Monday, September 16, 2013

Lynching வக்கிரகொலை (2)



Lynching எனப்படும் கொலைகளை பற்றி பார்த்தோம். இதில் அரசு இதே போன்ற கொலைகளை நடத்தும் அதைப் பற்றியும் பார்க்கலாம். 

அரசுகள் தங்களுடைய அடக்கு முறைகளுக்கு எதிராக செயல்படுபவர்களை கைது செய்து சட்டத்தின் முன்னால் செய்யும் கொலைகளும் உண்டு, அரசே சட்டத்திற்கு புறம்பாக செய்யும் கொலைகளும் உண்டு அப்படிப் பட்ட கொலை என்கெளண்டர் என்ற பெயரில் நிறைய பார்த்திருக்கிறோம். ஆனால் அரசு மக்களை வைத்து தனக்கு எதிராக செயல்படுபவர்களை கொலை செய்யும் அப்படிப் பட்ட கொலைகள் நிறைய நாம் பார்த்து இருக்கிறோம் உணர்ந்தது இல்லை. இப்படி நம் கண்ணெதிரேலேயே கடந்த ஆகஸ்ட் 27ம் தேதி 2013 அன்று ஜார்கண்டில் ஒரு மாணவத் தலைவர் கொலை செய்யப்பட்டுள்ளார். 


முகேஸ் சிங்க் (35), இவர் ஜார்கண்ட் மாநில மாணவர் சங்கத்தின் (AJSU) மாவட்ட தலைவர். இவரும் இவரது டிரைவரும் ஒரு பகுதியை கடந்து செல்லும் பொழுது பொதுமக்களால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளனர். பொது மக்களிடம் கேட்டால் இவர்களை மாவோயிஸ்ட் என்று நினைத்ததாகவும், மேலும் அந்த பகுதியில் நடக்கும் திருவிழாவில் ஏகப்பட்ட திருட்டுகள் நடப்பதாகவும் அதற்காக நாங்கள் காவல் இருந்த பொழுது இவர்களை திருடர்கள் என்று நினைத்து அடித்துக் கொலை செய்ததாகவும் சொல்கிறார்கள். ஆனால் ஒரு SUVயில் வந்த இவர்களை திருடர்களாக கருதக்கூடிய அளவிற்கு மக்கள் முட்டாள் இல்லை. மேலும் அவர்களின் காரில் அவர் மாணவர் தலைவர் என்பதை சொல்லும் பாதகையும் உள்ளது யாரும் அதை படிக்கவில்லை என்று சொல்வது நம்பகூடியதாக இல்லை. 

கண்டிப்பாக அரசு இங்கு திருடர்கள் வருவதாகவோ இல்லை மாவோய்ஸ்ட்கள் வருவதாகவோ வதந்தியை பரப்பியுள்ளது, அதுவும் ,முகேஸ் குமார் சிங் இந்த பகுதியை கடந்து செல்ல போகிறார் என்பதை தெரிந்து கொண்டு. மேலும் மக்களும் கடந்த ஒரு மாதமாக காவல் காத்து வந்துள்ளனர், என்ற அவர்களுக்கு தெரிந்த விசயத்தை வைத்து யாருக்குமே தெரியாமல் கதையின் கதாபாத்திரங்களுக்கு கூட நாம் சில சூத்திரதாரிகளின் விரலசைவிற்கு ஆடுகிறோம் என்பது தெரியாமல் இரண்டு கொலைகளை நடத்தி முடித்துள்ளனர். 


இந்த செய்தியை பார்த்தபொழுது நமக்கு நியாபகம் வருவது தோழர் பொன்பரப்பி தமிழரசன். ஆம் இவரும் ஒரு வங்கியை கொள்ளை அடித்து தனது இயக்கத்துக்கான பொருளாதர தேவைகளை நிறைவேற்ற சென்றபொழுது திருடர்கள் என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார் பொது மக்களால். அந்த மக்களுக்கு தமிழரசன் அவர்களை நேரில் பார்த்தது இல்லை ஆனால் அவர் செய்து வந்த நல்ல காரியங்கள் அனைத்தையும் அறிந்தவர்களே. ஏன் அவரால் பயன் பெற்றவர்களும் கூட கூலி உயர்வில் இருந்து அனைத்து வகையிலும் ஆனால் அங்கும் அரசு இயந்திரம் காவல்துறையினரை வைத்து இவர்களை திருடர்கள் என்று முத்திரை குத்தி கொலை செய்தது. இத்தனைக்கும் தோழர் தமிழரசன் அவர்களிடம் துப்பாக்கி இருந்தது ஆனால் ஒரு மக்கள் கூட தன்னால் பாதிக்கப்படக் கூடாது என்று தன் உயிரை காப்பாற்றிக் கொள்ளும் முயற்சியில் ஈடுபடாமல் தன் இன்னுயிரை எந்த மக்களுக்காக பாடுபட்டாரோ அவர்களிடமே கொடுத்துவிட்டார்.

ஜார்கண்ட் கொலையை பார்க்கும் பொழுது ஏற்கெனவே தமிழரசன் தோழருக்கு நடந்ததை தெரிந்து வைத்திருந்ததால் சந்தேகம் வரும். ஆனால் ஒரு மாநிலச் செய்தி இன்னொரு மாநிலத்திற்கு செல்லாமல் இருக்கும் இந்த ஊடக வியாபாரிகளால் நமக்கு எப்படி தெரிய வரும் இத்த கைய வக்கிரக் கொலைகள்.

இதன் பின் காவல்துறை வழக்கு பதிவு செய்யும் அடையாளம் தெரியாத நபர்களால் அடித்து கொல்லப்பட்டனர் என்று. அத்துடன் இந்த வழக்கும் அதன் விசாரணையும் முடிந்து கலவரத்தில் கொல்லப்பட்டனர் என்று பதிவு செய்து வைப்பார்கள். ஆனால் கொலை செய்யப்பட்டவர்கள் தனது கொள்கைகாக கொலை செய்யப்பட்டனர் என்று அரசியலும் அரங்கேறும், எதற்காக கொலை செய்யப்பட்டவர்கள் போராடினார்களோ அந்த மக்கள் நலன் எனும் நோக்கம் மட்டும் நிறைவேறேவே நிறைவேறாது.  

