப்ப முடியாமல் கொழும்புவில் சிங்களன் பகுதியில் தான் நினைவுத் தூண் எழுப்பினார்கள். இவ்வளவு கேவலமாக தானும் ஒரு ரவுடி என்று நிருபிக்க முயன்று தோற்ற ஒரு மனிதனை நாட்டு மக்கள் தேர்ந்தெடுக்க விரும்ப மாட்டார்கள் என்பது காங்கிரஸுக்கு தெரியும் அந்நிலையிலேயே ராஜிவின் மரணம் நிகழ்கிறது.<br /><br />அதுவும் 211 தொகுதிகளில் வாக்கு பதிவு நடந்து முடிந்துவிட்டது மிச்சம் இருக்கும் தொகுதிகளில் தான் வாக்கு பதிவு நடக்கவேண்டும். அதிலும் விபி.சிங் இன்னொரு பிரதம வேட்பாளராகவும் வாஜ்பாய் இன்னொரு பிரதம் வேட்பாளாராகவும் நிறுத்தப்பட்டிருந்த நேரம் அது அந்நிலையில் ராஜிவின் மீதான நம்பிக்கை இம்மியளவும் இல்லாத நிலை. ஆம் ராஜிவின் மரணத்திற்கு முன்பாக நடந்த 211 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றது வெறும் இரண்டிலக்க தொகுதிகளில்தான். ஆனால் ராஜிவ் மரணத்தை வைத்து அதை காட்சிப் பொருளாக்கி ராகுல் கொள்ளி வைப்பது ஊர்வலம் நடப்பது என்று காட்டி ராஜிவின் பிணத்தை காட்டி மக்களின் பரிதாபத்தை தேடினர். அதுவும் அதற்கு பிறகு நடந்த தேர்தல்களில் அதில் மிக முக்கியமானது ஒரு வருடம் கழித்து நடப்பட்ட பஞ்சாப் மற்றும் காஷ்மீர தேர்தல் உட்பட ஆட்சி அமைக்க தேவையான தொகுதிகளை பெறவில்லை. அதாவது ராஜிவ் செத்த பிறகு மொத்தம் 334 தொகுதிகளில் தேர்தல் நடந்தது ராஜிவின் பிணத்தை வைத்து அனைத்து தொகுதிகளை கைப்பற்றிவிடலாம் என்று மனப்பால் குடித்தார்கள் ஆனால் ஒட்டுமொத்தமாக ராஜிவ் மரணத்திற்கு முன்பும் பின்பும் சேர்த்து கூட ஆட்சி அமைக்க தேவையான தொகுதிகள் கிடைக்கவில்லை. வெறும் 244 தொகுதிகளில் தான் வெற்றி பெற்றார்கள். அதுவரை 60வது தொகுதியிலேயே அதிகபட்சமாக வெற்றி பெற்றிருந்த பாரதிய ஜனதா அந்த தேர்தலில் 120 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்த நிலையிலேயே இன்று வரை ராஜிவ் தான் அடுத்த பிரதமராக வர இருந்தார் அவரை கொலை செய்து விட்டனர் என்று விஷமப் பிரசாரம் செய்கிறார்கள்.<br /><br />1991ல் தேர்தலில் மைனாரிட்டியாக அனைவரின் உதவியையும் பெற்று ஆட்சி அமைத்தனர் எனென்றால் அதற்கு முன்பாக 2 வருடங்களுக்கு முன்பாகத் தான் ஒரு தேர்தல் நடந்திருந்தது அடுத்த தேர்தலை நடத்த இந்தியாவின் பொருளாதாரம் இடம் கொடுக்காது என்பதால் ஒரு சமரசத்திற்கு வந்து பிரதமராக மாற்றப்பட்டவர் தான் நரசிம்ம ராவ், இன்றைய மன்மோகன் சிங்கை வர்ணிப்பதைவிட இவரை அன்று ஆற்றல் இல்லாத ஒரு பிரதமர் என்று விமர்சித்துள்ளனர். அதுவும் தன் நாட்டிற்கு உட்பட்ட பழம்பெரும் கட்டிடம் இடிக்கப்பட்ட பொழுது அதுவும் பல மாதங்களுக்கு முன்பாகவே அங்கு புதுக்கட்டிடம் கட்ட போகிறோம் என்று அறிவிக்கப்பட்ட பொழுதே பழைய கட்டிடம் இடிக்கப்பட போகிறது என்பதை உணராத அல்ல உணர்ந்து அதற்கு எதிர் நடவடிக்கை எடுக்க இயலாத செயலிழந்த பிரதமராக செயல் பட்டார். இவர் இறப்பிற்கு முன்னால் பிரதமர் என்ற மரியாதை கூட இந்திய அரசு கொடுக்கவில்லை அது தனிக் கதையல்ல, மகாபாரதம் போல் கதைக்குள் ஒரு கதை, அதைப் பின்னர் பார்ப்போம்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhNRf6wiQYH2EdC3ylsxjCD7rgVnDC6T3LNNtYCENlBK_5j2wt4MAfdH_xGULnI10ea1ulbHceEOmKbw4u79nygRclVdrowgZqQcTxbf_WlBqoEGKCZAomky2sw-JVMYBA7Nlt_14CYzz8/s1600/images.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhNRf6wiQYH2EdC3ylsxjCD7rgVnDC6T3LNNtYCENlBK_5j2wt4MAfdH_xGULnI10ea1ulbHceEOmKbw4u79nygRclVdrowgZqQcTxbf_WlBqoEGKCZAomky2sw-JVMYBA7Nlt_14CYzz8/s1600/images.jpg" /></a></div>
<br />
1991ல் அழிய வேண்டிய ஒரு கட்சிக்கு இப்படித்தான் உயிர் கொடுக்கப்பட்டது, அதாவது அவர்கள் தலைவரின் ஒருவரின் மரணத்தை வைத்து அதன் மூலமாக அரசியல் செய்து பதவிக்கு வந்தார்கள் அங்கும் எதையும் சாதிக்கவில்லை அதனாலேயே அரசியல் மாற்றம் ஏற்பட்டது 1996ல். அதாவது மக்கள் உணர்ந்தார்கள் அதுவும் வெறும் சொற்ப ஓட்டுகளே போட்ட மக்கள் உணர்ந்து காங்கிரஸை துரத்தினார்கள் 1996ல். இப்படி தங்களுடைய தகுதி என்பது அழிக்கப்பட்டதை உணர்ந்து அதன் பிறகு தங்கள் அரசியலால் அதுவும் இவர்கள் ஆட்சியில் அமைக்கப்பட்ட வர்மா கமிசன் அதுவும் இவர்களின் தலைவர் செத்த வழக்கில் ஏற்ப்பட்ட பாதுகாப்பு குறித்த குறைபாடுகளை ஆராய நியமிக்கப்பட்ட ஒரு கமிசனின் அறிக்கையை தொலைத்து விட்டோம் என்று சொல்கிறார்கள். இது 1991 முதல் 1996 வரையிலான காங்கிரஸ் ராஜிவ் மரணத்தை வைத்து அடைந்த ஆதாயங்கள் மட்டுமே. அதற்கு பிறகும் 2014 வரை ராஜிவ் மரணத்தை வைத்து நிறைய ஆதாயங்கள் அடைந்துள்ளனர் அதை அடுத்து எழுதுகிறேன்.