Wednesday, March 23, 2011

சூரிய நாரயாணன் என்ற புறம்போக்கு



காலச்சுவட்டில் ஒரு பெரிய பேட்டி சூரிய நாரயணன் என்ற புறம்போக்கின் காலச்சுவடு நேர்காணல்.



இந்த பேட்டியின் ஆரம்பித்திலேயே இவரின் விளையாட்டு ஆரம்பம் ஆகிவிடுகிறது, 1974 மற்றும் 76ல் போடப்பட்ட இரு நாட்டு ஒப்பந்தங்களால் எந்த பாதிப்பும் இல்லை மீனவர்கள் இரண்டு நாட்டிற்கிடையேயான பகுதியை இரண்டுநாட்டு மீனவர்களும் பொதுவாகவே கருதியிருக்கின்றனர் என்பதை நேரடியாக சொல்லாமல் இந்த ஒப்பந்தங்களால் எந்த பிரச்சனையும் இல்லை என்று பொதுப்படையாக பேசுகிறார். ஆனால் கச்சத்தீவை பயன்படுத்துவதை பற்றி போடப்பட்ட ஒப்பந்தப்படி அதை பயன்படுத்த வேண்டிய தேவை இல்லை என்று சூசகமாக சொல்கிறார் எப்படி என்றால் பருத்தி வலை பயன்படுத்துவதில்லை அதனால் அதை காயவைக்க வேண்டிய தேவை இல்லை என்று. என்னமோ கச்சதீவுக்கு வலையை காய வைக்கமட்டும் தான் போனது போல் சொல்கிறார்.

இவருக்கு என்ன காலையில் எழுந்து குளித்து முடித்து குண்டி கழுவுவாறோ இல்லையோ சந்தியாவந்தனம் சொல்லி சுத்தபத்தமாக அலுவலகம் சென்று மாலையில் விடு திரும்பி அவுத்து போட்டு படுப்பதற்கு முன்னால் இன்னொரு குளியல் போட்டுவிட்டு குப்புற படுத்து தூங்கிவிடுவார். மீனவர்கள் அப்படி இல்லை அய்யா 3 நாள் 4 நாள் என்று நடுக்கடலில் உப்பு காற்றில் அடிக்கும் வெயிலில் வியர்வை சிந்தி உழைப்பவர்கள். அந்தோணியர் கோயில் அருகே இருக்கும் கிணற்றடி தான் அவர்களுக்கு குளியலறை. அதன் அருகே தான் அவர்களுக்கு சமையலறை, சமைக்க தண்ணீர் அந்த கிணற்றிலேயே எடுத்துக் கொள்வார்கள். மினரல் வாட்டர் பாட்டிலை வாங்கி மூனு விரலை மடக்கி காசு கொடுத்து வாங்கிய தண்ணிரை சாப்பாட்டு தட்டை சுற்றி தரையில் ஊற்றி வீணடிக்கும் இவருக்கு கடல் தண்ணீருக்கும் சாப்பாடு சமைக்கும் தண்ணீருக்கும் எங்கு வித்தியாசம் தெரியபோகிறது. உமக்கு தெரிந்தது எல்லாம் வலை காய வைக்க வேண்டும், பருத்தி வலை எத்தனை பேர் பயன்படுத்துகிறார்கள் நைலான் வலை எத்தனை பேர் பயன்படுத்துகிறார்கள் என்று இவருக்கு எங்கு தெரியபோகிறது. கடலுக்குள் என்ன குளிர் சாதன வசதியா கடவுள் செய்து கொடுத்திருக்கிறார்கள் குளிக்காமல் கொள்ளாமல் நான்கு நாட்கள் உட்கார்ந்து இருப்பதற்கு. கடலுக்கு சென்று தொழில் பார்த்தால் அவர்கள் படும் துன்பங்கள் இவருக்கு தெரிந்திருக்கும்.

காஞ்சிபுரம் பட்டுபுடவையை ஈழத்தில் மிகவும் விரும்புவார்களாம், அதுவும் மணப்பெண்ணுக்கு கொடுக்க விரும்புவார்களாம், இதை இங்கிருந்து தமிழக மீனவர்கள் கடத்திக்கொண்டு சென்றனராம். இது வந்து இந்த மீனவர்களுக்கு தொழிலாம் ஆனால் அவருக்கு கடத்தலாம். 83க்கு முன்பு வரை அல்ல இன்று வரை அவர்களை எங்களில் ஒருவராக நினைக்கிறோம் அவர்களும் அப்படி தான் பெண்ணு கொடுத்து பெண்ணு எடுக்கும் பழக்கம் இன்று வரை தொடர்கிறது. ஏன் இரு நாட்டுக்கு இடையில் பெரிய கட்டுபாடுகள் விதிக்கப்பட்ட பிறகு கணவன் அங்கேயும் மனைவி இங்கேயுமாக வாழ்ந்தவர்கள் அந்தோணியார் கோயில் திருவிழாவில் சந்தித்து கொள்வார்கள் அதற்கு பிறகு அவர்களுக்கு குழந்தை பிறந்த கதை கூட உண்டு. இவ்வளவு தெளிவாக பட்டு புடவை கடத்தினார்கள் என்பவர் 1983க்கு முன்பு இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களிடம் செய்து வைத்திருக்கும் சாப்பாட்டை வாங்கி சாப்பிட்டுவிட்டு, கைலி பீடி என்று வாங்கிக் கொண்டு பிரட் ஹார்லிக்ஸ் என்று கொடுத்து செல்வார்களே அது இவருக்கு தெரிந்திருக்காதா. அதுவும் கூட கடத்தல் தான் அவர்கள் சாப்பிட்ட சாப்பாட்டை வயிற்றை கிழித்து எடுத்து வர வழிவகை செய்ய வேண்டியது தானே. தனுஸ்கோடியில் குழாய் ரேடியோ வைத்து சத்தமாக பாட்டு போட்டால் அந்தபக்கம் கடலில் அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தால் அவர்களுக்கு கேட்கும் அது கூட இவர் பார்வையில் அடுத்து கடத்தலாக தெரியும் போல் தெரிகிறது. இவர் முதலில் பருப்பு சாப்பிடுவதை விட்டால் நல்லது இவர் வெளியிடும் வாயுவை காற்று கடத்தி கொண்டு போய் பக்கத்து வீட்டில் மூக்கை மூட வைக்கிறதாம்..

அடுத்த சப்பைகட்டு இலங்கை கடற்படைக்கு கட்டுகிறார், எப்படி போராளிகளா மீனவர்களா என்பது தெரியவில்லை அதனால் தான் படகுக்கு பக்கத்தில் வருவதற்கு முன்பே பயத்தில் சுட்டுக்கொண்டே வருவார்கள் என்று. அவர்களிடம் மிகச்சிறந்த ஆயுதங்கள் இல்லை படகுகள் இல்லை ஆனால் இந்திய கடற்படை அனைத்து வசதிகளுடன் தானே இருந்தது 91க்கு முன்போ இல்லை பின்போ எத்தனை போராளிகள் படகுகளை பிடித்தது. போராளிகள் இங்கு வந்தார்கள் மருந்துகள் போன்ற அத்தியாவசிய பொருட்களை கொண்டு சென்றனர் இல்லை என்று சொல்லவில்லை, ஈழத்தின் மீது பொருளாதர தடை விதிக்கப்பட்டு அங்கு எந்த அத்தியாவசிய தேவைக்கான பொருட்களும் கிடைக்கவில்லை எனவே தங்களுக்கு தேவையான பொருட்களையும் தன்னை நம்பி இருக்கும் மக்களூக்கும் தேவையான பொருட்களை கடத்தி சென்றனர். ஆனால் அவர்களில் எத்தனை பேரை அதிநவீன படகுகள் ஆயுதங்கள் கொண்ட இந்திய கடற்படை பிடித்தது. அப்படி ஒருவரையும் பிடிக்காத பொழுது இலங்கை கடற்படையினர் அதுவும் இவரின் கூற்றுபடி 80களுக்கு பிறகு தான் கடற்படையே வந்தது எனும் பொழுது போராளிகளை பிடித்துவிட்டோம் என்று நினைத்து சுட்டார்களாம் இதை நாம் நம்பவேண்டுமாம். கேட்கிறவன் கேனையனாக இருந்தால் கேப்பையில் நெய்வடிகிறது என்று சொல்லலாம்.



