Saturday, January 29, 2011

விலைவாசி குறைந்துவிட்டது

நான் புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவன். இன்று சனிக்கிழமை இந்த வாரம் முழுவதும் ஓவ்வொரு கடையில் ஒரு விலை சொன்னார்கள் சிகரெட்டுக்கு. எனது அலுவலகத்துக்கு அருகே உள்ள கடையில் நேற்று ஒரு சிகரெட் 6 ரூபாய் என்றார்கள் அதற்கு முதல் நாள் 5ரூபாய் 50காசு அதாவது வழக்கமாக 5 ரூபாய்க்கு விற்க்கப்படும் சிகரெட் கோல்ட்பிளாக் கிங்ஸ் இரண்டு நாட்களில் ஆறு ரூபாய் ஆனது..

நமக்கு எங்கே இந்த விலையேற்றத்தை பற்றிய கவலை இருக்கிறது, தேவை என்றால் எவ்வளவு காசு கொடுத்து வேண்டுமானாலும் கொடுத்து வாங்குவோமே. சமையலுக்கு தேவையான அத்தியாவசிய பொருளான வெங்காயமே 8 ரூபாயில் இருந்து 80 ரூபாய் ஆன பொழுது அசராமல் எனக்கு இரண்டு கிலோ வெங்காயம் கொடு என்று கேட்டு வாங்கியவர்கள் இந்த ஒரு ரூபாய் ஏற்றத்திற்கா அஞ்ச போகிறோம். நேற்று காலையில் இருந்து மதியம் 3 மணிவரை சிகரெட் வாங்கி ஊதி தள்ளினேன். சிகரெட் குடிப்பதை குறைக்க வேண்டும் என்று கையில் வாங்கி வைத்துக் கொள்வதில்லை வேண்டும் எனும் பொழுது கடைக்கு சென்றே வாங்குவேன் ஒவ்வொரு சிகரெட்டாக.

மாலை 3 மணிக்கு பிறகு சென்றால் கிங்ஸ் தீர்ந்துவிட்டது என்றார். ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்காது எனும் பொழுது ஊதிய வாய் மட்டும் சும்மாவா இருக்கும் சரி இருப்பதை கொடு என்று வில்ஸ் வாங்கி புகைத்தேன் நேற்று. இன்று காலையிலும் இது தொடர்ந்தது. மாலை சென்று சிகரெட் கேட்டால் கிங்ஸும் இருந்தது ஆனால் விலையும் 50 பைசா குறைந்து 5.50 ஆகிவிட்டது.

இப்ப சொல்லுங்க விலைவாசி குறைந்துவிட்டதா இலையா. ஏன் வெங்காயம் கூட 80 ரூபாயில் இருந்து குறைந்துவிட்டது இரண்டு நாட்களாக தங்கம் விலை கூட குறைந்து வருகிறது. பெட்ரோல் மூச்சுவிடக் கூடாது.. எனது முதல் பதிவுகளை படித்து பெருமூச்சு விட்டுக்கோங்க..


யாருப்ப அது மனிதவள மேம்பாட்டாளர் நீ இந்த பதிவை படிக்காதே நீ வேற விலைவாசி குறைந்துவிட்டது என்று என் சம்பளத்தையும் குறைத்துவிட போகிறாய்..

Friday, January 28, 2011

இணைய புலிகளின் பாய்ச்சல்

என்னடா இவன் இணைய புலிகளின் பாய்ச்சல் என்று சொல்லியிருக்கிறானே இவனும் ஒரு கருணாவின் சொம்பு தூக்கியா என்று நினைத்துவிட வேண்டாம். எப்படியும் ஒரு திராவிட திம்மி வந்து நம்மை இணையபுலி என்று சொல்ல தான் போகிறது அதை முதலில் சொன்ன பெருமை என்னை சார்ந்ததாக இருக்கட்டுமே அதையும் அந்த திராவிட திம்மிகளுக்கு ஏன் விட்டு கொடுக்க வேண்டும்..

