Sunday, June 8, 2014

வீரமணி எனும் எஜமானன்...

தோழர் அதி அசூரனுக்கு ஒரு திறந்த மடல்...

தோழா..

வீரமணி ஓர் வாக்கியம் சொன்னவுடன் அனைத்தையும் உடைத்து எறிந்துவிட்டு பொங்குகிறீர்கள். நல்லாத் தான் இருக்கு ஆனால் இந்த பொங்கல் இத்தனை ஆண்டுகாலம் தமிழரின் மீட்சி தான் முக்கியம் அதைத் தவிர வேறு எதையும் பற்றி யோசிக்க வேண்டிய தேவை இல்லை என்று பெரியாரை இகழ்ந்தவர்களுடன் கூட நின்ற பெரியாரியவாதிகளை போற்றும் வகையில் இல்லாமல் மற்றவர்களை இகழும் முறையில் இருக்கிறது உங்கள் பதிவு. இப்படி எனக்கு தோன்ற காரணம் ஏன் என்றால் பெரியார் தமிழின மீட்சிக்காக போராடியவர் என்பதை நீங்களும் அறிவீர்கள் நானும் அறிவேன். ஆனால் அவர் வேற்றுமையில் ஒற்றுமை பாராட்டியவர் என்பதை நீங்கள் மறந்து விட்டீர்கள் இந்தியம் பிடித்துக் கொண்டது போல் தெரிகிறது.

தன் கடவுள் மறுப்பு கொள்கையோ இல்லை பகுத்தறிவு கொள்கையோ சுயமரியாதை கொள்கையோ அதற்கு எதிரானவர்களுக்கு நமது பொது எதிரியினால் ஒருவருக்கு பிரச்சனை என்றால் யாரும் கூப்பிடாமல் அவர்களுக்காக ஓடோடிச் செல்வார் பெரியார் அதன் கீழாகவே குன்றக்குடி அடிகளாருக்காக ஓடியதும், அதைப் போலவே சென்னை சர்வகலா சாலையில் தீவிர ஆத்திகரான மறைமலை அடிகளின் புத்தகம் “அறிவுக் கொத்து” எனும் நூலுக்கு எதிராக செயல்கள் நடந்த பொழுதும் யாரும் கூப்பிடமாலேயே ஓடியதும்..

ஆனால் நீங்கள் இன்று பெரியாரை ஒரு ரசிக மன்ப்பான்மையுடன் நெருங்குகிறீர்கள் என்று நினைக்கிறேன். பெரியாரிய கொள்கை தான் முக்கியம் அதைத் தவிர வேறு எதுவும் இல்லை என்று பேசியது போல் இருக்கிறது தங்களின் திராவிட மூலசூத்திர கட்டுரை.. உங்களைப் போன்ற சமயத்திற்கு ஏற்றார்போல் கொள்கையை மாற்றிக் கொள்ளும் நிலைப்பாடினால் தான் இன்று திராவிடம் கேள்விக்குள்ளாகி உள்ளது.

பெரியார் தனது கருத்திற்கு எதிரானவர் என்றால் கூட அவருக்கு தனது பொது எதிரியால் பிரச்சனை என்றால் ஓடோடிச் செல்வார் அவர்களுக்காக போராடுவார். ஆனால் அந்த பழக்கத்தில் ஒரு சதவீதம் கூட ஒப்புமை செய்ய இயலாத இந்த வீரமணி அதுவும் பேரறிவாளன் திராவிடர் கழக உறுப்பினர் இல்லை என்று அறிவித்தார் மிகப்பெரிய பிரச்சனைக்குள்ளான காலகட்டத்தில்.. அதுவும் வக்கீல் வீரசேகரன் அதே வழக்கில் கைது செய்யப்பட்ட பொழுது 1000 வழக்கறிங்கர்களை ஒன்றிணைத்து போராட்டம் நடத்தியவர் இவர்,  ஆனால் பேரறிவாளன் எங்கள் இயக்கத்தினர் இல்லை என்று மட்டும் தான் சொல்ல முடிந்தது இவரால்.. பேரறிவாளனின் ஒட்டுமொத்த குடும்பமும் இன்றுவரை பெரியரை விடாமல் தொடர்ந்து கொண்டுள்ளது... பரவாயில்லை இது நடந்து பலகாலம் ஆகிவிட்டது..

ஆனால் தற்சமயம் தோழர் கொளத்தூர் மணி தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப் பட்டபொழுது ஓடோடி வந்தாரா இந்த வீரமணி. நீங்கள் ஒத்த கருத்துள்ளவர்கள் என்று கூறுகிறீர்கள் இவர்களை ஆனால் பெரியாரின் பொது எதிரிக்கான போராட்டத்தில் நமது எதிரிக்கு துன்பம் என்றால் கூட ஓடோடிப் போகும் பெரியாரின் குணம் எங்கு போனது கொளத்தூர் மணி தோழர் கைது செய்யப்பட்ட பொழுது வீரமணிக்கு, நீங்கள் கூறும் ஒற்றுமையான கருத்தின் கீழ் கூட வரவில்லையே. ஜெயலலிதாவின் ஆட்சியில் கொளத்தூர் மணி தோழர் கைது மட்டுமில்லை, கருணாநிதியின் ஆட்சியில் சீமான், வைகோ போன்றவர்கள் 2009ம் ஆண்டும் அதற்கு பிறகும் கைது செய்யப் பட்ட நமது தோழர்கள் முதற்கொண்டு யாருக்காகவும் வரவில்லையே.. நமது தமிழருக்காக  ஒடுக்கப்படுவர்களுக்காக ஓடோடி செல்லும் பெரியாரின் குணம் இந்த வீரமணியிடம் வெளிப்பட்டதா எங்காவது.. இல்லையே???

