Tuesday, November 9, 2010

மிககுறைந்த வயது தீவிரவாதி

இந்தியாவின் சாதனைகள் என்று எத்தனையோ பட்டியல் போடலாம், அத்தனையும் மிஞ்சிய சாதனை என்றால் மிக இளம் வயதில் தீவிரவாதியானவர் இதே இந்தியாவில் தான் உள்ளார். அவர் வயது அதிகம் இல்லை மக்களே, வெறும் இரண்டு வயது தீவிரவாதி அவர்... Posted Image
பெயர் : மாத்வி முகேஷ்
வயது : 2 வருடம் (தீவிரவாதி என்று சொல்லப்பட்ட 2009ம் ஆண்டு அக்டோபர் மாதம்)
இனம் : மலைவாழ் மக்கள்
வசிப்பிடம் : கோம்போடு கிராமம், கோண்டா காவல்துறை எல்லை, தாண்டேவாடா மாவட்டம் (சட்டீஸ்கர் மாநிலம் ஆந்திர எல்லை)
குடும்பம் : தாத்தா - மாத்வி பர்ஜார் (50 வயது) பாட்டி மாத்வி சுபி (45 வயது) தாய் - கார்டம் குன்னி (20வயது) அத்தை - மடி மூட்டி (8) (இவர்கள் அனைவரும் உயிருடன் ஒரே குடும்பமாக இருந்தார்கள் 2009 அக்டோபர் மாதம் 1ம் தேதி வரை இப்ப இல்லை)
தொழில் : தாத்தா பாட்டி அம்மாவுக்கு விறகு பொறுக்கி விற்பது, மூகேஷூக்கு விரல் சூப்புவது (இன்று அதற்கு விரல்கள் இல்லை)

மாத்வி முகேஷின் தந்தை மாவோயிஸ்ட் அவர் ஒருவர்தான் தப்பினார், வீட்டில் அன்று இல்லாததால்.

2009ம் அக்டோபர் மாதம் 1ம் தேதி, கோம்போடு கிராமத்திற்குள் சிறப்பு காவல் படை உள்ளே புகுந்தது. முகேஷின் பக்கத்து வீட்டிலிருந்தவர்கள் முதற்க்கொண்டு 10 பேர் உயிரிழந்தனர். முகேஷைமட்டும் கண்டுபிடித்தார்கள் அவரின் வெட்டி கொல்லப்பட்ட 8வயது அத்தை மடிமூட்டியின் இரத்தகுளத்தின் அருகே அழுது கொண்டிருந்த பொழுது கை விரல்கள் மூன்று வெட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். இந்த தாக்குதலைப் பற்றி காவல்துறை சொல்வது கிராமத்துக்குள் தீவிரவாதிகளை தேடிப் போனபொழுது தீவிரவாதிகள் சுட்டார்கள், அதனால் திரும்பி நாங்களும் சுட்டோம் இதில் யாரும் மரணமடையவில்லை, காயம் கூட படவில்லை. கிராமத்தில் இருந்து சில வெடிகுண்டுகளை மட்டும் கைப்பற்றினோம் என்பது தான்.

அதன் பிறகு முகேஷின் தந்தை வந்து இவரை தூக்கிக் கொண்டு காட்டிற்குள் சென்று விட்டார். இந்த வருடம் ஜனவரி 7ம் தேதி, மத்திய உள் துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின்  உத்தரவாதம் கொடுத்ததால் ஹிமான்ஸூ குமார் என்பவர் தனது வன்வாசி சேத்ரா ஆஸ்ரமம் மூலமாக மக்கள் குறை கேட்பு நாளை ஏற்பாடு செய்கிறார். பொது குற்றவியல் மூலமாக மாவோயிஸ்டுகளை அழைத்து அவர்களின் மேல் இருக்கும் குற்றங்களில் இருந்து விடுவிக்கவும், அவர்கள் திருந்தி வாழ வழிவகை செய்யவும் முயற்சித்தார்.

அப்பொழுது முகேஷின் தந்தை தன் மகனை தூக்கிகொண்டு வந்தார், அவர் மட்டும் இல்லை அவரை போல் 25 பேர் ஜனவரி 7ம் தேதி வன்வாசி சேத்னாஸ்ரமம் வந்தார்கள். அவர்கள் வந்தவுடன் சிறப்பு காவல் படையினரை அவர்களை சுற்றி வழைத்து 3 எண் பலகையில்லாத போலேரோ கார்களில் கூட்டி சென்றனர் இன்று வரை அவர்களைப்பற்றிய விவரம் தெரியவில்லை...