தமிழக மீனவர்களுக்காக இதுவரையில் இல்லாத ஒர் எழுச்சி இன்று நடந்து கொண்டுள்ளது இதை சரியான நோக்கத்துடன் கொண்டு செல்வதே இப்பொழுது நமது கடமை. இதில் நமது தாயாதி சண்டைகளை ஒதுக்கி வைத்துவிட்டு போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் துற்றட்டும் என்று நம் வழியை நாம் தொடர்வேதே சிறந்த நடவடிக்கையாக இருக்கும்..

இதை சொல்ல காரணம் ஒரு ட்வீட்டில் ஒருவர் தற்கொலை செய்து கொண்டவர்கள் என்று மீனவர்களை கிண்டல் செய்திருந்தார் அவருக்கு பதிலளித்து ட்வீட்டில் நேரம் வீணடிக்க கூடாது நாம். இக்பால் செல்வன் என்பவர் கடந்த நாள் முழுவதும் கிட்டதட்ட 300க்கும் மேல் ட்வீட் செய்தார். இதேபோல் பலர் செய்து கொண்டுள்ளனர் இதை தொடர்ந்தாலே போதும். ஏன் குறை சொல்லி பதிவிட்டவரின் ட்வீட் கூட கணக்கில் தான் வரும் எனவே இதையெல்லாம் கணக்கில் எடுக்காமல் ட்வீட் செய்யுங்கள்..

இது இணையபுலிகளான நமக்கு கிடைத்திருக்கும் ஒர் அருமையான வாய்ப்பு.. நமது குரலை பதிவு செய்ய. மேலும் இந்திய அரசிற்கு அனுப்பு பெட்டிசனிலும் கையெழுத்திட்டு உங்களின் வேதனையை அரசிற்கு தெரியபடுத்துங்கள்..



இது நமக்கு மட்டுமே என்று நினைக்காமல் முடிந்த அளவு ஆங்கிலத்தில் செய்யவும். அதுவே உலகளாவிய அளவில் நமது வேதனையை கொண்டு போய் சேர்க்கும்..

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுங்கள்

Thursday, January 27, 2011

நன்றி கலைஞரே நன்றி!!



முத்தமிழறிஞர் முதல்வர் கலைஞர் அவர்களுக்கு... ஆரோக்கியமான வணக்கம். நான்தான் சென்னை அரசு பொது மருத்துவமனை பேசுகிறேன்!

ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் சுட்டுக் கொல்லப்பட்டு அவரது உடல் என்னில் வைக்கப்பட்டிருந்ததால் எனக்கு ராஜீவ் பெயரை சூட்டுமாறு ஜனவரி 13-ம் தேதி பீட்டர் அல்போன்ஸ் சட்டசபையில் கோரிக்கை வைக்க, அதை உடனடியாக ஏற்றுக்கொண்டீர்கள். அடடா.. காங்கிரஸ்காரன் கேட்டால் சும்மா இருப்பீர்களா? 5-வது நாளே ஜனவரி 18-ம் தேதி என் வாசலில் ‘இராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை’ என போர்டும் வைத்துவிட்டீர்கள்.

நேற்று காலை இரண்டு கம்பவுன்டர்கள் பேப்பரை வைத்து பேசிக்கொண்ட பேச்சு என் சுவர்களில் எதிரொலித்தது. அதையடுத்துதான் இந்தத் தகவலே எனக்குத் தெரியும்.

மணியரசன், சீமான் போன்ற சிலரின் எதிர்ப்பைத் தவிர மருந்துக்குக் கூட தமிழ்நாட்டில் இதற்கு எதிர்ப்பு வராததால் இதில் சம்பந்தப்பட்ட நானே பேசுவது என முடிவெடுத்திருக்கிறேன். ‘அம்பாள் என்றைக்கடா பேசினாள்?’ என நீங்கள் பராசக்தியில் கேட்டதுபோல், ‘கட்டடம் என்றைக்கடா பேசும்?’ என்று சிலர் கேட்கக் கூடும்.

