Tuesday, October 22, 2013

மாற்று அரசியலும் மாற்ற கிளம்பிய மன்னார்களும் பகுதி - 4

அரசியல் விவாதங்கள் அதற்கான ஆரோக்கியமான போக்கு என்பது வைக்கும் கருத்துகளுக்கு எதிரான தங்களுடைய அரசியல் நிலைப்பாட்டு விளக்கங்களே ஆனால் இப்பொழுது நடந்து வரும் விவாதத்தில் வைக்கப்பட்ட கேள்விகள் புறந்தள்ளப்பட்டு இத்தனை நாள் கேட்க வேண்டிய கேள்விகளை கேட்காமல் இருந்துவிட்டு இன்று வந்து உங்கள் கொள்கை என்ன என்று இப்பொழுது கேள்வி கேட்டுக் கொண்டு இருக்கிறார்கள் ஒரு புறம். மறு புறம் தோழரின் உயிர் முக்கியம் அதனாலேயே சமரசம் செய்து கொண்டோம் 9 கோரிக்கைகளும் நிறைவேற்ற முடியாதவை அதில் ஒரளவாது ஒன்றில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது அதனாலேயே என்று வியாக்கியானங்களும் முன் வருகின்றன. இப்படி எந்த விதமான அரசியல் தெளிவுமே இல்லாமல் வைக்கப்படும் கருத்துகளுடன் தான் இந்திய அரசுக்கு எதிரான போராட்டம் கோரிக்கையை நாம் இந்தியாவிற்கு வைத்து அதற்கு தான் நெருக்கடி கொடுக்க வேண்டும் என்கிறார்கள்.

இங்கு கேட்கப்படும் கேள்விகள் புரிந்தாலும் அதை குறித்த பதிலை அளிப்பதை விட கிச்சு கிச்சு தாம்பாளம் விளையாடுவதே அரசியல் என்ற நிலையில் இருக்கிறார்கள் சிலர், அவர்களுக்காக திரும்பவும் அதே கேள்விகள். தோழர் தியாகுவின் போராட்டத்தின் முதல் கோரிக்கை கமென்வெல்த் மாநாடு இலங்கையில் நடக்க கூடாது, அவ்வாறு நடத்துவதை தடுத்து நிறுத்த முடியாவிடில் இந்தியா கலந்து கொள்ள கூடாது, அல்லது இந்தியாவின் தலைமை அமைச்சர் கலந்து கொள்ள கூடாது என்பதே. இதில் கோரிக்கையை முதல்நாள் ஆரம்பித்த அன்றிலிருந்து பேச வேண்டியது கமென்வெல்த் மாநாட்டை நடத்தாதே என்பது தான், இந்திய பிரதமரிடம் இருந்து வந்த கடிதம் இதில் எதையும் உறுதி செய்யவில்லை தமிழர்களின் நலன் கருதி முடிவு செய்வோம் என்று தான் இருந்தது. இது தான் போராட்டம் தொடங்கி முடிந்த வரை நடந்த ஒட்டுமொத்த நிகழ்வு. இதில் யாரும் எந்த குறையும் சொல்லவில்லை ஆனால் இங்கு ஒட்டுமொத்தமாக நிகழ்வு இலங்கையில் மாநாடு நடத்தக் கூடாது என்ற கருத்திற்கு எதிராக செல்ல அனுமதித்தது ஏன் என்பது தான் கேள்வி.

உண்ணாவிரதம் நடந்த பொழுது பல்வேறு போராட்டங்கள் தோழமை இயக்கங்களாலும் எடுக்கப்பட்டது கூட்டமைப்பில் இருக்கும் இயக்கங்களாலும் எடுக்கப்பட்டது அதை ஊடகங்கள் தங்கள் தேவைக்கு திரித்தது எல்லாம் எப்பொழுதும் நடக்க கூடியது. ஆனால் தங்களின் சொந்த இணைய தளங்களில் கூட முதல் கோரிக்கையான கமென்வெல்த் மாநாடு நடக்க கூடாது என்பதற்காக நடத்தப்பட்ட போராட்டம் என்பதை பதியாமல் மாற்றி இந்தியா கலந்துக்க கூடாது என்பதை பதிந்தது ஏன்..

