Wednesday, March 12, 2014

சேவ் தமிழ்ஸ் செந்தில் - மூவர் தூக்கு

30 நொடி விடீயோ தான் முழுவதும் பாருங்கள்....



பிப்ரவரி 26ம் தேதி தமிழ்நாடு மாணவர் இயக்கத்தினரால் ஐ.நாவில் இந்தியா தீர்மானம் கொண்டு வரவேண்டும் என்று கோரி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் இவர் பேசியது இது. அதாவது மக்கள் மன்றத்தில் நம் பேசுவதும் சட்டப்படி நாம் நடந்துகொள்வதும் வேறு அதை நாம் மனதில் கொள்ள வேண்டும் என்று மூவர் தூக்கை எடுத்துக்காட்டி பேசுகிறார். இவர் மக்களை முட்டாளாக நினைப்பதை பற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை ஆனால் மூவர் தூக்கில் எதோ அவர்கள் குற்றம் செய்து விட்டது போலவும் சட்டத்தில் நமக்கிருக்கும் வாய்ப்பை பயன்படுத்தியே வாதிட்டோம் என்று பேசும் இவரின் மீது கோபம் கொண்டு இவர் ஒரு முட்டாள் என்று பதிவிட்டேன். ஆனால் அது தேவையில்லை என்று சொன்ன சில நண்பர்களால் அந்த பதிவை நீக்கினேன். ஆனால் அது இவர்களுக்கு என்னை குத்திக் காட்டும் விசயமாக பார்க்கிறார்கள் என் நிலைப்பாட்டில் நான் இலலை என்று. அதனாலேயே திருமப்வும் இதை பதிவிடுகிறேன். முடிந்த அளவு இவரை திட்டாமல்... நாகரீகமான விமர்சனமாக இதை..

இந்த விடீயோவை பார்த்துவிட்டு நீங்கள் சொல்லுங்கள் எவ்வளவு நாகரீகமாக இவரை நான் திட்ட வேண்டும் என்று. எனது கோபம் என்னுள் இருக்கிறது இவரை பதிவின் மூலமாக திட்டுகிறேனோ இல்லையோ ஆனால் அடுத்த முறை இவரை பார்க்கும் பொழுது எழும்புகளை எண்ண மாட்டேன் கண்டிப்பாக அவற்றை இரட்டிப்பு செய்யும் வகையில் உடைக்காமல் விடமாட்டேன் என்று தான் சொல்ல தோன்றுகிறது. அது என் தார்மீக கோபம் இதிலிருந்து நான் விலக விரும்பவில்லை,

தோழர்களே தியாகராஜன் பேட்டியில் ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம் என்பது போல் நாங்கள் வாக்குமூலத்தை வார்த்தைக்கு வார்த்தை மாற்றாமல் பதிவதில்லை என்று சொன்னார். அந்த பேட்டியை கொடுத்த பிறகு பேரறிவாளன் சொன்னது எங்களைப் போல் பல நிரபராதிகள் இருக்கிறார்கள், அவர்களின் வழக்கும் நீதிமன்ற தீர்ப்புடன் முடிந்துவிட்டது என்று சொல்கிறார்கள் இன்று தியாகராஜனின் தீர்ப்பு இந்த ந்டைமுறையை மாற்றி முடிந்து போன வழக்கை அதாவது கடைசி வாய்ப்பு வரை தீர்ப்பு கொடுத்த வழக்கை திரும்பவும் எடுத்து விவாதிக்கும் வாய்ப்பை தியகராஜன் வழங்கியுள்ளார். இந்திய அரசியல் அமைப்பு சட்டம் முதன் முதலாக பெரியார் அவர்களின் போராட்டத்தின் கீழாக திருத்தப்பட்டது 1950களில் அதே போல் அவரின் பேரனான எனக்காகவும் இந்தியல் அரசியல் அமைப்பு சட்டம் புதிய சாட்சியங்களின் அடிப்படையில் ஒரு வழக்கை திரும்ப நடத்து அரசியலமைப்பு சட்ட திருத்தத்தை உதாரணமாக திகழும் பல நாடுகளைப் போல் திருத்தி அறம் செய்யும் என்றார். ஆனால் இவரோ அதற்கு நேர் எதிரிடையாக மேடையில் பேசுகிறார் அதுவும் பலர் கலந்து கொண்ட நிகழ்வில தனது கருத்தை பதிந்துள்ளார். இந்த நிகழ்விற்கு தமதமாக 7மணிக்கு மேல் தான் சென்றேன் நான் இருக்கும் அந்த சமயத்தில் பேசவில்லை அப்படி பேசியிருந்தால் என் எதிர்வினையை நேரிடையாக களத்திலேயே காட்டியிருப்பேன் அதை எழுத்தில் காட்ட முயன்று தோழ்வி அடைந்துள்ளேன். ஆனால் அது நிரந்தர தோல்வி இல்லை இவரின் பேச்சிற்கான எதிர்வினையாக ஒவ்வொருவரும் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள் என்னால் முடிந்த்தை நிறைவேற்றுகிறேன்.. 

No comments:

Post a Comment