இதுவும் ஒரு வக்கிரக்கொலையே அதாவது தனக்கு எதிராக நிற்கும் ஒருவரை அரசு மக்களின் பொது புத்தியை தூண்டிவிட்டு அதன் மூலமாக அவர்களின் ஆழ்மன வக்கிரங்களாக வெளிப்படும் வெறியை உபயோகித்து தனது எதிரிகளை அழித்தொழிப்பது..

Lynching வக்கிரக் கொலைகள்

Lynching – இது நம் அனைவருக்கும் அறிமுகமான வார்த்தையே ஆனால் இதை நாம் இதன் முழுமையான வலி தெரியாமல் கலவரம், சாதி சண்டை, மதக் கலவரம் என்று பலவிதங்களில் பயன்படுத்தி வருகிறோம்.

ஒரு கூட்டமோ அல்லது ஒரு குழுவோ சட்டத்தினை மீறி ஒருவரை கொலை செய்வதையும், அல்லது சட்டத்தின் அடிப்படையில் கொலை செய்வதும் இந்த வார்த்தையின் கீழ் அடங்கும். இப்படிபட்ட கொலைகளை காட்டுமிராண்டி தனம் என்று பொத்தம் பொதுவாக சொல்லலாம் ஆனால் அதன் வேதனையை இப்படிப் பட்ட படுபாதக கொலைக்கு உட்பட்டவரின் வார்த்தைகளில் நம்மால் சொல்லவும் இயலாது. 

இதை போன்ற கொலைகள் உலகெங்கிலும் நடந்து வருகிறது அது இந்தியாவில் அடிக்கடி நடக்கும் ஒரு சம்பவம். உலகில் மற்ற எங்கும் இருப்பதை விட சட்டத்தின் கீழ் இந்திய நீதிமன்றத்தினாலேயே இப்படிப்பட்ட கொலை பாதக மரணதண்டனைகள் கொடுக்கப்படுவது அரிதினும் அரிது அல்ல மிகவும் சுலபமாக கொடுக்கப்படுவது. 

இந்திய சட்டம் அப்சல்குருவை இப்படிப்பட்ட சட்டத்தின் கீழான ஒரு கொலையின் கீழேயே கொன்று முடித்திருக்கிறது இந்திய அரசாங்கம் பொதுமக்களின் ஒட்டுமொத்த அபிப்ராயம் என்ற பெயரில். இந்த நேரத்தில் இப்பொழுது அடுத்து உத்திரபிரதேசத்தில் இத்தகைய கொலை பாதகசெயல்கள் அரங்கேறியிருக்கின்றன. இது எப்பொழுது முடியும், உத்திரபிரதேசத்தில் இன்று நடந்து கொண்டிருக்கும் காட்டுமிராண்டி தனம் இன்றோ நாளையோ அடக்கப்பட்டுவிடலாம் ஆனால் இனி இத்தகைய ஒன்று நடவாது என்பது நிச்சயம் இல்லை.

(வீரபாண்டிய கட்டபொம்மன் சட்டத்தின்கீழ் ஆங்கிலேயர்களால் தூக்கிலடப்பட்டார்)

இத்தகைய கொலைகள் பொதுமக்களின் ஒட்டுமொத்த கருத்துகளின் அடிப்படையில் நடைபெறுவது தான் அதாவது ஒரு குழுவினர் மற்றொரு குழுவின் மேல் இருக்கும் காழ்ப்புணர்ச்சியின் கீழ், எதிர் குழுவில் ஒருவர் செய்த ஒரு சிறு தவறுக்காவோ இல்லை செய்யாத தவறுக்காகவோ கொல்லபடுவது தான் இந்த கொலைகளின் அடிப்படை. ஆனால் இப்படி நடைபெறும் ஒவ்வொரு கொலையில் இருக்கும் குரூரம் என்பது யாராலும் சகித்துக் கொள்ளவியலாத ஒரு விசயமாக இருக்கும்.
 (வில்லியம் ப்ரெளன்)


1919ல் இருந்து 1925 வரை நிறவெறி அமெரிக்காவில் தாண்டவமாடிய சமயம், அப்பொழுது ஆக்னஸ் லியோபெக் எனும் பெண்மணி தன்னை ஒரு கருப்பின இளைஞன் தாக்கியதாக சொன்னார். அது காட்டு தீ போல் பரவியது, காவல் துறையினரும் சந்தேகத்திற்கு குரிய நபர் என்று வில்லியம் ப்ரெளன் என்ற 41வயதுள்ள ஒருவரை பிடித்து நீதிமன்ற காவலில் வைத்தனர். ஆனால் இளைஞர்களும் பெருவாரியான வெள்ளை இனமக்களும் கிட்டத்தட்ட 5000 முதல் 15000 வரையிலானவர்கள் ஒன்று கூடி வில்லியம் ப்ரெளனை அடைத்து வைத்திருந்த கட்டத்திற்கு வரும் வழியில் இருந்த கடைகளில் கொள்ளையடித்த ஆயுதங்கள் மற்றும் துப்பாக்கிகளுடன் கூடினர். அவர்களிடம் பேச்சு நடத்த வந்த மேயரை அடித்து, பக்கத்தில் இருந்த விளக்கு கம்பத்தில் தூக்கில் தொங்கவிட்டனர். மேயர் பலத்த சிகிச்சைக்கு பின் பிழைத்துக் கொண்டார். ஆனால் வில்லியம் ப்ரெளனை காப்பாற்ற முயன்ற காவல்துறையினரால் முடியவில்லை. மக்கள் முதலில் அந்த கட்டிடத்திற்கு தீ வைத்தனர் அத்துடன் நிற்காமல் தீயணைப்பு வண்டியையும் அனுமதிக்காமல் தடுத்தனர்.
 (வில்லியம் ப்ரெளன் கைது செய்து வைக்கப்பட்டிருந்த கட்டிடம்)

