Friday, July 29, 2011

இனப்படுகொலையும் இந்தியாவும்

நாம் அனைவரும் இரண்டு வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு இனப்படுகொலைக்கு நியாயம் யாராவது வழங்க மாட்டார்களா என்று ஏங்கி நின்று கொண்டு இருக்கிறோம்.. இதில் சிலர் இந்தியாவின் நிலைப்பாட்டை இலங்கையுடன் கூடிய உறவை மாற்றிவிட்டால் அனைத்தும் நடந்துவிடும் என்று எண்ணிக்கொண்டிருக்கிறோம்.. சிலர் பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்போதைக்கு வாழ தேவையான ஒரு அரசியல் தீர்வை இந்தியா முயன்று கொண்டிருக்கிறது அது கிடைத்தாலே போதும் என்ற நிலையில் இருக்கிறார்கள். 

இதற்கு சாட்சியம் சொல்வது போல் சில அரசியல் கட்சிகள் தங்களது கட்சி தீர்மானத்தில் அரசியல் தீர்வை வழியுறுத்தி வருகின்றன. ஆனால் இவர்கள் அனைவருக்கும் தெரியாதது இல்லை இந்தியாவே ஒரு இனப்படுகொலை செய்த நாடு என்பது. அப்படி தெரிந்திருந்தும் இவர்கள் இப்படி ஒரு தீர்வை முன்வைக்கிறார்கள் ஏன் அவர்களின் வாழ்வாதரம் என்பது ஒன்றுபட்ட ஓர் இந்தியாவில் தான் இருக்கிறது பிரிந்து கிடக்கும் மக்களைக்கொண்டு பதவிகளை பிடித்து அதை வைத்து தனக்கும் தன் குடும்பத்திற்குமான தேவைகளை பூர்த்தி செய்து கொள்வது தான். இந்த கட்சிகள் அனைத்தும் பல வருடங்களாக இந்தியாவில் அரசியல் நடத்திக்கொண்டுள்ளன இவைகள் மக்களுக்கான ஓர் கட்சிகளாக தங்களை அடையாளப்படுத்திக்கொண்டுள்ளன. ஆனால் இவைகள் எவையும் இந்தியாவில் நடந்த ஒரு இனப்படுகொலையையே தட்டி கேட்காதவை. மனிதம் என்பதை மீறி 5000க்கும் அதிகமானோர் கொலை செய்யப்பட்ட பொழுது வேடிக்கை பார்த்தனர், ஏன் இன்று வரை அந்த இனப்படுகொலையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்தவிதமான நியாயமும் கிடைக்காமல் இருப்பதையும் கண்ணை மூடிக்கொண்டு ரசிக்கும் கூட்டத்தினர்.




இந்த படங்கள் வேறு எங்கோ எடுக்கப்பட்டவை அல்ல இதே இந்தியாவில் தான் அதுவும் அதன் தலைநகரான டில்லியில் எடுக்கப்பட்டவை. இனப் படுகொலை நடந்து முடிந்த பிறகு இறந்தவர்களின் உடலுக்கு கிடைக்க வேண்டிய இறுதி மரியாதை கூட கிடைக்காமல் சாலையில் கிடந்த உடல்களை நாய்கள் உண்ணும் கேவலமும் நடந்தது. இது வேறு எப்போதோ நடந்தது அல்ல 1984ம் வருடம் இந்திராகாந்தியின் கொலைக்கு பிறகு நடந்த கோர தாண்டவமே.. 

1984ல் இந்திரா கொலை செய்யப்பட்டவுடன்.. மதச்சார்பற்ற நாடான இந்தியாவில் சீக்கிய மதத்தை சார்ந்தவர்கள் மீது நடத்தப்பட்ட கண்மூடிதனமான தாக்குதலில் 5000க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். இதில் டில்லியில் வாழ்ந்த சீக்கியர்கள் பலர் நான்கு நாட்கள் தொடர்ந்து விரட்டிவிரட்டி கொல்லப்பட்டனர். இந்திரா இறந்த அன்று ராஜிவ் காந்தி மேற்கு வங்கத்தில் தேர்தல் பிராசரத்தில் ஈடுபட்டிருந்தார், அங்கிருந்து திரும்பி டில்லி மாலை 4 மணிக்கு வந்து சேர்ந்தார். அப்பொழுது வெளிநாடு ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்த ஜெயில் சிங் 5.30 மணிக்கு வந்தார். அவர் டில்லியில் AIIMS மருத்துவமனைக்கு வந்தபொழுது கற்களால் தாக்கப்பட்டது அவர் வந்த வாகனம். 



