Sunday, November 17, 2013

இந்திய இராணுவம் இலங்கையின் அடியாள்..


இந்தியாவும் இலங்கையும் இனப்படுகொலை பங்காளிகள் என்பதை 2009ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து சொல்லி வருகிறோம். ஆனால் இவர்களின் கூட்டு படுகொலைகள் 1971ம் ஆண்டில் இருந்தே தொடர்ந்து செய்து வருகின்றனர். ஆம் ஜனதா விமுக்தி பெரமுனா எனும் பொதுவுடமை அமைப்பு இலங்கையில் தோன்றி பொதுவுடமை தத்துவத்தை மக்களிடம் பரப்பி வெகு வேகமாக வளர்ந்த அமைப்பு. இந்த அமைப்பினர் தான் முதன் முதலில் ஆயுத போராட்டத்தை கையில் எடுத்தவர்கள். அப்படி இவர்கள் 1971ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தென் இலங்கை பகுதியின் பெரும்பாலன இடங்களை இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் இருந்து தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து ஒரு மாபெரும் புரட்சியை நடத்தினார்கள். 


ஜெவிபி யை துவக்கியவர் விஜயவீரா இவர் முதலில் சிலோன் பொதுவுடமை கட்சியில் இருந்தார். ரஸ்யாவில் மருத்துவம் படிக்க ஸ்காலர்சீப் கிடைத்து சென்று படித்தார், ஆண்டு விடுமுறைக்கு இலங்கை வந்து திரும்ப முயன்ற பொழுது விசா மறுக்கப்பட்டது. இவரது சீன கம்யூனிச ஆதரவின் காரணமாக. படிப்பை தொடர முடியாது என்று தெரிந்த பிறகு புதிதாக் ஆரம்பிக்கப்பட்ட சிலோன் பொதுவுடமை கட்சி சண்முகநாதன் தலைமையில் தொடர்ந்து முழு நேரப் பணியாக தொடர்ந்தார். அதிலிருந்து வெளியேறியே ஜெவிபியை ஆரம்பித்தார். புரட்சிகர போராட்டங்களும் புரட்சியுமே இலக்கை அடைய உண்மையான சாதனங்கள் என்று பெரிதும் நம்பியவர். அதற்காக மக்களையும் தயார் படுத்தியவர் தான் விஜயவீரா...

1971ல் ஒரே சமயத்தில் கிட்டத்தட்ட 37 காவல் நிலையங்களை கைப்பற்றினர், ஜெவிபியினர் தென் இலங்கையில் ஒரு குறிப்பிடதக்க இடங்களில் மிகப்பெரும் புரட்சியை உருவாக்கி அரசிற்கு எதிராக மக்களை நிறுத்தியிருந்தனர். இந்த புரட்சியை ஒடுக்குவது இலங்கை அரசுக்கு மிகப்பெரிய பிரச்சனையாக இருந்தது, இலங்கையிட சொல்லி கொள்ளும் அளவிற்கு இராணுவ பலம் அப்போது இல்லை, காவல்துறையினர் தான் பெருமளவு இருந்தனர் இராணுவத்தை விட. அதனால் இந்தியாவின் உதவியை நாடினர், அணிசேரக் கொள்கையை தனது நாட்டின் கொள்கையாக கொண்ட இந்தியா இலங்கை இராணுவத்துடன் இணைந்து அவர்களின் நாட்டு மக்களை படுகொலை செய்ய துணை போனது. அரசு இந்த புரட்சியில் 5000 மக்கள் வரை கொல்லப்பட்டனர் என்று தகவல் சொல்கிறது. ஆனால் புரட்சி முடிந்து கைது செய்யப்பட்டவர்கள் மட்டுமே 15000க்கும் மேலானோர். கொலை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 45000ல் இருந்து 50000 இருக்கும் என்று கணக்கிடுகின்றனர் மனித உரிமை ஆர்வலர்கள். 

1971ல் இந்திய இராணுவ உதவியுடன் ஜெவிபியை நசுக்கினார்கள் என்றும் புரட்சிகர கருத்தகளோ போராட்டங்களோ ஒய்வதில்லை என்பதற்கு சான்றாக மறுபடியும் புரட்சி தொடங்கியது 1980களில் 1987ம் ஆண்டு இந்தியாவை அமைதி படை என்ற பெயரில் கொண்டு வந்து ஈழவிடுதலைகாக போராடியவர்களுடன் சண்டையிடச் செய்துவிட்டு இலங்கை இராணுவம் திரும்பவும் ஜெவிபியினரை மிருக வேட்டையாடியது. 1971ல் இந்தியா இலங்கை ஒரு குழுவாக நின்று மக்களை படுகொலை செய்தனர், 1988 -89 களில் இரு குழுக்களாக நின்று தங்கள் மக்களை கொலை செய்தனர். இந்திய அமைதிப்படை ஈழத்தில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி தமிழ் மக்களை கொண்று குவித்தது அதே சமயத்தில் தென் இலங்கையில் இலங்கை இராணுவம் ஜெவிபியினரை கொண்று குவித்தது. 


அணிசேரக் கொள்கை என்று சொன்ன இந்தியா இலங்கை இராணுவத்துடன் மட்டும் அணிசேருவது என்ன கொள்கை என்று யாரும் கேட்க கூடாது. இந்திய இராணுவத்தின் துணையுடன் 1971ல் 50000 மக்களை படுகொலை செய்துள்ளனர் இதில் சிங்களவன் தமிழர் என்பது எல்லாம் கிடையாது ஜனத விமுக்தி பெரமுனாவின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் மற்றும் நன்கொடை அளித்தவர்கள் என்று அனைவரையும் கொன்று குவித்துள்ளனர். இதற்கு இந்தியாவில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர்வில் இருந்து இராணுவத்தினரையும் 5 ஹெலிகாப்டர்களையும் அனுப்பி வைத்துள்ளனர். இங்கு இருந்து சென்ற ஹெலிகாப்டர்களும் வீரர்களும் காட்டுநாயகா விமான நிலையத்தில் தரையிறங்கி இலங்கை இராணுவத்துடன் இணைந்து ஒரு மனித படுகொலையை நடத்தியிருக்கின்றனர் 1971ல். 80களின் இறுதியில் இந்திய அமைதிபடை என்ற பெயரில் நடத்திய படுகொலை நாம் அறிந்ததே.. இந்திய இலங்கைக்கு ஒரு அடியாளாக செயல்பட்டு வருகிறது ஓவ்வொரு முறையும்... 

தன் சொந்த நாட்டு மக்களை கொலை செய்யும் இந்தியா மற்றும் இலங்கை போன்ற அரசுகள் மக்களுக்கான ஜனநாயக நாடுகள் என்று இறையாண்மை உள்ள நாடுகள் என்று கூறுவது அறுவெருப்பாக உள்ளது.

1971ல் இந்திய படை இலங்கைக்கு சென்றதற்கான ஆதாரம்
http://vayu-sena.indianmilitaryhistory.org/other-coin-1971-ceylon.shtml

No comments:

Post a Comment