அடுத்த பொய் அங்கிருந்து அகதிகளாக வந்தவர்கள் அவர்கள் நாட்டின் எல்லைபகுதியில் எங்கு மீன் கிடைக்கும் என்று காட்டி கொடுத்தார்களாம். அகதிகள் முகாமில் இருந்து ஒருவர் வெளியில் வர வேண்டும் என்றால் அனுமதி வாங்க வேண்டும் அதுவும் இரவு வராமல் வெளியில் தங்க வேண்டும் என்றால் சிறப்பு அனுமதி மூன்று நாட்களுக்கு மேல் வெளியில் தங்க வேண்டுமென்றால் அதைவிட சிறப்பு அனுமதி அப்படி இருக்கும் பொழுது அவர்கள் தமிழக மீனவர்களுடன் கடலுக்கு சென்றார்களாம் காட்டி கொடுத்தார்களாம். யார் அனுமதி வாங்கி கொடுத்தது மூன்று நாட்கள் நான்கு நாட்கள் வெளியே தங்க. அப்படி வெளியில் தங்க அனுமதி வாங்கினாலும் எங்கு தங்குகிறார்கள் என்ற முகவரியை கொடுக்க வேண்டும் கடலுக்குள் பிளாட் போட்டு யாராவது விற்று இருக்கிறார்களா என்ன முகவரியை கொடுக்க. ஒருவேளை இவர் சென்று அவர்களுக்கு கடலுக்கு செல்ல அனுமதி வாங்கி கொடுத்தார் போலும்.

அடுத்து நெடுந்தீவு மீனவர்கள் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க வந்தால் அவர்கள் மீன் பிடிக்க வரமாட்டார்களாம் எப்பொழுது இப்பொழுதா இல்லை 83க்கு முன்பாகவா என்பதை தெளிவாக சொல்லாமல் பொத்தம் பொதுவாக சொல்கிறார். அண்ணா இறந்த பொழுது நெடுந்தீவுக்கு அருகே மீன் பிடித்த தமிழக மீனவர்களுக்கு தகவல் சொன்னதே நெடுந்தீவு மீனவர்கள் தான். ஆனால் அவர்கள் தமிழக மீனவர்களை எதிரியாக நினைக்கிறார்கள் என்று சொல்லுவதை கேட்டு எந்த வழியாக சிரிப்பது என்று தெரியவில்லை. அதுவும் இப்பொழுது எத்தனை ஈழத்து மீனவர்கள் மீன் பிடிக்க அனுமதிக்கப்படுகிறார்கள் என்ற கேள்விக்கு பதில் சொல்லுவாரா இவர். அவர்கள் அனுமதிக்கப்பட்டாலும் 3மணி நேரம் நான்கு மணிநேரத்திற்கு தேவையான எரிபொருளே வழங்கப்படுகிறது அந்த எரிபொருளை வைத்துக்கொண்டு இவரே குறிப்பிடும் அந்தமானுக்கு அருகில் சென்று அவர்களுக்கு தேவையான மீனை பிடிக்க முடியுமா. அப்படி இருக்கும் பொழுது அவர்கள் தமிழக மீனவர்களை குறை சொல்லுகிறீரார்கள் என்பது கேணைத்தனமாக இல்லை. ஏமாறுவதற்கு ஆள் இருந்தால் எருமாடு ஏரோப்ளேன் ஓட்டுது என்று சொல்வீர்கள்.

ஈழத்து மீனவர்கள் வாழ்வாதரத்தை காப்பாற்ற எதாவது வழியிருந்தால் சொல்லவும் அவர்கள் தங்கு தடையின்றி மீன் பிடிக்க வழிவகை சொல்லவும் யார் எங்கு மீன் பிடிப்பது என்பதை அவர்கள் ஒன்னா மண்ணா உட்கார்ந்து பேசிக்கொண்டே மீன் பிடிப்பார்கள். இவரோ சுவாமிநாதனோ விவேகானந்தனோ யாரும் இதில் தலையிட தேவையில்லை, பெண் கொடுத்து பெண் எடுத்த உறவினர்களுக்கு நடுவே இந்த நாட்டாமைகளுக்கு வேலை இல்லை. அதுவும் ஆச்சாரமானவர்கள் நாங்கள் என்று சொல்லிக்கொண்டு மீன்பிடிப்பதை பற்றியும் பங்கு போட்டுக்கொள்வதை பற்றியும் பேசத்தேவை இல்லை. யாருக்கு தெரியும் தினமும் மாலையில் ஸ்காட்சை காச்சி குடிக்கும் பொழுது மட்டும் மீன் இவர்களுக்கு சைவமாக தெரியலாம். அதனால் மீன் பிடிப்பதை பற்றி இவர்கள் ஆராய்ச்சி செய்ய வந்துவிட்டனர் போலும்.

இப்படி ஒருவரை பேட்டி எடுக்கும் முன்பு அவரிடம் யாரை பற்றி கேட்க போகிறீகளோ அவர்களை பற்றி முழுமையாக தெரிந்து கொண்டு பேட்டி எடுக்கவும் இல்லாவிடில் அவர் சொல்லுவதை எல்லாம் நீங்கள் மட்டும் கேட்டுக்கொள்ளவும் இப்படி பொதுவில் போட்டு உங்கள் மானத்தை இழக்காதீர்கள்.

Monday, March 14, 2011

தேர்தல் ஜுரம் - கலைஞர் காப்பீட்டு திட்டம்





தேர்தல் தேதி அறிவித்ததில் இருந்து தினமும் ஒரு அறிக்கை அதுவும் துறைக்கு ஒன்றாக தினமும் என்று அறிக்கை விட்டுகொண்டிருக்கிறார் ஈனத்தலைவர். இன்று மருத்துவத்துறையை பற்றி புட்டு புட்டு வைத்திருக்கிறார்.

அதில் முதலில் மத்திய அரசு ஒதுக்கும் தொகையை என்னமோ தானே ஒதுக்கியது போல் சொல்லி இருக்கிறார்.

//2005 2006 ம் ஆண்டு இந்தத் துறைக்கான நிதி ஒதுக்கீடு ரூ.1487 கோடி என்பதற்கு மாறாக 2010 2011 ல் நிதி ஒதுக்கீடு ரூ.3889 கோடியாக உயர்ந்துள்ளது. //

இதில் எங்காவது மத்திய அரசு ஒதுக்கிய நிதி என்று தவறிப்போய் கூட சொல்லிவிடவில்லை. இவர் சொன்ன அத்தனை நிதியும் மத்திய அரசு மாநிலத்திற்கு சுகாதர மேம்பாட்டுக்காக ஒதுக்குவது.




// இந்தத் திட்டத்தில் ஒரு கோடியே 35 லட்சம் குடும்பங்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. உயிருக்கு ஆபத்தான 51 நோய்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட அரசு மற்றும் உயர்தர தனியார் மருத்துவமனைகளில் இலவசமாகச் சிறப்புச் சிகிச்சைகள் அளிக்க உதவும் இத்திட்டத்திற்கான காப்பீட்டுத் தொகை முழுவதையும் கழக அரசே செலுத்துகிறது. இத்திட்டத்தில் 7.3.2011 வரை 2,90,291 நோயாளிகளுக்கு ரூ.750.28 கோடி செலவில் அங்கீகரிக்கப்பட்ட 702 மருத்துவமனைகளில் உயிர்காக்கும் அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு அவர்கள் பயனடைந்துள்ளனர்.//

அடுத்து கலைஞர் காப்பீட்டு திட்டத்தை பற்றிய பீலாவை விட்டிருக்கிறார். இதில் முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்திருக்கிறார். இவர் சொல்லுவதன் படி 1 கோடியே 35 லட்சம் குடும்பங்கள் பயன் பெறுகிறார்களாம். இதன் மூலம் சொல்லுவது ஒரு குடும்பத்திற்கு ரூ 469 ரூபாய் வீதம் காப்பீட்டு தொகையாக தமிழக அரசு ஸ்டார் ஹெல்த் இன்ஸுரன்ஸுக்கு வழங்குகிறது. அப்படியானால் 633 கோடியே 15 லட்சம் ரூபாய் ஒரு வருடத்திற்கு பீரிமியம் தொகையாக அரசால் செலவழிக்கப்படுகிறது. இது வருடம் ஒரு முறை செலுத்தவேண்டிய தொகையாகும் 2009ம் ஆண்டு 2010 ஆண்டும் தமிழக அரசு ப்ரீமியமாக 1266 கோடியே 30 லட்சம் ப்ரீமியமாக செலுத்தியுள்ளது.

