Tuesday, October 15, 2013

தோழர் பா வேந்தன் அவர்களுக்கு ஒரு திறந்த மடல்..


தோழர் பா.வேந்தனுக்கு ஒரு திறந்த மடல்….

நேற்று முன் தினம் (13/10/2013) உங்களை உங்கள் வீடு வரைக்கும் கொண்டு வந்து விடும் உதவி செய்தமைக்கு தோழர் செல்வராஜிற்கு நன்றி செலுத்த கடமை பட்டுள்ளேன். ஆனால் அதே சமயத்தில் நேற்றைய கூட்டத்தில் நீங்கள் நடந்து கொண்ட முறையை பார்க்கும் பொழுது் வெட்கப் படுகிறேன்.

நேற்று முன் தினம் இரவு இந்திய நண்டு கதையை அதாவது அதை விட மோசமான தமிழக இயக்க நண்டுகள் கதையை விளக்கினார் உங்களிடம் அதைவிட மோசமனவை நான் பார்த்தது. பேச துடித்தாலும் அடக்கி கொண்டேன். ஆனால் காமன்வெல்த் கூட்டமைப்பில் பலரை இணைக்கவில்லை நாளை அனைவரையும் இணைக்க கூட்டம் நடைபெறவுள்ளது என்று சொன்ன நீங்கள் நேற்றைய கூட்டத்தின் பொழுது அப்படி ஒரு இணைப்பை பற்றி் பேசவில்லையே ஏன்????.

நானும் பலவருடங்களாக பார்த்து வருகிறேன் கூட்டமைப்பு என்ற விசயத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை என்று சொன்ன அருண்சோரி தான் அனைத்து கூட்டமைப்புகளிலும் தலைமை தாங்குகிறது அது எப்படி.. மே 17 இயக்கம் முதல் முறையாக நினைவேந்தல் நடத்த முயன்ற பொழுது அன்று இதே அருண்சோரி கூட்டமைப்பில் எனக்கு நம்பிக்கை இல்லை என்றார் ஆனால் அன்றிலிருந்து அதாவது 2011 மே மாதத்திலிருந்து இன்று வரை அமைந்த அனைத்து கூட்டமைப்பின் முக்கிய அங்கத்தினராக இவர் இருக்கிறார் ஏன் என்று எனக்கு புரியவில்லை என்று நான் சொல்ல மாட்டேன். ஒரு இடத்திலும் உங்களை தலைமை என்று மற்றொரு இடத்தில் இன்னொருவரை தலைமை என்றும் சொல்லிவிட்டு தனக்கான அங்கீகாரத்தை தேடிக் கொள்கிறான். இதற்கு காரணம் தங்களை போன்றவர்களின் அங்கீகார போதை…

ஆம் இத்தனை நாள் போராடினோம் எனக்கான மரியாதை கிடைக்கவில்லை என்ற உங்களின் நினைப்பும் அங்கிகாரத்திற்கு அழையும் மனப்போக்குமே இவர்களுக்கான பாதையை உருவாக்குகிறது.. இந்த பதிவிற்கு நீங்கள் பதில் அளித்தால் வரவேற்பேன் தமிழனின் மீட்சிக்காக போரடுபவர்கள் என்ற வகையில் இன்னும் பல தகவல்களுடன்….

நன்றி

இப்படிக்கு

நேற்று முன் தினம் என் பெயரை சொல்லி நீயும் ஏன் ஹரி வரவில்லை என்று நீங்கள் கேட்டதால் நானும் ஒரு சில விசயங்கள் இந்த தமிழ் சமுதாயத்துக்கு செய்ய முயற்சி செய்திருக்கிறேன் என்ற வகையில் என்னை நியாபகம் வைத்திருக்கிறீர்கள் என்று பெருமிதம் கொண்ட வகையில்…
ஹரிஹரன்…
15/10/2013 

No comments:

Post a Comment