Wednesday, June 1, 2011

மெல்லிதயம் படைத்தோரே மெழுகுதிரி ஏந்திட மெரினா நோக்கி வாரீர்..



Torture seeks to annihilate the victim’s personality and denies the inherent dignity of the human being. The United Nations has condemned torture from the outset as one of the vilest acts perpetrated by human beings on their fellow human beings.

Torture is a crime under international law. According to all relevant instruments, it is absolutely prohibited and cannot be justified under any circumstances. This prohibition forms part of customary international law, which means that it is binding on every member of the international community, regardless of whether a State has ratified international treaties in which torture is expressly prohibited. The systematic or widespread practice of torture constitutes a crime against humanity.

“The International Day in Support of Victims of Torture is an occasion to underscore the internationally recognized right of all men and women to live free from torture. It is an opportunity to reaffirm our collective commitment to prohibit torture and all cruel, inhuman and degrading treatment or punishment.”

Secretary-General Ban Ki-moon
Message for the International Day in
Support of Victims of Torture 2010



இலங்கையில் கடந்த 2009ம் வருடம் சிங்கள பேரினவாதத்தால் இனப்படுகொலை செய்யப்பட்ட (1,46,000) ஒரு லட்சத்து நாற்பாத்து ஆராயிரம் தமிழர்களுக்காகவும், இதில் பாதிக்கப்பட்ட 30000க்கும் மேற்பட்ட படுகொலை செய்யப்பட்ட குழந்தைகளுக்காகவும், 80000 க்கும் மேற்பட்ட பெண்கள் விதவைகளாக மாற்றாப்பட்ட கொடுமைக்காகவும்.

இலங்கை கடற்படையால் சித்திரவதை செய்து கொல்லப்பட்ட 543 தமிழக மீனவர்களுக்கு அஞ்சலி செலுத்தவும், காணம்ல்போன 700க்கும் மேற்பட்ட மீனவர்களுக்காவும், சிங்கள கடற்படையால் உடல் ஊனமுற்ற 2000க்கும் மேற்பட்ட மீனவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கவும் சாதி, மதம், கட்சி பாகுபாடின்றி அவர் அவர் குடும்பத்துடன் ஒன்று கூடுவோம்..

மெல்லிதயம் படைத்தோரே
மெழுகுதிரி எந்தி அஞ்சலி செலுத்த
மெரினா நோக்கி வாரீர்..


தேதி : ஜூன் 26, மாலை 5 மணி
இடம் : மெரினா கண்ணகி சிலை

மே 17 இயக்கம்


ஜூன் 26 - சித்திரவதைக்கு ஆளானோருக்கு ஆதரவு தெரிவிக்கும் சர்வதேச நாள் (International Day in Support of Victims of Tortured)

குறிப்பு :- இதில் அனைத்து தமிழுணர்வாளர்களும் கட்சி பாகுபாடின்றி கலந்து கொள்ள வேண்டும், இது நம் தமிழ் மக்களுக்கு நமது ஆதரவை தெரிவிக்க செய்யும் ஓர் நிகழ்வு. தங்களுக்கு இதற்கு தேவையான விளம்பர பேனர்கள் போன்றவற்றை தயாரிக்க நிகழ்வின் குறியீடான லோகோ போன்றவைகளை தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளவும். இந்த நிகழ்வு யாரால் நடத்தப்படுகிறது என்பதை பற்றி எந்தவிதமான சர்ச்சையும் தேவையில்லை அனைவரும் இந்த நிகழ்வை தங்களின் நிகழ்வாக எண்ணி செயல்பட வேண்டும்.. ஒரே ஒரு வேண்டுகோள் வாழ்க ஒழிக கோஷங்கள் இல்லாமல், கொடிகள் போன்றவைகளை கொண்டு அரசியல் நிகழ்வாக ஆக்காமல் நம் மக்களுக்கு அமைதியான முறையில் ஆதரவையும் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் அமைதியான நிகழ்வாக நடத்தவேண்டும்.