அதன் பிறகு வில்லியம் ப்ரெளன் தான் ஒரு நிரபராதி, எந்த தவறும் செய்யவில்லை என்று அவலக் குரல் எழுப்பியதை கூட காதில் வாங்கி கொள்ளாமல் அவனை அடித்தனர், ஆயுதங்களால் தாக்கினர், தூக்கில் போட்டனர், சுற்றி நின்று அவன் உடலை துப்பாக்கி குண்டுகளால் துளைத்தனர். அதன் பிறகு வில்லியம் ப்ரெளனை ஒரு காரின் பின்னால் கயிறுகளால் கட்டி அடுத்து இருந்த ஒரு தெரு முனைக்கு இழுத்து சென்று, தீயணைப்பு வண்டியில் இருந்த எரிபொருளை கொண்டே அவன் உடலை எரித்தனர். இது காட்டுமிராண்டி தனம் என்று சொல்லிவிட முடியாத ஒரு நெஞ்சில் சிறிதும் ஈவு இரக்கமற்ற மனிதம் என்ற சொல்லாடலைக் கூட புரிந்து கொள்ளாத ஈனத்தனமாக நிறைவேற்றப்பட்ட கொலை.
(வில்லியமின் எரிக்கப்பட்ட உடல்)

இதில் ஈடுபட்ட மக்கள் அனைவருக்கும் அந்த நேரத்தில் அவர்கள் மனதில் எழுப்பட்ட வெறியின் கீழாகவே இதை செய்தனர், அவர்களுடைய நிதானம் இழந்த தன்மை இதை செய்ய தூண்டியிருக்கிறது என்று எடுத்துக் கொள்ளலாம் ஆனால் இதை செய்த இவர்களுக்கும் இன்று நாம் சிலரை கொடுங்கோலர்கள், சர்வாதிகரிகள் என்று சொல்கிறோமோ அவர்களுக்கும் என்ன வித்தியாசம். இவர்கள் ஆயிரக்கணக்கில் சேர்ந்து ஒருவனை கொலை செய்தார்கள், சர்வாதிகாரி ஒருவன் தன் படைகளை உபயோகித்து ஆயிரக்கணக்கில் மக்களை கொலை செய்தான் ஆனால் இரண்டு பேருமே மனித தன்மை என்பதை இழந்தவர்கள் தான்.

இன்று முசாபர் நகரில் நடந்து கொண்டிருக்கும் கலவரத்தின் தோற்றமும் இதே போன்று ஒரு பெண்ணை ஒரு இஸ்லாமிய இளைஞன் கிண்டலடித்துவிட்டான் என்று ஆரம்பித்து அந்த இளைஞனை பெண்ணின் சகோதரர்கள் வீட்டிலிருந்து வெளியே இழுத்து வந்து கொலை செய்ததில் ஆரம்பித்து இன்று இது வரை 40 பேர் உயிர்கள் குடிக்கப்பட்டுள்ளன. ஆனால் பாதிக்கப்பட்ட பெண்ணோ எனக்கு ஸாநவாஸ் என்பவரை தெரியாது என்கிறார். ஆனால் இன்று ஸாநவாஸ் உயிருடன் இல்லை என்பதையும் தாண்டி 40க்கும் மேற்பட்ட உயிர்கள் பறிக்கப்பட்டுள்ளது.

இப்படிப்பட்ட கொலைகளை வெறும் கலவரம் என்ற ஒற்றை வார்த்தையுடன் இதன் பின்னால் இருக்கும் காரணிகளை ஆராயாமல் கடந்து சென்று கொண்டுள்ளோம். ஒரு கொலை நடந்தால் அதை யார் செய்தார்கள் என்பதை நிருபிக்க சாட்சிகள் வேண்டும் ஆனால் ஒரு கலவரத்திற்கு அப்படி அல்ல, மக்களின் மனசாட்சி என்பது செத்து போனதாலேயே நடப்பது அவர்களின் மனசாட்சி மட்டுமல்ல அத்தனை நாட்களாக அவர்கள் அடிமனதில் இருந்த வக்கிரங்கள் அனைத்தின் வெளிப்படே இத்தகைய வக்கிரகொலைகள்.. 

தொடரும்.....

Saturday, July 6, 2013

கொலைவெறி கருத்தியலாக்கம்


அநாகரீக தர்மபாலா இவர் தான் ஆரிய சிங்கள பேரினவாத கருத்தியலால் இன்று வரை நடந்து வரும் அனைத்து கொடுமைகளுக்கும் காரணமானவர். இவரின் இயர் பெயர் டான் டேவிட் ஹெவரத்தினா என்பதாகும். இந்தியாவில் அதுவும் சென்னையில் அடையாறில் உள்ள தியாசிபிக்கல் சொசைட்டியில்  படித்தவர். இவர் தான் இன்றைய பெளத்த பேரினவாத சிந்தனைகளுக்கும் கருத்தியலாகத்திற்கும் விதை விதைத்தவர். பெளத்தத்தை கடைபிடித்த இவர் இலங்கையின் பிரிட்டிசாருக்கு எதிரான சுதந்திர போராட்டத்தில் பங்கு பெற்ற வீரராகவும் சொல்லப்படுபவர். ஆனால் இவர் தான் "The Lion Race" எனும் ஆரிய சிங்கள பேரினவாத கருத்தியலை வளர்த்து எடுத்தவர். 