ஏன் நீங்கள் கட்டிய வள்ளுவர் கோட்டம் தமிழ் பண்பாடு பேசவில்லையா? நீங்கள் எழுப்பிய பூம்புகார் சிற்பக் கூடம் தமிழன் தொன்மை பேச-வில்லையா? நீங்கள் எழுப்பிய திருவள்ளுவர் சிலை சுனாமியையே எதிர்த்து நின்று பேசவில்லையா? அந்தக் கல் படைப்புகள் எல்லாம் பேசும்போது... தினம் தினம் ரணங்களைக் காணும் வாய்ப்பு பெற்ற எனக்கு ஏன் பேச்சு வராது?

பேசுகிறேன் கேளுங்கள். நான் பேசுவதை விட உங்கள் அன்புக்கும், ஆசிக்கும் உரிய ஒருவர் பேசியதையே மீண்டும் பேசுகிறேன்.

சமீபத்தில் ‘அறிஞர் அண்ணா 100 அரிய தருணங்கள்’ என்ற நூல் வெளியீட்டு விழாவில் உங்களது இளவல் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பேசினார்.

‘பேரறிஞர் அண்ணா சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அப்போது அய்யா (பெரியார்) அண்ணாவை பார்க்க அங்கே வருகிறார். குன்றக்குடி அடிகளார் எல்லாம் வந்தார்கள். அவர்கள் எல்லாம் பார்த்துவிட்டுப் போன பின்பு, அண்ணாவை தனியாக சந்தித்த அய்யா, ‘நீங்க உடம்பைப் பாத்துக்கணும். அதுக்கு எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை... இந்தாங்க இத வச்சிக்கோங்க’ என்று கொஞ்சம் பணத்தை எடுத்து அண்ணாவிடம் நீட்டினார். எங்களுக்கே தெரியாது, அய்யா பணம் எடுத்து வந்திருந்தது.

அப்போது கண்கலங்கிய அண்ணா, ‘இல்லீங்கய்யா... அதுக்கெல்லாம் ஏற்பாடு பண்ணிட்டாங்க. உங்க அன்பே போதும். வேணும்னா நானே வந்து அய்யாக்கிட்ட வாங்கிக்கிறேன்’ என்று பதில் சொன்னார். அந்த இடம் முழுவதும் உருக்கம் நிலவியது. அய்யா அவ்வளவு லேசாக யாருக்கும் பணம் கொடுக்க மாட்டார். இரண்டே பேருக்குத்தான் கொடுத்திருக்கிறார். ஒருவர் கலைவாணர், இன்னொருவர் அண்ணா...’’ என்று உங்கள் கருப்புச் சட்டைக் கண்மணி அன்று பேசியபோது கேட்டவர்களின் கண்கள் பனித்து; இதயம் கனத்தது.

அந்த வரலாற்றுப் பெருமை மிக்க சந்திப்பு என் மடியில்தானே நடந்தது! தமிழகத்தில் அறியாமை நோயை முற்றாக ஒழித்த இரண்டு சுயமரியாதை வைத்தியர்கள் அன்று என் மடியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். ஆனால், எனக்கு அவர்கள் பெயரை சுமக்கும் பாக்கியம் கிடைக்கவில்லையே..? ஏன் கலைஞர் அய்யா?

ரொம்ப காலம் ஆகிவிடவில்லை அய்யா... உங்கள் அருமைப் புதல்வர், துணைமுதல்வர் மு.க.ஸ்டாலின் ஜனவரி 6&ம் தேதி என் வளாகத்தில் இதய ஊடுருவி ஆய்வகத்தை திறந்துவைத்தார். அப்போதுகூட மிசா காலத்தில் தானும் தன் தோழர்களும் இந்திராகாந்தி அரசாங்கத்தால் பட்ட இன்னல்களையும் அதையடுத்து என் மடியில் சிகிச்சை எடுத்துக்கொண்ட தருணங்களையும் உருக உருகப் பகிர்ந்துகொண்டார். கல்லால் ஆன என் இதயம் கூட சிலிர்த்தது. இது அண்ணாவிடம் இரவல் பெற்ற உங்கள் இதயத்தில் ஊடுருவவில்லையா அய்யா?

