Friday, January 28, 2011

இணைய புலிகளின் பாய்ச்சல்

என்னடா இவன் இணைய புலிகளின் பாய்ச்சல் என்று சொல்லியிருக்கிறானே இவனும் ஒரு கருணாவின் சொம்பு தூக்கியா என்று நினைத்துவிட வேண்டாம். எப்படியும் ஒரு திராவிட திம்மி வந்து நம்மை இணையபுலி என்று சொல்ல தான் போகிறது அதை முதலில் சொன்ன பெருமை என்னை சார்ந்ததாக இருக்கட்டுமே அதையும் அந்த திராவிட திம்மிகளுக்கு ஏன் விட்டு கொடுக்க வேண்டும்..

தமிழக மீனவர்களுக்காக இதுவரையில் இல்லாத ஒர் எழுச்சி இன்று நடந்து கொண்டுள்ளது இதை சரியான நோக்கத்துடன் கொண்டு செல்வதே இப்பொழுது நமது கடமை. இதில் நமது தாயாதி சண்டைகளை ஒதுக்கி வைத்துவிட்டு போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் துற்றட்டும் என்று நம் வழியை நாம் தொடர்வேதே சிறந்த நடவடிக்கையாக இருக்கும்..

இதை சொல்ல காரணம் ஒரு ட்வீட்டில் ஒருவர் தற்கொலை செய்து கொண்டவர்கள் என்று மீனவர்களை கிண்டல் செய்திருந்தார் அவருக்கு பதிலளித்து ட்வீட்டில் நேரம் வீணடிக்க கூடாது நாம். இக்பால் செல்வன் என்பவர் கடந்த நாள் முழுவதும் கிட்டதட்ட 300க்கும் மேல் ட்வீட் செய்தார். இதேபோல் பலர் செய்து கொண்டுள்ளனர் இதை தொடர்ந்தாலே போதும். ஏன் குறை சொல்லி பதிவிட்டவரின் ட்வீட் கூட கணக்கில் தான் வரும் எனவே இதையெல்லாம் கணக்கில் எடுக்காமல் ட்வீட் செய்யுங்கள்..

இது இணையபுலிகளான நமக்கு கிடைத்திருக்கும் ஒர் அருமையான வாய்ப்பு.. நமது குரலை பதிவு செய்ய. மேலும் இந்திய அரசிற்கு அனுப்பு பெட்டிசனிலும் கையெழுத்திட்டு உங்களின் வேதனையை அரசிற்கு தெரியபடுத்துங்கள்..



இது நமக்கு மட்டுமே என்று நினைக்காமல் முடிந்த அளவு ஆங்கிலத்தில் செய்யவும். அதுவே உலகளாவிய அளவில் நமது வேதனையை கொண்டு போய் சேர்க்கும்..

2 comments:

  1. தமிழன் என்று சொல்லடா.. தலை குனிந்து நில்லடா!?

    http://sakthistudycentre.blogspot.com/2011/01/blog-post_29.html

    ReplyDelete
  2. அருமையான பதிவு பிடித்திருந்தால் அவசியம் ஒட்டு போடவும் அதனால் கருத்துக்கள் பரவுகின்ற வாய்ப்பு கிடைக்கபெறும்.
    நான் ஓட்டு போட்டுட்டேன்.. நீங்க போட்டீங்களா?

    ReplyDelete