Wednesday, October 16, 2013

மாற்று அரசியலும் மாற்ற கிளம்பிய மன்னார்களும் - பகுதி 2

பகுதி 2..


முதலில் பழைய விசயங்களை திரும்ப பார்ப்போம் தோழர் தியாகு மிகப் பெரிய அறிவுஜிவியாக தமிழ் தேசிய கருத்தியலாக்கத்தில் உலாவியவர். அவர் ஒரு உண்ணாவிரதத்தை இங்கு இருக்கும் பல தமிழர் நலன் சார்ந்த இயக்கங்களும் கட்சிகளும் ஏன் தீவிர தமிழ் தேசிய இயக்கங்களும் கேட்டு கொண்டபொழுது உண்ணாவிரதத்தை கைவிட மறுத்தார். நான் ஆரம்பித்த போராட்டத்தை நீங்கள் கையில் எடுத்து வீரிய படுத்துங்கள் என்றார் அனைவரும் செவி சாய்த்து அதற்கான வேலையில் ஈடுபட்டோம் ஆனால் அவர் இவர்கள் எல்லாம் தேவையில்லை என்று அவரின் முதல் கோரிக்கையான. “இலங்கையில் காமென்வெல்த் மாநாடு நடக்க கூடாது” என்ற கோரிக்கையை தொலைத்துவிட்டாரோ என்று நினைக்க தோன்றுகிறது இன்று எனென்றால் உங்கள் கோரிக்கையை சிரமேற்கொண்டு நாங்கள் போராடுகிறோம் என்ற சொன்ன இயக்கங்களின் கோரிக்கையை மறுத்துவிட்டு.

ஒரு கடிதம் வந்த பிறகு தனது போராட்டத்தை முடித்துக் கொண்டார் மகிழ்ச்சியே எதோ ஒரு உயிர் காப்பாற்றப்பட்டிருக்கிறதே இது வரை. எனென்றால் முத்துகுமாரில் இருந்து விஜயராஜ் வரை இழப்புகளேயே சந்தித்து வந்த நமக்கு இது மகிழ்வான விசயமே. ஆனால் முடித்து கொண்ட உண்ணாவிரதத்தை இத்தனை நாள் தன்னுடன் இரவும் பகலும் உடன் இருந்தவர்களை வைத்து முடித்துக் கொள்ளவில்லை, திமுக கூட்டணி உறுப்பினர்களை முன்னிறுத்தி முடித்துக் கொண்டார். இது நன்றாகவே இருக்கிறது தொடரட்டும் அவரது பணி திமுகவுடன்.

நாம் நம் பணியை தொடருவோம் தமிழ் தேசியத்திற்கான பாதையில்…

அடுத்த ஆள் அருண் சோரி இவருடன் எனது முதல் சந்திப்பு நியாபகம் இல்லை மிகவும் அருமையான தோழர். தனது சொந்த வாழ்க்கையை பணையம் வைத்து இன்றுவரை களம் காண்பவர். ஆனால் எனக்கு புரியாதது ராஜ்குமார் பழனிசாமி மே 17 அன்று நடத்திய நினைவேந்தல் நிகழ்வில் எந்த கட்சி மதம் சாதி பார்க்காமல் கலந்து கொண்டோம் பலர். அது திருமுருகனுக்கும் உத்வேகமாக அமைந்தது அன்று அடுத்த வருடம் இதே நாளில் மிகப்பெரிய ஒன்றுகூடலை ஈழத்தமிழ் மக்களுக்கு நினைவேந்தலாக சமர்பிக்க வேண்டும் என்று வெளியிட்டார். ஆனால் மறு நாள் காட்சிகள் மாறியது வெகு சீக்கிரத்தில் அதை நடத்த வேண்டும் என்று அவர் அழைத்த அழைப்பை ஏற்றுக்கொண்டு கலந்தாய்வுக்கு வந்த ஒரு 15 பேர் ஏற்றுக் கொண்டோம். ஆனால் அவர்களின் முகம் எனக்கு நியாபகம் இல்லை அவர்களை அன்று தான் கடைசியாக பார்த்தோம், ஆனால் பணி தொடர்ந்தது. அன்று நான் மே 17 இயக்க உறுப்பினர் கிடையாது.

ஆனால் இப்படி ஒரு நிகழ்வு தேவை தமிழ் சமூகத்திற்கு அதுவும் பொது மக்கள் கலந்து கொள்ளும் நிகழ்வாக நடத்தவேண்டும் என்ற வெறி இருந்தது அனைத்து இயக்கங்களையும் இதில் பங்குகொள்ள முதலில் அழைக்க வேண்டும் என்று முடிவெடுத்தோம். அதில் பேச வேண்டிய பொறுப்பை செய்து கொண்டிருந்த பொழுது மே 17 இயக்கம் நடத்திய ஒரு கருத்தரங்கில் தற்செயலாக இல்லை, அதற்கு முன்பே நான் அருண் சோரியை அவரின் கைபேசி எண்ணில் தொடர்பு கொண்ட பொழுது அந்த கருத்தரங்கம் வருகிறேன் அங்கு பேசலாம் என்றார். அன்று அவரின் இயக்கத்தின் பெயர் தமிழர் இளைஞர் எழுச்சி பாசறை.. இதற்கு முன்பு முத்துகுமார் இளைஞர் எழுச்சி பாசறையை காயடித்த இதே அருண்சோரியின் கதையெல்லாம் எனக்கு தெரிந்தாலும் இவரையும் இணைத்து மேற்கொள்ளுவோம் என்று அழைக்க போன பொழுது தான் இது நடந்தது.