<br /><br />ஆனால் இந்த கட்டுரையில் எழுப்பபட்டுள்ள மிக முக்கியமான விசயங்கள் ராஜி இறந்த பிறகும் கட்சி ஆரம்பித்து மூன்றாவது தேர்தலில் 120 இடங்களில் பாஜக எப்படி வெற்றி பெற்றது அதுவும் ஒரு நாட்டின் வருங்கால பிரதம என்று சொல்லப்படுபவர் இறந்த பிணத்தை வைத்து ஓட்டு கேட்ட பொழுதும், அமேதிக்கு மட்டும் தள்ளிவைக்காமல் ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் தேர்தலை தள்ளி வைத்து இந்தியா முழுவதும் ஒரு பிணத்தை காட்டி மக்களின் பரிதாபத்தை பெற முயற்சித்தவர்களுக்கு ஏன் மக்கள் ஓட்டு போடவில்லை. இதே தேர்தலில் விபி.சிங்கின் ஜனதா தளம் 64 இடங்களை கைப்பற்றியது...<br /><br />இப்படி மைனாரிட்டியாக வரத்தான் 334 தொகுதிகளுக்கு தேர்தல் தள்ளி வைக்கப்பட்டதா, ராஜிவ் இவர்கள் சொல்வது போல் மிகப்பெரிய தலைவன் என்றால் ராஜிவின் மரணத்திற்கு பின்பு நடந்த 334 தொகுதிகளிலும் பிணத்தை பார்த்து ஓட்டு போட்டு பரிதாப அலையில் காங்கிரஸ் வெற்றி பெற்று மெஜாரட்டி அரசாக இருந்து இருக்க வேண்டுமே ஆனால் 1991லிருந்து 1996 வரை மைனாரிட்டி அரசாக தொடர்ந்த காரணம் என்ன??????????</div>
</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8141777893641371649.post-52165187914602307652014-04-18T08:53:00.000-07:002014-04-18T08:53:01.942-07:00போர்க்கள நீதிமான்கள் - விடுதலைப் புலிகள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
போர் நடக்கும் காலகட்டத்தில் போரில் ஈடுபடும் இரு தரப்பினரும் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் வரையறுக்கப் பட்டுள்ளது. இது பெரும்பாலும் அனைவரும் சிறிதளவாது மீறுவார்கள் ஆனால் விடுதலைப் புலிகள் இயக்கம் என்றும் அத்தகைய விதிமுறை மீறல்களை அனுமதித்தது இல்லை. அப்படி தவறுகள் நடந்தால் உடனடியாக அதற்காக தங்களது தவறு செய்த வீரர்களை தண்டிக்க தவறியதும் இல்லை. இப்படி போர்க்களத்தில் நீதிமான்களாக திகழ்ந்தவர்கள் தான் விடுதலைப் புலிகள் இயக்கம். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhORbaV4LvJiSk1uY12GbwEBiNr9yfZ3hZAASN96JmOlboYAa3jtE9Z-fIhuabPBVK8O2pm81CGgDHI5he0asIFtR8gQl_Ycd2AO2WFoHewzTtwdd_EIQkBkAhHaF8Q1a3tXTKIj6HB0ss/s1600/18release.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhORbaV4LvJiSk1uY12GbwEBiNr9yfZ3hZAASN96JmOlboYAa3jtE9Z-fIhuabPBVK8O2pm81CGgDHI5he0asIFtR8gQl_Ycd2AO2WFoHewzTtwdd_EIQkBkAhHaF8Q1a3tXTKIj6HB0ss/s1600/18release.jpg" height="320" width="195" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div style="text-align: justify;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi0HPdZhLSQjO6vOLcRWj9ro8Fm9MS9l8G0MwH5E4JxxTiK54-w4fHPmogztLeAXNAKQtHpoXybIbQvhKB48gr6krE5KdwJARpC_RzahsnuYMUUB0PlfYet9uzsmpP_GDOlzZwA2E84yWo/s1600/03+IPKF.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em; text-align: center;"><br /></a>அக்டோபர் 10, 1987ம் வருடம் புலிகளுக்கும் இந்திய இராணுவத்திற்கும் இடையிலான போர் தொடங்குவதாக இந்திய இராணுவம் அறிவிக்கிறது. அதன் பிறகு நடந்த சண்டைகளில் கைது செய்யப்பட்ட இந்திய இராணுவ விரர்கள் விடுதலைப் புலிகளால் துன்புறுத்தப்படுகிறார்கள், நெருப்பினால் சுடுகிறார்கள் என்று பல கட்டுக் கதைகள் இந்திய ஊடகங்களுக்கு இராணுவத்தினரால் கொடுக்கப்பட்டு அதுவும் மக்களை சென்றடைகிறது.<br />
<br />
இத்தகைய தருணத்திலேயே இந்திய இராணுவத்தினை புலிகள் இயக்கத்தில் இருந்து வயர்லஸ் மூலமாக தொடர்பு கொள்கிறார்கள். தொடர்பு கொண்டவர்கள் தங்களிடம் கைதிகளாக இருக்கும் 18 இந்திய வீரர்களை ஒப்படைக்க விரும்புவதாக தெரிவிக்கின்றனர். ஆம் இந்த 18 பேரும் போர் கைதிகள் என்ற போர்க்கால சட்டவிதிமுறைகளின் கீழ் வருபவர்கள் அவர்களை ஒப்படைக்கும் முடிவை தன்னிச்சையாக எடுத்து யார் தங்களுடன் சண்டையிட்டுக் கொண்டு இருக்கிறார்களோ அவர்களிடம் நேரிடையாக ஒப்படைக்க தயார் என்று அறிவிக்கிறது விடுதலைப் புலிகள் இயக்கம். களத்தில் சண்டையிடுவதலாகட்டும் சமாதன காலத்தில் போர் நிறுத்த உடன் படிக்கைகளை பின்பற்றுவதிலாகட்டும் புலிகள் இயக்கத்தினர் மிகவும் கவனமாக எந்த தவறும் தங்கள் தரப்பில் இருந்து ஏற்படாமல் பார்த்துக் கொள்வார்கள். அதே போன்ற நடவடிக்கை தான் (POW)போர்க் கைதிகளை ஒப்படைக்கும் இந்த நடவடிக்கையும்.<br />
