Friday, April 25, 2014

ராஜிவ் மரணமும் அரசியலும் - காங்கிரஸ்


ராஜிவ் காந்தியின் மரணம் 1991ம் ஆண்டு நடந்தது ஆனால் அன்றிலிருந்து அதன் பின்னான அரசியல் இன்று வரை நடந்து கொண்டு தான் இருக்கிறது. இந்த அரசியலில் ஒவ்வொரு முறையும் ஒருவர் தனது அரசியல் பிழைப்பிற்காக பயன்படுத்தியே வருகின்றனர். சிலப்பதிகார வரி ஒன்று

“அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்”

அதாவது அரசியலை மக்கள் நலனுக்காக இல்லாமல் அதை தன் சொந்த நலனுக்காக பயன்படுத்துபவர்களுக்கு அறமே எமனாக மாறும் என்று சொல்கிறது. ஆனால் நாம் வாழ்வது சிலப்பதிகார காலமில்லை. சிலப்பதிகாரத்தை தனக்காக வளைத்துக் கொள்ளும் வஞ்சகர்கள் வாழும் காலம். இதில் செங்கோல் வளைந்தால் மன்னன் உயிர்வாழ்தல் நன்று அன்று என்று சொல்லும் காலமா இது. இவர்களுக்கு அறம் கூற்றானால் என்ன ஆகவிட்டால் நமக்கென்ன ராஜிவ் மரணத்தில் யாருக்கு அரசியல் என்பதை பார்ப்போம் முதலில் காங்கிரஸ். காங்கிரஸ் இந்த மரணத்தை வைத்து அன்றிலிருந்து இன்று வரை செய்து கொண்டிருக்கும் அரசியல் என்ன என்பதை முழுவதுமாக தெரிந்து கொள்வோம்.

காங்கிரஸ்

ராஜிவின் மரணத்திற்கு பிறகு அவரின் மரணம் யாருக்கு பயன்பட்டதோ இல்லையோ அரசியல் வாதிகளுக்கு பயன் பட்டது. 1991ல் தேர்தல் காலத்தில் தான் ராஜிவ் மரணம் நிகழ்கிறது, அதற்கு முன்பாக 211 தொகுதிகளில் தேர்தல் முடிந்திருந்தது. மிச்சம் இருக்கும் 334 தொகுதிக்களுக்கான தேர்தல் ஒரு மாதம் தள்ளிப்போடப்பட்டது இதில் பஞ்சாப்பும், ஜம்மு காஷ்மீரும் அடங்காது, அந்த மாநில தேர்தல்கள் 1992ல் தான் நடைபெற்றது. அதாவது இந்தியா முழுமைக்குமான ஒரு தேர்தலில் இரண்டு மாநிலங்களில் தேர்தல் நடக்காமல் மற்ற மாநிலங்களில் தேர்தல் நடந்தி இந்தியாவின் பிரதமரை தேர்ந்தெடுத்த அவலம் 1991ல் தான் நடந்தது. 


இரண்டு மாநிலங்களில் தேர்தல் நடக்கவில்லை ராஜிவின் மரணத்திற்கு முன்பாகவே 211 தொகுதிகளில் தேர்தல் நடந்துவிட்டது. சரி மிச்சம் இருக்கும் தொகுதிகளில் தேர்தல் குறிப்பிட்ட தேதியில் நடக்காமல் ஒரு மாதம் தள்ளிவைக்கப்பட்டது. ஒரு தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் இறந்துவிட்டால் அவரின் தொகுதியில் மட்டும் தான் தேர்தல் தள்ளிவைக்கப்படும் ஆனால் மீதம் தேர்தல் நடக்க வேண்டிய இடங்களில் தேர்தல் நடக்கும் ஆனால் இங்கு ஒட்டுமொத்தமாக தேர்தல் தள்ளிவைக்கப் பட்டது அடுத்து நடக்க வேண்டிய தேர்தல்கள் ஜூன் 12 மட்டும் 13ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதாவது அன்று அமைச்சராகவோ இல்லை எதிர் கட்சியின் கொரடாவாகவோ இல்லாத ஒருவர் இறந்தார் என்பதற்காக ஒட்டுமொத்த இந்தியாவின் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது இதற்கு காரணம் அவர் மிகப்பெரிய ஆள் என்பது அல்ல, இந்திராகாந்தி இறந்த பிறகு ஆட்சிக்கு வந்த ராஜிவின் முட்டாள் தனமான செயல்பாடுகளால் தனது மக்கள் செல்வாக்கை இழந்திருந்தார், போபர்ஸ், பஞ்சாப் சீக்கிய படுகொலை, போபால் என்று எங்கு அவர் கைவைத்தாலும் வினையாக முடிந்தது. அப்படி அவர் கை வைத்த இடம் தான் ஈழப்பிரச்சனையும் அதிலும் பன்னாட்டு அரங்கில் தானும் ஒரு ரவுடி என்று காட்டிக் கொள்ள முயன்று ஒரு நாட்டின் இராணுவத்தை அதுவும் இவர்கள் அவர்கள் முன்னால் பீலாவெல்லாம் விட்டார்கள். ஜே.என்.திக்சித் சொன்னான் ஒரு விடுதலைப் போராட்ட குழுவின் தலைவரான பிராபாகரனிடம் உங்கள் குழுவை இந்த சிகெரெட் குடிக்கும் நேரத்தில் அழித்துவிடுவேன் அத்தகையது எனது இராணுவத்தின் பலம் என்று ஆனால் ஈழத்திற்கு அவர்கள் அனுப்பிய இராணுவத்தில் அரசாங்கப் பூர்வ தகவலாக தரும் 1155 பேருக்கு அவர்கள் சண்டையில் ஈடுபட்ட இடத்தில் நினைவிடம் எழுப்ப முடியாமல் கொழும்புவில் சிங்களன் பகுதியில் தான் நினைவுத் தூண் எழுப்பினார்கள். இவ்வளவு கேவலமாக தானும் ஒரு ரவுடி என்று நிருபிக்க முயன்று தோற்ற ஒரு மனிதனை நாட்டு மக்கள் தேர்ந்தெடுக்க விரும்ப மாட்டார்கள் என்பது காங்கிரஸுக்கு தெரியும் அந்நிலையிலேயே ராஜிவின் மரணம் நிகழ்கிறது.

