Thursday, November 14, 2013

முள்ளிவாய்க்கால் முற்றம் நெறுஞ்சி முள்???


ராஜ ராஜன் ஒரு மாபெரும் கற்றாளியை உருவாக்கினான் கிபி 10ம் நூற்றாண்டில் அது விவாதத்தின் கருப்பொருளாக இன்று வரை இருந்து வருகிறது. ஆனால் தமிழர்களின் கட்டிடக் கலைக்கு சான்றாக உலகின் முன்னாள் தன் பணியை செய்கிறது. அதே போல் முள்ளி வாய்க்கால் முற்றம் எனும் ஈழத்தில் 2009ல் நடந்த இனப்படுகொலையை எடுத்து இயம்பும் சின்னத்தை நோக்கிய விமர்சனமும் நீண்டு கொண்டே செல்கிறது ஆனால் ராஜ ராஜனின் கற்றாளியைப் போல் முற்றமும் தன் பணியை செவ்வனே செய்து கொண்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் ஆள்பவர்களுக்கும் ஆண்டவர்களுக்கும் மிகப் பெரிய பிரச்சனையாக இருக்க போகிறது. ஈழத்தில் நடந்த இனப்படுகொலைகளை 1980களில் இருந்து ஆரம்பித்து இன்று வரை அனைத்தையும் தன்னுள்ளே வரித்துக் கொண்டுள்ளது அங்கிருக்கும் கலை ஆவணங்கள்.


ஈழத் தமிழ் சொந்தங்களின் அமைதியான இயற்கை சார்ந்த வாழ்க்கையை பனைமரக் காட்டினுடாக வடித்த சிற்பத்தில் தொடங்கி, 1983ம் ஆண்டு குட்டி மணி தன் கண்களுக்கு கொடுக்க விரும்பிய பாக்கியமான சுதந்திர தமிழீழத்தை பார்க்க கூடாது என்று நோண்டி எடுக்கப்பட்டு அழிக்கப்பட்ட கண்களை வடித்த சிற்பமாகட்டும் பேசாமல் பேசும் கதைகள் பல. யாழ்ப்பாண நூலகத்தை எரிப்பு சம்பவத்தையும் தமிழன் கறி இங்கு கிடைக்கும் என்று நடத்தப்பட்ட சம்பவத்தை சுட்டிகாட்டுவது ஆகட்டும் அனைத்தும் மிகவும் நேர்த்தியாக கலை ஆவணமாக வடிக்கப்பட்டுள்ளது.
(யாழ்ப்பாண நூலக எரிப்பு, தமிழன் கறி நிகழ்வுகள் கலை வடிவில்)

(முள்ளிவாய்க்கால் நிகழ்வுகள் 2009ல்)

முள்ளிவாய்க்காலில் 2009ல் நடந்த கொடூரங்களை தனி தனி சிற்பங்களாக ஒரு சுவராக ஒவ்வொரு நிகழ்வும் மிகவும் நேர்த்தியாக சித்தரிக்கப்பட்டிருந்தது. கொத்துக் குண்டுகள்,  மனித உரிமை மீறல்கள் மற்றும் முள்வேலி முகாம் என்று 2009ல் முள்ளிவாய்க்காலில் இலங்கை அரசு நடத்திய அனைத்து கொடூரங்களையும் சிற்ப ஆவணங்களாக வடிவமைக்கப் பட்டுள்ளது. இதன் பின்னால் முற்றத்தின் ஜோதியாக பாலச்சந்திரன் படுகொலையும் சார்லஸ் ஆண்டணியின் மரணமும் ஒரே சிற்பமாக இருவரின் உயிருடனான உருவமும் உயிரற்ற உடல்களும் ஆவணப்படுத்தப் பட்டுள்ளது.
பாலசந்திரன், சார்லஸ் ஆண்டனி சிற்பங்கள்

ஈகியர்கள் சிற்பங்கள்

இதைத் தவிர முள்ளிவாய்க்கால் அவலங்களை சித்தரித்த சிற்பங்களுக்கு நேரெதிராக முள்ளிவாய்க்கால் அவலம் நேர்ந்துவிடக் கூடாது என்று தங்கள் இன்னுயிரை ஈந்து போராடிய தோழர்களின் சிற்பங்களும், மாவீரன் முத்துகுமார் நடுநாயகமாக இருக்க முருகதாஸன் வரை அனைவரும் சிற்பங்களாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளனர்.  