<br />
அதன் பிறகு கைதிகள் ஒப்படைப்பு இடம் நேரம் நாள் அனைத்தும் குறிக்கபப்டுகிறது, ஆனால் புலிகள் தரப்பில் இருந்து அதைச் செய்யவேண்டும் இதைச் செய்யவேண்டும் என்ற எந்த கோரிக்கையும் இல்லை. எந்த நிபந்தனைகளும் இன்றி இந்திய வீரர்களை ஒப்படைப்பதைப் பற்றி மட்டுமே பேச்சுக்கள் நடந்து இடம் நேரம் அனைத்தும் முடிவு செய்யப்படுகிறது. நவம்பர் 19ம் தேதி காலை 11மணிக்கு உடுவில்லில் 9 இந்திய வீரர்களையும் 1.30க்கு சாகவச்சேரியில் 9பேரையும் ஒப்படைப்பதாக முடிவாகிறது. இந்தியாவில் இருந்து பத்திரிக்கையாளர்கள் அனைவரும் சென்னையிலிருந்து ஹெலிகாப்டர் மூலமாக அழைத்து வரப்பட்டு அனைவரும் தயாராக இருந்தனர். காலை 11மணிக்கு தொடங்கிய காத்திருப்பு பல மணி நேரங்கள் ஆனது இந்திய இராணுவத்தினர் புலிகள் ஏமாற்றுகிறார்கள் அவர்களை என்றுமே நம்பக்கூடாது என்று பத்திரிக்கையாளர்களிடம் சொல்கிறார்கள்.<br />
<br />
ஆனால் புலிகள் இயக்கத்தில் இருந்து தகவல் தரப்படுகிறது மாலை 5.30 சாகவச்சேரியில் இந்திய இராணுவ வீரர்களை ஒப்படைப்போம் என்கிறார்கள். அனைவரும் சாகவச்சேரிக்கு சென்று தங்கள் காத்திருப்பை தொடர்கின்றனர், இந்திய இராணுவம் அனைவரையும் சாகவச்சேரி வரை அழைத்து வந்திருந்தது, இந்திய இராணுவத்திற்கு தலைமை தாங்கி ஜே.எஸ். திலான் அவர்கள் இருந்தார். யாழ்ப்பாணத்தின் விடுதலை புலிகள் இயக்கத்தின் அரசியல் துறை பொருப்பாளர் யோகி அழைத்துவருவார் என்று எதிர்பார்ப்புடன் இருந்தார்கள், ஆனால் யாரும் எதிர்பாராத விதத்தில் புலிகள் இயக்கத்தின் மிக முக்கிய தளபதிகளில் ஒருவரான மாத்தையா ஒரு வாகனத்தில் புலிக்கொடியும் வெள்ளைக்கொடியும் பொருத்தியிருக்க சாகவச்சேரி வந்து சேருகிறார். அதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு தான் இராணுவத்தினர் மாத்தையா சண்டையில் காயம் அடைந்தார் என்று செய்தியை கசியவிட்டிருந்தது. ஆனால் மிக முக்கிய தளபதி இப்படி இந்திய இராணுவத்தினரின் இடத்திற்கு வருவார் என்று எதிர்ப்பார்க்க நிலையில் வந்து நின்றார். அப்பொழுது மாத்தையாவிற்கு இந்திய தளபதி திலான் அவர்கள் அறிமுகப்படுத்தி வைக்கப் படுகிறார். பத்திரிக்கையாளர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க திலானுடன் கை குழுக்கிய படி புகைப்படம் எடுத்துக் கொள்ள நின்றார் மாத்தையா அவர்கள். மாத்தையாவுடன் மற்றொரு தளபதி சங்கர் அவர்களும் வந்திருந்தார்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjPrqcrETLGjKHLGPz8Te11mACh-MMhyphenhyphen5A9MtagRCE7Dt5H2SFMMY0KS5H9F-lm-Qcw27Q0W_uCsNcHetxxRwKTeXk8PqVSsq2ANb6R88EMfjhuRfX9EHIBrRJ9eAUIu6eYJpO4xnQrLnM/s1600/18ipkf1.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjPrqcrETLGjKHLGPz8Te11mACh-MMhyphenhyphen5A9MtagRCE7Dt5H2SFMMY0KS5H9F-lm-Qcw27Q0W_uCsNcHetxxRwKTeXk8PqVSsq2ANb6R88EMfjhuRfX9EHIBrRJ9eAUIu6eYJpO4xnQrLnM/s1600/18ipkf1.JPG" height="204" width="320" /></a></div>
<br />
சில நிமிடங்களில் சுற்றியிருந்த வெற்று மைதானத்தில் திடிரென்று 9 பேர் தோன்றுகின்றனர், அவர்கள் இந்திய படை இருக்கும் இடத்தை நோக்கி நடந்து வந்தனர். அவர்கள் சாதரண மக்கள் அணியும் சட்டை கைலியுடன் வந்தனர் அவர்கள் தான் கைது செய்து வைக்கப்பட்டிருந்த இந்திய இராணுவ வீரர்கள் 18 பேரில் 9 பேர். மற்ற 9 பேரும் இன்னும் ஒரு மணி நேரத்தில் வருவார்கள் என்ற தகவலை மாத்தையா பகிர்ந்து கொள்கிறார். வந்து நின்றவர்கள் யாருக்கும் எந்தவிதமான காயங்களோ எதுவும் இல்லை மிகவும் சிறந்த ஆரோக்கியத்துடனே நடந்து வந்து நின்றார்கள். மாத்தையா அப்பொழுது பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்தார் புலிகள் இயக்கத்தை கொச்சைப் படுத்தவேண்டும் என்பதற்காக போர் கைதிகளை துன்புறுத்துகிறோம் என்று கதைகள் கட்டி விடப்பட்டுள்ளன ஆனால் நாங்கள் யாரையும் துன்புறுத்தவில்லை நீங்களே வேண்டுமென்றாலும் விடுவிக்கப்பட்ட கைதிகளிடம் கேட்டுக் கொள்ளலாம் என்று சொல்கிறார். ஆனால் இந்திய இராணுவத் தளபதி திலான் அதற்கு அனுமதி மறுக்கிறார். இதனிடையில் சற்று தள்ளி நின்றவர்களிடம் உரத்த குரலில் பத்திரிக்கையாளர்கள் நீங்கள் துன்புறுத்தப்பட்டீர்களா என்று உரத்த குரலில் விணாவியபொழுது அவர்களில் ஒருவர் இல்லை என்று பதிலளித்தார்.<br />
