Monday, January 17, 2011

ஒடுக்கப்பட்டதை மறந்துவிட்டார்களா?? இன்று..





வைக்கம் போராட்டத்திற்கு முன்பாகவே தீண்டாமையை எதிர்த்து திருவனந்தபுரம் சமஸ்தானத்தை எதிர்த்து நடந்த மிகப்பெரிய பாட்டாளி மக்கள் போராட்டமே தோள்சீலை போராட்டம். தீண்டாமை தான் நாம் கேள்விபட்டது எல்லாம் ஆனால் காணாமை என்பதும் இருந்துள்ளது(உலகில் எந்த மூளையிலு நடக்காத கொடுமை). பரையைனை தொட்டலே தீட்டு சாணாரை பார்த்தலே தீட்டு என்று வாழ்ந்த காலம். மிக அதிக தூரமில்லை நமக்கும் அதற்கும். இது நடந்தது 1800ம் ஆண்டுகளில் இருந்து. திருவனந்தபுரம் சமஸ்தானம் சட்டமே இயற்றியது இந்த பாகுபாடுகளை வைத்து..

யார் இந்த சாணர்கள், இவர்களை இந்த பெயர் சொல்லிக்கூப்பிடகூடாது என்று பெயரை கூட மாற்றிவிட்டனர் நாடார்கள் என்று. ஆனால் இவர்களின் பெயர் சான்றோர் நாடாள்வர் என்பதே. திருத்துறை பூண்டி வடகாடு கோயிலில் உள்ள கல்வெட்டில் நாடாவன் என்று இவர்களை நாடாள்வான் என்று குறிப்பிடுகிறது, இது 12ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு. தூத்துகுடியில் சாத்தான்குளம் கல்வெட்டும் நாடாள்வன் என்றே குறிப்பிடுகிறது இந்த கல்வெட்டு கி.பி. 1644ம் ஆண்டு கல்வெட்டு. இப்படி சான்றோர் நாடாள்வான் என்ற குறிப்பிட பட்ட இனம். சான்றோர் என்று அழைக்கப்பட்டு அதன் பிறகு சாண்றார், சாணார் என்று மருவி வந்ததை பல அறிஞர்கள் சுட்டிகாட்டியுள்ளனர். இப்படி வாழ்ந்த மக்களையே அதாவது நாடாண்ட ஒரு பரம்பரையை பார்த்தலே தீட்டு என்று சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

18ம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் திருவனந்த சமஸ்தானம் கொண்டுவந்த சட்டத்தில் பறையர், புலையர், ஈழவர் போன்றவர்கள் இத்தனை அடி தூரத்தில் இருந்து பேச வேண்டும் சானார் போன்றோர்கள் கண்ணில் கூட படக்கூடாது (உலகத்தில் இன்று வரை பார்த்த தீண்டாமைகளின் உச்சகட்டம் இது, பார்க்க கூட கூடாது) இதை மீறினால் தண்டனை என்று வகுக்கப்பட்டிருக்கிறது. இது மட்டுமல்ல கீழ் சாதிமக்கள் சம்பளம் இல்லாமல் வேலைபார்க்கவும் வைக்கப்பட்டனர் சட்டத்தின் மூலமாக 1814ம் ஆண்டு.

சமூகத்தின் இப்படிபட்ட கொடூரங்கள் எத்தனை காலம் தான் தொடரும் இவர்களுக்காக குரல் கொடுத்தவர் தான் வைகுண்ட சாமி (ஜெயலலிதா இவரின் பூஜைக்கு தான் போயிட்டு இப்பவந்தாங்க) இவர் மக்களை முழுவதுமாக ஒன்று சேர்த்தார். இவரின் காலத்தில் இவருக்கு பெருமாள் என்று பெயர் வைத்தபொழுது சமஸ்தானத்தில் இருந்து எதிர்ப்பு வந்து முத்துகுட்டி என்று பிறகு பெயர் மாற்றினார்கள். இவர் வளர்ந்து தன் இன மக்களுக்காக போராடினார். இவர் துறவரம் மேற்கொண்டவர் சாமியாக பார்க்கப்பட்டவர், இவர் இட்ட முதல் கட்டளையே தன்னை பார்க்கவரும் பெண்கள் மேலாடை அணிந்து வர வேண்டும் என்பது தான். ஆம் கீழ்சாதி மக்கள் மேலாடை அணியக்கூடாது, மார்பை மறைக்க கூடாது. அதாவது உயர்ந்த மனிதர்கள் முன் திறந்த மார்புடனே இருக்க வேண்டும். இவராலும் வேலுதம்பியாலும் இந்த சமூகத்தினர் ஒரளவு ஒன்றினைந்தனர். வைகுண்டசாமி கைது செய்யப்பட்டார் அதன் பிறகு இனி ஊர் ஊருக்கு சென்று பேசக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார். திரும்பிவந்தவர் தனது பனந்தோப்புக்குள் சென்றவர் மறைந்துவிட்டார் என்று கூறுகிறார்கள். எத்தனை கத்திகள் அவர் உடலை தடவியதோ யாருக்கு தெரியும்..



17ம் நூற்றாண்டின் இறுதியிலேயே ஆங்கிலேயேன் இந்தியாவிற்குள் வந்துவிட்டான், நாஞ்சில் நாட்டையும் அவர்களின் கிருத்துவ மிஸினரிகள் அடைந்திருந்தனர். இவ்வளவு அடக்குமுறைகளையும் கண்ட மக்கள் தனக்கு இந்து மதமே வேண்டாம் என்று தூக்கி எறிந்துவிட்டு கிருத்துவமததிற்கு மாறினார்கள். அங்கு சென்றாலும் அவர்களுக்கு விமோசனம் இல்லை என்று நீ மதம் மாறினாலும் தாழ்ந்த சாதி தான் என்று மதம் மாறிய பெண்களின் மேலாடை கிழிக்கப்பட்டது அடித்து நொறுக்கப்பட்டனர். பாதிரியார் பிட் அவர்கள் தொடுத்த வழக்கில் பத்மநாபபுரம் நீதிமன்றம் கிருத்துவர்களாக மாறிய நாடார் இன பெண்கள் மார்பில் துணி அணியலாம் என்று உத்தரவிட்டார். இதன் பிறகே பலர் மொத்தமாக கிருத்துவ மதத்திற்கு மாறினார். மானம் முக்கியமா கடவுள் முக்கியமா என்று கேட்டால் இன்று கூட சொல்லலாம் மானம் தான் முக்கியம். சமூகத்தில் அடக்கி ஒடுக்கி வைக்க பட்ட மக்கள் என்ன செய்வார்கள் இதுவரை கடைபிடித்த மதத்தை தூக்கி கடாசிவிட்டு கிருத்துவத்திற்கு மாறினார்கள்.

அத்துடன் நிற்கவில்லை கொடுமை ஆங்கிலேயேன் தான் ஒவ்வொரு பிரேதசத்துக்கும் ஏற்றார்போல் சட்டம் கொண்டுவந்து மக்களை ஒன்று சேரவிடாமல் தடுத்தானே. திரும்பவும் அடக்கு முறை வ்ந்தது தோள் சீலையை அகற்ற உத்தரவிடப்பட்டது 1829ல் திருவிதாங்கூர் சமஸ்தானத்தால். திரும்பவும் அடிதடிகள் இந்த முறை பல உயிர்கள் காவு வாங்கப்பட்டன எதிர்த்தவர்கள் வெட்டி சாய்க்கப்பட்டனர். மன்னன் கை கட்டி வேடிக்கை பார்த்தான். ஆனால் மக்கள் இம்முறை தொடர்ந்து போராடினர் இவர்களுக்கு ஆதரவாக பிற சமூக மக்களும், கிருத்துவ மிசினரிகளும் போராட்டத்தில் குத்தித்தன. சென்னையில் இந்த முறை வழக்கு பதிவு செய்யப்பட்டது 1847ம் வருடம் தாழ்த்தப்பட்ட சாதி மக்கள் அவர்கள் கிருத்துவத்திற்கு மாறி இருந்தாலும் தோள் சீலை அணிய உரிமை இல்லை என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது கூட சாட்சிகளாக வந்த நாடார் இனமக்களை 64 அடி தூரம் தள்ளியிருந்தே சாட்சி அளித்தனர். பறையர் இனமக்கள் 32 அடி தள்ளி நின்று சாட்சி அளித்தனர்.



இதன்பிறகும் போராட்டம் தொடர்ந்தது. பாதிரியார் பீட்டும் அவரது மனைவியும் இந்த இன மக்களுக்காக பெரும் தொண்டு புரிந்தனர். கிருத்துவ பெண்களுக்காக தனியாக அடை வடிவமைத்தும் கொடுத்தனர். இந்த நாடார் இனமக்களின் தொடர் போராட்டத்திற்குமுன் ஒன்றும் செய்ய இயலாமல் 1855ம் ஆண்டு திருவிதாங்கூர் சம்ஸதானம் அடிமை முறையை முற்றிலும் ஒழித்து சட்டம் இயற்றியது. இதன் பிறகும் தோள் சீலை உரிமை மறுக்கப்பட்டு 1859ல் ஜூலை 26ம் நாள் தான் மன்னரிடம் இருந்து ஒரு உத்தரவு வந்தது, தோளுக்கு சீலை அணிவது மறுக்கப்பட்ட பெண்கள் சீலை அணிந்து கொள்ளலாம் ஆனால் மேல் சாதி பெண்கள் அணிவது போல் அணியக்கூடாது என்று உத்தரவு வந்தது. இது தான் தோள்சீலை போராட்டம்.

ஆனால் இன்று மக்களின் போராட்டம் வேறுவழியில் சென்று கொண்டிருக்கிறது, தென்மாவட்டத்தின் இன்றைய சாதிகொடுமைகளுக்கு இவர்களும் காரணம் என்று அறியும்பொழுது எப்படி இப்படிபட்ட ஒரு வரலாற்றினை மறந்தார்கள் இம்மக்கள் என்பது புரியவில்லை??? ஏன் இந்த போராட்டத்தை பற்றி தெரியாத அந்த இன மக்கள் பலர் உள்ளனர். எனது நண்பர் ஒருவரிடம் கேட்டபொழுது அவருக்கும் இதை பற்றி தெரியவில்லை..

ஓடம் ஒரு நாள் வண்டியில் ஏறும்
வண்டி ஒரு நாள் ஓடத்தில் ஏறும்

என்பது போல் ஒரு காலத்தில் தாங்கள் ஒடுக்கப்பட்டதை மறந்து அதுவும் 1847ல் சென்னையில் நீதிமன்றத்தில் யாரால் இவர்கள் 64 அடி தள்ளி நிற்கவைக்கப்பட்டர்களோ அவர்களே 1899ல் கமுதி கோயில் வழக்கில் இவர்களும் கோயிலுக்குள் வரலாம், நால்வர்ண சாதியில் மேல் வர்ணத்தை சேர்ந்தவர்கள் தான் சான்றோர் நாடார் என்று சாட்சி சொன்ன தில்லைவால் திட்சீதர்களுக்கு பிறகு இவர்களுக்கும் வந்துவிட்டதா ஆதிக்க சாதி எண்ணம்..

அரசியல் மற்றும் ரவுடியிசத்தில் சம்பந்தமில்லாத சாதாரண மக்கள் சிலரும் இதையே செய்வதனால் வந்த வெளீப்பாடே ஒட்டு மொத்த ஒரு சமூகத்தை நோக்கி நான் எழுப்பிய கேள்வி.. மற்றவகையில் நாடார்களில் பெரும்பாண்மையாக சாதி பார்க்காத மக்கள் மேல் எந்த வெறுப்பும் இல்லை எல்லா இடத்திலும் சில புல்லுறுவிகள் இருக்க தான் செய்கின்றனர், அவர்களை களை எடுக்க வேண்டியதும் நமது பொறுப்பே..

நன்றி
1. அய்யாவழி மக்கள்
2. திருவிதங்கூர் சம்ஸ்தான ஆவணங்கள் Trivadrum.
3. தென் குமரியின் கதை - அ.கா. பெருமாள்
4. பண்பாட்டு வேர்களை தேடி - பாளையங்கோட்டை சவேரியர் கல்லூரி

42 comments:

  1. நண்பரே....நன்றாக உள்ளது...இவ்வளவு பெரிய இனம் எவ்வாறு அவ்வளவு அடிமையை சந்தித்தது...ஏதேனும் வரலாற்றுடன் கூடிய விளக்கம் இருந்தால் சொல்லுங்கள்...

    ReplyDelete
  2. Thanks for sharing the history of nadar community.

    ReplyDelete
  3. sir ku cast solla pidikalana enna ma ku gov cast base la kodukara job, education vanguringa ?

    ReplyDelete
  4. vayitrukaga poraduravanuku ethuku intha vela poi samparikara velaya mattum paru samathuvam pesi thirutha nee onnum periyar illa da ,

    appadi samathuvam paka ninaikaravan first school la cast kakarangale atha first stop pannu pakalam ,


    appadi nee okiyamanavana iruntha census edukaila na entha cast um illa nu register pannu da

    nee ah sanar pathi illathatha sollatha da naaye

    ReplyDelete
  5. Those who forget history 'll be condemned to repeat it.

    ReplyDelete
  6. வில்லவர் மற்றும் பாணர்

    பாண்டிய என்பது வில்லவர் மற்றும் பாண ஆட்சியாளர்களின பட்டமாகும்.

    இந்தியா முழுவதும் பாணர்கள் அரசாண்டனர். இந்தியாவின் பெரும்பகுதி பாண ஆட்சியாளர்களால் ஆளப்பட்டது. இந்தியா முழுவதும் பாண்பூர் எனப்படும் ஏராளமான இடங்கள் உள்ளன. இவை பண்டைய பாணர்களின் தலைநகரங்கள் ஆகும்.

    பாணர்கள் பாணாசுரா என்றும் அழைக்கப்பட்டனர். கேரளா மற்றும் தமிழ்நாட்டை ஆண்ட வில்லவரின் வடக்கு உறவினர்கள் பாணர்கள் ஆவர். கர்நாடகாவிலும் ஆந்திராவிலும் பாணர்கள் ஆண்டனர்.

    வில்லவர் குலங்கள்

    1. வில்லவர்
    2. மலையர்
    3. வானவர்

    வில்லவரின் கடலோர உறவினர்கள் மீனவர் என்று அழைக்கப்பட்டனர்

    4. மீனவர்

    பண்டைய காலங்களில் இந்த அனைத்து துணைப்பிரிவுகளிலிருந்தும் பாண்டியர்கள் தோன்றினர்.
    அவர்கள் துணை குலங்களின் கொடியையும் பயன்படுத்தினர். எ.கா

    1. வில்லவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் சாரங்கத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் ஒரு வில் மற்றும் அம்பு அடையாளமுள்ள கொடியை சுமந்தார்.

    2. மலையர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் மலையத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் மலை சின்னத்துடன் ஒரு கொடியை ஏந்தினார்.

    3. வானவர் துணைப்பிரிவைச் சேர்ந்த பாண்டியன் ஒரு வில்-அம்பு அல்லது புலி அல்லது மரம் கொடியை ஏந்திச் சென்றார்.

    4. மீனவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் ஒரு மீன் கொடியை ஏந்திச்சென்று தன்னை மீனவன் என்று அழைத்துக் கொண்டார்.

    பிற்காலத்தில் அனைத்து வில்லவர் குலங்களும் ஒன்றிணைந்து நாடாள்வார் குலங்களை உருவாக்கின.

    பண்டைய மீனவர் குலமும் வில்லவர் மற்றும் நாடாள்வார் குலங்களுடன் இணைந்தது.

    பிற்காலத்தில் வடக்கிலிருந்து குடிபெயர்ந்த நாகர்கள் தென் நாடுகளில் மீனவர்களாக மாறினர். அவர் வில்லவர்-மீனவர் குலங்களுடன் இனரீதியாக தொடர்புடையவர் அல்லர்.


    வில்லவர் பட்டங்கள்

    வில்லவர், நாடாள்வார், நாடார், சான்றார், சாணார், சண்ணார், சார்ந்நவர், சான்றகர், சாண்டார் பெரும்பாணர், பணிக்கர், திருப்பார்ப்பு, கவரா (காவுராயர்), இல்லம், கிரியம், கண நாடார், மாற நாடார், நட்டாத்தி, பாண்டியகுல ஷத்திரியர் போன்றவை.

    முக்கியத்துவத்தின் ஒழுங்கு

    1. சேர இராச்சியம்

    வில்லவர்
    மலையர்
    வானவர்
    இயக்கர்

    2. பாண்டியன் பேரரசு

    வில்லவர்
    மீனவர்
    வானவர்
    மலையர்

    3. சோழப் பேரரசு

    வானவர்
    வில்லவர்
    மலையர்


    பாணா மற்றும் மீனா

    வட இந்தியாவில் வில்லவர் பாணா மற்றும் பில் என்று அழைக்கப்பட்டனர். மீனவர், மீனா அல்லது மத்ஸ்யா என்று அழைக்கப்பட்டனர்.

    சிந்து சமவெளி மற்றும் கங்கை சமவெளிகளில் ஆரம்பத்தில் வசித்தவர்கள் பாணா மற்றும் மீனா குலங்கள் ஆவர்.

    பாண்டவர்களுக்குஒரு வருட காலம் அடைக்கலம் கொடுத்த விராட மன்னர் ஒரு மத்ஸ்யா - மீனா ஆட்சியாளர் ஆவார்.

    பாண மன்னர்களுக்கு அசுர அந்தஸ்து இருந்தபோதிலும் அவர்கள் அனைத்து சுயம்வரங்களுக்கும் அழைக்கப்பட்டனர்.

    சோனித்பூரில் தலைநகருடன் அசுரா இராச்சியம் என்று அழைக்கப்பட்ட ஒரு பாண இராச்சியம் பண்டைய காலங்களில் அசாமை ஆட்சி செய்தது.

    இந்தியா முழுவதும் பாணா-மீனா மற்றும் வில்லவர்-மீனவர் இராச்சியங்கள் கி.பி .1500 வரை, நடுக்காலம், முடிவடையும் வரை இருந்தன.

    மஹாபலி

    பாணர் மற்றும் வில்லவர் மன்னர் மகாபாலியை தங்கள் மூதாதையராக கருதினர். மகாபலி பட்டத்துடன் கூடிய ஏராளமான மன்னர்கள் இந்தியாவை ஆண்டனர்.

    வில்லவர்கள் தங்கள் மூதாதையர் மகாபலியை மாவேலி என்று அழைத்தனர்.

    ஓணம் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் கேரளாவை ஆண்ட மகாபலி மன்னர் திரும்பி வரும் நாளில் கொண்டாடப்படுகிறது.

    மாவேலிக்கரை, மகாபலிபுரம் ஆகிய இரு இடங்களுக்கும் மகாபலியின் பெயரிடப்பட்டுள்ளன.

    பாண்டியர்களின் பட்டங்களில் ஒன்று மாவேலி. பாண்டியர்களின் எதிராளிகளாகிய பாணர்களும் மாவேலி வாணாதி ராயர் என்று அழைக்கப்பட்டனர்.

    சிநது சமவெளியில்தானவர் தைத்யர்(திதியர்)

    பண்டைய தானவ (தனு=வில்) மற்றும் தைத்ய குலங்கள் சிந்து சமவெளியிலுள்ள பாணர்களின் துணைப்பிரிவுகளாக இருந்திருக்கலாம். தைத்யரின் மன்னர் மகாபலி என்று அழைக்கப்பட்டார்.

    இந்தியாவில் முதல் அணைகள், ஏறத்தாழ நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிந்து நதியில் பாண குலத்தினரால் கட்டப்பட்டன.

    ஹிரண்யகர்பா சடங்கு

    வில்லவர்கள் மற்றும் பாணர் இருவரும் ஹிரண்யகர்பா விழாவை நிகழ்த்தினர். ஹிரண்யகர்பா சடங்கி்ல் பாண்டிய மன்னர் ஹிரண்ய மன்னரின் தங்க வயிற்றில் இருந்து வெளிவருவதை உருவகப்படுத்தினார்.
    ஹிரண்யகசிபு மகாபலியின் மூதாதையர் ஆவார்.

    ReplyDelete
    Replies
    1. இவன் காமெடி வரலாறு எங்கு வரலாறு தேடி படிக்க சென்றாலும் போனாலும் சரி இந்த காமெடியை வேற படிக்க வேண்டியது முதல்ல Youtube நிருவம் தயவு செய்து இந்த தவறான பதிவை நீக்கவிடுங்கள் தவறான ஒன்றை பலமுறை கூறி உண்மையாக்க முயல்வது போல் பொய்யான வரலாறுகளை பதிவுகள் என்ற பெயரில் கற்பனை கதைகளையெல்லாம் பதிவு செய்து உண்மையாக்க முயலும் கூட்டத்தின் பதிவுகள் இதை விரைவில் சரி செய்யும் படி U tube நிருவனத்தை கேட்டுக் கொள்கிறேன்

      Delete
  7. வில்லவர் பாணர்

    நாகர்களுக்கு எதிராக போர்

    கலித்தொகை என்ற ஒரு பண்டைய தமிழ் இலக்கியம் நாகர்களுக்கும் வில்லவர் -மீனவர்களின் ஒருங்கிணைந்த படைகளுக்கும் இடையே நடந்த ஒரு பெரிய போரை விவரிக்கிறது. அந்தப் போரில் வில்லவர்-மீனவர் தோற்கடிக்கப்பட்டு நாகர்கள் மத்திய இந்தியாவை ஆக்கிரமித்தனர்.


    நாகர்களின் தெற்கு நோக்கி இடம்பெயர்வு

    நாகர்களின் பல்வேறு குலங்கள் தென்னிந்தியா மற்றும் ஸ்ரீலங்காவுக்கு குறிப்பாக கடலோர பகுதிகளுக்கு குடிபெயர்ந்தனர்.

    1. வருணகுலத்தோர்
    2. குகன்குலத்தோர்
    3. கவுரவகுலத்தோர்
    4. பரதவர்
    5. களப்பிரர்கள்
    6. அஹிச்சத்ரம் நாகர்கள்

    இந்த நாகர்கள் வில்லவர்களின் முக்கிய எதிரிகள் ஆவர். நாகர்கள் டெல்லி சுல்தானேட், விஜயநகர நாயக்கர்கள் மற்றும் ஐரோப்பியர்கள் காலனித்துவ ஆட்சியாளர்களுடன் கூடி பக்கபலமாக இருந்து வில்லவர்களை எதிர்த்தனர், இது வில்லவர் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.

    கர்நாடகாவின் பாணர்களின் பகை

    பொதுவான தோற்றம் இருந்தபோதிலும் கர்நாடகாவின் பாணர்கள் வில்லவர்களுக்கு எதிரிகளாயிருந்தனர். கி.பி 1120 இல் கேரளாவை துளுநாடு ஆளுப அரசு பாண்டியன் இராச்சியத்தைச் சேர்ந்த பாணப்பெருமாள் அராபியர்களின் உதவியுடன் ஆக்கிரமித்தார்.

    கி.பி 1377 இல் தெலுங்கு பலிஜா நாயக்கர்கள் தமிழ்நாட்டை ஆக்கிரமித்தனர். வில்லவரின் சேர சோழ பாண்டியன் இராச்சியங்கள் விஜயநகர சாம்ராஜ்யத்தின் பலிஜா நாயக்கர்களால் (பாணாஜிகா, ஐந்நூற்றுவர் வளஞ்சியர் என்னும் மகாபலி பாணரின் சந்ததியினர்) அழிக்கப்பட்டன.

    வில்லவர்களின் முடிவு

    1310 இல் மாலிக் கபூரின் படையெடுப்பு பாண்டிய வம்சத்தின் தோல்விக்கு வழிவகுத்தது. வில்லவர்கள் படுகொலை செய்யப்பட்டனர், மேலும் மூன்று தமிழ் ராஜ்யங்களும் முடிவுக்கு வந்தன.

    கர்நாடகாவின் பாண்டியன் ராஜ்யங்கள்

    கர்நாடகாவில் பல பாணப்பாண்டியன் ராஜ்யங்கள் இருந்தன

    1. ஆலுபா பாண்டியன் இராச்சியம்
    2. உச்சாங்கி பாண்டியன் இராச்சியம்
    3. சான்றாரா பாண்டியன் இராச்சியம்
    4. நூறும்பாடா பாண்டியன் இராச்சியம்.

    கர்நாடக பாண்டியர்கள் குலசேகர பட்டத்தையும் பயன்படுத்தினர். நாடாவா, நாடாவரு, நாடோர், பில்லவா, சான்றாரா பட்டங்களையும் கொண்டவர்கள்.

    ஆந்திரபிரதேச பாணர்கள்

    ஆந்திராவின் பாண ராஜ்யங்கள்

    1. பாண இராச்சியம்
    2. விஜயநகர இராச்சியம்.

    பலிஜா, வாணாதிராஜா, வாணாதிராயர், வன்னியர், கவரா, சமரகோலாகலன் என்பவை வடுக பாணர்களின் பட்டங்களாகும்.

    பாண வம்சத்தின் கொடிகள்

    முற்காலம்
    1. இரட்டை மீன்
    2. வில்-அம்பு

    பிற்காலம்
    1. காளைக்கொடி
    2. வானரக்கொடி
    3. சங்கு
    4. சக்கரம்
    5. கழுகு

    ReplyDelete
  8. துளு படையெடுப்பு

    கி.பி 1120 இல் சேர நாடு பாணப்பெருமாள்(பானு விக்ரம குலசேகரப்பெருமாள்) என்ற துளு இளவரசர் படையெடுப்பாளரால் ஆக்கிரமிக்கப்பட்டது. ஆலுபா வம்சத்தைச் சேர்ந்த துளு மன்னர் கவி அலுபேந்திராவின் (கி.பி 1110 முதல் கி.பி 1160 வரை) சகோதரர் பாணப்பெருமாள் ஆவார். 350000 எண்ணிக்கையிலான நாயர்களின் வலுவான படையுடன் பாணப்பெருமாள் கேரளா மீது படையெடுத்தார். இது கடலோர கர்நாடகாவிலிருந்து கேரளாவுக்கு துளு-நேபாள நாயர்கள் பெருமளவில் இடம்பெயர்ந்தது ஆகும்.