தொடங்கப்பட்ட 2009ம் ஆண்டில் இருந்து 2011 ம் ஆண்டு மார்ச் மாதம் 7ம் தேதி வரை இதனால் பயணடைந்தவர்களுக்கு செலவழிக்கப்பட்ட தொகை 750.28 கோடி என்று தெளிவாக சொல்லியிருக்கிறார். இதில் மீதம் 500 கோடிக்கும் மேல் இரண்டு வருடத்தில் லாபமாக ஸ்டார் ஹெல்த் இன்ஸுரன்ஸ் நிறுவனம் சம்பாதித்துள்ளது. மொத்தம் நான்கு வருடங்களுக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது மொத்தம் 2500கோடி ரூபாய்க்கு மேல் ப்ரீமியம் தொகை செலுத்தப்படும். அரசு விதித்திருக்கும் நிபந்தனை மொத்தமாக இந்த திட்டதின் மூலம் செலவிடப்படும் தொகையைவிட 65% க்கு கீழ் தான் செலவானது என்றால் அந்நிறுவனம் மீதத்தொகையை திரும்ப செலுத்தவேண்டும் என்பது. இதுவரைக்கும் இரண்டாண்டில் செலவழிக்கப்பட்ட தொகை 65% க்கு மேல் சென்று விட்டது அவர்கள் திரும்ப செலுத்த வேண்டிய தேவை இல்லை. ஆனால் மிச்சம் உள்ள 500 கோடி அவர்களுக்கு லாபமே.

இந்த திட்டம் மிக அருமையான ஒரு திட்டமே இதை எடுத்து நடத்த இந்த அரசு நிறுவனம் எதுவும் இல்லையா மத்தியரசின் LIC யோ இல்லை மாநில அரசின் ESIC யோ இதற்கான போதுமான முன் அனுபவம் இல்லாதவர்களா. இல்லையே இத்தனை வருடமாக இவர்கள் இருவரும் இதே பணியை தானே செய்து கொண்டுள்ளனர். ஏன் ETA வின் ஸ்டார் ஹெல்த் இன்ஸுரன்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டது. இதற்கு முன்பு இவர்கள் இதே போல் திட்டத்தை எங்கு செயல் படுத்தியுள்ளனர். எந்த முன் அனுபவத்தின் அடிப்படையில் LIC, ESIC இரண்டையும் விட இவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

2G ஸ்பெக்ட்ரம் ஊழலில் சம்பந்தம் உள்ள எடிசாலட் நிறுவனத்திற்கும் ETA நிறுவனத்திற்கும் உள்ள சம்பந்தம் என்ன?? எடிசாலட் இயக்குனரின் ஒர் நிறுவனமே ETA நிறுவனம் அதன் துணைநிறுவனமே ஸ்டார் ஹெல்த் இன்ஸுரன்ஸ் இதிலும் ஸ்பெக்ட்ரம் பணம் விளையாடிருப்பது போல் தெரிகிறது.

அதெல்லாம் விடுங்கள் இது நீங்கள் எப்பொழுதும் செய்யும் அறிவியல் பூர்வமான ஊழல் என்று சர்காரியா எப்பொழுதோ சொல்லிவிட்டு சென்றுவிட்டார். ஆனால் நான்கு வருடத்திற்கு 2500கோடி ரூபாய் ப்ரீமியமாக செலுத்துவதற்கு பதில் அந்த தொகையை கொண்டு இருக்கும் அரசு மருத்துவமனைகளையும் புதிதாக அரசு மருத்துவமனைகளை சிறப்பு மருத்துவசேவையுடன் தனியார் மருத்துவமனைகளுக்கு நிகராக எத்தனை மருத்துவமனைகளை நிர்மானிக்க முடியும். திருச்சியில் அரசு சார்பில் மல்டி ஸ்பெஸாலிட்டி மருத்துவமனையை நிறுவ 380 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்று சில நாட்களுக்கு முன்னர் தான் தெரிவித்தார்கள் சேலத்தில் கூட இன்னுமொன்று வரப்போகிறது என்றும் இப்படி 380 கோடி ரூபாயில் மருத்துவமனை நிறுவப் போதுமானது எனும் பொழுது 2500 கோடி ரூபாயில் ஏழிலிருந்து எட்டு மருத்துவமனைகள் நிறுவலாமே அதை அரசு ஏன் செய்யவில்லை. இவ்வாறு செய்தால் எந்த அட்டையும் இல்லாமல் நேரடியாக மக்கள் அரசு மருத்துவமனைக்கு சென்று பயனடைவார்களே.

இத்திட்டத்தை செயல்படுத்த ஒரு தனியார் நிறுவனம் அதை நடை முறை படுத்த இன்னொரு தனியார் மருத்துவமனைகள் என்று எல்லாப் பணத்தையும் வாரி இறைத்து தனியார் நிறுவன முதலாளிகள் சம்பாதிக்க மட்டும் தானே இந்த திட்டம் உதவுகிறது.

நீங்களே 166 ஆரம்ப சுகாதர நிலையங்கள் கிராமபுறங்களில் அமைக்க 66.42 கோடி தான் செலவானது என்று சொல்லியிருக்கிறீர்கள் . இந்த 2500 கோடியில் ஒரு 300 கோடி செலவழித்தால் இன்னும் 500 மேற்பட்ட ஆரம்ப சுகாதர நிலையங்களை நிறுவியிருக்கலாம். ஆனால் இதையெல்லாம் செய்தால் ஓட்டு கேட்க போகும் பொழுது கலைஞர் காப்பீட்டு திட்டம் என்று சொல்ல முடியாது. மேலும் அட்டை வைத்திருக்கும் மக்களும் ஒவ்வொரு முறை அட்டையை பார்த்து கலைஞர் தான் தன் சொந்த காசை செலவழித்து நமக்கு வைத்தியம் பார்த்தார் என்று நினைக்க வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வு, சுகாதரம் என்பது ஒரு அரசு மக்களுக்கு செய்து தரவேண்டிய அடிப்படை கடமையை கூட தங்கள் ஓட்டரசியலுக்கு ஓட்டு சேகரிக்கும் ஓட்டு வங்கியாக மாற்றிவிட்டார்.

2500 கோடியில் நான்கு வருடங்களுக்கு மட்டும் உயிர்காக்கும் சிகிச்சை தொலை நோக்குடையதா இல்லை அதே தொகையில் பல வருடங்களுக்கு சேவை தரக்கூடிய ஏழு எட்டு அரசு மருத்துவமனைகள் தனியார் மருத்துவமனையின் தரத்திற்கு கட்டுவது தொலைநோக்கு திட்டமா..

தமிழின தலைவன் Vs ஈழத்தாய்





யாராவது கருணாநிதி ஈழவிசயத்தில் செய்தது தவறு என்று சொன்னால் ஒன்றை சொல்லுகிறார்கள். அது ஈழதாய் என்று சொன்னீர்களே போய் ஈழத்தை அவரிடம் கேளுங்கள் என்று..

இரண்டும் சாக்கடை ஆனால் ஜெயா சாக்கடையை விட கருணா சாக்கடை நாற்றம் எங்களுக்கு வாசனையாக உள்ளது என்று அள்ளி பூசிக்கொண்டு திரிகிறீர்கள். நீங்கள் திரிவது மட்டுமின்றி அனைவரையும் அதையே செய்ய வேண்டும் என்கிறீர்கள் இவரிடம் என்ன நியாயத்தை கண்டுவிட்டீர்கள் என்று தெரியவில்லை..

