Tuesday, December 30, 2014

தந்தி டிவியில் ராஜபக்சேவின் பேட்டி அரசியல்


ராஜபக்சேவின் தனிப்பட்ட பேட்டி தந்தி டிவிக்கு என்பது இந்திய மத்திய அரசு நலன், மற்றும் சிங்கள பேரினவாதத்தின் பிரித்தாளும் சூழ்ச்சியின் கீழாக பார்க்க வேண்டும். இந்த பேட்டிக்கு தந்தி டிவி அணுகியதைவிட இந்திய வெளியுறவுத் துறையே அனுமதி வாங்கி கொடுத்து இருக்க வேண்டும். பேட்டி எப்படி எடுக்கப்பட்டால் என்ன அவர்கள் செய்ய நினைத்ததை சாதித்துவிட்டார்கள். ஆம் இங்கு தமிழர் நலனுக்காக தொடர்ந்து போராடி வருபவர்களுக்கு இடையே இருக்கும் முரண்களை மேலும் வளர்த்து எடுத்து இருக்கிறார்கள். ராஜபக்சேவின் பேட்டியை ஒரு இந்திய மாநிலத்தின் தொலைகாட்சியில் ஒளிபரப்ப வேண்டிய அவசியம் என்ன என்று பார்க்காமல். அந்த பேட்டியின் கீழான விவாதத்தில் தமிழர் நலனை பற்றி பேசும் ஒரு கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் கலந்து கொள்கிறார், அதே சமயத்தில் மற்ற கட்சிகள் இயக்கங்கள் என்று அனைவரும் ஒரணியில் ராஜபக்சேவின் பேட்டியை ஒளிபரப்பாதே என்ற கோரிக்கை வைக்கும் பொழுது இவர் சென்று அந்த பேட்டியின் கிழான விவாதத்தில் கலந்து கொள்கிறார், இது என்ன மாதிரி டிசைன் என்று தெரியவில்லை.

முதலில் இராஜபக்சேவின் பேட்டியின் கீழான வாதமாக ராஜபக்சே கூறியவைகளின் அடிப்படையில் அவர் தமிழர்களுக்கு எதிரானவர் இல்லை என்பதை நம்ப முடியுமா என்பது தான் அதற்கான நேரிடையான பதில் இராஜபக்சேவோ அல்லது வேறு யாராக இருந்தாலும் இலங்கையின் எத்தேச்சதிகார இனவெறி கொண்ட அரசியல்சாசனச் சட்டம் இருக்கும் வரை எந்த சிங்கள பேரினவாதத்தின் தலைமையையும் நம்ப இயலாது. இது தந்தை செல்வா பண்டாரநாயக ஒப்பந்தத்தில் இருந்து ஜெயவர்த்தனா ராஜிவ் ஒப்பந்தம் மட்டும் அல்ல, நார்வேயின் தலையீட்டின் கீழ் கொண்டு வரப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் வரை எல்லா இடத்திலும் அனைத்து காலத்திலும் சிங்கள பேரினவாத அரசியல் சாசனச் சட்டம் தமிழர்களுக்கான அடிப்படை உரிமைகளை பறிப்பதில் தான் இருந்திருக்கிறதே ஒழிய என்றும் ஒரு மனிதாபிமான அடிப்படையிலான அரசியலமைப்பாக தன்னை கட்டமைத்துக் கொள்ளவில்லை. இத்தகைய நிலையில் இலங்கையின் அதிபராக நெல்சன் மண்டேலாவை அமர வைத்தால் கூட தமிழர்களுக்கான தீர்வாக அவர் ஒரு சிறு துறும்பைக் கூட கிள்ளி போட முடியாது, எனவே இலங்கையின் இனவெறி அரசியல் சாசனத்தை திருத்தாமல் வெறும் வாய்வார்த்தைகள் யார் சொன்னாலும் நம்ப இயலாது. 

அடுத்து ராஜபக்சேவின் பேட்டி எதற்காக எடுக்கப்பட்டது அது ஏன் இப்பொழுது என்று ஆராய்ந்தால் அனைத்தும் விளங்கும். இலங்கை தேர்தல் பிரசார நோக்கமா இது இல்லை... இலங்கை தேர்தல் பிரசாரத்திற்கு இலங்கையில் தான் ராஜபக்சே பேட்டி கொடுக்க வேண்டும் ஏன் தமிழகத்தில் இருக்கும் ஒரு தொலைகாட்சிக்கு பேட்டி, இலங்கையில் தொலைகாட்சி நிலையங்களே இல்லையா என்ன? மிக நேர்த்தியாக இந்திய வெளியுறவு துறையும் சிங்கள பேரினவாதமும் தன் காயை நகர்ந்தியுள்ளது. சரி ராஜபக்சேவின் பேட்டியின் கீழான விவாதம் எனும் பொழுது, ராஜபக்சே என்ன சொன்னாரோ அதன் கீழான விவாதமாக இருந்து இருக்க வேண்டும். ராஜ பக்சே போருக்கு பின்னான அபிவிருத்தி திட்டங்களை பற்றி பேசினார், மேலும் சில இடங்களில் திட்டங்களை செயல்படுத்த முடியாமல் இருப்பதாகவும் கூறினார். ஆனால் இதை குறித்த விவாதமாக இல்லாமல் இங்கே வேறு கருத்தாக்கங்கள் வைக்கப்பட்டது. அதில் முக்கியமானவை..

இந்திய தமிழ் மீனவர்கள் மீதான தாக்குதல், இலங்கை தமிழ் மீனவர்களே செய்கிறார்கள். காரணம் மன்னர் வளைகுடா வரை சென்று தமிழ் மீனவர்கள் மீன் பிடிக்கிறார்கள். இலங்கை இராணுவம் தாக்குவது இல்லை என்ற அடுத்த கட்டுக் கதையை அவிழ்த்துவிட ஆரம்பித்துள்ளார்கள். 

அடுத்து மலையகத் தமிழர்கள் இலங்கை அரசின் கீழ் தான் இருக்க விரும்புகிறார்கள், அவர்கள் என்றும் வடகிழக்கு தமிழர்களால் பாதுக்காக்கப் படவில்லை என்பது போன்ற வாதமாக இலங்கையின் மத்திய மாகணத்தின் முதலமைச்சராக இருக்கும் ராமசாமி அவர்களின் வாதம்.

கடைசியாக இலங்கை வாழ் தமிழர் ஒருவர் விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு தீவிரவாத இயக்கம் என்று தமிழக ஊடகத்தின் மூலமாக சொல்லி சென்று இருக்கிறார். 

முதலில் பகவான் சிங் சொன்ன இந்திய தமிழ் மீனவர்களை தற்பொழுது தாக்குவது இலங்கை தமிழ் மீனவர்களே, காரணம் இந்திய தமிழ் மீனவர்கள் எல்லை தாண்டி இலங்கை தமிழ் மீனவர்கள் பகுதியான மன்னார் வளைகுடா வரை சென்று மீன் பிடிக்கின்றனர் அதனாலேயே அந்த மீனவர்கள் தாக்குகிறார்கள் என்ற கண்டுபிடிப்பை சொல்லியுள்ளார். இவரிடம் அடிப்படையாக கேட்கப்பட வேண்டிய கேள்வி எத்தனை தாக்குதல்களை பற்றிய தகவல் இருக்கிறது அதில் எத்தனை இலங்கை தமிழ் மீனவர்கள் தாக்கினார்கள், எத்தனை தாக்குதலில் இலங்கை இராணுவம் ஈடுபட்டது என்பதற்கான தெளிவான விவரங்கள் இருக்கா என்பது. மேலும் ஒரு ஊடகவியலாளராக ஏற்கெனவே கொலை செய்யப்பட்ட 543 மீனவர்களுக்கான நீதியை மறந்துவிட்டு அடுத்து என்ன நடக்க வேண்டும் என்பதை மட்டும் எப்படி பேசுகிறீர்கள். செத்து போன 543 மீனவர்களுக்கான நீதியைப் பெற்று தரவேண்டியது ஊடகவியலாளரான உங்கள் கடமை இல்லையா. வருங்காலத்தை பற்றி மட்டும் பேசிவிட்டு கடந்தகால கொடூரங்களை எந்த சட்ட நியாயத்தின் அடிப்படையில் மறைக்கிறீர்கள்.

மேலும் இரண்டு நாட்டு மீனவர்களின் பேச்சுவார்த்தை கடைசியாக எப்பொழுது நடந்தது அதில் காலையில் இரு நிபந்தனை மதியம் ஒரு நிபந்தனை என்று மாற்றி மாற்றி பேசி, இலங்கை அரசு அந்த பேச்சுவார்த்தையை சீர்குலைத்தது ஒரு ஊடகவியலாளராக உங்களுக்கு தெரியுமா தெரியாதா. இதையெல்லாம் மறைத்துவிட்டு ஒட்டுமொத்தமாக தங்கள் உயிரை பணயம் வைத்து மீன் பிடித்து வந்து இங்கு பலரின் வயிற்றுக்கு சோறு போடுபவர்கள் மீது எந்த அடிப்படையின் கீழ் எல்லை தாண்டுகிறார்கள் என்று குற்றச்சாட்டை வைக்கிறீர்கள். உங்கள் இந்திய பாசத்தின் கீழாக இங்கு இருக்கும் தமிழ் மீனவர்களை சண்டையிடுவது போல் பிம்பந்தத்தை உருவாக்க முயல்கிறீர்கள், 1983 வரை பெண் கொடுத்து பெண் எடுத்தவர்கள் இலங்கை வாழ் ஈழ மீனவர்களும் தமிழக மீனவர்களும்,  கணவனும் மனைவியும் 1983க்கு பிறகு கச்சத்தீவு திருவிழாவில் சந்தித்து கர்ப்பம் ஆன கதைகள் எல்லாம் உண்டு, இதைப் பற்றி உங்கள் செய்தியாளர்களை வைத்து ஒரு முழுமையான செய்திக் கட்டுரையை எழுத முடியுமா தங்களால். 1968ல் அண்ணா இறந்த செய்தியை ஈழத் தமிழ் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டு இருந்த தமிழக மீனவர்களுக்கு சொல்லித் தான் தெரியும். இப்படி அமைதியாக தங்கள் இருவருக்கும் சொந்தமான கடலை அவர்களுக்கு உபயோகித்துக் கொள்ளத் தெரியும் நீங்களும் உங்கள் அரைவேக்காட்டு அரசியல் பார்வைகளும் விலகி நின்றால் அவர்களின் சொத்தை அவர்கள் பாதுகாத்துக் கொள்வார்கள். 

ராமசாமி அவர்கள் போகிற போக்கில் மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிக்கப்பட்ட பொழுது திரு. தொண்டைமான் அவர்கள் மட்டும் தான் எதிர்த்தார் அப்பொழுது இருந்து வடகிழக்கு தமிழர் தலைவர்கள் யாரும் மலையகத் தமிழர்களுக்கு உதவவில்லை என்று கூறினார். 1952ம் ஆண்டு பாராளுமன்றத்தில் மலையகத் தமிழர்களின் வாக்களிக்கும் உரிமை பறிக்கப்பட்ட பொழுது அப்பொழுது தமிழ் காங்கிரஸ் தலைவராக இருந்த பொன்னம்பலத்தின் கட்சியில் இருந்த தந்தை செல்வநாயகம் பாராளுமன்றத்திலேயே தனது எதிர்ப்பை பதிவு செய்தார். மேலும் அந்த சட்டத்தை ஆதரித்த பொன்னம்பலம் கட்சியைவிட்டு விலகி தமிழரசு கட்சியை ஆரம்பித்து இலங்கை வாழ் தமிழர் நலன் காக்க அறவழிப் போராட்டங்களை முன்னெடுத்தார், இதை எல்லாம் மறந்துவிட்டு வடகிழக்கு மாகாணத் தமிழர்கள் மீது எப்படிக் குற்றச்சாட்டை வைக்கிறீர்கள்.

மேலும் 1950களில் இடம்பெயர்ந்த மலையகத் தமிழர்களுக்கு வடக்கு கிழக்கில் இடம் கொடுத்து அவர்களை தங்களில் ஒருவராக மதித்த வடக்கு கிழக்கு மக்கள் மீது எப்படி உங்களால் அபாண்டமான குற்றச்சாட்டை வைக்க முடிகிறது. மத்திய மாகணத்தில் இருந்து புலம்பெயர்ந்து வந்த மலையக மக்களும் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து தங்களின் சுதந்திரத்திற்காக போராடியது தங்களுக்கு தெரியாதா என்ன.

இதைவிட அதி முக்கியமானது வடக்கு கிழக்கு தலைவர்கள் இலங்கையின் மத்திய மாகணத்தில் வாழும் சிறுபான்மை தமிழர்களான உங்களின் நலனின் அக்கறை கொள்ளவில்லை என்று கூறுவது, உங்களை ராஜபக்சேவின் ஆகச் சிறந்த ஜால்ரா விற்பன்னராகவே காட்டுகிறது. தமிழீழ சுதந்திர போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திய ”வட்டுக்கோடைத் தீர்மானம் - 1976” இல் நாலாவது சரத்தாக கீழ் வரும் தீர்மானம் இருக்கிறது 

“(ஈ). தமிழ் அரச மொழியாக இருக்க வேண்டும். எனினும் தமிழ் ஈழத்தில் சிங்களம் பேசுகின்ற சிறுபான்மைகள் அவர்களின் மொழியில் கல்வியையும் அலுவல்களையும் தொடர்வதற்கான உரிமைகள் சிங்கள அரசிலுள்ள தமிழ்பேசும் சிறுபான்மைகள் பாதுக்காக்கப்படும் சரி எதிரீடான அடிப்படையில் பாதுகாப்படவேண்டும். ”

ஆதாவது சுதந்திர தமிழீழத்தில் வாழப்போகும் சிங்களவர்களின் உரிமைகள் சிங்கள தேசத்தில் வாழும் தமிழ் சிறுபான்மையினரை எவ்வாறு சிங்கள அரசு நடத்துகிறதோ அதற்கு நேர் எதிரீடான அடிப்படையில் பாதுக்காக்கப்பட வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். வடக்கு கிழக்கு மக்கள் உங்களின் உரிமைகளை நலன்களை பேணுவதிலும் அக்கறை கொண்டிருந்தே வருகின்றனர். ஆனால் அதையெல்லாம் உங்களின் அரசியல் அபிலாசைகளுக்காக மறந்துவிட்டு வயிற்றுப் பிழைப்பிற்காக ராஜபக்சேவிற்கு பக்கவாத்தியமாக இருக்கிறீர்கள், தமிழர்களுக்கு ஜால்ரா சத்தங்களை சுரம் பிரித்து அறிந்து கொள்ளும் சங்கீத ஞானம் உண்டு..

ஒட்டுமொத்தத்தில் இந்த பேட்டி என்பது இந்திய மத்திய அரசாலும் இலங்கை இனவெறி அரசாலும் தமிழர்களை கூறு போடும் திட்டமே, தமிழக மீனவர்கள், ஈழத்து மீனவர்கள் என்று பிரித்து அவர்களுக்கிடையேயான சிறு முரண்களை பெரும் பிரச்சனைகளாக உருவகப்படுத்துவதும், மலையகத் தமிழர்கள் ஈழத் தமிழர்கள் முரண்களை பெரிது படுத்தி காட்டி தமிழகத்தில் எழுந்திருக்கும் ஈழத்தமிழர்கள் மீதான அனுதாபத்தை குழப்பி அந்த குழம்பிய குட்டையில் தங்களின் அரசியல் லாபக் கணக்கை எழுதும் முயற்சியே.. 

Monday, July 28, 2014

ப்ரோ கபடி லீக்கும் தமிழ் நாட்டின் மானமும்



தமிழ்ஸ் நவ் இணையத்தில் வெளியான கட்டுரை 
http://tamilsnow.com/?p=19259


இந்தியன் பீரிமியர் லீக் என்று கிரிக்கெட் விளையாட ஆரம்பித்த பிறகு ஹாக்கியிலும் அதே போன்று ஒரு வர்த்தகப்பூர்வமான ஒரு போட்டி ஆரம்பிக்கப்பட்டது. விளையாட்டில் வர்த்தகங்களை நுழைப்பது என்பது சரியா தவறா என்பதை விட இந்தியா போன்ற நாடுகளில், இப்படி வர்த்தக நிறுவனங்கள் நுழைவதால் விளையாட்டு வீரர்கள் மூன்று வேளை கஞ்சியாவது நிம்மதியாக குடிக்க வழிவகை ஏற்படும் வாய்ப்பை வழங்குகிறது. தேசிய அளவில் சாதனை புரிந்த விளையாட்டு வீரராக இருந்தாலும் சரி, சர்வதேச அரங்கில் பதக்கங்கள் வாங்கிய வீரர்களாக இருந்தாலும் சரி, அவர்களின் வாழ்வாதரம் என்பது விளையாட்டு வீரனாக இருந்தாலே போதும் என்ற நிலை கிரிக்கெட்டை தவிர இந்தியாவில் வேறு எந்த விளையாட்டிலும் கிடையாது. அத்தகைய நிலையில் விளையாட்டு போட்டிகளிலும் வர்த்தக நிறுவனங்கள் நுழைவது வரவேற்கத் தக்கதே. கிரிக்கெட், ஹாக்கி பீரிமியர் லீக் வரிசையில் கபடியும் நுழைந்துள்ளது. 

கபடிக்கு புரோ கபடி லீக் ஆரம்பிக்கப்பட்டு ஜூலை 26ம் தேதி முதல் ஆக்ஸ்ட் 31ம் தேதி வரை ஒரு பெரும் திருவிழாவாக நடத்தப்பட்டு வருகிறது. கபடி என்பது உலக அளவில் சில நாடுகளே விளையாண்டாலும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இடம் பெற்ற விளையாட்டு, மேலும் கபடிக் கென்று தனியாக உலக கோப்பையும் இருக்கிறது, இந்த உலக கோப்பையை 2004லிருந்து 2013 வரை நடந்த ஆறு உலக கோப்பையையும் இந்தியாவே கைப்பற்றியுள்ளது. இவைகளில் தமிழக வீரர்களின் பங்களிப்பும் ஒரளவாது இருந்தே வருகிறது, 39 வயது சேரலாதன் மிகச்சிறந்த தற்காப்பு கள ஆட்டக்காரராக இந்திய அணியில் பல்லாண்டுகளாக ஆடிவருகிறார். 

கபடி என்பது தமிழர்கள் விளையாட்டு என்பதை உலகமே ஒத்துக் கொண்ட ஒரு விளையாட்டு, கை பிடி என்பதே கபடியாக மாறியது என்பதாக வரலாறு சொல்கிறது, இதை நாம் சடுகுடு என்ற பெயரிலும் நாட்டுப்புற பாடல் வரிகளுடன் விளையாடி வந்த விளையாட்டு. ஏன் இன்று வரை தமிழக அரசின் அங்கீகரிப்பட்ட தமிழகத்தின் விளையாட்டாக இருப்பது கபடி தான். (நம்மை தவிர பங்களாதேஷ் தனது தேசிய விளையாட்டாக அங்கீகரித்துள்ளது) இப்படி தமிழக அரசின் விளையாட்டாக இருக்கும் கபடி இந்த புரோ கபடி லீக்கில் தமிழகத்தில் இருந்து குறைந்த பட்சம் 4 அணிகளாவது பங்கேற்று இருக்க வேண்டும் ஆம், ஊர்களுக்கு இடையிலான போட்டியிலிருந்து அனைத்து மட்டங்களிலும் கபடிப் போட்டிகள் கோயில் திருவிழா, பொங்கல் விழா என்று எங்கும் நிறைந்தே இருக்கும் கபடிப் போட்டிகள். இபப்டி அனைத்து பகுதியிலும் விளையாண்டு வரும் நமது தமிழகத்தில் இருந்து ஒரு அணி கூட இந்த ப்ரோ கபடி லீக்கில் இல்லை. 


