Thursday, April 17, 2014

ராஜிவின் கூலிப்படை


இந்தியாவில் இருந்து அமைதிப்படை என்பதை பாமர ஈழத்து மக்கள் தங்களுக்கு பயிற்சி கொடுத்து உதவிய நாட்டின் ராணுவம், நம் தொப்புள் கொடி உறவுகளின் இராணுவம் என்று வரவேற்றனர். ஆனால் பின்னர் தான் தெரிந்தது இது இராணுவம் அல்ல நாசகாரப்படை என்பது. ஆம் அன்று 1987ல் இந்திய இராணுவம் எப்படியெல்லாம் போரை நடத்தியதோ அதே முறையில் தான் 2009ல் இலங்கையும் சர்வதேச அமைப்புகள் நாடுகளின் கண்களை கட்டிவிட்டு இனப்படுகொலையை செய்தது. 2009ல் இலங்கை செய்தது மட்டும் இனப்படுகொலை அல்ல இந்திய நாசகாரப் படை செய்ததும் இனப்படுகொலை தான். 

முதலில் இந்திய அமைதி ஒப்பந்தம் நடந்தது என்ன என்று தேதி வாரியான விவரங்கள் தொடக்கத்திலிருந்து கடைசியாக புலிகள் இயக்கதுட்டன் போர் அறிவிப்பு வரை. 

ஜுலை 19, 1987
இலங்கைக்கான இந்திய தூதுவர் பிராபகரனை சந்திக்க யாழ்ப்பாணம் வருகிறார். ராஜிவ் அவரை சந்திக்க விரும்பும் விசயத்தை தெரிவிக்கிறார்.


ஜூலை 23, 1987
யாழ்ப்பாணம் சுதுமலைக்கு இரண்டு  இந்திய இராணுவ ஹெலிகாப்டர்கள் வருகின்றன. அதில் பிராபகரன் அவர்கள் சென்னைக்கு செல்கிறார் அங்கு ஆண்டன் பாலசிங்கமும் இணைந்துகொள்ள டில்லிக்கு செல்கிறார். டில்லி அசோகா ஹோட்டலில் அறை எண் 513ல் தங்கவைக்கப் படுகிறார். வெளியில் உலாவுவது முதற்கொண்டு அனைத்தும் தடை செய்யப்படுகிறது இந்திய அதிகாரிகள் மட்டும் சந்தித்து பேசுகின்றனர். ஒரு முறை வைகோ அவர்கள் ஹோட்டலின் ரிசப்சனினிலிருந்து பிராபகரன் அவர்களின் அறைக்கு தொடர்பு கொண்டு பேசமட்டும் அனுமதிக்கப்படுகிறார்.


ஜூலை 29ம் 1987
இந்தியா இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. இந்த ஒப்பந்த்த்திற்கு எம்.ஜி.ஆர் அழைக்கப்படுகிறார் அவர் உடல்நிலையை காரணம் காட்டி ஒப்பந்த நிகழ்விற்கு செல்ல மறுக்கிறார். ஒப்பந்தம் சரியானதாக இருந்தால் தனது அரசியல் ஆதாயத்திற்காக கண்டிப்பாக எம்.ஜி.ஆர் சென்று இருப்பார் ஆனால் நிகழ்வில் கலந்து கொள்ள மறுக்கிறார்.


ஜுலை 30, 1987
இந்திய அமைதிப்படை ஒப்பந்தம் கையெழுத்தான 24மணி நேரத்தில் சென்னையிலிருந்து கப்பல்கள் மூலமாக பாயிண்ட் பெட்ரோ, யாழ்ப்பாணம் வந்தடைகிறார்கள். ஆயுதங்களை ஒப்படைக்க அதாவது இந்திய அமைதிப்படை வந்த 72 மணிநேரங்களில் அதாவது 3 நாட்களுக்குள் அனைத்து இயக்கங்களும் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் என்பதே ஒப்பந்தத்தின் சரத்து. ஆயுத ஒப்படைக்கு அமைதிப்படை அனைத்து இயக்கங்களையும் வலியுறுத்துகிறது. புலிகள் இயக்கம் அவர்கள் தலைவர் பிராபாகரன் வராமல் ஆயுதங்களை ஒப்படைக்க மறுத்துவிடுகிறது. ஒப்பந்தம் கையெழுத்தானபொழுதும் ஆகஸ்ட் மூன்றாம் தேதி வரை டில்லி அசோகா ஓட்டலில் சிறையில் தான் அடைக்கப்பட்டிருந்தார். அந்த சமயத்தில் தலைவர் பிராபகரனை நேரிடையாக சந்தித்தவர் அனிதா பிரதாப் மட்டுமே. மற்றவர்கள் எல்லாம் இந்திய அதிகாரிகள் அதட்டல்கள் மிரட்டல்கள் என்று தான் சென்றன.