இவர் சொன்ன கருத்துகளில் அதி முக்கியமானது சிங்கள இனமானது உலகில் இருக்கும் ஆரிய இனத்தில் மிகவும் உன்னதமானது சிங்கத்தின் வழியில் தோன்றியவர்கள் என்று சிங்கள மக்களின் மனதில் பதிய வைத்தார். பிரிட்டிசார்களும் ஐரோப்பியர்களும் ஆரிய இனமாக இருந்தாலும் அவர்களை விட மிகச் சிறந்த இரத்தவழியில் சிங்கத்தின் வழிதோன்றலாக உருவகப்படுத்தினார். இவர்களுக்கு கீழ் தான் அனைத்து இனங்களும் என்று மக்களை நம்ப வைத்தார். இவர் வாழ்ந்த காலத்தில் இந்துகளுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இதில் இவர்கள் இருவரும் தமிழர்கள் தான். ஒரு சிங்கள இந்துவையோ இல்லை இஸ்லாமியரோ கிடையாது, எனவே இதை ஒட்டுமொத்த தமிழர்களுக்கு எதிரான கருத்தியலை உருவாக்கினார் என்று சொல்லலாம். அதே சமயத்தில் கிருத்துவ மதத்திற்கும் எதிராகவும் தனது விசகருத்துகளை பரப்பி வந்தார். 

அதில் மிகவும் முக்கியமானது 1915ம் ஆண்டு நடைபெற்ற முதல் பேரினவாத கலவரம். 1914ம் ஆண்டு முதல் உலகப்போர் தொடங்கி நடந்து கொண்டிருந்தது அப்பொழுது உணவுப் பொருட்கள் தட்டுபாடு அதிகரித்தது. அதற்கு காரணம் கடைகள் நடத்திய தமிழ் இஸ்லாமியர்கள் தான் என்று கூறி ஒரு பெரும் கலவரம் நடைபெற காரணமாக இருந்தார். இதில் 35 பேர் உயிரிழந்தனர் 198 பேர் காயம் அடைந்தார்கள் இது மட்டுமல்ல 86 மசூதிகள் சேதப்படுத்தப் பட்டது. 4076 இஸ்லாமியர் கடைகள் சூறையாடப்பட்டன. இது தான் சிங்கள பேரினவாதத்தால் தமிழர்கள் தாக்கப்பட்ட முதல் சம்பவம். இதன் பிறகு பெளத்தத்தை தவிர மற்ற மதங்களுக்கு எதிரான கருத்தியல்களை தொடர்ந்து விதைத்து வந்தார். 

பெளத்த சமயத்தில் நாம் படித்த மகாயானம் ஹீனயானம் போன்ற பிரிவுகளை தவிர பல பிரிவுகளாக இருந்த அனைத்து தரப்பு மக்களையும் ஒன்றிணைக்கும் நோக்கில் அவர்கள் அனைவருக்கும் எதிரிகளாக தமிழர்களையும் மற்றவர்களையும் சித்தரித்தார். பிரிட்டிசாரை கூட இதே கருத்தியலின் அடிப்படையில் தான் எதிர்த்தார் ஆனால் அது சுதந்திர போராட்டமாக சித்தரிக்கப்பட்டது. இங்கு வாஞ்சிநாதன் பார்ப்பனீயத்திற்கு எதிராக இருந்த கலெக்டரை அதுவும் ஒடுக்கப்பட்ட ஒருவரை உயிரை காப்பாற்ற அவரை தனது வாகனத்தில் ஏற்றிக்கொண்டு உயர் சாதி இந்துக்கள் இருக்கும் பகுதி வழியாக அழைத்து சென்றார் என்ற காரணத்திற்காக கொலை செய்ததை. இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்கு கொண்டதாக சொல்வதை போல் இவரையும் சுதந்திர போராட்ட வீரராக சித்தரிக்கப்பட்டார். 

இவரின் மற்ற மதங்களுக்கு எதிரான கருத்தியல் என்பது சிங்கத்தின் வழித் தோன்றல்களான சிங்கள மக்களே உயர்ந்தவர்கள் என்ற கருத்தியலின் அடிப்படையில் மற்றவர்கள் எதிரிகள் என்ற பாசிச அடிப்படையில் தொடர்ந்து தனது செயல்பாடுகளை அமைத்துக் கொண்டார். எப்படி இன்று வரை தமிழகத்தில் இருந்து சென்ற மலையக தமிழர்கள் தேயிலை தோட்டத்தில் வேலை பார்த்து வருவது போல் மலையாளிகளும் மலையகத் தோட்டங்களில் வேலை பார்த்து வந்தனர். அவர்களுக்கு எதிராகவும் இவர் கருத்தியலை வடித்தார், வேறு ஒன்றும் இல்லை "மலையாளிகள் சிங்கள் பெண்களை மயக்கி காதல் திருமணங்கள் செய்கிறார்கள்” என்று சிங்கள இனத்தை அழிக்கும் முயற்சி என்று கருத்தை பேசினார், இதனால் அங்கிருக்கும் மலையாளிகளை நாடுகடத்தும் வழிவகைகளை செய்தார். மலையாளிகளை பற்றி நமக்கு எந்த கவலையும் இல்லை தான் ஆனால் ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிரான ஒரு கருத்தியல் எந்த வகையில் எல்லாம் உருவாக்கலாம் என்பது இதுவும் ஒரு எடுத்துக்காட்டு.

(உலக மதங்கள் மாநாட்டில் (இடமிருந்து வலமாக) வீர்சந்த் காந்தி, அநாகரீக தர்மபாலா, சுவாமி விவேகாநதர் உட்கார்ந்து இருப்பவர்கள். )

கொலைவெறி கருத்தியலாக்கம் அது இனம் சார்ந்ததாக இருந்தாலும் சரி சாதி மத அடிப்படையில் ஆனதாக இருந்தாலும் சரி அது ஒவ்வொரு காலகட்டத்திலும் இல்லாத ஒன்றை உருவகப்படுத்தி அதன் அடிப்படையின் கீழே கட்டமைக்கப் படுகிறது என்பதற்கு அநாகரீக தர்மபாலா ஒரு உதாரணம். 