கடைசியாக சென்ற சனிக்கிழமை மாணவர்கள் மெரினாவில் நடத்திய போராட்டத்தில் கூட ஊடக திரிப்பு என்பது அரசுக்கு சாதகமாகவே இருந்தது அதாவது போராட்டம் நடத்தப்பட்டது கமென்வெல்த் மாநாடு இலங்கையில் நடக்க கூடாது என்பதை வலியுறுத்தி அங்கு பேட்டியளித்த மாணவ மாணவிகளும் தெளிவாக சொன்னார்கள். ஆனால் செய்தி ஒளிபரப்ப பட்டது இந்தியா கலந்து கொள்ள கூடாது என்பதை வலியுறுத்தி என்று சொன்னார்கள்.


NewsX News. about Wlakathon


அப்படி ஊடகங்கள் திரித்த செய்திகளை வெளியிட்டு வருகிறது, தினத்தந்தியோ, தினமலமோ, தி இந்துவோ செய்தியை தனது நோக்கத்துடனே, அரசுக்கு ஜால்ரா அடித்து தான் வெளியிடும் அதைப் பற்றி கவலையில்லை சமூக ஊடகமான முகநூல் பக்கத்தில் நீங்கள் போராட்டத்தின் நோக்கமாக பதியும் பொழுது இலங்கையில் கமென்வெல்த் மாநாடு நடக்க கூடாது என்று பதிந்து இருக்கலாமே அங்கேயும் நீங்கள் அதை செய்வதில்லை.



இந்த பதிவு உங்களின் சொந்த மாணவர் போராட்ட குழு சென்னையில் நடத்திய இரயில் மறியலைபற்றி உங்கள் பக்கத்தில் தகவலாக பதியும் பொழுது இப்படியா பதிவீர்கள். இந்தியா கலந்து கொள்ள கூடாது என்று மட்டும் இந்த போராட்டம் நடந்தது உண்ணாவிரதம் ஆரம்பித்து 11ம் நாள் அன்றே போராட்டத்தின் நோக்கமாக நீங்கள் கூறுவது இந்தியா கலந்து கொள்ள கூடாது என்பது தான்.

இன்னும் இருக்கு போராட்டத்தின் 14ம் நாள் கோயம்பேட்டில் போராட்ட குழு மாணவர்கள் தாக்கப்பட்ட செய்தி எந்த ஊடகத்திலும் வந்ததாக தெரியவில்லை ஆனால் முகநூலில் பகிர்ந்தீர்கள் பலருக்கும் போய் சேர்ந்தது ஆனால் அதில் திரும்பவும் இந்தியா கலந்து கொள்ள கூடாது என்ற வாசகங்களே இடம் பெற்றுள்ளது. நமது மாற்று ஊடகமான முகநூலில் கூட காமென்வெல்த் மாநாடு நடக்க கூடாது என்பதை வலியுறுத்தும் அளவிற்கு இல்லாமல் போனது ஏனோ? இது இந்த நிகழ்வு மட்டுமல்ல அனைத்து நிகழ்விலும் தொடர்ந்து தங்களுடையை பதிவுகள் இப்படித் தான் இருக்கிறது.

உண்ணாவிரத செய்தியை ஊடகங்கள் இருட்டடிப்பு செய்யும் பொழுது நாம் நம்புவது மாற்று ஊடகங்களையும், சுவரொட்டிகளும் தான். நமது செயல்பாடுகளை மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் வேறு வழி நமக்கு இல்லை. ஆனால் அந்த சுவரொட்டிகளில் ஆரம்பம் முதல் எங்கும் “காமென்வெல்த் மாநாட்டை நடத்தாதே” என்று பதிவு இல்லை, இனப்படுகொலை இலங்கையில் காமென்வெல்த் மாநாடா?!!?? என்று பதிந்து கேள்விக் குறியோ ஆச்சரிய குறியோ மட்டும் தான் இருக்கிறது. அதற்கடுத்து இந்தியாவை மறிப்போம் இது தான் அரசியல் தகவலாக மற்றோர் மாற்று ஊடகத்தில் தாங்கள் கொடுக்கும் செய்தியா??