தி.மு.க. என்ற இயக்கத்தின் அடி உரமாக இன்றும் திகழும் அந்த மிசா தியாகிகளில் ஒருவரின் பெயரைக் கூட சுமக்க அருகதை அற்றுப் போய்விட்டேனா நான்?

அன்று ஈழப் பகுதிகளுக்கு ராஜீவ் காந்தி அனுப்பி வைத்த அமைதிப்படை... சுமார் 12 ஆயிரம் தமிழச்சிகளின் கற்பை சூறையாடியதாகவும் அதைவிட பலரது உயிர்களை துப்பாக்கிக் குழல்களால் குடித்ததாகவும் செய்திகள் வந்தன. அப்போது உங்கள் தமிழ் குருதி கொதித்தது. ‘தமிழனின் ரத்தக் கறை பூசிவரும் இந்திய ராணுவத்தை வரவேற்கப் போகமாட்டேன்’ என்று தமிழ் கர்வத்தோடு செயல்பட்ட நீங்கள்... இன்று அந்த அமைதிப்படையை அனுப்பிய ராஜீவின் பெயரையா எனக்கு சூட்டுகிறீர்கள்? ஐயகோ...

அந்த ஈழத்து தமிழச்சிகள் எப்படி துடித்திருப்பார்கள் என்று இந்த மருத்துவமனைக்குத் தெரியாதா என்ன? பெரியார், அண்ணா, கக்கன் என தமிழ் சமுதாயத்தை ஆரோக்கியப்படுத்திய தலைவர்களை நான் ஆரோக்கியப்படுத்தியிருக்கிறேன். இன்றோ..?

அதிகாலை வேளையில் என் வளாகத்தில் பார்த்தீர்களானால் நாட்டு வைத்தியத்தையும் தாண்டி மஞ்சள் காமாலை நோய்க்கு ஊசிபோட நிறைய பேர் வருவார்கள். அவர்களையாவது நான் குணப்படுத்திவிடுவேன். ஆனால் உங்களுக்கு காங்கிரஸ் காமாலை பிடித்திருக்கிறது என்று சொல்கிறார்களே? அந்த நோயை நான் எப்படி குணப்படுத்துவேன்?

ஒரு குழந்தை, ‘எனக்கு இன்ன பெயரை வைக்காதே’ என்று தாய் தந்தையிடம் சொல்லத் தெரிவதில்லை. ஆனால், அதே குழந்தை விவரம் தெரிந்தபிறகு தனக்கு இந்த பெயர் முரணாக இருக்கிறது என்று தெரிந்தால் அதை தூக்கி எறிந்து பொருத்தமான புனைப் பெயர் சூட்டவும் தயங்குவதில்லை. இது தங்கள் பொதுவாழ்க்கை எனக்கு கற்றுக்கொடுத்த வரலாறு!

எத்தனையோ பெயர் சூட்டுதல்கள் மூலம் வரலாற்றை மீட்டெடுத்த தாங்கள், இந்த பெயர் சூட்டுதல் மூலம் வரலாற்றை மறைத்துவிட்டு கூட்டணியை மீட்டெடுக்க பிரயத்தனப்பட்டிருக்கிறீர்கள் என்பது புரிகிறது. இனி ‘திராவிட சாஸ்திரிகள்’ என்று தங்களுக்கு காங்கிரஸ் சார்பில் பட்டமளிப்பு விழா நடக்கலாம். அதில் தங்கபாலுக்கள் கோரிக்கை வைத்தால் புதிய தலைமைச் செயலகத்துக்குக் கூட சோனியாவின் பெயரை நீங்கள் சூட்டலாம்.

ஆனாலும், நல்லவேளையாக எனக்கு ராஜபக்ஷே பெயரை சூட்டாமல் போனீர்களே? அதுவரைக்கும் உங்களுக்கு நன்றி கலைஞரே..!

சமீபத்தில் படித்த கட்டுரைகளில் மிகவும் பிடித்தது நன்றி தமிழகரசியல்

Monday, January 17, 2011

ஒடுக்கப்பட்டதை மறந்துவிட்டார்களா?? இன்று..





