Monday, November 5, 2012

ஊசிப்போன தோசை தீர்மானம் ஐநாவில் ஓப்படைப்பு



தலிவரே நீங்க டெசோ மாநாடு நடத்துனப்பவே தெரியும் வழக்கம் போல தயிர்சாதத்துக்கு தொட்டுக்க புடலங்கா கூட்டு வைச்சு சாப்பிட சொல்ல போறீங்கனு. டெசோ மாநாட்டில் பலநாட்டு தலைவர்களை அழைத்து வந்தீர்கள் ஏன் அம்ன்ஸ்டியில்  இருந்து கூட ஆளை கூட்டிட்டு வந்தீங்க ஆனால் இயற்றின தீர்மானம் தான் ஒன்றும் சரியில்லாமல் இருக்கு. அதாவது ஊரை கூட்டி தலைவாழை இலை போட்டு விருந்தில் சரியாக சாப்பாடு போடாமல் சட்டிய கவுத்துட்டீங்க தலீவரே.

சரி போனா போகுது ரொம்ப நாள் கழிச்சு ஈழதமிழர் விசயத்தை பேசுறீங்களே நல்லது என்று நினைத்து விட்டால். அந்த தீர்மான்ங்களை ஐ.நாவின் பொது செயலாளர் பான்கீ மூனிடம் கொடுக்க போறோம் என்று சொன்னீர்கள். சரி அதையாவது முழுமையாக செய்வீர்கள் என்று பார்த்தால் அதிலும் திருகுதாளம் போட்டிருக்கிறீர்கள். அத்தனையும் செய்துவிட்டு தமிழ்நாட்டில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பொதுவாக்கெடுப்பு(Referendum) வேண்டும் என்று பேட்டி கொடுக்கிறீர்கள். ஆனால் ஐநாவில் கொடுக்கப்பட்ட அறிக்கையிலோ இல்லை தீர்மானத்திலோ பொதுவாக்கெடுப்பு எனப்படும் Referendum என்ற வார்த்தையாஇயே காணோம்.

நான்காவது தீர்மானத்தில் இந்திய அரசை நோக்கி ஈழத்தமிழர்கள் தங்களது அரசியல் தீர்வை தேர்ந்தெடுத்துக்கொள்ள ஐநாவில் இந்தியா தீர்மானம் கொண்டுவரவேண்டும் என்று சொல்கிறீர்கள். இதில் பொதுவாக்கெடுப்பு என்று சர்வதேச அரசியலில் அனைவருக்கும் தெரிந்த வார்த்தை பிரயோகம் இல்லை. ஐநாவிடம் நேரடியாக கூட இந்த கோரிக்கையை வைத்திருக்கலாம் ஆனால் இந்திய அரசிடம் இந்த கோரிக்கையை வைக்கிறீர்கள். இந்தியா இலங்கை தனது நட்பு நாடு அதற்கு எதிராக செயல்பட மாட்டோம் என்று பட்டவர்த்தனமாக அறிவித்த பிறகும் நீங்கள் இந்த கோரிக்கையை இந்தியாவிடம் வைக்கிறீர்கள். இப்படி டெசோ மாநாட்டில் 14 தீர்மான்ங்களை இயற்றிவிட்டு அதையும் Beats of Bleeding Hearts எனும் ஐநாவிடம் கொடுத்த ஆவணத்தில் 14 தீர்மான்ங்கள் என்று தம்பட்டம் அடித்துவிட்டு தீர்மான இணைப்பில் 11 தீர்மான்ங்களை தான் ஐநாவிடம் கொடுத்திருக்கிறீர்கள். மீதம் உள்ள மூன்றும் பயண வழியில் தொலைந்திருக்க வாய்ப்பில்லை, அவை தேவையில்லாத தீர்மான்ங்கள் என்று முடிவெடுத்து இப்பொழுது நீக்கியிருக்கிறீர்கள் இப்படி தேவையில்லாத தீர்மான்ங்களை ஏன் சர்வதேச தலைவர்களை கூப்பிட்டு நிறைவேற்றினீர்கள்.