அதன்பிறகு ராஜிவ் பிரதமராக பதவியேற்றார் அன்று மாலையே. மாலை 5.30க்கு நாட்டின் ஜனாதிபதியின் வாகனத்தையே தாக்கிய கொலைவெறி காங்கிரஸ் கூட்டம் மருத்துவமனைக்கு அருகில் இருந்த பகுதிகளில் இருந்த சீக்கியர்களை தாக்கினர், அன்று இரவு முழுவதும் அங்காங்கே தாக்குதல்கள் நடந்தன. பிரதமராக பதவியேற்றவுடன் ராஜிவ் அளித்த பேட்டியில் இந்திராவின் கொலைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று பேட்டி கொடுத்தார். அதை எடுத்து கொண்ட காங்கிரஸ் காட்டுமிராண்டி கூட்டம் கலவரத்தை கட்டவிழ்த்துவிட்டது.



நவம்பர் 1ம் தேதி காலை 9 மணிக்கு அலுவலகம் செல்வது போல் கொலைகள் தொடங்கியது. இம்முறை மிகவும் நேர்த்தியாக வாக்காளர் பட்டியலை எடுத்துக்கொண்டு தேடி தேடி சீக்கியர்களின் வீட்டிற்கு சென்று வெளியில் இழுத்துவந்து அடித்து, உயிருடன் எரித்து கொலை செய்தனர். ஏன் பஞ்சாப்பில் இருந்து வந்த ஒரு இரயிலில் 56 சீக்கியர்களின் உயிரற்ற உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இரயில்வே நிர்வாகம் பஞ்சாப்க்கான இரயிலகளை நிறுத்திவிட்டது. இது காங்கிரஸ் கலவரக்காரர்களுக்கு மேலும் வசதியாக போனது யாரும் டில்லியை விட்டு தப்பி செல்ல இயலாமல் சீக்கியர்கள் மாட்டிக்கொண்டனர். டில்லியில் ஒரு இடத்தில் மட்டும் 96 பேர் கம்பியால் அடித்தும் கத்தியால் குத்தப்பட்டும் படுகொலை செய்யப்பட்டனர். காவல்துறை என்பது இருந்ததா என்ற சுவடே தெரியவில்லை.

நவம்பர் 2 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது ஆனால் நடைமுறைப்படுத்த படவில்லை. இராணுவம் டில்லி முழுவதும் காவலுக்காக நிறுத்தி வைக்கப்பட்டது. ஆனால் காவல் துறையினர் இராணுவத்தினர்க்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. இராணுவத்தினர் கலவரத்தை அடக்க சுடவேண்டும் என்றால் காவல்துறையினரோ அல்லது மாஜிஸ்ட்ரேட்டோ அனுமதி அளிக்கவேண்டும். அப்படி பட்ட அனுமதி எதுவும் இராணுவத்தினருக்கு வழங்கப்படவில்லை. இதை பயன்படுத்தி காங்கிரஸ் காட்டுமிராண்டி கும்பல் சீக்கியர்களை படுகொலை செய்தனர். அவர்கள் கடைகள் அலுவலகங்கள் வீடுகள் என்று அனைத்தும் தீக்கிரையாக்கப்பட்டது. 

நவம்பர் 3 இரவு வரையில் சீக்கியர்கள் கொடூரமாக இனப்படுகொலை செய்யப்பட்டனர். இது இந்தியா முழுவதுமாக பரவலாக நடந்தது, டில்லியில் மட்டுமே 5000 பேர் இறந்திருப்பார்கள். இதன் பிறகே காவல்துறையும் இராணுவமும் இணைந்து கலவரத்தை அடக்கினார்கள். இப்படி 3 மூன்று நாட்கள் ஒரு பெரும் இனப்படுகொலை நடந்து முடிந்தது. ஆனால் இதன் பின்னால் இருந்தவர்கள் செய்த விசயங்கள் தான் மிகவும் கொடூரமானது. இதில் காங்கிரஸை சேர்ந்த பல தலைவர்கள் சம்பந்தபட்டிருந்தாலும் யாரும் இதுவரை தண்டிக்கப்படவில்லை. 