அப்படியிருக்கும் பொழுது எப்படி இவரை ஒத்த கருத்துள்ளவர் என்று சொல்கிறீர்கள். இத்தனை வருடமும் தமிழ்தேசியம் என்று சொல்லி பெரியாரை தூற்றுபவர்களுடனும் சேர்ந்து நாம் நின்றது பெரியாரை விட தமிழினம் முக்கியம் என்பதால் ”தமிழ்நாடு தமிழருக்கே” என்பதால். ஆனால் அதை எல்லாம் நகைப்புள்ளாக்கி இன்று பெரியார் திடலின் எஜமான் தன் எஜமான புத்தியை விடாமல். அதாவது பிரச்சனையின் போது ஓடோடி வந்து ஒன்றிணைந்து தமிழினத்திற்காக நிற்காமல் ஓடி ஒளிந்த ஒருவரை ஒத்த கருத்துள்ளுவர் என்று சொலவது நகைப்பிற்கு இடமளிக்கிறது..

கொஞ்சம் வரலாற்றை பெரியாரின் ரசிகராக இல்லாமல் தமிழர்களின் மீட்சியின் கீழாக பாருங்கள். அப்பொழுது தெரியும் உங்களின் போராட்டத்தில் நானும் கலந்து கொள்ள விரும்புகிறேன் என்று சொல்லாமல் இதோ என் இடம் பெரியார் திடல் இருக்கிறது வாருங்கள் என்று விடும் எஜமான அரசியலின் அரைகூவல் கண்ணுக்கு தெரியும் அவரின் எஜமானிய புத்தியும் புலப்படும். அதுவும் ஈழவிடுதலையில் இருந்து தமிழ்நாட்டு தமிழர்களின் போராட்டம் அனைத்திலும் கள்ள மெளனம் சாதித்த ஒருவர் இன்று அடுத்த கட்டத்திற்கு காலை எடுத்து வைக்க ஒரு அங்குல இடம் கூட இல்லாமல் வெற்றிகரமான ஒரு போராட்டத்தை நாம் அனைவரும் இணைந்து நடத்தி சென்று கொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்து அது இவரின் இருப்பை கேள்விக்கு உள்ளாக்கி இருக்கிறது என்பதை புரிந்து இவர் விடுத்த அரைகூவலை படிக்கும் பொழுதே புரியும்.. நாம் இதுவரை இணைந்து நின்று நடத்திய போராட்டங்கள் இனி நடை பெறக்கூடாது நம்மை பிரிக்கவேண்டும் என்ற எண்ண ஓட்டத்தின் கீழாகவே இந்த அரைகூவல்..

நம்மை பிறித்தாளும் சூழ்ச்சியே இவர் விடுத்திருக்கும் அரை கூவல் என்னை பொறுத்தவரை ஒரு பகுத்தறிவு வாதியாக, பெரியாரின் கருத்துகளை புரிந்து கொண்டவனாக இவரின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு நான் உட்பட மாட்டேன்.. பெரியாரை தூற்றுகிறவர்களுடன் இணைந்து நிற்கலாம் எனென்றால் அவர்கள் நாம் அமைக்கும் களத்தில் வந்து நின்று போராடுகிறார்கள், அவர்கள் அமைக்கும் களத்திலும் நமக்கான இடத்தை ஒதுக்குகிறார்கள்.. என்றாவது ஒரு நாள் அவர்கள் பெரியாரை புரிந்து கொள்வார்கள்,  ஆனால் வீரமணி நமக்கு பல துன்பங்கள் வந்த பொழுதும் வேடிக்கை பார்த்தவர் எனபதை மறந்துவிடாதீர்கள். பெரியாரிய கொள்கை என்பது அய்யகோ நம்மவர் பெரியாரை ஏற்றுக் கொண்டவர் அதனால் அவர் உணர்ந்துவிட்டார் என்று கழிவிரக்கம் கொளவது அல்ல... இன்று அரைகூவலிட்டவர்  நம் தோழர்கள் உமாபதி உட்பட இன்னும் பலர் சிறையில் இருக்கிறார்கள் அதற்காக ஏன் வந்து போராடவில்லை என்ற கேள்வியை எழுப்புங்கள், அது தான் பகுத்தறிவு.

தமிழினத்தின் மீட்சி என்பது வீரமணியை வெளியேற்றி பெரியார் திடலை தமிழர்களுக்கு சொந்தமாக்குவதே.. வீழ்ந்துவிடாதீர்கள் கொஞ்சம் பெரியாரின் ரசிகராக இல்லாமல் பெரியாராக சிந்தியுங்கள் Feel your self in Periyar's shoes...

ஒரு போராளி களத்துக்கு வருவான் ஆனால் என்றும் இதோ எனக்கு சொந்தமான இடம் இருக்கிறது அதை களமாக மாற்று என்று சொல்ல மாட்டான்.. அப்படி ஒருவர் சொன்னான் என்றால் அவன் எஜமானன்...

No comments:

Post a Comment