<br />
அப்பொழுது சங்கர் அவர்கள் இந்த பதினெட்டு பேரில் ஒருவர் அக்டோபர் 11ம் தேதி யாழ்ப்பாண பல்கலையில் தாக்குதல் நடத்திய இந்தியப் படையைச் சேர்ந்த கூரா சிங்க், 13வது சீக் லைட் இன்ஃபாண்ட்ரி அணியை சேர்ந்தவர். அவர் அக்டோபர் 11முதல் எங்களிடம் போர் கைதியாக இருக்கிறார். மீதம் இருக்கும் 17 பேரும் வட்டுக்கோட்டைக்கு அருகில் கைது செய்யப்பட்டவர்கள் இவர்கள் அனைவரும் அக்டோபர் 16ம் தேதியிலிருந்து போர் கைதிகளாக இருக்கின்றனர். இவர்களை கைது செய்யும் பொழுது துப்பாக்கி குண்டுகள் அனைத்தும் தீர்ந்து போன நிலையில் கைது செய்தோம் என்பதை சொல்கிறார்ர். இந்திய தளபது ஜே.எஸ். திலான் அவர்களுக்கு ஆயுத சப்ளை செய்யமுடியாத நிலையில் கைது செய்யப்பட்டனர் என்று விளக்கம் அளித்தார். இதன் பிறகு மாத்தையா அவர்களிடம் கேள்விகளை எழுப்பினர் பத்திரிக்கையாளர்கள் அவர்களுக்கு பதில்களை சொன்னார். அப்பொழுது இது வரை அப்பாவி தமிழ் மக்கள் 2000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர், நான்கு லட்சம் மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டு அகதிகளாக முகாம்களில் இருக்கின்றனர் என்பதைச் சொல்கிறார்.<br />
<br />
மேலும் இந்திய இராணுவ வீரர்களை விடுவிக்க நாங்கள் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை, எங்களுக்கு தேவை எங்கள் மக்களின் அமைதியான வாழ்க்கை. இதன் பிறகு போர் நிறுத்தம் ஏற்பட்டு இந்திய இராணுவம் தனது அக்டோபர் 10தேதியில் நிலை கொண்டிருந்த இருந்த இந்திய இராணுவ முகாம் இடங்களுக்கு திரும்பி அமைதிப் பேச்சுவார்த்தைக்கு வருமானால் நாங்களும் ஆயுதங்களை ஒப்படைத்து பேச்சுவார்த்தைக்கு வரத் தயாராக இருக்கிறோம் என்பதையும் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் இந்திய இராணுவத்தினரிடமும் தெரிவித்தார். அதன் பின்னர் நாங்கள் போர் கைதிகளை எந்தவிதத்திலும் துன்புறுத்தவில்லை எங்கள் மீது அவதூறு பரப்ப படுகிறது என்று சொல்லி இது வரை சொன்ன அனைத்திற்கும் ஆதாரங்கள் என்று புகைபப்டங்களை பத்திரிக்கையாளர்களிடம் விநியோகித்தார். ஆனால் இந்திய இராணுவத்தினர் அந்த புகைபடத்தை பிடுங்க முயற்சி செய்த பொழுதும் பத்திரிக்கையாளர்கள் தர மறுத்துவிட்டனர். அதன் பிறகு மாத்தையா அங்கிருந்து தனது வாகனத்தில் ஏறி சென்றுவிடுகிறார்.<br />
<br />
அடுத்த ஒன்பது இந்திய விரர்கள் 6.30 மணிக்கு விடுதலை செய்யபப்ட்டனர் தளபதி சங்கரின் மேற்பார்வையின் கீழ். அதன் பிறகு பத்திரிக்கையாளர்கள் பலாலி இராணுவ முகாம் சென்றடைந்தனர், அங்கு இந்தியா செல்வதற்காக காத்திருந்த நேரத்தில் இந்திய இராணுவத்தின் உயரதிகாரி ஒருவர் மாத்தையா கொடுத்த புகைப்படங்களை கொடுத்துவிடுமாறு மிரட்டினார் ஆனால் கொடுக்க மறுத்தபொழுது, இது இந்திய தேசிய இராணுவ ரகசியங்கள் அதன் கீழாக உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப் படும் என்று மிரட்டினர். பத்திரிக்கையாளர் தங்களிடமிருந்த புகைப்படங்களை கொடுத்தனர். ஆனல் சிலர் புகைப்படங்களை தக்க வைத்துக் கொண்டனர். சென்னை வந்த பிறமு சென்னை பத்திரிக்கையாளர் தகவல் மையம் மூலமாக மாத்தையா கொடுத்த படங்களை வெளியிட்டால் உங்களை பிளாக் லிஸ்ட் செய்வோம் என்று தகவல் கொடுக்கப்பட்டது.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgwEL7oQuVsrT4J8d9kZGxb9Cxk-_DWDKSuOBKfAH2Jw7n5xti-HSlyI_zSZwn7SXYLNSHLHh8wF6iV-j4DZME4rnhFWKSG4so4tjRr5ksAOBh3P1WTgETaWdneB8P-dNQJehfqgntJk6M/s1600/ipkf+1.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgwEL7oQuVsrT4J8d9kZGxb9Cxk-_DWDKSuOBKfAH2Jw7n5xti-HSlyI_zSZwn7SXYLNSHLHh8wF6iV-j4DZME4rnhFWKSG4so4tjRr5ksAOBh3P1WTgETaWdneB8P-dNQJehfqgntJk6M/s1600/ipkf+1.JPG" height="320" width="286" /></a></div>
<br />
இப்படி ஒரு நாட்டின் இராணுவம் தனது அதிகாரத்தின் அத்தனை எல்லையை பயன்படுத்தி ஒரு விடுதலை போராட்ட இயக்கத்தை அதுவும் கனரக ஆயுதங்கள் பீரங்கிகள், ஹெலிகாப்டர், விமானம் என்று அனைத்து வழிகளின் மூலமாக இந்த வசதிகள் எதுவும் இல்லாத ஒரு விடுதலைப் போராட்ட இயக்கத்தை ஒடுக்க முயன்ற நிலையில், எந்த வித நிபந்தனைகளும் விதிக்காமல் மனிதாபிமான அடிப்படையில் தங்களிடம் சிறைபட்டிருந்த இந்திய இராணுவ வீரர்களை நேர்மையான முறையில் அடுத்த கட்ட நகர்வுகள் நன்மையை நோக்கி இருக்க வேண்டும் என்று ஒப்படைத்த இயக்கத்தை தான் இந்தியா தீவிரவாத இயக்கம் என்று முத்திரை குத்தியது. அன்றும் சரி என்றும் சரி புலிகள் இயக்கம் சிங்கள இராணுவத்தை எதிர்த்து சண்டை போட்டாலும் ஈழத்தில் இருக்கும் சிங்கள் கிராமங்களை அழிக்க முயற்சி செய்தது இல்லை. <br />