காரணம் அணியை வாங்குவதற்கோ இல்லை அணி ஒன்றை நிறுவுவவோ எந்த நிறுவனமும் தயார் இல்லை என்று சொல்லலாம் ஆனால் நாமே இப்படி ஒரு போட்டி நடப்பதை அறியாதவர்களாகத் தான் இருக்கிறோம், இந்திய கபடி கழகத்தில் அனைத்து மாநிலங்களும் பங்கு பெற்றுள்ளன. இதில் இந்தியன் ப்ரீமியர் லீக் போன்று அணிகள் ஏலம் விடப்பட்டிருக்கின்றன. எட்டு அணிகள் ஏலம் எடுக்கப்பட்டுள்ளது, பெங்கால் வாரியர்ஸ்,  பூனேரி பல்தான், யு மும்பா, தபங்க் டில்லி, பெங்களூர் புள்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரைட்ஸ், தெலுங்கு டைட்டான்ஸ் இதில் பூனே அணியை அபிசேக் பச்சன் வாங்கியிருக்கிறார். அதிக பட்ச ஏலத்தொகையாக 12,80,000 ரூபாய்க்கும் குறைந்த பட்ச ஏலத்தொகையாக 9,10,000 ரூபாய்க்கும் அணிகள் ஏலம் விடப்பட்டுள்ளன, தமிழ்நாட்டில் இருந்து ஒருவரு கூட இந்த தொகையை முதலீடு செய்யும் அளவிற்கு இல்லையா என்ன.

நடிகர்களுக்கு இடையே நடக்கும் ட்வெண்டி ட்வெண்டி கிரிக்கெட் போட்டி எந்த விதமான விளையட்டு மேம்பாட்டையும் கொடுக்காத வெறும் விளம்பரமாகவும், பொழுது போக்கிற்காகவும் நடக்கும் இந்த போட்டியின் சென்னை அணியை வாங்கிய ராதிகா சரத் குமார் போன்றவர்களுக்கு இந்த 12 லட்சம் பெரிய தொகையா என்ன. தமிழ் நாட்டி மானத்தை கட்டி காப்போம் அதைச் செய்வோம் இதைச் செய்வோம் என்று பேசுபவர்கள் இங்கு பலர் உண்டு ஆனால் இப்படி ஒரு போட்டி அதை முதலில் முன்னெடுத்து இருக்க வேண்டியவர்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர் அதுவும் ஒரு முக்கியமான விளையாட்டு தொலைக்காட்சியான ஸ்டார் ஸ்போர்ட்ஸ் இதற்கு விளம்பரதாராகவும் நேரடி ஒளிபரப்பும் செய்கிறது இத்தகைய ஒரு போட்டி அதுவும் தமிழர்களின் விளையாட்டை நடத்த தமிழ்நாட்டில் இருந்து ஒருவரும் தயார் இல்லை. அதாவது பரவாயில்லை தமிழ் நாட்டில் இருந்து ஒரு அணி கூட கிடையாது.
தமிழ் நாடு கபடி கழகத்திற்கு தொடர்பு கொண்டு கேட்கலாம் என்றால் இரண்டு நபர்களின் பெயரும் எண்ணும் இணையத்தில் இருக்கிறது ப்ரெசிடெண்டாக திரு. சோலை எம். ராஜா மதுரையை சேர்ந்தவரும், செகரட்டரியாக திரு, சைபுல்லா, திருப்பூரை சேர்ந்தவரையும் குறிப்பிட்டுள்ளார்கள் அவர்கள் எண்களை தொடர்பு கொண்டால் ஒரு நம்பரில் அப்படிப்பட்ட பெயரில் இங்கு யாருமே இல்லை என்கிறார். அடுத்த எண் உபயோகத்தில் இல்லை என்று வருகிறது. இதில் பிரசிடண்டாக இருக்கும் சோலை எம் ராஜா அனைவரும் அறிந்தவரே ஒரு காலத்தில் மதுரை மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற தலைவராக இருந்தவர், இவரது தந்தை மதுரை காவல் துறையில் துணை ஆணையளாராக ப்ணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர்கள் குடும்பத்தின் அடிதடி கட்டப்பஞ்சாயத்து சாம்ராஜ்யம் மதுரை மாவட்டம் அறிந்ததே ராஜா அவர்களின் தம்பி ரவியும் தந்தை சோலை முத்தையாவும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டவர்கள், ரவியின் மீது பல நூற்றுக் கணக்கான கொலை மற்றும் அடிதடி வழக்குகள் உள்ளது. ராஜாவின் மீதும் பல வழக்குகள் உண்டு. இவர் தான் தமிழ் நாடு கபடி கழகத்தின் தலைவராக இருக்கிறார்.


இங்கு கபடி கழகம் மட்டும் தவறு செய்யவில்லை நாம் அனைவருமே தவறு செய்துள்ளோம், தமிழ்நாட்டின் விளையாட்டை அடுத்தவருக்கு விட்டுக் கொடுத்துக் கொண்டு இருக்கிறோம், இன்னும் பத்து வருடத்தில் இல்லை இந்திய கபடி கழகத்தில் கபடி வரலாறு என்று பழங்காலத்தில் இருந்து இந்தியா முழுவதும் அனைவரும் விளையாடிய விளையாட்டாக சித்தரித்துள்ளனர். இந்தியா என்ற நாடே 1800களில் தான் உருவானது என்ற வரலாற்றையே மறைத்துவிட்டு. தமிழர் விளையாட்டாக இது எங்கும் அகில இந்திய கபடி கழகத்தின் இணையத்தில் எங்குமே குறிப்பிட படவில்லை. நமது அடுத்த தலைமுறை கபடி என்ற விளையாட்டை எதோ வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட விளையாட்டாக பார்க்க போகிறது என்பது என்னவோ நிதர்சனமாகத் தெரிகிறது.

Thursday, July 24, 2014

பச்சைமுத்துவின் துரோகம்.. புலிப்பார்வையில்..




திருவாளர் பிரவீன் காந்தி என்ன நினைத்து இப்படிப் பட்ட காட்சிகளை வைத்தார் என்பது தெரியவில்லை. இதில் தோழர் சீமானிடம் கதையை சொல்லி அனுமதி வாங்கினேன் என்றும் ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார், அப்படி வாங்கியிருக்கலாம் ஆனால் அவருக்கு இத்தகைய காட்சிகள் இருப்பது தெரியுமா என்று தெரியவில்லை. இன்னொரு பேட்டியில் இலங்கை தூதரகத்திடம் அனுமதி வாங்கினேன் என்கிறார் அதை தொடர்பு கொண்டு கேட்டால் கண் துடைப்புக்காக என்கிறார்.. இந்த அரசியல் பெரும் அரசியல் இதை கடைசியில் பார்க்கலாம்...

முதலில் பாலச்சந்திரனை கைது செய்யும் பொழுது ஈழ இராணுவ உடையில் இருப்பது போல் சித்தரித்துள்ளனர். ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச அரங்கில் தமிழ் சமூகம் வைத்துக் கொண்டிருக்கும் பொழுது. சிங்கள இனவாத அரசு பாலச்சந்திரன் Cross Fireல் அதாவது சண்டை நடக்கும் பகுதியில் குறுக்கே வந்ததால் இறந்திருக்கலாம் என்று சொல்லி வருகிறது. அதையும் தாண்டி இங்கு சிங்கள இனவாத அரசுக்கு உதவும் வகையில் பாலச்சந்திரனை ஒரு புலிகள் இராணுவத்தின் போராளியாகவும் சித்தரித்து உள்ளார். இதைத் தான் சுப்பிரமணியன் சுவாமி பாலச்சந்திரன் புகைப்படம் வெளிவந்து மாணவர் போராட்டம் நடந்த பொழுது சொன்னான் “பாலச்சந்திரனும் புலிகள் இயக்கத்தின் ஒரு போராளிஅவன் ஒன்றும் சாதரண பாலகன் இல்லை புலிகள் இயக்க உறுப்பினர் என்று.  இனி இனவாத சிங்கள அரசு சொல்லும் கைது செய்து வைத்திருந்த ஒரு புலிகள் இராணுவ உறுப்பினரான பாலச்சந்திரன் தப்பிச் செல்ல முயன்றதால் சுட்டுக் கொன்றோம் என்று அடுத்தக்கட்ட புளுகுமூட்டையை அவிழ்த்துவிட வழிவகை செய்கிறீரார் போல் தெரிகிறது. இல்லை சிங்கள தூதரகத்தில் இவர் சென்று கதை சொன்ன பொழுது இப்படி காட்சி அமையுங்கள் எங்களுக்கும் வசதியாக இருக்கும் என்று சொல்லி அதன் படி செய்திருக்கிறாரோ என்று எண்ண தோன்றுகிறது.

இது வரை பாலச்சந்திரன் படங்கள் பல இணையத்தில் இருக்கின்றன ஆனால் அதில் எதாவது ஒரு பட்த்திலாவது அவன் தமிழீழ தேசிய இராணுவத்தின் உடையுடன் இருப்பதை ஆதாரமாக காட்ட முடியுமா. ஒரு இராணுவத்திலோ அல்லது காவல்துறையிலோ ஏன் எந்த ஒரு சீருடை பணியில் இருக்கும் ஒருவரின் குழந்தை தனது தந்தை தாய் போல் ஆடை அணிந்துகொள்ள விரும்புவது இயற்கை அதைப் போன்று நீங்கள் காட்சியை வ்டிவமைத்தது போல் தெரியவில்லை, சிங்கள பேரினவாத அரசுக்கு மிகவும் உதவிகரமாக கை கொடுப்பது போல் சிறுவர் போராளிகள் என்ற குற்றச்சாட்டை மறுபடியும் நிறுவ உதவுவது போலவே உங்கள் காட்சி அமைப்புகள் உள்ளன, அதுவும் பல சிறுவர்களின் நடுவே அனைவரும் ஆயுதங்களுடன் இருப்பதைப் போன்ற உங்களது காட்சி அமைப்பு.


மேலும் 2009ம் ஆண்டு கடைசியாக தமிழீழ தேசிய இராணுவத்தின் பாதுகாப்பின் கீழ் இருந்த ஈழ தேசியத்தில் இருந்து வெளியேறிய அமைப்பு ஐ.நாவின் குழந்தைகள் நல அமைப்பு UNICEF. இந்த அமைப்புடன் இணைந்து புலிகள் பல உடன்பாடுகளை செய்து கொண்டு சிறுவர்களின் மறுவாழ்வுக்காகவும், மற்றும் அவர்களின் படிப்பு முதற்கொண்டு வாழ்க்கை முன்னேற்றத்திற்காக செய்த பல காரியங்கள் இருக்கின்றன, ஏன் செஞ்சோலை, காந்தரூபன் போன்ற சிறு குழந்தைகளுக்கான இல்லங்களைப் பற்றி எங்குமே பேசப்படுவதில்லை. ஏன் செஞ்சோலை படுகொலைகளும் தமிழ் சமூகத்தின் நினைவில் இருந்து அகற்ற விரும்புகிற நோக்கத்தில்இங்கு திருவாளர். ப்ரவீன் காந்தி திரும்பவும் சிங்கள பேரினவாத இராணுவத்திற்கு உதவ தனது காட்சி அமைப்புகளில் மிகவும் மெனக்கெட்டு நாம் எல்லாம் பெருமை கொள்வது போல் இருக்க செய்து, அதாவது வீர வசனங்களையும் வீரதீர செயல்கள் கயிறு ஏறுவது, மேலிருந்து குதிப்பது என்று பல செயல்களை நம் முன் நிறுத்திவிட்டு, அதில் இருக்கும் வீரத்தை ரசிக்கும் நேரத்தில் சிறுவர் போராளிகள் என்ற இல்லாத கட்டமைப்பை நம் கண்ணுக்கு முன் கொண்டு வந்து நிறுத்த முயல்வது போலவே தெரிகிறது. 

மேலும் தமிழீழ அரசங்காத்தின் காலகட்டத்தில் அன்பு பிள்ளை பாலச்சந்திரன் தனது பள்ளிப்படிப்பை தொடர்ந்து கொண்டிருந்தான் அவன் தனது பள்ளிக்கூட சீரூடையுடன் இருப்பது போன்ற காட்சிகள் இருப்பதாக தெரியவில்லை. இவரது விளம்பரப்படத்தில், ஒரு வேளை முழு படத்தில் எங்காவது வரலாம் ஆனால் அதை ஒரு சிறு துளியை இவரது ட்ரைலரிலும் காட்டியிருக்கலாம் ட்ரைலர் முழுவதுமே ஒன்று சீருடையில் இருப்பது போலவும் இல்லாவிடில் கடைசியில் பாலச்சந்திரன் இறந்த உடலில் இருக்கும் உடையுடன்  பாலச்சந்திரனாக நடித்த சிறுவன் இந்த இரண்டு உடைகளை மட்டுமே அணிந்திருந்தாக மட்டுமே காட்டி இருக்கிறார்.   

ஒரு படம் அதுவும் நடந்த சம்பவத்தை ஒட்டி சித்தரிக்கப்படும் பொழுது அதன் கூறுகள் சிறிதாவது நடந்த சம்பவத்தை மக்களுக்கு எடுத்துச் சொல்வதாக அமையவேண்டும். அதைவிடுத்து சித்தரிப்பு என்ற பெயரில் அதுவும் நமக்கு ஆதரவாக என்ற நிலையில் இருந்தால் கூட அது தவறானதாகவே முடியும். மேலும் இன்றைய காலகட்டத்தில் அதுவும் சர்வதேச நாடுகளின் முன்பு நாம் நமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கான நியாயத்தை கேட்டுக்கொண்டிருக்கும் நிலையில் பொதுமக்களின் மனநிலையில் தாக்கத்தை ஏற்படுத்திய ஏற்படுத்திக் கொண்டிருக்கும் ஓர் நிகழ்வு பாலச்சந்திரனின் மரணம் இதை ஒட்டிய கதையை பின்ணனியாக வைத்து ஒருபடம் எடுக்கப்படும் பொழுது பாலச்சந்திரனின் மரணத்திற்கு முழுப் பொறுப்பு ஏற்கவேண்டிய இந்தியாவை, நாம் விரும்புகிறோம் என்று தனது படத்தின் இடைச்சொறுகலாக வைத்துவிட்டு பிராபகரன் ஈழத்திற்காக இந்தியா பேச வேண்டும் என்று என்றோ விரும்பியதை இன்று கோடிட்டு காட்டுகிறார். அதே போல் இந்தியாவில் ஈழ விடுதலை போராட்ட இயக்கங்களுக்கு பயிற்சி கொடுத்த பொழுது சென்னை பெசண்ட் நகரில் அனிதா பிரதாப் அவர்கள் எடுத்த பேட்டியில் இன்று பயிற்சி கொடுக்கும் இந்தியாவிற்கு எதிராக ஆயுதம் ஏந்த வேண்டிய நிலை எங்களுக்கு ஏற்படும் என்று சொன்னதையோ அதன்பிறகு இந்திய அமைதிப் படையுடன் சண்டையிட்டதையோ அவருடன் பேசிய தோழர்களிடம் எடுத்துக்காட்டி பேசியதாக தெரியவில்லை.. 

இதையெல்லாம் தாண்டி இந்த படத்தின் ஒரு படலை எழுதியவர், இந்த படத்தை வேந்தர் மூவிஸ் என்ற பெயரில் தயாரித்த பச்சை முத்து ஈழ விடுதலையை ஒரே ஒருவர் தான் கேட்டார் அவருக்காக 1,50,000 லடசம் பேர் செத்தார்கள் என்று 2014 தேர்தல் நேரத்தில் பத்திரிக்கை பேட்டியில் சொன்னார். இதே பாரி வேந்தரிடம் நாம் கேட்க வேண்டிய கேள்விகள் பல உள்ளன தமிழர் மீட்சிக்காக கட்சி நட்த்துகிறேன் என்று சொல்கிறார் தமிழ் நாட்டில் இருக்கும் அத்தனை தமிழனும் வந்து இவர் கட்சி ஆரம்பிக்க தவம் இருந்தானா என்ன என்று.. இவர் தூக்கி பிடிக்கும் இந்திய தேசிய விடுதலைக்காக இந்தியாவில் இருக்கும் அனைவரும் போராடி சிறை சென்றானா என்ன என்று எல்லாம்.. ஆனால் ஈழ விடுதலைப் போராட்ட்த்தை கொச்சைப் படுத்தி பேசிய அதுவும் தேசியத்தலைவரை சர்வதேச நாடுகள் மக்களை கேடயமாக பயன்படுத்தினார்கள் என்று வைத்த குற்றச்சாட்டை வழிமொழியும் இந்த பச்சைமுத்து தயாரிக்கும் படம் நமக்கு ஆதரவாக இருக்கும் என்று நம்ப நாம் என்ன முட்டாளா... 

பச்சைமுத்துவின் ஊடக பேட்டி... ஈழத்தைப் பற்றி...

https://www.youtube.com/watch?v=-lC4FvzpFDk

Thursday, July 10, 2014

மா.பொ.சியும் ஈழத் தமிழர்களும்


தமிழ் தமிழர் தமிழ்நாடு என்றாலே பல பிரச்சனைகள் முன்வைக்கப்படுகிறது, அதுவும் திராவிட எதையும் தமிழருக்காக சாதிக்கவில்லை என்று இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் பொழுது தார் கொண்டு இந்தி எழுத்துகளை அழித்தால் பின்னாலேயே மண்ணெண்ணெய்யுடன் சென்று தாரை சுத்தம் செய்து இந்தியை வெளிக்கொணர்ந்த மா.பொ.சியை தமிழ் தேசிய அடையாளமாக முன்னிருத்துகிறார்கள் நவீன தமிழ்தேசியவாதிகள். தனது கொள்கையாக மா.பொ.சி சொன்னது.. 


உரிமைக்கு எல்லை வேங்கடம்
உறவுக்கு எல்லை இமயம்
நட்புக்கு எல்லை உலகம்

என்று முழங்கினார். இப்படி இந்திய தேசியத்தின் கீழ் தான் தமிழ்நாட்டின் விடிவைத் தேடினார் இப்படி இந்திய தேசியத்தின் கீழ் விடிவு தேடியவர்களே இங்கு தமிழ் தேசியத்தின் மண்ணுரிமை போராளியாகவும், தமிழ்தேசியத்தின் வழிகாட்டியாகவும் முன்னிறுத்தப்படுகிறார்கள்.
மா.பொ.சி ஒரு விடுதலை போராட்ட காலத் தலைவர் அவரின் இந்தியப் பாசம் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் கீழாக ஒருங்கிணைக்கப்பட்டது என்பது நாம் அறிந்ததே. அதனால் எந்த பிரச்சனையும் இல்லை நமக்கு, ஆனால் தமிழர்களுக்கான தீர்வுகளாக அவரின் போராட்டங்கள் என்பது இந்திய தேசியத்தின் கீழாகவே இருந்தது. இன்னும் சொல்லப் போனால் ஈழப் பிரச்சனைகளில் பல வேலைகளை செய்துள்ளார் என்று மார்தட்டுவார்கள். அவரின் ஈழப்பிரச்சனையின் பார்வை எனபது தனி ஈழத்தை ஆதரிக்கிறீர்களா என்று கேட்டால் ”அது சிங்களவர்களின் செயல்பாட்டை பொறுத்து இருக்கிறது ஈழத் தமிழ்மக்களின் விருப்பம் நான் அன்னியன் என்னால் எதுவும் சொல்ல இயலாது” என்றே கூறுவார். அதாவது இன்றைய காங்கிரஸும் பிஜேபியும் மத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும் ஈழம் என்பது அந்நிய நாட்டு பிரச்சனை அதில் நாங்கள் எப்படி தலையிடுவது என்று கைகழுவும் பழக்கத்தை முன்மாதிரியாக நின்று சொல்லிக் கொடுத்தவர் மா.பொ.சி தான். 