    நாயர்கள் அஹிச்சத்திரத்தைச் சேர்ந்த நாகர்கள் ஆவர். நம்பூதிரிகள் பண்டைய நேபாளத்தின் தலைநகரான அஹிச்சத்திரத்திலிருந்து வந்த பிராமணர்கள் ஆவர். கடம்ப மன்னர் மயூரா வர்மா 345 கி.பி யில் அஹிச்சத்திரத்தில் இருந்து ஆரியர்களையும் நாகர்களையும் கொண்டு வந்தார்.

    பாணப்பெருமாளுக்கு அரபு ஆதரவு

    துளு இளவரசர் பாணப்பெருமாள் அரபு ராணுவத்தின் ஆதரவுடன் கேரளாவைத் தாக்கினார். கண்ணூர் அருகே வளர்பட்டினத்தில் பாணப்பெருமாள் தனது தலைநகரை நிறுவினார். வில்லவர் சேர வம்சம் கொடுங்கல்லூரிலிருந்து கொல்லத்திற்கு மாறியது. பின்னர் பாணப்பெருமாள் கொடுங்கலூரை ஆக்கிரமித்து, அங்கிருந்து 36 ஆண்டுகள் 1120 கி.பி முதல் 1156 கிபி வரை ஆட்சி புரிந்தார். பின்னர் பாணப்பெருமாள் இஸ்லாம் மதத்தைத்தழுவி அரேபியாவுக்குச் சென்றார். அவரது மகன் உதயவர்மன் கோலத்திரி 1156 ஆம் ஆண்டில் கோலத்திரி வம்சத்தை நிறுவினார்.

    மஹோதயபுரம் சேரரின் தலைநகர் மாற்றம்

    கி.பி 1075 முதல் அலுபா இராச்சியத்தின் துளு படையினரால் கேரளா தாக்கப்பட்டது, கடைசி கொடுங்கலூர் தமிழ் சேர மன்னர ராமவர்மா குலசேகரப்பெருமாள் தமது தலைநகரத்தை கொல்லத்திற்கு மாற்றுமாறு கட்டாயப்படுத்தியது. ராமவர்மா சேரா-ஆய் வம்சத்தின் ராஜாவாக ராமர் திருவடியாக மாறினார். கடைசி வில்லவர் சேர ராமவர்மா தனது ராஜ்யத்தை ஒருபோதும் பிரிக்கவில்லை. கொல்லத்தின் பனங்காவில் கொட்டாரத்தில் இறக்கும் வரை அவர் இந்துவாகவே இருந்தார். இது பிற்கால சேர ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தது. வில்லவர் குலங்கள் கொடுங்கலூரிலிருந்து கொல்லத்திற்கு குடிபெயர்ந்தன.

    கி.பி 1310 இல் பாண்டியன் இராச்சியத்துடன் மாலிக் காஃபூரின் போர்

    இவ்வாறு வடக்கு கேரளா துளு-நேபாள மக்களால் ஆளப்பட்டது.
    இரண்டு பாண்டிய இளவரசர்களுக்கிடையில் நடந்த போரில் டெல்லி சுல்தானேட் தலையிட அழைக்கப்பட்டார். 2 லட்சம் வலுவான டெல்ஹி இராணுவத்தின் தளபதி மாலிக் கஃபூர், 50000 போர்வீரரகளை மட்டுமே கொண்டிருந்த பாண்டிய நாட்டை ஆக்கிரமித்தார். பாண்டிய இராணுவம் தோற்கடிக்கப்பட்டது மற்றும் மதுரை துருக்கி இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டது. தோல்விக்குப் பிறகும் வில்லவர்கள் டெல்ஹி படைகளால் வேட்டையாடப்பட்டனர்.

    கிபி 1310ல் டெல்லி சுல்தானால் பாண்டியன் வம்சம் தோற்கடிக்கப்பட்ட பின்னர், அனைத்து கேரளமும் துளு-நேபாள மக்களால் ஆக்கிரமிக்கப்பட்டன. துளு வம்சத்திற்கு அரேபியர்களின் மற்றும் டெல்ஹி சுல்தானேட்.டின் ஆதரவு இருந்தது.

    துளு சாமந்தா ஆட்சியாளர்களுக்கு வழங்கப்பட்ட கேரளா

    கி.பி 1335 இல் மதுரை சுல்தானேட் நிறுவப்பட்டபோது கேரளா துளு சாமந்தா மற்றும் நம்பூதிரிகளுக்கு வழங்கப்பட்டது.

    கிபி 1335 ல் நான்கு மருமக்கள்வழி ராஜ்யங்கள் உருவாக்கப்பட்டன.
    அவை

    1. கண்ணூரின் கோலத்திரி வம்சம்
    2. கோழிக்கோடு சாமூதிரி வம்சம்
    3. கொச்சியின் பெரும்படப்பு ஸ்வரூபம்
    4. வேணாட்டின் ஆற்றிங்கல் ஸ்வரூபம்

    கொல்லத்தில் இருந்து திருவனந்தபுரம் மற்றும் கன்னியாகுமரிக்கு தமிழ் வில்லவர் இடம்பெயர்வு

    தமிழ் வில்லவர்கள் மேலும் கொல்லத்திலிருந்து திருவனந்தபுரம் மற்றும் கன்னியாகுமரிக்கு குடிபெயர்ந்தனர். கேரளாவின் வில்லவர்கள் கோட்டையடி மற்றும் சேரன்மாதேவியில் கோட்டைகளை கட்டினர். சோழர்கள் களக்காட்டில் கோட்டையை கட்டினர். பாண்டியர்கள் கல்லிடைகுறிச்சி மற்றும் அம்பாசமுத்திரத்தில் கோட்டைகளை கட்டினர். வில்லவர் குலங்களின் இந்த கோட்டைகள் 1600 வரை இருந்தன.

    வேளாளர் நாயருடன் சேர்ந்தனர்

    கி.பி 1335 இல் துளு ஆட்சி நிறுவப்பட்டபோது
    வேளாளர் மருமக்கத்தாயம் மற்றும் பெண்வழி வாரிசுரிமை என்னும் நாயர் பழக்கவழக்கங்களை ஏற்றுகொண்டனர். பல கணவருடைமை சம்பந்தம் என்னும் சம்பிரதாயங்ஙளையும் கடைப்பிடித்து வந்தனர்.
    நாயர் தாய்மார்களின் குடும்பப் பெயர்களைப் பயன்படுத்துவதால், இப்போது பல நாயர்களில் வெள்ளாளரின் பிள்ளை குடும்பப்பெயர் உள்ளது.

    ReplyDelete
  9. துளு படையெடுப்பு

    துளு பிராமணர்
    துளு பிராமணர்கள் கி.பி 1335 க்குப் பிறகு தம்மை நம்பூதிரிகள் என்று அழைக்கத் தொடங்கினர்.

    துளு பிராமணரின் ஆதிக்கம்

    துளு பிராமணர்கள் கி.பி 1335 இல் நிலப்பிரபுக்களாக மாறினர். மேலும் 500 நம்பூரி சங்கேதங்கள் கேரளாவில் பயிரிடக்கூடிய பெரும்பாலான நிலங்களை கட்டுப்படுத்தின. பல நம்பூதிரி குடும்பங்கள் 5000 ஏக்கருக்கும் அதிகமான நிலத்தை வைத்திருந்தன.

    ஐரோப்பியர்கள் துளு-நேபாள இராச்சியங்களைப் பாதுகாத்தனர். பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஐரோப்பிய மிஷனரிகள் மலையாளத்தில் சுமார் மூவாயிரம் நேபாள வார்த்தைகளைச் சேர்த்தனர். நாடார்கள் அடக்கப்பட்டனர். அவர்களின் மொழியாகிய மலயாண்மை மொழி அழிக்கப்பட்டது. அவர்களின் பெண்கள் தோளுக்கு மேலே துணி அணிய அனுமதிக்கப்படவில்லை. உயர்குடி பெண்கள் மட்டுமே தோள் சீலை அணிய முடியும். நாடார் பெண்கள் 1600 வரை தோள் சீலை அணிந்திருந்தனர்.

    கேரள நாடார்கள் ஒரு நில பிரபு வர்க்க மக்கள். ஆனால் பத்து ஏக்கருக்கு மேல் நிலங்களை நாடார்கள் சொந்தமாக்க முடியாத வகையில் புதிய சட்டங்கள் இயற்றப்பட்டன. கிறிஸ்தவ மிஷனரிகள் கி.பி 1807 இல் நாடார்களுக்காக ஆங்கிலப் பள்ளியைத் தொடங்கினர். தெக்கன் களரி என்னும் போர்முறையில் பயிற்சி பெற்றவர்கள். நாடார்கள் இரட்டைக்குழல் கைத்துப்பாக்கிகளை பதிநேழாம் நூற்றாண்டிலும் பயன்படுத்தினர்.

    பிரிட்டிஷ் காரர்கள் திருவாங்கூரின் பாதுகாவலர்களாக மாறிய பின்னரே, திருவிதாங்கூர் மன்னர்களுக்கு திமிர்பிடித்தது.

    1696 ஆம் ஆண்டில் பேப்பூரிலிருந்து ஒரு குறுநில மன்னரின் இரண்டு மகன்கள் பிரிட்டிஷ் பாதுகாப்பின் கீழ் திருவிதாங்கூர் அரச குடும்பத்தில் தத்தெடுக்கப்பட்டனர்.

    அனந்த பத்மநாபன் நாடார் 1729 ஆம் ஆண்டில் மார்த்தாண்ட வர்மா என்ற ஒரு ராஜாவைக் காப்பாற்றினார். அனந்த பத்மநாபன் நாடார் சுமார் முப்பது குறுப்பு மற்றும் நாயர் வீரர்களை ஒற்றைக்கு கொன்றார். ஆனால் நன்றியற்ற மார்த்தாண்ட வர்மா ராமைய்யன் என்ற பிராமண மந்திரியின் ஆலோசனைப்படி அனந்தபத்மநாபன் நாடாரை விருந்துக்கு அழைத்து கொன்றார். மார்த்தாண்ட வர்மா நாடார்களை இராணுவ சேவையில் இருந்து நீக்கிவிட்டார். தர்மராஜா என்று அழைக்கப்படும் அடுத்த மன்னர் நாடார்களை ஊழியம் என்ற அடிமை வேலை செய்ய கட்டாயப்படுத்தினார்.

    நாயர்கள் துளு- நேபாள வம்சாவளியைக் கொண்டுள்ளனர் மற்றும் இன ரீதியாக தமிழர்களுடன் தொடர்புடையவர்கள் அல்ல. அவர்களின் நேபாள தோற்றம் காரணமாக நாயர்கள் ஒரு வெள்ளை - மஞ்சள் நிறத்தைக் கொண்டுள்ளனர். மற்றும் நாயர்கள் சற்று மங்கோலிய முக அம்சங்களைக் கொண்டுள்ளனர்.

    துளு வம்சத்திற்கு டெல்ஹி படையெடுப்பாளர்களால் கேரளா வழங்கப்பட்டது

    பரசுராமனால்தான் கேரளாவுக்கு அழைத்து வரப்பட்டதாக நம்பூதிரிகள் கூறுகிறார்கள். அவர்கள் உண்மையில் துளு படையெடுப்பாளரான பாணப்பெருமாளுடன் கி.பி 1120 இல் கேரளாவுக்கு வந்தனர். அரேபிய ஆதரவோடு பாணப்பெருமாள் கேரளா மீது படையெடுத்தார்.

    பரசுராமனால் கேரளா தங்களுக்கு வழங்கப்பட்டதாக நம்பபூதிரிகள் கூறினர். ஆனால் கேரளாவை துளு-நேபாள மக்களுக்கு அதாவது சாமந்தா, நம்பூதிரி மற்றும் நாயர் ஆகியோருக்கு கி.பி 1311 இல் மாலிக் காபூர் வழங்கினார். பாண்டிய வம்சத்தின் கீழ் உள்ள தமிழ் படைகள் மாலிக் கஃபூரால் தோற்கடிக்கப்பட்டன. அரேபியர்கள் மற்றும் டெல்லி சுல்தானேட்டின் கூட்டாளிகளான நம்பூதிரிகள் மற்றும் சாமந்தர்களுக்கு கேரளா வழங்கப்பட்டது.


    கி.பி 1120 இல் கேரளா மீது படையெடுத்த போது அரேபியர்கள் பாணப்பெருமாளை ஆதரித்தனர். இதைத் தொடர்ந்து பாணப்பெருமாள் இஸ்லாம் மதத்தைத் தழுவி அரேபியா சென்றார். பாணப்ப்பெருமாளின் இராணுவம் படைமலை நாயர் (கிருஷ்ணன் முன்ஜாத்) தலைமையில் இருந்தது. படைமலை நாயர் மாலத்தீவுக்குச் சென்று, இஸ்லாம் மதத்தைத் தழுவி, ஹுசைன் குவாஜா என்ற பெயரை ஏற்றுக்கொண்டார். பல நாயர்கள் 12 ஆம் நூற்றாண்டில் இஸ்லாமிய மதத்தை ஏற்றுக்கொண்டனர். பாணப்பெருமாளின் மருமகன் தர்மடத்தின் மன்னராக இருந்த மகாபலி. மஹாபலி இஸ்லாம் மதத்தைத் தழுவி சைஃபுதீன் முகமது அலி என்ற பெயரை ஏற்றுக்கொண்டார். பாணப்பெருமாளின் மகன் உதயவர்மன் கோலத்திரி கோலத்திரி வம்சத்தின் முதல் மன்னர். வடக்கு கேரளாவில் ஒரு பெரிய குடியேற்றத்தை மேற்கொண்ட அரேபியர்கள் அவருக்கு ஆதரவளித்தனர். இவ்வாறு கி.பி 1120 இல் கடலோர கர்நாடகாவைச் சேர்ந்தவர்கள் அரேபியர்களுடன் கூட்டணி வைத்து அதன் மூலம் வடக்கு கேரளாவை கைப்பற்றினார்.

    ReplyDelete
  10. துளு படையெடுப்பு

    1156 முதல் 1314 வரை துளு மக்கள் காசர்கோடு, கண்ணூர், கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்கள் மீது ஆட்சி செய்தனர் . டெல்லி சுல்தானேட் இராணுவத் தலைவர் மாலிக் கபூர் பாண்டிய சாம்ராஜ்யத்தைத் தாக்கியபோது துளு கோலாத்திரி வம்சம் அவருக்கு ஆதரவளித்தது. பாண்டிய வம்சத்தின் தோல்விக்குப் பிறகு துளு வம்சமும் அதன் நாயர் வீரர்களும் நம்பூதிரிகளும் தெற்கே நகர்ந்து முழு கேரளத்தையும் ஆக்கிரமித்தனர். கி.பி 1335 இல் மதுரை சுல்தானகம் நிறுவப்பட்டபோது கேரளாவில் நான்கு துலு-நேபாளி ராஜ்யங்கள் நிறுவப்பட்டன.

    இதனால் கேரளா நேபாளத்தின் அஹிச்சத்திரத்தில் இருந்து குடியேறிய துளு சாமந்த க்ஷத்ரியர், நம்பூதிரிகள் மற்றும் நாயர்கள் ஆகியோரின் கைகளில் விழுந்தது. துளு-நேபாளி மக்கள் தங்களை சவர்ணர் என்று அழைத்தனர். கேரளாவின் பழங்குடி திராவிட மக்கள் அவர்ணர் என்று அழைக்கப்பட்டனர்.

    இதன் பின்னர் கேரளா கோயில்கள் அனைத்தும் துளு-நேப்பாள மக்களால் ஆக்கிரமிக்கப்பட்டன .. போர்த்துகீசியர்கள் வந்தபோது கொச்சி மன்னரும் அவரது நாயர் வீரர்களும் இடுப்பு துணிகளை, (கோவணம்) மட்டுமே அணிந்திருந்தனர்.

    ஆனால் ஐரோப்பியர்கள் துளு படையெடுப்பாளர்களை ஆதரிக்கத் தொடங்கினர். ஐரோப்பியர்கள் துளு-நேப்பாளி இராச்சியங்களை 450 ஆண்டுகளாக பாதுகாத்தனர். கேரளாவின் வில்லவர் மக்கள் பழங்காலத்தில் இருந்து பல ஆயிரம் ஆண்டுகளாக ஆட்சி செய்திருந்தனர். ஆனால் கி.பி 1310 க்குப் பிறகு வில்லவர் ஒடுக்கப்பட்டனர்.

    ஆனால் அரேபியர்கள், துருக்கியர்கள் மற்றும் ஐரோப்பியர்கள் வில்லவரின் எதிரிகளை ஆதரித்தனர். வில்லவர் தங்கள் நிலத்தையும் சுதந்திரத்தையும் இழந்தனர். ஐரோப்பிய அறிஞர்கள் வில்லவர்களுக்கு கேரளாவில் பூர்வீகம் இல்லை என்றும் ஸ்ரீலங்காவிலிருந்து வந்திருக்கலாம் என்றும் கருதினர். கி.பி 1120 முதல் 1947 வரை கேரளா வெளிநாட்டு காலனித்துவ ஆட்சியின் கீழ் இருந்தது. வில்லவர் மக்கள் அவர்களால் அடிமைப்படுத்தப்பட்டனர்.

    இன்று மலையாள மொழியின் பாதி நேபாள மொழியைக் கொண்டுள்ளது. அவர்கள் பயன்படுத்தும் "சமஸ்கிருதம்" உண்மையில் நேபாள மொழி என்பதை மலையாளிகள் ஒருபோதும் உணரவில்லை.

    இது 600 ஆண்டுகளாக கேரளாவை ஆண்ட துளு-நேபாள ஆட்சியின் விளைவாகும்.
    அரேபியர்களும், டெல்லி சுல்தானேட்டும் பலவீனமான துளு ஆட்சியாளர்களை ஆதரித்தனர். அதனால்தான் ஒரு போர் கூட இல்லாமல் அவர்களுக்கு கேரளா கிடைத்தது.


    ReplyDelete
  11. சேர நாணயம்
    சேர நாணயங்கள் வில்லவர்களின் வில் மற்றும் அம்பு அடையாளங்களைக் காட்டுகின்றன.
    ஒரு தென்னை மரம் அல்லது பனை மரம் சித்தரிக்கப்பட்டுள்ளது. சேர நாணயங்கள் சாணார் காசு அல்லது சாணாரம் என்று அழைக்கப்பட்டன. அவை வில்லு காசு என்றும் அழைக்கப்பட்டது. சேர நாணயங்கள் வில்லவ நாடார்களின் வில் மற்றும் அம்பு அடையாளங்களைக் காட்டின. பனை மரம் அல்லது தென்னை மரத்தின் உருவமும் பொறிக்கப்பட்டுள்ளது.

    அடுக்கப்பட்ட தேங்காய்கள் முன்பக்கத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளன.

    15 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், கொங்கு சேரர்கள் என்ற உம்மத்தூர் சேரர்கள் செப்பு நாணயங்களை வெளியிட்டனர்.

    _________________________________________________________

    சேர நாணயங்கள்
    _________________________________________________________

    https://www.google.com/search?q=kongu+chera+coins&tbm=isch&ved=2ahUKEwjW1-n1gLPxAhUad30KHbq9BI8Q2-cCegQIABAC&oq=kongu+chera+coins&gs_lcp=ChJtb2JpbGUtZ3dzLXdpei1pbWcQAzIECCMQJ1AAWABgsN0FaABwAHgAgAGgAYgBoAGSAQMwLjGYAQDAAQE&sclient=mobile-gws-wiz-img&ei=zOnVYNbBFZru9QO6-5L4CA&bih=612&biw=360&hl=en

    ReplyDelete
  12. வில்லார்வெட்டம் இராச்சியம்

    வில்லார்வட்டம் அல்லது வில்லார்வெட்டம் இராச்சியம் ஒருவேளை கேரளாவின் தமிழ் வில்லவர் சேர வம்சத்தின் ஒரு துணைக்குழு மற்றும் கிளையாக இருக்கலாம். பண்டைய சேர துணைக்குழுக்கள் இரும்பொறை, உதியன், வேளியர், புறையர் போன்றவை.

    துளு படையெடுப்பு

    கிபி 1120 இல் 350000 பலமான நாயர் படையுடன் கேரளாவைத் தாக்கிய பாணப்பெருமாள் என்ற துளு படையெடுப்பாளரைத் தொடர்ந்து கொடுங்களூரில் பிற்கால சேர வம்சத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு, சேர தலைநகரம் கொடுங்களூரில் இருந்து கிபி 1102 இல் கொல்லத்திற்கு மாற்றப்பட்டது.
    கண்ணூரில் துளு படையெடுப்பாளர் பாணப்பெருமாள் அவரது மகன் உதயவர்மன் கோலத்திரியை முதல் ஆட்சியாளராகக் கொண்டு ஒரு தாய்வழி சாம்ராஜ்யம் கபி 1156 இல் நிறுவப்பட்டது. கேரளாவை ஆக்கிரமித்தவர்கள் துளுநாட்டைச் சேர்ந்த பாணர்கள், ஆரியர்கள் மற்றும் பண்டைய நேபாளத்தின் தலைநகரான அஹிச்சத்ராவைச் சேர்ந்த நாகர்கள்(நாயர்கள்). இந்தப் படையெடுப்பிற்குப் பிறகு, பிற்கால சேர வம்சத்தின் வில்லவர் தங்கள் அரசை கொல்லத்திற்கு மாற்றினர்.

    வில்லார்வட்டம் இராச்சியம்

    எனினும் கொச்சியில்  வில்லார்வட்டம் என்றழைக்கப்படும் சேர குலத்தினர் 15ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை ஆட்சி செய்து வந்தனர். வில்லார்வட்டம் இராச்சியம் உதய ஸ்வரூபம் என்று அழைக்கப்பட்டிருந்தது, இது வில்லவர்களின் உதியன் சேரலாதன் துணைக்குழுவில் தோன்றியதைக் குறிக்கிறது. உதியன் சேரலாதன் வம்சம் குட்டநாட்டில் இருந்து கேரளாவை ஆண்டவர்கள்.

    மாலிக் காஃபூரின் தாக்குதல்

    1311 இல் மாலிக் காஃபூரின் தாக்குதலுக்குப் பிறகு அனைத்து தமிழ் வம்சங்களும் முடிவுக்கு வந்தன. கிபி 1335 இல் மதுரை சுல்தானகம் ஆட்சிக்கு வந்தபோது நான்கு தாய்வழி துளு-நேபாள ராஜ்ஜியங்கள் நிறுவப்பட்டன. கோலத்திரி, சாமுத்திரி, கொச்சி மற்றும் வேணாட்டில் உள்ள ஆற்றிங்கல் ராணி ஆகிய நான்கு தாய்வழி அரசுகள்.


    துளு படையெடுப்பாளர் பாணப்பெருமாளின்
    சகோதரியின் வம்சாவளியைச் சேர்ந்த ஒரு நம்பூதிரி வம்சம் கொச்சி இராச்சியத்தில் ஆட்சியாளர்களானார். நாயர்களும் நம்பூதிரிகளும் பண்டைய நேபாளத்தின் அஹிச்சத்திராவின் தலைநகரிலிருந்து கடலோர கர்நாடகாவின் துளுநாட்டுக்கு குடியேறியவர்கள். கி.பி 1311க்குப் பிறகு கேரளாவை துளு-நேபாள மக்கள் ஆட்சி செய்தனர், அவர்கள் தாய்வழி , பலகணவருடைமை
    மற்றும் நாக வழிபாட்டைக் கடைப்பிடித்தனர். அவர்கள் நேபாள சொற்களஞ்சியத்துடன் பேசினார்கள் மற்றும் திகளரி எழுத்துக்களில் (துளு எழுத்து) எழுதினார்கள்.

    கிறிஸ்துவ மதத்திற்கு மாறுதல்

    வில்லார்வட்டம் மன்னர் கி.பி 1338க்குப் பிறகு கிறிஸ்தவ மதத்திற்கு மாறியிருக்கலாம். ஜோர்டானஸ் கேடலனஸ் எழுதிய 1329 முதல் 1338 வரையிலான நிகழ்வுகளை மிராபிலியா டிஸ்கிரிப்டாவில் விவரிக்கிறார். ஜோர்டானஸ் கிபி 1330 இல் காணாமல் போனார். ஜோர்டானஸ் ப்ரெஸ்டர் ஜான் அல்லது இந்தியாவில் எந்த கிறிஸ்தவ ராஜ்ஜியமும் இருப்பதைக் குறிப்பிடாததால் வில்லார்வட்டம் மன்னரின் மதமாற்றம் கி.பி 1338 க்குப் பிறகு நிகழ்ந்திருக்கலாம்.

    போப்பிற்கு கடிதம்

    வில்லார்வட்டம் மன்னர் எடெசா மூலம் கி.பி 1350 இல் ஐரோப்பிய சக்திகளிடம் இருந்து உதவி கோரி போப்பிற்கு கடிதம் அனுப்பினார். போப் அந்த கடிதத்தை போர்த்துகீசிய மன்னருக்கு அனுப்பினார்.