Friday, June 21, 2013

நான் ஏன் இனவெறியன் ஆனேன்

மன கன இன கன, 
புன மான இன முன, 
வின வின முன, 
புன ஜன தொன முன, 
பென வின முன  
யாரும் பதட்டப்படாதிங்க.... யாரையும் நான் திட்டவில்லை "ராஜபக்சேவை தண்டிப்பது"  என்று 30 பக்க புத்தகம் போட்ட இயக்கங்களின் பெயர்கள் தான் இவை... 

புத்தகத்தின் பதிப்புரையிலே தங்களது புரட்சிகர பார்வையின் கீழ் இங்கு ஈழத்திற்காக போராடும் இயக்கங்களை இனவாதிகள் என்று சொல்லிவிட்டு ஆரம்பிக்கிறார்கள். அதனால் தான் "நான் ஏன் இனவாதி ஆனேன்" என்பதை சொல்ல வேண்டியதாகிறது. 



இந்த புத்தகம் இந்த இயக்கங்களின் நிறுவனத் தலைவர் (Founder & Managing Director) வழங்கிய ஒரு நேர்காணலாக தொகுக்கப்பட்டு இருக்கிறது. இவர் முதலில் இன்றைய கோரிக்கைகளாக திமுகவும் அதிமுகவும் வைக்கும் கோரிக்கைகளை இருவகையாக பிரித்து பேசுகிறது ஆனால் எதனால் இந்த புத்தகம் போட்டார்களோ அவர்களின் கோரிக்கையை கொஞ்சம் அராய்ந்தலேயே இந்த புத்தகம் போட வேண்டிய தேவை இல்லை என்பதை உணர்ந்திருப்பார்கள். அதுக்கு எங்கே அவர்களது புரட்சிகர சித்தாந்தங்கள் சிந்திக்க விடுகின்றன.... குற்றம் கண்டுபிடித்து வாழ்வரே வாழ்வர் என்பது தானே இவர்களின் புரட்சிகர சித்தாந்தமாக இருக்கிறது. அவர்களுக்காக மற்றுமொரு முறை மாணவர்கள் முன்வைத்து போராடும் கோரிக்கைகள். 

  1. அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை வன்மையாக கண்டிக்கிறோம். ஐ.நாவில் அமெரிக்க கொண்டுவரும் தீர்மான ஈழத்தமிழர்களுக்கு எந்தவிதமான தீர்வையும் முன்வைக்கவில்லை.
  2. இலங்கையில் நடைபெற்றது வெறும் போர்குற்றமோ மனித உரிமைமீறலோமட்டுமல்ல அதுதிட்டமிடப்பட்ட இனப்படுகொலை.
  3. சர்வதேசவிசாரணையும் பொதுவாக்கெடுப்புமே தமிழ்மக்களுக்கான ஒரேதீர்வு. சர்வதேச விசாரணையும் தனித்தமிழ் ஈழ பொதுவாக்கெடுப்பும் நடத்துவதற்கான தீர்மானத்தை இந்திய அரசுமுன்மொழிந்து கொண்டுவரவேண்டும்
  4. சிங்களஇனவெறி அரசின்துணைத் தூதரகத்தை தமிழ் மண்ணில் இருந்து வெளியேற்ற வேண்டும். மேலும் இந்திய அரசு இலங்கை உடனான அனைத்து அரசாங்க உறவுகளையும் துண்டிக்கவேண்டும்.
  5. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று இலங்கை அரசின் மீது இந்திய அரசு பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்
  6. உலகத்தமிழர்களின் பாதுகாப்பை உறுதிச்செய்ய தமிழ்நாடு அரசு சார்பாக வெளியுறவுத் துறையை உருவாக்க வேண்டும்.
  7. ஆசியநாடுகள் எதுவும் சர்வதேச விசாரணைக்குழுவில் இடம்பெறக்கூடாது..
  8. தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.
  9. ஈழத் தமிழர் பிரச்சனைக்கு இந்திய அரசு தீர்வு காணாவிட்டால் தமிழகத்திலிருந்து எந்த வரியையும் செலுத்தமாட்டோம்.
சர்வதேச போர்குற்ற விசாரணையை இந்தியா ஐநாவில் தீர்மானமாக கொண்டுவரக் கோருவது, இந்தியாவை தப்பிக்க வைக்கும் நோக்கம். இந்தியாவும் இந்த இனப்படுகொலையில் ஈடுபட்டுள்ளது என்பதை மறைப்பது என்று கூருகிறார். மாணவர்களின் போராட்டங்களுக்கு பிறகே கருணாநிதி தனது நிலைப்பட்டன அமெரிக்க தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்பதில் இருந்து மாறி, திருத்தங்கள் கொண்டுவரப் படவேண்டும் என்று பேசினார். ஜெயலலிதாவும் சர்வதேச போர்குற்ற விசாரணை வேண்டும் என்று சொன்னார். இதற்கு காரணமான மாணவர் போராட்ட கோரிக்கையை மறந்துவிட்டார்கள். 