இது மட்டுமல்ல ஈழ போராட்ட இயக்கங்கள் அனைவரும் இந்தியா சொன்னதைச் செய்ய வேண்டும் என்ற ஊதுகுழலாக செயல்பட்டவர் தான் மா.பொ.சி. ராஜிவ் ஜெயவர்தனே ஒப்பந்தம் ஏற்பட்டபொழுது இந்திய அரசும் அமைச்சர்களுக்கு கேட்டு கொண்டதற்கிணங்க ஈழப் போராட்ட தலைவர்களுடன் பேசி ஒப்பந்தத்தை ஒத்துக் கொள்ள வேலை பார்த்தவர்களில் மிகவும் முக்கியமானவர் மா.பொ.சி அவர்கள் தான். ஈழத்தைச் சார்ந்த யாருமே இல்லாத ஒப்பந்தத்தை இந்தியாவின் நலனுக்காகவும் சிங்களவரின் நலனுக்காகவும் போடப்பட்டபொழுது அதற்கு பிரசார பிரங்கியாக செயலாற்றியவர் மா.பொ.சி. இந்த ஒப்பந்தத்தை இந்தியாவின் கைப்பாவைகளாக இருந்த பல ஈழ போராட்ட இயக்கங்கள் ஏற்றுக் கொண்டன இந்தியாவின் மீறி எதுவும் செய்ய முடியாது என்ற தங்களின் இயலாமையின் கீழாக. ஈழத் தமிழர் நலனை பிரதிபலிக்காத ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ளாமல் இது எங்களுக்கு தேவை இல்லை என்று சொன்னவர்களே கடைசி வரை போராட்டத்தை காப்பாற்றினர், அன்று இந்தியாவிற்காக வளைந்து கொடுத்து இருந்தால் இன்று ஈழத் தமிழினத்தை நாம் தேட வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கும்.

இப்படி வருங்கால நோக்கம் எதுவும் இல்லாமல் இந்திய அரசின் பிராசார பிரங்கியாக செயல்பட்டவர் மா.பொ.சி அதே காலகட்டத்தில் யாழ்ப்பாண பல்கலையில் இருந்த பேராசிரியர்கள் அனைவரையும் இவருக்கு தெரியும் அவர்கள் அனைவருமே இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ளவியலாது என்றார்கள். ராஜிவ் ஜெயவர்தனா ஒப்பந்தம் ஜூலை 29, 1987 அன்று கை சாத்திடப்பட்டது. ஆனால் ஜுலை 19ம் தேதி யாழ்ப்பாணப் பல்கலையில் நடத்தபப்ட்ட கருத்தரங்கில்

திரு க.சிற்றம்பலம் அவர்கள் பேசியது  “திம்பு பேச்சுவார்த்தையின் போது முன்வைக்கப்பட்ட தமிழர் தாயகம், தமிழர் தேசிய இனம், சுயநிர்ணய உரிமை என்பனவும் அங்கீகரிக்கபப்ட வேண்டும், மலையகத் தமிழர்களுக்கு வாக்குரிமை வழங்க வேண்டும் இதனடிப்படையில் தான் பேச்சுவார்த்தைக்கு போகலாம். இதற்கும் குறைந்த தீர்வுக்கு நாம் பேச்சு வார்த்தைக்கு போகக் கூடாது என்று கூறினார்.  

மு. திருநாவுக்கரசு அவர்கள் பேசியது “சில நியாயங்களை சுட்டி காட்டி போராட்டத்தை அழித்துவிடுவது சரியல்ல, எமக்குள்ளே சில முரண்பாடுகளுக்காக சரணாகதி அடையக் கூடாது. எமது தேசிய இனத்தின் சுயாதீனதிற்கான வாய்ப்புகளை செயலுருப்படுத்த வேண்டும். அதற்காக ஒர் அரசியல் தளம் வளர வேண்டும். அந்த அடித்தளத்தில் சரணாகதியற்ற தீர்வுக்கே நாம் போக வேண்டும்” என்று கூறினார். 



பேராசிரியர் கா.சிவத் தம்பி அவர்கள் பேசியது ”எமது போராட்டத்தின் தன்மை சர்வதேசரீதியில் நியாய முக்கியத்துவம் பெற்றுவரும், முகிழ்விடும் இக்காலகட்டத்தில் இப்படிப்பட்ட இடைக்கால தீர்வுகள் ஆபாத்தானவை, மேலும் இவ்வளவு அழிவுகள், உயிர்சேதங்கள், உடமை இழப்புகள் பின்னரும் நிச்சயமற்ற தீர்வினை விட நாம் தொடர்ந்து அல்லல் படுவதே மேல், எமது துன்பத்தின் மூலமாகவேனும் எதிர்காலச் சந்ததியின் இன்பத்துக்கும் வழி கோலலாம்” முரசொலி (26-7-1987)

இந்த கருத்தரங்கத்தில் மேலும் கலைபீடாதிபதி பேராசிரியர் என். பாலகிருஷ்ணன், கலாநிதி எஸ். கிருஷ்ண ராஜா, கலாநிதி. வ. நித்தியானந்தன், திரு. எஸ். சத்தியசீலன் போன்றவர்களும் கலந்து கொண்டு ஒப்பந்தத்தின் கூறுகள் எந்த தீர்வையும் தரவில்லை என்பதை வலியுறுத்தினர்.

இப்படி ஒரு பல்கலை பேராசிரியர்கள் மற்றும் அங்கிருந்த அறிவியலாளர்கள் என்று அனைவரும் மறுதளித்த ஒப்பந்தத்தினைத் தான் ஈழத் தமிழர்கள் மீது திணிக்க விரும்பினர். இவரைப் போன்றவர்களால் கட்டமைக்கப்பட்ட மாபெரும் ராஜிவ் ஜெயவர்தனே ஒப்பந்தம் ஈழத்தமிழர்கள் மீது திணிக்கப்பட்டது அதற்கு அங்கு போராடிய சில இயக்கங்களும் துணை போனது. புலிகள் இயக்கம் முதலிருந்தே தனது எதிர்ப்பை தெரிவித்தது, இருந்த போதும் ஒப்பந்தம் திணிக்கபப்ட்ட பிறகு நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஒத்துழைப்பு கொடுக்கவும் ஒப்புக்கொண்டது புலிகள் இயக்கம். ஆனால் நிபந்தனைகள் மீறப்பட்டு சிங்கள இராணுவம் செய்த அனைத்து விசயங்களையும் இந்திய இராணுவமும் செய்த பொழுது இந்தியா எனும் பெரிய நாடு என்பதைவிட எம்மக்களின் வலிக்கான தீர்வே முக்கியம் என்று எதிர்த்து நின்று போராடினர் புலிகள் இயக்கம். ஆனால் அன்று இந்த ஒப்பந்தத்தை திணித்த மா.பொ.சியோ கடைசிவரை ஒபந்த்திற்கு வக்காலத்து வாங்கவே செய்தார். 1990ல் பத்மநாபாவிற்காக இரங்கல் கூட்டம் நடந்தபொழுது அதிலும் திரும்பவும் ஒப்பந்தத்தை வலியுறுத்தியே பேசினார் (விடீயோ இணைக்கபப்ட்டுள்ளது)
                                     

சிறு குழந்தைகள் கூட படித்தால் ராஜிவ் ஜெயவர்தனே ஒப்பந்தத்தில் இந்திய நலனும் சிங்களர் நலனும் பேனப்படுவது மட்டுமே இருப்பது தெரியும் ஆனால் அதை தூக்கி பிடித்துக்கொண்டு நின்றவர் தான் மா.பொ.சி, அதுமட்டுமல்லாமல் இந்த ஒப்பந்தத்திற்காக் ஒரு மூவர் அணியாக செயல்பட்டிருக்கிறார் அதில் இருந்த மற்ற இருவர் எழுத்தாளர் ஜெயகாந்தனும் இன்று வரை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாதா  இரட்டை நாக்கு சோமாறி “சோ”. இப்படி சோவுடன் கூட்டணி அமைத்து ஈழத்தமிழர்கள் நலனைப் பற்றி பேசாத ஒரு ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ளாதது புலிகள் இயக்கம் செய்த தவறு என்று பிதற்றி திரிந்தார்.

இத்துடன் நின்றிருந்தால் பரவாயில்லை இன்று வரை முரண்பட்ட இயக்கங்களாக இருந்தாலும் அனைத்து இயக்கங்களும் போராளிகளாகவே ஈழப்போராட்டத்தில் நின்றனர் அதில் புலிகள் இயக்கத்தை புலிப்படை என்று கூறி வேறு முத்திரை வருமாறு பேசியதை இந்த காணொளியில் நன்றாக பார்க்கலாம், இவர்கள் ஒரு 50 பேர் கூட்டத்தில் இப்படி பேசுவதால் நமக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் இன்று இவர் தான் தமிழ்தேசியத்தின் வழிகாட்டி என்பது தான் நகைப்புக்கு இடமளிக்கிறது.

முதலில் தமிழ் தேசியம் என்பதில் சரியான வரையறையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் இவர்கள் அனைவரும், ஒரு பக்கம் விடுதலைப் போராட்ட மாவீரர்களான புலிகள் இயக்கத்தை ஆதரித்துக் கொண்டே மா.பொ.சி போன்றவர்களை மண்ணுரிமை, தமிழ் தேசிய வழிகாட்டி என்று கூறுவது சரியான அரசியலா என்பதை சிந்திக்க வேண்டும் இல்லையென்றால் நாளை சமூகம் இவர்களைப் பார்த்து சிரிப்பா சிரிக்கும். 

Monday, June 30, 2014

With you With out You திரையிடல் நிகழ்வில் நடந்த உண்மைகள்.



நம் தமிழக கிராமங்களில் வீடுகளின் திண்ணையில் ஒரு மண்பானையில் தண்ணீரும் எடுத்து பருக ஒரு டம்ளரும் இருக்கும். யார் வீட்டு கதவை தட்டி தண்ணீர் கேட்டாலும் கொடுப்பார்களே ஏன் இப்படி வெளியில் வைத்திருக்கிறார்கள், இது எதற்காக என்ற கேள்வி சிறு பிள்ளையில் வந்த பொழுது எனது அய்யாவிடம்(தாத்தா) கேட்டேன், அதற்கு அவர் சொன்னார் நம்மை பிடிக்காதவர் நம் வீட்டை கடந்து செல்லும் பொழுது அவருக்கு தாகம் ஏற்பட்டால் வீட்டின் கதவை தட்டிக் கேட்க கூச்சப்படுவார், ஆனால் இப்படி வெளியில் வைத்துவிட்டோம் என்றால் அவரே எடுத்து குடித்துவிட்டு போகலாம், நம் வீட்டை கடக்கும் பொழுது அவர் தாகத்துடனே கடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்படாது என்றார். இப்படி உலகிற்கே விருந்தோம்பலை கற்று கொடுத்த நமக்கு இன்று விருந்தோம்பல் கற்று கொடுக்கப்படுகிறது. ஆம் பிரசன்ன விதகனேவின் திரைப்படம் அதன் பின்னாலான சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது, இன்றைய இந்துவில் விருந்தோம்பலைப் பற்றி நமக்கு வகுப்பு வேறு எடுத்திருக்கிறார்கள். 

பிரசன்ன விதகனேவின் With You With out you பற்றிய மதிப்பீடுகளை விட அந்த படத்தை வைத்து நடத்தப்பட அரசியலே மிகப் பெரும் அளவில் இருக்கிறது. இந்தபிரச்சனையின் ஆரம்பத்தில் இருந்தே இதை பார்த்துக் கொண்டிருந்தவன் என்பதால் இதை பற்றிய தகவல்களை அனைவருக்கும் தெரிய வைக்க வேண்டியதுள்ளது. இந்த படம் PVR திரையரங்குகளில் 17 ஊர்களில் இந்தியா முழுவதும் ஜூன் 20ம் தேதி வெள்ளிக் கிழமை திரையிடப்பட்டது. சென்னையிலும் திரையிடப்பட்டது ஞாயிற்றுக் கிழமை வரை யாரும் இதைப் பற்றி அறிந்திருக்கவில்லை, 

ஆனால் திடீரென்று தமிழ்தேசிய பாசிசவாதிகள் என்று ஒர் அவலக்குரல் பெருங்குரல் எடுத்துக் கூவியது என்ன படம்? ஏது படம்? யார் படம்? என்று யோசித்துக் கொண்டிருக்கும் பொழுதே உடனே வளைத்து வளைத்து பாசிச முத்திரையை குத்தியது அந்த குரல். சரி இயக்குனரை அனுகுவோம் என்ன பிரச்சனை என்று பார்ப்போம் என்ற நிலையில் தான் சரவணன் குமரேசன் இயக்குனரை தொடர்பு கொண்டார் அப்பொழுது தான் திரப்படத்தை திரையிட அருண் என்பவர் முயல்வதாக அறிகிறார். அருணை நான் தொடர்பு கொண்டேன் அப்பொழுது இவர்கள் தனி சென்சார் நடத்துகிறார்கள் என்று அந்த அவலக்குரல் திரும்பவும் கூவியது. இது இவர்கள் நடத்தும் நாடகமாக தெரியக்கூடாது என்று இந்த கூக்குரல் அவ்வளவே இது. சரி திரைப்படத்தை பார்க்க போகலாம் என்று சென்றோம் படம் பார்த்தோம் அங்கு யாரும் யாரையும் அடிக்கவில்லை ஒரு சிறு விவாதம் தான் நடந்தது அதுவும் ஒரு தாந்தோன்றித் தனமாக தான் சொன்னால் அதை வேதவாக்கு என்பது போல் அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று, ஒருவர் தராதரம் இல்லாமல் குதித்ததாலேயே நடந்தது. அதில் முழுமையாக சம்பந்தப்பட்டவன் என்பதால் அதை முழுமையாகவே எழுதுகிறேன், படத்தை குறித்த அனைத்து சர்ச்சைகளிலில் இதுவும் ஒன்று என்பதால் நான் நேரிடையாகவே திரு. ஜெயபாலனை எதிர்த்து திட்டினேன் என்பதால்.

படம் ஆரம்பித்து விளக்குகள் எல்லாம் அனைத்த பிறகு தான் இவர் திரையரங்கிற்குள் வந்தார் அப்பொழுது நானும் சரவணனும் அருகிலேயே அமர்ந்திருந்தோம். அதன் பிறகு படம் முடிந்தது, திரையரங்கில் சிலர் கை தட்டினார்கள் மற்றவர்கள் எல்லாம் அமைதியாக இருந்தனர் அப்பொழுது ஒரு அவலக்குரலுடன் கூக்குரலிட்டு இயக்குனரை பெயர் சொல்லி அழைத்து படம் சூப்பர் சூப்பர் என்று கூவினார் ஜெயபாலன். இதன் அரசியல் காரணம் உணர்ந்தவனாக அதை விமர்சிக்க கடமைப்பட்டுள்ளேன், அதாவது இவர் படம் நன்றாக இருக்கிறது என்று அங்கு வந்திருந்த அனைவரும் முன்னாலும் அங்கீகரிக்கிறாராம் அதன் பிறகு யாரும் பேசத் தேவையில்லை என்பது போல் ஒரே குரலாக கத்தினார். 

அதன் பிறகு இயக்குனருடன் கலந்துரையாடல் தொடங்கியது, அப்பொழுது இயக்குனரிடம் முதலில் ஒருவர் பாராட்டை தெரிவித்தார், அடுத்து ஒருவர் படத்தின் பின்னனி இசையில் தமிழ் பாடல்களே ஒலிப்பதுபோல் பதிவு செய்யப்பட்டுள்ளது ஏன் என்ற கேள்வியை எழுப்பினார். அதற்கு இது மலையகத்தில் தமிழர்கள் வாழும் பகுதியில் எடுக்கப்பட்டது என்று ஜெயபாலன் பதில் கொடுத்தார். யார் இந்த உரிமையை கொடுத்தது இயக்குனரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு இயக்குனர் பதில் அளிக்க வேண்டும் அதைவிடுத்து இவர் யார், இந்த படத்தில் லைட் பாய் வேலை பார்த்தாரா இல்லை உதவி இயக்குனராக பணிபுரிந்தாரா. 

இயக்குனருடன் கலந்துரையாடல் எனும் பொழுது இயக்குனர் பேசட்டுமே என்று இல்லாமல் இவர் உள்ளே புகுந்து பதில் அளித்தார். அடுத்த கேள்வியை இன்னொரு தோழர் கேட்ட பொழுது மீண்டும் தனது அவலக்குரலை உயர்த்திக் கொண்டு பதில் அளிக்க முற்பட்ட பொழுது தோழர் சரவணன் குமரேசன் இது இயக்குனருடனான கலந்துரையாடல் அவர் பதிலளிக்கட்டும் நீங்கள் அமைதியாக இருங்கள் என்றார். அதற்கு நீ யார் வாயை மூடிக்கொண்டு உட்கார் என்றார் இந்த பிதாமகர். இவர் தான் அது ஜனநாயகம் இல்லை இது ஜனநாயகம் இல்லை என்று புலிகள் இயக்கத்தை நோக்கி விமர்சனங்களை வைத்தவர். இவரின் ஜனநாயகம் என்ன என்ற கேள்வி இங்கு பல்லிளித்தது. 

ஒரு திரையிடல் நிகழ்வில் இவரும் படத்தை பார்க்க ஒரு பார்வையாளராக வந்துள்ளார், நாங்களும் சென்று இருக்கிறோம் ஜனநாயகப்பூர்வமாக இயக்குனர் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார், பார்வையாளர்கள் கேள்விகள் கேட்கின்றனர் இத்தகைய ஒரு இடத்தில் தான் தோன்றித் தனமாக நான் சொல்வேன் நீங்கள் எல்லாம் கேட்டே ஆகவேண்டும் விட்டேத்தியாக குதித்த ஜெயபாலனை மிகவும் காட்டமாக திட்டினேன். உடனே என்னை ரவுடி மாதிரி பேசுகிறாய் என்றார், கவனிக்கவும் அனைத்து வாதங்களும் பிரதி வாதங்களும் ஆங்கிலத்திலேயே நடந்தது நான் எந்த நாகரீகமற்ற வார்த்தைகளையும் உபயோகிக்கவில்லை. இந்த சமயத்தில் அதுவரை ஜெயபாலனுடன் நின்ற லீனா காணாமல் போனார் சிறிது நிமிடங்கள், அப்புறம் நிகழ்ச்சி ஏற்ப்பாட்டாளர் அருண் ஜெயபாலனை உட்காரச் சொன்னார் அப்பொழுது பின்னால் திரும்பி இவரின் சொந்த கதை சோகக் கதை எதையோ குறிப்பிட்டு அதையெல்லாம் நீங்கள் தட்டிக் கேட்டீர்களா என்றார். அதை இங்கு விவாதிப்பது என்றால் விவாதிக்கலாம், உங்கள் சொந்த பிரச்சனையை பேசவா நாங்கள் வந்திருக்கிறோம் என்று சரவணன் பதில் சொன்னவுடன் பல்லைக் கடித்துக் கொண்டு அமர்ந்து இருந்தார். 