    ReplyDelete
  13. வில்லார்வெட்டம் இராச்சியம்

    சேந்தமங்கலம்

    வில்லார்வட்டம் பேரரசு ஆட்சி செய்த இடங்கள்  செம்பில், சேந்த மங்கலம்,  பறவூர், இளங்குன்னப்புழா--வைப்பீன், கும்பளம், கடலோர எர்ணாகுளம், உதயம்பேரூர், வைக்கம் அருகே உதயனாபுரம். இந்தப் பகுதிகள் அனைத்தும் பிற்காலத்தில் கிறிஸ்தவர்களின் கோட்டைகளாக மாறின. வில்லார்வட்டம் சாம்ராஜ்யம் . கி.பி. 1450க்கு முந்தைய அதன் உச்சக்கட்டத்தில் அதன் கட்டுப்பாட்டில் இருந்த குறைந்தது 1000 ச.கி.மீ. கி.பி 1311 இல் மாலிக் காஃபூரின் படையெடுப்பிற்குப் பிறகு கேரளாவில் தாய்வழி அரசுகள் நிறுவப்படும் வரை வில்லார்வட்டம் இராச்சியத்திற்கு சேந்தமங்கலம் கோட்டையில் கோவிலகத்தில் அதன் தலைநகர் இருந்தது.


    பிற்காலத்தில் இதன் தலைநகரம் உதயம்பேரூரில் இருந்தது. ஆனால் உதவி மிகவும் தாமதமாக வந்தது. போர்த்துகீசியர்கள் 150 ஆண்டுகளுக்குப் பிறகு 1498 இல் கேரளக் கடற்கரையை அடைந்தனர். ஐரோப்பியர்கள் வில்லார்வட்டம் மன்னரை பெலியார்ட்டே என்று அழைத்தனர். பதினான்காம் நூற்றாண்டின் மத்தியில் தலைநகர் சேந்தமங்கலம் கடல் தாக்குதலுக்கு ஆளாகக்கூடியதாக இருந்ததால் வில்லார்வட்டம் இராச்சியம் சாமுத்திரிகளின் மற்றும் அராபியர்களின் தாக்குதலை 1340 ல் எதிர்கொண்டது.


    கொச்சி அரசு

    கி.பி 1335 வரை மலப்புறம் மாவட்டத்தில் பொன்னானி ஏரிக்கு அருகில் உள்ள பெரும்படப்புக்கு அருகிலுள்ள வன்னேரியில் இருந்து பெரும்படப்பு ஸ்வரூபம் ஆட்சி செய்தது. துளு-நேபாள ராஜ்ஜியங்கள் மதுரை சுல்தானகத்துடன் கூட்டணி அமைத்து மத்திய மற்றும் தெற்கு கேரளாவின் ஆதிக்கத்தையும் பெற்றன. நம்பூதிரிகளின் பெரும்படப்பு ஸ்வரூபம் பின்னர் வன்னேரியிலிருந்து வெள்ளாப்பள்ளி மற்றும் பள்ளுருத்திக்கு தெற்கே நகர்ந்தது. கி.பி 1335 இல் கொச்சி இராச்சியம் நிறுவப்பட்ட போது தென் பள்ளுருத்தி பெரும்படப்பு என மறுபெயரிடப்பட்டது. பெரும்படப்பு ஸ்வரூபம் என்ற கொச்சி இராச்சியம் கிபி 1335 க்குப் பிறகு நம்பியாத்ரி வம்சத்தால் நிறுவப்பட்டது. அவர்கள் ஒரு நம்பூதிரி மூலம் பாணப்பெருமாள் சகோதரி ஸ்ரீதேவிக்கு பிறந்த ஒரு மகனிடமிருந்து தம் வம்சாவளியைக் கோரினர். தர்மடம் அரசனாகிய மகாபலி அவளுக்கு ஒரு மகன். கொச்சி இராச்சியம் துளு பண்டு சாதியின் துணைக் குழுவான கடலோர கர்நாடகத்தைச் சேர்ந்த தாய்வழி நாயர்களால் ஆதரிக்கப்பட்டது.

    சம்பந்தம்

    கொச்சியின் நம்பூதிரி ஆட்சியாளர்கள், கி.பி.1335க்குப் பிறகு வில்லார்வட்டம் இராச்சியத்தின் இளவரசிகளுடன் சம்பந்தத்தை வைத்திருக்கும் உரிமையைப் பெற்றிருக்கலாம். கோழிக்கோடு கிரந்தாவரியில் வில்லார்வட்டம் நாடு கொச்சி மன்னர்களுடன் இரத்தசம்பந்தமுள்ள தொடர்புடைய ஒரு அடிமை கிறிஸ்தவ வெளிநாட்டவர்களின் ராஜ்ஜியமாக இருந்தது என்று குறிப்பிடுகிறது. இந்த நம்பூதிரிகளுக்கும் கிறிஸ்தவ இளவரசிகளுக்கும் சம்பந்தம் மூலம் பிறந்தவர்கள் தாம் கிறிஸ்தவ நம்பூதிரிகள் என்று கூறியிருக்லாம். கி.பி. 1335க்குப் பிறகு நம்பூதிரிகள் மற்ற கிறிஸ்தவ உன்னத குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுடன் சம்பந்தம் வைத்திருந்திருக்கலாம்

    இது நம்பூதிரி என்று கூறிக்கொள்ளும் ஒரு கிறிஸ்தவக் குழுவை உருவாக்கியிருக்கலாம்

    சேந்தமங்கலத்தில் வில்லார்வட்டம் இராச்சியத்தின் வீழ்ச்சி

    கிபி 1340 இல் வில்லார்வட்டம் இராச்சியத்தின் தலைநகரான சேந்தமங்கலம் சாமுத்திரியால் அனுப்பப்பட்ட அரேபியர்களைக் கொண்ட கடற்படையால் தாக்கப்பட்டு அதை அழித்தது. தலைநகர் உதயம்பேரூருக்கு மாற்றப்பட்டது.

    உதயம்பேரூர்

    1340 கி.பி. இந்தியப் பேரரசருக்குப் பிறகு உதயம்பேரூர் புதிய தலைநகராக மாறியது. கேரளாவிற்கு ஒருபோதும் சென்றடையாத இந்தக் கடிதத்துடன் போப் தூதர்களை கேரளாவிற்கு அனுப்பினார். வில்லார்வட்டம் மன்னன், பிரஸ்டர் ஜான் (பிரஸ்பைட்டர் ஜான்) என்று அழைக்கப்படும் ஒரு சக்திவாய்ந்த கிறிஸ்தவ மன்னன் இந்தியாவை ஆண்டதாக ஐரோப்பியர்கள் மத்தியில் ஒரு புராணக்கதை உண்டாகியது.

    கடைசி மன்னர்

    கடைசி வில்லார்வட்டம் மன்னர் யாகூப் மகள் கிருபாவதி  என்றழைக்கப்பட்ட மரியம், கொச்சி இளவரசர் ராமவர்மாவை திருமணம் செய்து கொண்டார் என்று சிரியன் கிறிஸ்தவர்கள் கூறுகின்றனர். அவர் கிறிஸ்தவ மதத்திற்கு மாறி இட்டிமாணி என்று அறியப்பட்டார். இட்டிமாணி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார், அங்கு அவர் இறந்தார். அந்தக் காலத்தில் கொச்சி மன்னர்கள் கூட்டிருப்புப் அதாவது துணைமனைவி வழக்கத்தை மேற்கொண்டிருக்க வாய்ப்புகள் குறைவு. சில பதிவுகள் பாலியத்து அச்சனின் மத்தியஸ்தத்தின் பேரில்  கடைசி இளவரசி கிருபாவதி அல்லது மரியம்  கொச்சி மன்னரின் மறுமனைவியாகி இந்து மதத்திற்கு மாற்றப்பட்டதாகக் குறிப்பிடுகிறது.

    ReplyDelete
  14. வில்லார்வெட்டம் இராச்சியம்

    பாலியத்து அச்சன்

    வில்லார்வட்டம் சமஸ்தானத்தைச் சேர்ந்த சில பணிக்கர்களும் நாயர்களுடன் சேர்ந்து பெரும்படப்பு ஸ்வரூபத்தின் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்டனர். ஒரு பணிக்கர் குடும்பத்திற்கு சேந்தமங்கலம் பகுதி வழங்கப்பட்டது, பின்னர் அவர்கள் கி.பி 1450 இல் பாலியத்து அச்சன் என்று அழைக்கப்பட்டனர். வில்லார்வட்டம் ராஜ்ஜியம் பாலியத்து அச்சனுக்கு வழங்கப்பட்டது. கொடுங்களூர் குஞ்சுக்குட்டன் தம்புரான் எழுதிய கோகில சந்தேசத்தில் வில்லார்வட்டம் மன்னனின் இந்த அரியணைப் பதவி பறிக்கப்பட்டது கூறப்படுகிறது. கிபி 1585 வரை பாலியம் வம்சத்தினர் மன்னர்களாக ஆட்சி செய்தனர். கடைசி மன்னர் ராமவர்மா மற்றும் அவரது மகன் பாலியத்து கோமி அச்சன் கொச்சியின் பிரதமரானார். 1450 களில் கொச்சி மன்னர்கள் உதயம்பேரூருக்கு அருகிலுள்ள சில பகுதிகளைத் தவிர வில்லார்வட்டம் முழுவதையும் முழுமையாகக் கைப்பற்றினர். வில்லார்வட்டம் தலைவர்கள் அரச அந்தஸ்தை இழந்தனர்.

    வில்லார்வட்டம் அரசு போர்ச்சுகீசியரின் காலம்

    கிபி 1498 இல் போர்த்துகீசியர்கள் வந்தபோது, ​​​​வாஸ்கோடகாமாவுக்கு சிரிய கிறிஸ்தவர்களால் வில்லார்வட்டம் மன்னரின் செங்கோல் மற்றும் வாள் வழங்கப்பட்டது. நம்பூதிரி உடையில், தோளில் சால்வை அணிந்து, குடையும் ஏந்தியபடி, நம்பூதிரி உடையில், கிறிஸ்தவர்கள் குழு ஒன்று வாஸ்கோடகாமாவை சந்தித்தது. கேரளா முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர, தங்களின் கோட்டையான உதயம்பேரூரில், கோட்டை கட்ட வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர். ஒரு சக்திவாய்ந்த இந்திய கிறித்துவ மன்னரை எதிர்பார்த்த போர்த்துகீசியர்கள் அவர்களின் கோரிக்கையை நிராகரித்தனர்.

    வாஸ்கோ டா காமா

    வில்லார்வட்டம் தலைவர்கள் கொச்சி இராச்சியத்தில் இருந்து இழந்த தங்கள் நிலங்களை மீட்க வாஸ்கோடகாமாவின் உதவியை நாடினர். வில்லார்வட்டம் மன்னர்கள் குட்டி நிலப்பிரபுக்கள் என்பதை வாஸ்கோடகாமா உணர்ந்தார். போர்த்துகீசியர்கள் வில்லார்வட்டம் மன்னர்கள் தங்கள் பிரதேசத்தை மீட்டெடுக்க எதுவும் செய்யவில்லை. சேந்தமங்கலம் கத்தோலிக்க செமினரி மற்றும் வைபீகோட்டா செமினரி ஆகியவை வில்லார்வட்டம் வம்சத்திற்கு சொந்தமான நிலத்தில் கட்டப்பட்டு அங்கேகோவா மற்றும் கொச்சினுக்கு அடுத்தபடியாக மூன்றாவது அச்சகம் தொடங்கப்பட்டது.

    பணிக்கர் இராணுவம்

    கேரளாவிற்கு வந்த 150 போர்த்துகீசியர்கள் ஒரு சக்திவாய்ந்த இராணுவத்தை உடனடியாக நிறுவ முடிந்தது, ஏனெனில் கேரளாவின் பாரம்பரிய இராணுவ பயிற்சியாளர்களான பணிக்கர்கள் போர்த்துகீசியருடன் சேர்ந்து இறுதியில் ஒரு மெஸ்டிசோ சமூகம் உருவாக்கப்பட்டது. ஆரம்பகால பணிக்கர்கள் வில்லார்வட்டம் இராச்சியத்தைச் சேர்ந்தவர். மூவாற்றுப்புழா அருகே உள்ள பெரிங்குழாவில் தளபதிகளான வள்ளிக்கடப் பணிக்கர்களின் கீழ் ஒரு கோட்டை கட்டப்பட்டது. விரைவில் போர்த்துகீசியர்கள் உள்ளூர் ராஜ்ஜியங்களை கிறிஸ்தவமயமாக்கப்பட்ட பணிக்கர்களையும் மெஸ்டிசோக்களையும் கொண்டு கட்டுப்படுத்தினர். வள்ளிக்கடைப் பணிக்கர்கள் இனத்தால் நாடார்கள் ஆவர்.

    மெனசஸ் மற்றும் உதயம்பேரூர்

    1599 இல் கொச்சி மன்னர் கிறிஸ்துவ மதத்திற்கு மாற வேண்டும் என்று பேராயர் மெனெசஸ் விரும்பினார். ஆனால் கொச்சி மன்னர் அவரைத் தவிர்த்துவிட்டு, மூத்த வில்லார்வட்டம் தலைவரை தம்பான் அல்லது தம்புரான் அந்தஸ்துக்கு உயர்த்த முன்வந்தார், இதனால் மெனெசஸ் அவரை கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றினார். வில்லார்வட்டம் மன்னர்கள் இந்துக்கள் அல்லது அதிகாரப்பூர்வமாக கிறிஸ்தவர்கள் அல்ல என்பதை இது மீண்டும் குறிக்கிறது. ஜோசப் சிமோனியஸ் அசெமனஸ் தனது பைப்ளியோதீக்கா ஓரியன்றாலிஸ் இல் குறிப்பிடுகையில், கடைசி அரசருக்கு ஆண் வாரிசு இல்லாதலால், பெலியார்தே ராஜ்யம் கிறிஸ்தவர்களிடமிருந்து டயம்பரின் கிறிஸ்தவர் அல்லாத மன்னர்களுக்குச் சென்றது என்று. எனவே அதே வில்லார்வட்டத்தில் அரச குடும்பத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் சேந்தமங்கலத்தில் இருந்தும், அவர்களின் இந்து உறவினர்கள் உதயம்பேரூரில் இருந்தும் ஆட்சி செய்தனர். ஆனால் வில்லார்வட்டம் குடும்பத்தின் மூத்த உறுப்பினரைச் சந்தித்த மெனெசஸ் அவர்கள் கத்தோலிக்கர்கள் இல்லையென்றாலும் ஆழ்ந்த மத நம்பிக்கை கொண்ட கிறிஸ்தவர்கள் என்று கூறுகிறார். உதயம்பேரூர் வில்லார்வட்டம் குடும்பத்தில் சிலர் நெஸ்டோரியர்களாகவும், மற்றவர்கள் இந்துக்களாகவும் இருந்திருகலாம்.

    ஞானஸ்நானம்

    1599இல் உதயம்பேரூரின் வில்லார்வட்டம் மன்னர்  சேந்தமங்கலம் செமினரியில் பிஷப் மெனெசஸால் வில்லார்வட்டம் தோம ராஜாவு என ஞானஸ்நானம் பெற்றார். ஒருவேளை அவர் குடும்பத்தில் இருந்து முதல் ரோமன் கத்தோலிக்கராக இருக்கலாம்.

    ReplyDelete
  15. வில்லார்வெட்டம் இராச்சியம்

    டச்சு காலம்

    1653 இல் டச்சுக்காரர்கள் வந்தபோது வில்லார்வட்டம் குடும்பம் கத்தோலிக்கர்களாயதினால் செயலிழந்தனர். உதயம்பேரூர் பரம்பரையின் கடைசி மன்னர் ராஜா தோமா ஆவார், அவர் 1701 இல் இறந்தார், அவர் தனது முன்னோர்களால் கட்டப்பட்ட பழைய தேவாலயமான உதயம்பேரூர் பழே பள்ளியில் அடக்கம் செய்யப்பட்டார்.

    பிற்கால வில்லார்வட்டம் தலைவர்கள்

    சில வில்லார்வட்டம் தலைவர்கள் 18 ஆம் நூற்றாண்டு வரை இருந்தனர். கிரந்தாவரியின் படி 1713 இல் வில்லார்வட்டம் அடூர் கிராமத்தைத் தாக்கி சூறையாடியது. அவர்கள் கோயிலை அழித்து, பிராமணர்களைத் துன்புறுத்தி, கோயிலின் படகைக் கைப்பற்றினர். பெருமுண்டமுக்கில் இருந்த நெடுங்கநாட்டு நம்பிடி அச்சன்களை அதிகாரத்திலிருந்து அகற்றினர். அவர்களுக்கு டச்சு ஆதரவு இருந்திருக்கலாம். அதன் பிறகு அவர்கள் வரலாற்றில் இருந்து மறைந்தனர்.

    வில்லார்வெட்டம் வம்சத்தின் வேர்கள்.

    சங்க காலத்தில் உதியன் சேரலாதன் வம்சம் குட்டநாட்டில் இருந்து ஆட்சி செய்தது. வேம்பநாட்டுக் காயலுக்கு அருகிலுள்ள உதயனாபுரம், உதியன் சேரலாதன் வழித்தோன்றல்களின் தலைநகராக இருந்திருக்கலாம். பிற்காலத்தில் உதயம்பேரூர் மற்றும் சேந்தமங்கலம் ஆகியவை வில்லார்வெட்டம் சமஸ்தானத்தின் தலைநகரங்களாக விளங்கின. உதய ஸ்வரூபம் என்பது வில்லவர்களின் வில்லார்வெட்டம் வம்சத்தின் மாற்றுப் பெயராகும்.

    ReplyDelete
  16. நாகர்

    நாகர்கள் அடிப்படையில் வட இந்திய மக்கள் ஆனால் ஆரியர்களிடமிருந்து இன ரீதியாக வேறுபட்டவர்கள். நாகர்கள் ஆரியர்களின் அடிபணிந்த மக்கள். நாகர்கள், ஆரியர்கள் மற்றும் திராவிடர்கள் இந்தியாவின் மூன்று வெவ்வேறு இனங்கள்.

    ஹிந்தி

    இந்தி மொழி தேவநாகரி என்றும் அழைக்கப்படுகிறது, இது தேவ (ஆரியன்) மற்றும் நாக மக்களின் மொழியாகும்.

    இந்திரன்

    இந்திரன் தேவர்களின் அரசன், பெரும்பாலும் ஆரிய மக்களிடமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் சில நாகர்களும் தேவநாகரி மக்களின் அரசராகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். நஹுஷன் இந்திர அந்தஸ்தை அடைந்த ஒரு வரலாற்றுக்கு முந்தைய நாக அரசன்.

    நஹுஷன்

    ஆளும் இந்திரன் சாபத்தால் நீக்கப்பட்டதால் நஹூஷன் இந்திரனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். நஹூஷன் பிரதிஷ்டானாவை, அதாவது மகாராஷ்டிராவின் அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள பைதான் நகரத்தை ஆட்சி செய்தார். இது கலித்தொகையில் கூறப்பட்ட நாகர்கள் மத்திய இந்தியாவின் ஆக்கிரமிப்பு காலத்திற்கு ஒத்திருக்கலாம்.

    நஹூஷனின் மகன் யயாதி. யயாதியின் மகன்கள் புரு, பாண்டவர்கள் மற்றும் கவுரவர்களின் மூதாதையர்யது, யாதவர்களின் மூதாதையர் என்பவராவர். யது துர்வாஷா குலத்தினருடன் சேர்ந்து ஒரு குல ஒன்றியத்தைக் கொண்டிருந்தனர், மேலும் அடிக்கடி ஒருங்கிணைந்தவர்களாக விவரிக்கப்பட்டதனர். இவ்வாறு பாண்டவர்களும் கவுரவர்களும் யாதவரும் நாக அரசன் நஹூஷனிடமிருந்து தோன்றியவர்களாக இருக்கலாம்.

    இந்திரனின் வழித்தோன்றல்கள்

    கங்கை நதி பகுதியிலிருந்து தென்னிந்தியாவிற்கு குடிபெயர்ந்த நாகரும் இந்திரன் மற்றும் அஹல்யாவிலிருந்து வந்ததாகக் கூறுகின்றனர்.

    நஹுஷன் → யயாதி
    யயாதி → புரு வம்சம்
    புரு வம்சம் → குரு வம்சம் + யாதவ வம்சம்
    குரு வம்சம் → கவுரவர்கள்+ பரத வம்சம்

    கவுரவ வம்சாவளியினர்

    தென்னிந்தியா மற்றும் இலங்கைக்கு குடிபெயர்ந்த நாகர்கள், கவுரவ அல்லது குருகுல அல்லது பரதகுலத்தின் சந்ததியினர் என்று கூறுவது வழக்கம். கரையர், கொண்டா கரவா மற்றும் பிற மீனவ சமுதாயத்தினர் தாங்கள் கவுரவர்களின் வழித்தோன்றல்கள் என்று கூறுகின்றனர். இந்தியாவில் இந்த நாகர்கள் தமிழர்கள் போல் காட்டிக்கொள்கிறார்கள், ஆனால் சிங்கள பிரதேசங்களில் அவர்கள் எப்போதும் தங்களை கவுரவ அல்லது பரத வம்சாவளியினர் என்று அடையாளப்படுத்துகிறார்கள்.

    நாகர்களுக்கு எதிரான போர்

    திராவிட வில்லவர் மீனவரின் ஒருங்கிணைந்த படைகளுக்கும் நாகர்களுக்கும் இடையே நடந்த ஒரு பெரிய போரை கலித்தொகை என்ற ஒரு பண்டைய தமிழ் இலக்கியம் விவரிக்கிறது. அந்தப் போரில் வில்லவர் மீனவர் தோற்கடிக்கப்பட்டதினால் நாகர்கள் மத்திய இந்தியாவை ஆக்கிரமித்தனர். இந்த போர் கிமு 700 இல் நடந்திருக்கலாம். நஹூஷன் இந்த காலத்திற்குப் பிறகு மத்திய இந்தியாவில் மகாராஷ்டிராவில் உள்ள பிரதிஷ்டானாவைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தார்.

    தென்னிந்தியாவிற்கு குடியேறிய நாகர்கள்

    நாகரின் பல்வேறு குலங்கள் தென்னிந்தியா மற்றும் இலங்கைக்கு குறிப்பாக கடலோரப் பகுதிகளுக்கு குடிபெயர்ந்தன.

    1. வருணகுலத்தோர் (கரவே)
    2. குஹன்குலத்தோர் (மறவர், முற்குஹர், சிங்களவர்)
    3. கவுரவர்கள் (கரவே, கரையர்)
    4. பரதவர்
    5. களப்பிரர்கள் (களப்பாளர்- வெள்ளாளர், கள்ளர்)
    6. அஹிச்சத்திரம் நாகர்கள் (நாயர்)

    ReplyDelete
  17. நாகர்

    குஹன் வம்சாவளியினர்

    குஹன் வம்சாவளியினர் கங்கை நதியின் துணை நதியான சரயு ஆற்றின் கரையில் உள்ள புராண கால படகுக்காரரான குஹனின் குலத்தைச் சேர்ந்தவர்கள். கங்கை நதியைக் கடக்க குஹன் பகவான் ஸ்ரீ ராமருக்கு உதவினார். பகவான் ஸ்ரீராமர் குஹன் குலத்தை அயோத்திக்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு பதவிகள் கொடுத்தார்.

    ராவணனுடன் போர்

    குஹன் குலத்தினர் அயோத்திய படையில் ஒரு பகுதியாக இருந்தனர், அவர்கள் ஸ்ரீராமருடன் தென்னிந்தியாவிற்கு வந்தனர். கிஷ்கிந்தாவைச் சேர்ந்த வானர - வாணர் பாணருடன் சேர்ந்து குஹன் குலத்தினர் ராவணனுக்கு எதிராகப் போரிட்டனர். ராவணன் இயக்கர் குலத்தைச் சேர்ந்தவர், அவர் திராவிட மக்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார் மற்றும் தமிழ் பேசினார். இராவணனின் சிற்றப்பர் முனிவர் அகஸ்தியர் தமிழுக்கு அகத்தியம் என்ற இலக்கணம் எழுதினார். கிமு ஆறாம் நூற்றாண்டில் இராவணன் ஆட்சி செய்திருக்க முடியும்.

    மகாபாரதம் குருஷேத்திரப் போர் மற்றும் ராஜசூய யக்னம் ஆகியவற்றில் பங்கேற்ற இலங்கையைச் சேர்ந்த ஒரு சிங்கள அரசரைக் குறிப்பிடுகிறது. ராவணனின் மாமனார் மாயா தானவரும், விபீஷணனும், மகாபாரத காலத்தில் வாழ்ந்தவர்கள். கிபி 543 இல் விஜயா சிங்கள ராஜ்ஜியத்தை நிறுவினார். இதனால் மகாபாரதத்தின் படி இலங்கையில் விபீஷணனும் ஒரு சிங்கள அரசனும் ஒரே சமயத்தில் வாழ்ந்திருக்கலாம் அதாவது கிமு ஆறாம் நூற்றாண்டில்.

    மறவர்

    மறவர்கள் கங்கை ஆற்றில் மீனவர்களாக இருந்தனர், அவர்கள் ஸ்ரீராமரால் அயோத்திக்கு அழைக்கப்பட்டனர் மற்றும் அயோத்தியில் அவர்களுக்கு பதவிகள் வழங்கப்பட்டதாக மட்டக்களப்பு மான்மியம் கூறுகிறது. அயோத்தியின் வம்சாவளியை மறவர் என்று மட்டக்களப்பு மான்மியம் கூறுகிறது. பிற்காலத்தில் மறவர் ஸ்ரீராமரின் தோழர்களாக மாறி தென்னிந்தியாவுக்கு வந்தனர். மறவர் வானரரோடு சேர்ந்து ராவணனை ஆக்கிரமித்து தோற்கடித்தனர். மட்டக்களப்பு மான்மியம் அரக்கர் வம்சத்தை அழித்தவர்கள் என மறவரைப் போற்றுகிறது. கி.மு. ஆறாம் நூற்றாண்டில் ராவணனுடன் மறவரும் வானரரும் போரிட்டிருக்கலாம்

    வீரனென்னும் பரதிகுல யிரகு முன்னாள் வேட்டை சென்றெங்கள் குலமெல்லி தன்னை மாரனென்றணைத்தீன்ற சவலையர்க்கு வரு இரகு நாடனென நாமமிட்டு பூருவத்திலயோத்தி யுரிமையீந்து போன பின்னர் சிறிராமர் துணைவராகி தீரரென்னுமரக்கர்குலம் வேரறுத்த சிவ மறவர்குலம் நானும் வரிசை கேட்டேன்(மட்டகளப்பு மான்மியம்)

    இலங்கையில் நடந்த போருக்குப் பிறகு பல நாகர்கள் இலங்கைக்கு இடம்பெயர ஆரம்பித்தனர் என்று மட்டக்களப்பு மான்மியம் கூறுகிறது.

