Friday, July 15, 2011

நிலா அம்மா - சூன் 26



சூன் 26 மெழுகுதிரி ஏந்தும் நினைவேந்தல் நிகழ்வை முடிவு செய்து அனைவரும் அவர்களுக்கு தெரிந்த இயக்கங்களை தொடர்பு கொண்டு அவர்களின் ஆதரவையும் பங்களிப்பையும் பெறுவது என்று முடிவு செய்யப்பட்டது. அனைத்து தோழர்களும் அவர்களுக்கு தெரிந்த அமைப்புகளையும் தனிபட்ட மக்களையும் தொடர்பு கொண்டு நிகழ்வை பற்றியும் அதன் தேவையையும் உணர்த்தினோம். அப்படி தோழர் ராசராசன் அவருக்கு தெரிந்த ஊழலுக்கு எதிரான ஒர் அமைப்பான ஊழலுக்கு எதிரான இந்தியா என்ற அமைப்பில் இருந்த நிலா அம்மாவை தொடர்பு கொண்டார். அவர் ஆதரவை மட்டுமல்ல அவரும் எங்களுடன் சேர்ந்து களப்பணியில் பங்கு கொண்டார். 

இங்கு 20 இளைஞர்கள் சேர்ந்து கண்ணை மூடிக்கொண்டு ஒவ்வொரு முறையும் ஒருவர் கொடுக்கும் யோசனையை செயல்படுத்திக் கொண்டிருந்தோம். அப்படி பின்பற்றிய வழிகளில் எந்தளவு நம்முடைய நோக்கத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கப்போகிறது என்பது தெரியாமலேயே.  அந்த சமயத்தில் தான் நிலா அம்மா எங்களுடன் கைகோர்த்தார் அவர் எங்களின் தாயரின் வயதினர் என்றாலும் ஒரு சக தோழி போல் ஓடி ஓடி உழைத்தார். சைதாப்பேட்டையில் தனி ஆளாக ஒவ்வொரு கடையிலும், ஆட்டோ ஸ்டாண்ட்களிலும் துண்டறிக்கை கொடுத்து பிரசாரம் செய்தார். 

ஒரு நாள் திநகர் பேருந்து நிறுத்தத்தில் களப்பணி செய்வது என்று முடிவு செய்து ஒரு 6 பேர் ஒன்று கூடினோம். நிலா அம்மாவும் வந்தார்கள் எங்களுடன் இணைந்து களப்பணி செய்ய. அனைவரும் ஒரு தேநீர் கடையில் கூடியபொழுது வந்து இறங்கிய நிலா அம்மா நேராக கடை முதலாளியிடம் சென்று துண்டறிக்கையை கொடுத்து அவரை நிகழ்வுக்கு அழைத்துவிட்டு வந்து தான் வாங்கி வைத்திருந்த தண்ணீரை குடித்தார். 

அதன் பிறகு கிட்டத்தட்ட ஒரு அரை மணிநேரம் பேருந்து நிறுத்ததிற்கு உள்ளே பணியாற்ற சென்ற பொழுது அனைவரும் துண்டறிக்கை கொடுத்து கொண்டிருந்தோம். அங்கிருந்த போக்குவரத்து துறை பணியாளர்கள் நாங்கள் அவ்வாறு உள்ளே துண்டறிக்கை கொடுக்க கூடாது என்று சொன்ன பொழுது அனைவரையும் ஒருங்கிணைத்து வெளியில் செல்லலாம் என்று இவரை தேடியபொழுது இவரை கண்டுபிடிக்கவே ஒரு 10 நிமிடத்திற்கு மேல் ஆனது. நாங்கள் கொடுத்து கொண்டிருந்த இடத்தில் இருந்து பேருந்து வெளியில் செல்லும் வாயில் அருகே நின்று துண்டறிக்கை கொடுத்துக்கொண்டிருந்தார். அதன்பிறகு பனகல் பூங்கா அருகே சென்று துண்டறிக்கை விநியோகத்தை தொடர்ந்தோம் இது அனைத்தும் மதியம் 1 மணியில் இருந்து கொளுத்தும் வெயிலில் எந்தவித அயர்ச்சியும் இல்லாமல் எங்களின் சகதோழியாகவே முழு வேகத்துடன் பணி புரிந்தார். 

நிகழ்வுக்கான நாளும் வந்தது மெரினாவில் அனைவரும் ஒன்று கூடினோம். அப்பொழுது நாங்கள் ஏற்கெனவே தயராக வைத்திருந்த ஆடையை அணிந்து கொண்டு அவரும் ஒரு தன்னார்வதொண்டராக கூட்டத்தை ஒழுங்கபடுத்த எங்களுடன் கைகோர்த்தார். ஆயிரக்கணக்கான மக்கள் வந்த பொழுதும் கடைசிவரை அசராமல் எங்களுடன் இணைந்து பணியாற்றினார். முழக்கங்கள் இட்டபொழுது தனது முழு உணர்வுடனும் வேகத்துடனும் முழக்கமிட்டார். 

இந்த நிகழ்வில் எங்கள் அனைவருக்கும் பலவிதமான அனுபவங்கள் கிடைத்தது. ஆயிரக்கணக்கான மக்களை ஒரு இடத்தில் திரட்டுவதற்கு பிரபலங்களால் தான் முடியும் என்ற மாயை எங்களை விட்டு ஓடியது. அதையும் தாண்டி நிலா அம்மா போன்ற ஓர் தோழி இருந்தால் போதும் இவ்வுலகில் நாம் சாதிக்க முடியாதது ஏதுமில்லை.. ஒவ்வொரு இடத்திலும் இவரின் வேகம், உணர்வுப்பூர்வமான பேச்சுக்கள் என்று அனைத்தும் என்னையும் தோழர்களையும் மேலும் வேகமாக வேலை செய்ய தூண்டிய தூண்டுகோலாகவே அமைந்தது..

1 comment:

  1. பாஜீவ் பூந்தியை , பூந்தியாக்க யார் காரணம் ?
    1) மோனியோ பூந்தி
    2) சு சாமி
    3) ச சாமி
    4) பிரேமா தாசன்
    5) இஸ்ரவேல்
    6) பெரியண்ணன்
    7) மேலே உள்ள அனைவரும்

    Please tick the correct answer.

    ReplyDelete