ஜூலை 23, 1987லிருந்து ஜூலை 3ம் தேதி வரை
அசோகா ஹோட்டலில் பிராபகரனுடன் பேச்சுவார்த்தைகள் நட்த்தப்பட்டு ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளுமாறு நிர்பந்தப்படுத்தப்படுகிறார். புலிகள் இயக்கம் முழுமையாக மறுக்கிறது, இயக்கத்திலிருந்து யோகி, திலீபன், ஆண்டன் பாலசிங்கம் போன்றவர்களும் தலைவர் பிராபகரனுடன் இருக்கிறார்கள். ஒப்பந்த்த்தை ஏற்றுக் கொள்ளச் செய்ய எம்.ஜி.ஆர் முதற்கொண்டு அனைவரின் மூலமாகவும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. எம்.ஜி.ஆரிடம் ஒப்பந்தத்தின் சரத்துகள் தமிழருக்கு எதிராகவும், ஏற்றுக் கொள்ள முடியாத்தாகவும் இருப்பதை விளக்குகின்றனர். அவரும் புலிகள் இயக்கத்தினருடன் உடன்படுகிறார். ராஜிவிடம் தெரிவித்த விவரங்கள் தெரியவில்லை இதனிடையில் ராஜிவ் தலைவர் பிராபகரன் இடையே ஒரு ஜெண்டில்மேன் அக்ரிமெண்ட் நடைபெறுகிறது. ஆயுத ஒப்படைப்பில் இருந்து அனைத்தின் கீழாகவும், ஆனா இது எழுத்துப்பூர்வமாக இல்லாமல் வாய்மொழியான உத்திரவாதம் மட்டுமே.


ஆகஸ்ட் 4 1987
ஈழத்தில் களத்தின் பொறுப்பில் இருந்த மாத்தையா தலைவர் பிராபகரன் வந்தால் தான் ஆயுதங்களை ஒப்படைப்போம், என்று சொன்னதால் ஹர்கிரத்சிங் தகவலை கல்கத்திடம் சொல்கிறார், அதன்பிறகு பிராபகரன் விடுவிக்கப்பட்டு யாழ்ப்பாணத்திற்கு அழைத்துவரப்படுகிறார். விடுவிக்கப்பட்ட பிறகு ஒரே நாளில் சுதுமலையில் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. முதன் முதலாக மக்கள் முன்னாள் ஒரு பொது மேடையில் தலைவர் தோன்றுகிறார். அப்பொழுது பேசும் பொழுது நமக்கு மேலான் சக்தி நமது பொறுப்புகளை எடுத்துக் கொள்கிறது, அதனால் நாம் இதற்கு கட்டுப்படுகிறோம் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில்என்று கூறுகிறார்.


ஆகஸ்ட் 5, 1987
புலிகள் இயக்கம் சார்பில் யோகரத்தினம் என்ற யோகி ஆயுத ஒப்படைப்பை தொடங்கி வைக்கிறார்.


1987 ஆகஸ்ட் 5 முதல் அக்டோபர் 10, வரை
ஆயுத ஒப்படைப்பு நடக்கும் பொழுதே மற்ற இயக்கங்களுக்கு இந்திய உளவு அமைப்பான ரா ஆயுதங்களை கொடுக்கிறது, நவீன ரக ஆயுதங்களும் அவர்களுக்கு கையளிக்கப்ப்டுகிறது. இதை புகைப்பட ஆதாரங்களுடன் ஜெனரல் ஹர்கிரத் சிங்கிடம் புகார் அளிக்கிறார் தலைவர் பிராபாகரன். அதை ஏற்று தனது மேலதிகாரிகளிடம் தகவலை சொல்கிறார். ஆனால் மேல் நடவடிக்கைகள் எதுவும் இல்லாமல் போகிறது உடனடியாக ஆயுதங்கள் ஒப்படைப்பதை நிறுத்துகிறது புலிகள் இயக்கம். ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டால் பாதுகாப்பு இல்லாமல் போக நேரிடும் எனப்தால் புலிகள் இயக்கம் இந்த நடவடிக்கையை மேற்கொள்கிறது.


செப்டம்பர் 16ம் தேதி இந்திய வெளியுறவுத் துறை அதிகாரி திக்சித்துக்கும் புலிகள் இயக்கதிற்கும் இடையில், ஹர்கிரத் சிங் முன்னிலையில் பேச்சுவார்த்தை ஏற்பாடு செய்யப்படுகிறது. அதற்க்கு முதல் இரண்டு நாட்கள் 14ம் தேதியும் 15ம் தேதியும் பேச்சுவார்த்தைக்கு வரும் தலைவர் பிராபகரனை கைது செய்து கொலை செய்யும் உத்தரவினை கொடுக்கிறார் திக்சித். ஆனால் அதை மறுத்துவிடுகிறார் ஜெனரல் ஹர்கிரத் சிங் அவருடைய மேலதிகாரிகளுக்கும் தனது மறுப்பை தெரிவிக்கிறார். ஆனால் திக்சித் இது ராஜிவ் காந்தியின் ஆணை என்று கூட மிரட்டுகிறார். பேச்சுவார்த்தைக்கு வரும் ஒருவரை சுட்டுக் கொல்ல முடியாது என்பதை திட்டவட்டமாக அறிவிக்கிறார் ஹர்கிரத் சிங்.  


