Monday, September 16, 2013

Lynching வக்கிரகொலை (2)



Lynching எனப்படும் கொலைகளை பற்றி பார்த்தோம். இதில் அரசு இதே போன்ற கொலைகளை நடத்தும் அதைப் பற்றியும் பார்க்கலாம். 

அரசுகள் தங்களுடைய அடக்கு முறைகளுக்கு எதிராக செயல்படுபவர்களை கைது செய்து சட்டத்தின் முன்னால் செய்யும் கொலைகளும் உண்டு, அரசே சட்டத்திற்கு புறம்பாக செய்யும் கொலைகளும் உண்டு அப்படிப் பட்ட கொலை என்கெளண்டர் என்ற பெயரில் நிறைய பார்த்திருக்கிறோம். ஆனால் அரசு மக்களை வைத்து தனக்கு எதிராக செயல்படுபவர்களை கொலை செய்யும் அப்படிப் பட்ட கொலைகள் நிறைய நாம் பார்த்து இருக்கிறோம் உணர்ந்தது இல்லை. இப்படி நம் கண்ணெதிரேலேயே கடந்த ஆகஸ்ட் 27ம் தேதி 2013 அன்று ஜார்கண்டில் ஒரு மாணவத் தலைவர் கொலை செய்யப்பட்டுள்ளார். 


முகேஸ் சிங்க் (35), இவர் ஜார்கண்ட் மாநில மாணவர் சங்கத்தின் (AJSU) மாவட்ட தலைவர். இவரும் இவரது டிரைவரும் ஒரு பகுதியை கடந்து செல்லும் பொழுது பொதுமக்களால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளனர். பொது மக்களிடம் கேட்டால் இவர்களை மாவோயிஸ்ட் என்று நினைத்ததாகவும், மேலும் அந்த பகுதியில் நடக்கும் திருவிழாவில் ஏகப்பட்ட திருட்டுகள் நடப்பதாகவும் அதற்காக நாங்கள் காவல் இருந்த பொழுது இவர்களை திருடர்கள் என்று நினைத்து அடித்துக் கொலை செய்ததாகவும் சொல்கிறார்கள். ஆனால் ஒரு SUVயில் வந்த இவர்களை திருடர்களாக கருதக்கூடிய அளவிற்கு மக்கள் முட்டாள் இல்லை. மேலும் அவர்களின் காரில் அவர் மாணவர் தலைவர் என்பதை சொல்லும் பாதகையும் உள்ளது யாரும் அதை படிக்கவில்லை என்று சொல்வது நம்பகூடியதாக இல்லை. 

கண்டிப்பாக அரசு இங்கு திருடர்கள் வருவதாகவோ இல்லை மாவோய்ஸ்ட்கள் வருவதாகவோ வதந்தியை பரப்பியுள்ளது, அதுவும் ,முகேஸ் குமார் சிங் இந்த பகுதியை கடந்து செல்ல போகிறார் என்பதை தெரிந்து கொண்டு. மேலும் மக்களும் கடந்த ஒரு மாதமாக காவல் காத்து வந்துள்ளனர், என்ற அவர்களுக்கு தெரிந்த விசயத்தை வைத்து யாருக்குமே தெரியாமல் கதையின் கதாபாத்திரங்களுக்கு கூட நாம் சில சூத்திரதாரிகளின் விரலசைவிற்கு ஆடுகிறோம் என்பது தெரியாமல் இரண்டு கொலைகளை நடத்தி முடித்துள்ளனர். 


இந்த செய்தியை பார்த்தபொழுது நமக்கு நியாபகம் வருவது தோழர் பொன்பரப்பி தமிழரசன். ஆம் இவரும் ஒரு வங்கியை கொள்ளை அடித்து தனது இயக்கத்துக்கான பொருளாதர தேவைகளை நிறைவேற்ற சென்றபொழுது திருடர்கள் என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார் பொது மக்களால். அந்த மக்களுக்கு தமிழரசன் அவர்களை நேரில் பார்த்தது இல்லை ஆனால் அவர் செய்து வந்த நல்ல காரியங்கள் அனைத்தையும் அறிந்தவர்களே. ஏன் அவரால் பயன் பெற்றவர்களும் கூட கூலி உயர்வில் இருந்து அனைத்து வகையிலும் ஆனால் அங்கும் அரசு இயந்திரம் காவல்துறையினரை வைத்து இவர்களை திருடர்கள் என்று முத்திரை குத்தி கொலை செய்தது. இத்தனைக்கும் தோழர் தமிழரசன் அவர்களிடம் துப்பாக்கி இருந்தது ஆனால் ஒரு மக்கள் கூட தன்னால் பாதிக்கப்படக் கூடாது என்று தன் உயிரை காப்பாற்றிக் கொள்ளும் முயற்சியில் ஈடுபடாமல் தன் இன்னுயிரை எந்த மக்களுக்காக பாடுபட்டாரோ அவர்களிடமே கொடுத்துவிட்டார்.

ஜார்கண்ட் கொலையை பார்க்கும் பொழுது ஏற்கெனவே தமிழரசன் தோழருக்கு நடந்ததை தெரிந்து வைத்திருந்ததால் சந்தேகம் வரும். ஆனால் ஒரு மாநிலச் செய்தி இன்னொரு மாநிலத்திற்கு செல்லாமல் இருக்கும் இந்த ஊடக வியாபாரிகளால் நமக்கு எப்படி தெரிய வரும் இத்த கைய வக்கிரக் கொலைகள்.

இதன் பின் காவல்துறை வழக்கு பதிவு செய்யும் அடையாளம் தெரியாத நபர்களால் அடித்து கொல்லப்பட்டனர் என்று. அத்துடன் இந்த வழக்கும் அதன் விசாரணையும் முடிந்து கலவரத்தில் கொல்லப்பட்டனர் என்று பதிவு செய்து வைப்பார்கள். ஆனால் கொலை செய்யப்பட்டவர்கள் தனது கொள்கைகாக கொலை செய்யப்பட்டனர் என்று அரசியலும் அரங்கேறும், எதற்காக கொலை செய்யப்பட்டவர்கள் போராடினார்களோ அந்த மக்கள் நலன் எனும் நோக்கம் மட்டும் நிறைவேறேவே நிறைவேறாது.  

இதுவும் ஒரு வக்கிரக்கொலையே அதாவது தனக்கு எதிராக நிற்கும் ஒருவரை அரசு மக்களின் பொது புத்தியை தூண்டிவிட்டு அதன் மூலமாக அவர்களின் ஆழ்மன வக்கிரங்களாக வெளிப்படும் வெறியை உபயோகித்து தனது எதிரிகளை அழித்தொழிப்பது..

No comments:

Post a Comment