Monday, July 26, 2010

தறுதலையின் புலம்பல்

அன்பார்ந்த திரையுலக நண்பர்களே.....

உங்களை நான் என்றும் மறக்கமாட்டேன், என்றும் எங்களுக்கு தோளோடு தோள் நின்ற தோழர்கள் தாங்கள். ஒவ்வொரு முறையும் நமது அரசியல் கட்சிகள் வந்து எங்களின் கைகளை பலப்படுத்தியதோ இல்லையோ தாங்கள் வந்து நின்றீர்கள். இன்று நமக்கிடையே கருத்துகள் மாறிகொண்டு வருகின்றன, நான் அதை தவறாக நினைக்கவில்லை.

நீங்கள் தொழில் நிமித்தமாகவோ இல்லை சொந்தவிசயமாகவோ இலங்கை செல்வதை வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் அசின் போல் பலிகடாவாகி விடுவீர்களோ என்பதுதான் எங்கள் வருத்தம்.

நீங்கள் அங்கு செல்வதால் நம் சொந்தங்கள் மகிழ்ச்சி அடைவார்கள், இத்தனை அடி வாங்கியவர்களுக்கு நீங்கள் அவர்களை சென்று சந்திப்பதால் கிடைக்கும் சந்தோசத்தை வேண்டாம் என்று நாங்கள் தடுக்கவில்லை. ஆனால் அசின் போன்று நம் இனத்தை கொன்று குவித்த ஒருவரின் மனைவியுடன் சென்று அவர்களின் உலக அரசியலின் சதுரங்கத்தில் நீங்களும் பலிகடாவாகி விடாதீர்கள்.

என்று ஈழத்திற்கு(இலங்கை என்று சொல்லவில்லை) தங்கு தடையின்றி யாருடைய தலையீடும் இல்லாமல் நாம் சுதந்திரமாக செல்லமுடியுமோ அன்று நாம் போவது தான் சரி. நமது மக்களுக்கு இந்த சந்தோசத்தை கொடுக்கமுடியவில்லை என்ற வருத்தம் இருந்தாலும். வேறுவழியில்லை இன்றைய உலக சதுரங்கத்தில் நாம் ஒரு பகடைகாயாக மாற்றப்பட்டு பகடியாக எள்ளி நகையாடப்படாமல் இருக்க வேண்டும் என்றால் இது தான் சரியான முடிவாக இருக்கும்.

ஒன்று மட்டும் நிச்சயம், ஒரு விசயத்தை தடை செய்வதால் எந்தவிதமான உபயோகமும் இல்லை ஒரு நாட்டை ஆள்பவன் எப்படி வேண்டுமானாலும் அதை எதிர்கொண்டு சாமர்த்தியமாக சாமாளித்து தனது தேவையை நிவர்த்தி செய்து கொள்வான். ஆனால் நாம் செய்யவேண்டியதை அதே சாமர்த்தியத்துடன் அவர்களின் கையை கட்டிபோட்டுவிட்டு செய்வதே சாலசிறந்தது. இன்று நம் மக்களுக்கு அங்கு தேவை மருத்துவ பணியாளர்கள் இது இன்று மட்டும் அல்ல நாளைய தேவையும் கூட நீங்கள் அதற்கு உதவி செய்யவேண்டும்.

முதல்வர் அவர்களால் தொழிநுட்ப கல்வி கற்க, நம் அகதி மாணவர்களுக்கு அனுமதி கிடைத்துள்ளது. அதே போல் மருத்துவ படிப்புக்கும் அனுமதி வாங்க வேண்டும். மேலும் செவிலியர் படிப்பு படிக்கவும் மருத்துவம் சார்ந்த படிப்பிற்கு துணைபுரியவேண்டும். அவர்களை இங்கேயே கட்டிவைப்பது என்பது சரியல்ல, என்ன இருந்தாலும் தாய்மண் என்பது என்றுமே ஒரு வலி தான், அதைவிட்டு வெளியே வாழ்பவர்களுக்கு எனவே அவர்கள் திரும்பும் பொழுது அவர்களுக்கு சுயமாக வாழ தேவைகளை நாம் செய்து கொடுக்க வேண்டும். இங்கு அகதிகளாக வாழும் மக்களுக்கு முதலில் உதவுவோம் பின்னர் ஈழத்தில் இருக்கும் நம் ரத்தசொந்தங்களுக்கு தேவையானதை செய்வோம்.
கருணாஸ் அவர்களே உங்களுக்கு உங்கள் தாய்மண்ணை பார்க்கும் ஆசை இருப்பது நியாயம் ஆனதே. ஆனால் ஒன்றை மட்டும் நியாபகம் வைத்துக் கொள்ளுங்கள் நீங்கள் உங்கள் தாய் மண்ணை பார்க்க செல்வதை யாரும் தடுக்க முடியாது அனால் இலங்கை அரசாங்கம் அதை விளம்பரம் செய்யவிடாமல் தடுக்க முடியுமா என்று பாருங்கள். தாங்கள் சுதந்திரமாக அங்கு சென்று வரமுடியும் என்றால் சந்தோசம் சென்று வாருங்கள். வாழ்த்துக்கள்!!!