அவைகளில் ஒன்று உங்கள் சொந்த தேவையான(இதை தான் தமிழின அரசியல் என்று சொல்கிறீர்கள்) ஜெயலலிதாவை கண்டித்த தீர்மானம், இரண்டாவது இந்தியா இலங்கை இராணுவத்திற்கு பயிற்சி அளிக்க கூடாது என்று வலியுறுத்திய தீர்மானம். இவை இரண்டும் தேவையில்லாதது தான் எனபதை அன்று சர்வதேச தலைவர்கள் இருக்கும் பொழுது உணராத நீங்கள் இன்று உணர்ந்து நீக்கியிருக்கிறீர்கள். ஆனால் மூன்றாவதாக ஐக்கிய நாடுகள் அவையினால் வரையறுக்கப்பட்ட அகதிகள் நடைமுறையை ஈழத்தமிழர்களுக்கும் வழங்க வேண்டும் என்று இந்தியாவை வலியுறுத்தும் தீர்மானத்தை எடுத்துவிட்டீர்கள். இந்தியா ஐ.நாவின் அகதிகள் தீர்மானத்தில் கையெழுத்திடவில்லை என்பது ஐநாவுக்கு தெரியும் ஆனால் இந்தியாவில் பன்னாட்டு அகதிகள் எப்படி நட்த்தப்படுகிறார்கள் என்பது தெரியவாய்ப்பில்லை. ஆனால் அதை தெரியப்படுத்தும் தீர்மானத்தை இந்தியாவின் உண்மை முகத்தை தோலுரித்து காட்டும் தீர்மானத்தை ஏன் மறைத்துவிட்டீர்கள், இப்படி மறைப்பதற்கு சர்வதேச தலைவர்களை கூப்பிட்டு இப்படி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியிருக்க வேண்டாமே. நீங்கள் உங்களின் சொந்த தேவைக்காகவும் சொந்த அரசியலுக்காகவுமே இதுவரை அரசியல் செய்து வந்திருக்கிறீர்கள் அதுவும் இந்தியாவின் சர்வதேச வல்லாதிக்க போக்கிற்க்கு தலைகுனிந்தே பணிவிடை செய்திருக்கிறீர்கள் என்பதை சுட்டிகாட்ட இது ஒன்று போதுமே தலீவரே.

டெசோ தீர்மானத்தில் 9வது தீர்மானமாக மிக அழகாக This Conference also urges that U.N.Protocol on Refugees should be followed in India.  தெளிவாக குறிப்பிடும் இந்த தீர்மானத்தை நீக்க வேண்டிய தேவை என்ன என்பது புரியவில்லை தலீவரே. உலகநாடுகள் முன்பாக இந்தியாவின் ஈழ அகதிகள் குறித்தான துரோகத்தை சுட்டி காட்ட விரும்பவில்லையா. ஒரு நாட்டின் குடிமகன் என்பவன் அந்நாடு செய்யும் தவறுகளை சுட்டிகாட்ட வேண்டும் என்று இந்தியாவின் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியான கிருஸ்ணய்யர் அவர்களே குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் உங்களுக்கு ஏனோ ஈழ தமிழ் அகதிகளை பிச்சைகாரர்களை விட கேவலமாக நடத்துவதை உலக அரங்கில் சொல்ல முடியவில்லை. இதை தான் நாங்கள் ஆரம்பத்தில் இருந்தே சொல்லி வருகிறோம் அண்ணா திரவிட நாடு கோரிக்கையை தற்காலிகமாக தள்ளி வைத்தார் ஆனால் நீங்களே அதை ஊத்திமூடி புதைத்து விட்டீர்கள். அதே போல் ஈழப்பிரச்சனை மிகவும் அதிகமாக தமிழகத்தில் கொந்தளிப்பு ஏற்படுத்திய பொழுது எல்லாம் இந்திய தேசியத்தின் அடிமையாக அதுவும் நீங்கள் தமிழகத்தின் முதல்வராக பணியாற்றிய பொழுது எப்படியெல்லாம் தமிழகத்தில் ஏற்பட்ட எழுச்சிகளை அடக்கி இந்திய தேசியத்திற்கு சேவை செய்தீர்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.



டெசோ மாநாட்டு தீர்மான்ங்களில் 7 ஐநாவை நோக்கியும், 5 இந்தியாவிடம் நோக்கியும், மீதம் இரண்டில் ஒன்று இலங்கை அரசு டெசோ மாநாட்டை பார்த்து பயந்து, ஈழத்தமிழ் தலைவர்களை வரவிடாமல் செய்துவிட்டது என்றும், கடைசியக உங்கள் சொந்த அரிப்புக்கு சொரிந்து கொள்ள ஜெயலலிதாவை கண்டித்த்தை தவிர வேறு என்ன இருக்கிறது தலீவரே. ஏன் ஐநாவிடம் கொடுத்த முகப்பு கடித்த்தில் கூட பொதுவாக்கெடுப்பை பற்றி பேசாமல் இன்று ஊடகங்களுக்கு பேட்டிகொடுப்பது மட்டும் பொதுவாக்கெடுப்பு என்று சொல்லிகொண்டு. உப்பு சப்பு இல்லாத ஒரு ஆவணத்தை ஐநாவிடம் கொடுக்கப்பட்ட்தால் என்ன பயன் இதற்கு உங்கள் பிள்ளையும் அவரின் சமீபத்திய ஆத்ம நண்பரும் ஒரு சுற்றுலா சென்று வந்தார்கள் என்று சொன்னாலும் சரி என்று ஏற்றுக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment