Thursday, October 17, 2013

மாற்று அரசியலும் மாற்ற கிளம்பிய மன்னார்களும் - பகுதி 3

ஆரம்பக் கட்டுரையிலேயே சொன்னேன் எளியவர்கள் எடுக்கும் ஒரு போராட்டம் அதன் குரல் எப்படி வலியவர்களால் சிதைக்கப்படும் என்று அது இன்று முற்றும் முழுவதும் ஜெயலலிதாவின் கடிதம் மூலமாக பாமர மக்களுக்கு சென்றடைந்து இருக்கிறது. ஆம் தியாகு தோழர் முதன் முதலில் உண்ணாவிரதம் என்று அறிவித்ததை நான் செங்கொடி நினைவு தினம் அன்று காஞ்சிபுரத்தில் வைத்து அறிந்துகொண்டேன் துண்டறிக்கை வாயிலாக. அப்பொழுது கோரிக்கைகளை படிக்கவே இல்லை தியாகு தோழரும் நிகழ்வுக்கு வந்திருந்தார் உடனடியாக சென்று எனது எதிர்ப்பை பதிவு செய்தேன். வேறு ஒன்றும் இல்லை இங்கிருக்கும் அரசியல் சக்திகளை நம்பி இந்த போராட்டத்தில் இறங்காதீர்கள் உங்களை சாகடித்துவிட்டு தான் மறு வேலை பார்ப்பார்கள் வேண்டாம் என்றேன். அவர் அலுவலகம் வாருங்கள் பேசலாம் என்றார் ஆனால் அப்பொழுதே சொன்னேன் உங்களின் வேலை வருங்கால சந்ததிகளை வழிநடத்துவது, சர்வதேச நகர்வுகளை கணித்து எங்களுக்கு உணர்த்துவது, இத்தகைய உண்ணாவிரத செயல்பாடுகள் இல்லை என்று சொல்லி என் எதிர்ப்பை பதிவு செய்து முடித்தேன்.

பிறகு என் அறைக்கு வந்த பிறகு தான் கோரிக்கைகளை படித்தேன் அதில் முதலாவதான கோரிக்கை காமென்வெல்த் மாநாடு இலங்கையில் நடைபெறக் கூடாது என்பது, மிகவும் அரசியல் பூர்வமான கோரிக்கை இப்பொழுது இந்த மாநாட்டை அனுமதித்தால் அடுத்து ராஜபக்சே உலக அரங்கில் மிகப்பெரும் தலைவராக மதிக்கப்படுவார். காமென்வெல்த் கூட்டமைப்பின் அடுத்த இரண்டு ஆண்டுகள் இவர் தான் தலைவராக இருப்பார் இது இனப்படுகொலை நடத்திய இவரை உலக அரங்கின் முன்பு நாம் குற்றவாளியாக நிறுத்த எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு ஒரு தடைக் கல்லாக அமையும் என்பதால் வைக்கப்பட்ட கோரிக்கை ஆனால் இன்று அந்த கோரிக்கை முழுவதுமாக சிதைந்துவிட்டது. இதற்கு காரணம் தோழர் தியாகுவும் தான்.

கடந்த ஆக்ஸ்ட் மாதம் 18ம் தேதியே கருணாநிதி காமென் வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ள கூடாது என்றார், எப்பொழுதும் இவருக்கு எதிராக பேசுவதை தமிழக மக்களுக்கு செய்யும் சேவையாக கருதும் ஜெயலலிதாவும் இன்று காமென்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ள கூடாது என்கிறார். ஆகமொத்தம் இந்தியாவின் ஆசையை இவர்கள் இருவரும் பிரதிபலிக்கிறார்கள் ஒருமித்த குரலில். இதில் எளியவர்களாகிய நமது போராட்டம் காமென்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தி இலங்கைக்கு அங்கிகாரம் கொடுக்காதே என்ற குரல் இப்பொழுது மங்கி மறைந்துவிட்டது. இதை கருணாநிதியும் ஜெயலலிதாவின் உரத்த குரல்கள் அதுவும் பாமரனுக்கு தெரிந்த குரல்களால் மட்டும் மங்கவில்லை. தியாகுவின் போராட்டத்தை பாதுகாத்து வழிநடத்திய கூட்டமைப்பும் சேர்ந்தே இருட்டடிப்பு செய்துள்ளன. இந்த கூட்டமைப்பின் முக்கிய அங்கத்தினர் தமிழ்நாடு மக்கள் கட்சியினர் இந்த அமைப்பில் இருந்து அருண் சோரி தான் அனைத்து வேலைகளையும் முன்னின்று செய்பவர், கட்சியின் செய்தி தொடர்பாளர். இவருக்கு ஒரு வார்த்தையை மாற்றி கூறினால் தவறான பொருள் படும் என்பது புரியாமல் போனது தான் அதிசயமாக உங்களுக்கு இருக்கும் ஆனால் கடந்த பல வருடங்களாக இவரை பார்த்து வரும் எனக்கு அதிசயமாக தெரியவில்லை.

