Sunday, December 22, 2013

சூனா பானா வீணா போனவரின் மடலுக்கு பதில்...



சூனா பானா வீணா போனவர் அப்பா மணியரசனுக்கு மடல் எழுதியுள்ளார் பொதுவெளியில், அதற்கான பதிலை கொடுக்க தகுதியானவர் அப்பா மணியரசன் தான் ஆனால் எனக்கும் பதில் அளிக்க வேண்டும் என்று தோன்றுகிறது காரணம்.. நான் கேட்கும் சுதந்திர போராட்டத்தை பேசும் அதாவது தமிழ் நாட்டின் சுதந்திர போராட்டத்தை பற்றி மட்டும் பேசுபவர் அதற்காக உழைப்பவர் எத்தனை பேர் தன் பின்னால் இருக்கிறார்கள் என்று பார்க்காமல் எத்தனை பேரை தன் பின்னால் கொண்டு வந்து தமிழ்நாட்டின் சுதந்திரபோராட்டத்தை முன்னெடுக்க முடியும் என்று போராடி வருபவர் என்பதால்...

சூனா பானா வீணாவின் கட்டுரையை படியுங்கள் முதலில்...
http://subavee.com

சூனா பானா வீணா போனவர் எழுப்பிய ஏழு கேள்விகளுள் ஏழாவது கேள்விக்கு நான் பதில் அளித்துவிட்டேன்.. எனது முதல் பத்தியிலேயே அதாவது என்னால் சுதந்திர போராட்டத்தை பற்றி பேச முடியாது என்னுடன் இருப்பவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு என்று தனது ஆற்றாமையை ஒத்துக் கொண்டதாக தோணலாம் சூனா பானாவின் பதில் ஆனால் அது அல்ல பதில் இந்திய சுதந்திரப் போராட்டம் என்று தொடங்கியது என்ற வரலாறு தெரியாமல் அது மிகப்பெரும் கூட்டமாக மாறிய பிறகு நடந்த போராட்டங்களை வைத்தே இந்திய சுதந்திர போராட்டத்தை படித்து வந்த சூனா பானா வீணா போனவர் சுதந்திர போராட்டத்தின் விதை ஒட்டுமொத்த மக்களின் கூடலில் நிறைவடைகிறது ஆனால் தொடக்கம் கருத்தியல் என்பதை உணராதவராகவே தெரிகிறது..

சரி ஏழு கேள்வியில் கடைசிக் கேள்விக்கு பதில் அளித்தாகிவிட்டது மற்ற கேள்விகள் என்ன செய்வது. ஆமாம் அதுவும் முக்கியம் தான் அந்த கேள்விகளின் அடிப்படை முள்ளிவாய்க்கால் முற்றத்தை சுற்றியே இருக்கிறது. முதலில் இவர் புரிந்து கொள்ள வேண்டியது முள்ளிவாய்க்கால் முற்றத்தை மக்களின் பார்வைக்காக திறந்தது ஒரு விழா அல்ல என் வீட்டில் ஈழவு விழுந்திருக்கிறது வாருங்கள் என்று சொன்ன கருமாதி பத்திரிக்கை. அதாவது சூனா பானா எதிர்பார்ப்பது என்னவென்றால் ஈழவு வீட்டிற்கு கருமாதி பத்திரிக்கை வைத்து அழைக்க வேண்டும் என்பது.. அப்படி அழைக்காவிடில் அதில் அது குற்றம் இது குற்றம் என்று சொல்வது..

குற்றம் கண்டுபிடித்தே வாழும் இனத்திற்கு மாறாக இவர் செயல் பட முடியுமா என்ன அதை தொடரத்தானே வேண்டும்.. நான் இனம் என்று சொன்னது திருவிளையாடல் என்ற கட்டுக்கதையில் வந்த நக்கீரன் இனத்தைப் பற்றி. கட்டுகதைகளை நம்பி ஏமாந்து இன்று பகுத்தறிவாளனாக இருந்தாலும் மற்றொரு பகுத்தறிவாளருக்கு கட்டுகதையை தான் உதாரணமாக கொடுக்க வேண்டியதுள்ளது எனென்றால் சூனா பானா வீணாப்போனவர் அதற்கு தான் தகுதியாக இருக்கிறார். அதாவது ஈழவு வீட்டுக்கு அழைப்பு வேண்டும் போராட்டம் நடந்தால் அதற்கு வர அழைப்பு வேண்டும் என்ற நினைப்பின் கீழ். இப்படி அழைப்பு விட்டுத் தான் நீங்கள் தமிழின மீட்சிக்காக பாடுபடுவீர்கள் என்றால் போராளியாக அறிமுகப்படுத்திக் கொள்ளாதீர்கள், மிஞ்சிப்போன சொந்தமாக விலகி நில்லுங்கள்..

இழவு வீடு இழவு வீடு தான் அதற்கு அழைப்பு வைப்பது அனைவருக்கும் முடியாது, அழைக்காமல் வந்த ஆயிரக்கணக்கான சொந்தங்களுடன் கலந்து கொண்ட எம்மை போன்ற பொதுமக்களுக்கு அது போதுமானது..         

No comments:

Post a Comment