அதுவும் 211 தொகுதிகளில் வாக்கு பதிவு நடந்து முடிந்துவிட்டது மிச்சம் இருக்கும் தொகுதிகளில் தான் வாக்கு பதிவு நடக்கவேண்டும். அதிலும் விபி.சிங் இன்னொரு பிரதம வேட்பாளராகவும் வாஜ்பாய் இன்னொரு பிரதம் வேட்பாளாராகவும் நிறுத்தப்பட்டிருந்த நேரம் அது அந்நிலையில் ராஜிவின் மீதான நம்பிக்கை இம்மியளவும் இல்லாத நிலை. ஆம் ராஜிவின் மரணத்திற்கு முன்பாக நடந்த 211 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றது வெறும் இரண்டிலக்க தொகுதிகளில்தான். ஆனால் ராஜிவ் மரணத்தை வைத்து அதை காட்சிப் பொருளாக்கி ராகுல் கொள்ளி வைப்பது ஊர்வலம் நடப்பது என்று காட்டி ராஜிவின் பிணத்தை காட்டி மக்களின் பரிதாபத்தை தேடினர். அதுவும் அதற்கு பிறகு நடந்த தேர்தல்களில் அதில் மிக முக்கியமானது ஒரு வருடம் கழித்து நடப்பட்ட பஞ்சாப் மற்றும் காஷ்மீர தேர்தல் உட்பட ஆட்சி அமைக்க தேவையான தொகுதிகளை பெறவில்லை. அதாவது ராஜிவ் செத்த பிறகு மொத்தம் 334 தொகுதிகளில் தேர்தல் நடந்தது ராஜிவின் பிணத்தை வைத்து அனைத்து தொகுதிகளை கைப்பற்றிவிடலாம் என்று மனப்பால் குடித்தார்கள் ஆனால் ஒட்டுமொத்தமாக ராஜிவ் மரணத்திற்கு முன்பும் பின்பும் சேர்த்து கூட ஆட்சி அமைக்க தேவையான தொகுதிகள் கிடைக்கவில்லை. வெறும் 244 தொகுதிகளில் தான் வெற்றி பெற்றார்கள். அதுவரை 60வது தொகுதியிலேயே அதிகபட்சமாக வெற்றி பெற்றிருந்த பாரதிய ஜனதா அந்த தேர்தலில் 120 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்த நிலையிலேயே இன்று வரை ராஜிவ் தான் அடுத்த பிரதமராக வர இருந்தார் அவரை கொலை செய்து விட்டனர் என்று விஷமப் பிரசாரம் செய்கிறார்கள்.

