Thursday, December 12, 2013

சீக்கிய சகோதரர்களின் தளராத பதிலடி


உலகில் சிலர் மட்டும் தங்கள் தனி தன்மையை விட்டுக் கொடுத்தது இல்லை, தமிழ் மொழி பேசும் நாம் எங்கிருந்தாலும் நம் மொழியை நமது பண்பாட்டை விட்டுக்கொடுத்தது இல்லை. அதன் தனித் தன்மையுடனேயே இயங்கி வருகிறோம் அதே போல் தான் சீக்கிய சகோதரர்களும் அவர்களும் தங்கள் தனிதன்மையுடன் தொடர்ந்து வருபவர்கள் உலகின் எந்த மூளையில் இருந்தாலும். அவர்களின் மிகமுக்கியமான ஒரு இடம் அமிர்தசரஸில் உள்ள பொற்கோயில் என்று நம்மால் பொதுவில் கூறப்படும் குருதுவாரா ஸ்ரீ ஹரிமிந்தர் சாகிப், எத்தனையோ மன்னர்கால படையெடுப்புகளையும், ஜனநாயகம் என்ற பெயரில் சர்வாதிகார தாக்குதலையும் தாண்டி இன்றும் உயர்ந்து நிற்கும் ஒரு கோயில் தான் பொற்கோயில்.


தங்களின் குருத்வாராவிற்கு எந்த ஆபத்து வந்தாலும் அதை சகித்துக் கொள்வதில்லை இவர்கள் இதை மதவெறியாக நமக்கு தெரிந்தாலும். சீக்கியர் எனும் இனமே ஒரு மதத்தின் அடிப்படையிலேயே கட்டமைக்கப்பட்டுள்ளது. இவர்களையும் இந்துக்களாக மாற்றுவதற்கு பல்லாண்டு காலமாக முயற்சிகள் நடந்து கொண்டுள்ளது. ஆனால் இவர்களின் தனித்தன்மை என்றும் அந்த முயற்சிகளுக்கு பணிந்து போய்விடவில்லை.

1700களில் முகலாயர்களின் படையெடுப்புகளின் போது குருத்துவரா பெரிதும் தாக்குதலுக்கு உள்ளானது அப்படி ஒவ்வொரு முறை தாக்குதலுக்கு உள்ளன பொழுதெல்லாம் யார் தாக்குதல் நடத்தினார்களோ அவர்களை திரும்பவும் தாக்கி அழித்திருக்கின்றனர். 

தமிழர்களான நமக்கு எதிரான எத்தனை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் அதற்கான ஜனநாயக எதிர்நிலையைக் கூட நாம் உடனடியாக காட்டுவதில்லை.. 

No comments:

Post a Comment