<br />
இந்திய வீரர்களை ஒப்படைத்த ஆறாம் நாள் நவமர் 23ம் தேதியே போர் நிறுத்தத்தை ரத்து செய்து மீண்டும் புலிகளுக்கு எதிரான போர் தொடங்கியது என்று தன்னிச்சையாக அறிவித்தது இந்தியா. ஆனால் கடைசி வரையில் போரின் விதிகளை மிகவும் அமைதியாக கடைபிடித்து போரிட்ட இயக்கம் தான் விடுதலைப் புலிகள் இயக்கம், என்றும் மக்கள் வாழும் பகுதியில் குண்டுகள் போட்டதில்லை மக்களின் வீடுகளுக்குள் நுழைந்து இந்திய இராணுவத்தினர் போல் அராஜகம் செய்தது இல்லை புலிகள் இயக்கம். ஒரு விடுதலைப் போராட்டத்தை அதுவும் ஒடுக்கபப்ட்ட மக்களின் விடுதலை போராட்டத்தை எதிரியை ஒடுக்கி பெறுவது அல்ல விடுதலை என்பதை உணர்ந்து, எதிரியுடன் சரிநிகர் சமானமாக நின்று தம் இனத்தின் விடுதலைக்காக போரிட்ட இயக்கமே புலிகள் இயக்கம். </div>
</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8141777893641371649.post-75846274804531608562014-04-17T10:16:00.000-07:002014-04-17T10:16:03.974-07:00ராஜிவின் கூலிப்படை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgp5OPW2-W4EdXS4nCi6ff2YoWDNbCAa0wCEcF1msdVLQCWN1PEddY724NEGmaY8m84FCMyAhJGJ2lHMeRtZ3syV4FOzIQMPQ2JXgw0Cq-Qz-dS0qHj0zdJHMnIM6ogcFvb6tbzjRf62nk/s1600/02+IPKF.gif" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgp5OPW2-W4EdXS4nCi6ff2YoWDNbCAa0wCEcF1msdVLQCWN1PEddY724NEGmaY8m84FCMyAhJGJ2lHMeRtZ3syV4FOzIQMPQ2JXgw0Cq-Qz-dS0qHj0zdJHMnIM6ogcFvb6tbzjRf62nk/s1600/02+IPKF.gif" height="188" width="320" /></a></div>
<div style="text-align: justify;">
<span style="font-family: Latha;"><br /></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-family: Latha;">இந்தியாவில் இருந்து அமைதிப்படை என்பதை பாமர ஈழத்து மக்கள் தங்களுக்கு பயிற்சி கொடுத்து உதவிய நாட்டின் ராணுவம், நம் தொப்புள் கொடி உறவுகளின் இராணுவம் என்று வரவேற்றனர். ஆனால் பின்னர் தான் தெரிந்தது இது இராணுவம் அல்ல நாசகாரப்படை என்பது. ஆம் அன்று 1987ல் இந்திய இராணுவம் எப்படியெல்லாம் போரை நடத்தியதோ அதே முறையில் தான் 2009ல் இலங்கையும் சர்வதேச அமைப்புகள் நாடுகளின் கண்களை கட்டிவிட்டு இனப்படுகொலையை செய்தது. 2009ல் இலங்கை செய்தது மட்டும் இனப்படுகொலை அல்ல இந்திய நாசகாரப் படை செய்ததும் இனப்படுகொலை தான். </span></div>
<div style="text-align: justify;">
<span style="font-family: Latha;"><br />முதலில் இந்திய அமைதி ஒப்பந்தம் நடந்தது என்ன என்று தேதி வாரியான விவரங்கள் தொடக்கத்திலிருந்து கடைசியாக புலிகள் இயக்கதுட்டன் போர் அறிவிப்பு வரை. </span></div>
<div style="text-align: justify;">
<span style="font-family: Latha;"><br /></span></div>
<div style="text-align: left;">
</div>
<div style="text-align: justify;">
<span style="font-family: Latha;"><b>ஜுலை 19, 1987</b></span></div>
<span lang="TA" style="font-family: Latha; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi;"><div style="text-align: justify;">
இலங்கைக்கான இந்திய
தூதுவர் பிராபகரனை சந்திக்க யாழ்ப்பாணம் வருகிறார். ராஜிவ் அவரை சந்திக்க
விரும்பும் விசயத்தை தெரிவிக்கிறார்.</div>
</span><span lang="TA" style="font-family: Latha;"><div style="text-align: justify;">
<br /></div>
</span><br />
<div style="text-align: left;">
</div>
<div style="text-align: justify;">
<b><span lang="TA" style="font-family: Latha;">ஜூலை 23, </span>1987</b></div>
<span lang="TA" style="font-family: Latha; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi;"><div style="text-align: justify;">
யாழ்ப்பாணம்
சுதுமலைக்கு இரண்டு இந்திய இராணுவ
ஹெலிகாப்டர்கள் வருகின்றன. அதில் பிராபகரன் அவர்கள் சென்னைக்கு செல்கிறார் அங்கு
ஆண்டன் பாலசிங்கமும் இணைந்துகொள்ள டில்லிக்கு செல்கிறார். டில்லி அசோகா ஹோட்டலில்
அறை எண் 513ல் தங்கவைக்கப் படுகிறார். வெளியில் உலாவுவது முதற்கொண்டு அனைத்தும்