வாக்காளர் பட்டியலை வைத்துக்கொண்டு சிலர் சீக்கியர்கள் இருக்கும் வீடுகளின் சுவற்றில் X குறியீடு இட்டு செல்வார்கள் அவர்கள் பின்னாலேயே ஒரு காங்கிரஸ் காட்டுமிராண்டி கும்பல் வந்து அந்த வீட்டில் இருப்பவர்களை தெருவில் இழுத்து போட்டு வெட்டி படுகொலை செய்தது. பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தனர். இவை அனைத்தையும் தடுத்து காப்பாற்றவேண்டிய அரசு வேடிக்கை பார்த்தது. உச்ச நீதிமன்றம் " உலகின் மிகப்பெரிய மக்கள் ஆட்சி நடக்கும் ஒரு நாட்டில் 1984ல் நடந்த சீக்கிய இனத்தை அழிக்கும் கலவரத்தில் தலைநகரத்தின் காவல்துறையும் மாநில அரசு இயந்திரமும் உலகத்தின் முன்னால் நாம் தலைகுனிய வேண்டிய நிலையில் நிறுத்திவிட்டன" என்று சொல்லியது. 



1984க்கு பிறகு 27 வருடங்கள் கடந்துவிட்டது இந்த 27 வருடங்களில் இந்தியாவின் மக்களாட்சி இக்கலவரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் காட்டுமிராண்டிகளை என்ன செய்தது. இதை விசாரிக்க இது வரை 10 விசாரணை கமிஷன்கள் அமைக்கப்பட்டுள்ளது.. 

மார்வா கமிஷன் 
மிஸ்ரா கமிஷன்
கபூர் மிட்டல் கமிட்டி
ஜெயின் பானர்ஜி கமிட்டி
பொட்டி ரோசா கமிட்டி
ஜெயின் அகர்வால் கமிட்டி
அஹுஜா கமிட்டி
தில்லான் கமிட்டி 
நரூலா கமிட்டி
நானாவதி கமிஷன் 

என்று 2005 வரை கிட்டத்தட்ட 21 ஆண்டுகள் விசாரணை மட்டுமே நடந்தது. 2007ல் நீதிமன்றத்தில் ஜகதீஸ் டைட்லர் மேல் இருந்த குற்றாசாட்டுகள் அனைத்தில் இருந்தும் விடுவிக்கப்பட்டர். இதன்பிறகு 2009 தேர்தலின் போது இதில் குற்றம் சாட்டப்பட்ட ராஜேஸ் டைட்லர், சஜன் குமார் இவர்களுக்கு தேர்தலில் கொடுக்கப்பட்ட சீட்டு விளக்கிக் கொள்ளப்பட்டது மட்டுமே மிகப்பெரிய தண்டனையாக உள்ளது. அது கூட ராஜேஸ் டைட்லர் தானாகவே தேர்தலில் இருந்து விலகுவதாக சொன்னார். அதுவும் கட்சிக்கு கெட்ட பெயர் வந்துவிடக்கூடாது என்பதற்காக. இது தான் ஒரு இனப்படுகொலைக்கு இந்தியா எனும் நாடு கொடுத்த மிகப்பெரிய தண்டனை.

இன்னும் கொடுமைகள் எல்லாம் உண்டு இந்த கலவரத்தில் எறிக்கப்பட்ட கடைகள் அலுவலகங்களுக்கு காப்பீடு கேட்டபொழுது காப்பீடு கிடையாது. எனென்றால் கலவரத்தினால் எரிக்கப்பட்டால் காப்பீடு கிடையாது. தீவிபத்திற்கு மட்டும் தான் காப்பீடு என்று சொன்னது நிறுவனங்கள். சீக்கிய மக்கள் அரசிடம் இதை கொண்டு சென்றனர், அவர்களை கொன்றழிக்க நினைத்த இந்திய அரசா இதற்கு செவிமடுக்க போகிறது அவர்களும் காப்பீடு இல்லை என்று சொல்லிவிட்டனர்.