8 comments:

  1. திரு ஹரிகரன் அவர்களே, நல்ல முயற்சி. ஆனால் நமது தமிழ் இயக்கங்கள் எல்லாம் ஒன்றுபட்டு நிற்க வேண்டிய நேரமிது. மேடையில் பேசுவது மட்டும் தலைவர்களுக்கு அழகல்ல. வீதியில் வந்து மக்களோடு மக்களாக கலந்து போராடவேண்டும். நான் தமிழர்களுக்காக போராடும் எல்லா இயக்கங்களின் தலைவர், செயலர்களின் காலில் விழ தயார். தயவு செய்து ஒன்று சேருங்கள்.

    தமிழகத்தில் தற்போது இரண்டு இயக்கங்கள் மிக வேகமாக வளர்ந்து வருகின்றன. ஒன்று தமிழர் இயக்கங்கள். இரண்டு - ஊழல் எதிர்ப்பு இயக்கங்கள். மக்களை ஏதாவது ஒரு இயக்கத்தில் சேர்க்க வேண்டும். போராட பலகை வேண்டும் . நன்றி. கணியன்.

    ReplyDelete
  2. நமது கழகத்தின் முப்பெரும் விழாவினை இம்முறை புது டில்லியில் திகார் சிறையில் ஜூன் 3 அன்று நடத்தலாம் என்று நானும், பேராசிரியர் எனும் உதவி ஆசிரியரும் முடிவு செய்து உள்ளோம். அது என்ன முப்பெரும் விழா ?

    ஒன்று - திகார் சிறையில் "தகத்தாய கதிரவனின்" 100 நாட்கள் நிறைவு விழா.

    இரண்டு - கழகத்தின் குல விளக்கு ஒப்பில்லா "கவி" அவர்களின் திகார் சிறை நுழைவு விழா.

    மூன்று - நமது கழகத்தின் டில்லி பிரதிநிதியாக அனுப்பப்பட்ட எனது "பேரன்" அவர்களின் திகார் சிறை வழியனுப்பு விழா .

    ஆக கழகத்தின் உடன்பிறப்புகள் அனைவரும் விமானம் மற்றும் தொடர்வண்டிகளில் இன்றே முன்பதிவு செய்து புது டில்லி நோக்கி வரும்படி அக மகிழ்வுடன் அழைக்கின்றேன்.

    anbudan,
    Duriyal......

    ReplyDelete
  3. நண்பர்களே இப்பொழுது நேரம் அனைவரும் ஒன்று சேர்வதர்கானது.. அவர் குற்றம் இவர் குற்றம் என்று வசை பாட அல்ல.. தலைவர்கள் செய்யும் தவறுக்கு தொண்டர்களை குறை கூறக்கூடாது. நிறைய நல்லவர்களும் அங்குள்ளனர் அவர்களை ஒன்றிணைப்போம்..

    ReplyDelete
  4. ஆக கழகத்தின் உடன்பிறப்புகள் அனைவரும் விமானம் மற்றும் தொடர்வண்டிகளில் இன்றே(அவரவர் சொந்த காசில்) முன்பதிவு செய்து புது டில்லி நோக்கி வரும்படி அக மகிழ்வுடன் அழைக்கின்றேன்.

    ReplyDelete
  5. நன்றி ஜோதிஜி அவர்களே..

    ReplyDelete
  6. http://thoughtsintamil.blogspot.com/2011/06/blog-post_26.html#comments

    "நாம் தமிழர்" சார்பில் நடத்தப்பட்டது என்று இங்கு எழுதியிருக்கிறார்! தெளிவுபடுத்தவும்!

    ReplyDelete
  7. Hari,

    Please check the 'Kusumbu' here. We must have enough source to stop this type of nonsense.

    http://thoughtsintamil.blogspot.com/2011/06/blog-post_26.html

    by
    Kanian (Venkat)

    ReplyDelete
  8. கச்சத்தீவு பரிசு - உண்மை என்ன. இந்திய ஏன் கச்சதீவை தாரை வார்த்தது ? வெளியில் வராத மர்மங்கள். இந்த இணைப்பில்

    உள்ளன. பயங்கரமான அரசியல் ??

    http://siragu.com/?p=434
    http://www.facebook.com/siragu

    ReplyDelete