    ReplyDelete
  18. நாகர்

    வட இந்தியாவில் நாக வம்சங்கள்

    ஆரம்ப காலத்தில் நாகர்கள் ஆரியர்களுக்கு சமமாக கருதப்பட்டனர். நாகர்களுக்கு உயர் அந்தஸ்து இருந்தது மற்றும் இந்திரனாகவும் முடியும். பல நாக வம்சங்கள் வட இந்தியாவை ஆண்டன. சிசுநாகா வம்சம் (கிமு 413 முதல் 345) மற்றும் நந்தா வம்சம் (கிமு 345 முதல் 322 வரை) என்பவை வட இந்தியாவை ஆண்ட கடைசி நாக வம்சங்கள். ஆனால் பிற்காலத்தில் அவர்கள் வட இந்தியாவில் ஒடுக்கப்பட்ட வகுப்பாக மாறினர். நாகர்கள் தெற்கு ராஜ்யங்களுக்கு அடிமை வீரர்களாக விற்கப்பட்டனர். ஆறாம் நூற்றாண்டிலிருந்து நாகர்கள் புத்தமதத்தை ஏற்றுக்கொண்டது அவர்களுக்கு சீரழிவை ஏற்படுத்தியிருக்கலாம்.

    பௌத்த நாகர்கள்

    புத்த நாகர்கள் நாகர்கள் இக்ஷ்வாகு வம்சத்துடன் நெருங்கிய தொடர்புடையவர்கள். காசியை ஆண்ட இக்ஷ்வாகு வம்சத்தின் கடைசி மன்னர் பிரசன்னஜித் புத்த மதத்திற்கு மாறி புத்த பகவானின் சீடரானார். இந்த காலத்திற்குப் பிறகு நாகர்கள் ஆரிய நடைமுறைகளுக்கு எதிராக கலகம் செய்து தங்களை புத்த மதத்திற்கு மாற்றிக் கொண்டனர்.

    ஆரியர்களின் எதிர் தாக்குதல்

    புஷ்யமித்ரா சுங்கர் (கிமு 185 முதல் கிமு 149 வரை) என்ற ஒரு மௌரிய பேரரசின் பிராமண சேனாபதி மௌரிய வம்சத்தின் கடைசி அரசர் பிருஹத்ரத மௌரியரைக் கொன்றார். புஷ்யமித்ர சுங்கர் சுங்க வம்சத்தை நிறுவினார். புஷ்யமித்ரா சுங்கர் புத்தமதத்தவர்களைத் துன்புறுத்தினார், அவர்களில் பெரும்பாலோர் நாகர்கள் ஆயிருந்தார்கள். புஷ்யமித்ர சுங்கர் புத்த நூல்களை எரித்தார் மற்றும் புத்த மடங்களை இடித்தார்இந்த காலத்திற்குப் பிறகு நாகர்கள் சீரழிக்கப்பட்டனர்.

    வெளிநாட்டு ஆக்கிரமிப்பாளர்களை இந்து மதத்திற்கு மாற்றுதல்

    பிராமணர்கள் சித்தியன் மற்றும் ஹூணர் போன்ற புதிய வெளிநாட்டு படையெடுப்பாளர்களை இந்து மதத்திற்கு மதம் மாற்றினார்கள். பிற்காலத்தில் ஜாட் குலங்களும் ராஜபுத்திரர்களும் வெளிநாட்டு படையெடுப்பாளர்களிடமிருந்து தோன்றியிருக்கலாம். ஈராக்கைச் சேர்ந்த மொஹ்யால் பிராமணர்கள் முதலில் துருக்கிய மக்களாகத் தோன்றினாலும் இப்போது பிராமணர்களாக ஏற்றுக்கொள்ளப்படுகிறார்கள்.
    வட இந்தியாவில் நாகர்கள் கீழ் அடுக்குக்கு தள்ளப்பட்டனர். நாகர்கள் தென்னிந்தியாவிற்கு பெருமளவில் குடியேறுவதற்கு நாகர்களைத் துன்புறுத்தியது ஒரு காரணமாக இருக்கலாம். கிமு 150 இல் சித்தியன்-சாகர் படையெடுப்பு மற்றொரு காரணமாகும்.

    பத்மாவதியின் நாகர்கள் (கி.பி. 170 முதல் கி.பி. 350 வரை)

    மத்திய இந்தியாவின் இந்து வம்ச நாகர்கள், குஷானரின் ஆட்சி முடிந்த பிறகு மீண்டும் எழுச்சியடைந்தனர். விதிஷாவைச் சேர்ந்த நாகர்கள் தங்கள் ஆட்சியை மதுராபுரி வரை நீட்டித்தனர். அவர்கள் சாக ஆட்சியாளர்களின் சமகாலத்தவர்கள். இறுதியில் அவர்கள் கி.பி 350 ல் குப்த சாம்ராஜ்யத்தால் அடிபணிய வைக்கப்பட்டனர்.

    ReplyDelete
  19. நாகர்

    இந்தோ-சித்தியன் இராச்சியம் (கிமு 150 முதல் கிபி 400 வரை)

    இந்தோ-சித்தியன் படையெடுப்பு மற்றும் சிந்து, கங்கை மற்றும் நர்மதா நதி பள்ளத்தாக்குகளின் ஆக்கிரமிப்பு ஆகியவை சேதி இராச்சியத்தைச் சேர்ந்த கல்வார்களின் ஒரு பெரிய வெளியேற்றத்தை ஏற்படுத்தியிருக்கலாம் சேதி இராச்சியத்தைச் சேர்ந்த கல்வார் தென்னிந்தியாவில் களப்பிரர் என்று அழைக்கப்பட்டார்கள். வட இந்திய கல்வார் குடும்பப்பெயர்கள் காலர், கள்ளர், கலியாபாலா மற்றும் காலாள் ஆகியவை களப்பிரர் பட்டங்கள் கள்வர், கலியர், கள்ளர் மற்றும் களப்பாளர் ஆகியவற்றுடன் நெருக்கமாக ஒத்திருக்கிறது.

    சேதி இராச்சியம்

    சேதி இராச்சியம் மத்தியப்பிரதேசத்தில் கென் ஆற்றின் கரையில் அமைந்திருந்தது. கல்வார் சேதி இராச்சியத்தில் வசிப்பவர்களாக இருந்திருக்கலாம். கல்வார் பண்டைய ஒரிசாவிற்கும் பின்னர் தமிழ்நாட்டிற்கும் குடிபெயர்ந்திருக்கலாம், அங்கு அவர்கள் களப்பிரர் அல்லது களப்பாளர் என்று அழைக்கப்படுகிறார்கள்.

    கியி 6 ஆம் நூற்றாண்டில் மஹிஷ்மதியிலும், கிபி 10 ஆம் நூற்றாண்டில் திரிபுரியிலும் காலச்சூரி ராஜ்ஜியங்களை நிறுவிய அதே மக்களாக கல்வார் இருக்கலாம். காலச்சூரி வீரர்கள் சூரி என்ற ஒரு வகை கத்தியைப் பயன்படுத்தினர். களப்பிரர் படையெடுப்புக்குப் பிறகு சூரி கத்தி தமிழ்நாட்டில் பயன்படுத்தப்பட்டது.

    கலிங்க மன்னர் காரவேளா (கிமு 105)

    காரவேளா கிமு 105 இல் வட தமிழகத்தை ஆக்கிரமித்தார். வட தமிழ்நாட்டை ஆக்கிரமித்த காரவேளாவின் தளபதிகள் வேளிர் அல்லது வேள் ஆளர் அல்லது காராளர் என்று அழைக்கப்பட்டனர். அவர்கள் கலிங்கத்தில் இருந்து வந்ததால், வேளாளர் கலிங்க குலம் என்றும் அழைக்கப்பட்டனர். வேளாளர் ஆரம்பகால களப்பிரர், அவர்கள் களப்பாளர் என்றும் அழைக்கப்படுகிறார்கள். களப்பாளர் களப்பிரரின் பிரபுக்கள். வெள்ளாளருக்கு பிள்ளை மற்றும் முதலியார் குடும்பப்பெயர்களும் உள்ளன.

    கள்வர் கோமான் புல்லி

    ஆரம்பகால கிறிஸ்து சகாப்தத்தில், கள்வர் கோமான் என்றழைக்கப்படும் மாவண் புல்லி என்ற ஒரு களப்பிர ஆட்சியாளர் திருப்பதியில் ஆட்சி செய்தார்.

    களப்பிரர் படையெடுப்பு மூன்றாம் நூற்றாண்டில் களப்பிரர் அல்லது கலியர் அல்லது கள்வர் தமிழ்நாட்டின் முடிசூட்டப்பட்ட மூன்று அரசர்களையும் தோற்கடித்து தங்கள் ஆட்சியை நிறுவினர். அடுத்த மூன்று நூறு வருடங்கள் தமிழகம் இருண்ட யுகத்திற்கு சென்றது. களப்பிரர் தலைநகரம் பெங்களூருக்கு அருகில் உள்ள நந்தி மலையில் இருந்தது. களப்பிரரின் வழித்தோன்றல்கள் களப்பாளர்-வெள்ளாளர் மற்றும் தமிழ்நாட்டின் கள்ளர் சமூகத்தினர் ஆவர்.

    கள்ளர்

    இந்திரன் மற்றும் அஹல்யாவிலிருந்து கள்ளர் வந்ததாக பூவிந்திர புராணம் மற்றும் கள்ள கேசரி புராணம் கூறுகின்றன. வரலாற்று ரீதியாக கள்ளர் கிபி மூன்றாம் நூற்றாண்டில் களப்பிரர் படையெடுப்பாளர்களின் வழித்தோன்றல்கள் ஆவர்.

    கள்ளர், மறவர், அகமுடையார் மற்றும் வேளாளர்கள் மூன்றாம் தமிழ் சங்க காலத்தில் (கிமு 500 முதல் கிபி 300 வரை) கங்கை நதி பகுதியிலிருந்து தமிழகத்திற்கு குடிபெயர்ந்த நாக பழங்குடியினர். அவர்கள் இந்திரன் மற்றும் ரிஷி கௌதமரின் மனைவி அஹல்யாவின் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்று கூறுகின்றனர்.

    இந்திர குலம்

    இந்திரன் ரிஷி கௌதமரின் மனைவி அஹல்யாவுடன் சட்டவிரோத உறவு கொண்டிருந்தார். அகல்யா இந்திரனுக்கு மூன்று மகன்களைப் பெற்றெடுத்தார், அவர்கள் முறையே கள்ளர், மறவர் மற்றும் அகம்படியர் என்ற பெயர்களைப் பெற்றனர். தேவன் அல்லது இந்திரனின் வழித்தோன்றல்கள் என்று கூறுகின்றனர். (திரு. எஃப். எஸ். முல்லேய்)


    ஆனால் தாய்லாந்து இராமாயணம் ராமாகியனின் கூற்றுப்படி, இந்திரன் மூலம் அஹல்யாவுக்குப் பிறந்த குழந்தை பாலி மற்றும் சூர்யனின் மூலம் பிறந்த குழந்தை சுக்ரீவன் என்பவர்கள் ஆவர்.

    கள்ளர் மறவர் கனத்ததோர் அகமுடையர் மெல்ல மெல்ல வெள்ளாளர் ஆனார்

    கள்ளர், மறவர் மற்றும் அகம்படியார் மெதுவாக வெள்ளாளர்களாக மாறினர். இவ்வாறு வெள்ளாளர், கள்ளர், மறவர் மற்றும் அகம்படியார் அனைவரும் இந்திர குலத்தைச் சேர்ந்தவர்களே.

    கள்ளர் திருமணங்களில் மணமகன் தான் இந்திர குலம், தளவால நாடு மற்றும் அஹல்ய கோத்ரத்தைச் சேர்ந்தவர் என்பதை உறுதிப்படுத்த வேண்டிய காரணம் இதுதான். ஆலா என்றால் நாகம். தளவாலா நாடு என்றால் நாக நாட்டின் தலைமை என்று பொருள் கொள்ளலாம். கள்ளர்கள் நாக பழக்கவழக்கமான பலகணவருடைமையை பின்பற்றினர்.

    கரையர்

    மட்டக்களப்பு மகான்மியம், கரையர் இலங்கையின் செழிப்பால் ஈர்க்கப்பட்டு இலங்கைக்கு இடம்பெயரத் தொடங்கினார் என்று கூறுகிறது. கரையர் கவுரவர் மற்றும் பரதரிடமிருந்து வந்தவர் என்று தமது வம்சாவளியைக் கோருகிறார்கள். கி.மு. 300 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மூன்றாவது சங்க காலத்தில் கரையர் இலங்கைக்கு குடிபெயர்ந்திருக்கலாம்.

    ReplyDelete
  20. நாகர்

    சங்க இலக்கியத்தில் நாகர்கள்

    சங்க இலக்கியம் மறவர், எயினர், அருவாளர், ஒளியர், ஓவியர், பரதவர் ஆகியோர் தமிழ்நாட்டிற்கு குடியேறிய பழமையான நாகர்கள் என்று குறிப்பிடுகிறது.

    பரதவர்

    பரதவர் தங்களை பர்வத ராஜகுலம் என்றும் பரதகுல க்ஷத்திரியர் என்றும் அழைக்கின்றனர். கங்கைப் பகுதியில் வேதகால குலங்களில் பர்வத குலமும் ஒன்று. கிமு ஆறாம் நூற்றாண்டில் வடமேற்கு மற்றும் கங்கை பகுதிகளில் வசித்திருந்த பர்வத குலம் மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பரதராஜா என்பது கி.பி 1 முதல் 3 ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட பலூசிஸ்தானை ஆண்ட ஒரு ஈரானிய வம்சமாகும். பலூசிஸ்தானில் பிராகுய் என்று அழைக்கப்படும் வடக்கு திராவிட மொழி இன்னும் பேசப்படுகிறது. கி.பி முதல் நூற்றாண்டில் பரதவர் தங்கள் தாயகத்திலிருந்து இடம்பெயர்ந்திருக்கலாம். அதே காலகட்டத்தில் அவர்கள் சங்க கால தமிழகத்தில் தோன்றினர். பாண்டிய ஆட்சியாளர்களுக்கு எதிராக பரதவர் கலகம் செய்தனர் ஆனால் பாண்டியர்கள் அவர்களை தோற்கடித்து அடக்குவதில் வெற்றி பெற்றனர். கிபி 210 இல் இரண்டாம் நெடுஞ்செழியன் வரி செலுத்த மறுத்த பரதவரை தோற்கடித்தார்.

    இலங்கையின் அசல் மக்கள்.

    இலங்கையின் பூர்வீக மக்கள் இயக்கர் ஆவர். இயக்கர் திராவிட வில்லவர்களிடமிருந்து இனரீதியாக வேறுபட்ட ஒரு சிறிய இனத்தினர் ஆவர். ஆனால் அவர்கள் அசுர-திராவிட மக்களுடன் கலந்தார்கள், மேலும் அவர்கள் தமிழ் பேசினார்கள். இலங்கையின் பிற குடியிருப்பாளர்கள் திராவிடர்கள்-அசுர மக்கள். இந்த தீவு வில்லவர் வம்சங்களின் அதாவது சேர சோழ பாண்டியன் வம்சங்களின் செல்வாக்கிலும் கட்டுப்பாட்டிலும் இருந்தது. அகஸ்திய முனிவர் தமிழ்நாட்டில் உள்ள அகஸ்திய மலையில் தங்கியிருந்தார். முனிவர் அகஸ்தியர் இயக்கர் மன்னர் இராவணனின் சிற்றப்பா ஆவார்.

    தென்கிழக்கு இலங்கையில் கொமரி என்ற இடம் உள்ளது. மதுரா என்ற இடம் தெற்கு மத்திய பகுதியில் உள்ளது, அதில் இருந்து மதுரா ஓயா (ஆறு) என்று ஒரு ஆறு ஓடத் தொடங்குகிறது. குமரி மற்றும் மதுரா ஆகிய இடங்கள் பிரளயத்தால் அழிக்கப்பட்ட குமரிக்கண்டத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம். இலங்கையின் மிகப்பெரிய நதி மகாவெலி கங்கை என்று அழைக்கப்பட்டது. மகாபலி இந்தியாவின் வில்லவர் மற்றும் பாண மக்களின் மூதாதையர் ஆவார். ஆனால் கங்கை நாகர்கள் வந்தவுடன் அவர்கள் கங்கா என்ற பெயரையும் அதனுடன் சேர்த்துள்ளனர்.

    இலங்கையின் பழைய பெயர் தாம்பபாணி, இது தமிழ்நாட்டில் தாமிரபரணி நதியின் பெயரின் மாறுபாடாகும். கிமு 543 இல் சிங்கள இளவரசர் சிங்கபாஹு இலங்கையை ஆக்கிரமித்தபோது இயக்கர் தலைநகரம் தாம்பபாணியில் இருந்தது. இலங்கையை செரன்தீப் என்றும் அழைத்தனர், இது சேரன்தீவின் மாறுபாடாகும், இது வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் இலங்கையில் சேர மன்னரின் இறையாண்மையைக் குறிக்கிறது . செரன்தீப் என்பது இப்போதும் இலங்கையின் அதிகாரப்பூர்வ பெயர் ஆகும். கிமு 543 இல் முதல் சிங்கள அரசர் விஜய பாகுவின் வருகைக்கு முன்பே, பல நாகர்கள் இயக்கருடன் சேர்ந்து இலங்கையில் வசித்து வந்தனர்.

    நாகத்தீவு

    மூன்றாவது தமிழ் சங்க காலத்தில், இலங்கை நாகநாடு அல்லது நாகத்தீவு என்று அழைக்கப்பட்டது. ஆரம்பகால நாகர்கள் பெரும்பாலும் சிங்களவர்களுக்கு எதிராக இயக்கருடன் கைகோர்த்தனர். கங்கை நதிப் படுகையில் தோன்றிய புத்த மத நாகர்களின் நாடு இலங்கை ஆகும்.

    புத்த மதத்தின் எழுச்சி

    இலங்கைக்கு குடிபெயர்ந்த நாகர்களில் பலர் ஏற்கனவே பௌத்தர்களாக இருந்திருக்கலாம். அசோகரின் சந்ததிகள் மகேந்திரா மற்றும் சங்கமித்ரா ஆகியோர் கி.பி 250 இல் அனுராதபுரத்திலிருந்து ஆட்சி செய்த தேவனாம்பியா திஸ்ஸா (கிமு 250 முதல் கிமு 210 வரை) காலத்தில் இலங்கைக்கு வந்தபோது பெரும்பாலான இலங்கையர்கள் புத்த மதத்திற்கு மாற்றப்பட்டனர்.

    இயக்கர் நாகப் போர்கள்

    பழங்குடி இயக்கர் மக்கள் இறுதியில் தோற்கடிக்கப்பட்டு அடக்கப்பட்டனர். திமிலர் என்று அழைக்கப்படும் இயக்கர் வம்ச மீனவர்களும் தோற்கடிக்கப்பட்டனர். ஆனால் இறுதியாக கி.பி 12 ஆம் நூற்றாண்டில் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த பட்டாணிகளின் உதவியுடன் திமிலர் படுகொலை செய்யப்பட்டனர்.

    கேரளாவுக்கு இயக்கர் இடம்பெயர்வு

    பல இயக்கர்கள் பண்டைய காலத்தில் கேரளாவிற்கு குடிபெயர்ந்தனர். ஈழ இயக்கர் வில்லவர் குலங்களால் நிறுவப்பட்ட சேர வம்சத்தின் துணை குலமாக ஆனார்கள். காக்கநாடு, குமாரநல்லூர் மற்றும் புனலூர் பகுதிகளை இயக்கர்-யக்கர் பிரபுகள் ஆண்டனர். எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள காக்கநாடு கோவிலில் ஈழ இயக்கர் கல்வெட்டுகள் காணப்படுகின்றன.

    ReplyDelete
  21. நாகர்

    அஹிச்சத்திரம் நாகர்கள் (கி.பி. 345)

    கர்நாடகாவில் உள்ள கடம்ப நாட்டில் மயூராஷர்மா என்ற பிராமணர் அரசராகி தனது பெயரை மயூர வர்மா என்று மாற்றிக்கொண்டார். மயூரவர்மா தன்னை பலப்படுத்த ஆரிய பிராமணர்களையும் நாக அடிமை வீரர்களையும் கி.பி 345 இல் உத்தரபாஞ்சால நாட்டின் பண்டைய தலைநகராக இருந்த அஹிச்சத்திரத்திலிருந்து அழைத்து வந்தார். இந்த நாக அடிமைப் போர்வீரர்கள் பந்தரு(பிணைக்கப்பட்ட அடிமைகள்) என அழைக்கப்பட்டனர்.

    இந்த நாகர்கள் நேபாளத்தின் நேவார் மக்களுடன் தொடர்புடையவர்களாக இருக்கலாம். பிற்கால நாயர் கட்டிடக்கலை நேவார் கட்டிடக்கலையை ஒத்திருந்தது. நேவார்களும் முன்னதாகத் தாய்வழி வாரிசுரிமைப் பழக்கத்தை மேற்கொண்டனர். மயூரவர்மா அவர்களை கரையோர கர்நாடகத்தில் குடியேற்றினார். இந்த நாகர்கள் பாண்டா (பாணா) என அழைக்கப்படும் உள்ளூர் பாண குலங்களுடன் கலந்தனர். இறுதியில் இருவரும் பண்ட் என்று அழைக்கப்பட்டனர். நாயர் உட்பட்ட பண்டுகள் மங்களூரில் ஆலுபா ராஜ்ஜியத்திற்கு சேவை செய்து வந்தனர்.

    கங்கர் மற்றும் கொங்கர்

    கங்கர் அல்லது கொங்கர் (கவுடா கவுண்டர்) எனப்படும் கங்கை பகுதி விவசாயிகள் கி.பி இரண்டாம் நூற்றாண்டில் தென்னிந்தியாவிற்கு குடிபெயர்ந்தனர். கவுடா என்பது கங்கைக்கு மாற்று பெயர் ஆகும். தமிழ்நாட்டில் அவர்கள் கொங்கு என்று அழைக்கப்படுகிறார்கள். கி.பி இரண்டாம் நூற்றாண்டில் சேரன் செங்குட்டுவன் கொங்கு மக்களை தோற்கடித்ததாக சிலப்பதிகாரம் குறிப்பிட்டது. கி.பி 350 இல் சமுத்திர குப்தரின் தெற்கு படையெடுப்புக்குப் பிறகு கர்நாடகாவில் மேற்கு கங்கை இராச்சியம் நிறுவப்பட்டது.

    மேற்கு கங்கை மன்னர் அவினிதாவின் ஆட்சியின் போது (கி.பி. 469 முதல் கி.பி. 529 வரை) கொங்கு கங்க வம்சத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது மற்றும் கொங்கு வேளாளர் கிபி ஆறாம் நூற்றாண்டில் கொங்குவில் குடியேறினார்கள். கொங்கு பிரதேசத்தை இழந்த சேர வம்சம் தங்கள் தலைநகரை கரூரில் இருந்து கொடுங்கலூருக்கு மாற்றியது. கொங்கு வேளாளர்கள் இன ரீதியாக கர்நாடகத்தின் கவுடா, கங்காதிகார் என்னும் வொக்கலிகருடன் தொடர்புடையவர்கள். அவர்கள் கர்நாடகாவின் லிங்காயத்துகளுடன் மதபரமாய தொடர்புடையவர்கள். எனவே அவர்கள் லிங்காய கவுண்டர் என்றும் அழைக்கப்படுகிறார்கள். அவர்கள் வெள்ளாளர் மற்றும் பிற நாகர்களுடன் இனரீதியாக தொடர்புடையவர் அல்ல. கொங்கு வேளாளர் சேர வம்சத்தின் வில்லவர்களின் எதிரிகளாயிருந்தனர்.

    நாக்பூர்

    நாக்பூர் நாகர்களின் மையமாக கருதப்படுகிறது. ஆனால் வட இந்தியாவில் நாகர்கள் கீழ் மட்டத்தில் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. வட இந்தியாவில் ஒடுக்கப்பட்ட நாகர் சகாக்களைப் போலல்லாமல், கேரளா மற்றும் தமிழ்நாட்டிலுள்ள நாகர்கள் அரேபியர்கள் மற்றும் டெல்லி சுல்தானகங்களுடன் கூட்டணி வைத்து தங்களை உயர்ந்த நிலைக்கு உயர்த்திக்கொண்டார்கள் ஆனால் உள்ளூர் திராவிட வில்லவர் கலாச்சாரத்தை அழித்தனர்.