ஜெயா பேர் என்றால் மக்கள் இறக்கத்தான் செய்வார்கள் என்று சொன்னார் என்றால் இவர் மழை விட்டுவிட்டது தூவானம் விடவில்லை என்றார் இதில் என்ன நியாயத்தை கண்டுவிட்டீர்கள். இரண்டு பேரும் நம் மக்கள் சாவதை சாதரணமாகத்தான் எடுத்துக்கொண்டுள்ளனர். ஆனால் கருணா சொன்னதில் என்ன பெரிய நியாயம் இருக்கிறது. அதுவும் போர் நிறுத்தம் ஏற்பட்டுவிட்டது என்று ஒரு நான்கு மணிநேரம் கடற்கரையில் அடிக்கும் காற்று பத்தாது என்று ஏர் கூலர் ஒன்னுக்கு இரண்டாக வைத்துக்கொண்டு பேரனின் நேரடி வர்ணணையில் காற்றுவாங்கிவிட்டு என்னால் தான் போர் நிறுத்தம் ஏற்பட்டது என்று மார்தட்டி கொண்டார் அதன் பிறகும் போர் தொடர்ந்ததை சுட்டி காட்டினால் மழைவிட்டுவிட்டது தூவானம் விடவில்லை என்றார். எதையும் எதையும் உவமானமாக எடுத்துக்கொள்வது என்று ஒரு வரைமுறையே இல்லாமல் சொல்லுகிறார் அதையும் நீங்கள் ஆமாம் சாமி தூவானத்தால் தான் மக்கள் செத்தார்கள் என்று எடுத்துக்கொள்கிறீர்கள். மழை அதிகமாக பேயும் சிரபுஞ்சியில் கூட தூவானம் பெயும் பொழுது மழை பெய்து முடிந்த மகிழ்ச்சியுடன் இருப்பார்கள் மக்கள் ஆனால் அங்கு நடந்தது என்ன பல உயிர்கள் போனது அதற்கு தூவானத்தை உவமையாக சொன்னவரின் மூஞ்சியில் காறித்துப்பாமல் ஆஹா தூவானம் என்று சிலாகிக்கிறீர்கள்.

நம் தமிழினத்திற்கு என்ன செய்து கிழித்துவிட்டார் இவர், 8 உலகதமிழ் மாநாடுகளை நடத்தியவர்களை பிரித்து தனக்கு என்று உலகதமிழ் செம்மொழி மாநாடு என்று நடத்தியதை விட. நம் தமிழ் கவிஞர்களும் எழுத்தாளர்களையும் ஒன்றிணைப்பது கடினமான விசயம். எந்த அரசியல் வியாதியின் உதவியும் இல்லாமல் இத்தனை வருடம் தனித்துவத்துடன் தமிழறிங்கர்கள் மட்டும் விளங்கிய உலகதமிழ் சங்கத்தை அதில் இருந்தவர்களை தனது சொந்த தேவைக்காக பிரித்து உலக தமிழ் செம்மொழி மாநாடு என்று நடத்தி தன்னை புகழ் பாடும் ஒரு அரங்கமாக நடத்தியதை தவிர. ஏன் இதே உலகதமிழ் செம்மொழி மாநாட்டை பிரான்ஸிலோ கனடாவிலோ நடத்தி காட்டியிருக்க வேண்டியது தானே இல்லை இனிமேலாவது நடத்த முடியும் என்று நினைக்கிறீர்களா. நாம் இருக்கும் நாட்டில் ஒரு மொழிக்கு மாநாடு நடத்துவதை விட மற்ற மொழிகள் பேசும் நாட்டில் நடத்தி அங்கும் நம் மொழியின் பெருமையை உணர்த்தி காட்டியவர்கள் உலகதமிழாராய்ச்சி மையம் அவர்களை துண்டாடியது தான் இந்த உலகசெம்மொழி மாநாடு. இது தான் அவருக்கு கை வந்த கலையாயிற்றே ஏற்கெனவே விடுதலைக்காக போராடிய குழுக்களுக்கும் புகுந்து தனது தேவைக்காக விளையாடியதை பார்த்தவர்கள் தானே நாங்கள். பாவம் சபா கோடாலி காம்பை கண்பார்வை அற்றோர்க்கு வழிகாட்ட உதவும் கம்பாக நினைத்துவிட்டார்.

அன்னை வைத்தியத்திற்காக வந்தார் திருப்பி அனுப்பினது ஏன் என்று கேட்டால் ஜெயலலிதா எழுதிய கடிதம். இதே போல் தான் ஜெயா பாலசிங்கம் அண்ணாவையும் திருப்பி அனுப்பினார் என்கிறீர்கள். அன்னை வந்த பொழுது ஜெயா ஆட்சியில் இல்லை கருணா தான் இருந்தார் காவல்துறை அவரின் அமைச்சகம் ஆனால் எனக்கு ஒன்றும் தெரியாது என்கிறார். ஆனால் விமான நிலையத்தில் ஜாங்கிட்டு மட்டும் எப்படி வந்தார் என்று தெரியவில்லை. புலிகள் இயக்கம் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டது என்று சொல்லி கொண்டு ஆனால் இயக்கத்தின் மீதான தடை தொடர்ந்து கொண்டுள்ளது. கடந்த ஐந்தாண்டுகளில் இரண்டுமுறை தடை நீட்டிக்கப்படுள்ளது அப்பொழுது தமிழக அரசிடம் அறிக்கை கேட்கவில்லையா. ஒவ்வொரு முறையும் தமிழக அரசு தானே தடை செய்யவேண்டும் என்று வாதிடுகிறது, அப்பொழுதெல்லாம் எங்கே உட்கார்ந்து திரைகதை வசனம் எழுதிக்கொண்டிருந்தார். அன்னை தமிழகம் வந்தது சிலரின் அரசியல் என்கிறீர்கள் அவர் தன் மகள் இருக்கும் கனடா சென்றிருக்கலாம், மூத்தமகன் இருக்கு ஐரோப்பா சென்றிருக்கலாம் தான் பெற்ற பிள்ளைகள் இருக்கும் ஊர்களை விட்டுவிட்டு தமிழகம் ஏன் வந்தார் என்று கூட யோசிக்க தோன்றவில்லையா உங்களுக்கு. ஏன் திருப்பி அனுப்பிய பொழுதும் கனடாவோ இல்லை ஐரோப்பாவோ செல்லாமல் ராஜபக்சேவின் பிடியில் இருக்கும் ஈழத்திற்கு தானே சென்றார் அதுவும் ஏன் என்று யோசிக்க தோன்றவில்லையா உங்களுக்கு. அவரின் கடைசிகாலத்தை ஈழத்திலோ இல்லை தமிழகத்திலோ கழிக்க விரும்பியவர் தமிழகத்தின் வாயிலுக்கு வந்தபொழுது கதவை சாத்திவிட்டு அவன் காரணம் இவன் காரணம் என்று சொல்லும் கயமைத்தனம் புரியவில்லையா. ஜெயா தான் இவ்வாறு செய்தார் என்றால் இவரும் தடைசெய்ய ஆதரவாக வாதடுகிறார் அது இந்திய இறையாண்மை என்று சொல்லுகிறீர்கள் எனய்யா ஊருக்கொரு நியாயம் உங்களுக்கு ஒரு நியாயமா.

கடற்கரையில் காற்றுவாங்கியவர் போரை நிறுத்திவிட்டார் என்று சொல்லும் பொழுது தோழன் முத்துக்குமார் போரை நிறுத்த தன் உயிரையே கொடுத்தான் அதை கூட எந்த அளவிற்கு மூடிமறைக்க முடியுமோ அப்படி செய்தவர் தான் இந்த கருணா. ஏன் கன்னட கவிஞன் ஒருவனுக்கு தமிழகத்தில் சிலை வைப்பார் ஆனால் இனத்துக்காக உயிர் துறந்த முத்துகுமரனுக்கு சிலைவைக்க அனுமதிக்க மாட்டார். எந்த மொழி போராட்ட தியாகிக்கு இவர் சிலை திறந்து வைத்திருக்கிறார் என்று சொல்ல முடியுமா. ஊரில் இருப்பவனை எல்லாம் ஆரிய திராவிட போர் தமிழை அழிக்க நினைக்கிறார்கள் என்று சொல்லி ஏற்றிவிட்டு இரயில் வராத தண்டவாளத்தில் மிகவும் சாமர்த்தியமாக தலையை வைத்து போட்டோவுக்கு போஸ் கொடுத்துவிட்டு. இவரின் பேச்சை கேட்டு தீக்குளித்த மொழி போராட்ட தியாகிகளின் உடலில் எரிந்த தீயில் குளிர்காய்ந்தவர் இன்று வரை எத்தனை மொழி போராட்ட தியாகிக்கு சிலை வைத்திருக்கிறார்.