வைக்கம் போராட்டத்திற்கு முன்பாகவே தீண்டாமையை எதிர்த்து திருவனந்தபுரம் சமஸ்தானத்தை எதிர்த்து நடந்த மிகப்பெரிய பாட்டாளி மக்கள் போராட்டமே தோள்சீலை போராட்டம். தீண்டாமை தான் நாம் கேள்விபட்டது எல்லாம் ஆனால் காணாமை என்பதும் இருந்துள்ளது(உலகில் எந்த மூளையிலு நடக்காத கொடுமை). பரையைனை தொட்டலே தீட்டு சாணாரை பார்த்தலே தீட்டு என்று வாழ்ந்த காலம். மிக அதிக தூரமில்லை நமக்கும் அதற்கும். இது நடந்தது 1800ம் ஆண்டுகளில் இருந்து. திருவனந்தபுரம் சமஸ்தானம் சட்டமே இயற்றியது இந்த பாகுபாடுகளை வைத்து..

யார் இந்த சாணர்கள், இவர்களை இந்த பெயர் சொல்லிக்கூப்பிடகூடாது என்று பெயரை கூட மாற்றிவிட்டனர் நாடார்கள் என்று. ஆனால் இவர்களின் பெயர் சான்றோர் நாடாள்வர் என்பதே. திருத்துறை பூண்டி வடகாடு கோயிலில் உள்ள கல்வெட்டில் நாடாவன் என்று இவர்களை நாடாள்வான் என்று குறிப்பிடுகிறது, இது 12ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு. தூத்துகுடியில் சாத்தான்குளம் கல்வெட்டும் நாடாள்வன் என்றே குறிப்பிடுகிறது இந்த கல்வெட்டு கி.பி. 1644ம் ஆண்டு கல்வெட்டு. இப்படி சான்றோர் நாடாள்வான் என்ற குறிப்பிட பட்ட இனம். சான்றோர் என்று அழைக்கப்பட்டு அதன் பிறகு சாண்றார், சாணார் என்று மருவி வந்ததை பல அறிஞர்கள் சுட்டிகாட்டியுள்ளனர். இப்படி வாழ்ந்த மக்களையே அதாவது நாடாண்ட ஒரு பரம்பரையை பார்த்தலே தீட்டு என்று சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

18ம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் திருவனந்த சமஸ்தானம் கொண்டுவந்த சட்டத்தில் பறையர், புலையர், ஈழவர் போன்றவர்கள் இத்தனை அடி தூரத்தில் இருந்து பேச வேண்டும் சானார் போன்றோர்கள் கண்ணில் கூட படக்கூடாது (உலகத்தில் இன்று வரை பார்த்த தீண்டாமைகளின் உச்சகட்டம் இது, பார்க்க கூட கூடாது) இதை மீறினால் தண்டனை என்று வகுக்கப்பட்டிருக்கிறது. இது மட்டுமல்ல கீழ் சாதிமக்கள் சம்பளம் இல்லாமல் வேலைபார்க்கவும் வைக்கப்பட்டனர் சட்டத்தின் மூலமாக 1814ம் ஆண்டு.

சமூகத்தின் இப்படிபட்ட கொடூரங்கள் எத்தனை காலம் தான் தொடரும் இவர்களுக்காக குரல் கொடுத்தவர் தான் வைகுண்ட சாமி (ஜெயலலிதா இவரின் பூஜைக்கு தான் போயிட்டு இப்பவந்தாங்க) இவர் மக்களை முழுவதுமாக ஒன்று சேர்த்தார். இவரின் காலத்தில் இவருக்கு பெருமாள் என்று பெயர் வைத்தபொழுது சமஸ்தானத்தில் இருந்து எதிர்ப்பு வந்து முத்துகுட்டி என்று பிறகு பெயர் மாற்றினார்கள். இவர் வளர்ந்து தன் இன மக்களுக்காக போராடினார். இவர் துறவரம் மேற்கொண்டவர் சாமியாக பார்க்கப்பட்டவர், இவர் இட்ட முதல் கட்டளையே தன்னை பார்க்கவரும் பெண்கள் மேலாடை அணிந்து வர வேண்டும் என்பது தான். ஆம் கீழ்சாதி மக்கள் மேலாடை அணியக்கூடாது, மார்பை மறைக்க கூடாது. அதாவது உயர்ந்த மனிதர்கள் முன் திறந்த மார்புடனே இருக்க வேண்டும். இவராலும் வேலுதம்பியாலும் இந்த சமூகத்தினர் ஒரளவு ஒன்றினைந்தனர். வைகுண்டசாமி கைது செய்யப்பட்டார் அதன் பிறகு இனி ஊர் ஊருக்கு சென்று பேசக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார். திரும்பிவந்தவர் தனது பனந்தோப்புக்குள் சென்றவர் மறைந்துவிட்டார் என்று கூறுகிறார்கள். எத்தனை கத்திகள் அவர் உடலை தடவியதோ யாருக்கு தெரியும்..