ஒட்டுமொத்தமாக இந்த புத்தகத்தின் நோக்கம் என்பது இன்றைய மாணவர் போராட்டங்களை நொட்டை சொல்வதும், தமிழினத்தைப் பற்றி யோசிப்பவர்களை இனவாதிகளாக சித்தரிப்பதுமே. இதை படித்து முடிக்கும் பொழுது ஏன் நான் இனவாதியாக இருக்க கூடாது என்று தான் நினைக்க தோன்றுகிறது. 7வது கோரிக்கையாக ஆசியநாடுகள் எவையும் இந்த சர்வதேச போர் குற்ற விசாரணையில் பங்கு கொண்டு விசாரிக்க கூடாது என்று தெளிவாக சொல்லி இருக்கின்றனர். இது இந்தியா போன்ற ஆசிய நாடுகள் தப்பிக்க வைக்கும் நோக்கம் இல்லை அவைகளும் சேர்த்து விசாரிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன். இதை கருணாவும் ஜெயாவும் மறப்பது அவர்களின் இந்திய பாசத்தால் ஆனால் இந்த கோரிக்கையை இந்த நிறுவனத் தலைவர் மறப்பது தான் மிகவும் பரிதாபமாக இருக்கிறது. ஏன் மாணவர்கள் பல கோரிக்கைகளுடன் இருக்கின்றனர் என்று சொன்னவர் இவர்களின் இயக்கம் சார்பாக தற்பொழுது முளைத்திருக்கும் புதிய காளான் ஈழத்தமிழர்களின் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணி கோரிக்கையாக இல்லாததால், இன்றைய மாணவ போராட்டங்களின் முதல் நெருப்பு துண்டாக இருந்த லயோலா மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்ட தமிழீழ  விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பின்  இந்த கோரிக்கைகளை மறந்தது ஏன்??? 


நீங்களே சொல்கிறீர்கள் மனித உரிமை என்ற பெயரில் தான் அமெரிக்கா அனைத்து இடங்களிலும் மூக்கை நுழைக்கிறது எனவே தான் கியூபா, வெனிசுலா போன்ற நாடுகள் அமெரிக்காவிற்கு எதிராக இலங்கைக்கு அதரவாக வாக்களிக்கின்றன என்று, ஆனால் அதே சமயத்தில் புலிகள் இயக்கம் அமெரிக்காவையும் இந்தியாவையும் நம்பக் கூடாது என்று திருவாய் மலர்ந்து அருளியிருக்கிறீர்கள். உங்களுக்கு ஒரு நியாயம் மற்றவர்களுக்கு ஒரு நியாயமா. அமெரிக்கா வந்ததால்  நீங்க குளத்திடம் கோவிச்சுக்கிட்டு குண்டி கழுவாம நீங்கள் போனா ஈழமக்களும் கழுவாம போக முடியுமா?? ஈழமக்களுக்கு தேவை அவர்கள் மக்களின்  பாதுகாப்பும் உரிமையும் அதற்காகவே ஆயுதம் தூக்கினர் போராடினர். உங்களின் ஏகாதிபத்திய எதிர்ப்பு சிந்தனைகளுக்காக அல்ல. 



அங்கிருந்த பாட்டாளி வர்க்கமான மலையக தமிழர்கள் வெளியேற்றப் பட்ட பொழுது உங்கள் பாட்டாளி வர்க்க தோழர்கள் தோள்  கொடுக்க வரவில்லை. தந்தை செல்வா மட்டுமே எதிர்த்து குரல் கொடுத்தார் பொன்னம்பலத்தின் கட்சியைவிட்டு வெளியேறி தனி கட்சி உருவாக்கி போராடினார். ஆனால் உங்கள் சிங்கள பாட்டாளிவர்க்க தோழர்கள் நடப்பதை வேடிக்கை பார்த்தனர் என்று சொல்வதை விட கொக்கரித்ததாகவே கருத முடியும். ஏனென்றால் குற்றம் செயல்படுத்தப் படும்பொழுது காக்கும் அமைதி அந்த குற்றம் செய்தவனை விட கொடும் குற்றமாகவே அந்த அமைதி கருதப்பட வேண்டும். 1950களில்  இருந்து இன்றுவரை நடத்தப் படும் அனைத்து கொடுமைகளையும் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கும் அந்த சிங்கள பாட்டாளி வர்க்கத்துடன் இணைந்து தமிழர்கள் தங்களின் உரிமையை வென்று எடுக்க வேண்டும் என்று கூறுவது கேவலமாக இல்லையா. ஜெவிபி போன்ற இயக்கங்களில் சில ஆதரவு அளித்தாலும் ஒட்டுமொத்தமாக தமிழினத்திற்கு எதிரான சிங்கள பேரினவாத அரசின் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த முடியாத கையாலாகத நிலையில் தான் நின்றனர். இன்று தமிழர்கள் இணைந்தால் அதன் பிறகு அவர்கள் பலம் கூடலாம், ஆனால் போராடிய தமிழர்களுடன் இணையாத அவர்களுடன் தமிழர்கள் இணைய வேண்டும் என்று ஆசைப்படும் நீங்கள் ஏன் 30 வருடமாக இயக்கம் நடத்தும் நீங்கள் தமிழர் போராட்டத்தில் அவர்களை இணைய சொல்லி வற்புறுத்தவில்லை.

இந்திய அரசாங்கமாக இருக்கும் காங்கிரஸ், பிஜேபி போன்ற பல கட்சிகள் பற்றி எல்லாம் இங்கு அனைவரும் அறிந்தே இருக்கிறார்கள். உங்களுக்கு தான் இன்று உங்கள் மூளையில் கண்டுபிடித்த ரகசியம் போல் பேசுகிறிர்கள். அனால் இங்கு இருக்கும் தமிழினவாத அமைப்புகளும் சரி இன்று எழுச்சியுடன் போராடும் மாணவர்களும் சரி யாரும் ப.ஜ.கவை நம்பி இருக்கவில்லை. வரும் தலைமுறை அவர்களை அழித்தொழிக்கும் அனால் உங்களைப் போன்றவர்களை தான் அவர்கள் முதலில் அழித்தொழிக்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். எனென்றால் எதிரியை நேரடியாக களத்தில் சந்தித்து பகையை தீர்த்துக் கொள்ளலாம் உங்களை போன்றவர்கள் கூட இருந்து புரட்சி புண்ணாக்கு என்று கழுத்தை அறுப்பவர்கள்.  1,50,000 பேர் உயிர் போனபொழுது காப்பாற்ற வராத உங்கள் புரட்சிகர சித்தாந்தம் இப்பொழுது கப்பாற்ற வரும் என்று நினைக்க நாங்கள் முட்டாள்கள் இல்லை காங்கிரஸ், பாஜக போன்ற மதவாத கட்சிகளுடன் உதவாத உங்க கட்சிகளையும் இயக்கங்களையும் என்றிலிருந்தோ நாங்கள் ஒன்றாக பிஜேபி, காங்கிரஸ் போன்ற கட்சிகளுடன் சேர்த்து ஒரே நேர்கோட்டில் இணைத்து தான் பார்க்கிறோம். 