மாவீரர்கள் மண்டபத்தில் சிவகுமரன், சங்கர் தொடங்கி அனைத்து மாவீரர்கள் படங்களும் வைக்கப்பட்டுள்ளது அவர்களின் சிறு வரலாற்று குறிப்புடன். இதை படிப்பவர்கள் அனைவருக்கும் ஈழப்போராட்ட வரலாறு முற்றிலுமாக தெரிந்து கொள்ளலாம். மேலும் உள் மண்டபத்தில் அனைத்து தமிழறிஞர்கள் படங்களும் தொகுக்கப்பட்டுள்ளது. பெயர் மட்டுமே தெரிந்த பல அறிஞர்களின் புகைப்படங்கள் இங்கு அனைவருக்கும் தெரிந்து கொள்ளும் வகையில் புகைப்படங்களாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

முற்றத்தில் ஈழ வரலாறு பற்றி நிறைய சந்தேகங்கள் எழுப்பப்பட்டது என்னால் முடிந்த அளவிற்கு கேட்ட தோழர்களுக்கு விளக்கம் சொன்னேன்.. ஆனால் என்னால் ஒத்துக்கொள்ள முடியாத விசயம் மாணவத் தோழன் சிபி லெக்சுமணனிடம் வந்திருந்த ஒருவர் கேட்டிருக்கிறார். ”பாலச்சந்திரன் செத்துட்டானா?” என்று ஆம் இத்தனை வருடங்கள் கழித்து தமிழ்நாட்டில் பாலச்சந்திரன் கொல்லப்பட்டதை கூட அறியாதவராக ஒருவர் மட்டும் அல்ல இன்னும் பலர் உள்ளனர், இவர்களை தான் நாம் உருவாக்கி வைத்துள்ளோம். 2009க்கு பிறகு வந்த குபீர் உணர்வாளர்கள் என்று விமர்சிப்பவர்களும்,  திராவிட இயக்கம் என்று வியாக்கியானம் பேசி பலவருடங்களாக இயக்கம் நடத்துபவர்களும் தங்களின் திறமையை அனுபவத்தையும் வைத்து ஏன் பாலச்சந்திரன் மரணத்தை இந்த கடைசி குடிமகன் வரை கொண்டுசேர்க்க முடியவில்லை இத்தனை வருடமாக எப்படி மக்களை சென்றடைவது என்று யோசிப்பது இல்லை, தனக்கான அங்கீகாரத்தையும், தனக்கான மரியாதையையும் தான் எதிர் பார்க்கிறார்கள் இந்த பழம் திண்ணு கொட்டை போட்ட பழுத்த அரசியல்வியாதிகள்.

இந்த முற்றம் அமைய உதவியவர்கள் ம.நடராசனாகட்டும் அல்லது வேறு யாராக வேண்டுமென்றாலும் இருக்கட்டும் ஆனால் முற்றம் தஞ்சையின் நட்டநடுவே உலகிற்கு தன் கதையை சொல்ல தொடங்கிவிட்டது முற்றமும் அதை பார்க்க வரும் மக்களும் சொல்லட்டும் என்ன தேவை என்று… முற்றம் இனி எட்டு திக்கும் முரசறிவிக்கும் ஈழத் தமிழ் சொந்தங்களின் விடிவிற்கு வழி வகுக்கும்.

முற்றம் நெரிஞ்சி முள்ளாக ஆளவிரும்பும், ஆண்டுகொண்டிருக்கும் அனைத்து ஆதிக்கவாதிகளுக்கும் ஆப்பாக இருக்க போகிறது. 

குறிப்பு :- முற்றத்தின் திறப்பு நிகழ்விற்கு பாஜகவை அழைத்தது தேவையில்லாத ஒன்று தவிர்த்திருக்கலாம்.

பாராட்டப்பட வேண்டிய விசயம் பெரியார், காமராஜர் படங்களை வாஞ்சிநாதன் படம் வைத்த முற்றத்தில் வைக்காமல் விட்டதற்கு கோடான கோடி நன்றிகள். 


3 comments:

  1. தந்தைப் பெரியாரைப் புறக்கணித்திருப்பது என்ன மாதிரியான புரிதலோ? அதைப் பற்றிக் கேள்விகள் எந்த தலைவர்களும் எழுப்பவில்லையா?

    ReplyDelete
  2. கேள்விகள் எழுப்ப பட்டது... கோவை. ராமகிருஷ்ணன் தோழர் நிகழ்வை புறக்கணிக்கும் முடிவையும் எடுத்ததாக அறிந்தேன்..

    ReplyDelete
  3. பெரியாரும் காமராஜரும் தமிழின துரோகிகளோ? புலிகளுக்கு துட்டு கொடுத்த மலையாளி படத்தை எல்லாம் கூட வைப்பீர்கள்... நாங்க பொத்திக்கிட்டு போகணும்... போங்கடே...

    ReplyDelete