Thursday, July 10, 2014

மா.பொ.சியும் ஈழத் தமிழர்களும்


தமிழ் தமிழர் தமிழ்நாடு என்றாலே பல பிரச்சனைகள் முன்வைக்கப்படுகிறது, அதுவும் திராவிட எதையும் தமிழருக்காக சாதிக்கவில்லை என்று இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் பொழுது தார் கொண்டு இந்தி எழுத்துகளை அழித்தால் பின்னாலேயே மண்ணெண்ணெய்யுடன் சென்று தாரை சுத்தம் செய்து இந்தியை வெளிக்கொணர்ந்த மா.பொ.சியை தமிழ் தேசிய அடையாளமாக முன்னிருத்துகிறார்கள் நவீன தமிழ்தேசியவாதிகள். தனது கொள்கையாக மா.பொ.சி சொன்னது.. 


உரிமைக்கு எல்லை வேங்கடம்
உறவுக்கு எல்லை இமயம்
நட்புக்கு எல்லை உலகம்

என்று முழங்கினார். இப்படி இந்திய தேசியத்தின் கீழ் தான் தமிழ்நாட்டின் விடிவைத் தேடினார் இப்படி இந்திய தேசியத்தின் கீழ் விடிவு தேடியவர்களே இங்கு தமிழ் தேசியத்தின் மண்ணுரிமை போராளியாகவும், தமிழ்தேசியத்தின் வழிகாட்டியாகவும் முன்னிறுத்தப்படுகிறார்கள்.
மா.பொ.சி ஒரு விடுதலை போராட்ட காலத் தலைவர் அவரின் இந்தியப் பாசம் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் கீழாக ஒருங்கிணைக்கப்பட்டது என்பது நாம் அறிந்ததே. அதனால் எந்த பிரச்சனையும் இல்லை நமக்கு, ஆனால் தமிழர்களுக்கான தீர்வுகளாக அவரின் போராட்டங்கள் என்பது இந்திய தேசியத்தின் கீழாகவே இருந்தது. இன்னும் சொல்லப் போனால் ஈழப் பிரச்சனைகளில் பல வேலைகளை செய்துள்ளார் என்று மார்தட்டுவார்கள். அவரின் ஈழப்பிரச்சனையின் பார்வை எனபது தனி ஈழத்தை ஆதரிக்கிறீர்களா என்று கேட்டால் ”அது சிங்களவர்களின் செயல்பாட்டை பொறுத்து இருக்கிறது ஈழத் தமிழ்மக்களின் விருப்பம் நான் அன்னியன் என்னால் எதுவும் சொல்ல இயலாது” என்றே கூறுவார். அதாவது இன்றைய காங்கிரஸும் பிஜேபியும் மத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும் ஈழம் என்பது அந்நிய நாட்டு பிரச்சனை அதில் நாங்கள் எப்படி தலையிடுவது என்று கைகழுவும் பழக்கத்தை முன்மாதிரியாக நின்று சொல்லிக் கொடுத்தவர் மா.பொ.சி தான். 

இது மட்டுமல்ல ஈழ போராட்ட இயக்கங்கள் அனைவரும் இந்தியா சொன்னதைச் செய்ய வேண்டும் என்ற ஊதுகுழலாக செயல்பட்டவர் தான் மா.பொ.சி. ராஜிவ் ஜெயவர்தனே ஒப்பந்தம் ஏற்பட்டபொழுது இந்திய அரசும் அமைச்சர்களுக்கு கேட்டு கொண்டதற்கிணங்க ஈழப் போராட்ட தலைவர்களுடன் பேசி ஒப்பந்தத்தை ஒத்துக் கொள்ள வேலை பார்த்தவர்களில் மிகவும் முக்கியமானவர் மா.பொ.சி அவர்கள் தான். ஈழத்தைச் சார்ந்த யாருமே இல்லாத ஒப்பந்தத்தை இந்தியாவின் நலனுக்காகவும் சிங்களவரின் நலனுக்காகவும் போடப்பட்டபொழுது அதற்கு பிரசார பிரங்கியாக செயலாற்றியவர் மா.பொ.சி. இந்த ஒப்பந்தத்தை இந்தியாவின் கைப்பாவைகளாக இருந்த பல ஈழ போராட்ட இயக்கங்கள் ஏற்றுக் கொண்டன இந்தியாவின் மீறி எதுவும் செய்ய முடியாது என்ற தங்களின் இயலாமையின் கீழாக. ஈழத் தமிழர் நலனை பிரதிபலிக்காத ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ளாமல் இது எங்களுக்கு தேவை இல்லை என்று சொன்னவர்களே கடைசி வரை போராட்டத்தை காப்பாற்றினர், அன்று இந்தியாவிற்காக வளைந்து கொடுத்து இருந்தால் இன்று ஈழத் தமிழினத்தை நாம் தேட வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கும்.