1991ல் தேர்தலில் மைனாரிட்டியாக அனைவரின் உதவியையும் பெற்று ஆட்சி அமைத்தனர் எனென்றால் அதற்கு முன்பாக 2 வருடங்களுக்கு முன்பாகத் தான் ஒரு தேர்தல் நடந்திருந்தது அடுத்த தேர்தலை நடத்த இந்தியாவின் பொருளாதாரம் இடம் கொடுக்காது என்பதால் ஒரு சமரசத்திற்கு வந்து பிரதமராக மாற்றப்பட்டவர் தான் நரசிம்ம ராவ், இன்றைய மன்மோகன் சிங்கை வர்ணிப்பதைவிட இவரை அன்று ஆற்றல் இல்லாத ஒரு பிரதமர் என்று விமர்சித்துள்ளனர். அதுவும் தன் நாட்டிற்கு உட்பட்ட பழம்பெரும் கட்டிடம் இடிக்கப்பட்ட பொழுது அதுவும் பல மாதங்களுக்கு முன்பாகவே அங்கு புதுக்கட்டிடம் கட்ட போகிறோம் என்று அறிவிக்கப்பட்ட பொழுதே பழைய கட்டிடம் இடிக்கப்பட போகிறது என்பதை உணராத அல்ல உணர்ந்து அதற்கு எதிர் நடவடிக்கை எடுக்க இயலாத செயலிழந்த பிரதமராக செயல் பட்டார். இவர் இறப்பிற்கு முன்னால் பிரதமர் என்ற மரியாதை கூட இந்திய அரசு கொடுக்கவில்லை அது தனிக் கதையல்ல, மகாபாரதம் போல் கதைக்குள் ஒரு கதை, அதைப் பின்னர் பார்ப்போம்.


1991ல் அழிய வேண்டிய ஒரு கட்சிக்கு இப்படித்தான் உயிர் கொடுக்கப்பட்டது, அதாவது அவர்கள் தலைவரின் ஒருவரின் மரணத்தை வைத்து அதன் மூலமாக அரசியல் செய்து பதவிக்கு வந்தார்கள் அங்கும் எதையும் சாதிக்கவில்லை அதனாலேயே அரசியல் மாற்றம் ஏற்பட்டது 1996ல். அதாவது மக்கள் உணர்ந்தார்கள் அதுவும் வெறும் சொற்ப ஓட்டுகளே போட்ட மக்கள் உணர்ந்து காங்கிரஸை துரத்தினார்கள் 1996ல். இப்படி தங்களுடைய தகுதி என்பது அழிக்கப்பட்டதை உணர்ந்து அதன் பிறகு தங்கள் அரசியலால் அதுவும் இவர்கள் ஆட்சியில் அமைக்கப்பட்ட வர்மா கமிசன் அதுவும் இவர்களின் தலைவர் செத்த வழக்கில் ஏற்ப்பட்ட பாதுகாப்பு குறித்த குறைபாடுகளை ஆராய நியமிக்கப்பட்ட ஒரு கமிசனின் அறிக்கையை தொலைத்து விட்டோம் என்று சொல்கிறார்கள். இது 1991 முதல் 1996 வரையிலான காங்கிரஸ் ராஜிவ் மரணத்தை வைத்து அடைந்த ஆதாயங்கள் மட்டுமே. அதற்கு பிறகும் 2014 வரை ராஜிவ் மரணத்தை வைத்து நிறைய ஆதாயங்கள் அடைந்துள்ளனர் அதை அடுத்து எழுதுகிறேன்.

ஆனால் இந்த கட்டுரையில் எழுப்பபட்டுள்ள மிக முக்கியமான விசயங்கள் ராஜி இறந்த பிறகும் கட்சி ஆரம்பித்து மூன்றாவது தேர்தலில் 120 இடங்களில் பாஜக எப்படி வெற்றி பெற்றது அதுவும் ஒரு நாட்டின் வருங்கால பிரதம என்று சொல்லப்படுபவர் இறந்த பிணத்தை வைத்து ஓட்டு கேட்ட பொழுதும், அமேதிக்கு மட்டும் தள்ளிவைக்காமல் ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் தேர்தலை தள்ளி வைத்து இந்தியா முழுவதும் ஒரு பிணத்தை காட்டி மக்களின் பரிதாபத்தை பெற முயற்சித்தவர்களுக்கு ஏன் மக்கள் ஓட்டு போடவில்லை. இதே தேர்தலில் விபி.சிங்கின் ஜனதா தளம் 64 இடங்களை கைப்பற்றியது...

இப்படி மைனாரிட்டியாக வரத்தான் 334 தொகுதிகளுக்கு தேர்தல் தள்ளி வைக்கப்பட்டதா, ராஜிவ் இவர்கள் சொல்வது போல் மிகப்பெரிய தலைவன் என்றால் ராஜிவின் மரணத்திற்கு பின்பு நடந்த 334 தொகுதிகளிலும் பிணத்தை பார்த்து ஓட்டு போட்டு பரிதாப அலையில் காங்கிரஸ் வெற்றி பெற்று மெஜாரட்டி அரசாக இருந்து இருக்க வேண்டுமே ஆனால் 1991லிருந்து 1996 வரை மைனாரிட்டி அரசாக தொடர்ந்த காரணம் என்ன??????????

No comments:

Post a Comment