ஏன் இன்று வரை தமிழக மீனவர்களை சிங்கள இராணுவம் கொலை செய்கிறது என்றால் நமது மீனவர்கள் பேராசை பிடித்தவர்கள் என்று சொல்கிறார். இவரின் பேராசை தான் நன்றாக தெரியும் உயிரை பணயம் வைத்து கடலில் ஒருவேளை கஞ்சிக்காக போராடுபவனை பார்த்து இந்த மாடிவீட்டு ஏழை சொல்கிறார் பேராசை பிடித்தவர்கள் என்று. கனிமொழி கைது என்று நாடகம் ஆடியவர், இனிமேல் பிரச்சனை இருக்காது என்றார், மேலும் தொடர்ந்தால் என்ன செய்வது என்று கேட்டதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அதன் பிறகும் தொடர்கிறது ஆனால் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை மத்திய அரசையும் நிர்பந்திக்கவில்லை. கூட்டணி அரசியலுக்காக சீட்டு பேரத்திற்காக இராஜினாமா நாடகம் என்று எல்லாம் நடத்த மட்டும் செய்கிறார். அவரின் சொந்த கட்சி நலத்திற்காகவும் குடும்ப நலத்திற்காகவும் ஆனால் நம் தமிழின மீனவர்களின் வாழ்வாதரத்திற்காக இன்று வரை எந்த முடியையும் புடுங்கவில்லை..

இதையெல்லாம் பார்த்த பிறகு இன்னும் நீங்கள் ஜெயாவை விட இவர் மேல் என்று சொல்லுவீர்கள் என்றால் நிச்சயமாக அவருக்கும் உங்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. தமிழர் நலனைப்பற்றியோ தமிழினத்தை பற்றியோ பேச எந்த அறுகதையும் இல்லை அவர் தன் பெண் கனிமொழியை வைத்து அரசியல் வியாபரம் செய்வது போல் உங்கள் வீட்டில் உள்ளவர்களை வைத்து நீங்களும் செய்யுங்கள் எங்களை பற்றி கவலைப்பட வேண்டாம் எங்களுக்கு கருணாவும் தேவை இல்லை ஜெயும் தேவையில்லை.

தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும் ஒன்னார்
அழுத கண்ணீரும் அனைத்து. - குறள் 828

பொருள் - சிலர் நம்மை நம்பவைப்பதற்கும், நம்மிடம் இரக்கம் பெறுவதற்கும் அழுது கண்ணீர் விடுவார்கள். அதை நம்பி ஏமாந்து விடாதீர்கள். ஏன் என்றால் அவர்கள் அழுது வடிக்கும் கண்ணீரிலும் கெட்ட எண்ணம் மறைந்திருக்கும், கூப்பிய கையினுள்ளே மறைந்திருக்கும்
கொலைக்கருவியைப் போல. ஆகவே நட்புக்கொள்ளவரும் எல்லோரையும் நம்பாதீர்கள் என்று எச்சரிக்கிறார்.

இது தான் கருணாவின் நிலை, ஜெயா எதிரி, எதிரி எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் எதிர்த்து நின்று போராடும் வலிமை தமிழர்களுக்குண்டு. ஆனால் துரோகியால் தமிழினம் பட்ட துன்பங்கள் எட்டப்பன் காலத்தில் இருந்து தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இனிமேலும் துரோகியை நம்பி சோடை போவது கூடாது என்பதை இனிமேலாவது நீங்கள் உணர்ந்து கொள்ளவேண்டும்.

திரும்பவும் சபா இருந்திருக்க வேண்டும் சகோதர யுத்தம் என்று உளறி கொட்டுவதற்கு முன் சென்ற வருடம் சபாவின் தாயார் சென்னையிலே மரணமடைந்தார் அதற்கு தன்னுடன் தோளோடு தோள் கொடுத்து நின்ற தோழனின் தாயார் மறைவிற்கு சென்று இருக்க வேண்டாம், ஒரு இரங்கற்பா பாடினாரா உங்கள் தலைவர் என்று உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். இல்லாவிடில் தாயாரை வைத்தும் அரசியல் செய்யும் அவரை போல நீங்களும் உங்கள் தொழிலை தொடருங்கள்..

நன்றி - இனியொருவிலிருந்து பாலாவின் கார்டூன்கள் மற்று ஈழம்5.கொம்

Friday, March 4, 2011

108

கலைஞரின் மாபெரும் சாதனைகளாக பெருமை அடித்துக்கொள்ளப்படும் 108 ஆம்புலனஸ் சேவை. இதை நாட்டின் முன்னோடி திட்டம் மக்களுக்கு பயன் தரும் மாபெரும் திட்டம் என்று எல்லாம் இந்த தேர்தலில் மார்தட்டப்படும். ஆனால் இந்த திட்டத்தின் பின்னால் இருப்பவர்களை எல்லாம் மறைத்துவிட்டு தான் மட்டும் தான் சாதித்தேன் என்று சொல்வது தான் ஆளும் திமுக கூட்டணியின் மாபெரும் சாதானை..

EMRI இதை நீங்கள் ஒவ்வொரு 108 வாகனத்திலும் பார்க்கலாம்.

Posted Image

Emergency Management Research Institute. எனும் நிறுவனம் தான் இப்பொழுது தமிழகத்தில் இருக்கும் அவசர சிகைச்சைகான ஊர்திகளை இயக்கும் ஓர் அமைப்பு. www.emri.in. இந்த நிறுவனம் தற்பொழுது GVK. ரெட்டி அவர்களின் தலமையிலான குழுவினரால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது ஆனால் இந்த அமைப்பு சத்யம் நிறுவனத்தின் இராமலிங்கராஜுவின் மூளையில் உதித்த ஒரு குழந்தை. இதற்கான மென்பொருள் வடிவமைப்பில் இருந்து தொழில்நுட்ப தேவைகள் அனைத்தையும் முடித்து ஒரு முழு செயல்பாட்டுக்கு கொண்டுவந்தது சத்யம் நிறுவனமே. இந்த நிறுவனம் முதன்முதலாம் 2005ம் ஆண்டே ஆந்திராவில் செயல்பாடுகளை தொடங்கி வெற்றிகரமாக நடத்திக் காட்டியது அதன் பிறகே மற்ற மாநிலங்களுக்கு ஆந்திராவில் வெற்றிகரமாக செயல்படுவதை காட்டி தனது விற்பனையை தொடங்கியது.

சத்யம் ராஜு மிகப்பெரிய கில்லாடி என்பது நாம் அறிந்ததே, இந்த முறையில் அரசு மருத்துவமனைகளில் இருக்கும் ஆம்புலனஸ் சேவைகள் நிறுத்தப்பட்டு அது ஒரிடத்தில் கொண்டுவரப்பட்டது. அதாவது மாநிலம் முழுவதற்கும் கட்டுப்பாட்டு அறையாக ஒரே இடத்தில் தொலைபேசி அழைப்புகள் பெறப்பட்டு அந்த பகுதியில் உள்ள ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு நோயாளிகள் அழைத்துச்செல்லப்படுவார்கள். இதற்கான மொத்த ஆம்புலனஸ் ஊழியர்கள் மற்றும் அனைத்தையும் இந்த EMRI நிர்வாகமே வழங்கும். இதற்காக மாநில அரசு 3 மாதத்திற்கு ஒரு முறை செலவுத்தொகையை முன்பணமாக செலுத்த வேண்டும். வருடத்திற்கு ஆகும் செலவை அந்த மாநில அரசு ஏற்றுக்கொள்ளும், நிரந்தரமான வருமானம் உள்ள ஒரு தொழிலாக மாற்றிவிட்டார் ராமலிங்கராஜு. இதில் நன்மை இருக்கின்றது ஓட்டுநரில் இருந்து முதலுதவி அளிப்பவர் வரை இந்த நிறுவனமே பயிற்சி அளிக்கிறது. மேலும் நோயாளிக்கான சிகிச்சை ஆம்புலன்ஸிலேயே தொடங்கிவிடுகிறது.