ஒரு புறம் இந்த பேச்சுகள் நடக்கும் பொழுதே இயக்குனருடனான கலந்துரையாடல் தொடர்ந்து கொண்டு தான் இருந்தது யாரும் அவரை அடிக்கவோ இல்லை அவரை திட்டவோ செய்யவில்லை தங்களிடம் தோன்றிய ஐய்யப்பாடுகளையே கேள்வியாக கேட்டுக் கொண்டு இருந்தன்ர். இயக்குனர் கெளதமன் சக இயக்குனராக ஒரு கேள்வி இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்பதை ஒத்துக் கொள்கிறீர்களா என்ற கேள்வியை கேட்டார், அதற்கு நான் சிங்களவனாக எனது பார்வையை சொல்லியுள்ளேன், ஆனால் அரசு தமிழ் மக்களின் பார்வையில் நின்று அவர்களுக்காக யோசித்தால் தான் மீள் கட்டமைப்பு என்பது சாத்தியமாகும் என்றார். கேட்கப்பட்ட கேள்விக்கு இயக்குனர் பிரசன்ன அளித்த பதில் இரண்டுக்கும் சம்பந்தம் இல்லை. அவர் சொன்ன பதிலில் இனப்படுகொலை என்ற வார்த்தையைக் கூட உபயோகிக்காமல் இனி மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்பதே.  இதன் அரசியல் சர்வதேச அரங்கில் Genocide எனும் வார்த்தையை G Word என்றே உபயோகிப்பார்கள், அதைப் போன்றே இயக்குனர் பிரசன்னாவின் பதிலும் அமைந்தது. 

இதன் பிறகு மேலும் சில தோழர்கள் கேள்விகள் கேட்க முயன்ற பொழுது நேரம் இல்லை என்று விலகிச் சென்றார்கள். அப்பொழுது பின்னால் இருந்து பெண்ணின் கூக்குரல் என்னவென்று பார்த்தால் இரண்டு பெண்கள் பேசிக் கொண்டிருந்தனர் ஒரு சிலரிடம் என்ன என்று பார்க்கலாம் என்று சென்ற பொழுது அதில் ஒரு பெண் நான் ஜெயபாலனின் மனைவி என்று கூறினார். சரி இதற்கு மேல் அங்கு செல்வது தேவையில்லாதது என்று நானும் சரவணனும் வெளியேறிவிட்டோம். இந்த சமயத்தில் இயக்குனர், லீனா மணிமேகலை, ஜெயபாலனும் வெளியில் வந்தார்கள் சில தோழர்கள் கேள்விகள் எழுப்பினர் அதற்கு பதில் சொன்னாரா இல்லையா என்பது தெரியவில்லை. அனைவரும் கிளம்பிச் செல்வதில் ஈடுபட்டார்கள். வைக்கப்பட்ட கோரிக்கை என்பது புலிகளை தீவிரவாதிகள் என்று சொல்லும் சப்டைட்டிலை மட்டும் நீக்க முடியுமா என்பது தான் இது படத்தில் இரண்டு இடங்களில் வருகிறது என்பது மட்டும் தான் இது கோரிக்கையாக தான் வைக்கப்பட்டது. அப்படி நீக்காவிட்டால் நாங்கள் அதைச் செய்வோம் இதைச் செய்வோம் என்ற வசனங்கள் எல்லாம் வரவும் இல்லை. 

மேலும் கேள்வி பதில்கள் நடக்கும் பொழுதே காவல்துறை உள்ளே வந்தது, ஒரு தனியார் இடத்தில் தனியாரின் அனுமதியில்லாமல் காவல்துறை நுழைய முடியாது அப்படியிருந்த பொழுதும் காவல் துறை உள்ளே வந்தது நிகழ்ச்சியை நடத்தியவர்கள் யாரும் கேள்வி எழுப்பவில்லை. இது நிகழ்வை நடத்தியவர்கள் அசம்பாவிதம் ஏற்படும் என்று நினைத்து காவல்துறையை அணுகி இருக்க வேண்டும், அல்லது வேண்டும் என்றே வந்திருந்தவர்களை மிரட்டும் நோக்கத்துடன் காவல்துறையை உள்ளே அனுமதித்து இருக்க வேண்டும். அவர்கள் எந்த நோக்கத்துடன் செய்திருந்தாலும் சரி இது வரை தமிழ் தேசியக் கூட்டங்களில் எங்கும் எந்த அடிதடியும் ஏற்பட்டதில்லை என்பது நம் அனைவருக்கும் தெரியும். அதிலும் பல இடங்களில் பல இயக்கங்கள் ஒருவரின் கருத்துக்கு நேர் எதிராக நிற்கும் இயக்கங்கள் அனைவரும் ஓரிடத்தில் இணைந்து நின்று போராடி இருக்கிறார்கள் எங்கும் எந்தவிதமான அசம்பாவிதமும் நடந்தது இல்லை ஆனால் இந்த கலை, இலக்கியம், இலக்கணம் என்று வியாக்கியானம் பேசுபவர்கள் நடத்தும் கூட்டங்களில் மட்டும் தான் இத்தகைய கூத்துகள் நடைபெறும், ஏன் பொது மக்களுக்காக நடத்தப்படும் புத்தக கண்காட்சிகளில் கூட கட்டி பிடித்து உருண்டு சண்டை போட்ட நிகழ்வுகள் எல்லாம் உண்டு. 

ஆனால் இங்கிருக்கும் பலர் இதை உணராமல் எதோ தமிழ் தேசியர்கள் தான் குற்றமிழைத்தவர்கள் போல் பிதற்றுகிறார்கள், இதை பார்த்து கலையை ஒரு போராட்ட வடிவமாக செய்து வரும் நமது தோழர்களும் இவர்களை நோக்கி எந்த கேள்வியையும் எழுப்பாமல் நம்மை நோக்கியே விமர்சனங்களை வைக்கிறார்கள். இந்த நிகழ்வில் யாரும் யாரையும் அவமானப்படுத்த வில்லை, வேண்டுமென்றால் நான் ஒருவன் மிகவும் கோபமாக ஜெயபாலனை நோக்கி Who the hell are you to tell us to shut up, You are also guest, I am also a guest என்று கோபமாக கேட்டேன், இதற்கு தான் நான் ரவுடி மாதிரி பேசுகிறேன் என்றார். ஜனநாயகப் பூர்வமாக யாரிடம் கேள்வி கேட்கப்படுகிறதோ அவர் பதில் சொல்லட்டும் நீங்கள் அமைதியாக இருங்கள் என்று தான் சொல்லப்பட்டது. ஒரு பைத்தியம் போல் அன்றிலிருந்து இன்று வரை அவர் பிதற்றி திரிகிறார் கலை இலக்கிய நண்பர்கள் அவரின் பைத்தியத்திற்கு எதை தின்றால் தெளியும் என்று சொல்லிக் கொடுங்கள். தமிழ் தேசியம் பேசுபவர்கள் நாகரீகத்தையும் விருந்தோம்பலையும் தாங்கள் பேசும் தமிழுடனே வாழ்ந்து உணர்ந்து கொண்டவர்கள். 

(ஜெயபாலனுடன் நடந்த விவாதத்தின் போது எடுக்கப்பட்ட கானொளி, அவர் பக்கத்தில் அடிக்க யாரும் செல்ல வில்லை என்பது தெளிவாக தெரியும்)


கடைசியாக சொல்ல விரும்புவது அடாவடி சென்சார் என்று இவர்கள் கூறுவதற்கான பதில் “தேன்கூடு, எல்லாளன்” போன்ற படங்கள் இவர்களுக்கு கலைவடிவமாக தெரியவில்லையா இந்த படங்களை மக்களுக்கு திரையிடக் கூடாது என்று சென்சார் போர்டு சொல்கிறது அதற்கு எதிர்வினையாற்றுவதில்லை இவர்கள். ஆனால் இந்த அரசு எம் மக்கள் சார்பான தகவல்களை கலை வடிவில் சொன்னால் அனுமதி மறுக்கிறது ஆனால் அரசாங்கத்துக்கு ஆதரவான படங்களை எந்த வடிவில் சொன்னாலும் அனுமதிக்கிறது இந்த நிலை இருப்பதனாலே இங்கே சிலபடங்களை நோக்கியும் அதன் இயக்குனர்களை நோக்கியும் ஏன் எப்படி என்று கேள்வி எழுப்ப வேண்டிய தேவை எங்களுக்கு ஏற்பட்டு உள்ளது. உண்மையான கலையை நேசிப்பவர்கள் இதைப் போன்ற எத்தகைய படங்களும் வெளிவர எந்த சென்சாரும் அனுமதிக்க தேவையில்லை என்று போராடட்டும்.  
 

குறிப்பு : ஊடகங்கள் கூறுவது போல் யாரும் யாரையும் அடிக்கவில்லை. 

Sunday, June 8, 2014

வீரமணி எனும் எஜமானன்...

தோழர் அதி அசூரனுக்கு ஒரு திறந்த மடல்...

தோழா..

வீரமணி ஓர் வாக்கியம் சொன்னவுடன் அனைத்தையும் உடைத்து எறிந்துவிட்டு பொங்குகிறீர்கள். நல்லாத் தான் இருக்கு ஆனால் இந்த பொங்கல் இத்தனை ஆண்டுகாலம் தமிழரின் மீட்சி தான் முக்கியம் அதைத் தவிர வேறு எதையும் பற்றி யோசிக்க வேண்டிய தேவை இல்லை என்று பெரியாரை இகழ்ந்தவர்களுடன் கூட நின்ற பெரியாரியவாதிகளை போற்றும் வகையில் இல்லாமல் மற்றவர்களை இகழும் முறையில் இருக்கிறது உங்கள் பதிவு. இப்படி எனக்கு தோன்ற காரணம் ஏன் என்றால் பெரியார் தமிழின மீட்சிக்காக போராடியவர் என்பதை நீங்களும் அறிவீர்கள் நானும் அறிவேன். ஆனால் அவர் வேற்றுமையில் ஒற்றுமை பாராட்டியவர் என்பதை நீங்கள் மறந்து விட்டீர்கள் இந்தியம் பிடித்துக் கொண்டது போல் தெரிகிறது.

தன் கடவுள் மறுப்பு கொள்கையோ இல்லை பகுத்தறிவு கொள்கையோ சுயமரியாதை கொள்கையோ அதற்கு எதிரானவர்களுக்கு நமது பொது எதிரியினால் ஒருவருக்கு பிரச்சனை என்றால் யாரும் கூப்பிடாமல் அவர்களுக்காக ஓடோடிச் செல்வார் பெரியார் அதன் கீழாகவே குன்றக்குடி அடிகளாருக்காக ஓடியதும், அதைப் போலவே சென்னை சர்வகலா சாலையில் தீவிர ஆத்திகரான மறைமலை அடிகளின் புத்தகம் “அறிவுக் கொத்து” எனும் நூலுக்கு எதிராக செயல்கள் நடந்த பொழுதும் யாரும் கூப்பிடமாலேயே ஓடியதும்..

ஆனால் நீங்கள் இன்று பெரியாரை ஒரு ரசிக மன்ப்பான்மையுடன் நெருங்குகிறீர்கள் என்று நினைக்கிறேன். பெரியாரிய கொள்கை தான் முக்கியம் அதைத் தவிர வேறு எதுவும் இல்லை என்று பேசியது போல் இருக்கிறது தங்களின் திராவிட மூலசூத்திர கட்டுரை.. உங்களைப் போன்ற சமயத்திற்கு ஏற்றார்போல் கொள்கையை மாற்றிக் கொள்ளும் நிலைப்பாடினால் தான் இன்று திராவிடம் கேள்விக்குள்ளாகி உள்ளது.

பெரியார் தனது கருத்திற்கு எதிரானவர் என்றால் கூட அவருக்கு தனது பொது எதிரியால் பிரச்சனை என்றால் ஓடோடிச் செல்வார் அவர்களுக்காக போராடுவார். ஆனால் அந்த பழக்கத்தில் ஒரு சதவீதம் கூட ஒப்புமை செய்ய இயலாத இந்த வீரமணி அதுவும் பேரறிவாளன் திராவிடர் கழக உறுப்பினர் இல்லை என்று அறிவித்தார் மிகப்பெரிய பிரச்சனைக்குள்ளான காலகட்டத்தில்.. அதுவும் வக்கீல் வீரசேகரன் அதே வழக்கில் கைது செய்யப்பட்ட பொழுது 1000 வழக்கறிங்கர்களை ஒன்றிணைத்து போராட்டம் நடத்தியவர் இவர்,  ஆனால் பேரறிவாளன் எங்கள் இயக்கத்தினர் இல்லை என்று மட்டும் தான் சொல்ல முடிந்தது இவரால்.. பேரறிவாளனின் ஒட்டுமொத்த குடும்பமும் இன்றுவரை பெரியரை விடாமல் தொடர்ந்து கொண்டுள்ளது... பரவாயில்லை இது நடந்து பலகாலம் ஆகிவிட்டது..

ஆனால் தற்சமயம் தோழர் கொளத்தூர் மணி தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப் பட்டபொழுது ஓடோடி வந்தாரா இந்த வீரமணி. நீங்கள் ஒத்த கருத்துள்ளவர்கள் என்று கூறுகிறீர்கள் இவர்களை ஆனால் பெரியாரின் பொது எதிரிக்கான போராட்டத்தில் நமது எதிரிக்கு துன்பம் என்றால் கூட ஓடோடிப் போகும் பெரியாரின் குணம் எங்கு போனது கொளத்தூர் மணி தோழர் கைது செய்யப்பட்ட பொழுது வீரமணிக்கு, நீங்கள் கூறும் ஒற்றுமையான கருத்தின் கீழ் கூட வரவில்லையே. ஜெயலலிதாவின் ஆட்சியில் கொளத்தூர் மணி தோழர் கைது மட்டுமில்லை, கருணாநிதியின் ஆட்சியில் சீமான், வைகோ போன்றவர்கள் 2009ம் ஆண்டும் அதற்கு பிறகும் கைது செய்யப் பட்ட நமது தோழர்கள் முதற்கொண்டு யாருக்காகவும் வரவில்லையே.. நமது தமிழருக்காக  ஒடுக்கப்படுவர்களுக்காக ஓடோடி செல்லும் பெரியாரின் குணம் இந்த வீரமணியிடம் வெளிப்பட்டதா எங்காவது.. இல்லையே???

அப்படியிருக்கும் பொழுது எப்படி இவரை ஒத்த கருத்துள்ளவர் என்று சொல்கிறீர்கள். இத்தனை வருடமும் தமிழ்தேசியம் என்று சொல்லி பெரியாரை தூற்றுபவர்களுடனும் சேர்ந்து நாம் நின்றது பெரியாரை விட தமிழினம் முக்கியம் என்பதால் ”தமிழ்நாடு தமிழருக்கே” என்பதால். ஆனால் அதை எல்லாம் நகைப்புள்ளாக்கி இன்று பெரியார் திடலின் எஜமான் தன் எஜமான புத்தியை விடாமல். அதாவது பிரச்சனையின் போது ஓடோடி வந்து ஒன்றிணைந்து தமிழினத்திற்காக நிற்காமல் ஓடி ஒளிந்த ஒருவரை ஒத்த கருத்துள்ளுவர் என்று சொலவது நகைப்பிற்கு இடமளிக்கிறது..

கொஞ்சம் வரலாற்றை பெரியாரின் ரசிகராக இல்லாமல் தமிழர்களின் மீட்சியின் கீழாக பாருங்கள். அப்பொழுது தெரியும் உங்களின் போராட்டத்தில் நானும் கலந்து கொள்ள விரும்புகிறேன் என்று சொல்லாமல் இதோ என் இடம் பெரியார் திடல் இருக்கிறது வாருங்கள் என்று விடும் எஜமான அரசியலின் அரைகூவல் கண்ணுக்கு தெரியும் அவரின் எஜமானிய புத்தியும் புலப்படும். அதுவும் ஈழவிடுதலையில் இருந்து தமிழ்நாட்டு தமிழர்களின் போராட்டம் அனைத்திலும் கள்ள மெளனம் சாதித்த ஒருவர் இன்று அடுத்த கட்டத்திற்கு காலை எடுத்து வைக்க ஒரு அங்குல இடம் கூட இல்லாமல் வெற்றிகரமான ஒரு போராட்டத்தை நாம் அனைவரும் இணைந்து நடத்தி சென்று கொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்து அது இவரின் இருப்பை கேள்விக்கு உள்ளாக்கி இருக்கிறது என்பதை புரிந்து இவர் விடுத்த அரைகூவலை படிக்கும் பொழுதே புரியும்.. நாம் இதுவரை இணைந்து நின்று நடத்திய போராட்டங்கள் இனி நடை பெறக்கூடாது நம்மை பிரிக்கவேண்டும் என்ற எண்ண ஓட்டத்தின் கீழாகவே இந்த அரைகூவல்..

நம்மை பிறித்தாளும் சூழ்ச்சியே இவர் விடுத்திருக்கும் அரை கூவல் என்னை பொறுத்தவரை ஒரு பகுத்தறிவு வாதியாக, பெரியாரின் கருத்துகளை புரிந்து கொண்டவனாக இவரின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு நான் உட்பட மாட்டேன்.. பெரியாரை தூற்றுகிறவர்களுடன் இணைந்து நிற்கலாம் எனென்றால் அவர்கள் நாம் அமைக்கும் களத்தில் வந்து நின்று போராடுகிறார்கள், அவர்கள் அமைக்கும் களத்திலும் நமக்கான இடத்தை ஒதுக்குகிறார்கள்.. என்றாவது ஒரு நாள் அவர்கள் பெரியாரை புரிந்து கொள்வார்கள்,  ஆனால் வீரமணி நமக்கு பல துன்பங்கள் வந்த பொழுதும் வேடிக்கை பார்த்தவர் எனபதை மறந்துவிடாதீர்கள். பெரியாரிய கொள்கை என்பது அய்யகோ நம்மவர் பெரியாரை ஏற்றுக் கொண்டவர் அதனால் அவர் உணர்ந்துவிட்டார் என்று கழிவிரக்கம் கொளவது அல்ல... இன்று அரைகூவலிட்டவர்  நம் தோழர்கள் உமாபதி உட்பட இன்னும் பலர் சிறையில் இருக்கிறார்கள் அதற்காக ஏன் வந்து போராடவில்லை என்ற கேள்வியை எழுப்புங்கள், அது தான் பகுத்தறிவு.

தமிழினத்தின் மீட்சி என்பது வீரமணியை வெளியேற்றி பெரியார் திடலை தமிழர்களுக்கு சொந்தமாக்குவதே.. வீழ்ந்துவிடாதீர்கள் கொஞ்சம் பெரியாரின் ரசிகராக இல்லாமல் பெரியாராக சிந்தியுங்கள் Feel your self in Periyar's shoes...

ஒரு போராளி களத்துக்கு வருவான் ஆனால் என்றும் இதோ எனக்கு சொந்தமான இடம் இருக்கிறது அதை களமாக மாற்று என்று சொல்ல மாட்டான்.. அப்படி ஒருவர் சொன்னான் என்றால் அவன் எஜமானன்...

