Saturday, January 29, 2011

விலைவாசி குறைந்துவிட்டது

நான் புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவன். இன்று சனிக்கிழமை இந்த வாரம் முழுவதும் ஓவ்வொரு கடையில் ஒரு விலை சொன்னார்கள் சிகரெட்டுக்கு. எனது அலுவலகத்துக்கு அருகே உள்ள கடையில் நேற்று ஒரு சிகரெட் 6 ரூபாய் என்றார்கள் அதற்கு முதல் நாள் 5ரூபாய் 50காசு அதாவது வழக்கமாக 5 ரூபாய்க்கு விற்க்கப்படும் சிகரெட் கோல்ட்பிளாக் கிங்ஸ் இரண்டு நாட்களில் ஆறு ரூபாய் ஆனது..

நமக்கு எங்கே இந்த விலையேற்றத்தை பற்றிய கவலை இருக்கிறது, தேவை என்றால் எவ்வளவு காசு கொடுத்து வேண்டுமானாலும் கொடுத்து வாங்குவோமே. சமையலுக்கு தேவையான அத்தியாவசிய பொருளான வெங்காயமே 8 ரூபாயில் இருந்து 80 ரூபாய் ஆன பொழுது அசராமல் எனக்கு இரண்டு கிலோ வெங்காயம் கொடு என்று கேட்டு வாங்கியவர்கள் இந்த ஒரு ரூபாய் ஏற்றத்திற்கா அஞ்ச போகிறோம். நேற்று காலையில் இருந்து மதியம் 3 மணிவரை சிகரெட் வாங்கி ஊதி தள்ளினேன். சிகரெட் குடிப்பதை குறைக்க வேண்டும் என்று கையில் வாங்கி வைத்துக் கொள்வதில்லை வேண்டும் எனும் பொழுது கடைக்கு சென்றே வாங்குவேன் ஒவ்வொரு சிகரெட்டாக.

மாலை 3 மணிக்கு பிறகு சென்றால் கிங்ஸ் தீர்ந்துவிட்டது என்றார். ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்காது எனும் பொழுது ஊதிய வாய் மட்டும் சும்மாவா இருக்கும் சரி இருப்பதை கொடு என்று வில்ஸ் வாங்கி புகைத்தேன் நேற்று. இன்று காலையிலும் இது தொடர்ந்தது. மாலை சென்று சிகரெட் கேட்டால் கிங்ஸும் இருந்தது ஆனால் விலையும் 50 பைசா குறைந்து 5.50 ஆகிவிட்டது.

இப்ப சொல்லுங்க விலைவாசி குறைந்துவிட்டதா இலையா. ஏன் வெங்காயம் கூட 80 ரூபாயில் இருந்து குறைந்துவிட்டது இரண்டு நாட்களாக தங்கம் விலை கூட குறைந்து வருகிறது. பெட்ரோல் மூச்சுவிடக் கூடாது.. எனது முதல் பதிவுகளை படித்து பெருமூச்சு விட்டுக்கோங்க..


யாருப்ப அது மனிதவள மேம்பாட்டாளர் நீ இந்த பதிவை படிக்காதே நீ வேற விலைவாசி குறைந்துவிட்டது என்று என் சம்பளத்தையும் குறைத்துவிட போகிறாய்..

No comments:

Post a Comment