இப்படிக்கு
எந்த அரசியல் அமைப்பையும் சேராத தறுதலை தமிழன்.

Thursday, July 22, 2010

ஏன் தனி தமிழ்நாடு தேவை?? பகுதி 1

இந்திய துணை கண்டம் அங்கிலேயேன் ஆதிக்கத்தில் இருந்து பிரிந்தது. அன்றிலிருந்து இன்று வரை தமிழகம் எப்படியெல்லாம் புறக்கணிக்கப்பட்டு இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரிய வேண்டும். என்பதற்காகவே இந்த் பதிவு.

இந்திய துணைகண்டம் அடிமைசிறையிலிருந்து விடுபட்டது 1947ல். அன்று இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்டவர்கள் தமிழர்களும் தான் வட இந்தியர்களும் தான். ஆனால் இங்கு நினைவில் கொள்ளப்படுபவர்கள் யார்? யார்? இந்தியாவின் முதல் சுதந்திர போராக ஜான்சி ராணி கலந்து கொண்ட 1857 வருடம் நடந்த போரே நினைவு கொள்ளப்படுகிறது. இதை சிப்பாய் கலகம் என்று வர்ணித்தார்கள் ஆங்கிலேயேர்கள்.

ஜான்சி ராணியின் குழந்தை இறந்து விட்டது, இவர் மற்றொரு குழந்தையை தத்து எடுத்து வளர்த்தார். அன்று தத்து எடுப்பது என்பது இந்திய துணைகண்டத்தில் காலகாலமாக இருந்து வந்த நடைமுறை ஆனால் ஆங்கிலேயனிடம் அப்படி ஒரு நடைமுறை இருந்ததா இல்லை வேண்டும் என்றே வாரிசு இல்லாத அரசு என்று அறிவித்து ஜான்சியில் ஆங்கிலேயேன் உரிமை கொண்டாடினானா என்பது தேவை இல்லை. அதுவரை ஆங்கிலேயேனுக்கு கப்பம் கட்டிதான் வந்தது ஜான்சி அரசு.

ஜான்சி ராணி லக்ஷ்மி பாய் தனது சொத்தை காப்பாற்ற வாள் ஏந்தினார். சொத்தை காப்பாற்றா களம் கண்டவர் முதல் சுத்ந்திர போராட்ட வீராங்கனை. சொத்தை காப்பாற்ற இன்று இந்தியா என்று என்ன என்பதை பற்றி சுத்தமாக ஒன்று தெரியாதவர் எல்லாம் கட்சி தலைவியாக இருந்து கைப்பொம்மையை வைத்து ஆட்சி செய்யும் போது இதெல்லாம் சகஜமப்பா.. என்று தான் சொல்லுவீர்கள். ஆனால் இன்று இந்த லக்ஷ்மி பாய் குமரியில் இருந்து காஷ்மீரம் வரை அனைவரும் பாடத்தில் படித்து வருகிறோம். இதுவே உண்மையான ஒன்றாக நிலைநாட்டப் பட்டுவிட்டது.

ஆங்கிலேயேனை எதிர்த்து பிரஞ்சு படை உதவியுடன் போராடினார் மைசூர் புலி திப்பு சுல்தான். இவரின் ஆதரவைப் பெற்று தென்கோடியில் இராமநாத புரத்தில் பிறந்த வீரமங்கை வேலுநாச்சியார், சொத்தை காப்பாற்றவா களம் கண்டார். இவரின் கணவன் ஆங்கிலேயேனை எதிர்த்தார் கப்பம் கட்ட மறுத்தார், நாங்கள் அடிமை இல்லை என்பதை கூறி ஆங்கிலேயேனிடம் சண்டையிட்டார். போரில் இவர் கணவன் இறந்தவுடன். தனது ஒரே மகளை விட்டுவிட்டு வாள் ஏந்தி போராடினார் தன் கணவன் இடத்தில் இருந்து. இவர் போராடியது தனது சிவகங்கை சீமையை காப்பற்றதான் ஆனால் ஆங்கிலேயேன் வாரிசு இல்லாத சொத்து என்று அபகரிக்க நினைத்த பொழுது இல்லை.