காலம் காலமாக காடு தான் தங்களின் வாழ்வாதரமாகவும், காட்டை அழிக்காமல் சுள்ளி பொருக்கி விற்று வந்த கிராமமக்களும் 8 வயது முகேஸின் அத்தை மடிமுட்டியும்  2வயது முகேஷூம் தீவிரவாதிகள் இந்திய அரசைப் பொறுத்தவரைக்கும்.. வாழ்க ஜனநாயகம்..பெயர் : மாத்வி முகேஷ்
வயது : 2 வருடம் (தீவிரவாதி என்று சொல்லப்பட்ட 2009ம் ஆண்டு அக்டோபர் மாதம்)
இனம் : மலைவாழ் மக்கள்
வசிப்பிடம் : கோம்போடு கிராமம், கோண்டா காவல்துறை எல்லை, தாண்டேவாடா மாவட்டம் (சட்டீஸ்கர் மாநிலம் ஆந்திர எல்லை)
குடும்பம் : தாத்தா - மாத்வி பர்ஜார் (50 வயது) பாட்டி மாத்வி சுபி (45 வயது) தாய் - கார்டம் குன்னி (20வயது) அத்தை - மடி மூட்டி (8) (இவர்கள் அனைவரும் உயிருடன் ஒரே குடும்பமாக இருந்தார்கள் 2009 அக்டோபர் மாதம் 1ம் தேதி வரை இப்ப இல்லை)
தொழில் : தாத்தா பாட்டி அம்மாவுக்கு விறகு பொறுக்கி விற்பது, மூகேஷூக்கு விரல் சூப்புவது (இன்று அதற்கு விரல்கள் இல்லை)

மாத்வி முகேஷின் தந்தை மாவோயிஸ்ட் அவர் ஒருவர்தான் தப்பினார், வீட்டில் அன்று இல்லாததால்.

2009ம் அக்டோபர் மாதம் 1ம் தேதி, கோம்போடு கிராமத்திற்குள் சிறப்பு காவல் படை உள்ளே புகுந்தது. முகேஷின் பக்கத்துவீட்டிலிருந்தவர்கள் முதற்க்கொண்டு 10 பேர் உயிரிழந்தனர். முகேஷைமட்டும் கண்டுபிடித்தார்கள் அவரின் வெட்டி கொல்லப்பட்ட அத்தை மூட்டியின் இரத்தகுளத்தின் அருகே அழுது கொண்டிருந்த பொழுது கை விரல்கள் மூன்று வெட்டப்பட்டு கண்டுபிடிக்கப்பட்டார்.

அதன் பிறகு முகேஷின் தந்தை வந்து இவரை தூக்கிக் கொண்டு காட்டிற்குள் சென்று விட்டார். இந்த வருடம் ஜனவரி 7ம் தேதி, மத்திய உள் துறை அமைச்சரின் உத்தரவாதம் கொடுத்ததால் ஹிமான்ஸூ குமார் அவர்கள் அவரின் அமைப்பான வன்வாசி சேத்னாஸ்ரமம் மூலமாக ஜன் சுவி என்ற பொது குற்றவியல் மூலமாக மாவோயிஸ்டுகளை அழைத்து. அவர்களின் மேல் இருக்கும் குற்றங்களில் இருந்து விடுவிக்கவும், அவர்கள் திருந்தி வாழ வழிவகை செய்யவும் முயற்சித்தார்.

அப்பொழுது முகேஷின் தந்தை தன் மகனை தூக்கிகொண்டு வந்தார், அவர் மட்டும் இல்லை அவரை போல் 25 பேர் ஜனவரி 5ம் தேதி வன்வாசி சேத்னாஸ்ரமம் வந்தார்கள். அவர்கள் வந்தவுடன் சிறப்பு காவல் படையினரை அவர்களை சுற்றி வழைத்து 3 எண் பலகையில்லாத கார்களில் கூட்டி சென்றனர் இன்று வரை அவர்களைப்பற்றிய விவரம் தெரியவில்லை...
Posted Image
காலம் காலமாக காடு தான் தங்களின் வாழ்வாதரமாகவும், காட்டை அழிக்காமல் சுள்ளி பொருக்கி விற்று வந்த கிராமமக்களும் 8 வயது முகேஸின் அத்தை மடிமுட்டியும்  2வயது முகேஷூம் தீவிரவாதிகள் இந்திய அரசைப் பொறுத்தவரைக்கும்.. வாழ்க ஜனநாயகம்..

No comments:

Post a Comment