அரசு மருத்துவமனைகள் இலவசமாக வழங்கிகொண்டிருந்த சேவையை தனது நிறுவனத்திற்கு வருமானம் வரக்கூடிய ஒரு தொழிலாக மாற்றிக்கொண்டார் ராமலிங்க ராஜு. இதனால் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை மிகச்சிறப்பான மருத்துவ உதவி கிடைக்கிறது. ஆனால் கருணாநிதியின் திமுக அரசு விளம்பரம் செய்வது போல் இந்தியாவிற்கே முன்னோடி திட்டமாக தமிழகத்தில் செயல்படுத்தப்படவில்லை. இத்திட்டம் 2008 மே மாதம் தான் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டது. ஆனால் இத்திட்டம் 2005ம் ஆண்டு ஆந்திராவில் அறிமுகப்படுத்தப்பட்டு வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது. அதன் பின்னர் 2008 மார்ச் மாதம் குஜராத்திலும் 2008 மே மாதம் உத்தர்காண்ட்டிலும், இவர்களுக்கு எல்லாம் முதலாக 2007ம் ஆண்டே மத்தியபிரதேசத்தில் தான் செயல்படுத்தப்பட்டது.

2008ம் ஆண்டு மே மாதம் ஒப்பந்தம் போடப்பட்டாலும் செயல்பாட்டுக்கு 15ம் தேதி செப்டம்பர் மாதம் 2008ல் தான் வந்தது.

Posted Image

இந்த அழைப்பிதழில் அரசின் இலவச அவசர ஊர்தி சேவை என்று குறிக்கப்பட்டுள்ளது அதற்கு முன் இச்சேவை இல்லையா. இருந்தது அரசின் நேரடி கட்டுபாட்டில் நாம் அழைக்கும் தொலைபேசி அழைப்பு மாவட்ட கண்காணிப்பகத்திற்கு செல்லும் அவர்கள் ஊர்தியை அனுப்புவார்கள். அதை தனியாரின் கைக்கு தாரைவார்த்ததே இந்த 108 அவசர ஊர்தி சேவை திட்டம்.

இந்த திட்டத்தை ஏன் அரசே நடத்த முடியாதா அப்படி என்ன பெரிய விசயங்கள் இருக்கின்றன இத்திட்டத்தில். இந்த திட்டத்தின் அடிப்படை தேவை எவை.

CCT - கணிணி தகவல்பறிமாற்ற தொழில்நுட்பம். (பயப்படாதீர்கள் ஒன்றும் இல்லை கால்சென்டர்கள் உபயோகிக்கும் மென்பொருள்)

GIS - புவியியல் வரைபட தகவல்

GPS/ AVLT - புவியியல் வரைபட வழியில் இடத்தை கண்டுபிடிப்பது (வாகனங்களில் பொருத்தி இருப்பிடத்தை அறிவது)

இந்த மூன்றின் வேலை, முதலவதான CCT 108க்கு வரும் அழைப்பை கால்சென்டர்களில் இருக்கும் தொழிலாளி யார் வேறு தொலைபேசி அழைப்பை பேசாமலிருக்கிறார் என்று பார்த்து அவருக்கு அழைப்பை கொண்டு சேர்க்கும். அவர் அழைப்பில் பேசுபரிடம் தகவலை பெற்று அவர் சொல்லும் தகவலை வைத்து எந்த இடம் என்பதை GIS மூலம் உறுதி செய்து. ஆம்புலன்ஸ்களில் பொருத்தப்பட்டிருக்கும் GPS மூலமாக தொலைபேசி அழைப்பில் சொன்னவர் சொல்லும் இடத்துக்கு அருகில் இருக்கும் வாகனத்தை தொடர்பு கொண்டு அவர்களுக்கு தகவல் தெரிவித்து உடனடியாக அங்கு வாகனத்தை கொண்டு சேர்ப்பது.

இந்த மூன்றும் மிகப்பெரிய தொழில் நுட்ப சேவை கிடையாது, தெருவுக்கு மூன்று கால்சென்டர்கள் வைத்து சர்வதேச அளவில் வணிகம் செய்து கொண்டிருக்கிறோம். GIS, GPS, AVLT மூன்றும் சென்னை மாநகராட்சி ஊர்திகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது கடந்த 10 வருடங்களாக. இதை அரசு கணிணி நிறுவனமான எல்காட் செய்ய முடியாதா. இதை விட மிகப்பெரிய அளவில் கணிணி தொழில் நுட்பத்தை அரசு அலுவலகங்களில் நிர்மானித்து நடத்தி வருகிறது எல்காட். இதை ஒரு தனியார் நிறுவனத்திற்கு அள்ளி கொடுத்துள்ளனர்.

முதலில் சத்யம் நிறுவனத்தின் கீழ் இருந்தாலும் EMRI நிறுவனம் இப்பொழுது GVK எனப்படும் GV. கிருஷ்ணாரெட்டியின் கீழ் இயங்கும் GVK நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. 2008 -09 ஆண்டுக்கான சேவைக் கட்டணமாக ரூ 29.29 கோடி ரூபாயும் 2009 - 10ம் ஆண்டுக்கு 55.13 கோடியும் நிதி ஒதுக்க்ப்பட்டுள்ளது. முதலாண்டு தொகையினை விட இரட்டிப்பு மடங்கு தொகை இரண்டாம் ஆண்டுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் முதல் ஐந்தாண்டுகளுக்கு மேலும் எந்த மாற்றங்கள் இன்றி தொடரும் அதன்பிறகு வேண்டுமானால் புதுபித்துக்கொள்ளலாம்.

இந்த திட்டத்தின் கீழ் வாங்கப்படும் அனைத்து பொருள்களும் ஒப்பந்தகாலத்தில் நிறுவனத்திற்கும் அரசுக்கும் பொதுவான சொத்தாக இருக்கும். ஒப்பந்தகாலம் முடிந்தபிறகு ஒப்பந்தம் புதுபிக்கபிடவில்லை என்றால் அரசுக்கு அனைத்தும் சொந்தம். இதற்காக உபயோகிக்கும் மென்பொருள்கள், தொழில்நுட்ப பொருள்கள் அந்த நிறுவனத்தையே சேரும். மேலே குறிப்பிட்ட மிகப்பெரிய தொழில்நுட்பத்தை நிறுவனத்திற்கு சொந்தம், அதற்காக கோடி கோடியாக அரசு ஒரு தனியார் நிறுவனத்திற்கு கொட்டி கொடுக்கிறது.

இந்த திட்டத்திற்கு தமிழக அரசு செலவு செய்யும் தொகை மத்திய அரசின் சுகாதர மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பெறப்பட்டு செலவு செய்யப்படுகிறது.

இந்த திட்டத்திற்கு வேலைக்கு ஆட்கள் அரசு வேலைவாய்ப்பு துறை மூலம் பதிவு செய்த மூப்பு அடிப்படை மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்டு வேலை வழங்கப்பட்டுள்ளனர். இவர்களின் ஊதியம் அனைத்தும் தனியார் நிறுவனமே வழங்கி வருகிறது இவர்கள் அரசு ஊழியர்களாக கருத முடியாது. இவர்கள் தனியார் நிறுவன ஊழியர்களே, மூப்பு அடிப்படையில் எடுக்கப்பட்டு வேலைக்கு சேர்ந்த இவர்கள் பதிவு செய்த மூப்பையும் இழந்துவிடுகிறார்கள்.

108 க்கு தினமும் 30000 தொலைபேசி அழைப்புகள் வருவதாகவும் அதற்கு விளம்பரங்களே காரணம் என்று சொல்லி கலைஞர், சன் மற்றும் பல தொலைகாட்சிகளுக்கு விளம்பரம் வழங்கி அதில் தனது சொந்த வீட்டுக்கு பணம் வர வழிசெய்து விட்டார்.

108யை பிரபலபடுத்துவது பெரிய கம்பசூத்திரமா இதற்கு முன் அவசர அழைப்பிற்கு 100,101,102னு நாம் விளம்பரம் பார்த்து தான் தொலைபேசியில் அழைத்தோமா.. வாழ்க பணநாயகம்..