இந்த பதிவில் தோழர் தியாகு போராட்டத்தை முடித்துக் கொண்டது இந்தியா காமென்வெல்த் மாநாட்டில் பங்கு கொள்ள கூடாது என்ற நோக்கத்துடன் மட்டுமே என்று அவரின் உண்ணாவிரதம் நிறுத்தப்பட்டத்தை அறிவிக்கும் பொழுது அறிக்கையாக சமர்ப்பிக்கின்றனர். 

சரி இவர்களின் மாணவர் அமைப்பான தமிழ்நாடு மாணவர் இயக்கமும், தமிழீழத்திற்கான மாணவர் போராட்ட குழுவும் சரி நடத்திய போராட்டங்களில் காமென்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்ற கோரிக்கை தான் முன்னிறுத்தப் பட்டுள்ளதை நாம் தெளிவாக இங்கு இருக்கும் தரவுகளில் தெரிந்து கொள்ளலாம். தோழர் தியாகுவின் காமென் வெல்த் மாநாடு நடக்க கூடாது அப்படி மாநாடு நடந்தால் இந்தியா பிரதமர் பங்கு ஏற்க கூடாது என்று ஒரு தேர்வாக தான் கோரிக்கை வைத்தார். ஆனால் முதன்மை கோரிக்கையை விடுத்து தேர்வாக (Choice) வைத்த கோரிக்கையை தான் தமிழ்நாடு மக்கள் கட்சி முன்னிறுத்தி போராடி வருகிறது, கருணாநிதியும் ஜெயலலிதாவும் இதே கோரிக்கையை தான் சொல்கிறார்கள்.

இந்திய பிரதமரின் கடிதமும் கலந்து கொள்வதை பற்றி ஆலோசனை செய்வோம் என்கிறதே ஒழிய, காமென்வெல்த் மாநாட்டை இனப்படுகொலை செய்த இலங்கையில் நடத்தாமல் இருப்பதற்கு ஆலோசனை செய்வோம் என்று சொல்லவில்லை. தமிழ்நாடு மக்கள் கட்சி இப்படி கோரிக்கைகளை திசை திருப்புவதும் போராட்டங்களை திசை திருப்புவதையும் தொடர்ந்து செய்து வருகிறது. இதற்கு தடையாக யாராவது இருப்பார்கள் என்றால் அவர்களை ஓரங்கட்டும் பணியை தெளிவாக செய்யும். அருண் சோரி இன்று தான் தமிழ்நாடு மக்கள் கட்சி எனும் பெயரில் இயங்குகிறார் இதற்கு முன்பாக தமிழர் இளைஞர் எழுச்சி பாசறையாக செயல் பட்ட பொழுது அணு உலைக்கு எதிரான கூட்டமைப்பு உருவாக்கப் பட்டது அதில் மே 17 திருமுருகனுக்கும், திருநெல்வேலி மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளருக்கும் பொறுப்புகள் முதலில் வழங்கப்பட்டது ஆனால் அது யாரை கேட்டார்கள் இல்லை பொறுப்புகளை அறிவித்த பிறகு எப்படி மாற்றினார்கள் என்பது யாருக்குமே தெரியாது அடுத்து வந்த அறிக்கைகளில் இவர்கள் பெயர் மாயம் ஆனது.
கூட்டமைப்பு என்று ஒன்றை ஏற்படுத்தி அதில் தங்களுக்கு பிரச்சனை கொடுப்பவர்களை அதாவது கூட்டமைப்பு எதற்காக ஏற்படுத்தப் பட்டதோ அந்த நோக்கத்தை விட்டு விலகும் பொழுது பிரச்சனை கொடுப்பவர்களை ஒதுக்கி வைப்பது இந்த அருண்சோரிக்கு கைவந்த கலை. ஒவ்வொரு கூட்டமைப்பிலும் பெரிய ஆட்கள் கொளத்தூர் மணி, பாவேந்தன் போன்றவர்களை முன்னிறுத்தி தனது வேலைகளை பின்னால் இருந்து செய்துவிட்டு செல்வார் இந்த அருண்சோரி. அணு உலைக்கு எதிரான கூட்டமைப்பிலும் இப்படியே செய்தார்கள், இதில் மேலும் நகைப்புக் குரிய விசயம் என்றால் இடிந்தகரைக்கு சென்று அங்கு போராடி கொண்டிருப்பவர்களிடம் தலைமை சரியில்லை மாற்ற வேண்டும் என்று சொன்னது தான். இப்படி இவர் செய்த தகிடுதித்தங்கள் பல. ஆனால் முதன் முதலாக ஜுன் 26 நினைவேந்தலுக்காக இவரை அனுகி கேட்டபொழுது கூட்டமைப்புகள் மீது நம்பிக்கை இல்லை என்று என்னிடமே நேரடியாக சொன்னவர் தான் இவர்.