ஆம் மே 17 இயக்க கருத்தரங்குக்கு சொன்னது போல் வந்தார் அப்பொழுது ஜூன் 26ம் தேதி நினைவேந்தல் நடத்தலாம் என்று இருக்கிறோம் நீங்களும் இணைய வேண்டும் என்று சொன்னேன். அதற்கு அருண் சோரி சொன்னார் மே 17 இயக்கம் இதை நடத்தப்போகிறது இதில் நான் ஏன் இணைய வேண்டும் என்று கேட்டார். அதற்கு நானும் மே 17 இயக்கம் கிடையாது காரியத்தை மட்டும் பார்ப்போம் என்றேன், இல்லை சரிவராது என்றார். சரி மே 17 என்பதற்கு பதிலாக ஒரு கூட்டமைப்பு ஏற்படுத்தி அதன் கீழ் பணி புரிவோம் என்றேன். அப்பொழுது அருண் சோரி நான் ஏகப்பட்ட கூட்டமைப்பு பார்த்துவிட்டேன் அதில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை என்றார். இது நடந்தது மே மாதம் 2011ம் ஆண்டு அதன் பிறகு தமிழகத்தில் பல கூட்டமைப்பு ஏற்பாடு செய்யப்பட்டது அனைத்திலும் இவர் தான் முதல் ஆளாக இருப்பார் மைக்கை பிடித்துக் கொண்டு.

2011 மே மாதம் கூட்டமைப்பில் நம்பிக்கை இல்லாத இவர் அதன் பிறகு எப்படி கூட்டமைப்பில் நம்பிக்கை வைத்து அனைத்து கூட்டமைப்பு போராட்டங்களில் மைக்கை பிடிக்கிறார் என்பது அவருக்கே வெளிச்சம். ஆனால் எனக்கு தெரிந்தது வேறு ஏனென்றால் இதை போன்ற கூட்டமைப்பு கூட்டத்தில் பங்கு கொண்டவன் அதுவும் சென்னையில் இருந்து திருச்சி வரை சென்று இவர்கள் நடத்திய கூட்டமைப்பு கூட்டத்தில் பங்கு கொண்டவன் ஒவ்வொரு கூட்டமைப்பிலும் ஒரு காலம் வரை அதாவது தியாகு உண்ணாவிரதத்திற்கு முன்பு அனைத்து கூட்டமைப்பிலும் மே 17 இயக்கம் கூப்பிட்டு கலந்துரையாடுவார்கள். ஆனால் இந்த தியாகு உண்ணாவிரதத்தில் மே 17 இயக்கம் இல்லை…

ஆம் முதலில் தியாகு அவர்கள் உண்ணாவிரதம் இருக்க போகிறேன் அறுவித்தது தமிழ் தேசிய விடுதலை இயக்கதின் பெயரில்.. அப்படியே நடந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் ஆனால் அதன் பிறகு இலங்கையில் காமென்வெல்த் மாநாட்டை நடத்தாதே என்று சொல்லி ஒரு இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது ஆனால் அந்த இயக்கம் இந்த கோரிக்கையில் நிலையாக நிற்கிறதா என்றால் இல்லை…


இன்னும் தொடரும்..

மேலே இருக்கும் படத்தில் இருப்பது தமிழ்நாடு மக்கள் கட்சியின் ஒருவரான திவ்யா நடத்தும் மாணவர் இயக்கம். அதில் இலங்கையில் நடக்கும் பொதுநலவாய மாநாட்டை இந்திய புறக்கணிக்க வேண்டும் என்று தான் இருக்கிறது. இதில் இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்ற பேச்சுக்கும் ஒட்டுமொத்தமாக காமன்வெல்த் மாநாடு நடக்க கூடாது இலங்கையில் என்பதற்கு வேறுபாடுகள் உள்ளது.

அனைத்தையும் தாண்டி மாநாடு நடந்தால் அடுத்த இரண்டு வருடத்திற்கு ராஜபக்சே தான் தலைவர், இனப்படுகொலை செய்த ஒருவரை அனைத்து நாடுகளும் வரவேற்கும் நிலைக்கு தள்ளப்படுவோம். இதை உணர்ந்தவர்கள் தான் நாம் ஆனால் ஆதரிக்க கோருபவர்களை பிறகு பார்க்கலாம்..

இவர்களின் கோரிக்கை இந்தியா கமென்வெல்த் மாநாடை புறக்கணிக்க வேண்டும் என்பது தான்.. கருணாநிதியும் அதையே தான் வலியுறுத்தி வருகிறார் இவர்கள் இருவருக்கும் என்ன வித்தியாசம்... 

No comments:

Post a Comment