(நன்றி தமிழ்குரல்)
இப்படி உயிர் உடமை என்று இழந்தது மட்டும் போதாது என்று இது வரை நாட்டுக்காக இராணுவம், காவல்துறை என்று பல சேவைகளை செய்த இனமான சீக்கிய இனத்தின் இந்த இனப்படுகொலைகள் நடந்து முடிந்த 16ம் நாள் வந்த நவம்பர் 19ம் தேதி இந்திராவின் பிறந்தநாளிற்காக டில்லி போட் கிளப் சாலையில் நடந்த ஊர்வலத்தில்

"Some riots took place in the country follwing the murder of Indiraji. We know the people were very angry and for few days it seemed that India had been shaken. But, when a mighty tree falls, it is only natural that the earth around it does shake a little."

"ஒரு பெரிய மரம் விழுந்தால் பூமி அதிரத்தான் செய்யும்"

இப்படி தன் நாட்டு மக்களின் மரணம் ஒரு நில அதிர்வு என்று கேவலமாக சித்தரித்தார் ஒரு பிரதமர். இதை விட பெரிய அடி அந்த சீக்கிய மக்களுக்கு வேறு என்ன இருக்க முடியும்.. மேலும் இந்த இனப்படுகொலையை இந்து மக்களுக்கும் சீக்கிய மக்களுக்கும் இடையில் நடந்த கலவரங்களாக சித்தரித்துவிட்டனர். எங்கும் காங்கிரஸ் காட்டுமிராண்டி கும்பலின் பெயரை சொல்லாமல் எதோ ஒரு இந்துமத தலைவர் மரணத்திற்காக சீக்கிய மக்களை கொன்றது போல் சித்தரித்துள்ளனர் அனைத்து அரசாங்க ஆவனங்களிலும்.



இப்படிப்பட்ட உலகின் மிகப்பெரிய மக்களாட்சி நடக்கும் நாட்டிடம் தான் இன்று சிலர் கையேந்தி நிற்கிறார்கள், எங்கள் இனத்திற்கு கொடுமை இழைக்கப்பட்டுவிட்டது அதற்கு நியாயம் தாருங்கள் என்று.

4 comments:

  1. இந்த சீக்கிய படுகொலைகள் பற்றி பிரமராக இருந்த நவீன நீரோ மன்னன் ராஜிவிடம் கேட்ட போது ஆலமரம் விழும் போது ஏற்படும் நில அதிர்வுதான் இது என மக்கள் படுகொலைகளை நியாயபடுத்தி பேசி இருக்கிறான்... 1985 சனவரியில் பதவி ஏற்ற ராஜிவ் அமைச்சரவையில் சீக்கியர்களை கொலை செய்த எச்.கே.எல்.பகத், ஜெகதிஷ் டைட்லர் போன்ற கொலைகாரர்களுக்கு அமைச்சர் பதவி அளிக்கப்பட்டது... சீக்கிய படுகொலையில் முதல் குற்றவாளி ராஜிவ் தலைமையில் இருந்த அமைச்சரவையில் கொலைகார கூட்டம் இருந்ததது இயற்கையானதே...

    ReplyDelete
  2. நன்றி தமிழ் குரல் இதை விட்டுவிட்டேன்.. இப்பொழுது இணைத்து விடுகிறேன்..

    ReplyDelete
  3. இந்திரா கொலையில் அரச குடும்பத்திற்கு தொடர்பு இருப்பதாக விசாரணை குழு அறிக்கை கொடுத்ததாகவும், அதை இராசீவ் பாராளுமன்ற விவாதத்திற்கு விடாமல் மறைத்துவிட்டதாகவும் சொல்கிறார்கள்... இந்தியாவின் அரச குடும்பம் எது? தன் சொந்த தாயின் கொலை / பிரதமரின் கொலைப் பற்றிய அறிக்கையை ஏன் இராசீவ் மறைத்தார்...?

    ReplyDelete
  4. வனிதாபாரிJuly 30, 2011 at 4:27 AM

    அப்பன் செய்ததை தான் இப்போ மகன் செய்திருக்கிறான் ஈழ்த்தில் பொந்தியா எப்போது இந்த பன்னாடை குடும்பத்தில் இருந்து விடுதலை பெறுகிரதோ அப்போது தான் பொந்தியாவிற்கு உண்மையான விடுதலை.

    ReplyDelete