Wednesday, June 4, 2014

கம்பெனியாம் கம்பெனி மும்மூர்த்திகள் கம்பெனி


1948ம் வருடம் ஒரு கம்பெனி ஆரம்பித்தார்கள், ஆரம்பிக்கும் பொழுது பங்கு தாரர்கள் எல்லாம் ஒரே முடிவுடன் இருந்தார்கள் அது தான் தேர்தல் கலாட்டாவில் குத்தாட்டம் போட்டு அதன் மூலமாக பேட்டை ரவுடி ஆகி தான் மக்களுக்கு நல்லது பண்ண முடியும் என்று கம்பெனியின் லாபமாக சொன்னார்கள். கொசுறாக தேசிய அளவில் கல்லா கட்டும் தேசிய தாதாவை தமிழ்நாட்டுக்குள் அழித்துவிடப் போகிறோம் என்று உதார் விட்டார்கள்.  

இதில் இவர்கள் வேறு இந்த தேர்தல் கலாட்டாவில் அடித்த கூத்து இருக்கே அது தான் இந்த கம்பெனியின் நகைச்சுவையை நமக்கு உணர்த்தும். 1952ம் வருட தேர்தலில் எங்கள் ஆதரவு வேண்டும் என்றால் தனித் தமிழ்நாடுக்கு ஆதரவு கொடுப்பவருக்குத் தான் எங்க ஆதரவு என்றார்கள். தேர்தல் கலாட்டாவில் கலந்துக்க போறோம் அப்படி கலாட்டா பண்ணி பேட்டை ரவுடியா வந்தால் தான் மக்களுக்கு நல்லது பண்ண முடியும் என்று சொன்னவர்கள் மத்தவங்க எல்லாம் கலாட்ட பண்ணுங்க நாங்க வெளியில் இருந்து வேடிக்கை பார்க்கிறோம் என்று தங்கள் வீரதீர சொரூபத்தை வெளிக் காட்டினார்கள். தேர்தலில் பங்கு கொள்ளும் தைரியமும் இல்லை அதே வேளையில் கலாட்ட பண்ண கட்டை கடப்பாரை மட்டும் கொடுப்போம் என்றார்கள். 

இந்த தனித் தமிழ்நாடு நிபந்தனைக்கு சில கம்பெனிகள் ஒத்து கொண்டு இவர்களிடம் தனி தமிழ்நாட்டை ஆதரிக்கிறோம் என்று ஒப்பந்தம் போட்டுக் கொண்டார்கள். ஆனால் அவர்கள் வெற்றி பெற்றவுடன் இவர்கள் எந்த தேசிய தாதாவை அழிக்க கிளம்பினார்களோ அந்த தேசிய தாதாவிடம் சரணடைந்து அமைச்சர் பதவி எல்லாம் வாங்கினார்கள் அந்த சில்லு வண்டுகள். அந்த சில்லு வண்டுகளை கண்டிக்க கூட வக்கில்லாமல் கலாட்டா பண்ன வீர பராக்கிரமர்கள், அதற்கு அடுத்தும் பெரிய கலாட்டக்கல் எல்லாம் செய்யவில்லை 1967 வரை அதாவது கம்பெனி ஆரம்பித்து 1948ல் இருந்து 67 வரை 19 ஆண்டு காலம் உள்ளே இவர்களுக்கிடையே கச்சை கட்டி சண்டை போட்டு பங்கு தாரர்கள் பலர் தனியாக கம்பெனி ஆரம்பித்தது தான் மாபெரும் சாதனையாக இருந்தது.


1967ல் தேசிய தாதா தமிழ்நாட்டு மக்களை நீ என் மொழியை கத்துக்கணும் இல்லாவிடில் உன்னை உதைப்பேன் என்ற பொழுது தன்னெழுச்சியாக எழுந்த போராட்டத்தையும் போராட்ட மாணவர் தலைவர்களையும் வளைத்துப் போட்டு கண்ணீர் விட்டு அழுத்தது இந்த கம்பெனி உரிமையாளர்கள். நம்ம மக்களும் இவர்களின் கண்ணீரையும் கம்பலையையும் பார்த்து தேர்தல் கலாட்டாவில் இவர்களோடு சேர்ந்து நின்று தொலைத்தார்கள். அன்று பிடித்தது தமிழ் நாட்டுக்கு சளி.. அன்னைக்கு பிடிச்ச சளிதான் இன்னைக்கு வரைக்கும் எத்தனை கசாயம் குடிச்சாலும் விடமாட்டேன் என்கிறது.

நாம சளியோட அலைவது முடியாது என்று தான் இந்த டூபாக்கூர் கம்பெனியில் கணக்கு கேட்டு கொடுக்கலை என்று மூக்கை சிந்திட்டு வெளியில் ஓடி வந்தவங்களை எல்லாம் ரொம்ப நல்லவர்கள் என்று ஆதரித்து தேர்தல் கலாட்டா செய்து பேட்டை ரவுடி ஆக்கினோம். இதையெல்லாம் மறந்து தன்னால மக்களுக்கு ஏற்பட்ட சளியினால் தான் நம்மை மூக்கை சிந்தி தூக்கி போடுவது போல் தூக்கிப் போடுகிறார்கள் என்பதை உணராமல் இன்னைக்கு வரைக்கும் மக்களைப் பார்த்து நீ சளி வேண்டாம் என்று மஞ்சள் காமலையிடம் மாட்டிக்கிட்டாய், வாந்தி பேதி உனக்கு வரப்போகுது என்று சாபம் விடுகிறார்களே தவிர இது வரை எதாவது நல்லது பண்னுவார்கள் என்று பார்த்தால், 2009ல் பேட்டை ரவுடியாகவும் தேசிய தாதாவிற்கு அல்லக்கையாகவும் இருந்து 1,50,000 மக்களை தங்களின் குடும்பத்தினர் குத்தாட்டம் போட்டு காவு கொடுத்தனர்.

இதனை எல்லாம் உணர்ந்த மக்கள் மஞ்சள் காமலையோ இல்ல வாந்தி பேதியோ இருந்து தொலையட்டும் உன்னை பேட்டை ரவுடியாக மாற்றி மூக்கை சிந்திக்கிட்டே திரியமுடியாது என்று சொன்னால் இந்த வெங்காய வெண்ணை வெட்டி திருட்டு மும்மூர்த்தி கம்பெனிக்கு புரியவே மாட்டேன் என்கிறது. அது எப்படியா எந்த இடத்திலும் சொல்லாமல் கொள்ளாமல் கம்பெனி பெயரை மாற்றிவிட்டீர்கள்.
திருட்டு 
மும்மூர்த்தி(ஸ்டாலின்,அழகிரி, கனிமொழி) 
கம்பெனி என்று...

இனியும் மக்கள் உங்களை சகித்துக் கொள்ள மாட்டார்கள், எனென்றால் சளி தானே என்று அசிங்கமாக பொதுவில் மூக்கை சிந்திக்கிட்டே அலைய விரும்பவில்லையாம். 

Saturday, May 17, 2014

2014 தேர்தல் ஓர் பார்வை

2014 தேர்தலுக்கு முன்பாகவும் சரி அதன் பின்னும் சரி யாரும் இப்படி ஒரு முடிவு வரும் என்பதை எதிர்பார்க்கவில்லை. அனைத்து கருத்துக் கணிப்புகள் எல்லாம் ஆதிமுகவிற்கு 20, 25, 27 தொகுதிகள் என்று தான் கூறிவந்தன. ஆனால் அனைத்தையும் தலைகீழாக மாற்றி ஒட்டுமொத்தமாக 37 தொகுதிகளில் ஆதிமுக வெற்றிப் பெற்றுள்ளது என்றால் அதன் பின்னான கரணங்கள் ஆராயப்பட வேண்டும். முதலில் அனைத்து கட்சிகளும் வாங்கிய வாக்கு சதவீதம் 

ஆதிமுகவின் ஓட்டு சதவீதம் 44%
திமுக கூட்டணியின் வாக்கு சதவீதம் 26.3%
பாஜக கூட்டணி 20.6%.

மேலே குறிப்பிட்டு இருப்பது 2014ன் வாக்கு விகிதம். ஆனால் எப்பொழுதுமே திமுகவின் வாக்கு வங்கி 26% ஆதிமுகவின் வாக்கு வங்கி 29% இப்படித்தான் ஆண்டாண்டு காலமாக தமிழக தேர்தலில் வெற்றிக்கும் தோல்விக்கும் இடையிலான வாக்கு சதவீதம். இதில் இந்த வாக்கு வங்கியை சேராத மக்கள் ஒவ்வொரு முறையும் தங்களது வாக்குகளை அடுத்து நமக்கு யார் நல்லது செய்வார் என்று முடிவெடுத்து வோட்டுபோடுவார்கள் அதனடிப்படையில் வெற்றி பெறுபவர் மாறி மாறி வந்தனர். ஆனால் இந்த முறை ஆதிமுக எந்த கூட்டணியும் இல்லாமல் தேர்தலை சந்தித்து மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. திமுகவும் மிகப்பெரிய கூட்டணி என்ற ஒன்றில்லாமல் போட்டியிட்டது.

இதில் ஆதிமுகவின் வாக்கு வங்கி என்பது 29% தான் ஆனால் அதை தாண்டி 44% வாக்கு வாங்கி வெற்றி பெற்றுள்ளார். இது வாக்கு வங்கி சேராத மக்களின் வாக்குகள். மேலும் சட்டசபை தேர்தலும் பாராளுமன்ற தேர்தலும் பெரும்பாலும் ஆட்சிகலைப்பு போன்றவைகள் நடைபெற்றால் ஒழிய 1996வரை ஒரே சமயத்தில் தான் வரும். ஆனால் அது உடைந்து இரண்டும் வெவ்வேறு காலங்களில் நடக்க ஆரம்பித்த பிறகு ஆளும் மாநில அரசின் செயல்பாட்டை வைத்து தேர்தலில் வாக்குகள் மாறி வந்தது. இதற்கு மிகச்சிறந்த உதாரணமாக   1991-96ல் ஜெயலலிதாவின் ஆட்சியின் ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக கருணாநிதி 96ல் பெரும்பான்மை பெற்று மாநிலத்தில் ஆட்சியை பிடித்தார். அதே சமயத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலிலும் United Front எனும் கூட்டணியாக திமுக, தமிழ் மாநில காங்கிரஸ் (மூப்பனார்), மற்றும் சிபிஐ ஆகியோர் அடங்கிய கூட்டணியில் தமிழக பாரளுமன்ற தொகுதிகள் 39 இடங்களையும் கைப்பற்றினர். ஆனால் 1996 இவர்கள் ஆதரவுடன் அமைக்கப்பட்ட தேவகவுடா தலைமையிலான அரசு ஒரு வருடம் அதன் பிறகு ஐ.கே குஜ்ரால் தலைமையில் ஒருவருடமும் ஆட்சியில் இருந்து, அதன் பிறகு ஆட்சி கலைக்கப்பட்டது. 1998ல் பாராளுமன்ற தேர்தல் மறுபடியும் நடந்தது. 1996க்கு பிறகு சட்டமன்றம் பாராளுமன்ற தேர்தல்கள் இருவருட இடைவெளியில் தான் நடக்கிறது. 

1996 தேர்தலில் ஜெயலலிதா மீதான ஊழல் குற்றச்சாட்டுகளின் கீழாக தேர்தலில் படுதோல்வி அடைந்திருந்தார், அதாவது போட்டியிட்ட 160 தொகுதிகளில் 4 தொகுதிகள் மட்டுமே வெற்றியடைந்தார். இப்படி மக்களின் ஒட்டுமொத்த வெறுப்பையும் சம்பாதித்து நின்ற ஜெயலலிதா இரண்டே ஆண்டுகளில் 1998 பாராளுமன்றத் தேர்தலில் 30 தொகுதிகளில் வெற்றிபெற்றார், இதன் காரணம் அன்று ஆண்டு கொண்டிருந்த திமுக அரசின் மீதான வெறுப்பு. 1998 தேர்தலில் ஜெயலலிதா இருந்த பிஜேபி கூட்டணி ஆட்சி அமைத்து ஜெயலலிதாவாலேயே கவிழ்க்கப்பட்டது, மறுமுறை 1999ல் தேர்தல் நடந்தது இதில் திமுக, பாஜக ஒரே கூட்டணியில் நின்றன இதில் 26 இடங்கள் பிஜேபி, திமுக கூட்டணியும் 13 இடங்கள் அதிமுக, காங்கிரஸ் கூட்டணிக்கும் கிடைத்தது. இதன் பிறகு தேர்தல் என்பது மாநிலத்தில் சட்டசபை தேர்தல் அது 2001ம் ஆண்டு நடைபெற்றது இதில் ஜெயலலிதாவின் ஆதிமுக கட்சி ஆட்சியை கைப்பற்றியது.


2004ல் பாராளுமன்ற தேர்தல் இதில் கருணாநிதி 40ம் நமக்கே என்று பாண்டிச்சேரிஉட்பட அனைத்து எம்பி தொகுதிகளையும் அறிவித்து. 40 இடங்களில் வெற்றி பெற்றார். தமிழகத்தில் இருக்கும் ஒட்டுமொத்தமாஅன் 39 தொகுதிகளை வெற்றி பெற்றார். இதற்கு அன்றைய ஆளும் அதிமுகவின் மீதான வெறுப்பே காரணம்.  அதாவது 2001 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுகவின் ஆட்சியின் மீதான வெறுப்பாக 2004 தேர்தலில் அதற்கு முந்தைய பாராளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணியில் இருந்து அமைச்சர் பதவியெல்லாம் வகித்த திமுக அந்தர் பல்டி அடித்து காங்கிரஸுடன் கூட்டணி வைத்து 2004 தேர்தலில் 39 தொகுதியையும் கைப்பற்றியது. இப்படி தொடர்ந்து ஆளும் மாநிலக் கட்சியின் வெற்றியாக இல்லாமல் எதிர்கட்சியாக இருப்பவர்களே 1998லிருந்து பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் வெற்றி பெற்றிருக்கின்றனர். மேலும் மத்தியில் யார் ஆட்சி என்பதை தமிழக மக்கள் கவலைப்படுவதில்லை தமிழகம் சார்பாக யார் பாராளுமன்றம் போவது என்பதையே பார்த்து வருகின்றனர்.

2009 தேர்தலிலும் இதே தான் நடந்தது அதற்கு முதல் தேர்தலில் 40ம் நமக்கே என்று வெற்றி பெற்றவர்கள் இப்பொழுது 2006 சட்ட மன்ற தேர்தலில் வெற்றி பெற்று திமுக மாநிலத்தில் ஆட்சியில் இருந்தது, அதற்கு முதல் தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று தக்கவைத்திருந்த கட்சி மிக எளிதாக 2009 தேர்தலில் அதே நிலையில் வெற்றிபெற்று இருக்கலாம் ஆனால் இந்த தேர்தலில் 27 இடங்கள் திமுகவிற்கும் 12 இடங்கள் அதிமுகவிற்கும் என்று மாறியது. இப்படி ஒவ்வொரு முறையும் தமிழகத்தில் ஆளும் கட்சிக்கு எதிரான மனப்பான்மை ஏற்படுவதும் அதன் கீழாக பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் தமிழகத்தை பொறுத்து அமையும் ஆனால் அதை ஒட்டுமொத்தமாக உடைத்து கூட்டணிகள் என்பது கூட முக்கியம் இல்லை என்பதை அனைவருக்கும் உணர்த்தும் விதமாக இந்த தேர்தலில் 37 தொகுதிகளில் ஒரே கட்சி தமிழக வரலாற்றில் இது வரை யாருமே பெறாத வெற்றியை தமிழக மக்கள் கொடுக்க என்ன காரணம் என்பது கவனிக்க பட வேண்டிய ஒன்று.

                                                         
எம்.ஜி.ஆர் என்ற பிம்பம் மக்களின் மனதில் நிறைந்து இருந்த காலத்தில் கூட இவ்வாறான ஒரு முடிவு எப்பொழுதும் மக்கள் கொடுத்தது இல்லை, 1980ம் ஆண்டு சரண் சிங்கின் அரசு கவிழ்ந்து நடந்த தேர்தலின் போது தமிழகத்தில் எம்.ஜி.ஆர் ஆட்சியில் இருந்தார் ஆனால் அப்பொழுது நடந்த தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணி 37 இடங்களில் வெற்றி பெற்றது. எம்.ஜி.ஆரின் கூட்டணி 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இதன் பிறகு ஆட்சி அமைத்த காங்கிரஸை வைத்து மக்களின் நம்பிக்கையை எம்.ஜி.ஆர் இழந்துவிட்டார் என்று 1980ல் தமிழக எம்.ஜிஆரின் ஆட்சியை கருணாநிதியும் இந்திரா காந்தியும் கலைத்தனர். ஆனால் காமராஜருக்கு பின்னர் மறுபடியும் தேர்தலில் பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி இரண்டாவது முறையாக வெற்றி பெற்றார் எம்.ஜி.ஆர் ஆனால் அவர்கூட இப்படி தனியாக நின்று பாராளுமன்ற தேர்தலில் 37 இடங்களை கைப்பற்றியதாக எந்த சரித்திரமும் இல்லை.

2014 தேர்தல் என்று இல்லை எந்த தேர்தலிலும் தமிழக மக்களைப் பொறுத்த வரையில் மத்தியில் யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்று நினைத்து வாக்களித்தது இல்லை. தமிழ்நாட்டில் இருந்து யார் போகவேண்டும் யார் பேசினால் போதும் என்று நினைக்கிறார்களோ அவர்களையே தேர்ந்து எடுக்கிறார்கள் அதுவும் தங்களின் மாநிலத்தில் நலனை சார்ந்து மட்டுமே. இங்கு ஆட்சியில் இருக்கிறவர் அங்கு போய் பேச வேண்டும் என்பதைப் பற்றி கவலைப்படுவதில்லை எதிர்கட்சியாக நின்றவர்களை வெற்றி பெறச்செய்து அனுப்பியுள்ளனர்.

இந்த தேர்தல் ஆளும் கட்சிக்கு மேலும் ஒரு வேலையைக் கொடுத்துள்ளது, இது தமிழர் நலன் சார்ந்து தமிழக சட்டசபையில் தமிழக மக்களின் தீர்மானமாக இயற்றப் பட்ட தீர்மானங்களை மத்திய அரசு கண்டு கொள்ளாமல் இருந்தது இது வரை மத்திய அரசில் பங்கு பெற்ற தமிழகத்தை சேர்ந்தவர்களும் அதை மத்திய அரசுக்கு எடுத்து சொல்லவில்லை இனி தமிழகத்தில் தமிழ் மக்களின் தீர்மானங்களை பேசும் பெரும் பொறுப்பையும் கொடுத்து அனுப்பியதாகவே தோன்றுகிறது. 

Wednesday, May 14, 2014

ஒண்டிவீரன் எனும் அருந்ததியர் மாவீரன்




ஒண்டிவீரன் அருந்ததியர் சமூகத்தில் பிறந்தவர் ஆனால் ஒரு தேவரின் படையில் முக்கிய தளபதியாக செயல்பட்டவர். கட்டபொம்மனின் படையில் எப்படி சாதிப் பாகுபாடுகள் இல்லாமல் இருந்ததோ அப்படியே பூலித்தேவரின்படையும் செயல்பட்டுள்ளதை அறியலாம். பூலித்தேவரையும் ஒண்டிவீரனையும் தனித்தனியாக பார்க்கமுடியாது ஒருவர் இல்லாமல் மற்றவரின் வரலாறு என்பது இங்கில்லை. முதலில் பூலித்தேவர் யார் என்பதை அறிந்து கொள்வது முக்கியம். இராமநாதபுரத்தை சேர்ந்தவர்கள் பூலித்தேவர் முன்னோர்கள் அவர்கள் திசைக் காவலுக்காக திருநெல்வேலி பகுதிக்கு வருகிறார்கள் அங்கு நெற்கட்டான் செவ்வல் அருகே கோட்டை அமைத்து ஆட்சி செய்கிறார்கள். அவர்களின் வாரிசாக வந்தவர் தான் பூலித்தேவர்.