ஆனால் இதை தட்டச்சு செய்யும் பொழுது ஒன்று திரும்ப திரும்ப நியாபகம் வந்தது. அழைப்பிதழில் கருணா ஸ்பெக்ட்ரம் புகழ் ராஜா அடுத்து இருக்கும் பன்னீர்செல்வம் அவர்களின் தலைமையில் நடந்த இந்த மரணம்..

Posted Image

Posted Image

தனது முன்னிலையில் அவரின் தலைவர் துவக்கி வைத்த 108 அவசர ஊர்தி வருவதற்கு முன்னால் தன் வண்டியில் ஏற்றி சென்று காப்பாற்றினால் தானை தலைவரை அவமதித்தது போலாகிவிடும் என்று எண்ணியதால் குடிக்கப்பட்ட உயிர்..

Wednesday, March 2, 2011

திமுக மீது மொக்கை காரணங்கள்



திருமதி. சாந்திபாபு அவர்களே தலைப்பை கூட திமுகவின் சாதனைகள் என்று போட்டால் எவனும் திரும்பி கூட பார்க்க மாட்டான் என்பது நன்றாக தெரிந்திருந்து திமுக மீது மொக்கை காரணங்கள் என்று தலைப்பை போட்டு அனைவரையும் திரும்பி பார்க்க வைத்திருக்கிறீர்கள்.. இதிலேயே நீங்கள் அடுத்து சொல்ல வரும் திமுக பெருமைகள் ஒன்றும் இல்லை என்றாகிவிட்டது.

நமது நாட்டின் பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், தமிழ்நாடு அமைதி தவழும் மாநிலமாக விளங்கி வருகிறது....

இதற்கு காரணம் கலைஞரின் ஆட்சியில்லை தமிழக மக்கள் அவர்களிடம் யாரும் மதத்தை பற்றி பேசி அவரகளை கையில் ஆயுதம் ஏந்த செய்ய முடியாது. அனைத்து மதத்தையும் சமமாக மதிப்பவர்கள். ஆறுமுகம் ஏர்வாடி தர்ஹாவுக்கு போவான் அஹமது சமயபுரத்தில் மந்திரித்து கொள்வான். இதனாலே இங்கு மத தீவிரவாதம் பெருமளவு உள்ளே நுழைய முடிவதில்லை. இது உங்கள் கலைஞரின் சாதனை இல்லை அவர் இந்து மதத்தினரை பார்த்து கடவுள் இல்லை நீங்கள் எல்லாம் முட்டாள்கள் என்று சொல்லிவிட்டு ரம்ஜான் நோம்புக்கு போய் கஞ்சி குடித்த பொழுதிலும் இந்து கடவுளை நம்பும் தமிழர்கள் பேசாமல் இருப்பது அவர்களின் சகிப்பு தன்மை. இது அனைத்து மத தர்மத்தையும் பின்பற்றும் தமிழர்களுக்கும் பொருந்தும். வேண்டுமென்றால் மொழிதீவிரவாதம் பேசி ஊரு முழுக்க தொண்டர்களை தீக்குளிக்க வைத்து அதில் குளிர் காய்ந்து ஆட்சிகட்டிலில் ஏறியதை சாதனையாக சொல்லி ஓட்டு கேளுங்கள்..

மாநிலத்திற்குள் பாயும் ஆறுகளை இணைக்கலாம்

எந்த ஆற்றில் தண்ணி ஓடுது எல்லாவற்றிலும் சாக்கடை தான் ஓடுது. சாக்கடை இணைத்து என்ன செய்வதாக உத்தேசம், திரும்பவும் கூவத்தை சுத்தபடுத்துகிறேன் என்பது போல் இவைகளையும் சுத்த படுத்த கிளம்புவீர்களா. வேறு என்ன செய்வது இணைப்பதற்கு ஒரு டெண்டர் சுத்தபடுத்த ஒரு டெண்டர் என்று விட்டு சம்பாதிக்க வேண்டுமே..

சேதுக் கால்வாய்த் திட்டம் நிறைவேற்றப்படவேண்டும்

இப்படியே சொல்லிகிட்டு தான் இருக்கிறீர்கள் இதுவரைக்கும் ஒன்றும் நடந்ததாக தெரியவில்லை. அந்த திட்டத்தை நிறைவேற்றி அதன் பிறகு கிடைக்கும் பலனை எல்லாம் அப்புறம் பார்க்கலாம், அந்த திட்ட பகுதியில் வாழும் மீனவர்களுக்கு வாழ்வதாரமான மீன்பிடி உரிமை வாங்கி கொடுக்க முடியவில்லை. அங்கு பிரச்சனை என்று சொன்னால் நமது மீனவர்களுக்கு பேராசை என்று சொல்லுகிறீர்கள், சர்வதேச சட்டப்படி 12 கிமீ நாம் உபயோகப்படுத்தலாம் அது வரை பயன்படுத்துவ்தற்கு அனுமதி வாங்க சொல்லுங்கள்.

240 சமத்துவபுரங்களிலும் பெரியார் சிலை

ஒரு வருடத்திற்கு முன்னால் திறக்க பட்ட சமத்துவபுரங்களை சென்று பாருங்கள் திரும்பி வந்து அங்கு என்ன நடக்கிறது என்பதை ஊருக்கு சொல்லும் தைரியம் இருந்தால்.

தைத்திங்களே தமிழ்ப் புத்தாண்டு

இதனால் எத்தனை குடும்பங்களுக்கு வயிறார சாப்பாடு கிடைத்தது..

திட்ட ஒதுக்கீடு இரு மடங்கு, தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டம், கப்பல் கட்டும் தளங்கள், மெட்ரோ ரயில் திட்டம்

இவைகள் அனைத்தும் மத்திய அரசின் திட்ட ஒதுக்கீடு இதற்கு நீங்கள் எப்படி உரிமை கோருகிறீர்கள். எப்பொழுது நிறுத்த போகிறீர்கள் இப்படி அடுத்தவன் பெற்ற குழந்தைக்கு உங்கள் பெயரை இன்ஷியலாக போட்டு கொள்வதை. இதே போல் மற்றவர்கள் செய்தால் சும்மா இருப்பீர்களா..

மற்ற மாநிலங்களில் சொகுசு பேருந்துகள் விடும் பொழுது அந்த மாநில முதல்வரின் போட்டோவை போடுவதில்லை அனால் தமிழகத்தில் மட்டும் இன்னும் தொடர்கிறோம். அதுவும் மத்திய அரசின் JN nrum மூலமாக விடப்படும் பேருந்துகளுக்கு முன்னாள் இவரின் படத்தை போட்டு திரிகிறீர்களே வெட்கமாக இல்லை.. இதே போல் தாயாளு அம்மாளுக்கு பிரசவம் பார்த்த மருத்துவரின் பெயரை ஸ்டாலினுக்கு இன்ஷியலாக போட்டுக்கொள்வீர்களா...

மத்திய அரசின் ஆட்சி மொழிகளில் தமிழும்!

இதனால் திருப்பூர் வீரபாண்டியில் வாழும் தமிழனுக்கு என்ன பயன்..

சென்னை சங்கமம் கலை விழா

இதை முன்னின்று நடத்த சிறந்த தமிழ் கலைஞர்கள் யாருமே இல்லையா.. தன் மகளுக்கு விளம்பரம் செய்ய ஒரு விழா அதுவும் அரசின் பெயரில்.. நடக்கட்டும் நடக்கட்டும் எத்தனை நாள்.

24,58,411 வண்ணத் தொலைக்கட்சிப் பெட்டிகள் இலவசம்

2458411 X 100 X 12 இது என்ன கணக்கு என்று பார்க்கிறீர்களா இது ஒரு டிவிக்கான கேபிள் கட்டணம் ஒரு வருடத்திற்கு. இன்று தமிழகத்தில் கேபிள் என்பது மதுரையில் அழகிரியும் தமிழகம் முழுவதும் தயாநிதி. இந்த கேபிள் தொழிலில் இந்த இலவச டிவிகளால் கிடைக்கும் வருமானம் 295,00,93,200 அதாவது 295 கோடி ரூபாய் ஒரு வருடத்திற்கு இதில் லோக்கல் கேபிள் ஆப்ரேட்டர்களுக்கு 10 ரூபாயை கொடுத்துவிட்டு மிச்சத்தை தன் குடும்பத்துக்கு கொண்டு வந்து சேர்க்கும் மாபெரும் திட்டம். தன் குடும்பத்திற்கு வருடத்திற்கு 200 கோடிக்கு மேல் வருமானம் கிடைக்க அரசு செலவில் மக்களுக்கு இலவச டிவி. ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே என்று..