தடை செய்யப்படுகிறது இந்திய அதிகாரிகள் மட்டும் சந்தித்து பேசுகின்றனர். ஒரு முறை
வைகோ அவர்கள் ஹோட்டலின் ரிசப்சனினிலிருந்து பிராபகரன் அவர்களின் அறைக்கு தொடர்பு
கொண்டு பேசமட்டும் அனுமதிக்கப்படுகிறார்.</div>
</span><span lang="TA" style="font-family: Latha;"><div style="text-align: justify;">
<br /></div>
</span><br />
<div style="text-align: left;">
</div>
<div style="text-align: justify;">
<span style="font-family: Latha;"><b>ஜூலை 29ம் 1987</b></span></div>
<span lang="TA" style="font-family: Latha; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi;"><div style="text-align: justify;">
இந்தியா இலங்கை
ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. இந்த ஒப்பந்த்த்திற்கு எம்.ஜி.ஆர் அழைக்கப்படுகிறார்
அவர் உடல்நிலையை காரணம் காட்டி ஒப்பந்த நிகழ்விற்கு செல்ல மறுக்கிறார். ஒப்பந்தம்
சரியானதாக இருந்தால் தனது அரசியல் ஆதாயத்திற்காக கண்டிப்பாக எம்.ஜி.ஆர் சென்று
இருப்பார் ஆனால் நிகழ்வில் கலந்து கொள்ள மறுக்கிறார்.</div>
</span><span lang="TA"><div style="text-align: justify;">
<span style="font-family: Latha;"><br /></span></div>
</span><br />
<div style="text-align: left;">
</div>
<div style="text-align: justify;">
<span style="font-family: Latha;"><b>ஜுலை 30, 1987</b></span></div>
<span lang="TA" style="font-family: Latha; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi;"><div style="text-align: justify;">
இந்திய அமைதிப்படை
ஒப்பந்தம் கையெழுத்தான 24மணி நேரத்தில் சென்னையிலிருந்து கப்பல்கள் மூலமாக
பாயிண்ட் பெட்ரோ, யாழ்ப்பாணம் வந்தடைகிறார்கள். ஆயுதங்களை ஒப்படைக்க அதாவது இந்திய
அமைதிப்படை வந்த 72 மணிநேரங்களில் அதாவது 3 நாட்களுக்குள் அனைத்து இயக்கங்களும்
ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் என்பதே ஒப்பந்தத்தின் சரத்து. ஆயுத ஒப்படைக்கு
அமைதிப்படை அனைத்து இயக்கங்களையும் வலியுறுத்துகிறது. புலிகள் இயக்கம் அவர்கள்
தலைவர் பிராபாகரன் வராமல் ஆயுதங்களை ஒப்படைக்க மறுத்துவிடுகிறது. ஒப்பந்தம்
கையெழுத்தானபொழுதும் ஆகஸ்ட் மூன்றாம் தேதி வரை டில்லி அசோகா ஓட்டலில் சிறையில்
தான் அடைக்கப்பட்டிருந்தார். அந்த சமயத்தில் தலைவர் பிராபகரனை நேரிடையாக
சந்தித்தவர் அனிதா பிரதாப் மட்டுமே. மற்றவர்கள் எல்லாம் இந்திய அதிகாரிகள்
அதட்டல்கள் மிரட்டல்கள் என்று தான் சென்றன.</div>
</span><span lang="TA"><div style="text-align: justify;">
<span style="font-family: Latha;"><br /></span></div>
</span><br />
<div style="text-align: left;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiR4jqnA-ta7CIBwaj_z2tnpyQ5uuUijf0CdS9Fi6wx83IJH_TrPF1_5zloVjEFlFicNWQYkc9_afwH8JcgSWW17XaqSF9QqJiAdPGNr3aIhE1J0cACVcr64RA42AA8EN6WYIXwuwMNTQM/s1600/03+IPKF.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiR4jqnA-ta7CIBwaj_z2tnpyQ5uuUijf0CdS9Fi6wx83IJH_TrPF1_5zloVjEFlFicNWQYkc9_afwH8JcgSWW17XaqSF9QqJiAdPGNr3aIhE1J0cACVcr64RA42AA8EN6WYIXwuwMNTQM/s1600/03+IPKF.jpg" height="208" width="320" /></a></div>
<div style="text-align: justify;">
<span style="font-family: Latha;"><b><br /></b></span></div>
<div style="text-align: justify;">
<span style="font-family: Latha;"><b>ஜூலை 23, 1987லிருந்து ஜூலை 3ம் தேதி வரை</b></span></div>
<span lang="TA" style="font-family: Latha; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi;"><div style="text-align: justify;">
அசோகா ஹோட்டலில் பிராபகரனுடன் பேச்சுவார்த்தைகள் நட்த்தப்பட்டு ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளுமாறு
நிர்பந்தப்படுத்தப்படுகிறார். புலிகள் இயக்கம் முழுமையாக மறுக்கிறது,
இயக்கத்திலிருந்து யோகி, திலீபன், ஆண்டன் பாலசிங்கம் போன்றவர்களும் தலைவர் பிராபகரனுடன்
இருக்கிறார்கள். ஒப்பந்த்த்தை ஏற்றுக் கொள்ளச் செய்ய எம்.ஜி.ஆர் முதற்கொண்டு
அனைவரின் மூலமாகவும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. எம்.ஜி.ஆரிடம் ஒப்பந்தத்தின் சரத்துகள்
தமிழருக்கு எதிராகவும், ஏற்றுக் கொள்ள முடியாத்தாகவும் இருப்பதை விளக்குகின்றனர்.