இப்படி வருங்கால நோக்கம் எதுவும் இல்லாமல் இந்திய அரசின் பிராசார பிரங்கியாக செயல்பட்டவர் மா.பொ.சி அதே காலகட்டத்தில் யாழ்ப்பாண பல்கலையில் இருந்த பேராசிரியர்கள் அனைவரையும் இவருக்கு தெரியும் அவர்கள் அனைவருமே இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ளவியலாது என்றார்கள். ராஜிவ் ஜெயவர்தனா ஒப்பந்தம் ஜூலை 29, 1987 அன்று கை சாத்திடப்பட்டது. ஆனால் ஜுலை 19ம் தேதி யாழ்ப்பாணப் பல்கலையில் நடத்தபப்ட்ட கருத்தரங்கில்

திரு க.சிற்றம்பலம் அவர்கள் பேசியது  “திம்பு பேச்சுவார்த்தையின் போது முன்வைக்கப்பட்ட தமிழர் தாயகம், தமிழர் தேசிய இனம், சுயநிர்ணய உரிமை என்பனவும் அங்கீகரிக்கபப்ட வேண்டும், மலையகத் தமிழர்களுக்கு வாக்குரிமை வழங்க வேண்டும் இதனடிப்படையில் தான் பேச்சுவார்த்தைக்கு போகலாம். இதற்கும் குறைந்த தீர்வுக்கு நாம் பேச்சு வார்த்தைக்கு போகக் கூடாது என்று கூறினார்.  

மு. திருநாவுக்கரசு அவர்கள் பேசியது “சில நியாயங்களை சுட்டி காட்டி போராட்டத்தை அழித்துவிடுவது சரியல்ல, எமக்குள்ளே சில முரண்பாடுகளுக்காக சரணாகதி அடையக் கூடாது. எமது தேசிய இனத்தின் சுயாதீனதிற்கான வாய்ப்புகளை செயலுருப்படுத்த வேண்டும். அதற்காக ஒர் அரசியல் தளம் வளர வேண்டும். அந்த அடித்தளத்தில் சரணாகதியற்ற தீர்வுக்கே நாம் போக வேண்டும்” என்று கூறினார். 



பேராசிரியர் கா.சிவத் தம்பி அவர்கள் பேசியது ”எமது போராட்டத்தின் தன்மை சர்வதேசரீதியில் நியாய முக்கியத்துவம் பெற்றுவரும், முகிழ்விடும் இக்காலகட்டத்தில் இப்படிப்பட்ட இடைக்கால தீர்வுகள் ஆபாத்தானவை, மேலும் இவ்வளவு அழிவுகள், உயிர்சேதங்கள், உடமை இழப்புகள் பின்னரும் நிச்சயமற்ற தீர்வினை விட நாம் தொடர்ந்து அல்லல் படுவதே மேல், எமது துன்பத்தின் மூலமாகவேனும் எதிர்காலச் சந்ததியின் இன்பத்துக்கும் வழி கோலலாம்” முரசொலி (26-7-1987)

இந்த கருத்தரங்கத்தில் மேலும் கலைபீடாதிபதி பேராசிரியர் என். பாலகிருஷ்ணன், கலாநிதி எஸ். கிருஷ்ண ராஜா, கலாநிதி. வ. நித்தியானந்தன், திரு. எஸ். சத்தியசீலன் போன்றவர்களும் கலந்து கொண்டு ஒப்பந்தத்தின் கூறுகள் எந்த தீர்வையும் தரவில்லை என்பதை வலியுறுத்தினர்.