நாங்கள் உங்களுக்கு அடிமை இல்லை என்று ஆங்கிலேயேனுக்கு உணர்த்த. இவர் இந்தியாவின் விடுதலை போராட்டத்தில் முதல் வீராங்கனையா ஜான்சி ராணியா. வேலு நாச்சியார் போராடியது 1780 ம் வருடம் அதாவது 77 வருடங்களுக்கு முன். ஜான்சி சொத்துகாக போராடினால் அது சுதந்திர போர், ஆங்கிலேயேனுக்கு அடி பணிய மாட்டேன் என்று போராடியவருக்கு ஒன்றும் இல்லை. ஒரு வீராங்கனை. ஒருவர் பெயர் இந்தியா முழுமைக்கும் தெரியும். மற்றவர் பெயர் சொந்த இனத்துக்கே தெரியாது.

இப்படி சுதந்திரத்திற்காக தமிழகத்தில் இருந்து போராடிய என்னற்ற வீரர் வீராங்கனைகளின் பெயரை மறைத்து. ஏன் நமது பக்கத்து மாநிலம் சென்று கேட்டு் பாருங்கள் வீரபாண்டிய கட்டபொம்மனை தெரியுமா என்று. உதட்டை பிதுக்குவார்கள்.

சேர்ந்தே போராடினோம் சேர்ந்தே சுதந்திரம் பெற்றோம். ஆனால் சுதந்திர போராட்ட வீரர்கள் என்று கேட்டால் திலகரும், காந்தியும், நேருவும் என்று சொல்லுகிறார்கள் இங்கு செக்கிழுத்தவன் மாடாகி போனான் வருபவனுக்கெல்லாம் தலையாட்டும் பொம்மையாய்.

தொடரும்...

Thursday, July 15, 2010

இந்தி வெறியர்களின் மற்றுமொரு ஆட்டம்



வட இந்திய இந்தி ஆதிக்க வெறியின் அடுத்த கட்டம். அமெரிக்கா, பிரிட்டன், யூரோவுக்கு உள்ளது போல் இந்திய ரூபாயுக்கு குறியீடு என்பது இதுவரை இருந்தது இல்லை. அதை போன்று ஒரு குறியீடு தேவை என்று சென்ற வருடம் முடிவு செய்யப்பட்டு, வடிவமைக்க போட்டியும் நடத்தப்ப்ட்டது. இதில் இந்திய மூழுவதும் பலர் கலந்து கொண்டனர். அதில் தமிழகத்தை சேர்ந்த் உதயகுமார் வடிவமைத்த மேலே உள்ள குறியீடு தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

இது பார்க்க R என்பதின் பாதிவடிவமும் = என்ற குறியீடும் இருப்பதாக நினைக்கலாம். ஆனால் இது "र"இந்தி எழுத்து.




உதயகுமார் தனது பேட்டியிலேயே இதை தெரிவித்துள்ளார். இவர் முன்னாள் தி.மு.க சட்டமன்ற உறுப்பினரின் மகன் ஆவார்.

ஆங்கில நாடுகள் அவர்களின் பொது மொழியில் அவர்களின் பணத்திற்கான குறியீட்டை வைத்துள்ளார்கள். ஆனால் இந்தியாவில் இந்தி இன்னும் பல மாநிலங்களில் பொது மொழியாக ஆங்கிகரிக்கப்படவில்லை. அப்படி ஒரு சூழ்நிலையில் இந்தி எழுத்தை அனைவரும் பயன்படுத்தும் பணத்திற்கு குறியீடாக வைக்கிறார்கள் இந்தி ஆதிக்க வெறியினர்.

இந்தியா என்ற நாடு பல இன மொழி மக்கள் இணைந்து வாழும் நாடு என்று வாய்கிழிய கத்தும் இவர்கள். (Unity in Diversity)இப்படி சொல்பவர்கள் இந்தியாவின் அத்தனை கலாசாரம் மற்றும் பண்பாட்டை வெளிபடுத்தும் ஒரு குறியீட்டை தான் தேர்வு செய்து இருக்க வேண்டும். ஆனால் இங்கு அவர்கள் கடைசிகட்டமாக 5 வரைபடங்களை தேர்வு செய்துள்ளனர் அந்த ஐந்துமே இந்த இந்தி எழுத்தை அடிப்படையாக கொண்டே வடிவமைக்கப்பட்டுள்ளது.