17ம் நூற்றாண்டின் இறுதியிலேயே ஆங்கிலேயேன் இந்தியாவிற்குள் வந்துவிட்டான், நாஞ்சில் நாட்டையும் அவர்களின் கிருத்துவ மிஸினரிகள் அடைந்திருந்தனர். இவ்வளவு அடக்குமுறைகளையும் கண்ட மக்கள் தனக்கு இந்து மதமே வேண்டாம் என்று தூக்கி எறிந்துவிட்டு கிருத்துவமததிற்கு மாறினார்கள். அங்கு சென்றாலும் அவர்களுக்கு விமோசனம் இல்லை என்று நீ மதம் மாறினாலும் தாழ்ந்த சாதி தான் என்று மதம் மாறிய பெண்களின் மேலாடை கிழிக்கப்பட்டது அடித்து நொறுக்கப்பட்டனர். பாதிரியார் பிட் அவர்கள் தொடுத்த வழக்கில் பத்மநாபபுரம் நீதிமன்றம் கிருத்துவர்களாக மாறிய நாடார் இன பெண்கள் மார்பில் துணி அணியலாம் என்று உத்தரவிட்டார். இதன் பிறகே பலர் மொத்தமாக கிருத்துவ மதத்திற்கு மாறினார். மானம் முக்கியமா கடவுள் முக்கியமா என்று கேட்டால் இன்று கூட சொல்லலாம் மானம் தான் முக்கியம். சமூகத்தில் அடக்கி ஒடுக்கி வைக்க பட்ட மக்கள் என்ன செய்வார்கள் இதுவரை கடைபிடித்த மதத்தை தூக்கி கடாசிவிட்டு கிருத்துவத்திற்கு மாறினார்கள்.

அத்துடன் நிற்கவில்லை கொடுமை ஆங்கிலேயேன் தான் ஒவ்வொரு பிரேதசத்துக்கும் ஏற்றார்போல் சட்டம் கொண்டுவந்து மக்களை ஒன்று சேரவிடாமல் தடுத்தானே. திரும்பவும் அடக்கு முறை வ்ந்தது தோள் சீலையை அகற்ற உத்தரவிடப்பட்டது 1829ல் திருவிதாங்கூர் சமஸ்தானத்தால். திரும்பவும் அடிதடிகள் இந்த முறை பல உயிர்கள் காவு வாங்கப்பட்டன எதிர்த்தவர்கள் வெட்டி சாய்க்கப்பட்டனர். மன்னன் கை கட்டி வேடிக்கை பார்த்தான். ஆனால் மக்கள் இம்முறை தொடர்ந்து போராடினர் இவர்களுக்கு ஆதரவாக பிற சமூக மக்களும், கிருத்துவ மிசினரிகளும் போராட்டத்தில் குத்தித்தன. சென்னையில் இந்த முறை வழக்கு பதிவு செய்யப்பட்டது 1847ம் வருடம் தாழ்த்தப்பட்ட சாதி மக்கள் அவர்கள் கிருத்துவத்திற்கு மாறி இருந்தாலும் தோள் சீலை அணிய உரிமை இல்லை என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது கூட சாட்சிகளாக வந்த நாடார் இனமக்களை 64 அடி தூரம் தள்ளியிருந்தே சாட்சி அளித்தனர். பறையர் இனமக்கள் 32 அடி தள்ளி நின்று சாட்சி அளித்தனர்.



