Wednesday, June 4, 2014

கம்பெனியாம் கம்பெனி மும்மூர்த்திகள் கம்பெனி


1948ம் வருடம் ஒரு கம்பெனி ஆரம்பித்தார்கள், ஆரம்பிக்கும் பொழுது பங்கு தாரர்கள் எல்லாம் ஒரே முடிவுடன் இருந்தார்கள் அது தான் தேர்தல் கலாட்டாவில் குத்தாட்டம் போட்டு அதன் மூலமாக பேட்டை ரவுடி ஆகி தான் மக்களுக்கு நல்லது பண்ண முடியும் என்று கம்பெனியின் லாபமாக சொன்னார்கள். கொசுறாக தேசிய அளவில் கல்லா கட்டும் தேசிய தாதாவை தமிழ்நாட்டுக்குள் அழித்துவிடப் போகிறோம் என்று உதார் விட்டார்கள்.  

இதில் இவர்கள் வேறு இந்த தேர்தல் கலாட்டாவில் அடித்த கூத்து இருக்கே அது தான் இந்த கம்பெனியின் நகைச்சுவையை நமக்கு உணர்த்தும். 1952ம் வருட தேர்தலில் எங்கள் ஆதரவு வேண்டும் என்றால் தனித் தமிழ்நாடுக்கு ஆதரவு கொடுப்பவருக்குத் தான் எங்க ஆதரவு என்றார்கள். தேர்தல் கலாட்டாவில் கலந்துக்க போறோம் அப்படி கலாட்டா பண்ணி பேட்டை ரவுடியா வந்தால் தான் மக்களுக்கு நல்லது பண்ண முடியும் என்று சொன்னவர்கள் மத்தவங்க எல்லாம் கலாட்ட பண்ணுங்க நாங்க வெளியில் இருந்து வேடிக்கை பார்க்கிறோம் என்று தங்கள் வீரதீர சொரூபத்தை வெளிக் காட்டினார்கள். தேர்தலில் பங்கு கொள்ளும் தைரியமும் இல்லை அதே வேளையில் கலாட்ட பண்ண கட்டை கடப்பாரை மட்டும் கொடுப்போம் என்றார்கள். 

இந்த தனித் தமிழ்நாடு நிபந்தனைக்கு சில கம்பெனிகள் ஒத்து கொண்டு இவர்களிடம் தனி தமிழ்நாட்டை ஆதரிக்கிறோம் என்று ஒப்பந்தம் போட்டுக் கொண்டார்கள். ஆனால் அவர்கள் வெற்றி பெற்றவுடன் இவர்கள் எந்த தேசிய தாதாவை அழிக்க கிளம்பினார்களோ அந்த தேசிய தாதாவிடம் சரணடைந்து அமைச்சர் பதவி எல்லாம் வாங்கினார்கள் அந்த சில்லு வண்டுகள். அந்த சில்லு வண்டுகளை கண்டிக்க கூட வக்கில்லாமல் கலாட்டா பண்ன வீர பராக்கிரமர்கள், அதற்கு அடுத்தும் பெரிய கலாட்டக்கல் எல்லாம் செய்யவில்லை 1967 வரை அதாவது கம்பெனி ஆரம்பித்து 1948ல் இருந்து 67 வரை 19 ஆண்டு காலம் உள்ளே இவர்களுக்கிடையே கச்சை கட்டி சண்டை போட்டு பங்கு தாரர்கள் பலர் தனியாக கம்பெனி ஆரம்பித்தது தான் மாபெரும் சாதனையாக இருந்தது.


1967ல் தேசிய தாதா தமிழ்நாட்டு மக்களை நீ என் மொழியை கத்துக்கணும் இல்லாவிடில் உன்னை உதைப்பேன் என்ற பொழுது தன்னெழுச்சியாக எழுந்த போராட்டத்தையும் போராட்ட மாணவர் தலைவர்களையும் வளைத்துப் போட்டு கண்ணீர் விட்டு அழுத்தது இந்த கம்பெனி உரிமையாளர்கள். நம்ம மக்களும் இவர்களின் கண்ணீரையும் கம்பலையையும் பார்த்து தேர்தல் கலாட்டாவில் இவர்களோடு சேர்ந்து நின்று தொலைத்தார்கள். அன்று பிடித்தது தமிழ் நாட்டுக்கு சளி.. அன்னைக்கு பிடிச்ச சளிதான் இன்னைக்கு வரைக்கும் எத்தனை கசாயம் குடிச்சாலும் விடமாட்டேன் என்கிறது.

நாம சளியோட அலைவது முடியாது என்று தான் இந்த டூபாக்கூர் கம்பெனியில் கணக்கு கேட்டு கொடுக்கலை என்று மூக்கை சிந்திட்டு வெளியில் ஓடி வந்தவங்களை எல்லாம் ரொம்ப நல்லவர்கள் என்று ஆதரித்து தேர்தல் கலாட்டா செய்து பேட்டை ரவுடி ஆக்கினோம். இதையெல்லாம் மறந்து தன்னால மக்களுக்கு ஏற்பட்ட சளியினால் தான் நம்மை மூக்கை சிந்தி தூக்கி போடுவது போல் தூக்கிப் போடுகிறார்கள் என்பதை உணராமல் இன்னைக்கு வரைக்கும் மக்களைப் பார்த்து நீ சளி வேண்டாம் என்று மஞ்சள் காமலையிடம் மாட்டிக்கிட்டாய், வாந்தி பேதி உனக்கு வரப்போகுது என்று சாபம் விடுகிறார்களே தவிர இது வரை எதாவது நல்லது பண்னுவார்கள் என்று பார்த்தால், 2009ல் பேட்டை ரவுடியாகவும் தேசிய தாதாவிற்கு அல்லக்கையாகவும் இருந்து 1,50,000 மக்களை தங்களின் குடும்பத்தினர் குத்தாட்டம் போட்டு காவு கொடுத்தனர்.

இதனை எல்லாம் உணர்ந்த மக்கள் மஞ்சள் காமலையோ இல்ல வாந்தி பேதியோ இருந்து தொலையட்டும் உன்னை பேட்டை ரவுடியாக மாற்றி மூக்கை சிந்திக்கிட்டே திரியமுடியாது என்று சொன்னால் இந்த வெங்காய வெண்ணை வெட்டி திருட்டு மும்மூர்த்தி கம்பெனிக்கு புரியவே மாட்டேன் என்கிறது. அது எப்படியா எந்த இடத்திலும் சொல்லாமல் கொள்ளாமல் கம்பெனி பெயரை மாற்றிவிட்டீர்கள்.
திருட்டு 
மும்மூர்த்தி(ஸ்டாலின்,அழகிரி, கனிமொழி) 
கம்பெனி என்று...

இனியும் மக்கள் உங்களை சகித்துக் கொள்ள மாட்டார்கள், எனென்றால் சளி தானே என்று அசிங்கமாக பொதுவில் மூக்கை சிந்திக்கிட்டே அலைய விரும்பவில்லையாம். 

No comments:

Post a Comment