ஈழதமிழர்கள் நலம்.

இதற்க் தனி தலைப்பு போடாமல் ஒரு சின்ன பத்தியாக சொன்னது எதற்காக.. அதுவும் இலங்கை தமிழர் நலனை மத்திய அரசிடம் வலியுறுத்துவோம், இன்று சொல்லும் நீங்கள் 80களில் ஆயுதம் கொடு பயிற்சி கொடு என்று போராட்டம் நடத்தினேர்களே எதற்கு. தெருவில் சும்மா போகிறவனை கூப்பிட்டு நீ அப்படி இப்படி என்று ஏற்றிவிட்டு சண்டையில் இறக்கிவிட்டு அவன் அடிவாங்கும் பொழுது பார்த்து ரசிக்கவா.. இதற்கு இன்று சொல்லும் மத்திய அரசிடம் வலியுறுத்துவோம் என்பதை அன்றே சொல்லியிருக்க வேண்டியது தானே. எம்.ஜி.ஆர் கூட்டம் போட்டால் அவருக்கு போட்டியாக கூட்டம் போட்டு நான் தான் உங்கொப்பன்டா நல்ல முத்து பேரன்டா ஆட்டம் போடும் நரிக்கூட்டம்.


ஊழல் , குடும்ப அரசியல் ,ஈழதமிழர் விரோதம் , இலவசம் ,87 வயதிலும் பதவியாசை என்று மொக்கை காரணங்கள் சொல்லாமல் மனசாட்சியுடன் ஆக்கபூர்வமாக, தொலைநோக்கு சிந்தனையுடன், திட்டங்களில் எதாவது குறை இருந்தால் சொல்லுங்கள் ...

நான் இப்படி எல்லாம் சொல்ல போவதில்லை, ஒன்றே ஒன்று தான் எதிரியை கூட மன்னிக்கலாம், ராஜ பக்சே நாளை தான் செய்த தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டால் மன்னித்தாலும் மன்னிப்போம். ஆனால் துரோகியை மன்னிக்க முடியாது. அதுவும் நான்கு மணிநேர உண்ணாவிரதம், மழைவிட்டாலும் தூவானம் விடவில்லை என்று சொன்ன கொழுப்பெடுத்த நாக்கு, கூட இருந்தே குழி பறித்த துரோகிக்கு என்றும் ஓட்டு போட முடியாது.. முடிந்தால் என் வீட்டு பக்கம் வந்தால் தமிழர்களின் பாரம்பரியத்தின் படி சாணியை கரைத்து ஊற்றுவேன்..

நீங்களே சொல்லுங்கள் நான் சொல்வது சரி தானே..


Tuesday, March 1, 2011

தன்னம்பிக்கைக்கு ஒர் இளைஞன்

Posted Image

செயின், கேப், டாய்ஸ்... இடைவிடாமல் காதுகளைத் துரத்தியது குரலொன்று. கோவையில் ஒரு கண்காட்சி வளாகத்தின், வெளியேறும் வாயில் அருகே, கறுப்புக் கண்ணாடி, தலையில் தொப்பி சகிதம் அக்குரலுக்குச் சொந்தக்காரர் நின்றிருந்தார்.

முதல்பார்வையிலேயே விழியிழந்தவர் என்பது தெரிகிறது. சூனியம் வெறிக்கும் கண்களுடன், வெயிலைப் பொருட்படுத்தாது, அவரும் இன்னொரு சகாவும் கழுத்தில் கயிறு கோர்த்து தொங்க விட்ட அட்டையில் சிறுசிறு பொருட்களை வைத்து, விற்பனை செய்து கொண்டிருந்தனர்.

கடந்து சென்றவர்களில் பெரும்பான்மையினர், சில வினாடிகள் கூட அந்தப்பக்கம் பார்வையைத் திருப்பவில்லை. அவ்வப்போது குழந்தைகள் மட்டும், அருகில் சென்று பொம்மைகளைத் தொட்டுப்பார்த்தபடி சென்றன.

ஒரு பெண் குழந்தை "அங்கிள், எனக்கு ஒண்ணு தாங்க' என்று கேட்டு வாங்கிச் சென்று, தன் தாயிடம், "ச்சே பாவம் அந்த அங்கிள்' என பரிதாபம் காட்டியது. குழந்தையின் குரல் கேட்ட திசையில் காதுகளைத் திருப்பியவர் லேசாகப் புன்னகைத்தார்.

உடனே முகபாவம் மாற்றி, கீசெயின், கேப், டாய்ஸ் என, மீண்டும் குரல் கொடுக்கத் துவங்கினார். நெருங்கிச் சென்று அவரிடம் விசாரித்த போது, ""உடுமலை அருகே துங்காவி சொந்த ஊர். தமிழில் எம்.ஏ.,- பி.எட்., முடித்திருக்கிறேன்,'' என்றார்.

சற்றே நிழலில் நின்று பேசலாமா எனக் கேட்கத் தோன்றியது. ஆனால், அவரோ வெயிலைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்தார். ""விழியிழந்தவர்கள் பற்றிய விழிப்புணர்வு சமூகத்தில் கொஞ்சம்தான் அதிகரித்திருக்கிறது. சாலையோரத்தில் நின்றிருந்தால், 10 சதவீதத்தினர்தான் உதவி வேண்டுமா என விசாரிக்கின்றனர்.

கடந்து செல்லும் காலடி ஓசைகள், சில சமயம் நெருங்கி வருவதே இல்லை. இளைய சமுதாயம் பரவாயில்லை; சாலையைக் கடப்பதில் இருந்து, முழுமையாக விசாரித்து தேவையை நிறைவு செய்கின்றனர். ""கோவை அரசு கலைக்கல்லூரியில் எம்.பில்., பட்டத்துக்காக, ஜெயமோகனின் "அனல்காற்று' புதினத்தை ஆய்வு செய்து கொண்டிருக்கிறேன்.

கூலி வேலை செய்யும் குடும்பம் என்பதால், பெற்றோரிடம் எதுவும் எதிர்பார்க்கவில்லை. ""இங்கு ஒரு நண்பர் வழிகாட்டுகிறார். அவர் பொருட்களை வாங்கிக் கொடுக்க, அதை விற்று கிடைக்கும் லாபத்தில் படித்து வருகிறேன்.

நிச்சயம் பிஎச்.டி., முடிப்பேன். பார்வையற்றவன் என்பதால், பி.எட்., முடித்திருந்தும் பள்ளியில் வேலை கிடைக்கவில்லை. பரிதாபம் காட்டி வேலை தரவேண்டாம்; தகுதியைப் பரிசோதித்து தரக்கூட யாரும் முன்வரவில்லை. அதுதான் வருத்தமாக இருக்கிறது.

"எங்களாலும் எல்லாம் முடியும், வாய்ப்புக் கொடுத்துப்பாருங்கள். எல்லாவற்றுக்கும் "பிரெய்லி' புத்தகங்கள் இல்லை. அதனால், "ஆடியோ'வில் கேட்டு படித்து வருகிறேன். இப்போது வெயிலைப் பொருட்படுத்தாமல் வேலைபார்ப்பது கூட, ஒரு "டிவிடி' பிளேயர் வாங்க வேண்டும் என்பதற்காகத்தான்.

அது இருந்தால் படிக்க வசதியாக இருக்கும்,'' என்றார். "பிச்சை புகினும் கற்கை நன்றே' என செவிட்டில் அறைகிறது, சங்கப்புலவர் அதிவீரராமபாண்டியனின் வரிகள்.

இவரோ, அதையும் புறம்தள்ளி, சுயத்தை நழுவவிடாமல் உழைத்துக் கொண்டிருக்கிறார்.

நன்றி - www.tamilcnn.com

கோவையை சேர்ந்த நண்பர்கள் இவரின் தொலைபேசி எண்ணை பெற்று தரவும்..