    ReplyDelete
  22. நாகர்

    கிபி 1310 இல் மாலிக் காஃபூரின் படையெடுப்பு

    கி.பி 1310 இல், மாலிக் காஃபூர் தலைமையிலான இரண்டு லட்சம் வீரர்களுடன் டெல்லியின் படைகள் பாண்டிய இராச்சியத்தைத் தாக்கியது. திருச்செங்கோட்டைச் சுற்றி பாண்டியப் படைகள் நிலைகொண்டிருந்த சாணாரப் பாளையம் மற்றும் பணிக்கர் பாளையம் ஆகியவை உள்ளன. ஐம்பதாயிரம் வீரர்களைக் கொண்ட ஒரு இராணுவத்தை மட்டுமே கொண்ட பாண்டிய இராச்சியம் தோற்கடிக்கப்பட்டது. பின்வரும் காலகட்டங்களில், டெல்லியின் படைகள் வில்லவர்களை வேட்டையாடி அவர்களை கொன்று குவித்தன. பல வில்லவர்கள் மேற்குத் தொடர்ச்சி மலையில் தஞ்சமடைந்தனர், மற்றவர்கள் இலங்கைக்குச் சென்றனர்.

    டெல்லி சுல்தானகத்துடன் நாகர்களின் கூட்டணி

    களப்பிரர் பரம்பரை கொண்ட பல நாகர்கள் அந்த காலத்தில் இஸ்லாமிய மதத்தவராக மாற்றப்பட்டனர். இதன் மூலம் வெள்ளாளர், கள்ளர் மற்றும் மறவர்கள் சோழர் குல மற்றும் பாண்டிய குல நிலங்களை ஆக்கிரமிக்க முடிந்தது.

    கி.பி 1310 இல் பாண்டிய வம்சம் மாலிக் காஃபூரால் தோற்கடிக்கப்பட்ட பிறகு நாகர்கள், உயர்ந்த நிலைக்கு உயர்த்தப்பட்டனர். சூத்திரர்களான நாகர் பூர்வீக வில்லவர் மக்களை விடவும் உயர்த்தப்பட்டனர். அதுவரை கேரளா மற்றும் தமிழ்நாடு வில்லவர் குலங்களால் ஆளப்பட்டிருந்தது. இதற்குக் காரணம், பெரும்பாலான நாகர்கள் டெல்லியில் இருந்து வந்த படையெடுப்பாளர்களுடன் கூட்டணி வைத்திருந்தனர் மற்றும் பல நாகர்கள் இஸ்லாமிய மதத்தை ஏற்றுக்கொண்டனர். கி.பி 1377 இல் விஜயநகர நாயக்கர் ஆட்சி அமைத்த பிறகு பல கள்ளர்கள் மீண்டும் இந்து மதத்திற்கு மாற்றப்பட்டனர், ஆனால் கள்ளர்கள் விருத்தசேதனம் போன்ற சில இஸ்லாமிய பழக்கவழக்கங்களை தக்கவைத்தனர்.

    மதுரை சுல்தானகம் (கி.பி 1335 முதல் கி.பி 1377 வரை)

    மதுரை சுல்தானகம் 1335 இல் நிறுவப்பட்டபோது கேரளா துளு சாமந்தா-நம்பூதிரி வம்சங்களுக்கு வழங்கப்பட்டது. இது போரில்லாமல் மீண்டும் கேரளா முழுவதும் நாயர்களுக்கு அதிகாரம் அளித்தது. இதனால் நாயர்கள் அரேபியர்கள், டெல்லி சுல்தானகம் மற்றும் மதுரை சுல்தானகங்களின் கூட்டாளிகளாக மாறி, எந்தப் போரிலும் ஈடுபடாமல் கேரளா முழுவதும் தங்கள் அதிகாரத்தை நிறுவினர்.

    தமிழகத்தில் கள்ளர்களும் வெள்ளாளர்களும் மதுரை சுல்தானகத்தின் கூட்டாளிகளாக இணைந்தனர் மற்றும் பலர் இஸ்லாமிய மதத்தை ஏற்றுக்கொண்டனர். அந்தக் காலத்தில் கள்ளர், மறவர், அகம்படியார் மற்றும் வெள்ளாளர் ஆகியோர் வில்லவர் நிலங்களை ஆக்கிரமித்தனர்.

    பரசுராமன்

    நம்பூதிரிகள் பரசுராமன் தனது கோடரியை வீசி கேரளாவை கடலில் இருந்து உருவாக்கி தங்களுக்கு கொடுத்ததாக கூறினார்கள். முந்தைய தமிழ் சேர வம்ச காலத்தில் பரசுராமனைப்பற்றி புத்தகங்கள் அல்லது கல்வெட்டுகளில் குறிப்பிடப்படவில்லை. இது வில்லவர் மக்களின் திராவிட நிலங்களைக் கோருவதற்கான நம்பூதிரிகளின் சூழ்ச்சி ஆகும். திரேதா யுகத்தில் கிமு 2,163,102 முதல் கிமு 867,102 வரை வாழ்ந்த பரசுராமன் ஹைஹயா ராஜ்யத்திற்கு தெற்கேயோ அல்லது நர்மதா நதிக்கு தெற்கேயோ செல்லவில்லை.

    உண்மையில் கேரளா நம்பூதிரிகளுக்கு மாலிக் காஃபூரால்தான் வழங்கப்பட்டது. கி.பி 1120 இல் துளு-நேபாள பிராமணர்களை அரேபியர்கள் கேரளாவிற்குள் அழைத்து வந்தனர். கி.பி 1310 இல் பாண்டிய வம்சத்தை தோற்கடித்த மாலிக் காஃபூர் கேரளாவை நம்பூதிரிகள் மற்றும் சாமந்தர்களின் துளு-நேபாள வம்சங்களின் ஆட்சிக்கு வழங்கினார். இது கேரளாவில் அஹிச்சத்திரம் நாகர்களின் ஆதிக்கத்திற்கு வழிவகுத்தது.


    நான்கு துளு-நேபாள அரசுகள் (1335)

    நான்கு துளு சாமந்த ராஜ்யங்கள் நிறுவப்பட்டன, நம்பூதிரிகளுக்கு இளவரசிகளுடன் சம்பந்தம் செய்வதற்கான உரிமை இருந்தது. இவ்வாறு இந்த வம்சங்கள் துளு சாமந்தா+நம்பூதிரி வம்சங்கள் ஆகின்றன.

    1. கோலத்திரி வம்சம்
    2. சாமுத்திரி வம்சம்
    3. கொச்சி வம்சம்
    4. ஆற்றிங்கல் ராணி வம்சம்

    சிறிய நாயர் ராஜ்ஜியங்கள்

    வள்ளுவநாடு, பாலக்காடு மற்றும் தெக்கும்கூர் அரசர்கள் நாயர்கள் ஆவர்.

    வள்ளுவ கோனாத்திரி

    வள்ளுவ கோனாத்திரி மூப்பில் நாயர் வள்ளுவநாடு மன்னர். ஒவ்வொரு 12 வருடங்களிலும் மாமாங்கம் திருவிழாவின் போது வள்ளுவநாடு நாயர்கள் பட்டாம்பி அருகே உள்ள உற்சவபரம்பில் சாமுத்திரி மன்னரைக் கொல்ல முயன்றனர்.

    தரூர் ஸ்வரூபம்

    தரூர் ஸ்வரூபம் சேகரி வர்மா என்றழைக்கப்படும் நாயர் மன்னர்களால் ஆளப்பட்ட பாலக்காடு இராச்சியம் ஆகும். கி.பி 1335 -க்கு முன்பு அவர்கள் மலப்புறம் மாவட்டத்தின் பொன்னானி தாலுக்கில் உள்ள ஆதவநாட்டில் இருந்தனர்.

    ReplyDelete
  23. நாகர்

    சேர கோவில்களின் ஆக்கிரமிப்பு (கி.பி 1335)

    கி.பி 1335 இல் சேர கோவில்கள் நாகர்களால் ஆக்கிரமிக்கப்பட்டது. கி.பி 1339 க்குப் பிறகு வில்லார்வட்டம் மன்னர் மற்றும் அவரது பணிக்கர்கள் கிறிஸ்தவர்களாக மாறியது கிமு 1340 இல் சேந்தமங்கலம் மீது சாமுத்திரி மற்றும் அரேபியர்களின் தாக்குதலைத் தூண்டியது. பாதி வில்லவர்கள் இலங்கைக்குச் சென்று புத்த மதத்தை ஏற்றுக்கொண்டனர். மீதமுள்ள இந்துக்களில் 45 சதவீதம் பேர் மற்ற மதங்களுக்கு மாறினர். கண்ணகி வழிபாடு உட்பட திராவிட இந்து மதம் முடிவுக்கு வந்தது. உயிருள்ள நாக வழிபாடு உட்பட்ட நேபாள பாணி இந்து மதம் கேரளாவில் தோன்றியது.

    வில்லவர்களின் வெளியேற்றம் (கி.பி 1350)

    வில்லவர்களை தொடர்ந்து டெல்லி ராணுவம் கொன்று குவித்தது. வில்லவர்கள் மேற்குத் தொடர்ச்சி மலையில் தஞ்சமடைந்தனர். செங்கோட்டை அருகே உள்ள சாணார் மலை அடுத்த இருநூறு ஆண்டுகளுக்கு வில்லவர்களால் பயன்படுத்தப்பட்ட ஒரு காட்டுப் புகலிடமாக இருந்தது. கேரளாவில் இருந்து பல வில்லவர் பணிக்கர்கள் இலங்கைக்கு சென்றனர்.

    கி.பி 1350 முதல் 1600 வரை, கேரளாவின் பணிக்கர் படைகள் இலங்கையின் மூன்று ராஜ்யங்களுக்கு அதாவது கோட்டை, கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய ராஜ்யங்களுக்கு சேவை செய்தன. பணிக்கர்கள் புத்த மதத்திற்கு மாறி தங்கள் தனித்துவத்தை இழந்தனர்.

    வஞ்சிபுரா அதாவது கொல்லத்திலிருந்து சென்ற அழகக்கோனார் கொழும்பு கோட்டையைக் கட்டினார். அவர் கொல்லத்தின் பழைய பெயரான கோளம்பம் என்று அதற்குப் பெயரிட்டார். அவரது மகன் கம்போலாவைவின் வீர அழகேஸ்வரர் கி.பி 1387 முதல் 1411 வரை கொழும்புக்கு அருகிலுள்ள கம்போலாவை ஆட்சி செய்தார். அழககோனாரா குடும்பமும் புத்த மதத்தை ஏற்றுக்கொண்டது.

    சதாசிவ பணிக்கன் யானை பயிற்சியாளராக கோட்டே ராஜ்யத்தில் சேர்ந்தார். சதாசிவப்பணிக்கன் கோட்டே அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை மணந்தார். அவரது மகன் செண்பகப்பெருமாள் கோட்டே மற்றும் யாழ்ப்பாண அரசுகளின் ஆட்சியாளரானார், மேலும் கோட்டேயின் புவனேகபாஹு VI (கி.பி. 1469 முதல் கிபி 1477 வரை) என்ற அரச பட்டத்தை ஏற்றுக்கொண்டார்.

    வில்லவர் படைகள் இலங்கைக்கு இடம்பெயர்ந்தது மற்றும் புத்த மதத்திற்கு அவர்களின் மத மாற்றம் இந்தியாவின் வில்லவர் மக்களை மேலும் பலவீனப்படுத்தியது.

    கேரளாவைச் சேர்ந்த தமிழ் வீரர்கள் அவர்களின் தனித்துவமான சிகை அலங்காரத்தின் காரணமாக கொண்டைக்கார தமிழர் என்று அழைக்கப்பட்டனர்.

    கி.பி 1335 க்குப் பிறகு இயக்கர் நிலைப்பாடு

    கேரளாவைச் சேர்ந்த ஈழ இயக்கர் மக்கள் நாக படையெடுப்பாளர்களுடன் சண்டையிடவில்லை, அவர்கள் ஒரு கீழான நிலையை ஏற்றுக்கொண்டனர். வில்லவர் வம்சாவளியைச் சேர்ந்த சிலர், வில்லவர், பணிக்கர்கள் மற்றும் சண்ணார் ஆகியோர் ஈழ இயக்கருடன் சேர்ந்தனர், அவர்கள் அவர்களின் தலைவர்கள் ஆனார்கள். இவை வில்லவர்களை கணிசமாக பலவீனப்படுத்தியது மற்றும் பதிலடி கொடுக்கும் திறனை பறித்தது.

    ReplyDelete
  24. நாகர்

    சுல்தான்கள் மற்றும் ஆங்கிலேயர்களுடன் நாகரின் கூட்டு

    யூசுப் கான் என்ற மருதநாயகம் பிள்ளை

    மருதநாயகம் பிள்ளை (கி.பி 1725 முதல் 1764 வரை) பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் மெட்ராஸ் இராணுவத்தின் வெள்ளாள தளபதி ஆவார். அவர் இஸ்லாம் மதத்தை ஏற்றுக்கொண்டு யூசுப் கான் என்ற பெயரை ஏற்றுக்கொண்டார், இதனால் அவர் சந்தா சாஹிப் என்ற ஆற்காடு நவாப் மற்றும் ஹைதராபாத் நிஜாமின் நம்பிக்கையைப் பெற முடிந்தது.

    யூசுப் கான் ஒரு போர்த்துகீசிய கிறிஸ்துவர் ஆகிய மார்சியா அல்லது மார்ஷா என்ற லூசோ-இந்தியப் பெண்ணை மணந்தார். ஒரு கிறிஸ்தவரை திருமணம் செய்து கொள்வதன் மூலம் அவர் தனது குடும்பத்தை கிறிஸ்தவர் என்று பிரிட்டிஷாரை நம்ப வைத்தார். பிரிட்டிஷார் அவரை மதுரை மற்றும் திருநெல்வேலிக்கு வரி வசூலிப்பவராக நியமித்தனர்.

    ஆனால் மருதநாயகம் பிள்ளை தனது பிரிட்டிஷ் எஜமானர்களுக்கு துரோகம் செய்ய முயன்றபோது அவரை தூக்கிலிட்டனர். பிரிட்டிஷார் அவரது மகனை கிறிஸ்தவராக வளர்த்தனர்.

    வெள்ளுவக்கம்மாரன் நம்பியார் எனப்படும் ஷேக் முஹம்மது ஆயாஸ் கான்

    வெள்ளுவக்கம்மாரன் நம்பியார் (1713 முதல் 1799) இஸ்லாம் மதத்திற்கு மாறிய ஹைதர் அலியின் தளபதி ஆவார். ஆயாஸ் கான் ஒரு ஹைதர் அலியின் தத்தெடுத்த மகன் போல மற்றும் நம்பகமான சேவகரும் ஆனார். சித்ரதுர்காவின் ஆளுநராக ஆயாஸ் கான் நியமிக்கப்பட்டார்.

    1778 இல் ஆயாஸ் கான் பெட்னூர் கோட்டையின் தளபதியாக நியமிக்கப்பட்டார். 1782 ல் ஆயாஸ் கான் ஆங்கிலேயர்களுடன் சதி செய்து பெட்னூர் கோட்டையை பிரிட்டிஷாரிடம் ஒப்படைத்தார். சரணடைந்த பிறகு அவர் பம்பாயில் பிரிட்டிஷ் ஓய்வூதியதாரராக வாழ்ந்தார்.

    திராவிட மலையாளமாகிய மலையாண்மையின் முடிவு

    நாயர்களின் சிறந்த நண்பர்களில் பிரிட்டிஷாரும் இருந்தனர். பெஞ்சமின் பெய்லி மற்றும் ஹெர்மன் குண்டர்ட் போன்ற கிறிஸ்தவ மிஷனரிகள் நாயர்கள் மற்றும் நம்பூதிரிகள் பேசும் கிரந்த-மலையாளத்தைப் படித்தனர், அவை நேபாள சொற்களஞ்சியத்தைக் கொண்டிருந்தன. அவர்கள் கி.பி 1815 முதல் கிறிஸ்தவர்களின் ஒத்துழைப்புடன் நேபாள கலப்பு மலையாளத்தை ஊக்குவிக்கத் தொடங்கினர். அதனுடன் மலையாளத்தின் திராவிட வடிவமாகிய மலையாண்மை மொழி மற்றும் அதில் எழுதப்பட்ட ஆயிரக்கணக்கான புத்தகங்கள் வழக்கற்றுப் போய்விட்டன. கட்டிடக்கலை, கப்பல் கட்டும் கலை, தாவரவியல், மருத்துவம், செய் வினை போன்ற பல்வேறு பாடங்களில் உண்டாயிருந்த திராவிட மொழியாய மலையாண்ம புத்தகங்கள் எதுவும் பிரிட்டிஷ்காரர்களால் மொழிபெயர்க்கப்படவில்லை. நாயர்கள் மற்றும் நம்பூதிரிகளால் பதினாறாம் நூற்றாண்டிலிருந்து
    மந்தார ராமாயணம், பாகவதோ போன்ற துளு புத்தகங்களை மலையாளத்தில் தழுவி மீண்டும் எழுதப்பட்ட புத்தகங்கள் ஆரம்பகால மலையாள புத்தகங்களாகப் போற்றப்பட்டன.

    பல பாலக்காடு நாயர்கள் பிரிட்டிஷாரின் கீழ் உயர் பதவிகளை வகித்தனர் மற்றும் மாலை நேரங்களில் சுதந்திரப் போராளிகளாக இரட்டிப்பாகினர். இதனால் பிரிட்டிஷ்காரர்களுக்கு சுதந்திர இயக்கத்தை திறம்பட கட்டுப்படுத்த முடிந்தது.

    பிரிட்டிஷார் மெட்ராஸின் கிறிஸ்தவக் கல்லூரிகளை தங்கள் நண்பர்களுக்கு கல்வி கற்பதற்காகப் பயன்படுத்தினார்களே தவிர உண்மையான கிறிஸ்தவர்களுக்காக அல்ல.

    சேர சோழ பாண்டியன் ராஜ்யங்களின் உரிமையாளர்களாக வில்லவர் மக்களை பிரிட்டிஷார் ஒருபோதும் அங்கீகரித்ததில்லை. பிரிட்டிஷ் அறிஞர்களும் மிஷனரிகளும் வில்லவர் மக்களை கேலி செய்தனர். நேர்மையற்ற ஆங்கிலேயர்கள் நாகர்களின் தலைவர்களாக இருந்த வாணாதிராயர்களையும் நாயக்கர்களையும் பொலிகர்களையும் பாதுகாத்தனர்.

    எனினும் பிரிட்டிஷார் தமிழ்நாட்டின் கள்ளர் மற்றும் மறவர் ஆகியோரை கிபி 1911 இல் குற்றப் பரம்பரையினராக அறிவித்தனர்.

    ReplyDelete
  25. நாகர்

    சுதந்திரத்திற்கு பிந்தைய காலம்

    கேரளாவைச் சேர்ந்த பெரும்பாலான முதலாளித்துவ நாகர்களும் சுதந்திரத்திற்குப் பிறகு தங்களை பாட்டாளி வர்க்கமாக அறிவித்தனர். இந்த உத்தி மூலமே கோலத்திரி மன்னரின் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு நாயர் கேரளாவின் முதல்வரானார். கேரளாவின் மக்கள் தொகையில் நாயர்கள் சுமார் 14 சதவிகிதம் உள்ளனர். திருவனந்தபுரம் கொல்லம் கோழிக்கோடு மற்றும் கண்ணூர் அவர்களின் கோட்டைகள். ஆனால், திருவனந்தபுரத்தில் நாடார்கள் நாயர்களை விட அதிகமாக உள்ளனர். கண்ணூரில் தீயர்களும், கொல்லத்தில் ஈழவரும் மற்றும் கோழிக்கோட்டில் முஸ்லிம்களும் நாயர்களை விட அதிக எண்ணிக்கையில் உள்ளனர். பிரிட்டிஷ்காரர்கள் வெளியேறிய பிறகு, பல பணக்கார நாயர்கள் வட மைய இந்தி பேசும் மக்களாக மாறினர். அவர்கள் மையத்தில் ஒரு சக்திவாய்ந்த லாபியைக் கொண்டுள்ளனர். அவர்களின் சித்தாந்தம் முற்றிலும் சந்தர்ப்பவாதமானது, அவர்கள் சூழ்நிலைக்கு ஏற்ப இடமிருந்து வலமாக அல்லது வலமிருந்து இடமாக மாறுகிறார்கள்.

    தற்போது பல நாயர்கள் குறிப்பாக மேனன்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியுள்ளனர். 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பல கிறிஸ்தவ நாயர் சுவிசேஷகர்கள், ரெவரெண்ட் போதகர்கள், ஆயர்கள் தோன்றத் தொடங்கினர். இப்போது பல நாயர் கிறிஸ்தவ பாதிரியார்கள் துபாய், கத்தார், இந்தியா, சிங்கப்பூர், இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் வேலை செய்கிறார்கள். அவர்கள் அடிக்கடி தங்கள் சொந்த தேவாலயங்களை நிறுவிக்கொள்கிறார்கள்.

    தமிழ்நாட்டில் நாகர்கள் திராவிடர்களாக வேடமிடுகிறார்கள், உண்மையான திராவிடர்களாகிய வில்லவர்கள் ஓரங்கட்டப்படுகிறார்கள். கள்ளர், மறவர் மற்றும் அகமுடையார் (10%) வெள்ளாளர் (3%) முதலியார் (2%) ஆகியோர் தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 15 சதவீதம் வருகிறது. தமிழ்நாட்டின் பெரும்பாலான அரசியல் தலைவர்கள் அவர்களிடமிருந்து வந்தவர்கள். பெரும்பாலான முக்கிய துறைகளுள்ள அமைச்சர்களும் நாகர் குலத்தைச் சேர்ந்தவர்கள். தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான திராவிட ஆதரவு கட்சிகள் உண்மையில் நாகர் மேம்பாட்டு கட்சிகளாகும்.


    நாக மேம்பாட்டு கட்சிகள்

    திராவிடர்களை ஊக்குவிப்பதாகக் கூறும் பல திராவிடக் கட்சிகள் தமிழ்நாட்டில் உள்ளன. ஆனால் அனைத்து திராவிட கட்சிகளும் மாறுவேடத்தில் இருக்கும் நாக மேம்பாட்டு கட்சிகள் ஆகும். அவர்கள் உண்மையில் கங்கை பகுதியில் இருந்து குடியேறிய நாகர்களைத்தான் ஊக்குவிக்கிறார்கள்.

    ReplyDelete
  26. கடைசி வில்லவர் தலைநகரங்கள்

    கேரள வில்லவர் இடம்பெயர்வு

    துளு படையெடுப்பின் அச்சுறுத்தலை எதிர்கொண்ட
    வில்லவர் கி.பி.1102ல் கொடுங்களூரில் இருந்து கொல்லத்திற்கு குடிபெயர்ந்தனர்.
    1120 இல் பாணப்பெருமாள் என்ற துளு படையெடுப்பாளர் ஒரு நாயர் படையுடன் கேரளா மீது படையெடுத்தார். பாணப்பெருமாள் அரேபியர்களால் ஆதரிக்கப்பட்டார்.

    மாலிக் காஃபூரின் தாக்குதல்

    கி.பி 1310 இல் மாலிக் காஃபூர் பாண்டிய இராச்சியத்தை தோற்கடித்தார். அடுத்த காலகட்டத்தில் வில்லவர் மக்கள் டெல்லி சுல்தானகத்தின் துருக்கிய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டனர். விரைவில் அனைத்து தமிழ் அரசுகளும், சேர சோழ பாண்டிய வம்சங்களும் முடிவுக்கு வந்தன. வில்லவர்கள் தோற்கடிக்கப்பட்ட குலமாக மாறினர்.

    கேரள வில்லவர் கிபி 1314 க்குப் பிறகு மேலும் தெற்கே திருவனந்தபுரம் மற்றும் கன்னியாகுமரிக்கு நகர்ந்து கன்னியாகுமரி மற்றும் சேரன்மாதேவிக்கு அருகிலுள்ள கோட்டையடியில் தங்கள் தலைநகரை நிறுவினார்.
    பண்டைய வில்லவர் தலைநகரான இரணியல் (ஹிரண்ய சிம்ம நல்லூர்) ஆய் வம்சத்தால் ஆக்கிரமிக்கப்பட்டது.

    சேரன்மாதேவி

    சேரன்மாதேவியில் கேரள வில்லவர்கள் மற்றொரு கோட்டையைக் கட்டினார்கள். இது கி.பி 1383 முதல் கிபி 1444 வரை துளு-சேராய் வம்சமான ஜெயசிம்ஹவம்சத்தின் தலைநகராக செயல்பட்டது.

    கோட்டையடி

    வாய்மொழி மரபுகளில் கன்னியாகுமரிக்கு அருகில் இருந்த கோட்டையடி என்னும் சேர கோட்டை இருந்த இடம் குறிப்பிடப்பட்டுள்ளது. கோட்டையடி கடைசி சேரர் கோட்டை. வேணாட்டின் ஆய் அரசரான ராமவர்மா கோட்டையடியைச் சேர்ந்த இளவரசியை மணக்க விரும்பியபோது அவர்கள் மறுத்துவிட்டனர். 'நாடாளும் ராமவன்மனுக்கும் நாடார்கள் குலத்தில் பெண் கொடோம்' என்ற முதுமொழி இந்த நிகழ்வை அடிப்படையாகக் கொண்டது. பிற்காலத்தில் ஆய் வம்சம் வில்லவ நாடார்களின் எதிரியாக இருந்தது.

    நாடாளும் ராமவன்மனுக்கும் நாடார்கள் குலத்தில் பெண் கொடோம்.

    கி.பி.1610 இல் குழித்துறையைத் தலைநகராகக் கொண்டு வேணாட்டை ஆண்ட துளு-ஆய் மன்னன் ராமவர்மா. கி.பி.1610க்குப் பிறகு வேணாடு மன்னர்களால் கோட்டையடி அழிக்கப்பட்டது.

    தமிழ்நாட்டிலிருந்து வேணாட்டுக்கு வில்லவர் இடம்பெயர்வு

    பாண்டியர் தோல்வியைத் தொடர்ந்து ஒரு பாண்டிய குலத்தினர் விஜயநகர நாயக்கர்களின் ஆட்சியை ஏற்று தென்காசியில் இருந்து ஆட்சி செய்யத் தொடங்கினர். மற்ற சோழ மற்றும் பாண்டிய வம்சங்கள் தெற்கு நோக்கி நகர்ந்தன.