இந்த குறியீட்டை இனி அனைவரும் பயன் படுத்த வேண்டும். புறக்கடை வழியாக அனைவரையும் இந்தியை பயன் படுத்தவைக்கும் முயற்சி. இந்த இந்தி ஆதிக்க வெறியர்களின் இந்த முயற்சிக்கு நமது தமிழ் மகனும் துணை போய் உள்ளது தான் மிகவும் கொடுமை. இதற்காக இவருக்கு கிடைத்த பரிசுபணம் இரண்டரை லட்ச ரூபாய்.

Saturday, July 10, 2010

பழையபேப்பர்... பழையபேப்பர்...

பழைய பேப்பர் போடுங்க என்று டில்லியில் மன்மோகன் சிங் வீட்டு வாசலில் தவமாய் தவம் இருக்கிறாராம் ஒரு ஏமாந்த சோனகிரி. அவரிடம் விசாரித்தபொழுது தமிழக முதல்வர் கடிதம் மேல் கடிதம் போடுகிறார். அதை எல்லாம் பிரதமர் என்றாவது ஒரு நாள் எடைக்கு போடுவார் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறேன் என்றார். சரி இதற்காக மற்ற வீடுகளுக்கு போவதில்லையா என்று கேட்டதற்கு சொன்னார் நாலு தெரு சுத்தினால் தான் 100 கிலோ பேப்பர் கிடைக்கும். ஆனால் இந்த கடிதங்கள் எப்படியும் பத்து டன் எடையாவது இருக்கும். நாலு தெரு சைக்கிளை தள்ளிக்கிட்டு சுத்துவதை விட இங்க நாலு நாள் உட்கார்ந்து தேத்திடலாமே என்று சொன்னார். பாருங்கப்ப வடநாட்டுகாரனின் விவரமான புத்தியை.

இது தெரியாம இங்க ஒருத்தர் பேனாவை கையில் வைத்துக்கொண்டு ஆட்டு ஆட்டுனு ஆட்றார்பா. எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே. இதுவரை செத்து போனவர்கள் 400க்கும் மேல் இன்று வேகமாக கடிதம் எழுதுகிறார், அவரின் மீனவர் அணி போராட்டம் நடத்துகிறது(சனிக்கிழமை இலங்கை தூதரகத்துக்கு விடுமுறை நாளாமே), 3லட்சம் ரூபாய் நிதியுதவி. அப்ப மிச்சம் இருக்கும் 400 சொச்சம் பேருக்கு சொம்புதானா.

400க்கும் மேல FIR இருக்காம் தமிழக காவல் துறையிடம், அனைத்திலும் முதல் குற்றவாளி இலங்கை இராணுவம் என்று போட்டு இருக்கிறார்களாம். 7 கேஸுக்கு மேலே போனாலே குண்டர் தடுப்பு சட்டம், 10 கேஸ் இருந்தாலே என்கவுண்டர் நடத்தும் தமிழக காவல் துறை 400க்கும் மேல் கேஸ் இருக்கும், இலங்கை இராணுவத்தின் மேல் என்கவுண்டர் நடத்துமா. அட்லீஸ்ட் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யுமா??

Tuesday, July 6, 2010

பாவமும் நாம் பலியும் நாம்

பெட்ரோல் விலை ஏன் ஏறியிருக்கிறது என்பதற்கு தெளிவான காரணம் சொல்லுகிறார்களா இந்த மத்திய மாநில அரசுகள். நம்மைவிட ஏழ்மை நாடுகளில் பெட்ரோல் விலை மிக குறைவாக உள்ளது.

பாகிஸ்தான் - 26
பங்களாதேஷ் - 22
கூயுபா - 19
நேபாள் - 34
பர்மா - 30
ஆப்கானிஸ்தான் - 36
கத்தார் - 30

பெட்ரோலுக்கு வரி மட்டுமே நாம் முப்பத்து மூன்று ரூபாய் கொடுக்கிறோம்.

மத்திய அரசு வரி - 11.80
சுங்க வரி - 9.75
மாநில வரி - 8.00
விற்பனை வரி - 4.00

மேலே இருப்பவற்றில் முதல் இரண்டும் மத்தியரசுக்கும் மற்ற இரண்டும் மாநில அரசுக்கும் செல்கிறது. இவ்வளவு வரிகட்டி நாம் எல்லாம் பெட்ரோல் போட்டு வேலைபார்த்து சம்பாதிப்போம், இவர்கள் வருட கடைசியில் திரும்பவும் வந்து வருமான வரி என்று மேலும் நம்மை சுரண்டிவிடுகிறார்கள். சம்பாதிக்க வேலைபார்க்க செல்ல வாகனத்துக்கு பெட்ரோல் போடவும் வரி கட்டுகிறோம், சம்பாதித்தபின்னும் வரி கட்டுகிறோம். இது இரட்டை வரி முறை அல்லவா??? இதை கேட்க யாருமே இல்லையா???