அந்த பகுதியில் அருந்ததிய மக்களின் நிலங்களை இருளப்ப பிள்ளை என்பவர் தனது பலத்தால் பிடிங்கிக் கொள்கிறார், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க இயலாமல் பூலித்தேவரிடம் முறையிடுகின்றனர் அருந்ததிய மக்கள். பூலித்தேவ இருளப்ப பிள்ளையிடம் இருந்து நிலங்களை மீட்டு அருந்ததிய மக்களிடம் திரும்ப கொடுக்கிறார். அன்றிலிருந்து அருந்ததிய மக்கள் பூலித்தேவரையே தங்களின் தலைவராக ஏற்றுக் கொள்கின்றனர். இப்படி மீட்டுத் தரப்பட்ட நிலங்களுள் ஒன்று தான் ஒண்டிவீரனின் தாத்தாவுடையது. ஒண்டி வீரனின் தாத்தாவிற்கு எட்டு பிள்ளைகள் அவர்களில் முத்தவரின் மகன் தான் ஒண்டிவீரன். ஒண்டிவீரனின் இயற்பெயர் வீரன்.

பூலியின் தலைமை தளபதி ஒண்டிவீரன், பூலியின் போர் வாளாகவே கருதப்பட்டார். நிலைமைக்கு தகுந்தாற்போல் போர்திட்டங்கள் வகுப்பதிலும் மறைந்திருந்து தாக்கி எதிரியை நிலைகுலையச் செயவதிலும் மிகவும் கைதேர்ந்தவர் ஒண்டிவீரன். நெற்கட்டான் செவ்வல், திருநெல்வேலி, வாசுதேவநல்லூர், களக்காடு, கங்கைகொண்டான், திருவில்லிப்பூத்தூர் ஆகிய இடங்களில் ஆங்கிலேயருக்கு எதிராக சண்டையிட்டு வெற்றிகளை குவித்தவர் ஒண்டிவீரன். அந்த காலகட்டத்தில் தான் ஆற்காடு நாவப்பிடம் இருந்து வரிவசூலிக்கும் உரிமையை பெற்ற ஆங்கிலேயர்கள் வரிகேட்டு ஆள் அனுப்புகிறார்கள். பூலி ஆங்கிலேயருக்கு வரிகட்ட முடியாது என்று மறுப்பு தெரிவிக்கிறார், அதுவரை நெற்கட்டும் செவ்வல் என்று இருந்த பெயர் அதாவது செம்மண் நிலத்தில் மிகவும் அதிகமான நெல்லை விளைவித்ததால் நெற்கட்டும் செவ்வல் என்று இருந்த பெயர் நெற்கட்டான் செவ்வலாக மாறியதாகவும் சொல்கிறார்கள்.


வரி கொடுக்க மறுத்ததையொட்டி ஆங்கிலேயர்கள் தென்மலைக்கு வந்து முகாமிட்டு பூலித்தேவரிடம் தங்கள் தூதுவர் ஒருவரை அனுப்புகிறார்கள். தூதுவர் ஆங்கிலேயரின் படை பலம் மிகவும் அதிகம் அவர்களுடன் சமாதானமாக போகும் படி கூறுகிறார். அவ்வாறு சமாதானம் வேண்டாம் என்றால் போர் என்பதை முடிவெடுப்பதாக இருந்தால் ஆற்காடு நவாப்பிடம் இருந்து வரி வசூலிக்கும் உரிமையின் அடையாளமாக ஆங்கிலேயரிடம் இருக்கும் பட்டத்து வாளையும் குதிரையையும் கடத்திக் கொண்டு வரவேண்டும் அதே சமயத்தில் போர் தொடங்கும் அடையாளமாக அங்கிருக்கும் நகராவையும் முழங்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கிறார். பூலித்தேவர் இந்த நிபந்தனைக்கு ஒத்து கொண்டு தனது தளபதிகளை கூப்பிட்டு ஆலோசனையில் இறங்குகிறார்.

பூலித்தேவனின் தளபதிகளை குறிக்கும் நாட்டுப்புறப்பாடல்

”சின்னான் பகடை பெரியான் பகடை
சிவத்தசொக்கன் கருத்தச் சொக்கன்
அண்ணன் தம்பிமார் அழகிரியுடன் 
அஞ்சாறு பகடையுடன் ஒண்டியாம்...

      இத்தானதி பேர்களுமே பூலி சேனாபதிகளாம்
      அத்தானதி பேர்களுக்கும் கம்புக் காரர்கள்
      வலையக்காரர்கள் வாள் வீச்சுக் காரர்கள்
      வேல் வீச்சுக்காரர்களுடன் முன்னூறு பேருக்கதிபதியாம்”

பூலியின் படையில் ஒண்டிவீரன் பகடை, சின்னான் பகடை, பெரியான் பகடை, சிவத்தசொக்கன், கருத்தசொக்கன், ஓடிக் குத்துவான் பகடை என்று பல அருந்ததியர்கள் இருந்தனர். ஆங்கிலேயரின் நிபந்தனையை தனது தளபதிகளுக்கு விளக்குகிறார் பூலித்தேவர். அப்பொழுது ஒண்டிவீரன் பட்டத்து வாளையும் குதிரையையும் கவர்ந்து வரும் வேலையை தான் ஏற்றுக் கொள்வதாக கூறுகிறார். ஒண்டிவீரனின் திறமையை அறிந்த பூலித் தேவரும் அதற்கு ஒத்துக் கொள்கிறார். 

ஒண்டிவீரன் மாறுவேடம் இட்டு செறுப்பு தைப்பவர் போல் ஆங்கிலேயர் தங்கியிருந்த தென்மலை சென்று தனக்கு சூ, செறுப்பு, குதிரை சேனம் போன்றவைகள் தைக்க தெரியும் என்று வேலை கேட்கிறார். ஆங்கிலேயருக்கும் தேவை இருந்ததால் வேலைக்கு அமர்த்திக் கொள்கின்றனர். தனது நேரத்திற்காக காத்திருந்து பட்டத்துவாளை வைத்திருந்த இடத்தில் இருந்து திருடிக்கொண்டு பட்டத்து குதிரை கட்டியிருந்த இடத்தை நோக்கி செல்கிறார். கட்டப்பட்டிருந்த கயிற்றை அவிழ்க்கும் பொழுது குதிரை பலமாக கனைத்து ஆங்கில சிப்பாய்கள் முழித்துக் கொள்கின்றனர். உடனடியாக அருகில் குதிரைக்காக போடப்பட்டிருந்த புல் குவியலுக்குள் படுத்துக் கொண்டு தன்னை மறைத்துக் கொள்கிறார் ஒண்டிவீரன்.

குதிரையை வந்து பார்த்த வீரர்கள் கயிறு அவிழ்ந்திருப்பதை பார்த்து கட்ட முயலும் பொழுது முளைகாம்பு ஆடியதை கவனித்து அதை தரையில் இருந்து பிடிங்கு மற்றொரு இடத்தில் அடிக்கின்றனர். அங்கு ஒண்டிவீரனின் கை புல்லுக்குள் மறைந்து இருக்கிறது அதன் மீதே அடித்துவிடுகின்றனர், ஒண்டிவீரன் அத்தனை வலியையையும் தாங்கி கொண்டு தனது நோக்கத்தை நிறைவேற்றும் வெறியுடன் அமைதியாக இருக்கிறார். புதிதாக அடித்த முளைகாம்பில் குதிரையை கட்டிவிட்டு சென்று விடுகின்றனர் வீரர்கள். அவர்கள் சென்ற பிறகு ஆராவரம் அடங்குவரை காத்திருந்து வலியையும் பொறுத்துக் கொண்டு இருந்துவிட்டு எழுந்தார் ஒண்டிவீரர். முளைக்காம்பை உறுவி கையை விடுவிக்க மற்றொரு கையால் முயல்கிறார் ஆனால் முடியவில்லை, தான் ஏற்கெனவே எடுத்து வைத்திருந்த பட்டாக்கத்தியால் முளைக்காம்பில் மாட்டியிருந்த கையை வெட்டிவிட்டு, இரத்தம் சொட்ட சொட்ட குதிரையை அவிழ்த்துக்கொண்டு அமைதியாக அங்கிருந்து வெளியேறுகிறார்.

வெளியேறும் பொழுது நெற்கட்டான் செவ்வலை நோக்கி நிறுத்தப்பட்டிருந்த பீரங்கிகளை ஆங்கில சிப்பாய்களின் கூடாரத்தை நோக்கி திருப்பி வைத்துவிட்டு அங்கிருந்த நகராவை அடித்து போர்முழக்கம் இட்டு குதிரையை விரட்டிக் கொண்டு நெற்கட்டான் செவ்வலை நோக்கி பறந்தோடுகிறார். நகராவின் ஒலி கேட்டு எழுந்த ஆங்கிலப்படை அவசர அவசரமாக அந்த் இரவின் இருட்டில் பீரங்கிகளை உபயோகிக்க அது அவர்களின் கூடாரத்தையே தாக்கி பலத்த சேதத்தை உருவாக்குகிறது. குதிரையில் சென்ற ஒண்டிவீரன் பத்திரமாக பூலித்தேவரை சென்றடைகிறார். ஒண்டிவீரனின் வீரத்தை மெச்சியவர் ஒரு கையை ஒண்டிவீரன் இழந்திருப்பதை பார்த்து கவலைப்படுகிறார். அப்பொழுது ஒண்டிவீரன் ஒரு கை போனால் என்ன அதற்கு பதிலாக எனக்கு நீங்கள் தங்கத்தில் ஒரு கை செய்து கொடுப்பீர்களே நாம் ஆங்கிலேயர்களுக்கு எதிரான போரில் கவனம் செலுத்துவோம் என்று கூறுகிறார்.

இந்த படையெடுப்பின் ஆதாரங்கள் ஆங்கிலேயர் ஆவணங்கள் வழியாக உறுதி செய்ய முடிகிறது. 1755ல் படையெடுப்பு நடந்ததும் ஆங்கிலேயப் படைக்கு அலெக்ஸாண்டர் ஹெரான் தலைமை தாங்கியிருக்கிறார். இந்த படையில் ஆற்காடு நவாப் முகமது அலியின் படையும் அதன் தளபதியாக ஆற்காடு நவாப்பின் அண்ணன் மகபூஸ்கானும், ஆங்கிலேயரின் சுதேசிப் படையும் அதன் தளபதியாக கான் சாகிப்பும் இருந்திருக்கின்றனர் என்பது தெளிவாகிறது. பூலித் தேவனின் கோட்டையை தகர்க்க 18 பவுண்ட் பீரங்கிக் குண்டுகள் தேவை ஆனால் ஆங்கிலப் படையிடம் 12 பவுண்ட், 14 பவுண்ட் குண்டுகளே இருந்திருக்கின்றன. இதனால் ஹெரான் பூலித்தேவரை பயமுறுத்தி கப்பத்தை வசூலிக்கும் எண்ணத்துடன் தான் முதலியார் துபாஷை அனுப்புகிறார். அந்த பயமுறுத்தலுக்கு பயப்படாமல் விதித்த நிபந்தனையை நிறைவேற்றி போரிடுகிறார் பூலித்தேவரும் அவரது தளபதி ஒண்டிவீரனும்.

அதன் பிறகு கோட்டையை தகர்க்க ஹெரான் எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிகிறது 1755ம் ஆண்டு மே மாதம் 22ம் தேதி கோட்டையை தகர்க்க முடியாமல் முற்றுகையை முடித்துக் கொண்டு மதுரையை நோக்கி திரும்புகிறது ஆங்கிலப்படை. இதன் பிறகு ஒண்டிவீரனின் மரணத்தைப் பற்றிய தகவல் எதுவும் இல்லை ஆனால் பூலித்தேவரின் மறைவிற்குப் பின்னும் அவரின் மகன்களின் படையில் இருந்து சண்டையிட்டதும் தெரிய வருகிறது. ஆனால் ஒண்டிவீரனின் மரணம் பற்றிய தகவல் இல்லை ஆனால் மக்கள் ஒண்டிவீரனை தங்களது தெய்வமாக வழிபடுகின்றனர்.

இந்த தகவல்களை அந்த பகுதியில் வசிக்கும் பிற சமூகமக்களும் உறுதி செய்கின்றனர். இன்று அருந்ததிய மக்கள் அந்த பகுதியில் எந்த நிலத்திற்கும் சொந்தகாரர்களாக இல்லை ஆனால் பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக நிலம் வைத்திருந்து விவசாயமும் செய்திருக்கின்றனர் என்பதை ஒண்டிவீரனின் வரலாறு நமக்கு தெளிவாக எடுத்துச் சொல்கிறது. 

Sunday, May 11, 2014

மதுரை வீரன் வரலாறும் திரிபுகளும் ஏன்??



மதுரைவீரன் குறித்த வரலாறுகள் பல அவரின் பிறப்பினைப் பற்றி பேசுவதில்லை ஆனால் எம்.ஜி.ஆர் நடித்த படத்தில் அவரை ஒரு அரசிளங்குமரனாக தான் சித்தரித்தார்கள். தமிழ் திரைப்படத்தை ஆதாரமாக சொல்கிறானே என்று யோசிக்க வேண்டாம் பதில் என்ன என்று அருந்ததிய மக்களே சொல்லியதை பின்னால் சொல்கிறேன்.

திருச்சி மாவட்டத்தின் ஒரு பாளையத்தை பொம்மண்ணன் என்பவர் ஆட்சி செய்து வருகிறார் அந்த மாவட்டத்தில் சின்னான் மற்றும் செல்லி என்ற அருந்ததிய தம்பதியினர் வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு பிறந்த மகன் தான் வீரன் ஆம் தாய் தந்தையர் வைத்த பெயர் வெறும் வீரன் என்பது மட்டும் தான். வீரன் பெயருக்கு ஏற்றார் போல் வீரத்திலும் தீரத்திலும் சிறந்து விளங்குகிறான். அப்பொழுது பொம்மண்ணன் மகள் பொம்மி பூப்பெய்துகிறாள், கம்பளத்தார் வழக்கப்படி வீட்டை விட்டு வெளியே மந்தையில் குடிசையிட்டு அங்கு தங்க செய்கின்றனர். இப்படி வைக்கப்படும் பெண்களை இரவில் காவல் காப்பது அருந்ததியர்களே, அவ்வழக்கத்தின் படி சின்னான் வயதான காரணத்தால் உடல்நிலை ஒத்துழைக்காததாலும் வீரனை காவலுக்கு அனுப்புகிறார். அங்கு வீரனை கண்ட பொம்மியும், பொம்மியை கண்ட வீரனும் ஒருவர் மேல் ஒருவர் காதல் கொள்கின்றனர்.

இந்த விசயம் பொம்மண்ணனுக்கு தெரிய வரும்பொழுது வீரனும் பொம்மியும் பாளையத்தை விட்டு வெளியேறுகின்றனர். பொம்மண்ணன் தனது படை வீரர்களுடன் இருவரையும் துரத்துகிறார் அப்பொழுது நடந்த சண்டையில் பொம்மண்ணன் கொல்லப்படுகிறார். அதன் பிறகு பொம்மியை அழைத்துக் கொண்டு திருச்சி செல்கிறார் திருச்சியில் அப்பொழுது விஜய ரங்க நாயக்கர் என்பவர் ஆட்சி செய்து வருகிறார். அவரது படையில் வீரனாக இணைந்து தனது திறமையினால் பல பதவிகளை பிடித்து வருகிறார். இதே காலத்தில் தான் திருமலை நாயக்கர் (1623- 1659) மதுரையில் ஆட்சி செய்து வருகிறார். அங்கு நடக்கும் திருட்டு வழிப்பறி போன்றவைகளை அடக்க ஒரு நல்ல தளபதி வேண்டும் என்று விஜய ரங்க நாயக்கரிடம் கோரிக்கை வைக்கிறார். அந்த கோரிக்கையை ஏற்று விஜய ரங்கரும் வீரனை மதுரைக்கு அனுப்பி வைக்கிறார்.

பொம்மியுடன் மதுரைக்கு வந்த வீரன் தனக்கு ஒதுக்கப்பட்ட வீரர்களுடன் இணைந்து மதுரையை சுற்றி நடந்த திருட்டு வழிப்பறி கும்பல்களை அடக்குகிறார். இதைக் கண்டு மகிழ்ந்த திருமலை நாயக்கர் மதுரைவீரன் என்று பட்டம் அளித்ததாக சொல்கின்றனர். இந்த வேளையில் தான் திருமலை நாயக்கரின் 200 காமகிளத்திகளில் ஒருவரான வெள்ளையம்மாவை சந்திக்கிறார். இது அரசனின் காதுகளை சென்றடைகிறது அவர் மதுரை வீரனை மாறு கால் மாறு கை வாங்க உத்தரவிடுகிறார். கை கால் வெட்டப்பட்ட மதுரைவீரன் உயிரும் பிரிகிறது இதைக் கேளிவிப்பட்டு வந்த பொம்மியும் வெள்ளையம்மாளும் உடன்கட்டை ஏறுகின்றனர். இது தான் மதுரை வீரன் வரலாறு. இது மதுரை வீரன் குறித்த நாட்டுப்புற பாடல்களில் மட்டும் தொகுக்கப்பட்ட வரலாறு.


ஆனால் இந்த வரலாறு திரிக்கப்பட்டது வீரன் காசிராஜனுக்கு பிறந்ததாகவும் அவன் இருந்தால் நாட்டுக்கு ஆகாது அதாவது கொடி சுற்றி பிறந்த குழந்தை என்று ஆற்றில் விட்டதாகவும் அந்த குழந்தையை எடுத்து சின்னானும் செல்லியும் வளர்த்ததாகவும் சொல்கிறார்கள். இதில் பொம்மண்ணனின் பெண் வீரனுடன் வாழ்ந்தாள் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாத சனாதன தர்மத்தினர் அதை உடைக்கும் விதமாக பொம்மியை விட உயர்ந்த சாதியை சேர்ந்தவர் வீரன் என்ற கட்டமைப்பை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இதில் ஒரு விசயம் என்னவென்றால் காசி ராஜன் காசி ஆற்றில் விட்ட குழந்தை திருச்சி மாவட்ட ஆற்றுக்கு எப்படி வந்தது என்று கேட்க கூடாது, அன்றே இன்று நாம் பேசும் நதி இணைப்புக்கான அஸ்திவாரம் போடப்பட்டிருந்தது என்று நாமாகவே கற்பனை செய்து கொள்ள வேண்டும்.