    ReplyDelete
  27. கடைசி வில்லவர் தலைநகரங்கள்

    துளு மற்றும் தமிழ் வில்லவர் கலப்பு அரசுகள்

    கி.பி 1383 முதல் 1595 வரையிலான காலப்பகுதியில் தமிழ்ச் சேராய் இராச்சியத்துடன் கலந்த துளு தாய்வழி இராச்சியம் வேணாட்டை ஆண்டது. தமிழ்ச் சேராய் அரசை வில்லவர் வீரர்கள் ஆதரித்தனர்.
    வில்லவர் தலைநகரங்கள் கோட்டையடி, சேரன்மாதேவி, கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம் மற்றும் களக்காடு என்பவை.

    களக்காடு

    களக்காடு என்ற இடத்தில் ஒரு சோழர் குடும்பம் கோட்டை கட்டியது. களக்காடு ஜெயசிம்மவம்சத்தின் தலைநகராக கி.பி.1516 முதல் கி.பி.1595 வரை இருந்தது.

    துளு-சேராய் ஆட்சியாளர் பூதல வீர ஸ்ரீ வீர உதயமார்த்தாண்ட வர்மா (கி.பி. 1516 முதல் கி.பி. 1535 வரை) சோழ இளவரசியை திருமணம் செய்து கொண்டார். தமது தலைநகரத்தை களக்காட்டிற்கு மாற்றினார்.

    பட்டங்கள்
    வென்று மண்கொண்ட பூதல வீரன்
    புலி மார்த்தாண்டன்
    தலைநகரம்: களக்காடு

    சோழ இளவரசி சோழகுலவல்லியை திருமணம் செய்தார்

    களக்காட்டின் மாற்றுப் பெயர் சோழகுலவல்லி புரம். களக்காடு இராச்சியம் முள்ளிநாடு என்று அழைக்கப்பட்டது. பூதல வீர உதயமார்த்தாண்ட வர்மா ஜேதுங்கநாட்டின் (கொல்லம்) ஆட்சியாளராக இருந்தார்.

    பாறை மற்றும் தோவாளை மலைகளுக்கு இடையே உள்ள நாடார்களின் குறைகளை நிவர்த்தி செய்ய கல்வெட்டு வைத்தார்.

    கிறிஸ்தவ பரவருக்கு வரிச் சலுகை கொடுத்தார்.
    நாகர்கோவில் ஜெயின் கோவிலுக்கு மானியம் வழங்கினார்.
    விஜயநகர படைத்தலைவனாகிய சலகராஜா சின்ன திருமலையதேவா பூதலவீரனை தாமிரபரணி கரையில் கிபி 1535 இல் தோற்கடித்தார். அவர் முன்பு வென்ற அனைத்து பாண்டிய பிரதேசங்களையும் சரணடைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, மேலும் விஜயநகரப் பேரரசின் கீழ் அடிமை நிலைக்கு தள்ளப்பட்டார்.

    கல்லிடைக்குறிச்சி மற்றும் அம்பாசமுத்திரம்

    தெற்கே குடியேறிய பாண்டியர்கள் கல்லிடைக்குறிச்சி மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய இடங்களில் கோட்டைகளைக் கட்டினார்கள். கல்லிடைக்குறிச்சி ஜெயசிம்ம வம்சத்தின் தலைநகராக கி.பி 1444 முதல் கிபி 1484 வரை இருந்தது).

    தென்காசி பாண்டியர்கள்

    இருப்பினும் தென்காசி பாண்டியர்கள் வேணாட்டின் துளு-சேராய் ஆட்சியின் ஆக்கிரமிப்பை கடுமையாக எதிர்த்தனர். தென்காசி பாண்டிய நாடு மதுரை நாயக்கர் சாம்ராஜ்யத்தின் அடிமை நாடாக மாறியது

    வில்லவர் ராஜ்ஜியங்களின் முடிவு

    கி.பி 1610 இல் போர்த்துகீசியர்கள் கொச்சி இராச்சியத்தில் உள்ள வெள்ளாரப்பள்ளியிலிருந்து ஒரு பிராமண வம்சத்தை வேணாட்டின் ஆட்சியாளர்களாக உருவாக்கினர்.

    பிராமண ராணி பூரம் திருநாள் ஆற்றிங்கல் நம்பிராட்டியார் அம்மை என்ற திருநாமத்துடன் ஆற்றிங்கல் ராணி ஆனார்.

    வீரரவி வர்ம ரேவதி திருநாள் குலசேகரப் பெருமாள் (கி.பி. 1610 முதல் கி.பி. 1662 வரை) வேணாட்டின் முதல் பிராமண அரசர்.
    கொச்சி வெள்ளாரப்பள்ளியில் இருந்து கொச்சுராமன் உண்ணி பண்டாரத்தில் என்ற பிராமண இளவரசன் கி.பி 1630 இல் மீண்டும் தத்தெடுக்கப்பட்டார்.

    வில்லவர் ராஜ்ஜியங்களின் அழிவு

    கி.பி.1610க்குப் பிறகு வில்லவர் கோட்டைகள் அனைத்தும் அழிக்கப்பட்டன.
    சேர, ஆய், சேர, சோழ, பாண்டிய வம்சங்கள் முடிவுக்கு வந்தன.
    தென்காசி பாண்டிய வம்சமும் விரைவில் முடிவுக்கு வந்தது.

    வில்லவரின் வீழ்ச்சி

    1750 வரை வில்லவர் வீரர்கள் தங்கள் முன்னாள் எதிரிகளான திருவிதாங்கூரின் துளு-நேபாள மன்னர்களுக்கு கூலிப்படையாக பணியாற்றினர். இந்தக் காலகட்டத்திற்குப் பிறகு ஒரு காலத்தில் சேர, சோழ, பாண்டிய அரசுகளை ஆண்ட வில்லவர்கள் கீழ்நிலைக்கு தள்ளப்பட்டனர்.

    ReplyDelete
  28. ஜாட் சமூகத்தில் நாடார் குடும்பப்பெயர்கள்


    வில்லவர் குடும்பப்பெயர்கள்
    வில்லவர்
    வில்லார்
    பில்லவா
    பாணா
    வானவர்
    சாணான்
    சாணார்
    சாண்டார்
    சாண்டான்
    சேர
    சோழர்
    பாண்டிய
    நாடாள்வார்
    நாடார்
    நாடான்
    பணிக்கர்
    சானார்
    சான்றார்


    நவீன ஜாட் குடும்பப்பெயர்கள்

    பிலார் (வில்லார் போன்றது)

    பில்வான் (பில்லவனைப் போன்றது)

    பாணா (பாணா, வானவர்)
    பாண்சி
    பாண்வைட்
    பாஹ்னிவால்

    சாணான் (சாணானைப் போன்றது)
    சாணார் (சாணாரைப் போன்றது)
    சாண்ணா
    சாணவ் (சானாரைப் போன்றது)
    சாண்பால் (சானாவின் மகன்)
    சாணி (சாணரைப் போன்றது)
    சாண்டார் (சாந்தர் போன்றது)
    சாண்டான் (சாந்தர் போன்றது)
    சாண்தர்

    சாண்டாவ்ர் (சாண்டார் போன்றது)
    சந்தாவத் (சான்றார் போன்றது)
    சாண்டெல் (சாண்டார் போன்றது)
    சாண்டேலெ (சாண்டார் போன்றது)
    சாண்டேலியா (சாண்டார் போன்றது)
    சாண்தாரி (சாண்டார் போன்றது)
    சாண்டு (சாண்டார் போன்றது)
    சாண்டிவால் (சாண்டார் போன்றது)
    சந்த்ரவன்ஷி (சந்திர வம்சம்)
    சாந்த்வா


    சாணேகர் (சாணாரைப் போன்றது)
    சாண்ங் (சாணாரைப் போன்றது)
    சாண்ங்கல் (சாணாரைப் போன்றது)
    சாண்ங்கரி (சாணாரைப் போன்றது)
    சாண்ங்கர் (சாணாரைப் போன்றது)
    சாணோ (சாணாரைப் போன்றது)
    சாணோன்
    சாண்வான்
    சௌஹான் (சாணானைப் போன்றது)
    சாண் (சாணாரைப் போன்றது)
    சானா (சானாரைப் போன்றது)
    சான்ப் (சானாரைப் போன்றது)
    சானர் (சானரைப் போன்றது)
    சோன்


    சோள் (வில்லவர் மன்னர்கள்)
    சோள
    சேர

    நாடாள் (நாடாள்வார் போன்றது)
    நாடார் (நாடார் போன்றது)
    நாடார்யா (நாடாரைப் போன்றது)
    நாடாவ்ரி (நாடவர் போன்றது)
    நாதான் (நாடான் போன்றது)
    நாதே (நாடாரைப் போன்றது)
    நாட்ரால் (நாடார் போன்றது)


    பனைச் (பனையர் போன்றது)
    பங்கார் (பணிக்கரைப் போன்றது)
    பாண்ட்ய (பாண்டிய. பாண-வில்லவர் அரசர் )
    பாண்டி
    பாண்டா


    சான் (சான்றாரைப் போன்றது)
    சான்பால் (சானாரின் மகன்)
    ஸாண்டா (சாண்டார்)
    சாண்டாஹ்
    சாண்டேலா
    சாந்தால்
    சாந்தர் (சாந்றாரைப் போன்றது)
    சாந்தாவாலியா
    சாந்தி
    சாந்தோ
    சாந்து
    சாங்காஹ்
    சாங்கா
    சான்ஹி


    மத்திய இந்தியாவில் வசிக்கும் பாணா மற்றும் வில்லவர் மக்களில் சிலர் இந்தோ-சித்தியன் படையெடுப்பாளர்கள் மற்றும் அவர்களின் துணைக்குழு மசாஜெடேயில் இணைந்திருக்கலாம். ஜாட்கள் இந்தோ-சித்தியன் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்பதால் இந்த வில்லவர் குடும்பப்பெயர்கள் அவர்களிடையே காணப்படுகின்றன. ஜாட்டுகள் வெவ்வேறு மதங்களை ஏற்றுக்கொண்டனர், அதாவது இந்துக்கள் (47%), சீக்கியர்கள் (20%) மற்றும் முஸ்லிம்கள் (33%). மேலே உள்ள குடும்பப்பெயர்கள் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த ஜாட் மக்களிடமும் காணப்படுகின்றன.

    ReplyDelete
  29. அர்த்துங்கல் வெளுத்தச்சன் மற்றும் சுவாமி ஐயப்பன்

    17 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் பந்தளத்தின் பாண்டிய இளவரசன் அய்யப்பன் தலைமையில் பல்வேறு இனங்கள் மற்றும் மதங்களைச் சேர்ந்த மக்கள் ஒன்றிணைந்து நாயக்கர் படையைத் தோற்கடித்தனர். மதுரை திருமலை நாயக்கர் கி.பி.1623ல் மறவர் தலைவனும் கொள்ளைக்காரனுமான உதயணன் தலைமையில் ஒரு கொள்ளைப் படையை அனுப்பினார். உதயணனும் அவனது படையும் 17 வருடப் போராட்டத்திற்குப் பிறகு தோற்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டனர்.

    அர்த்துங்கல் தேவாலயம்

    செயின்ட் ஆண்ட்ரூ பேராலயம், அர்த்துங்கல் அரபிக்கடலை நோக்கிய கடற்கரையோரத்தில் கேரளாவின் சேர்த்தலையில் உள்ள அர்த்துங்கலில் அமைந்துள்ளது. அர்த்துங்கல் தேவாலயம் பதினாறாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் போர்த்துகீசியர் காலத்தில் கட்டப்பட்டது. இது 1584 இல் விகார் ஜாகோமோ ஃபெனிசியோ என்ற இத்தாலிய ஜேசுயிட் பாதிரியாரால் மீண்டும் கட்டப்பட்டது. பக்தர்கள் இவரை "அர்த்துங்கல் வெளுத்தச்சன்" என்று அழைத்தனர். திருத்தந்தை. ஜியாகோமோ ஃபெனிசியோ (கி.பி. 1558 - கி.பி. 1632), லத்தீன் மொழியில் இந்து மதத்தைப் பற்றிய கட்டுரைகள் மற்றும் புத்தகங்களை எழுதுவதற்காக இந்து மதத்தைப் படித்த முதல் ஐரோப்பிய மிஷனரி ஆவார். இந்து கலாச்சாரத்திலும், சீரப்பஞ்சிற பணிக்கர்களிடம் கற்றுக்கொண்ட களரிப்பயற்றிலும் ஆர்வம் கொண்டிருந்தார்.

    அர்த்துங்கல் வெளுத்தச்சன்

    அர்த்துங்கல் வெளுத்தச்சன் அர்த்துங்கல் தேவாலயத்தின் விகாரியாக இருந்தபோது, ​​சேர்த்தலையின் லத்தீன் கத்தோலிக்கர்களும் உதயணனுக்கு எதிரான போரில் இணைந்தனர். அர்த்துங்கல் வெளுத்தச்சன் முகம்மாவிலேயே புகழ்பெற்ற சீரப்பஞ்சிற களரியில் பயிற்சி பெற்றவர் என்றும் புகழ் பெற்றவர். அர்த்துங்கல் வெளுத்தச்சன் மற்றும் அவரது லத்தீன் கத்தோலிக்கர்கள் ஐயப்பனின் ஆதரவாளர்கள் என்று நம்பப்பட்டது. ஆனால் திருமலை நாயக்கர் காலத்தில் நடந்த நிகழ்வுகள் அதாவது கி.பி.1623 முதல் 1659 வரையிலான காலகட்டத்தில், அர்த்துங்கல் வெளுத்தச்சன் மிகவும் வயதானவராக இருந்திருக்கலாம். அர்த்துங்கல் வெளுத்தச்சன் கிபி 1632 இல் காலமானார்.

    கி.பி.1632ல் இறந்த அர்த்துங்கல் வெளுத்தச்சன் வாழ்ந்த காலத்தில் ஐயப்பன் சுவாமி ஒரு இளைஞராக இருந்தார். எனவே உதயணனுடன் ஐயப்பன் செய்த போர் கி.பி.1632 முதல் 1640 வரையிலான காலகட்டத்தில் நடந்திருக்கலாம். நாயக்கர் படையெடுப்பிற்கு பதினேழு ஆண்டுகளுக்குப் பிறகு உதயணன் கொல்லப்பட்டதாக வாய்மொழி மரபுகள் கூறுகின்றன.

    புனித செபாஸ்டியன் சிலை

    கி.பி 1747 இல் புனித செபஸ்தியார் சிலை நிறுவப்பட்ட போது, ​​பல உள்ளூர் பக்தர்கள் சிலையை வெளுத்தச்சன் என்றும் அழைக்கத் தொடங்கினர்.

    ஆலங்காடு யோகம்

    ஐயப்ப ஸ்வாமி ஆலங்காடு தலைவர் ஞாலூர் கர்த்தா, காம்பிள்ளி பணிக்கர் மற்றும் முல்லப்பிள்ளி நாயர் ஆகியோர் முன்னிலையில் அர்த்துங்கல் வெளுத்தாவுடன் ஆலுவாவில் உள்ள பெரியாறு கரையில் ஆலங்காட்டு வீரர்களுக்கு உரையாற்றியதாக புராணங்கள் கூறுகின்றன. எருமேலியில் மலைப்பாங்கான நிலப்பரப்பில் ஏறிச் செல்லும் போது 'சரணம் ஐயப்பா' என்று முதன்முதலில் முழக்கமிட்டவர் காம்பிள்ளி பணிக்கர் ஆவார். முதல் வெளிச்சப்பாடு அல்லது தேவ வாக்கு கூறுபவர் இவரே ஆவார். ஆலுவாவில் உள்ள பாரூர்கவலயிலிருந்து இடதுபுறம் போகும்போது ஆலங்காட்டுக்கு அருகில் உள்ள இடம் காம்பிள்ளி.

    அம்பலப்புழா யோகம்

    அம்பலப்புழா பழமையான பாண்டிய துறைமுக நகரமான புறக்காடு அருகே உள்ளது. பழங்காலத்தில் வேம்பநாட்டுக் காயலுக்கு தெற்கே உள்ள அனைத்து பகுதிகளும் பாண்டிய வம்சத்தின் கீழ் இருந்தன. கி.பி 77 இல் முசிறிக்குச் சென்ற பிளினி, மோதுராவின் மன்னன் பாண்டியோன் ஆட்சி செய்த நகரமான பரேகே-புறக்காட்டில் மிளகு வாங்க உள்ளூர் மக்களால் வற்புறுத்தப்பட்டார்.

    எருமேலியில் வாவர் தலைமை தாங்கிய ஐயப்பன் படையில் சேர்வதற்காக இங்கிருந்து ஒரு பணிக்கர் படை புறப்பட்டது. அந்த நிகழ்வை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் எருமேலியில் அம்பலப்புழா யோகம் பக்தர்களால் பேட்ட துள்ளல் என்ற புனித சடங்கு நடனம் ஆடப்படுகிறது.

    ReplyDelete
  30. அர்த்துங்கல் வெளுத்தச்சன் மற்றும் சுவாமி ஐயப்பன்

    பாண்டியன் வனவாசம்

    திருமலை நாயக்கர் (கி.பி. 1723 முதல் 1759 வரை) ஆட்சிக்கு வந்தபோது, ​​மதுரையிலிருந்து அனைத்து பாண்டிய குடும்பங்களையும் நாடு கடத்தினார் என்று பொதுவாக நம்பப்படுகிறது. சிலர் வேணாட்டில் உள்ள கல்லிடைக்குறிச்சி மற்றும் அம்பாசமுத்திரத்தில் குடியேறினர். ஆனால் பூஞ்சாறு மற்றும் பந்தளம் ஆகிய இடங்களில் குடியேறிய பாண்டியக் குடும்பங்கள் கி.பி 1610 ஆம் ஆண்டிலேயே குடியேறியிருக்கலாம்.

    பாண்டிய இளவரசி மாயாதேவிக்கு பிறந்த அய்யப்பன், 1632 இல் இறந்த அர்த்துங்கல் வெளுத்தச்சன் வாழ்ந்த காலத்தில் இளைஞராக இருந்ததால், பாண்டிய குடியேற்றம் கி.பி 1610 இல் நிகழ்ந்திருக்கலாம்.

    பணிக்கர்கள்

    பணிக்கர்கள் தற்காப்புக் கலைப் பயிற்சியாளர்கள், அவர்கள் போர் வீரர்களுக்குப் பயிற்சி அளித்தனர். ஒவ்வொரு பணிக்கரும் ஒரு சிறிய படையை பராமரித்து, அவர்கள் சேர மற்றும் தொடர்புடைய பாண்டிய வம்சங்களை ஆதரித்தனர். பணிக்கர் என்பவர்கள் தமிழ் வில்லவர் மக்களின் துணைக்குழுக்கள் ஆவர்.

    ஆனால் கி.பி 1310 இல் மாலிக் காஃபூரின் படையெடுப்பிற்குப் பிறகு, மற்றும் பாண்டிய வம்சத்தின் தோல்விக்குப் பிறகு கி.பி 1335 இல் கேரளாவில் துளு தாய்வழி அரசுகள் நிறுவப்பட்டன. அதன் பிறகு சாமந்த க்ஷத்திரியர்கள், துளு பிராமண நம்பூதிரிகள் மற்றும் நாயர்களால் கேரளா ஆட்சி செய்யப்பட்டது. இக்காலத்தில் பல பணிக்கர்களும் கேரளாவை விட்டு வெளியேறினர். சிலர் இலங்கை சென்றனர். சிலர் ஈழவர்களுடனும், மற்றவர்கள் போர்த்துகீசிய இராணுவத்துடனும் பின்னர் சிரியன் கிறிஸ்தவர்களுடனும் இணைந்தனர்.

    சீரப்பஞ்சிற பணிக்கர்கள்

    சேர்த்தலையில் உள்ள முகம்மாவில், சீரப்பஞ்சிற களரி அமைந்திருந்தது. சீரப்பஞ்சிற பணிக்கர்கள் ஈழவர்களுடன் இணைந்திருந்தார்கள். இந்த சீரப்பஞ்சிற களரியில் ஜேசுயிட் பாதிரியார் அருட்தந்தை ஜாகோமோ ஃபெனிசியோ, என்ற அர்த்துங்கல் வெளுத்தச்சன் களரிப்பயற்றில் பயிற்சி பெற்றார். சீரப்பஞ்சிற களரியில் இருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் அர்த்துங்கல் தேவாலயம் இருந்தது. அய்யப்பன் சீரப்பஞ்சிற களரியில் தற்காப்பு கலை பயிற்சி பெற்றவர்.
    அடுத்த சீரப்பஞ்சிற பணிக்கரின் மகள் லளிதா பிற்காலத்தில் மாளிகப்புறத்தம்மா என்று அழைக்கப்பட்டார்.

    பாண்டிய பிரதேசங்கள்

    17 ஆம் நூற்றாண்டில், மத்திய கேரளா தாய்வழி துளு ஆட்சியாளர்களால் ஆளப்பட்டாலும், ஆலங்காடு, அம்பலப்புழா மற்றும் பெரியாற்றின் கரையோரம் இருந்த பல பணிக்கர்களும் பந்தளத்தின் பாண்டியர்களுக்கு விசுவாசமாக இருந்தனர். மத்திய கேரளாவில் பாண்டியர்களின் பிரதேசங்கள் பந்தளம், மாவேலிக்கரை மற்றும் காஞ்சிரப்பள்ளி பகுதி ஆகும். மேலும் இந்த பாண்டிய பிரதேசம் பாண்டியன் பதிவுகளில் கேரளசிங்க வளநாடு என்று அழைக்கப்பட்டது.

    கேரளாவில் பாண்டியரின் குறுநாடுகள்
    1. மாறநாடு கொல்லம்
    2. பந்தளம்
    3. அம்பலபுழா-புறக்காடு
    4. நிரணம்-கோட்டயம்
    5. ஆலங்காடு

    நாயக்கர் தாக்குதல்

    திருமலை நாயக்கர் 1623 முதல் 1630 கி.பி.க்கு இடைப்பட்ட காலத்தில் கேரள பாண்டியர்களுக்கு எதிராக மறவப்படையுடன் கொள்ளையனாக இருந்த உதயணன் என்ற மறவ தலைவனை கேரளாவிற்கு அனுப்பினார். மூணாறு அருகே கரிமலையில் உதயணன் கோட்டை கட்டினான். உதயணன் அருகில் இருந்த இடங்களில் கொள்ளையடிக்க ஆரம்பித்தான். உதயணன் பாண்டிய இளவரசி மாயாதேவியைக் கடத்தினான் ஆனால் அவள் மீட்கப்பட்டாள். ஆனால் பல வருடங்களுக்குப் பிறகுதான் உதயணன் தோற்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டான்.

    நாயக்கர் படையெடுப்பு பற்றிய அச்சம் உதயணனுக்கு எதிராக பலதரப்பட்ட மக்கள் ஒன்றிணைவதற்கு வழிவகுத்தது.

    பாண்டியன் இளவரசியின் மீட்பு

    பாண்டிய மன்னர் சீரப்பஞ்சிற பணிக்கர் உதவியுடன் தன் சகோதரியை மீட்டு சீரப்பஞ்சிற தறவாடு வீட்டில் தங்க அனுப்பினார். பாண்டிய இளவரசி சீரப்பஞ்சிற பணிக்கரின் மருமகனை மணந்திருந்தார் என்பது ஒரு பார்வை. அவர்களுக்குப் பிறந்த மகன்தான் ஐயப்பன்.
    பணிக்கர் களரியாக இருந்த ஆலங்காடு யோகம், ஐயப்பனின் தந்தையின் இடமான பித்ருஸ்தானமாகவும் கருதப்படுகிறது. சீரப்பஞ்சிற பணிக்கரின் சகோதரியின் கணவர் ஆலங்காடு பணிக்கர் குடும்பத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம்.

    பொதுவாக பணிக்கர் வில்லவர் வம்சங்களுக்கு சேவை செய்த தற்காப்பு பிரபுக்கள் மற்றும் ஒப்பீட்டளவில் குறைந்த அந்தஸ்தால் இளவரசிகளை அவர்கள் திருமணம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. ஆனால் பதினேழாம் நூற்றாண்டில் பாண்டிய வம்சமே கேரளாவில் தப்பியோடியவர்கள் மற்றும் அவர்கள் பாதுகாப்பிற்காக பணிக்கர் படைகளை நம்பியிருந்தனர்.

    ReplyDelete
  31. அர்த்துங்கல் வெளுத்தச்சன் மற்றும் சுவாமி ஐயப்பன்

    ஒத்திசைவான நம்பிக்கை

    ஆனால் அய்யப்பன் மிகவும் இளமையாக இருந்த அந்த சகாப்தத்தில், ஐயப்பனும் புனித செபஸ்தியாரும் சகோதரர்கள் என்று மக்கள் நம்பத் தொடங்கினர்.

    செபஸ்தியார் ஒரு ரோமானிய அதிகாரி, அவர் கிறித்துவ மதத்தைத் தழுவினார், அவர் பிரிட்டோரியன் காவலர்களின்  கேப்டனாக இருந்தார், அவர் ரோமானிய பேரரசர் டியோக்லெஷியனை (கி.பி. 284 முதல் 305 வரை) கேலி செய்து அவமானப்படுத்தினார். இது புனித செபஸ்தியார் மீது அம்புகளை எய்து மரணதண்டனை நிறைவேற்ற வழிவகுத்தது. புனித செபஸ்தியார் அனைத்து கத்தோலிக்கர்களுக்கும் பிரபலமான புனிதர் ஆனார்.

