Wednesday, March 23, 2011

சூரிய நாரயாணன் என்ற புறம்போக்கு



காலச்சுவட்டில் ஒரு பெரிய பேட்டி சூரிய நாரயணன் என்ற புறம்போக்கின் காலச்சுவடு நேர்காணல்.



இந்த பேட்டியின் ஆரம்பித்திலேயே இவரின் விளையாட்டு ஆரம்பம் ஆகிவிடுகிறது, 1974 மற்றும் 76ல் போடப்பட்ட இரு நாட்டு ஒப்பந்தங்களால் எந்த பாதிப்பும் இல்லை மீனவர்கள் இரண்டு நாட்டிற்கிடையேயான பகுதியை இரண்டுநாட்டு மீனவர்களும் பொதுவாகவே கருதியிருக்கின்றனர் என்பதை நேரடியாக சொல்லாமல் இந்த ஒப்பந்தங்களால் எந்த பிரச்சனையும் இல்லை என்று பொதுப்படையாக பேசுகிறார். ஆனால் கச்சத்தீவை பயன்படுத்துவதை பற்றி போடப்பட்ட ஒப்பந்தப்படி அதை பயன்படுத்த வேண்டிய தேவை இல்லை என்று சூசகமாக சொல்கிறார் எப்படி என்றால் பருத்தி வலை பயன்படுத்துவதில்லை அதனால் அதை காயவைக்க வேண்டிய தேவை இல்லை என்று. என்னமோ கச்சதீவுக்கு வலையை காய வைக்கமட்டும் தான் போனது போல் சொல்கிறார்.

இவருக்கு என்ன காலையில் எழுந்து குளித்து முடித்து குண்டி கழுவுவாறோ இல்லையோ சந்தியாவந்தனம் சொல்லி சுத்தபத்தமாக அலுவலகம் சென்று மாலையில் விடு திரும்பி அவுத்து போட்டு படுப்பதற்கு முன்னால் இன்னொரு குளியல் போட்டுவிட்டு குப்புற படுத்து தூங்கிவிடுவார். மீனவர்கள் அப்படி இல்லை அய்யா 3 நாள் 4 நாள் என்று நடுக்கடலில் உப்பு காற்றில் அடிக்கும் வெயிலில் வியர்வை சிந்தி உழைப்பவர்கள். அந்தோணியர் கோயில் அருகே இருக்கும் கிணற்றடி தான் அவர்களுக்கு குளியலறை. அதன் அருகே தான் அவர்களுக்கு சமையலறை, சமைக்க தண்ணீர் அந்த கிணற்றிலேயே எடுத்துக் கொள்வார்கள். மினரல் வாட்டர் பாட்டிலை வாங்கி மூனு விரலை மடக்கி காசு கொடுத்து வாங்கிய தண்ணிரை சாப்பாட்டு தட்டை சுற்றி தரையில் ஊற்றி வீணடிக்கும் இவருக்கு கடல் தண்ணீருக்கும் சாப்பாடு சமைக்கும் தண்ணீருக்கும் எங்கு வித்தியாசம் தெரியபோகிறது. உமக்கு தெரிந்தது எல்லாம் வலை காய வைக்க வேண்டும், பருத்தி வலை எத்தனை பேர் பயன்படுத்துகிறார்கள் நைலான் வலை எத்தனை பேர் பயன்படுத்துகிறார்கள் என்று இவருக்கு எங்கு தெரியபோகிறது. கடலுக்குள் என்ன குளிர் சாதன வசதியா கடவுள் செய்து கொடுத்திருக்கிறார்கள் குளிக்காமல் கொள்ளாமல் நான்கு நாட்கள் உட்கார்ந்து இருப்பதற்கு. கடலுக்கு சென்று தொழில் பார்த்தால் அவர்கள் படும் துன்பங்கள் இவருக்கு தெரிந்திருக்கும்.