முத்துகுமாரின் மறைவிற்கு பின் முத்துகுமார் இளைஞர் எழுச்சி பாசறை என்று தமிழகம் முழுவது 120 பேர் இணைந்து உருவாக்கி 2009 தேர்தலில் காங்கிரஸுக்கு எதிராக வேலை பார்த்தனர். ஏன் காரைக்குடியில் இன்று நாம் தமிழரில் இருக்கும் ராஜிவ்காந்தி அவர்களை வேட்பாளராக சிதம்பரத்திற்கு எதிராக நிறுத்தி காங்கிரஸ் எதிர்ப்பு பிரசாரம் செய்தார்கள். அப்பொழுது அருண்சோரி, சதீஸ், பாலன் போன்றோர் ஒட்டரசியல் நமது நோக்கம் அல்ல என்று சொல்லி ராஜிவ்காந்தியின் சின்னத்தை சொல்லாமல் சிதம்பரத்திற்கு எதிராக மட்டும் பிரசாரம் செய்யவேண்டும் என்று சொல்லி செயல்பட்டார்கள். ராஜிவ்காந்தியின் சின்னம் என்ன என்று யாருக்குமே தெரியாமல் தான் இருந்தது கடைசிவரை. இப்படி நடைபெற்ற பிரசாரத்தின் வாயிலாக தான் அன்று தோல்வியுற்ற சிதம்பரம் குறுக்குவழியில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டு இன்று அமைச்சராக இருக்கிறார். இப்படி மிகப்பெரும் சாதனை செய்த முத்துகுமார் இளைஞர் எழுச்சி பாசறையும் அதன் உறுப்பினர்களும் இன்று எங்கிருக்கிறார்கள் என்பது தெரியாமல் போனது அருண்சோரியின் ஆக மிகச்சிறந்த பணியாகும்.

இப்படி பல கூட்டமைப்புகளை சரியான முறையில் செயல்படவிடாமல் முன்னின்று அந்த கூட்டமைப்புகளை இழுத்து முடுவது, அதில் மே 17 இயக்கம் இருந்தால் அவர்களை எப்படியாவது ஓரம் கட்டுவது. தியாகு தோழர் உண்ணாவிரதம் ஆரம்பித்த பொழுது கூட்டமைப்பிற்கு அழைப்பு விடுக்கவில்லை தியாகு தோழர் முதல் முறை கைது செய்யப் பட்ட அன்று ஒரு அலோசனை கூட்டம் நடைபெற்றது அதில் ம.ஜ.க அமைப்பை சேர்ந்த தோழர் டெசோ அமைப்பினர் வந்தால் அவர்களை கூட்டமைப்பில் சேர்ப்பீர்களா என்று கேட்ட பொழுது சேவ் தமிழ்ஸ் செந்தில் கோரிக்கை தான் முக்கியம் யார் வந்தாலும் இணைத்துக் கொள்வோம் என்று சொல்லி இருக்கிறார். இதற்கு முன்பாகவே 3ம் தேதி டிகேஎஸ் இளங்கோவனும் பொன்முடியும் தியாகுவின் உண்ணாவிரதத்திற்கு எழுந்தருளி ஆசிர்வாதம் செய்து சென்றனர்..