அவரும் புலிகள் இயக்கத்தினருடன் உடன்படுகிறார். ராஜிவிடம் தெரிவித்த விவரங்கள் தெரியவில்லை
இதனிடையில் ராஜிவ் தலைவர் பிராபகரன் இடையே ஒரு ஜெண்டில்மேன் அக்ரிமெண்ட்
நடைபெறுகிறது. ஆயுத ஒப்படைப்பில் இருந்து அனைத்தின் கீழாகவும், ஆனா இது
எழுத்துப்பூர்வமாக இல்லாமல் வாய்மொழியான உத்திரவாதம் மட்டுமே.</div>
</span><span lang="TA" style="font-family: Latha;"><div style="text-align: justify;">
<br /></div>
</span><br />
<div style="text-align: left;">
</div>
<div style="text-align: justify;">
<span style="font-family: Latha;"><b>ஆகஸ்ட் 4 1987</b></span></div>
<span lang="TA" style="font-family: Latha; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-bidi-theme-font: minor-bidi;"><div style="text-align: justify;">
<span lang="TA">ஈழத்தில் களத்தின் பொறுப்பில் இருந்த மாத்தையா தலைவர் பிராபகரன் வந்தால் தான்
ஆயுதங்களை ஒப்படைப்போம், என்று சொன்னதால் ஹர்கிரத்சிங் தகவலை கல்கத்திடம்
சொல்கிறார், அதன்பிறகு பிராபகரன் விடுவிக்கப்பட்டு யாழ்ப்பாணத்திற்கு அழைத்துவரப்படுகிறார்.
விடுவிக்கப்பட்ட பிறகு ஒரே நாளில் சுதுமலையில் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்படுகிறது.
முதன் முதலாக மக்கள் முன்னாள் ஒரு பொது மேடையில் தலைவர் தோன்றுகிறார். அப்பொழுது
பேசும் பொழுது </span><span lang="TA" style="font-family: 'Times New Roman', serif;">”</span><span lang="TA">நமக்கு மேலான் சக்தி நமது
பொறுப்புகளை எடுத்துக் கொள்கிறது, அதனால் நாம் இதற்கு கட்டுப்படுகிறோம் நல்லது
நடக்கும் என்ற நம்பிக்கையில்</span><span lang="TA" style="font-family: 'Times New Roman', serif;">” </span><span lang="TA">என்று கூறுகிறார்.</span></div>
</span><span lang="TA" style="font-family: Latha;"><div style="text-align: justify;">
<br /></div>
</span><br />
<div style="text-align: left;">
</div>
<div style="text-align: justify;">
<span style="font-family: Latha;"><b>ஆகஸ்ட் 5, 1987</b></span></div>
<span lang="TA" style="font-family: Latha; mso-bidi-language: TA;"><div style="text-align: justify;">
புலிகள் இயக்கம் சார்பில் யோகரத்தினம் என்ற யோகி ஆயுத ஒப்படைப்பை தொடங்கி
வைக்கிறார்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
</span><span lang="TA" style="font-family: Latha; mso-bidi-language: TA;"><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh5Dkk878CvtXwDXdL8aurwgTJ-2iByG9VR1jMQRpKgAd6NAoosuBMbNvI-fO3CzEYhwsBkfmu9dkc3fybemaxfa-cpOSCJAGsJS4wiC1xsIZprtARJkvsm2o3R1MqlmG5kuKIHCrn2T2k/s1600/download.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh5Dkk878CvtXwDXdL8aurwgTJ-2iByG9VR1jMQRpKgAd6NAoosuBMbNvI-fO3CzEYhwsBkfmu9dkc3fybemaxfa-cpOSCJAGsJS4wiC1xsIZprtARJkvsm2o3R1MqlmG5kuKIHCrn2T2k/s1600/download.jpg" /></a></div>
<div style="text-align: justify;">
<b><br /></b></div>
<div style="text-align: justify;">
<b>1987 ஆகஸ்ட் 5 முதல் அக்டோபர் 10, வரை</b></div>
</span><span lang="TA" style="font-family: Latha; mso-bidi-language: TA;"><div style="text-align: justify;">
ஆயுத ஒப்படைப்பு நடக்கும் பொழுதே மற்ற இயக்கங்களுக்கு இந்திய உளவு அமைப்பான ரா
ஆயுதங்களை கொடுக்கிறது, நவீன ரக ஆயுதங்களும் அவர்களுக்கு கையளிக்கப்ப்டுகிறது. இதை
புகைப்பட ஆதாரங்களுடன் ஜெனரல் ஹர்கிரத் சிங்கிடம் புகார் அளிக்கிறார் தலைவர்
பிராபாகரன். அதை ஏற்று தனது மேலதிகாரிகளிடம் தகவலை சொல்கிறார். ஆனால் மேல்
நடவடிக்கைகள் எதுவும் இல்லாமல் போகிறது உடனடியாக ஆயுதங்கள் ஒப்படைப்பதை
நிறுத்துகிறது புலிகள் இயக்கம். ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டால் பாதுகாப்பு இல்லாமல்
போக நேரிடும் எனப்தால் புலிகள் இயக்கம் இந்த நடவடிக்கையை மேற்கொள்கிறது.</div>
</span><span lang="TA"><div style="text-align: justify;">
<span style="font-family: Latha;"><br /></span></div>
</span><br />
<div style="text-align: left;">
</div>
<div style="text-align: justify;">
<span style="font-family: Latha;">செப்டம்பர் 16ம் தேதி இந்திய வெளியுறவுத் துறை அதிகாரி திக்சித்துக்கும் புலிகள்
இயக்கதிற்கும் இடையில், ஹர்கிரத் சிங் முன்னிலையில் பேச்சுவார்த்தை ஏற்பாடு
செய்யப்படுகிறது. அதற்க்கு முதல் இரண்டு நாட்கள் 14ம் தேதியும் 15ம் தேதியும்
பேச்சுவார்த்தைக்கு வரும் தலைவர் பிராபகரனை கைது செய்து கொலை செய்யும் உத்தரவினை
கொடுக்கிறார் திக்சித். ஆனால் அதை மறுத்துவிடுகிறார் ஜெனரல் ஹர்கிரத் சிங் அவருடைய
மேலதிகாரிகளுக்கும் தனது மறுப்பை தெரிவிக்கிறார். ஆனால் திக்சித் இது ராஜிவ்