குற்றவாளி ராஜபக்சேவை தண்டிக்க கோரும் உங்கள் புத்தகம், அதைவிட முக்கியமான பாதிக்கப் பட்ட மக்களுக்கு கிடைக்க வேண்டிய நீதியை பேச எது தடுக்கிறது. புலிகளை பாசிசவாதிகள் என்று கூறி வந்த நீங்கள் இன்று அவர்களை புகழ முடியாது என்பதாலா, நாங்கள் தெளிவாக இருக்கிறோம்  போராடும் மாணவர்களும் தெளிவாக இருக்கிறார்கள் "விடுதலைபுலிகள் ஒரு விடுதலைப் போராட்ட வீரர்கள்" என்பதில் 



நீங்கள் தான் விடுதலை போராட்டத்திற்கும் மற்ற இன வெறியாட்டங்களுக்கும் வித்தியாசம் தெரியாமல் பிதற்றி திறிகிறீர்கள். 

ஒடுக்கப்பட்ட ஒரு இனம் தன் கால்களில் தானே எழுந்து நிற்க முயல்வது இனவாதம் என்றால் நாங்கள் இனவெறியர்களாகவே இருந்துவிட்டு போகிறோம் 

ஒடுக்கப்படுபவர்களுகாக குரல் கொடுக்க வேண்டிய புரட்சிகர இயக்கங்கள் குரல் கொடுக்காமல் உயிரையும் உடமையும் பறிகொடுத்தவர்களுகாக குரல் கொடுக்கும் எங்களை இனவெறியன் என்றால் நானும் இனவெறியனே.. 

தேசிய இனவிடுதலையை அங்கீகரிக்கும் கம்யுனிசம் அது கம்யுனிசமாக மட்டும் இருந்தால் தான் குரல் கொடுப்போம் மற்றவர்கள் மூலமாக என்றால் வாயை மூடிக் கொள்ளும் என்றால் நாங்கள் இனவெறியர்களாகவே எங்கள் மண்ணை மீட்டுக் கொள்கிறோம். 

ஆயிரம் முறை சொல்வோம் நாங்கள் எம் இன மக்களின் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நியாயம் கிடைக்க போராடும் இனவெறியனாகவே இருக்க விரும்புகிறேன். 

Thursday, June 20, 2013

சகோதர யுத்தம் எனும் பொய் பரப்புரை


ஈழம் தமிழ் மக்களுக்கு மாபெரும் போராளிகளை அடையாளம் காட்டி சென்று இருக்கிறது தமிழீழ விடுதலை போராட்டம், சிவகுமரனிலிருந்து, குட்டிமணி, தங்கதுரை என்று பலரை அவர்களின் வரிசையில் சபா என்ற சீரிசபாரத்தினமும் ஒருவர். இவர் தனது ஈழப்போராட்டத்தை டெலோ அமைப்பில் குட்டிமணி தலைவராக இருந்த பொழுது இணைந்து தொடங்கினார்.

டெலோவில் சபாவிற்கு அடுத்த இடத்தில் இருந்தவர்கள் பேபியும், தாஸும் இவர்களுக்கு இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு தோன்றியது. இதை பற்றி பேசுவதற்காக தமிழகத்தில் டெசோ மாநாட்டில் கலந்து கொண்டு இருந்த சபாரத்தினம் ஈழத்திற்கு சென்றார். அங்கு சென்றவர் பேபியுடன் சேர்ந்து கொண்டு தாஸை பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். யாழ்ப்பாண மருத்தவமனையில் பேச்சு நடத்த இடம் முடிவு செய்யப்பட்டது, பேச்சுவார்த்தை நடத்த தாஸ் அவருடைய மெய்காவலர்கள் மோகன் (முல்லை தீவு), காளி (பருத்தி துறை), கிசான்(திரிகோணமலை) பீட்டர் (வதிரி) ஆகியோருடன் வந்தார், பேச்சுவார்த்தை பதிலாக தூப்பாக்கி குண்டுகள் பறந்தன இந்த சண்டையில் தாஸ் மற்றும் அவரின் தோழர்கள் சுட்டு கொல்லப் பட்டனர்.

இந்த சண்டையில் இடையில் மாட்டி ஒய்வு பெற்ற நீதிபதி கிருபாகரன் குண்டடிபட்டு இறந்தார். இது அனைத்தும் நடந்தது 1986ம் ஆண்டு மார்ச் மாதம் 11ம் தேதி. அதற்கு மறு நாள் இந்த கொலைகளை கண்டித்து மறுநாள் மார்ச் 12ம் தேதி பொதுமக்களும், மாணவர்களும் ஊர்வலம் நடத்தினர். அங்கு சென்ற டெலோ இயக்கத்தினர் பொதுமக்களையும், மாணவர்களையும் ஊர்வலம் நடத்த கூடாது என்று மிரட்டினர். ஆனால் அவர்களை மீறி ஊர்வலம் நடந்த பொழுது பொதுமக்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். இதை போன்ற ஒரு விசயம் அது வரை ஈழபோராட்ட வரலாற்றில் நடந்தது இல்லை. எந்த மக்களுக்காக போராட தலைமறைவு, மற்றும் போராட்ட வாழ்க்கையை தேர்ந்தெடுத்தார்களோ அந்த மக்களுக்கு எதிராகவே துப்பாக்கிகளை தூக்கிய அவலம் நடந்தேறியது.