ஒரு நாட்டை நிர்வகிக்க வரி வருமானம் மிகவும் முக்கியமானதே, ஆனால் நம்மை விட பின் தங்கிய நாடுகள் வரிவிலக்கு அளித்து பெட்ரோல் கொடுக்கும் பொழுது, இந்தியாவில் ஏன் இந்த நிலை. சரி விட்டு தொலைவோம் என்றால் இந்த வரியை பற்றி விசாரிக்கும் பொழுது தான் இன்னும் ஒன்று தெரிந்தது. பெட்ரோல் சில்லரை விற்பனை நிலையம் முகவர்களாக இருக்கும் ஒரு பாவப்பட்ட ஜீவன்களைப் பற்றி. அவர்களுக்கு இதில் என்ன கிடைக்கிறது லாபம் என்ற பெயரில் பார்த்தால் ஒரு லிட்டருக்கு 25 பைசாவில் இருந்து 35 பைசாவரை அனைத்து எரிபொருள் வகையிலும். ஒரு பெட்ரோல் நிலையம் வைத்து யாரும் குடும்பம் நடத்த முடியாது என்ற நிலைமை.

தமிழக மக்கள் மங்குனிகள் என்பதற்கு முழு அடைப்பு போராட்டமே ஒரு சிறந்த உதாரணம்.

ஜூலை 7ம் தேதி அறிவிக்கப்பட்ட நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் என்பது, ஒரு அறவழி போராட்டம். இந்த அறவழி போராட்டம் தமிழகத்தில் கழுத்து நெறிக்கப்பட்டது ஆளும் திமுக அரசால் அல்ல, திருட்டு முண்டங்கள் கலகத்தால். இவர்கள் யார் ஒரு கட்சி மக்களிடம் பெட்ரோல் விலையேற்றத்திற்காக கடைகளை அடையுங்கள், பேருந்துகளை நிறுத்துங்கள் என்று கேட்டால். இந்த திமுக கட்சியினர் அறவழியில் போராடுபவர்களை அடித்து நொறுக்க.

காவல் துறை என்ன செய்து கொண்டு இருக்கிறது, கருணாநிதியின் வீட்டு கழிவறையை சுத்தம் செய்து கொண்டு இருந்ததா??? மதுரை திருமங்கலத்தில் கடை அடைக்க சொன்ன கம்யூனிஸ்ட் தோழர்களை காவல் துறை தடுத்து நிறுத்தி இருக்க வேண்டும். அது தான் சட்டம் ஆனால் நடந்தது என்ன திருட்டு முண்டங்கள் கலகம் செய்கின்றன, காவல் துறை கைகட்டி வாய் போத்தி வேடிக்கை பார்க்கிறது. திண்டுக்கல்லில் சகோதரி பாலபாரதி ஆர்ப்பாட்டம் செய்தார், கத்தி கபடாவை எடுத்து கொண்டா சென்றார் இல்லையே கொடியையும், பேனர்களையும் கொண்டு தானே சென்றார். இவரை தடுத்து நிறுத்த வேண்டியது யார், ஆனால் அங்கு வந்து கலாட்டா செய்கிறது சொம்பு தூக்கும் கூட்டம்.

தஞ்சாவூரில் ஆர்ப்பாட்டம் கலவரமானதுக்கு காரணம் யார்?? முதலிலேயே காவல் துறை வந்து இருந்தால் கலவரம் ஏற்பட்டிருக்காது. ஆனால் திருட்டு முண்டங்கள் வந்து குதிக்கிறது அவர்கள் முழு அடைப்பு நடத்தும் போது இவர்களுக்கு யார் தடுத்து நிறுத்தும் உரிமையை கொடுத்தார்கள். தடி எடுத்தவன் எல்லாம் தண்டல் காரர்கள் என்றால் காவல் துறையை காதல் துறை என்று பெயர் மாற்றி அவர் வீட்டு வாசலிலேயே வைத்துக் கொள்ள வேண்டியது தானே.

இவ்வளவு நடக்கிறது நாம் என்ன செய்கிறோம் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மறு ஒளிபரப்பை பார்த்து ரசித்துக் கொண்டு இருக்கிறோம்.