இப்படி ஆரம்பத்தில் இருந்தே போராட்டத்தின் மைய நோக்கத்தை சிதைக்கும் விதமாக பதிவுகளும் சுவரொட்டிகளும் நாங்கள் பதிவிடவில்லை ஆனால் தங்களின் பதிவுகள் தான் சொல்கிறது. உண்ணாவிரத போராட்டம் எத்தனையாவது நாள் என்று அறிவிக்கும் சுவரொட்டியில் எதற்கு நடக்கிறது என்று கேட்டால் இந்தியாவை மறிப்போம் என்பது மட்டும் தான் இருக்கிறது எதற்காக மறிப்போம் ஏன் மறிப்போம் என்ற கேள்விகளுக்கு எல்லாம் நான் கற்பனை செய்து கொள்ளலாம் பாமர மக்கள் தினமும் தன் வாழ்க்கையை நகர்த்த போராடும் மக்கள் அறிந்து கொள்ள வாய்ப்பில்லை என்பதை அருகில் இருக்கும் தமிழர் தன்மான பேரவை சுவரொட்டியில் தெளிவாக அதுவும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த சுவரொட்டியில் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

இப்படி போராட்டத்தின் நோக்கதை சிதைக்கும் விதமாகவே பதிந்து போராட்டம் முடிக்கும் பொழுது இந்தியா பங்கேற்க கூடாது என்று இந்திய ஆளும் அரச வர்கத்தின் சிந்தனையை பிரதிபலிக்கும் கருணாநிதியின் கோரிக்கையின் கீழ் முடிக்கப் படும்பொழுது இத்தனை நாள் தோள் கொடுத்து நின்ற தோழர்களுக்கு எப்படி இருந்து இருக்கும். இத்தனை நாள் போராட்டங்கள் பல நாம் செய்திருந்தாலும் அதன் நோக்கம் மக்களை சென்றடைந்ததா என்று கேட்டால் இல்லை என்பதை தெளிவாக சொல்ல முடியும். எனென்றால் இங்கு மக்களுக்கான அரசியல் என்பது கருணாநிதியின் குரலும் ஜெயலலிதாவின் குரலும் பிரதிபலிப்பது தான் என்ற நிலையில் இருக்கிறோம். இவர்கள் இருவருமே என்றும் ஈழவிடுதலைக்கு ஆதரவானவர்களாக முழுமையாக தங்களை காட்டிக் கொண்டவர்கள் இல்லை.


தமிழக மக்களிடையே நடக்கும் அரசியல் மாற்றங்களுக்காக அவ்வப்பொழுது வேடமிடும் வேடதாரிகள், தமிழக மக்களிடம் ஈழப் படுகொலையை கொண்டு சேர்த்து இந்த வேடதாரிகளுக்கு எதிராக அவர்களின் மனதை மாற்றிய பெரும் பங்கு மாற்று அரசியலை உருவாக்க ஓடிவந்த கூட்டத்தையே சாரும். ஆனால் இங்கு இந்த போராட்டத்தை பொறுத்தவரை அனைத்துமே தவறாகவே சித்தரிக்கப்பட்டு வந்திருக்கிறது என்பதை தெளிவாக இங்கிருக்கும் பதிவுகளால் உணர்ந்து கொள்ளலாம். 

போராட்டம் தோழமை அமைப்புகளின் கோரிக்கையினாலும், பிரதமரின் கடிதத்தாலும் தான் உண்ணாவிரதம் முடிக்கப்பட்டது தோழர் தியாகுவின் உயிர் காப்பாற்றப்பட்டது என்பதில் மகிழ்ச்சியே. ஆனால் இதை கடந்த ஞாயிற்றுக் கிழமை அத்தனை தோழமை இயக்கங்களும், தலைவர்களும் வந்த பொழுதே அறிவித்திருந்தால் இன்று கோரிக்கை சிதைக்கப்பட்டு இந்தியா பங்கேற்க கூடாது என்ற நிலையில் இருக்கும் நிலையை அடைந்திருக்காது.. இன்று கருணாநிதி மற்றுமொரு இயேசுவாக உருவாகி தோழர் தியாகுவின் உயிரை காப்பாற்றி கொடுத்திருக்கிறார். வாழ்க மாற்று அரசியல் வாழ்க.. கொண்டு செல்லட்டும் இந்த அரசியல் தமிழின மீட்சியின் பாதையில்... 

No comments:

Post a Comment