காந்தியின் ஆணை என்று கூட மிரட்டுகிறார். பேச்சுவார்த்தைக்கு வரும் ஒருவரை
சுட்டுக் கொல்ல முடியாது என்பதை திட்டவட்டமாக அறிவிக்கிறார் ஹர்கிரத் சிங். </span><span style="font-family: Latha;"> </span></div>
<span lang="TA"><div style="text-align: justify;">
<span style="font-family: Latha;"><br /></span></div>
</span><br />
<div style="text-align: left;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiZG1eYBwKBQG1L8vPIUFe98-7K1Sa7QyXAlQzbVX2gBGpbA-EQ3L2D3hSHc5NEcUYVWI7JO2yEn2XtIam-OKEmmSvDgWYPuMloAJ3rbov0mvqRERj7tQ75e3_Mf3yyP0U4rWmwm6WnVlk/s1600/2010.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiZG1eYBwKBQG1L8vPIUFe98-7K1Sa7QyXAlQzbVX2gBGpbA-EQ3L2D3hSHc5NEcUYVWI7JO2yEn2XtIam-OKEmmSvDgWYPuMloAJ3rbov0mvqRERj7tQ75e3_Mf3yyP0U4rWmwm6WnVlk/s1600/2010.jpg" height="320" width="151" /></a></div>
<div style="text-align: justify;">
<span style="font-family: Latha;">இதன் பிறகு இந்திய இராணுவத்தினர் சில இடங்களில் அத்துமீறும் பொழுது சிறு
கைகலப்புகள் நடக்கின்றன. அக்டோபம் மாதம் 11ம் தேதி புலிகளுக்கு எதிரான யுத்தம்
ஆரம்பிப்பதாக சொல்லியது இந்திய இராணுவம் ஆனால் 10ம் தேதி இரவே தலைவர் பிராபகரன்
அவர்களை பிடிக்க ஒரு கமொண்டோ படை அனுப்பி வைக்கப்பட்டு அதில் வந்த ஒரு சிலரைத் தவிர
மற்ற அனைவரும் சண்டையில் இறந்துவிடுகின்றனர். </span><span style="font-family: Latha;">இதன் பிறகே புலிகள் இயக்கத்திற்கும் இந்திய இராணுவத்திற்கும் இடையிலான போர் தொடங்குகிறது.<br /><br /><br /><b>ஏன் அமைதிப்படை????</b><br />ராஜிவ் காந்தி தனது தாயார் இறந்த பிறகு 1984ல் பதவிக்கு வருகிறார், அப்பொழுது பஞ்சாப் விடுதலைப் போராட்டம் பிந்த்ரன் வாலே தலைமையில் மிகவும் வேகமாக வளர்ந்து கொண்டிருந்த காலகட்டம் அதை ஒடுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இந்திராகாந்தி தனது இராணுவ பலத்தை பிரயோகித்து பொற்கோயிலின் மீது தாக்குதல் தொடுக்கிறார். பிந்த்ரன்வாலே கொல்லப்பட்டுவிடுகிறார் ஆனால் அவரின் பின் வந்தவர்களும் பொற்கோயிலின் மீதான தாக்குதலும் சீக்கிய இன மக்களிடையே கொழுந்துவிட்டெறிகிறது. இந்த அடக்கு முறையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஏற்கெனவே கொலை செய்யப்பட்டுவிட்டனர். அதுவும் சேர்ந்து தான் இந்திராகாந்தியின் கொலை நடக்கிறது. அதன் பிறகு பதவிக்கு வந்த ராஜிவ் ஒரு கத்துக் குட்டி அவருக்கான அரசியல் பாதை எதுவும் இலலை சீக்கியர்களை மேலும் ஒடுக்குகிறார். போராட்டங்கள் வெடிக்கிறது எனவே அவர்களுடன் ஒப்பந்தம் செய்கிறார் அதுவும் தோல்வியில் முடிகிறது.<br /><br />இப்படி சென்று கொண்டிருக்கும் பொழுதே போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் வெளியில் வருகிறது ஒட்டுமொத்தமாக ராஜிவின் அரசியல் வருங்காலம் கேள்விக்குள்ளாகிறது. இந்த சமயத்தில் தான் ஏற்கெனவே இலங்கையில் இருந்த தமிழீழ போராளிக் குழுக்களுக்கு இந்திரா உதவியிருந்தார் அதை வைத்து தனது அரசியல் அங்கீகாரத்தை தேடும் விதமாக எடுத்த முயற்சி தான் இந்தியா இலங்கை ஒப்பந்தம். அதை வெற்றி பெற வைக்க வேண்டிய நிர்பந்தம் ராஜிவிற்கு இருந்தது மேலும் அமெரிக்காவின் எதிர்ப்பு என்ற கொள்கையின் கீழும் தன்னால் இயன்றதை செய்கிறேன் என்று இறங்கி, ஒரு நாட்டின் ராணுவமாக இருந்த இந்திய ராணுவத்தை ஜெயவர்த்னாவின் அடியாட் கூலிப்படையாக மாற்றினார் ராஜிவ் காந்தி.<br /><br />எப்படி 2009ல் ராஜபக்சே இந்தியாவின் போரை நாங்கள் நடத்தி வெற்றி பெற்றோம் என்று தனது பாராளுமன்றத்தில் அறிவித்தாரோ, அதே போல் அப்பொழுது எங்களது சண்டையை இந்தியாவை வைத்து போடுகிறோம் என்று இந்திய இராணுவத்தை கூலிப்படையாக சித்தரித்து பேசினார் ஜெயவர்த்தனே. இது மட்டுமல்ல ஒற்றுமைகள் இன்னும் இருக்கிறது. இப்படி ஆழம் தெரியாமல் காலை விட்டு ஒரு இனப்படுகொலையை நடத்தியவன் தான் ராஜிவ் காந்தி.<br /></span></div>
<br />
<div class="MsoNormal" style="text-align: left;">
<o:p></o:p></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<o:p></o:p></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<o:p></o:p></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<o:p></o:p></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<o:p></o:p></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<o:p></o:p></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<o:p></o:p></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<o:p></o:p></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<o:p></o:p></div>
<div class="MsoNormal" style="text-align: left;">
<o:p></o:p></div>
<div style="text-align: left;">
</div>
</div>
Unknownnoreply@blogger.com0