    அர்த்துங்கல் தேவாலயத்தில் மிலனில் செதுக்கப்பட்ட புனித செபஸ்தியாரின் சிலை கி.பி 1647 இல் நிறுவப்பட்டது.

    போர்த்துகீசிய சகாப்தத்தில் ஜேசுயிட் பாதிரியார்கள் உள்ளூர் இந்து மற்றும் திராவிட பழக்க வழக்கங்களை நிராகரிக்கவில்லை. கிறிஸ்தவ தேவாலயங்களிலும் வெண்கலக் கொடிக் கம்பங்கள் இருந்தன, அதில் கொடிகள் ஏற்றப்பட்டன. புனித செபாஸ்டியன் தேவாலயங்களில் இன்றும் வருடாந்திர திருவிழாவின் போது தேவாலயத்தின் மீது இரண்டு வெள்ளை பருந்துகள் பறக்கும் தோற்றத்திற்காக பலர் காத்திருக்கிறார்கள். இது கேரள கிறிஸ்தவர்களால் பின்பற்றப்படும் ஒரு இந்து வழக்கம் ஆகும்.

    ஐயப்பன் பக்தர்கள்

    பல ஐயப்பன் பக்தர்கள் ஒவ்வொரு ஆண்டும் புனித யாத்திரையின் ஒரு பகுதியாக அர்த்துங்கல் பசிலிக்காவிற்கு வருகை தருகின்றனர். அய்யப்பன் புனித செபஸ்தியாருடன் மிகவும் நட்பாக பழகியதே இதற்குக் காரணம். அவர்கள் மிகவும் நெருக்கமாக இருந்ததால் அவர்கள் சகோதரர்களாக கருதப்பட்டனர்.1647 ஆம் ஆண்டு அர்த்துங்கல் தேவாலயத்தில் பளிங்கு கல் செபஸ்தியார் சிலை நிறுவப்பட்டது. எனவே புனித செபஸ்தியாரோடுள்ள சுவாமி ஐயப்பனின் நட்பு அந்த காலத்திலேயே தொடங்கியிருக்கலாம்.

    சுவாமி அய்யப்பன் கி.பி 1647 இல் அர்த்துங்கல் தேவாலயத்தில் உள்ள புனித செபஸ்தியார் சிலையை பார்வையிட்டிருக்கலாம். இந்த நிகழ்வு சுவாமி ஐயப்பனும் புனித செபஸ்தியாரும் சகோதரர்கள் என்ற புராணத்தை உருவாக்கியிருக்கலாம். அர்த்துங்கல் லத்தீன் கத்தோலிக்கர்கள் அய்யப்பனின் வலுவான ஆதரவாளர்களாக இருந்தனர்.

    அர்த்துங்கல் தேவாலயத்தில் சபரிமலை பக்தர்கள் வழிபாடு செய்கின்றனர். அவர்கள் யாத்ரீகர்களின் கழுத்தில் அணிந்திருக்கும் முத்ரா என்ற புனித சங்கிலி மாலையை அகற்றுகிறார்கள். தேவாலயத்திற்கு அருகில் உள்ள இரண்டு குளங்களில் ஒன்றில் பக்தர்கள் புனித நீராடுகின்றனர்.

    மத நல்லிணக்கம்

    அய்யப்பனால் நிறுவப்பட்ட மத மற்றும் இன நல்லிணக்கத்தால் அர்த்துங்கல் தேவாலயத்திலும் வாவர் பள்ளியிலும் பக்தர்கள் வழிபட முடிந்தது. மலை அரையர், பணிக்கர், லத்தீன் கத்தோலிக்கர்கள் மற்றும் முஸ்லிம்கள் அனைவரும் ஐயப்பனை ஆதரித்து மரியாதையுடன் நடத்தப்பட்டனர்.

    அசல் பந்தளம் தமிழ் வில்லவர் பாண்டிய வம்சம் 1700 களின் பிற்பகுதியில் முடிவுக்கு வந்திருக்கலாம். அதன் பிறகு பந்தளம் பாண்டியன் பிரதேசம் ராஜா என்ற பட்டத்துடன் பாண்டியர்களாக வேடமணிந்த பார்கவ குலத்தைச் சேர்ந்த நம்பூதிரிகளின் குடும்பத்தால் கைப்பற்றப்பட்டது.

    பூஞ்சார் பாண்டிய வம்சம்

    1700களில் குருவாயூர் அருகே உள்ள வெங்கிடங்குவில் இருந்து தமிழ் பூஞ்சார் பாண்டியன் வம்சத்திற்குப் பதிலாக சார்க்கரா கோவிலகம் என்ற துளு பிராமண போற்றி குடும்பம் வந்தது. பாண்டிமண்டலம் உடைய குலசேகரப் பெருமாள் என்ற திருநாமத்துடன் துளு பிராமண வம்சத்தினர் பூஞ்சாரை ஆண்டனர்.

    பிராமண பந்தளம் மற்றும் பூஞ்சார் வம்சங்கள் இரண்டும் தாய்வழி வம்சாவளியைக் கடைப்பிடித்தன.

    அசல் பாண்டியர்கள் திராவிட தமிழ் வில்லவர் வம்சத்தைச் சேர்ந்தவர்கள், அவர்கள் வில்லவர், வானவர், மலையர் மற்றும் மீனவர் குலங்களால் ஆதரிக்கப்பட்டனர்.

    பாண்டிய வம்சத்திற்குப் பின் வந்த ஆரிய நம்பூதிரி பாண்டியர்கள் அஹிச்சத்திரத்திலிருந்து குடிபெயர்ந்த நேபாள வேர்களைக் கொண்ட துளு பிராமணர்கள் ஆவர்.

    பத்தொன்பதாம் நூற்றாண்டிலிருந்து நம்பூதிரி பாண்டியர்கள் காலத்தில் சீரப்பஞ்சிற பணிக்கர்களும் மலை அரையர்களும் சபரிமலை கோயிலில் தங்களின் முதன்மையான இடத்தை இழந்தனர். பக்தர்கள் இனம், மதம், பாலினம் மற்றும் வயது அடிப்படையில் பாகுபாடு காட்டப்பட்டனர்.

    ReplyDelete
  32. அர்த்துங்கல் வெளுத்தச்சன் மற்றும் சுவாமி ஐயப்பன்

    வாவர் பள்ளி

    அய்யப்பனின் நெருங்கிய நண்பரான வாவர் பாத்தும்மா - செய்தாலி தம்பதியரின் மகன். கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள எருமேலி நைனார் ஜும்மா மசூதிக்கு ஐயப்ப பக்தர்கள் வருகை தருவது வழக்கம். இந்த பள்ளிவாசல் வாவரின் மசூதியாக கருதப்படுகிறது. அவர்கள் மசூதியின் தொழுகை மண்டபத்திற்குள் நுழையாமல் மசூதியையும், ஓய்வெடுப்பதற்குரிய இடத்தையும் சுற்றி வருகின்றனர். இங்கு பக்தர்கள் தேங்காய் உடைத்து வழிபாடு செய்யவும், காணிக்கை, பிரசாதம் வழங்கவும் அனுமதிக்கப்படுகின்றனர்.

    சபரிமலையில் வாவர்நடை என்று அழைக்கப்படும் மற்றொரு வழிபாட்டுத்தலம் உள்ளது, அங்கு வாவர் சிலை இல்லை, ஆனால் செதுக்கப்பட்ட கருங்கல் பலகை மற்றும் ஒரு பழைய வாள் மட்டுமே உள்ளன. வாவர் ஒரு முஸ்லிமாக இருந்ததால் ஒரு முஸ்லிம் மதகுரு தினசரி தொழுகை நடத்துகிறார். இங்கும் ஐயப்ப பக்தர்கள் பிரார்த்தனை செய்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் சந்தனக்கூடம் திருவிழா பேட்டத்துள்ளல் எனப்படும் சடங்கு நடனத்தின் முன்னோடியாக நடத்தப்படுகிறது. எருமேலி நைனார் ஜும்மா மஸ்ஜித் 1970 களில் கோபாலகிருஷ்ணன் என்ற இந்து கட்டிடக் கலைஞரால் மீண்டும் கட்டப்பட்டது.

    மணிகண்டன்

    மணிகண்டன் மலை அரையர் குலத்தைச் சேர்ந்தவர். கரிமலை அரையன் கந்தன் மற்றும் அவரது மனைவி கருத்தம்மா ஆகியோரின் மகன் மணிகண்டன் என்று மலை அரையர்கள் கூறுகின்றனர். மணிகண்டன் பாண்டிய மன்னன் 1610 களில் கொள்ளையர்களிடமிருந்து வந்தபோது அவரைப் பாதுகாத்தார். மணிகண்டன் பாண்டிய இளவரசி மாயாவதியை உதயணனிடம் இருந்து மீட்டார். மலை அரையர்கள் மணிகண்டனுக்கு சன்னதி அமைத்து வழிபட்டனர். பிற்காலத்தில் அய்யப்பன் மணிகண்டனின் அவதாரமாகக் கருதப்பட்டு, மலை அரையர்களால் வழிபடப்பட்டார்.

    கி.பி 1623 வாக்கில் பல்வேறு இனத்தவர்களின் உதவியோடு உதயணனை மணிகண்டன் தோற்கடித்தார். மணிகண்டன் தலைமையிலான படைகள் பாண்டிப்படை, ஆலங்காட்டுப்படை, அம்பலபுழப்படை, சீரப்பஞ்சிறப்படை, மல்லன், வில்லன், வலியக்கடுத்தா, கொச்சுகடிதா, வாவர், நஸ்ரானிகள், அர்த்துங்கல் வெளுத்தச்சன் என்ற ஜாகோமோ ஃபெனிசியோ என்ற ஒரு இத்தாலிய ஜெசுயிட் பாதிரியார் போன்றவர்கள்.

    வலிய கடுத்த ஸ்வாமி

    அய்யப்பனின் உதவியாளரான வலிய கடுத்த ஸ்வாமிக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சிறிய சன்னதி புனித படிகளின் இடது பக்கத்திற்கு அருகில் அமைந்துள்ளது. வலிய கடுத்தா ஒரு மலை அரையர் பழங்குடித் தலைவர் ஆவார், அவர் நாயக்கர் இராணுவத்திற்கு எதிராக மலை அரையர் படைகளை வழிநடத்தினார்.

    மலை அரையர்

    மலை அரையர், சேர வம்சத்தை ஆதரித்த மூன்று பெரிய வில்லவர் பழங்குடியினரில் ஒன்றான மலையர் குலத்துடன் தொடர்புடையவராக இருக்கலாம். ஐயப்பனின் முக்கிய ஆதரவாளர்களாக இருந்த மலை அரையர் 1904 ஆம் ஆண்டு வரை ஐயப்பன் கோவிலின் பூசாரிகளாகவும் உரிமையாளராகவும் இருந்தனர். இருபதாம் நூற்றாண்டு வரை ஒத்திசைவான நம்பிக்கை மற்றும் மத சகிப்புத்தன்மை நிலைத்திருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.

    1800களில் பந்தளம் நம்பூதிரி பாண்டிய மன்னர்களால் மலை அரையர்கள் தங்கள் நிலங்களில் இருந்து வெளியேற்றப்பட்டனர். சபரிமலை மற்றும் சபரிமலையைச் சுற்றியுள்ள பதினேழு மலைகளிலிருந்து மலை அரையர்கள் வெளியேற்றப்பட்டனர்.

    மலை அரையர்கள் கூலியின்றி ஏலக்காயை மலைகளில் இருந்து சமவெளிக்கு கொண்டு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டனர். கி.பி 1856 இல் மலை அரையர்கள் நாயர் அரசாங்க அதிகாரிகளுக்கு எதிராக கிளர்ச்சி செய்து தாக்கினர்.

    மலை அரையர்களின் கிறிஸ்துவ மதமாற்றம்

    மலை அரையர்களை துன்புறுத்தியது பத்தொன்பதாம் நூற்றாண்டில் அவர்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மாற வழிவகுத்தது. மலை அரையர்களில் பாதி பேர் கிறிஸ்துவ மதத்திற்கு மாறினார்கள். ஸிஎம்எஸ் மிஷனரி தந்தை ஹென்றி பேக்கர் 1840 முதல் 1862 வரை அவர்களிடையே பணியாற்றினார். தந்தை.ஹென்றி பேக்கர், ஹில் அரியன்ஸ் ஆஃப் திருவாங்கூர் என்ற புத்தகத்தை எழுதினார்.1879 இல் மலை அரையர்களில் சுமார் 2000 கிறிஸ்தவர்கள் இருந்தனர்.

    திராவிடப் பாணி வழிபாடு

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் கி.பி.1904 வரை திராவிட வழிபாட்டு முறைகளை மலை அரையர் பூசாரிகள் நடத்தி வந்தனர். அவர்களின் முக்கிய வழிபாடு தேன் மற்றும் நெய் கொண்டு அபிஷேகம். சமீப காலம் வரை மலை அரையர்களின் "தேனாபிஷேகம்" வழிபாடு அனுமதிக்கப்பட்டது. சில தசாப்தங்களுக்கு முன், தந்திரிகள் இந்த வழிபாட்டை நிறுத்தினர்.

    ReplyDelete
  33. அர்த்துங்கல் வெளுத்தச்சன் மற்றும் சுவாமி ஐயப்பன்

    மாலிக் காஃபூரின் படையெடுப்பு

    கி.பி 1310 இல் டெல்லி சுல்தானகத்திலிருந்து படையெடுப்பாளராக இருந்த மாலிக் காபூருடனான போரில் பாண்டிய வம்சத்தின் தோல்விக்குப் பிறகு அனைத்து தமிழ் அரசுகளும் முடிவுக்கு வந்தன. வில்லவர்கள் டெல்லி ராணுவத்தால் மொத்தமாக படுகொலை செய்யப்பட்டனர். மலபாரின் துளு படையெடுப்பாளர்கள் அதாவது சாமந்தர், நாயர் மற்றும் நம்பூதிரிகளுக்கு டெல்லி சுல்தானியம் மற்றும் மாலிக் காஃபூர் ஆகியோர் கேரளாவின் ஆதிக்கத்தை அளித்தனர்.

    1335 ஆம் ஆண்டு கேரளா முழுவதும் துளு சாமந்தர்கள் மற்றும் நம்பூதிரிகளால் துளு-நேபாள தாய்வழி அரசுகள் நிறுவப்பட்டன. துளு-நேபாளத் தாய்வழி சவர்ண வம்சங்கள் அரேபியர்கள் மற்றும் துருக்கியர்களால் ஆதரிக்கப்பட்டன.

    முந்தைய பிராமணர்கள்

    பிற்கால சேர வம்ச காலத்தில் (கி.பி. 800 முதல் கி.பி. 1120 வரை) பிராமணர்கள் பட்டர், பட்டாரர், பட்டாரகர், பட்டாரியர், பழாரர், சாத்திரர், நம்பி, உவச்சர் போன்ற பெயர்களால் அறியப்பட்டனர். கி.பி.1335க்கு முந்தைய தமிழ்ப் பதிவுகள் எதிலும் நம்பூதிரிகள் குறிப்பிடப்படவில்லை.

    1310 இல் மாலிக் காஃபூரின் தாக்குதலுக்குப் பிறகு முந்தைய தமிழ் பிராமணர்கள் அனைவரும் மர்மமான முறையில் காணாமல் போனார்கள்.

    பரசுராமர் கேரளாவின் மீது தங்களுக்கு அதிகாரம் அளித்ததாக நம்பூதிரிகள் கூறுகின்றனர். உண்மையில் 1310 ஆம் ஆண்டு துளுவ பிராமண நம்பூதிரிகளுக்கும் துளு சாமந்தர்களுக்கும் மாலிக் காஃபூரால்தான் கேரளாவின் மேலாதிக்கம் வழங்கப்பட்டது.

    வில்லவர்களின் வீழ்ச்சி

    இது கேரளாவில் திராவிட தமிழ் வில்லவர் வம்சங்களான சேர மற்றும் பாண்டிய வம்சங்களை அடக்கப்படுவதற்கு வழிவகுத்தது. பெரும்பாலான திராவிட மலையாளிகள் ஆரிய-நாக படையெடுப்பாளர்களால் அவர்ணர் என்று முத்திரை குத்தப்பட்டனர். நம்பூதிரிகள் துளு-நேபாள பிராமணர்கள், அவர்கள் பாண்டிய வம்சத்தின் பரம எதிரிகளாக இருந்தனர்.

    நம்பூதிரி பாண்டிய வம்சம்

    தற்போதைய பந்தளம் நம்பூதிரி பாண்டியன் வம்சம் ஆரிய பிராமண பார்கவ குலத்தைச் சேர்ந்தது, அவர்கள் உபநயனத்தை நடத்துபவர்கள், சைவ உணவு உண்பவர்கள், தமிழ் ஒருபோதும் பேசாதவர்கள்.

    சபரிமலை கோயிலும் பந்தளம் பாண்டிய ராஜ்ஜியமும் திராவிட வில்லவர் மக்களுக்கு சொந்தமானது ஆனால் அவர்களின் பாரம்பரியம் இப்போது புறக்கணிக்கப்பட்டுள்ளது.

    தீ விபத்து

    1950ல் சபரிமலை கோவிலில் மீண்டும் ஒரு பெரிய தீ விபத்து ஏற்பட்டது. அய்யப்பன் சிலை தீயில் எரிந்து சேதமானது.

    புதிய அய்யப்பன் சிலை

    1936-ல் சென்னை மாகாண முதல்வராக இருந்த சர் பொன்னம்பல தியாக ராஜன் என்கிற பி.டி.ராஜன், பழமையான ஐயப்பன் சிலைக்குப் பதிலாக, தற்போதைய பஞ்சலோக ஐயப்பன் சிலையை சபரிமலை கோயிலுக்கு பரிசாக அளித்தார். ஆனால், சபரிமலை கோவிலுக்கு திராவிடத் தொடர்பை யாரும் விரும்பாததால், இது மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது

    ஐயப்பன் புராணத்தின் காலம்

    சுவாமி ஐயப்பன் புராணத்தின் காலம் 1623 இல் திருமலை நாயக்கரின் படையெடுப்பில் தொடங்கி கி.பி 1647 இல் புனித செபஸ்தியாரின் பளிங்கு சிலை நிறுவப்பட்டதில் முடிவடைகிறது.

    ReplyDelete
  34. பந்தளத்தின் வில்லவர் பாண்டியர்கள் மற்றும் நம்பூதிரி பாண்டியர்கள்

    தமிழ் பாண்டிய ஆட்சியின் முடிவு

    1700களில் பந்தளத்தின் அசல் தமிழ் வில்லவர்-மீனவர் பாண்டியன் வரிசை முடிவுக்கு வந்தது. தமிழ் பாண்டிய வம்சம் தமிழ் வில்லவர்-மீனவர் மக்களால் நிறுவப்பட்டது. தமிழ் பாண்டிய இராச்சியம் வில்லவர், மலையர், வானவர் மற்றும் மீனவர் குலங்களால் ஆதரிக்கப்பட்டது.

    பந்தளம் நம்பூதிரி பாண்டியன் வம்சம்

    1700 களின் பிற்பகுதியில் நம்பூதிரி வம்சத்தினர் பந்தளம் பாண்டிய பிரதேசங்களை ஆக்கிரமித்து தங்களை பாண்டியர்கள் என்று அழைக்கத் தொடங்கினர். பந்தளத்தின் நம்பூதிரி பாண்டிய வம்சத்தினர் தங்களை "ராஜா" என்று அழைத்துக் கொள்கின்றனர். நம்பூதிரி பாண்டியர்கள் பார்ப்பனர்களின் பார்கவ குலத்தைச் சேர்ந்தவர்கள். கேரளாவின் மற்ற துளு-நேபாள வம்சங்களைப் போலவே மன்னர்கள் தங்கள் பெயருக்கு முன் பிறந்த நட்சத்திரத்தை சேர்க்கிறார்கள் உதாரணமாக "அஸ்வதி திருநாள்" கோதவர்மா. பந்தளத்தைச் சேர்ந்த நம்பூதிரி பாண்டியர்கள் சுத்த சைவ உணவு உண்பவர்கள்.
    நம்பூதிரி பாண்டியர்கள் பதினோரு வயதில் உபநயனம் செய்து வாழ்நாள் முழுவதும் புனித நூலை (பூணூல்) அணிவார்கள்.
    தற்போதைய பந்தளம் பாண்டியர்களின் தந்தை, தாத்தா மற்றும் அவர்களின் முன்னோர்கள் அனைவரும் நம்பூதிரி பிராமணர்கள் ஆவர். நம்பூதிரி பாண்டியர்கள் பாண்டியர்களாக வேடம் போடுகிறார்கள் ஆனால் அவர்கள் இனரீதியாக மதுரை பாண்டிய வம்சத்துடன் தொடர்புடையவர்கள் அல்ல.

    வில்லவர் பாண்டியன் மற்றும் நம்பூதிரி பாண்டியன்

    வில்லவர் பாண்டியன்

    1. திராவிடர்கள்

    2.கொற்கை மற்றும் மதுரையை சேர்ந்த வில்லவர்-மீனவர் மக்கள்

    3. பட்டங்கள் மாறவர்மன், சடையவர்மன், மாறன், வில்லவன், மீனவன்

    4. தமிழ் வேர்கள்

    5. அசைவம்

    6. மகாபலியின் வம்சாவளி

    7. பாண்டியர்கள் அனைத்து திராவிட மக்களுக்கும் நண்பர்கள்.

    8. மலை அரையர்களின் நண்பர்கள்

    9. பாண்டியர்கள் ஹிரண்யகர்ப சடங்குகளை நடத்தினர்

    10. வில்லவர், மலையர், வானவர், மீனவர் போன்ற பூர்வகுடி திராவிட குலத்தாரால் ஆதரிக்கப்பட்டது.

    நம்பூதிரி பாண்டியர்கள்

    1. ஆரியன்

    2.பார்கவகுலம் நேபாள வேர்களைக் கொண்ட துளுவ பிராமணர்கள்.

    3. பட்டங்கள் ராஜா, கோதவர்மா. பெயர்களுடன் பிறந்த நட்சத்திரத்தை சேர்ப்பார்கள்.

    4. இந்திய-நேபாள எல்லையில் உள்ள அஹிச்சத்திரத்தில் இருந்து வந்த துளு-நேபாள மக்கள்.

    5. சைவம்

    6. பரசுராமன், பார்கவராமனின் வம்சாவளி

    7. திராவிட எதிர்ப்பு

    8. மலை அரையர்களை துன்புறுத்தினார்கள்

    9. உபநயன விழா நடத்துகிறார்கள். அவர்கள் புனித நூலை அணிவார்கள்.

    10. அஹிச்சத்திரத்தில் இருந்து குடியேறிய நாகர்களாகிய நாயர்களால் ஆதரிக்கப்பட்டார்கள்.

    இப்படி பந்தளத்தில் ஒருபோதும் தமிழ் பேசாத நம்பூதிரிகள் தங்களை பாண்டியர்கள் என்று அழைத்துக் கொள்கிறார்கள்..

    ReplyDelete
  35. இந்திய துணைக்கண்டத்தின் அசுர-திராவிட ஆரம்பம்

    பண்டைய வட இந்தியாவில் திராவிட ஆட்சி

    பல திராவிட இராச்சியங்கள் வட இந்தியாவிலும் பண்டைய காலங்களில் இருந்தன. பண்டைய இலக்கியங்களில், திராவிட ஆட்சியாளர்கள் அசுரர்கள் என்று அழைக்கப்பட்டனர். பண்டைய இந்தியாவில், தானவர், தைத்யர், பாணர், மீனா மற்றும் வில்லவர் ராஜ்யங்கள் இருந்தன. கங்கை நதியின் வடக்குப் பகுதியில் மட்டுமே ஆரியர்கள் ஆதிக்கம் செலுத்தினர். திராவிட வேர்களைக் கொண்ட பல பாணாசுரர்கள் வட இந்தியாவை ஆண்டனர்.

    திராவிட வில்லவர்-பாணர் வம்சங்கள்
    1. தானவர் தைத்யர்
    2. பாண மீனா வம்சங்கள்.
    3. வில்லவர் - மீனவர் வம்சங்கள்

    தானவரும் வில்லவரும் பாணரும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம், அவர்கள் மகாபலி பட்டம் பெற்ற அரசர்களால் ஆளப்பட்டவர்கள்.

    தானவர் மற்றும் தைத்யர்

    இந்தியாவின் ஆரம்பகால இலக்கியங்களில் தானவா மற்றும் தைத்யா என்று அழைக்கப்படும் இரட்டை பழங்குடியினரும், சிந்து பகுதியில் அவர்களின் மன்னரான மகாபலியும் குறிப்பிடப்பட்டனர். தனு என்பது வில் என்று பொருள். தானவா குலங்கள் திராவிட வில்லவர் - பாண மக்கள் ஆயிருக்கலாம். வில்லவர் மற்றும் பாண மக்களும் மஹாபலியை தங்கள் மூதாதையராக கருதினர். வில்லவர் மற்றும் பாண மன்னர்கள் ஹிரண்யகர்பா விழாவை நிகழ்த்தினர். ஹிரண்யகசிபு மன்னர் மகாபலியின் மூதாதையர் ஆவார்.

    தானவர் , தைத்யர், பாணர் அனைவரையும் அசுரர்கள் என்று அழைத்தனர். திராவிடர்களும் அசுரர்களும் ஒரே குல மக்களாக இருக்கலாம்.

    சிந்து சமவெளியில் தானவர்(கிமு 1800)

    சிந்து மன்னர் விரித்ரா (விருத்திரர்)

    விரித்ரா ஒரு ஆரம்பகால தானவா மன்னர், அவர் சிந்து பள்ளத்தாக்கு நாகரிகத்தை ஆட்சி செய்திருக்கலாம்.