இதன் பிறகு இந்திய இராணுவத்தினர் சில இடங்களில் அத்துமீறும் பொழுது சிறு கைகலப்புகள் நடக்கின்றன. அக்டோபம் மாதம் 11ம் தேதி புலிகளுக்கு எதிரான யுத்தம் ஆரம்பிப்பதாக சொல்லியது இந்திய இராணுவம் ஆனால் 10ம் தேதி இரவே தலைவர் பிராபகரன் அவர்களை பிடிக்க ஒரு கமொண்டோ படை அனுப்பி வைக்கப்பட்டு அதில் வந்த ஒரு சிலரைத் தவிர மற்ற அனைவரும் சண்டையில் இறந்துவிடுகின்றனர். இதன் பிறகே புலிகள் இயக்கத்திற்கும்  இந்திய இராணுவத்திற்கும் இடையிலான போர் தொடங்குகிறது.


ஏன் அமைதிப்படை????
ராஜிவ் காந்தி தனது தாயார் இறந்த பிறகு 1984ல் பதவிக்கு வருகிறார், அப்பொழுது பஞ்சாப் விடுதலைப் போராட்டம் பிந்த்ரன் வாலே தலைமையில் மிகவும் வேகமாக வளர்ந்து கொண்டிருந்த காலகட்டம் அதை ஒடுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இந்திராகாந்தி தனது இராணுவ பலத்தை பிரயோகித்து பொற்கோயிலின் மீது தாக்குதல் தொடுக்கிறார். பிந்த்ரன்வாலே கொல்லப்பட்டுவிடுகிறார் ஆனால் அவரின் பின் வந்தவர்களும் பொற்கோயிலின் மீதான தாக்குதலும் சீக்கிய இன மக்களிடையே கொழுந்துவிட்டெறிகிறது. இந்த அடக்கு முறையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஏற்கெனவே கொலை செய்யப்பட்டுவிட்டனர். அதுவும் சேர்ந்து தான் இந்திராகாந்தியின் கொலை நடக்கிறது. அதன் பிறகு பதவிக்கு வந்த ராஜிவ் ஒரு கத்துக் குட்டி அவருக்கான அரசியல் பாதை எதுவும் இலலை சீக்கியர்களை மேலும் ஒடுக்குகிறார். போராட்டங்கள் வெடிக்கிறது எனவே அவர்களுடன் ஒப்பந்தம் செய்கிறார் அதுவும் தோல்வியில் முடிகிறது.

இப்படி சென்று கொண்டிருக்கும் பொழுதே போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் வெளியில் வருகிறது ஒட்டுமொத்தமாக ராஜிவின் அரசியல் வருங்காலம் கேள்விக்குள்ளாகிறது. இந்த சமயத்தில் தான் ஏற்கெனவே இலங்கையில் இருந்த தமிழீழ போராளிக் குழுக்களுக்கு இந்திரா உதவியிருந்தார் அதை வைத்து தனது அரசியல் அங்கீகாரத்தை தேடும் விதமாக எடுத்த முயற்சி தான் இந்தியா இலங்கை ஒப்பந்தம். அதை வெற்றி பெற வைக்க வேண்டிய நிர்பந்தம் ராஜிவிற்கு இருந்தது மேலும் அமெரிக்காவின் எதிர்ப்பு என்ற கொள்கையின் கீழும் தன்னால் இயன்றதை செய்கிறேன் என்று இறங்கி, ஒரு நாட்டின் ராணுவமாக இருந்த இந்திய ராணுவத்தை ஜெயவர்த்னாவின் அடியாட் கூலிப்படையாக மாற்றினார் ராஜிவ் காந்தி.

எப்படி 2009ல் ராஜபக்சே இந்தியாவின் போரை நாங்கள் நடத்தி வெற்றி பெற்றோம் என்று தனது பாராளுமன்றத்தில் அறிவித்தாரோ, அதே போல் அப்பொழுது எங்களது சண்டையை இந்தியாவை வைத்து போடுகிறோம் என்று இந்திய இராணுவத்தை கூலிப்படையாக சித்தரித்து பேசினார் ஜெயவர்த்தனே. இது மட்டுமல்ல ஒற்றுமைகள் இன்னும் இருக்கிறது. இப்படி ஆழம் தெரியாமல் காலை விட்டு ஒரு இனப்படுகொலையை நடத்தியவன் தான் ராஜிவ் காந்தி.

No comments:

Post a Comment