காஞ்சிபுரம் பட்டுபுடவையை ஈழத்தில் மிகவும் விரும்புவார்களாம், அதுவும் மணப்பெண்ணுக்கு கொடுக்க விரும்புவார்களாம், இதை இங்கிருந்து தமிழக மீனவர்கள் கடத்திக்கொண்டு சென்றனராம். இது வந்து இந்த மீனவர்களுக்கு தொழிலாம் ஆனால் அவருக்கு கடத்தலாம். 83க்கு முன்பு வரை அல்ல இன்று வரை அவர்களை எங்களில் ஒருவராக நினைக்கிறோம் அவர்களும் அப்படி தான் பெண்ணு கொடுத்து பெண்ணு எடுக்கும் பழக்கம் இன்று வரை தொடர்கிறது. ஏன் இரு நாட்டுக்கு இடையில் பெரிய கட்டுபாடுகள் விதிக்கப்பட்ட பிறகு கணவன் அங்கேயும் மனைவி இங்கேயுமாக வாழ்ந்தவர்கள் அந்தோணியார் கோயில் திருவிழாவில் சந்தித்து கொள்வார்கள் அதற்கு பிறகு அவர்களுக்கு குழந்தை பிறந்த கதை கூட உண்டு. இவ்வளவு தெளிவாக பட்டு புடவை கடத்தினார்கள் என்பவர் 1983க்கு முன்பு இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களிடம் செய்து வைத்திருக்கும் சாப்பாட்டை வாங்கி சாப்பிட்டுவிட்டு, கைலி பீடி என்று வாங்கிக் கொண்டு பிரட் ஹார்லிக்ஸ் என்று கொடுத்து செல்வார்களே அது இவருக்கு தெரிந்திருக்காதா. அதுவும் கூட கடத்தல் தான் அவர்கள் சாப்பிட்ட சாப்பாட்டை வயிற்றை கிழித்து எடுத்து வர வழிவகை செய்ய வேண்டியது தானே. தனுஸ்கோடியில் குழாய் ரேடியோ வைத்து சத்தமாக பாட்டு போட்டால் அந்தபக்கம் கடலில் அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தால் அவர்களுக்கு கேட்கும் அது கூட இவர் பார்வையில் அடுத்து கடத்தலாக தெரியும் போல் தெரிகிறது. இவர் முதலில் பருப்பு சாப்பிடுவதை விட்டால் நல்லது இவர் வெளியிடும் வாயுவை காற்று கடத்தி கொண்டு போய் பக்கத்து வீட்டில் மூக்கை மூட வைக்கிறதாம்..

அடுத்த சப்பைகட்டு இலங்கை கடற்படைக்கு கட்டுகிறார், எப்படி போராளிகளா மீனவர்களா என்பது தெரியவில்லை அதனால் தான் படகுக்கு பக்கத்தில் வருவதற்கு முன்பே பயத்தில் சுட்டுக்கொண்டே வருவார்கள் என்று. அவர்களிடம் மிகச்சிறந்த ஆயுதங்கள் இல்லை படகுகள் இல்லை ஆனால் இந்திய கடற்படை அனைத்து வசதிகளுடன் தானே இருந்தது 91க்கு முன்போ இல்லை பின்போ எத்தனை போராளிகள் படகுகளை பிடித்தது. போராளிகள் இங்கு வந்தார்கள் மருந்துகள் போன்ற அத்தியாவசிய பொருட்களை கொண்டு சென்றனர் இல்லை என்று சொல்லவில்லை, ஈழத்தின் மீது பொருளாதர தடை விதிக்கப்பட்டு அங்கு எந்த அத்தியாவசிய தேவைக்கான பொருட்களும் கிடைக்கவில்லை எனவே தங்களுக்கு தேவையான பொருட்களையும் தன்னை நம்பி இருக்கும் மக்களூக்கும் தேவையான பொருட்களை கடத்தி சென்றனர். ஆனால் அவர்களில் எத்தனை பேரை அதிநவீன படகுகள் ஆயுதங்கள் கொண்ட இந்திய கடற்படை பிடித்தது. அப்படி ஒருவரையும் பிடிக்காத பொழுது இலங்கை கடற்படையினர் அதுவும் இவரின் கூற்றுபடி 80களுக்கு பிறகு தான் கடற்படையே வந்தது எனும் பொழுது போராளிகளை பிடித்துவிட்டோம் என்று நினைத்து சுட்டார்களாம் இதை நாம் நம்பவேண்டுமாம். கேட்கிறவன் கேனையனாக இருந்தால் கேப்பையில் நெய்வடிகிறது என்று சொல்லலாம்.