டெசோவின் தலைவர் ஆகஸ்ட் 18ம் தேதியே தோழர் தியாகுவின் முதன்மை கோரிக்கையை கேட்காமல் இந்தியா பங்கேற்க கூடாது என்ற தேர்வு(choice) கோரிக்கையை தான் முன்னிறுத்தினார். அவர்கள் எப்படி ஒத்த கருத்துடையவர்களாக இவர்களுக்கு தெரிந்தது என்பது யாருக்கும் புரியாத புதிர். இப்படி தோழர் தியாகுவின் போராட்ட நோக்கத்தை கருணாநிதியிடம் அடகு வைத்தார்கள், ஆனால் வட்டியை ஜெயலலிதா இவர்களுக்கு தெரிந்தோ தெரியாமலோ இன்று தனது பிரதமருக்கு எழுதிய கடிதம் மூலமாக வசூலித்து விட்டார்.

அருண் சோரியின் சில நடவடிக்கைகள் அதுவும் இங்கு கோரிக்கை சார்ந்த நடவடிக்கைகளை அதில் நடத்திய தில்லாங்கடிகளை மட்டுமே இங்கு பகிர்ந்துள்ளேன். தமிழினம் சார்ந்த பலவற்றில் இவருடன் சேர்ந்து தமிழனாக நிற்க முடியாமல் போனதற்கு பல காரணங்கள் உள்ளன அது மற்றொரு சமயத்தில்..

இப்பொழுது நெடுமாறன் அய்யாவின் முள்ளிவாய்க்கல் முற்றம் நிகழ்விலும் உள்ளே நுழைந்து இருப்பதாக அறிகிறேன்.. அதுவும் மாணவர்கள் பங்கேற்கும் சுடர் பயணத்தில் இவருக்கு என்ன வேலை என்பது எனக்கும் புரியவில்லை. இவர்களுடன் சேர்ந்து கொண்டு தான் மாணவர் போராட்டத்தில் இயக்கங்கள் தலையிடுகின்றன என்று சில காலம் முன்பாக நடந்த மாணவர் போராட்டத்தின் போது குற்றம் சாட்டினர். ஆனால் அன்று அங்கு மாணவர் போராட்டத்தில் உதவி செய்த மற்ற இயக்கத்தினர் யாரும் மாணவர் அமைப்பை தங்கள் இயக்கத்துடன் இணைத்துக் கொள்ளவில்லை. தமிழீழத்திற்கான மாணவர் போராட்ட குழு இன்று தமிழ்நாடு மக்கள் கட்சியின் மாணவர் கிளையாக செயல்படுகிறது..

கடைசியாக கொசுறு செய்தி… ஒரு பக்கம் நெடுமாறன் அய்யாவை விமர்சித்துக் கொண்டே மறுபக்கம் இவர்கள் சுடர் பயணத்தை முன்னெடுக்கிறார்கள் வாழ்க இவர்களின் மாற்றத்திற்கான மாற்று அரசியல்…..
இதை பார்த்துவிட்டு மக்கள் இயக்கங்களின் ஒற்றுமையே என்று சொல்பவர்கள் ஏன் அனைத்து இயக்கங்களையும் தோழர் தியாகுவின் உண்ணாவிரதத்தில் இணைக்கவில்லை என்று கேள்வி கேட்டால் என்னால் பதில் சொல்ல முடியாது... அவர்களாலும் பதில் சொல்ல முடியாது இதை தான் பாவேந்தன் அய்யாவிடம் கேள்வியாக வைத்தேன் இன்று வரை பதில் இல்லை... 

No comments:

Post a Comment