Sunday, October 17, 2010

அரசு மருத்துவமனைகள் தரமானவை அல்ல... சாட்சியம் - கலைஞர் காப்பீட்டு திட்டம்

கலைஞர் காப்பீட்டு திட்டம் சென்ற ஜூலை மாதம் ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடம் முழுவதுமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பயனடைந்தவர்கள் ஓரு லட்சத்து ஐம்பத்தும் மூவாயிரத்து இறநூற்று ஐம்பத்து ஏழு நோயாளிகள் இந்த காப்பீட்டு திட்டத்தினால் பயன் படும் குடும்பங்கள் ஒரு கோடியே நாப்பத்து நாலு லட்சத்து நாப்பத்து ஐயாயிரத்து நூற்றிபதினெழு குடும்பங்கள். இவர்களின் காப்பீட்டு தொகையாக தமிழக அரசு வருடத்திற்கு 517 கோடி ரூபாய் காப்பீட்டு நிறுவனத்திற்கு கட்டுகிறது.

மிகவும் சிறந்த திட்டம் மிகவும் பயனளிப்பதாக காட்டப்பட்டு வருகிறது. ஆனால் இதற்கு பின்னால் இருக்கும் ஊரை அடித்து உலையில் போடும் கலைஞரின் களவாணி தனம் இங்கு யாருக்குமே தெரியவில்லை. நமக்கு தான் நூறு ரூபாய் நாகர்கோயிலில் இலவசமாக கொடுக்கிறான் என்றால் சென்னையில் இருந்து செலவழித்து ஓடி போய் வாங்க தயாராய் இருக்கோமே.

இதில் என்ன கிடைக்கிறது என்று மட்டும் தான் யாருக்கும் தெரியவில்லை, இத்தனை பேர் பயனடைந்தது என்று கணக்கு கொடுத்தவர்கள் தெரியாத்தனமாக அந்த நிறுவணம் எவ்வளவு கொடுத்தது என்பதையும் சொல்லிவிட்டார்கள் 415 கோடி ரூபாய் இந்த திட்டத்திற்காக கொடுக்கப்பட்ட நிதியாக சொல்லியுள்ளார்கள். அதாவது 517 கோடி ரூபாய் பெற்று கொண்டு 415 கோடிரூபாய் செலவு செய்துள்ளது. மிச்சம் 102 கோடி ரூபாய் அந்த நிறுவணத்தின் மொத்த லாபம், அதாவது அவர்கள் நிறுவணத்திற்கான வேலையாட்களின் ஊதியம், மற்ற இதர செலவுகளுக்கு முன். அவைகளை நீக்கினால் கூட குறைந்த பட்சம் 80 கோடி ரூபாய் ஒரு வருடத்திற்கு அந்த நிறுவணத்திற்கு லாபம். லஞ்சமாக எவ்வளவு கொடுத்தார்கள் என்பது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம். இதுவும் எப்படி அரசு 517 கோடி ரூபாய் பணத்தை சென்ற வருடமே கொடுத்துவிட்டது பணம் கூட அந்த நிறுவணம் இந்த திட்டத்திற்காக செலவு செய்ய வேண்டியதில்லை.

முழுதாக 517 கோடி ரூபாய் கையில் ஒரு வருடம் முன்பாகவே வாங்கிக் கொண்டு அதிலிருந்து செலவு செய்கிறது அந்த நிறுவணம். அந்த பணத்திற்க்கு வங்கி வட்டி 1.5 சதவீதம் போட்டல் கூட 517 கோடிக்கு 7கோடியே 75 லட்சத்து 50 ஆயிரம். இத்தனை கணக்கையும் போட நம்ம ஊரு பாமரமக்களுக்கு எப்படி தெரியும். பத்திரிக்கையில் வெளிவறுவதையும் கூட்டம் போட்டு பிரியாணி கொடுத்து கூட்டம் சேர்ப்பதை பார்த்தும், ஒரு ஓட்டுக்கு ஏவ்வளவு கொடுப்பார்கள் என்று கணக்கு பார்க்கும் நம் ஊர் மக்களுக்கு எப்படி தெரியும் இந்த கணக்கை பார்க்க.

சரி அதெல்லாம் பரவாயில்லை சேலத்தில் ஒரு பெரிய பிரச்சனை நடந்தது, மல்டிஸ்பெஸாலிட்டி மருத்துவமனை திறந்தது சம்பந்தமாக யாரு கொண்டு வந்தாங்க என்பது குறித்து. அதாவது திமுக அமைச்சரும் முன்னாள் மத்திய அமைச்சரும் அடித்துக் கொள்ளாத குறையாக சண்டை போட்டுக் கொண்டார்கள். சேலத்தில் மல்டிஸ்பெசாலிட்டி மருத்துவமனை வர காரணம் யார் என்று.

அந்த மருத்துவமனை கொண்டு வர செலவு மொத்தம் 139.3 கோடி ரூபாய் நிலத்தை கணக்கில் கொள்ளாமல் அரசாங்க புறம்போக்கு நிலத்தில் கொண்டு வரலாம் இப்படி பட்ட மருத்துவமனைகளை. சேலத்தில் நிலத்துக்கு ஆன செலவு 200 கோடி ரூபாய். இதையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் வருடத்திற்கு 350 கோடி என்றால் கூட, வருடத்திற்கு 517 கோடி என்பதை கொடுத்து இருக்கும் பொழுது, அரசு மருத்துவமனைகளை மேம்படுத்துவது புதிதாக மருத்துவமனைகள் கட்டினால் இன்னும் 10 இல் இருந்து 50 வருடங்களுக்குள், சேலத்தில் ஆரம்பித்தது போல் ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு மருத்துவமனை என்று 234 தொகுதிக்கும் ஒரு மல்டிஸ்பெஸாலிட்டி மருத்துவமனை இருக்கும். அப்புறம் எதற்கு இந்த இடை தரகர்கள் திமுக அரசு இதை நினைத்துப் பார்க்குமா இல்லை சட்டபேரவை, நூலகம் என்று திறந்து விட்டு கட்டிக் கொண்டிருக்கும் இடைக்கால லாபம் மட்டும் போதும் என்று இருக்குமா..

ஆனால் இந்த திட்டத்தின் மூலம் இத்தனை வருட ஆட்சியில் நாங்கள் ஒன்றும் சாதித்துவிடவில்லை என்று தெளிவாக சொல்லி இருக்கிறார் கலைஞர். என்ன பார்கிறீர்கள் இந்த கலைஞர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளில் தரமான சிகிச்சையை ஏழை எளிய மக்கள் பெற்றுக் கொள்ளலாம், அரசாங்க மருந்தகத்தில் இப்படி திறமையான மருத்துவ சேவை கிடைக்காது என்பதை தெள்ள தெளிவாக சொல்லி இருக்கிறார். அதனால் நாளை உங்கள் வீட்டில் பேறு காலைத்தில் இருக்கும் பெண்ணை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று விடாதீர்கள் தரமான சிகிச்சை கிடைக்காது.

No comments:

Post a Comment