மேலும் மதுரவீரனுக்கு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கூட இடம் இருக்கிறது என்ன இடம் மட்டும் கோயில் சுற்று சுவருக்கு வெளியே. இதே போல் அருந்ததிய மக்களின் பல தெய்வங்கள் பல பிற்படுத்தப் பட்ட மக்களின் கோயிலிலும் இடம் உண்டு ஆனால் கோயிலுக்குள்ளே கிடையாது கோயிலுக்கு வெளியே சுற்றுச்சுவரை ஒட்டி தான் சுற்று சுவரே இல்லாவிடினும் கோயில் எனும் பகுதியை தாண்டியாவது தான் வைப்பார்களே தவிர கோயிலுக்குள் இந்த அரச மகன் மதுரை வீரனுக்கு அனுமதி பல இடங்களில் மறுக்கப்பட்டே உள்ளது ஒன்றிரண்டு இடங்களைத் தவிர ஆனால் அது மதுரைவீரன் வாழ்ந்த பகுதியாக இல்லாமல் மிகவும் தள்ளி இருக்கும் பகுதியாக இருக்கும்.
சாதியம் என்பது தனக்கு கீழான சாதியை மட்டும் தான் ஏற்றுக் கொள்ளாது ஆனால் தனக்கு மேற்பட்ட சாதியுடன் உறவு கொள்ள என்றுமே தயராக இருக்கும், அது தான் மதுரைவீரன் கதையில் ஏற்பட்ட திரிபுகள் ஊடாக நமக்கு தெரிவது, அதாவது பொம்மியின் கணவன் தங்கள் சாதியைவிட உயர்ந்த சாதியை சேர்ந்தவன் என்று சொல்வது.  ஆனால் இதைப் பற்றி அருந்ததிய மக்களின் நிலை என்ன என்று கேட்டால் அவர்கள் சொல்வது "எம்.ஜி.ஆர் பொய் சொல்வாரா, அவர் சொன்னால் உண்மையாகத் தான் இருக்கும்” என்கின்றனர். அருந்ததிய மக்கள் என்றுமே இப்படித்தான் யாரோ என்றோ கொடுத்த வாக்கிற்காக இன்று வரை மற்றொரு சாதியினர் தங்கள் கிராமத்திற்கு வந்தால் அவர்கள் ஊரில் தங்கும் அத்தனை நாளும் அவர்களுக்கு உணவளித்து, அவர்கள் ஊரை விட்டு செல்லும் பொழுது வீட்டுக்கு வரி போட்டு அவர்கள் செலவுக்கு பணமும் கொடுத்து அனுப்புவார்கள்.

Friday, May 9, 2014

அருந்ததியினரும் மபொசியுடன் தமிழ் தேசியமும்


மா.பொ.சிவஞானம் தாம் முதன் முதலில் பாளையக்காரர் கட்டபொம்மன் வரலாற்றை தமிழ்நாட்டுக்கு எடுத்துரைக்கிறார். கட்டபொம்மனின் தாய்மொழி தெலுங்கு என்றபொழுதும் ஒரு தமிழ்தேசியக்காரர் அவரை வெளிக்கொணருகிறார் போற்றுவோம். மா.பொ. சிவஞானம் சொல்லும் கதையில் கட்டபொம்மு ஒரு மிகப்பெரிய அரசன், ஆனால் கட்டபொம்முவைப் பற்றி வேறு கதைகளும் உண்டு அது அவன் ஒரு கொள்ளைக்காரன் என்றும். இங்கு கருப்பொருள் கட்டபொம்மன் யார் என்பது இல்லை, ஆனால் இந்த கட்டபொம்முவின் படையில் இருந்தவர்கள் யார் என்பது தான், அவர்கள் எப்படி மறைக்கபப்ட்டார்கள் என்பது தான். இதற்கான ஆதாரங்கள் அனைத்தும் இருக்கிறது. மா.பொ.சிவஞானம் எங்கிருந்து கட்டபொம்முவை கண்டுபிடித்தாரோ அதே நாட்டுப்புற பாடல்கள் மற்றும் ஆங்கிலேயே ஆவணங்களில் அனைத்து ஆதாரங்களும் இருக்கிறது. 

கட்டபொம்முவின் படை மிகப்பெரும் விசயங்களை கொண்டது கட்டபொம்முவின் தானதிகாரி சுப்பிரமணியம் ஒரு பிள்ளை, தளபதி வெள்ளையத் தேவன் ஒரு தேவர், மற்றொரு தளபதி சுந்தரலிங்கம் ஒரு பள்ளர்(தேவேந்திரகுல வெள்ளாளர்) மற்றும் இவர்களைத் தவிர மேலும் நான்கு தளபதிகள் பொட்டி பகடை, முத்தன் பகடை, கந்தன் பகடை, தாமன் பகடை இவர்கள் நால்வரும் அருந்ததியர் வகுப்பை சேர்ந்தவர்கள். ஒரு நாயக்க மன்னனின் படையில் எந்த சாதிய வேறு பாடும் இன்றி பிள்ளை, தேவர், பள்ளர் மற்றும் அருந்ததியர் என்று அனைத்து சமூகத்தினரும் இருந்திருக்கின்றனர். வீரபாண்டியன் ஒருங்கிணைத்தாரா இல்லை இவர்களே ஒன்றிணைந்தார்களா என்பது அல்ல. ஆனால் அனைவரும் ஒன்றிணைந்து இருந்தனர் என்பது உண்மை. ஆனால் மா.பொ.சி தான் கட்டபொம்மனை பற்றிய முதல் நூலை கொண்டு வருகிறர் இதில் சுந்தரலிங்கம் கூட சிறு இடம் பிடித்துவிடுகிறார் ஆனால் ஒரு தளபதியாக இல்லாமல், அதாவது அரண்மனை வேலையாளாக மேலும் மன்னருடன் அனைத்து இடங்களுக்கும் செல்பவராக. 


அருந்ததியர்களான பொட்டி, முத்தன், கந்தன் மற்றும் தாமன் எங்குமே கண்ணிற்கு படமாட்டார்கள், இன்னுமொறு விந்தை என்னவென்றால் கட்டபொம்மனின் கீழாக இருந்த 72 பாளையங்களுள் அவைகள் கவணி என்றும் அழைக்கப்பட்டுள்ளது, இதில் நான்கு பாளையங்களுக்கு தலைவர்கள் தான் பொட்டி பகடை, முத்தன் பகடை, கந்தன் பகடை மற்றும் தாமன் பகடை ஆனால் இவர்களை மறைத்துவிட்டு ஒரு வரலாற்றை எழுதியிருக்கிறார். இவர்களை மறைத்தது மட்டும் எழுதினால் பத்தாது இவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்ற வரலாறும் முக்கியமானது. 

முத்தன் பகடை பொட்டி பகடை இருவரும் மச்சான் உறவுமுறை கொண்டவர்கள், மதுரையில் கோயில் கட்டும் பணி நடந்து கொண்டிருந்தது ஒரு கோபுரம் மட்டும் கட்டும்பொழுதே இடிந்து கொண்டிருந்தது ஒரு ஜோசியர் நரபலி கொடுத்தால் தான் கோபுரத்தை முடிக்க முடியும் என்று சொல்ல சில அருந்ததியர்களை பிடித்து பலிகொடுப்பதற்காக அடைத்துவிட்டு நல்ல நாள் குறித்து காத்திருந்தனர். இதை கேள்விப்பட்ட முத்தனும் பொட்டியும் கோபமடைந்தனர், கட்டபொம்முவும் எதுவும் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கோபத்தில் இருந்தார்கள். அரசவை நடந்து கொண்டிருந்தபொழுது உள்ளே சென்று பாடியாட ஆரம்பித்தார்கல். கட்டபொம்மு அவர்களை நிறுத்தி என்ன என்று கேட்டபொழுது மதுரையில் நடக்கும் அநியாயத்தை சொல்லிய பொழுது சரி என்று கட்டபொம்மு நரபலி கொடுப்பதை நிறுத்தச் சொல்லி கடிதம் அனுப்புகிறார் அதுவும் நிறுத்தாவிடில் படையெடுப்பு நடக்கும் என்று. நரபலி நிறுத்தப்பட்டு அறுந்ததியர்கள் விடுவிக்கப்பட்டனர். 

முத்தன் பகடையும் பொட்டி பகடையும் இப்படி தங்களது புத்திசாலித் தனத்தை உபயோகித்து உயிர்களை காப்பாற்றியது மட்டுமில்லை. தங்களின் பராக்கிரமத்தால் பல எதிரிகளை அழித்தவர்கள். ஜாக்சன் துறையை சந்திக்க சென்றபொழுது தானாதி சுப்பிரமணியப்பிள்ளையும் வெள்ளையத் தேவனின் குதிரையும் ஆங்கிலேயரிடம் பிடிபட்டது. இருவரையும் மீட்டு வர சென்றார்கள் மச்சான்கள் இருவரும் ஆனால் இவர்கள் செல்லும் முன்பாக தானாதிப்பிள்ளையை சென்னை சிறைக்கு மாற்றிவிட்டனர், ஆனால் அங்கிருந்த வெள்ளையத் தேவனின் வெள்ளை குதிரையை கைப்பற்ற முடிவெடுத்தனர். தங்களுக்கு குதிரை பாசை தெரியும் என்றும் குதிரைப் பராமறிப்பவர்கள் என்று கூறி வெள்ளையத்தேவன் குதிரையிடம் சென்றனர். இவர்களை அடையாளம் தெரிந்து கொண்டு குதிரையும் இவர்களை பார்த்து துள்ளியது, இதை பார்த்த ஆங்கிலேயே வீரர்களிடம் நாங்கள் குதிரையின் மொழி தெரியும் என்று சொல்லி சமாளித்துவிட்டு. வேலைக்கு சேர்ந்து குதிரை பராமரிப்பவர்களா வேலை பார்த்தனர், நேரம் பார்த்து காத்திருந்த இருவரும் ஒரு நாள் வீரர்கள் அசந்திருந்த சமயமாக குதிரையை ஓட்டிக் கொண்டு பாஞ்சாலம் குறிச்சி வந்து சேர்ந்தனர்.

இதைப் போன்று தங்களது வேலைகளை மிகவும் சாமர்த்தியமாகவும் நேர்த்தியாகவும் செய்யக் கூடியவர்கள் தான் மச்சான்கள் இருவரும். ஆங்கிலேயர் படையெடுப்பும் ஆரம்பமாகிறது முதலில் மக்காளித் துரையின் தலைமையில் பாஞ்சாலகுறிச்சியின் மீது படையெடுப்பு ஆரம்பமாகிறது. முதல் நாள் சண்டையில் வெள்ளையத் தேவர் மரணம் ஏய்துகிறார். எதிரி எதிர்பார்க்காத நேரத்தில் ஒரு தாக்குதலை நடத்துவது என்று முடிவாகிறது, அதற்கு சுந்தரலிங்கம் தேவேந்திரனார், அதிவீர மல்லு சேர்வை மற்றும் கந்தன் பகடை மூவரும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மூவரும் இரவில் ஆங்கிலேயே படை மூகாமை நோக்கி செல்கிறார்கள். அங்கு காவல்காரர்கள் இருக்க ஆங்கிலேயே படை வீரர்கள் மது அருந்திக் கொண்டும் ஆடிப் பாடிக் கொண்டும் இருக்கின்றனர், இது தாக்குதவதற்கு சரியான சமயம் இல்லை என்று மூவரும் முடிவு செய்து அருகில் இருக்கும் புதர்க்குள் பதுங்கிக் கொள்கின்றனர். விடியகாலை வரை ஆங்கிலேயேர்களின் விருந்து கொண்டாட்டம் தொடர்கிறது, கோழி கூவியபிறகு படுக்க செல்கின்றனர். பாரா இருந்த காவல்காரர்களும் தூங்க செல்கின்றனர்.

இது தான் சரியான சமயம் என்று விழித்திருந்த ஒரு பாராக்காரனை சுந்தரலிங்கம் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் கொலை செய்துவிடுகிறார். பின்னர் வீரர்கள் தங்கியிருந்த கூடாரத்துக்குள் நுழைந்து அங்கு எரிந்து கொண்டிருந்த விளக்குகளை அனைத்துவிட்டு வீரர்களை தாக்க ஆரம்பிக்கின்றனர். தாக்கபப்ட்ட வீரர்களின் கூக்குரலை கேட்டு மற்ற வீரர்கள் எந்திரித்து தாங்கள் தாக்கப்படுகிறோம் என்பதை மட்டும் உணர்ந்து கொண்டு அவர்களும் தாக்க ஆரம்பிக்கிறார்கள், ஆனால் அவர்களுக்குள்ளாகவே தாக்கிக் கொண்டு பலர் உயிரிழக்கின்றனர். அடுத்த கூடாரத்தில் இருந்த மாக்காளித் துரை சத்தம் கேட்டு வருகிறார் அப்பொழுது அவர் கந்தன் பகடையை பார்த்து சுட்டுக் கொள்கிறார். சுந்தரலிங்கமும் அதிவீர மல்லு சேர்வையும் தங்களால் இயன்ற அளவு சேதத்தை ஏற்படுத்திவிட்டு. இறந்தவர்கள் போல் நடித்து, இறந்துகிடந்த வெள்ளை வீரர்களின் உடையை அணிந்து கொண்டு வெள்ளை வீரர்கள் போல் அங்கிருந்து தப்பித்து கோட்டைக்கு திரும்பிவிடுகின்றனர். இந்த தாக்குதலில் 100 வீரர்களும், 50 பாராக் காரர்களும் மற்றும் 7 வெள்ளையர்களும் இறந்தனர். பாஞ்சாலகுறிச்சி தரப்பில் ஒரே ஒரு உயிரை கொடுத்து 157 பேரை கொன்று குவித்தனர்.

கோட்டை திரும்பியவர்கள் கட்டபொம்மனிடம் கந்தன் பகடையின் மரணத்தை தெரியப்படுத்துகின்றனர். 

கந்தன் பகடை மடிந்த சமாச்சாரங்
        கட்டபொம்மு துரை தான் கேட்டுச்
சிந்தை கலங்கி மனது நொந்தான் அய்யோ!
       சொந்தம் பாராட்டி வளர்த்தே னென்றான்
தன்னிமை யாகவே வளர்த்தேனே வெகு
        சமத்துக் காரப் பகடை யென்றான்
அநியாய மாகவே முடிந்தானே அவன் 
         அவன் சொன்ன சபதம் முடிப்பானே
எதிரிகள் வந்து யெதிர்த்து விட்டால் அதற்
          கேத்தக் கத்திகள் சுத்திவிட்டால்
எதிரிச் சவாலுஞ் சாய்ந்திடுமே நான்
           எடுத்த சவால் கெலித்திடுமே
கந்தன் பகடையைத் தோற்றோமென்றான் இனிக்
            கண்ணாலே யென்றைக்கு காண்போமென்றான்..

இத்தகைய பாடல்கள் வழியாகவே கட்டபொம்முவின் சரித்திரம் எழுதப்பட்டது ஆனால் அவைகளில் கூறப்பட்ட பகடைகள் மற்றும் சுந்தரலிங்கம் போன்றவர்களை மறைத்து வரலாறு எழுதப்பட்டது.

இதன் பின்னர் பொட்டிப் பகடையும், முத்தன் பகடையும் மாறுவேடம் பூண்டனர் தார்ப்பாய்ச்சி வேட்டியை கட்டிக் கொண்டு உடலெல்லாம் திருநீறு இட்டுக் கொண்டு கையில் கைப்பந்தங்கள் ஏந்திக்கொண்டு, அதனுள் வாளை மறைத்துவைத்துக் கொண்டு ஆங்கிலேயரின் கூடாரம் நோக்கி சென்றனர். அப்பொழுது ஆங்கிலேயே வீரர்கள் இவர்களை பிடித்து தளபதியிடம் கொண்டு சென்றனர். அவர் இவர்களிடம் பாஞ்சாலகுறிச்சி கோட்டைக்குள் செல்லும் ரகசிய வழி இருக்கிறதா என்று கேட்டனர், இல்லை என்று சொன்னவர்கள் ஆனால் கட்டபொம்மன் முருக பக்தன் எங்களைப் போல் வேடம் அணிந்து கொண்டு சென்றால் கோட்டைக்குள் நுழையலாம் என்று கூறினர். அந்த திட்டம் பிடித்திருந்ததால் வீரர்களை இவர்களைப் போல வேடம் அணிந்து கொண்டு இருவருடன் செல்ல கூறினார் தளபதி. வந்த வீரர்களை கூப்பிட்டுக் கொண்டு கோட்டை நோக்கி சென்றவர்கள் சிறிது தூரம் தாண்டிய பிறகு தங்களது வாட்களை வெளியில் எடுத்து வீரர்கள் சிலரை கொலை செய்தனர், இவர்களின் தீப்பந்தமும் கிழே விழுந்து அணைந்துவிட்டதால் இருட்டில் இவர்கள் என்று நினைத்து வீரர்கள் ஒருவருக்கு ஒருவர் வெட்டிக் கொண்டனர். தங்களை முழுவதும் உணர்ந்து சண்டையை நிறுத்தும் முன் மச்சான்கள் இருவரும் தப்பி வெளியேறி கோட்டைக்கு திரும்பிவிட்டனர். 

இப்படி தொடர்ந்து பல வழிகளில் ஆங்கிலேயேர்களை தாக்கினர் மச்சான்கள் இருவரும். 

முத்தன் பகடையும் பெட்டிப் பகடையும்
      மைத்துன மார்களிருபேரும்
கத்தி வீசிக்கொண்டு எமன் காலன் போலே
      காங்கு கூடாரத்தில் நுழைந்திட்டான்
கத்தி யடித்தல்லோ பார்க்கிறான் துரை
      கத்தியைப் பார்த்தல்லோ வெட்டுகிறான்
எத்தனை சீமைச் சாராயக் குப்பிகள் 
      அத்தனையும் பூசையும் உடைத்திட்டான்
தேசுகி வாசுகி படுத்திட்டான் முன்னே 
       சீமைத் துரைகளும் முடித்திட்டான்

இப்படி தீவிரமாக போரிட்டாலும் போரில் வெற்றி கிடைக்காது என்பதை உணர்ந்த கட்ட பொம்மன் கோட்டையிலிருந்து வெளியேறுவது என்று முடிவெடுத்தார். கோட்டையை விட்டு வெளியில் வந்த கட்டபொம்மன், ஊமைத் துரையும் வேறு வேறு பக்கம் சென்றனர். கட்ட பொம்மன் புதுக்கோட்டை மன்னர் விஜயரகுநாத தொண்டரிடம் அடைக்கலம் புகுந்தார். அங்கு தொண்டைமானால் கைது செய்யப்பட்டு ஆங்கிலேயரிடம் ஒப்படைக்கப்பட்டார். அதே சமயத்தில் ஊமைத்துரையும் பொட்டி பகடையும் முத்தான் பகடையும் கன்னிவாடி காட்டுக்குள் மறைந்திருந்தனர். அக்னீசு துரை காட்டை முற்றுகையிட்டான் ஆனால் பொட்டி பகடையும் முத்தான் பகடையும் ஆங்கிலப் படையை பச்சைமலை கோட்டை வரை எதிரிகளை துரத்தி அடித்தனர். இதே சமயத்தில் கோட்டையில் இருந்த சுந்தரலிங்கம் தேவேந்திரனார் தனது முறைப்பெண் வள்ளியுடன் சென்று தங்களது உயிரைக் கொடுத்து ஆங்கிலேயர்களின் ஆயுதக் கிடங்கை அழிக்கின்றனர்.