இப்படி ஒரு பல்கலை பேராசிரியர்கள் மற்றும் அங்கிருந்த அறிவியலாளர்கள் என்று அனைவரும் மறுதளித்த ஒப்பந்தத்தினைத் தான் ஈழத் தமிழர்கள் மீது திணிக்க விரும்பினர். இவரைப் போன்றவர்களால் கட்டமைக்கப்பட்ட மாபெரும் ராஜிவ் ஜெயவர்தனே ஒப்பந்தம் ஈழத்தமிழர்கள் மீது திணிக்கப்பட்டது அதற்கு அங்கு போராடிய சில இயக்கங்களும் துணை போனது. புலிகள் இயக்கம் முதலிருந்தே தனது எதிர்ப்பை தெரிவித்தது, இருந்த போதும் ஒப்பந்தம் திணிக்கபப்ட்ட பிறகு நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஒத்துழைப்பு கொடுக்கவும் ஒப்புக்கொண்டது புலிகள் இயக்கம். ஆனால் நிபந்தனைகள் மீறப்பட்டு சிங்கள இராணுவம் செய்த அனைத்து விசயங்களையும் இந்திய இராணுவமும் செய்த பொழுது இந்தியா எனும் பெரிய நாடு என்பதைவிட எம்மக்களின் வலிக்கான தீர்வே முக்கியம் என்று எதிர்த்து நின்று போராடினர் புலிகள் இயக்கம். ஆனால் அன்று இந்த ஒப்பந்தத்தை திணித்த மா.பொ.சியோ கடைசிவரை ஒபந்த்திற்கு வக்காலத்து வாங்கவே செய்தார். 1990ல் பத்மநாபாவிற்காக இரங்கல் கூட்டம் நடந்தபொழுது அதிலும் திரும்பவும் ஒப்பந்தத்தை வலியுறுத்தியே பேசினார் (விடீயோ இணைக்கபப்ட்டுள்ளது)
                                     

சிறு குழந்தைகள் கூட படித்தால் ராஜிவ் ஜெயவர்தனே ஒப்பந்தத்தில் இந்திய நலனும் சிங்களர் நலனும் பேனப்படுவது மட்டுமே இருப்பது தெரியும் ஆனால் அதை தூக்கி பிடித்துக்கொண்டு நின்றவர் தான் மா.பொ.சி, அதுமட்டுமல்லாமல் இந்த ஒப்பந்தத்திற்காக் ஒரு மூவர் அணியாக செயல்பட்டிருக்கிறார் அதில் இருந்த மற்ற இருவர் எழுத்தாளர் ஜெயகாந்தனும் இன்று வரை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாதா  இரட்டை நாக்கு சோமாறி “சோ”. இப்படி சோவுடன் கூட்டணி அமைத்து ஈழத்தமிழர்கள் நலனைப் பற்றி பேசாத ஒரு ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ளாதது புலிகள் இயக்கம் செய்த தவறு என்று பிதற்றி திரிந்தார்.

இத்துடன் நின்றிருந்தால் பரவாயில்லை இன்று வரை முரண்பட்ட இயக்கங்களாக இருந்தாலும் அனைத்து இயக்கங்களும் போராளிகளாகவே ஈழப்போராட்டத்தில் நின்றனர் அதில் புலிகள் இயக்கத்தை புலிப்படை என்று கூறி வேறு முத்திரை வருமாறு பேசியதை இந்த காணொளியில் நன்றாக பார்க்கலாம், இவர்கள் ஒரு 50 பேர் கூட்டத்தில் இப்படி பேசுவதால் நமக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் இன்று இவர் தான் தமிழ்தேசியத்தின் வழிகாட்டி என்பது தான் நகைப்புக்கு இடமளிக்கிறது.

முதலில் தமிழ் தேசியம் என்பதில் சரியான வரையறையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் இவர்கள் அனைவரும், ஒரு பக்கம் விடுதலைப் போராட்ட மாவீரர்களான புலிகள் இயக்கத்தை ஆதரித்துக் கொண்டே மா.பொ.சி போன்றவர்களை மண்ணுரிமை, தமிழ் தேசிய வழிகாட்டி என்று கூறுவது சரியான அரசியலா என்பதை சிந்திக்க வேண்டும் இல்லையென்றால் நாளை சமூகம் இவர்களைப் பார்த்து சிரிப்பா சிரிக்கும். 

No comments:

Post a Comment