இந்த துப்பாக்கி சூட்டில் வயோதிகர் ஒருவரும், ஒரு சிறுமியும் உயிர் இழந்தார்கள். மிகப்பெரும் தியாக உணர்வுடன் தங்களின் வீடுகளையும் சொந்தங்களையும் விட்டு வெளியில் வந்து எந்த மக்களுக்காக கிடைத்த உணவை சாப்பிட்டு காடுகளில் வாழ்ந்தார்களோ அதே மக்களுக்கு எதிராக துப்பாக்கியை தூக்கினார்கள் போராளிகள். சபாரத்தினம் என்ற மாபெரும் போராளியின் போராட்ட வாழ்க்கையின் பெரிய கலங்கம் இந்த துப்பாக்கி சூடு தான்.

இதன் பிறகு புலிகள் இயக்க போராளிகளை கடத்தி சென்று சிறை வைத்துவிட்டு பணயத்தொகை கேட்டார்கள். சபாவின் ஊர்காரரான லிங்கம் என்பவரை பேச்சுவார்த்தைக்கு விடுதலை புலிகள் இயக்கத்தில் இருந்து அனுப்பி வைத்தனர். ஆனால் லிங்கத்தின் பிணம் யாழ்ப்பாண பேருந்து நிலையத்தில் கட்சிக்கு வைக்கப்பட்டது. இதன் பிறகே 1986ம் ஆண்டு ஏப்ரல் 20ம் தேதி டெலோவை நோக்கிய தங்களது முழுமையான சண்டையை புலிகள் இயக்கம் தொடங்கியது. இதில் 16 நாட்களில் டெலோ இயக்கத்தின் செயல்பாடுகள் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. மே 6ம் தேதி புகையிலை தோட்டம் ஒன்றில் சபா சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஈழப்போராட்டம் என்று பேசும் பொழுது எல்லாம் சிலர் சகோதரசண்டை என்று சொல்கிறார்கள், ஏன் இந்த வார்த்தை பிரயோகம் என்பதை யாரும் புரிந்து கொள்ளாமல் உபயோகிக்கிறார்கள். உலகத்தின் பல மூளைகளில் இதே போன்று விடுதலைப் போராட்டங்கள் நடந்து கொண்டுள்ளன, அங்கும் பல குழுக்களாக போராடி வருகின்றனர், அவர்களை எல்லாம் சகோதர சண்டையிடுகிறார்கள் என்று யாரும் கூறுவதில்லை. அவர்களின் சித்தாந்தமும் கருத்தியலின் வேறுபாட்டின் அடிப்படையிலேயே பார்க்கப்படுகின்றனர். ஆனால் தமிழர்களின் விடுதலை போராட்டத்தில் ஈடுபட்ட குழுக்களை மட்டும் சகோதர யுத்தம் என்று குறிப்பிடுகிறார்கள்.

பாலஸ்தீனத்தில் பதா, ஹமாஸ் என்ற இரண்டு குழுக்களுக்கு இடையே இருக்கும் வேறுபாட்டை முரண்பாடு (Conflict) என்றே கூறுகிறார்கள், சகோதர சண்டை என்று அழைக்கப்படுவதில்லை. நம்மிடையே மட்டும் தான் இந்த வார்த்தை பிரயோகம் உள்ளது இதற்கான காரணம் எது. ஒரு சமயத்தில் இந்திய அரசு இலங்கையில் விடுதலை போராட்ட குழுக்களை ஆதரித்து வந்தது அப்பொழுது மக்களும் பெருமளவு இந்த விடுதலை போராட்ட குழுக்களை ஆதரித்தனர். அரசு மற்றும் எதைப்பற்றியும் கவலைப்படவில்லை தம் சகோதரர்களுக்கு உதவுவது தங்களது தார்மீக கடமையாக செய்துவந்தனர். இவர்கள் அனைவர் மனதில் ஒரு தவறான எண்ணத்தை உருவாகக் வேண்டும் என்பதற்காகவே இந்த வார்த்தை பிரோயகம் உபயோகிக்கப்பட்டது. அதற்கு முன்பு ஈபிஆர்எல்எஃப் இயக்கத்தை சேர்ந்த புஸ்பராஜா ஆயுதங்களுடன் சேலத்தின் அருகே ஒரு காரில் சென்ற பொழுது காவல்துறையினரால் மறிக்கப்பட்டு சோதனை செய்ய முயன்றனர். அப்பொழுது நாங்கள் புலிகள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்று சொன்னபொழுது அந்த காவல் துறையினர் சோதனை செய்யாமல் செல்ல அனுமதித்தனர் என்பதை மிகவும் தெளிவாக தனது புத்தகத்தில் புஸ்பராஜா பதிவு செய்துள்ளார். தமிழகத்தில் ஈழவிடுதலை போராட்ட போராளிகள் என்றாலே புலிகள் இயக்கம் மட்டுமே தெரியும், வேறு பெயர்களை பற்றி மக்கள் கவலைப்பட்டதில்லை அனைவரையும் புலிகள் என்றே அழைத்துவந்த காலம் அது.

இப்படி எந்த பாகுபாடும் இன்றி அனைவரையும் புலிகளாக விடுதலை போராட்ட போராளிகளாக பார்த்த மக்களிடையே நஞ்சை விதைக்கும் விதமாகத் தான் சகோதர யுத்தம் என்ற வார்த்தை பிரயோகிக்கப் பட்டது. இதை இன்று வரை உபயோகிப்பவர்கள் புலிகள் இயக்கம் தான் சகோதர யுத்தம் நடத்தியது என்பது போல் பேசி வருகிறார்கள் ஆனால் சொந்த இயக்கத்தில் இருந்தவர்களை கருத்துவேறுபாட்டால் அழித்தொழித்ததையும், எந்த மக்களின் விடுதலைகாக போராட வந்தார்களோ அந்த மக்களின் மீது ஆயுதம் உபயோகித்ததையும் இவர்கள் திட்டமிட்டு மறைப்பது ஏன் என்ற காரணம் அவர்களுக்கு மட்டுமே தெரியும்.