    நீர்ப்பாசனத்தைக் கட்டுப்படுத்த சிந்து நதியின் கிளைகளில் பாம்புகளின் வடிவத்தை ஒத்த பல கல் அணைகளை விரித்ரா கட்டியிருக்கலாம். சிந்து பகுதியில் விரித்ராவுக்கு 99 கோட்டைகள் இருந்தன.

    ரிக் வேதத்தின்படி, விரித்ரா இந்திரனால் கொல்லப்படும் வரை உலகின் அனைத்து நீரையும் சிறைபிடித்தான். விரித்ராவின் 99 கோட்டைகளையும் இந்திரன் அழித்தான்.

    விரித்ரன் போரின் போது இந்திரனின் இரண்டு தாடைகளை உடைத்தார், ஆனால் பின்னர் இந்திரனால் வீசப்பட்டார், வீழ்ச்சியடைந்தபோது, ​​ஏற்கனவே சிதைந்துபோன கோட்டைகளை நசுக்கினார்.

    இந்த சாதனை காரணம், இந்திரன் "விரித்ரஹான்" அதாவது விரித்ராவின் கொலைகாரன் என்று அறியப்பட்டார்.

    விரித்ராவின் தாய் தனு அசுரரின் தானவா இனத்தின் தாயாகவும் இருந்தவர், பின்னர் இந்திரனால் அவரது இடியால் தாக்கப்பட்டு தோற்கடிக்கப்பட்டார்.

    மூன்று தேவர்கள், வருணன், சோமன் மற்றும் அக்னி ஆகியோர் வ்ரித்ராவுக்கு எதிரான போராட்டத்தில் அவருக்கு உதவுமாறு இந்திரனால் வற்புறுத்தப்பட்டனர். அதேசமயம் அதற்கு முன்பு அவர்கள் விரித்ராவின் பக்கத்தில் இருந்தபோது விரித்ராவை தந்தையே என்று அழைத்து வந்தனர்.

    சிந்து மன்னர் வாளா

    விரித்ராவின் சகோதரர் தடுப்பவரான விரித்ராவுக்கு இணையாக அணை கட்டிய நதிகளை விடுவிப்பதற்காக இந்திரனால் கொல்லப்பட்ட ஒரு கல் பாம்பு (அணைக்கட்டு) உண்டாக்கியவர்.

    ரிக் வேதம் 2.12.3 இந்திரன் டிராகனைக்(அணைக்கட்டு) கொன்றது, ஏழு நதிகளை(சப்த சிந்து நதிகள்) விடுவித்தது, மற்றும் வாலாவின் குகையில் இருந்து கின்களை (பசுக்களை) வெளியேற்றியது.

    சிந்து சமவெளி நாகரிகத்தின் முடிவு

    சிந்து சமவெளியில் சிந்து நதியி்ன் ஏழு துணை நதிகளிலும் பாம்புகளின் வடிவத்தில் விரிவான அணைகள் கட்டப்பட்டிருந்தது. சிந்து சமவெளி ஒரு விவசாய நாடாக இருந்ததால் அசுர- தானவா மன்னர் விருத்திரர் பல அணைகளைக் கட்டினார். ஆரியர்கள் பெரும்பாலும் ஆயர்களாதலால் ஆறுகள் தடுக்கப்படுவதை அவர்கள் விரும்பவில்லை . ஆரியர்களின் மன்னனான இந்திரன், அசுர மன்னன் விருத்திரருடன் சண்டையிட்டு அவரைக் கொன்றார். இந்திரன் விரித்ரன் கட்டிய அனைத்து அணைகளையும், விரித்ரனுடைய 99 கோட்டைகளையும் அழித்தார்.

    விரித்ராவுக்குப் பிறகு அவரது சகோதரர் வாளா சிந்து பள்ளத்தாக்கின் மன்னரானார். மீண்டும் வாளா அனைத்து கிளை நதிகளிலும் அணைகள் கட்டினார். வாளா ஆரியர்களின் கால்நடைகளையும் கைப்பற்றி ஒரு குகையில் அடைத்தார். இந்திரன் வாளா மன்னரையும் கொன்றார். வாளா மன்னர் கட்டிய நீண்ட கல்பாம்பு போல காணப்பட்ட அணைகளையும் இந்திரன் தகர்த்தார். இந்திரன் அவர்களின் கால்நடைகள் அனைத்தையும் குகையிலிருந்து விடுவித்தார். அணைகள் அழிக்கப்பட்டதால் நீர்ப்பாசனம் மற்றும் வேளாண்மை தோல்வியடைந்தது. இறுதியில் சிந்து பள்ளத்தாக்கு நாகரிகம் முடிவுக்கு வந்தது.

    பிராஹுய்

    பலூசிஸ்தான் பகுதியில் உள்ள மெஹர்கரில், ஹரப்பா-சிந்து சமவெளிக்கு முந்தைய நாகரிகம் (கிமு 7000 முதல் சி. 2500 கிமு வரை) இருந்தது. பலூசிஸ்தான் மாகாணத்தில் மக்கள் இன்றும் பிராஹுய் என்ற வட திராவிட மொழியைப் பேசுகிறார்கள்.

    ReplyDelete
  36. அசுர திராவிட துடக்கம்

    தைத்யர் மற்றும் தானவர் குலங்களின் கிளர்ச்சி

    தைத்ய குலத்தின் மன்னர் மகாபலி என்று அழைக்கப்பட்டார். தைத்ய மன்னர் மகாபலியின் தலைமையில் தானவர்கள் தேவர்களுக்கு (ஆரியர்களுக்கு) எதிராக கிளர்ச்சி செய்தனர். சத்திய யுகத்தின் போது தேவர்கள் (ஆரியர்கள்) தானவர்களை சொர்க்கத்திலிருந்து (வட இந்தியாவிலிருந்து) நாடுகடத்தினர்.

    நாடுகடத்தப்பட்ட பின்னர், தானவர்கள் விந்திய மலைகளில் தஞ்சம் புகுந்தனர். தானவா என்றால் தனு உள்ளவர்கள் அதாவது வில் உள்ளவர்கள், வில்லவர். பாணா மற்றும் அவர்களது கிளைக்குலங்களான தைத்யா மற்றும் தானவா ஆகியோர் அசுரர்களாக கருதப்பட்டனர். திராவிட வில்லவர், மீனவர் மற்றும் அசுர பாணா, மீனா குலங்கள் பொதுவான மூதாதையர்களைக் கொண்டிருந்தனர்.

    தானவா மல்யுத்த வீரர்கள்

    கம்ச மன்னரின் உத்தரவின்படி, அக்ரூரா என்ற யாதவ மூப்பர் கிருஷ்ணர் மற்றும் பலராமரை,மதுராவில் நடந்த ஒரு தனுஷ் யாகம் மற்றும் நட்பு மல்யுத்த போட்டியில் கலந்து கொள்ள அழைத்திருந்தார். பயங்கரமான தானவா மல்யுத்த வீரர்கள் சானுரா மற்றும் முஷ்டிகா ஆகியோர் இளம் கிருஷ்ணர் மற்றும் பலராமனால் கொல்லப்பட்டனர்.

    புத்தமதத்தில் தானவர்

    புத்தமதத்தில் அவர்கள் வில் தரிக்கும் தானவேகச அசுரர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

    முந்தைய காலகட்டத்தில் இந்தியாவில் வசித்து வந்தவர்கள் பெரும்பாலும் திராவிடர்கள் ஆவர். அவர்கள் பல திராவிட நாடுகளை உண்டாக்கினர். தென்னிந்தியாவில் பல பாண்டியன் ராஜ்யங்கள் வில்லவர்-மீனவர் குலங்களால் நிறுவப்பட்டன.

    வட இந்தியாவில் வில்லவர் தொடர்புடைய பாணா-மீனா வம்சங்கள் மகாபலி என்று அழைக்கப்படும் மன்னர்களால் ஆளப்பட்ட ஏராளமான பாணப்பாண்டியன் ராஜ்யங்களை நிறுவினர்.

    மகாபலி வம்சம்

    வில்லவர் மற்றும் பாணர்கள் இருவரும் அசுர மன்னர் மகாபலி மற்றும் அவருடைய மூதாதையரான ஹிரண்யகசிபு ஆகியோருடைய வம்சத்திலிருந்து வந்ததாகக் கூறினர். தென்னிந்திய பாண மற்றும் பாண்டியன் மன்னர்கள் ஹிரண்யகர்பா விழாவை நிகழ்த்தி வந்தனர். ஹிரண்யகசிபுவின் பண்டைய தலைநகரம் இரணியல் (ஹிரண்ய சிம்ஹ நல்லூர்) என்று அழைக்கப்படுகிறது.

    கன்னியாகுமரி புராணத்தில் பாணாசுரன்

    பாணாசுரன் தேவர்கள் மற்றும் அசுரர்களின் பொதுவான கடவுளான பிரம்மாவிடம் பிரார்த்தனை செய்தார். முழு பிரபஞ்சத்திலும் ஆணின் அல்லது பெண்ணின் கைகளில் கொல்லப்படமாட்டார் என்ற அழியாத வரத்தை பாணாசுரன் பெற்றார். திருமணமாகாத பெண் அல்லது குழந்தையால் மட்டுமே பாணாசுரனை கொல்ல முடியும். கன்னியாகுமரி பராசக்தியின் அவதாரமாக பிறந்தார். பாணாசுரன் கன்னியாகுமரியை கடத்த முயன்றார் ஆனால் கன்னியாகுமரி தேவியால் கொல்லப்பட்டார்.

    சீதையின் சுயம்வரத்தில் பாணாசுரன்

    பாணாசுரன் மற்றும் ராவணன் இருவரும் சீதா தேவியின் சுயம்வரத்தில் கலந்து கொண்டனர். ஆனால் இராவணனும் பாணாசுரனும் வில்லைப் பார்த்தவுடன் அமைதியாக நழுவி விட்டனர்.

    மகாபாரத காலத்தில் பாணாசுரன்

    பாணாசுரனின் மகள் உஷா பகவான் கிருஷ்ணரின் பேரன் அனிருத்தனை கனவு கண்டார். உஷாவின் தோழி சித்ரலேகா, இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகள் மூலம், கிருஷ்ணரின் அரண்மனையில் இருந்து அனிருத்தனை கடத்தி, உஷாவிடம் கொண்டு வந்தார். அனிருத்தன் உஷாவை விரும்பினார் ஆனால் பாணாசுரன் அவனை சிறையில் அடைத்தார். இது பகவான் கிருஷ்ணர் பலராமன் மற்றும் பிரத்யும்ன னுடன் ஒரு போருக்கு வழிவகுத்தது, பாணாசுரன் தோற்கடிக்கப்பட்டார். அதன் பிறகு உஷாவுடன் அனிருத்தனுக்கு திருமணம் நடந்தது.

    ஆந்திராவில் ஒரு பாண இராச்சியம் இருந்தது, இது விஜயநகர நாயக்கர்கள் உட்பட பலிஜாக்களின் பல ஆளும் வம்சங்களை உருவாக்கியது. மன்னன் மகாபலியில் தோன்றியதால் அவர்கள் பலிஜாக்கள் என்று அழைக்கப்பட்டனர். பலிஜாக்கள் பாணாஜிகா அல்லது வளஞ்சியர் என்றும் அழைக்கப்பட்டனர்.
    வாணாதி ராயர், வன்னியர் மற்றும் வாணர் ஆகியவையும் தெலுங்கு பாணர்களின் பாண வம்ச பட்டங்கள் ஆகும்.

    வாணர்

    பாணர் காடுகளில் தங்க விரும்பினர். எனவே கடம்ப பாண தலைநகரான பாணவாசியை வனவாசி என்றும் அழைத்தனர். அவர் வாணர் என்றும் அழைக்கப்படுகின்றனர். வானர அரசர் பாலியின் தலைநகரம் கிஷ்கிந்தா. பலிஜா நாயக்கர் அரச குடும்பத்தினர் கிஷ்கிந்தா அருகே உள்ள ஆனேகுண்டியில் தங்கியுள்ளனர்.
    விஜயநகரை ஆட்சி செய்த பலிஜா நாயக்கர்களின் தலைநகரம் கிஷ்கிந்தாவிலிருந்து 22 கிமீ தொலைவில் உள்ள ஹம்பி ஆகும்.


    கர்நாடகாவில் பாணப்பாண்டியன் இராச்சியங்கள்

    கர்நாடகாவில் கடம்ப இராச்சியம், நூறும்பாடா பாண்டியன் இராச்சியம், சான்றாரா பாண்டியன் இராச்சியம், உச்சாங்கி பாண்டியன் இராச்சியம், ஆலுபா பாண்டியன் இராச்சியம் உள்ளிட்ட பல பாணப்பாண்டியன் இராச்சியங்கள் இருந்தன.

    கடலோர கர்நாடகாவை ஆண்ட துளுவ வம்சம் பாணப்பாண்டியன் குலமாகும். பாண சாளுவ வம்சம் கோவாவை ஆண்டது. சாளுவ மற்றும் துளுவ பாணகுலங்கள் விஜயநகர் பேரரசின் இரண்டு வம்சங்களை உண்டாக்கின.

    ReplyDelete
  37. அசுர திராவிட துடக்கம்

    பாண்பூர்

    வட இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் பாண்பூர் அல்லது பான்பூர் என்று அழைக்கப்படும் பண்டைய பாண வம்ச தலைநகரங்கள் உள்ளன. அங்கிருந்து பாணர் அந்த பிரதேசங்களை ஆட்சி செய்தார்கள்.

    மகாபலி

    மகாபலி / மாவேலி பட்டத்துடன் பல மன்னர்கள் இந்தியாவை ஆண்டனர். ஒரு மகாபலி அசாமில் சோனித்பூரரில் இருந்து ஆட்சி செய்தார், மற்றொரு மகாபலி கேரளாவிலிருந்து ஆட்சி செய்தார், மேலும் மற்றொரு மகாபலி சிந்து சமவெளியில் தைத்யா மற்றும் தானவர்களின் ராஜாவாக இருந்தார். அவர் ஆரம்பகால ஆரியர்களுக்கு எதிராக போராடினார்.


    மீனா வம்சம்

    இதேபோல் மீனா வம்சம் ராஜஸ்தான், சிந்து மற்றும் கங்கை சமவெளிகளில் ஆரியர்க்கு முந்தைய ஆட்சியாளர்களாக இருந்தனர், அவர்கள் திராவிட வேர்களைக் கொண்டிருக்கலாம். பாணா இராச்சியம் மற்றும் மீனா-மத்ஸ்ய ராஜ்யம் ஆரியவர்த்தம் கங்கை சமவெளியில் உருவாக்கப்பட்ட பின்னரும் இருந்து வந்தது. பாணா-மீனா ராஜ்யங்கள் வேத கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக இருந்தன.

    மத்ஸ்ய ராஜ்யத்தின் மன்னராகிய விராட மன்னர் பாண்டவர்களை அஞ்ஞாதவாச காலத்தில், அங்கு ஒரு வருடம் வரை மறைத்து வைத்திருந்தார்.
    மீனா-மத்ஸ்ய மன்னன் விராடனின் மகள் உத்தரா பின்னர் அர்ஜுனனின் மகன் அபிமன்யுவை மணந்தார்.

    பாணா மீனா குலங்கள்

    வட இந்தியாவில் வில்லவர் மற்றும் மீனவர் ஆகியவர்கள், பாணா மற்றும் மீனா என்ற பெயர்களால் அறியப்பட்டனர். பாணா வடக்கில் பாணப்பாண்டியன் இராச்சியங்களையும், மீனா வட இந்தியாவில் மீனா அல்லது மத்ஸ்ய ராஜ்யத்தையும் நிறுவினார்கள். மலைப்பாங்கான பகுதிகளை ஆண்ட பில் பழங்குடியினர் வில்லவரின் துணைக்குழுக்களாகவும் இருக்கலாம்.

    கி.பி 1030 வரை மீனா ராஜ்ஜியம் ராஜஸ்தானை ஆட்சி செய்தது. நவீன ஜெய்ப்பூர் மீனா குலத்தாரால் நிறுவப்பட்டது. கடைசி சக்திவாய்ந்த மீனா ஆட்சியாளர் ஆலன் சிங் சாந்தா மீனா. இந்தக் காலத்தில் கச்வாஹா ராஜபுத்திரர்களால் மீனாக்கள் தோற்கடிக்கப்பட்டனர்.

    பண்டைய வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு ராஜ்யங்கள் வெவ்வேறு இனங்களைச் சேர்ந்தவை. சில ராஜ்யங்கள் பண்டைய அசுர-திராவிட வம்சாவளியைக் கொண்டிருக்கலாம், மற்றவை நாக மற்றும் ஆரிய வம்சாவளியைச் சேர்ந்தவை. சிலர் வெளிநாட்டினர்.

    பாண ராஜ்யங்களின் வீழ்ச்சி

    வட இந்தியாவை ஆக்கிரமித்த சித்தியன், பார்த்தியன் மற்றும் ஹுண படையெடுப்பாளர்களின் வருகையின் பின்னர் பாண ராஜ்யங்கள் வலிவிழந்தன. பாணா-மீனா ராஜ்யங்கள் ராஜபுத்திர ராஜ்யங்களால் உள்வாங்கப்பட்டிருக்கலாம். மீனா இராச்சியம் கிபி 1036 வரை நீடித்தது. அதன் பிறகு ராஜபுத்திரர்களும் டெல்லி சுல்தானகமும் மீனா ராஜ்யத்தின் பிரதேசங்களை இணைத்து கொண்டனர்.

    ராஜபுத்திரர்களின் முடிசூட்டு விழா

    ராஜபுத்திரர்களின் முடிசூட்டு விழாவின் போது, ​​பில் அல்லது மீனா குலத்தினரின் கட்டைவிரலிலிருந்து எடுக்கப்பட்ட இரத்தத்தை ராஜாவின் நெற்றியில் பூசுவது வழக்கம். ஏனென்றால், வட இந்தியாவின் அசல் ஆட்சியாளர்கள் பாணா, பில், மீனா மக்கள் ஆயிருந்தனர்.

    திராவிட பாரம்பரியம்

    உடல் ரீதியாக அனைத்து இந்தியர்களும் பழுப்பு நிறம் மற்றும் திராவிட முக அம்சங்களைக் கொண்டுள்ளனர். அது அவர்களின் திராவிட தோற்றம் காரணமாகும்.

    சித்தியன் படையெடுப்பு (கிமு 150)

    ஆனால் வட இந்தியாவின் கங்கை சமவெளியில் உள்ள இந்த திராவிட பழங்குடியினர் சித்தியன் படையெடுப்பாளர்களால் தங்கள் தாயகத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

    கங்கை பகுதிகளை ஆட்சி செய்த வில்லவர் குலங்களை சித்தியர்கள் தம்முடன் சேர்த்திருக்கலாம். ஜாட் சமூகத்தில் பல வில்லவர்-நாடார் குடும்பப் பெயர்கள் உள்ளன. ஜாட் சமூகம் சித்தியன் வம்சாவளியைக் கொண்டிருந்திருக்கலாம்.

    நாடார், சாணார், சாந்தார் பில்வன், பாணா, சேர, சோழர் பாண்டியா போன்ற பல வில்லவர் குடும்பப்பெயர்கள் ஜாட் சமூகத்தின் குடும்பப்பெயர்களில் காணப்படுகின்றன.

    ReplyDelete
  38. அசுர திராவிட துடக்கம்

    வில்லவர் மீனவர்

    தமிழ் வில்லவர் மற்றும் அதன் துணைக்குழுக்கள் வில்லவர், வானவர், மலையர் மற்றும் மீனவர் என்று அழைக்கப்பட்ட அவர்களின் கடலில் செல்லும் உறவினர்கள், இவர்கள் அனைவரும் பண்டைய பாண்டியன் இராச்சியத்தை நிறுவியவர்கள் ஆவர். பண்டைய பாண்டியன் மன்னர்கள் தங்கள் துணைக்குலங்களால் அறியப்பட்டனர் எ.கா. மலையர் குலம்-மலயத்வஜ பாண்டியன். வில்லவர் குலம்-சாரங்கத்வஜ பாண்டியன் மீனவர் குலம்-மீனவ பாண்டியன்போன்றவர்கள்.

    வில்லவர் குலங்களின் இணைப்பு

    பிற்காலத்தில் அனைத்து வில்லவர் குலங்களும் மீனவர் குலங்களுடன் ஒன்றிணைந்து நாடாள்வார் அல்லது நாடார் குலங்களை உருவாக்கின.

    பாண்டிய ராஜ்ஜியத்தின் பூர்வீகம்

    பாண்டிய ராஜ்ஜியத்தின் ஆரம்பம் குமரிக்கண்டத்தில் வரலாற்றுக்கு முந்தையது. தலைநகரங்கள் தென் மதுரை, கபாடபுரம் மற்றும் மதுரை.

    காலவரிசை

    1. முதல் பாண்டிய இராச்சியத்தின் அடித்தளம் (கிமு 9990)
    2. முதல் பிரளயம் (கிமு 5550)
    3. இரண்டாவது பாண்டிய சாம்ராஜ்யம்
    4. இரண்டாம் பிரளயம் (கிமு 1850)
    5. மூன்றாவது பாண்டிய சாம்ராஜ்யம்
    6. சங்க யுகத்தின் முடிவு (கி.பி. 1)


    பாண்டியன் ராஜ்யத்தின் பிரிவு

    பண்டைய பாண்டிய இராச்சியம் தமிழத்தில் சேர, சோழர் மற்றும் பாண்டியன் ராஜ்யங்களாக பிரிக்கப்பட்டது.

    வில்லவர் ராஜ்யங்களின் முடிவு.

    கி.பி 1120 இல் அரேபியர்களின் உதவியுடன் கேரளாவைத் தாக்கிய துளு-நாயர் படையெடுப்பைத் தொடர்ந்து சேர வம்சம் கொடுங்கலூரில் இருந்து கொல்லத்திற்கு மாற்றப்பட்டது. கி.பி 1310 இல் மாலிக் கஃபூரின் பாண்டிய ராஜ்ஜியத்தின் மீதுள்ள தாக்குதல் மற்றும் தோல்விக்குப் பிறகு, வில்லவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். கேரளா முழுவதும் துளு-நேபாள ஆட்சியின் கீழ் வந்தது. கி.பி 1335 க்குப் பிறகு கேரளாவில் அஹிச்சத்திரம்-நேபாளத்தைச் சேர்ந்த நாகர்கள் ஆதிக்கம் செலுத்தினர்.

    தமிழ்நாட்டை தெலுங்கு பலிஜாக்கள் மற்றும் வாணாதிராயர்கள் ஆக்கிரமித்தனர். வாணாதிராயர்கள் தமிழ்நாட்டின் கங்கை நாகர்களின் தலைவர்கள் ஆனார்கள். கி.பி 1377 க்குப் பிறகு கேரளாவும் தமிழகமும் பாண மன்னர்களால் ஆளப்பட்டன. கேரளா மற்றும் தமிழ்நாடு வடுக நாகர்களால் ஆதிக்கம் செலுத்தப்பட்டது.

    தெற்கே வில்லவர் குடியேற்றம்
    கேரளா
    1. கொடுங்கலூரிலிருந்து கொல்லத்திற்கு இடம்பெயர்வு (கி.பி 1102)
    2. கொல்லத்திலிருந்து திருவனந்தபுரம், கன்னியாகுமரி மற்றும் இலங்கைக்கு இடம்பெயர்வு (கி.பி 1335)

    தமிழ்நாடு
    1. தஞ்சாவூரில் இருந்து களக்காட்டுக்கு இடம்பெயர்வு (கி.பி 1310)
    2. மதுரையிலிருந்து திருநெல்வேலிக்கு இடம்பெயர்வு (கி.பி 1310)
    3. திருநெல்வேலியில் இருந்து கல்லிடைக்குறிச்சி மற்றும் அம்பாசமுத்திரத்திற்கு இடம்பெயர்வு (கி.பி. 1377 முதல் கி.பி .1640 வரை)

    வட இந்தியாவில் வில்லவர்
    வில்லவர் குலங்கள்
    1. வில்லவர் = பில்
    2. மலையர்
    3. வானவர் = பாணா
    4. மீனவர் = மீனா

    வில்லவர் பட்டங்கள் மற்றும் பாணரின் பட்டங்கள் வில்லவர் = பில், பில்லவா, சாரங்கா, தானவா
    மலையர் = மலெயா, மலயா
    வானவர் = பாணா, வானாதிராயர்
    மீனவர் = மீனா, மத்ஸ்யா
    நாடாள்வார் = நாடாவா, நாடாவரு, நாடாவரா.
    நாடார் = நாடோர்
    பணிக்கர் = பணிக்கா
    சான்றார் = சான்றாரா, சான்தா
    பாண்டியன் = பாண்ட்யா
    மாவேலி = மகாபலி

    முடிவுரை

    வில்லவர்-நாடார் குலங்கள் இந்தியா முழுவதையும் ஆண்ட வில்லவர் மற்றும் பாண குலங்கள் என்று அழைக்கப்படும் பழங்குடி ஆட்சியாளர்களைச் சேர்ந்தவை. டெல்லி படையெடுப்பைத் தொடர்ந்து நடந்த இனப்படுகொலைதான் வில்லவரின் வீழ்ச்சிக்குக் காரணம். மற்றொரு காரணம் வில்லவர் மற்றும் பணிக்கர் மற்ற நாடுகளுக்கு வெளியேறியது.

    ReplyDelete
    Replies
    1. காமெடி வரலாற்றை அவறே படித்தால் கூட பைத்தியம் ஆய்டுவாறுய்யா இவன்களுக்கு வம்சம் குலம் கோத்திரம் மகரிஷீ பேரரச வம்சத்துக்கான எதுவுமே சான்று என்று கிடையாது இவனுக பன்ற காமெடிய பாத்தா சிரிப்பு தான்லவருது.......

      Delete