கட்டபொம்மன் சிறைபட்டிருந்த நேரத்தில் ஊமைத் துரையை பார்கக் விரும்புவதாக கட்டபொம்மனின் கடிதம் வருகிறது, ஊமைத்துரையும் தன் மறைவிடத்தை விட்டு அண்ணனை பார்க்க கிளம்பி ஆங்கிலேயரால் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் வைக்கப்படுகிறார். அங்கு அவருடன் சேர்த்து பொட்டி பகடையும் இருக்கிறார். ஊமைத்துரைக்கு உதவுவதற்காக பொட்டி பகடை நியமிக்கப்படுகிறார். ஊமைத் துரைக்கு தேவையானவைகளை வெளியில் சென்று வாங்கி வரும் பொறுப்பு பொட்டி பகடைக்கு அளிக்கப்படுகிறது. ஊமைத்துரை கடிதம் கொடுக்க அதை தன் செறுப்புக்குள் வைத்து தைத்து எடுத்துக் கொண்டு புலிக்குத்தி நாயக்கரிடம் கடித்தத்தை சேர்க்கிறார் அதே போல் புலிக்குத்தி நாயக்கர் கொடுத்த கடிதத்தையும் ஊமைத் துரையிடம் கொண்டு வந்து சேர்க்கிறார். ஊமைத் துரையின் திட்டத்தின் படி விறகு சுமப்பவர்களாக கோட்டைக்குள் நுழைந்த வீரர்கள் உதவியுடன் ஊமைத் துரை பாளையங்கோட்டையில் இருந்து தப்பித்து வெளியில் வந்து பாஞ்சாலக் குறிச்சி கோட்டையில் தனது அரசை நிறுவுகிறார்.

அக்னீசு துரை பாஞ்சால குறிச்சி மீது படையெடுக்கிறார், மக்காளித் துரையும் படைகளுடன் வந்து அக்னீசு துரையுடன் இணைந்து கொள்கிறார். கோட்டைக்கு வெளியே முற்றுகையிடுகின்றனர் ஆங்கிலேயர்கள் பொட்டிப் பகடையும் கிடுகிட்டி நாயக்கரும் மாறுவேடம் அணிந்து ஆங்கிலேயர் முகாம் சென்று ஆடல் பாடல்களை நடத்தி ஆங்கிலேயரை மகிழ்விக்கின்றனர். அப்பொழுது 50 படைவீரர்களுடன் வந்த ஊமைத் துரை வெள்ளையர்களை தாக்கி நிலைகுலையச் செய்து அங்கிருந்த பட்டத்து குதிரை, பட்டாக் கத்தி, பீரங்கி, உணவுப் பொருட்கள் சாராயம் போன்றவற்றை கொள்ளையடித்து கோட்டைக்கு திரும்புகின்றனர். இதில் பெரும் பங்கு வகிக்கிறார் பொட்டி பகடை. ஊமைத் துரை பொட்டிப் பகடையையும் முத்தான் பகடையையும் கோட்டை காவலுக்கு தளபதிகளாக நியமிக்கிறார். ஏட்டையபுரக் காரர்களின் யோசனையின் படி கோட்டையைச் சுற்றி பஞ்சு மற்றும் மிளகாய் மூட்டைகளை அடுக்கி தீ வைத்துவிட்டு தொடர்ந்து ஆங்கிலேயர்கள் தாக்குதலை செய்கின்றனர். இதில் மிளகாய் நெடியின் காரம் தாங்க முடியாமல் வீரர்கள் கலைகின்றனர். இந்த சண்டையில் பொட்டி பகடையும் முத்தன் பகடையும் வீரமரணம் அடைகின்றனர். கோட்டையிலிருந்து வெளியேறிய ஊமைத்துரை மருதுபாண்டியர்களிடம் அடைக்கலமடைந்தார். 

இப்படி வீரஞ்சொறிந்த படைத் தளபதிகளை அருந்ததியினர் என்பதற்காகவும் தேவேந்திரர்கள் என்பதற்காகவும் மறைத்தும் இழிவுபடுத்தியும் ஒரு வரலாற்றை எழுதி அதை மக்களையும் நம்பவைத்த மா.பொ.சிவஞானம் தான்.  

சாதி ஒழிப்பே தமிழ் தேசியம் - தோழர் பொன்பரப்பி தமிழரசன்


வழி நிற்போம், களைகளை களைந்திடுவோம்.. 

Thursday, May 8, 2014

மாட்டுப் பொங்கல் எனும் திட்டி சுத்துதல்


காரைக்குடி பக்கத்தில் கண்டனூர் கிரமம் என்று சொல்ல முடியாத நகரம் என்றும் சொல்ல முடியாத ஒரு ஊர். எனென்றால் கிராமம் என்பதற்கு அடையாளமாக நமக்கு மனதில் பதிந்து இருப்பது எல்லாம் ஓட்டுவீடுகளும் குடிசைவீடுகளும் நிறைந்த சாலைகள் தான் ஆனால் இந்த காரைக்குடியில் கிராமங்கள் என்று அழைக்கப்படும் அத்தனை ஊரிலும் மச்சுவிட்டில் இருந்து குச்சுவீடு வரை அனைத்தும் இருக்கும், அதிலும் ஒவ்வொன்றும் அரண்மனை போன்ற தோற்றத்தடுன் மூன்று கட்டு வீடுகள் என்பது குறைந்த பட்ச அளவீடாக இருக்கும் இதை கிராமம் என்ற சொல்ல முடியும் இருந்தாலும் கிராமமே இவைகள். முதன் முறையாக நான் ஒன்பதாவது படிக்கும் பொழுது தான் ஊருக்கு கூட்டிச் சென்றார்கள், தரையோடு இருக்கும் கிணறுகளின் தயவால், அது வரை ஊருக்கு கூட்டிச் சென்றது இல்லை.  ஒரு பொங்கல் அன்று மதுரையில் வீட்டில் பொங்கல் வைத்து மதியம் சாப்பிட்டுவிட்டு கிளம்பினோம். மாலைக்குள் ஊர் போய் சேர்ந்தோம் சின்ன ஆயாவின் வீட்டில் தான் இரவு தங்கல் அது ஒரு குடிசை வீடு, சாணி மொழுகுவது என்றால் என்ன என்று அந்த வீட்டில் தான் பார்த்து தெரிந்து கொண்டேன்.


இரவு வீட்டின் வாசலிலேயே பாய் போட்டு படுத்து உறங்கினார்கள் என்னை மட்டும் வீட்டுக்குள் படு, காலை பனி உனக்கு ஆகாது என்று வீட்டுக்குள் தள்ளிவிட்டனர், வீட்டுக்கு கடைகுட்டியா பிறந்தால் இது ஒரு தொல்லை. மின்விசிறியோ மின் விளக்கோ எதுவும் இல்லாத ஒரு வீடு, ஆனால் காற்றோட்டத்திற்கு எந்த குறையும் இல்லை. காலையில் 5 மணிக்கு எல்லாம் உருட்டும் சத்தங்கள் எழுந்து உட்கார்ந்தேன், பல்லு விளக்கும் முன்பே காப்பிதண்ணி குடி என்று கையில் டம்ளரை திணித்தார் அழகு சித்தி. குடித்துக் கொண்டிருக்கும் பொழுது சீக்கிரம் கிளம்பு கம்மாயில் குளிக்க போகலாம் என்றார் அம்மா. முதல் முறை கம்மாய் குளியல் நீச்சல் தெரியாது அம்மா நீச்சல் அடிப்பதை வேடிக்கை பார்த்தேன். அம்மாவே நீச்சலும் கத்து கொடுத்தார் கைகளில் படுக்கப் போட்டு, கற்றுக் கொண்டேனோ இல்லையா என்று எனக்கு தெரியாது ஆனால் நல்லா தண்ணி குடிச்சேன். அதன் பிறகு வீட்டிற்கு வந்தோம் அதற்கு முன்பாக அங்கு எல்லாம் தயராக இருந்தது. வெத்தெலை பாக்கு தட்டு தாம்பாளம், தேங்காய் என்று, ஆயா ஒரு பசு மாடு வளர்க்கிறார் மேலும் அது ஈன்ற காளை கன்னுகுட்டி வேறு இருந்தது. அவைகளை சித்தியும் ஆயாவும் குளிப்பாட்டிக் கொண்டு இருந்தனர் கிணற்றில் நீரிறைத்து. சரி கிணத்தில் நீர் இறைக்கலாம் என்று போனால் அந்த பசு மாடு முட்ட வந்தது தான் மிச்சம், நானும் ஓடி தள்ளி வந்து நின்று கொண்டேன்.


அப்புறம் தெருவில் மூன்று வீட்டிலோ நான்கு வீட்டிலோ தான் மாடு வளர்த்தார்கள் ஒவ்வொரு வீடாக திட்டி சுத்த போகிறோம் என்று சிறுவர்கள் இளைஞர்கள் என்று ஒரு கூட்டமாக கிளம்பினார், என்னை அவர்களுடன் போகச் சொன்னார்கள் முதல் நாள் மாலையே எதிர்த்த வீட்டில் இருந்த செல்லப்பன் நட்பாகிவிட்டான், சரியென்று அவனுடன் ஒட்டிக் கொண்டேன் முதலில் ஒரு விட்டுக்கு சென்றோம் அவர்கள் சூடம் கொளுத்தி மாட்டிற்கு காட்டினார்கள் அப்புறம் அங்கு வைத்திருந்த பொங்கப்பானையில் இருந்து கூட்டாஞ்சோறை மாட்டிற்கு கொடுத்தார்கள் அதன் பிறகு அனைவரும் கையில் வைத்திருந்த தப்படித்துக் கொண்டு, சங்கு ஒன்றை ஊதிக்கொண்டு மாடுகளை சுற்றி வந்தோம் அப்பொழுது மாடுகள் மிரண்டு கொழுவில் இருந்து அறுத்துக் கொள்ள முயன்றன் வீட்டினர் மூன்று சுற்றுகள் முடிந்ததும் மாட்டை அவிழ்த்துவிட்டனர். மாட்டின் கழுத்தில் கரும்புத் துண்டுகள், பனங்கிழங்கு துண்டுகள் போன்றவை கட்டி விடப் பட்டிருக்கும் வாசல் வழியை மட்டும் விட்டுவிட்டு அனைவரும் சுற்றி நின்ற பொழுது வாசலை நோக்கிய மாட்டின் கழுத்தில் இருந்த இந்த பனங்கிழங்கு மாலையை பறித்தெடுத்தனர் அத்தனை பேரும் நானும் எங்கிட்டு ஓடுவது என்று தெரியாமல் ஓடி வந்த கன்னுகுட்டி கழுத்தில் இருந்து உருவினேன். அடுத்து சின்ன ஆயா வீட்டில் அங்கு திட்டி சுத்தி முடிச்சு மாட்டை அவிழ்த்து விடும் பொழுது பலர் விலகினர், ஒருத்தர் வேறு டே அதுகிட்ட போகாதீங்கடா முட்டி தூக்கிப்புடும் மூணு நாளைக்கு எந்திரிக்க முடியாது என்று வேறு குரல் கொடுத்தார். அப்படியும் ஒரு பையன் வாசலில் நின்று கழுத்தில் இருந்த பனங்கிழங்கு மாலையை உருவிட்டான்.

பிறகு கடைசியாக செல்லப்பன் வீட்டில் திட்டி சுற்றினோம், ஆரம்பிக்கும் முன்பே செல்லப்பன் காதை கடித்தான் ஏய் ஹரி ஜாக்கிரதை திட்டி சுத்தி முடிச்சவுடனே சிட்டாக் கிளம்பிடும் மஞ்சள் தண்ணி ஊத்த ஆரம்பிச்சுடுவாளுகடா ஜாக்கிரதை என்றான். அன்று நான் வேற அழகா வெள்ளை டீசர்ட் வேறு போட்டிருந்தேன் என் வீட்டுக்கு ஓடிறலாம் என்று பார்த்தால் அங்க என் சித்திகள் அண்டவை தூக்கிட்டு வந்து வாசலில் வைத்தார்கள், பார்த்தவுடன் புரிந்தது முடிந்தது நம்ம கதை போய் சட்டையை மாத்த கூட நேரம் இல்லையே என்று யோசிக்கும் பொழுது நண்பனின் தங்கை அண்ணே இன்னைக்கு என்னிடம் மாட்டினீங்க என்று நின்று கொண்டிருந்தவள் கிழே குணிந்து ஒரு சிறிய பானையை எடுத்து காண்பித்தாள் முடிஞ்சது நம்ம டீசர்ட் கதி அதோ கதி தான் என்று நினைத்தேன். மூன்றாவது சுத்து சுத்தும் பொழுதே செல்லம்மா பானையை எடுப்பதை பார்த்தவன் விவரமாக மெதுவாக பசங்க பின்னாடி தங்கி மாட்டை அவிழ்த்து விட்டவுடன் மாடு ஓடியாதா இல்லையா என்று எனக்குத் தெரியாது வயக்காட்டில் இருக்கும் பிள்ளையார் வடத்தை நோக்கி ஓடினேன் அப்படியும் யார் மீதோ ஊற்றிய தண்ணீர் என்னை குளிப்பாட்டியது சரிடா ஹரி விடு என்று மனசை தேத்திக் கொண்டாகிவிட்டது.

இது தான் நான் பார்த்த முதல் மஞ்சுவிரட்டு, அன்று மதிய உணவின் போது பெரியய்யாவிடம் கேட்டு தெரிந்து கொண்டது. அவருக்கு ஊருக்குள் பெயர் சுள்ளான் அய்யா, சுள்ளான் என்றால் எறும்பு அவரை யாரும் எதுவும் சொல்ல முடியாது. சொல்வதற்குள் வேலையை முடித்துக் கொண்டு வந்து நிற்பார், ஆயா ஹரி வந்திருக்கான் நண்டு என்று பேச ஆரம்பிப்பார் அதற்குள் சைக்கிளை எடுத்திருப்பார் 3கி.மீ தள்ளியிருக்கும் சாலையை நோக்கிச் சென்றிருப்பார் அதனாலேயே அவருக்கு சுள்ளான் அய்யா என்று பெயர் வந்தது என்று செல்லப்பன் சொன்னான். மதியம் சாப்பிடும் பொழுது அய்யாவிடம் என்னய்யா இது தான் ஜல்லிக்கட்டா சினிமாவில் எல்லாம் என்னவோ ஹிரோவும் மாடும் மட்டும் நேருக்கு நேர் நின்று சண்டை போடுவதாக காட்டுவார்களே அந்த மாதிரி எல்லாம் கிடையாதா என்று கேட்ட பொழுது தான் சொன்னார். மாடு பிடிப்பதில் இருக்கும் வித்தியாசங்களை.


மஞ்சுவிரட்டு என்பது வீடுகளில் நம் உபயோகத்திற்காகவும் விவசாயத்திற்காகவும் பயன்படுத்தும் மாடுகளை அன்று அவை நமக்கு செய்த உதவியை நினைவு கூர்ந்து அவைகளை அலங்கரித்து வணங்கி, அவை சுதந்திரமாக திரிய விரட்டி விடுவது. இது பெரும்பாலும் மந்தைகளில் நடந்தது பிறகு ஒவ்வொரு வீட்டின் தொழுவத்தில் நடைபெற ஆரம்பித்தது. மாடுகளின் எண்ணிக்கை குறைந்து விட்ட பிறகு மாட்டுத் தொழுவத்திற்கு மாற்றிக் கொண்டனர். விவசாய உபகரணங்கள் அதிகரித்து மாடுகளின் தேவை குறைந்த பிறகு இத்தகைய நிலைக்கு சென்றது.

ஏறு தழுவுதல் இதற்கான மாடுகள் தனியாக வளர்க்கப்படுபவை இவைகள் பெரும்பாலும் பெண்களே வளர்ப்பார்கள், ஆண்களை அருகில் விடாமல் வளர்ப்பார்கள். இவை ஏறுதழுவுதல் என்ற விளையாட்டின் நோக்கிற்காக மட்டுமே வளர்க்கப்படுபவை இதை விவசாயத்திற்கோ அல்லது போக்குவரத்திற்கோ பயன்படுத்துவதில்லை. இவைகளை கோயிலுக்கு அருகே வாடிவாசல் என்ற பகுதி இருக்கு இலை அல்லது அமைப்பார்கள் அந்த வாடிவாசலை விட்டு வெளியில் வந்தால் ஒரு பெரிய தெரு ஊருக்கு வெளியே செல்லுமாறு அமைக்கப்பட்டிருக்கும். இந்த வாடிவாசலை விட்டு வெளியில் வரும் காளைகளை இளைஞர்கள் அதன் திமிலை தழுவிக் கொண்டு குறிப்பிட்ட தூரம் வரை செல்ல வேண்டும் அப்படி சென்றார்கள் என்றால் வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவார்கள். இதையே ஏறு தழுவுதல் என்பார்கள்.

ஜல்லிகட்டு என்பது ஊர் மைதானத்தில் சுற்றிவர தடுப்புகள் அமைத்து அதில் காளையை அவிழ்த்து விடுவார்கள் அப்படி வரும் காளையை இளைஞர்கள் அடக்க வேண்டும் ஆனால் இந்த முறை இப்பொழுது பெரும்பாலும் குறைந்துவிட்டது பிள்ளையார்பட்டி அருகில் இருக்கும் சிராவயலில் மட்டும் நடக்கிறது, மேலும் வேறு எந்த ஊரிலாவது யாராவது முன்வந்து இத்தகைய போட்டிகளை நடத்தினால் தான் உண்டு அது எப்பொழுதாவது நடைபெறும் என்றார். அது தான் உங்க சினிமாவில் வருவது ஆனால் அது ஒத்தைக்கு ஒத்தை எல்லாம் கிடையாது 10 பேருக்கு மேல் கூட களத்தில் சுற்றி நின்று காளையை விரட்டி அதன் திமிலை பிடிக்க முயற்சிப்பார்கள் திமிலை பிடித்து அது அந்த சுற்று அரணை தாண்ட வலியில்லாமல் பிடித்தவரை உதறித் தள்ள முயற்சிக்கும் அந்த முயற்சியை முறியடித்து காளை களைத்துப் போகும் வரை பிடித்து நிற்பவரே வெற்றிபெற்றவர் என்று அறிவிக்கப்படுவார் என்றார்.

இந்த விளையாட்டுகள் அனைத்தும் விவசாயத்தை முடித்துவிட்டு அறுவடையை வீட்டுக்கு கொண்டு வந்த மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வது மட்டுமில்லை தனக்கு இந்த விளைச்சலில் உதவிய அனைவருக்கும் நன்றி சொல்லும் விதமாகவும். உழைத்து உரமேறிய தனது தினவெடுத்த தோள்களை போருக்கு தயார் செய்யும் நோக்கிலுமே நடந்து வந்துள்ளது, அதாவது உழைப்பின் வேகத்தில் எதிரியுடன் மல்லுக்கட்டும் தைரியத்தை இழந்துவிட்டோமா இல்லை இன்னும் தைரியம் இருக்கிறதா என்பதை பரிசோதனையாக தெரிந்துகொள்வது, தன்னை விட பல மடங்கு ஆற்றல் வாய்ந்த காளையை தழுவிக்கொண்டு பயணிப்பது என்பது இதன் அடிப்படையிலேயே. அதன் ஆற்றலுக்கு ஈடுகொடுத்து விடாப்பிடியாக நிற்கும் தன் மனதைரியத்தை வளர்த்துக் கொள்ளும் ஒரு போருக்கான தயாரிப்பு முறையே ஜல்லிக்கட்டு என்று சொன்னார்.

ஆனால் இன்று நாம் ஜல்லி கட்டு என்று ஏறுதழுவுதலையே அழைத்துக் கொண்டிருக்கிறோம், அலங்காநல்லூர், பாலமேடு என்று அனைத்துமே ஏறு தழுவுதல் என்ற அடிப்படையிலேயே நடைபெறுகிறது. சிராவயலில் ஜல்லிகட்டு நடப்பதாக கூறுகிறார்கள் ஆனால் அரண் அமைத்து நடக்கிறதா இல்லை ஏறுதழுவுதல் முறையில் நடக்கிறதா என்பது தெரியவில்லை.