இதன்பிறகும் போராட்டம் தொடர்ந்தது. பாதிரியார் பீட்டும் அவரது மனைவியும் இந்த இன மக்களுக்காக பெரும் தொண்டு புரிந்தனர். கிருத்துவ பெண்களுக்காக தனியாக அடை வடிவமைத்தும் கொடுத்தனர். இந்த நாடார் இனமக்களின் தொடர் போராட்டத்திற்குமுன் ஒன்றும் செய்ய இயலாமல் 1855ம் ஆண்டு திருவிதாங்கூர் சம்ஸதானம் அடிமை முறையை முற்றிலும் ஒழித்து சட்டம் இயற்றியது. இதன் பிறகும் தோள் சீலை உரிமை மறுக்கப்பட்டு 1859ல் ஜூலை 26ம் நாள் தான் மன்னரிடம் இருந்து ஒரு உத்தரவு வந்தது, தோளுக்கு சீலை அணிவது மறுக்கப்பட்ட பெண்கள் சீலை அணிந்து கொள்ளலாம் ஆனால் மேல் சாதி பெண்கள் அணிவது போல் அணியக்கூடாது என்று உத்தரவு வந்தது. இது தான் தோள்சீலை போராட்டம்.

ஆனால் இன்று மக்களின் போராட்டம் வேறுவழியில் சென்று கொண்டிருக்கிறது, தென்மாவட்டத்தின் இன்றைய சாதிகொடுமைகளுக்கு இவர்களும் காரணம் என்று அறியும்பொழுது எப்படி இப்படிபட்ட ஒரு வரலாற்றினை மறந்தார்கள் இம்மக்கள் என்பது புரியவில்லை??? ஏன் இந்த போராட்டத்தை பற்றி தெரியாத அந்த இன மக்கள் பலர் உள்ளனர். எனது நண்பர் ஒருவரிடம் கேட்டபொழுது அவருக்கும் இதை பற்றி தெரியவில்லை..

ஓடம் ஒரு நாள் வண்டியில் ஏறும்
வண்டி ஒரு நாள் ஓடத்தில் ஏறும்

என்பது போல் ஒரு காலத்தில் தாங்கள் ஒடுக்கப்பட்டதை மறந்து அதுவும் 1847ல் சென்னையில் நீதிமன்றத்தில் யாரால் இவர்கள் 64 அடி தள்ளி நிற்கவைக்கப்பட்டர்களோ அவர்களே 1899ல் கமுதி கோயில் வழக்கில் இவர்களும் கோயிலுக்குள் வரலாம், நால்வர்ண சாதியில் மேல் வர்ணத்தை சேர்ந்தவர்கள் தான் சான்றோர் நாடார் என்று சாட்சி சொன்ன தில்லைவால் திட்சீதர்களுக்கு பிறகு இவர்களுக்கும் வந்துவிட்டதா ஆதிக்க சாதி எண்ணம்..

அரசியல் மற்றும் ரவுடியிசத்தில் சம்பந்தமில்லாத சாதாரண மக்கள் சிலரும் இதையே செய்வதனால் வந்த வெளீப்பாடே ஒட்டு மொத்த ஒரு சமூகத்தை நோக்கி நான் எழுப்பிய கேள்வி.. மற்றவகையில் நாடார்களில் பெரும்பாண்மையாக சாதி பார்க்காத மக்கள் மேல் எந்த வெறுப்பும் இல்லை எல்லா இடத்திலும் சில புல்லுறுவிகள் இருக்க தான் செய்கின்றனர், அவர்களை களை எடுக்க வேண்டியதும் நமது பொறுப்பே..

நன்றி
1. அய்யாவழி மக்கள்
2. திருவிதங்கூர் சம்ஸ்தான ஆவணங்கள் Trivadrum.
3. தென் குமரியின் கதை - அ.கா. பெருமாள்
4. பண்பாட்டு வேர்களை தேடி - பாளையங்கோட்டை சவேரியர் கல்லூரி