அடுத்த பொய் அங்கிருந்து அகதிகளாக வந்தவர்கள் அவர்கள் நாட்டின் எல்லைபகுதியில் எங்கு மீன் கிடைக்கும் என்று காட்டி கொடுத்தார்களாம். அகதிகள் முகாமில் இருந்து ஒருவர் வெளியில் வர வேண்டும் என்றால் அனுமதி வாங்க வேண்டும் அதுவும் இரவு வராமல் வெளியில் தங்க வேண்டும் என்றால் சிறப்பு அனுமதி மூன்று நாட்களுக்கு மேல் வெளியில் தங்க வேண்டுமென்றால் அதைவிட சிறப்பு அனுமதி அப்படி இருக்கும் பொழுது அவர்கள் தமிழக மீனவர்களுடன் கடலுக்கு சென்றார்களாம் காட்டி கொடுத்தார்களாம். யார் அனுமதி வாங்கி கொடுத்தது மூன்று நாட்கள் நான்கு நாட்கள் வெளியே தங்க. அப்படி வெளியில் தங்க அனுமதி வாங்கினாலும் எங்கு தங்குகிறார்கள் என்ற முகவரியை கொடுக்க வேண்டும் கடலுக்குள் பிளாட் போட்டு யாராவது விற்று இருக்கிறார்களா என்ன முகவரியை கொடுக்க. ஒருவேளை இவர் சென்று அவர்களுக்கு கடலுக்கு செல்ல அனுமதி வாங்கி கொடுத்தார் போலும்.

அடுத்து நெடுந்தீவு மீனவர்கள் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க வந்தால் அவர்கள் மீன் பிடிக்க வரமாட்டார்களாம் எப்பொழுது இப்பொழுதா இல்லை 83க்கு முன்பாகவா என்பதை தெளிவாக சொல்லாமல் பொத்தம் பொதுவாக சொல்கிறார். அண்ணா இறந்த பொழுது நெடுந்தீவுக்கு அருகே மீன் பிடித்த தமிழக மீனவர்களுக்கு தகவல் சொன்னதே நெடுந்தீவு மீனவர்கள் தான். ஆனால் அவர்கள் தமிழக மீனவர்களை எதிரியாக நினைக்கிறார்கள் என்று சொல்லுவதை கேட்டு எந்த வழியாக சிரிப்பது என்று தெரியவில்லை. அதுவும் இப்பொழுது எத்தனை ஈழத்து மீனவர்கள் மீன் பிடிக்க அனுமதிக்கப்படுகிறார்கள் என்ற கேள்விக்கு பதில் சொல்லுவாரா இவர். அவர்கள் அனுமதிக்கப்பட்டாலும் 3மணி நேரம் நான்கு மணிநேரத்திற்கு தேவையான எரிபொருளே வழங்கப்படுகிறது அந்த எரிபொருளை வைத்துக்கொண்டு இவரே குறிப்பிடும் அந்தமானுக்கு அருகில் சென்று அவர்களுக்கு தேவையான மீனை பிடிக்க முடியுமா. அப்படி இருக்கும் பொழுது அவர்கள் தமிழக மீனவர்களை குறை சொல்லுகிறீரார்கள் என்பது கேணைத்தனமாக இல்லை. ஏமாறுவதற்கு ஆள் இருந்தால் எருமாடு ஏரோப்ளேன் ஓட்டுது என்று சொல்வீர்கள்.

ஈழத்து மீனவர்கள் வாழ்வாதரத்தை காப்பாற்ற எதாவது வழியிருந்தால் சொல்லவும் அவர்கள் தங்கு தடையின்றி மீன் பிடிக்க வழிவகை சொல்லவும் யார் எங்கு மீன் பிடிப்பது என்பதை அவர்கள் ஒன்னா மண்ணா உட்கார்ந்து பேசிக்கொண்டே மீன் பிடிப்பார்கள். இவரோ சுவாமிநாதனோ விவேகானந்தனோ யாரும் இதில் தலையிட தேவையில்லை, பெண் கொடுத்து பெண் எடுத்த உறவினர்களுக்கு நடுவே இந்த நாட்டாமைகளுக்கு வேலை இல்லை. அதுவும் ஆச்சாரமானவர்கள் நாங்கள் என்று சொல்லிக்கொண்டு மீன்பிடிப்பதை பற்றியும் பங்கு போட்டுக்கொள்வதை பற்றியும் பேசத்தேவை இல்லை. யாருக்கு தெரியும் தினமும் மாலையில் ஸ்காட்சை காச்சி குடிக்கும் பொழுது மட்டும் மீன் இவர்களுக்கு சைவமாக தெரியலாம். அதனால் மீன் பிடிப்பதை பற்றி இவர்கள் ஆராய்ச்சி செய்ய வந்துவிட்டனர் போலும்.

இப்படி ஒருவரை பேட்டி எடுக்கும் முன்பு அவரிடம் யாரை பற்றி கேட்க போகிறீகளோ அவர்களை பற்றி முழுமையாக தெரிந்து கொண்டு பேட்டி எடுக்கவும் இல்லாவிடில் அவர் சொல்லுவதை எல்லாம் நீங்கள் மட்டும் கேட்டுக்கொள்ளவும் இப்படி பொதுவில் போட்டு உங்கள் மானத்தை இழக்காதீர்கள்.

No comments:

Post a Comment